6 november 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 5, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சர்வ பொக்கிஷங்களாலும் நிரம்பப் பெற்றவர் ஆகுக! ஆசி தருக ! ஆசி பெறுக!

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று அனைத்து பொக்கிஷங்களாலும் தலைவனான தந்தை தனது முழுமையான குழந்தை களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழந்தைகளைப் பார்த்துக் கொண்டி ருக்கின்றார். ஒவ்வொரு குழந்தைக்கும் அழிவற்ற நிலையான அநேகவிதமான பொக்கிஷங்கள் கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட அத்தனை பொக்கிஷமும் இப்போதும் உள்ளது. இனியும் அனேக பிறவிகளுக்கு உடனிருக்கும் எத்தனை பொக்கிஷங்கள் எவ்வளவு கிடைத்துள்ளது என தெரியுமா? கஜானாக்களால் எப்போதும் பிராப்திகள் கிடைக்கிறது. பொக்கிஷங்களால் நிரம்பிய ஆத்மா என்றும் முழுமைபெற்ற பெருமிதத்தில் இருப்பார். முழுமையின் பொலிவு அவரது முகத்திலும் ஒவ்வொரு செயலிலும் தானாகவே தென்படும். இப்போது மனித ஆத்மாக்களுக்கு அழிகின்ற பொக்கிஷமே கிடைப்பதால் சிறிது நேரத்திற்க மட்டுமே பெருமிதம் உள்ளது. எப்போதும் இருப்பதில்லை எனவே, உலகினர் வெறுங்கையோடு செல்வோம் என்பார்கள் ஆனால் நீங்கள் நிரம்பிய கையோடு செல்வோம் என்பீர்கள். பாப்தாதா உங்கள் அனைவருக்கும் பலவிதமான பொக்கிஷம் கொடுத்துள்ளார். அனைத்திலும் முதன்மையான உயர் கஜானா- ஞான இரத்தினங் கள் அனைவருக்கும் இந்த கஜானா கிடைத்துள்ளது. ஒருவரும் இதில் வஞ்சிக்கப்பட்டவர் இல்லை. இந்த ஞான இரத்தினங்களால் நீங்கள் என்ன பிராப்தியை விசேஷமாக அடைந்து கெண்டிருக் கின்றீர்கள்? ஞானத்தால் இப்போதும் முக்தி ஜீவன் முக்தி அடைகின்றீர்கள், முக்திதாமம் செல்வீர்கள், ஜீவன் முக்தி அடைகின்றீர்கள், முக்தி தாமம் செல்வீர்கள், ஜீவன் முக்தி அடை கின்றீர்கள், முக்தி தாமம் செல்வீர்கள், ஜீவன் முக்தியெனும் தேவ பதவி பெறுவீர்கள் இது நாளைய விசயம். ஆனால் இப்போதே ஜீவன் முக்தி (விடுபட்ட வாழ்க்கை) அடைந்து கொடிருக்கின்றீர்கள். எத்தனை விசயங்களிலிருந்து விடுபட்டுள்ளீர்கள் தெரியுமா? துக்கம் மற்றும் அமைதியின்மைக்கு காரணமான அனைத்திலிருந்தும் விடு பட்டுள்ளீர்களா, இனிமேல் தான் விடுபட வேண்டுமா? இப்போது எந்த விகாரமும் வருவதில்லையே? விடுபட்டு விட்டீர்களா? அப்படியே வந்தாலும் வெற்றி அடைந்து விடுகின்றீர்கள் அல்லவா! ஆக எத்தனை விசயங்களில் இருந்து விடுபட்டு விட்டீர்கள் லௌகீகம் மற்றும் அலௌகீகம் இரு வாழ்வையும் ஒப்பிட்டுப்பார்க்கையி எவ்வளவு வேறுபாடு தெரிகிறது! ஆக இப்போது முக்தியும் அடைந்து அதனால் ஜீவன் முக்தியும் அனுபவம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அனேக விதமான வீணான, தீய விகர்மங்களிலிருந்து விடுபடுவதே ஜீவன் முக்தியும் அனுபவம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அனேக விதமான வீணான தீய விகர்மங்களிலிருந்து விடுபடுவதே ஜீவன் முக்தி நிலையாகும். எத்தனை பந்தனங்களிலிருந்து வடுபட்டுள்ளீர்கள்? மனித ஆத்மாக்கள் எத்தனை விதமான பந்தனக் கயிறுகளால் கட்டுண்டுள்ளார் கள் என்பதை சித்திரத்தில் காண்பிக்கின்றீர்கள். இது யாருடைய சித்திரம் ? நீங்கள் அதுவல்லவே ! நீங்கள் விடுபட்டவர்கள் அல்லவா ! வாழ்வில் இருக்கும் போதே ஜீவன் முக்தி அடைந்துள்ளீர்கள் ஆக ஞானமெனும் பொக்கிஷத்தால் விசேஷமாக முக்தி ஜீவன் முக்தி அடைந்து அனுபவம் செய்து கொண்டி ருக்கின்றீர்கள். இரண்டாவது நினைவு எனும் யோகத்தின் மூலமாக சர்வ சக்திகளெனும் பொக்கிஷங்களை அனுபவம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எத்தனை சக்திகள் ? அதிகம் உள்ளதல்லவா! எட்டு சக்திகளென உதாரணத்திற்கு காண்பிக்கப்பட்டுன்னது. ஆனால் அனைத்து சக்திகளெனும் பொக்கிஷத்திற்கு எஜமானாகி விட்டீர்கள். மூன்றாவது தாரணை யெனும் பாடத்தின் மூலம் எந்த பொக்கிஷம் கிடைத்துள்ளது? அனைத்து தெய்வீக குணங்களெனும் பொக்கிஷம் எத்தனை குணங்கள்? அதிகம் உள்ளதல்லவா! ஆக அனைத்து குணங்களெனும் பொக்கிஷம் ஒவ்வொரு குணம், ஒவ்வொரு சக்திகளின் சிறப்பம்சம் எவ்வளவு பெரியது. ஒவ்வொரு குணம், ஒவ்வொரு சக்திகளின் சிறப்பம்சம் எவ்வளவு பெரியது ஒவ்வொரு ஞான ரத்தினத்தின் மகிமை எவ்வளவு உயர்வானது. நான்காவது சேவை மூலமாக எப்போதும் மகிழ் வெனும் பொக்கிஷத்தை அனுபவம் செய் கிறீர்கள். செய்யும் சேவையில் கிடைக்கும் விசேஷ அனுபவம் என்ன? மகிழ்ச்சி கிடைக் கிறது அல்லவா ! ஆக அனைத்திலும் மிகப்பெரிய பொக்கிஷம் அழிவற்ற மகிழ்ச்சி மகிழ்ச்சி யெனும் பொக்கிஷம் சுலபமாகவம் இயல்பாகவும் கிடைக்கின்றது ஐந்தாவது சம்பந்தம் தொடர்பின் மூலமாக பிராமண குடும்பத்தின் தொடர்பில் வருகின்றீர்கள், சேவையின் சம்மந்தத்திலும் வருகின்றீர்கள். சம்மந்தம் மற்றும் தொடர்பால் என்ன பொக்கிஷம் கிடைக் கிறது? அனைவரிடமிருந்தும் ஆசிர்வாதம் எனும் பொக்கிஷம் கிடைக்கின்றது. இந்த ஆசீர்வாதங்களென்பது மிகப் பெரிய பொக்கிஷமாகும். யாரொருவர் அனைவரது ஆசிகளால் முழுமையாக நிரம்பப் பெற்றவரோ அவர் ஒருபோதும் கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டி யிருக்காது. முதலில் தாய் தந்தையின் ஆசிகள் மேலும் தொடர்பில் வருபவர்கள். அனைவரது ஆசிகள் கிடைக்கின்றன. அனைத்திலும் மிகப் பெரிய மற்றும் அதி தீவிர வேகத்தில் செல்வது ராக்கெட்ஆனால் அதிகாலை ராக்கெட் அதனினும் உயர்வானது தடைகள் சிறிதும் தடவாது, தடைகளற்றவராக மாறி விடுகின்றனர். யுத்தம் செய்ய வேண்டி யிராது. சுபமாகவே யோகயுக்த், யுக்தியுக்த் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் சங்கல்பத் திலும் இயல்பாகவே அமைந்துவிடும் அத்தகைய உயர் நிலை கொண்டது ஆசிகளெனும் பொக்கிஷம் சங்கமயுகம் எனும் நேரமானது அனைத்திலும் மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும் இப்படி அனேக பொக்கிஷங்கள் உள்ளது, மேற் கூறிய பொக்கிஷங்களை தன்னுள் உள்ளடக்கும் சக்தியை தாரணை செய்தல் சதா முழுமையாக இருப்பதால் சிறிதும் ததும்பாது. காலியான போதே ததும்புகிறது. நிரம்பிய ஆத்மா ஒருபோதும் அசையாது. அனைத்துப் பொக்கிஷங்களும் தன்னுள் சேமிப்பாகி உள்ளதா? என சோதனை செய்க. இந்த அனைத்து பொக்கிஷங்களும் நிரம்பியுள்ளதா? சிலரிடம் நிரம்பியுள்ளது, சிலரிடம் நிரம்ப வேண்டியுள்ளது. அனைவருக்கும் கஜானா கிடைத்துள்ளது. ஒருவர் மூலமாக அனைவருக்கும் ஒரே மாதிரியான பொக்கிஷம் கிடைத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்க வில்லை ஒருவருக்கு லட்சம், ஒருவருக்கு கோடி என்று தரவில்லை அல்லவா! ஆனால் ஒன்று பெறுபவர் மட்டும் கிடைத்ததை அடைந்தோம் உண்டோம் கழித்தோம், ஆனந்தம் அடைந் தோம் முடிந்தோம், மற்றொன்று கிடைத்த பொக்கிஷங்களை சேமிப்பது. உண்டோம் , கழித்தோம், ஆனந்தம் அடைந்தோம் சேமிப்பும் செய்தோம் மூன்றாவது சேமிப்பும் செய்தோம், உண்டோம், கழித்தோம் அத்துடன் கிடைத்த பொக்கிஷத்தை பெறுக்கிக் கொணடோ செல்வது தந்தையின் பொக்கிஷத்தை தனதாக்குவதுடன் அபிவிருத்தி செய்வது இதில் நான் எந்த ரகம் என்பதைப் பாருங்கள் முதலாவதா, இரண்டாவதா, மூன்றாவது நம்பரா? பொக்கிஷத்தை எந்தளவு தனக் காகவும் மற்றவரின் சேவைக்காகவும் பயன் படுத்துவோமோ அவ்வளவு அபிவிருத்தி அடை கின்றது. பொக்கிஷத்தை பயன் படுத்துவதே அபிவிருத்தி செய்வதற்கான சாவியாகும். முதலில் தனக்காக, ஒவ்வொரு ஞான ரத்தினத்தையும் சமயத்திற்கேற்ப தனக்கு பயன்படுத்தும் போது அனுபவம் பெறுவீர் கள். பிராப்தமாக பெறப்பட்ட பொக்கிஷம் வாழ்வில் அனுபவமாகி அத்தாரிட்டி ஆகிறது பயன்படுத்துவதால் அனுபவி ஆகின்றீர்கள். அத்தாரிட்டியான பொக்கிஷம் சேமிப்பா கிறது. வளருகிறது அல்லவா ! கேட்பதோடு இருந்து விட்டால் அது வேறு விசயம். கேட்பது பெறுவதாகாது. தன்னுள் சேமித்து தக்க சமயத்தில் செயலில் பயன்படுத்த வேண்டும். அதுவே பெறுவதாகும். கேட்பவர்கள் என்ன செய்வார்கள், தன்னுள் சேமித்து வைப்பவர் கள் என்ன செய்வார்கள். இரண்டுக்குமிடையே மாபெரும் வித்தியாசம் உள்ளது.

பாப்தாதா கேட்பவர்களின் காட்சியைப் பார்த்து புன்னகை செய்கின்றார். கேட்பவர்கள் இன்னல்கள், தடைகள் வரும்போது அதற்கேற்ப பாப்தாதா இந்த தடைகளை கடந்து செல்ல இந்த, இந்த ஞானக் கருத்துக்களை கொடுத்துள்ளார் என்பதை நினைவு செய்கிறார்கள். இப்படி செய்ய வேண்டும், இப்படி செய்யக் கூடாது என்று திரும்ப திரும்ப நினைவு செய்து கொண்டிருப்பார்கள் ஒருபுறம் ஞானத்தை திரும்ப திரும்ப நினைவு செய்து கொண்டும் மறுபுறம் வசமாகிக் கொண்டும் இருப்பார்கள். சொல்வார்கள். இவ்வாறு செய்யக் கூடாது. இது ஞானம் அல்ல, இது தெய்வீக குணமல்ல, எதிர்கொள்ளும் சக்தியை கையாள வேண்டும், எவருக்கும் துக்கம் தரலாகாது. இவ்வாறெல்லாம் சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். தோல்வி அடைந்து கொண்டும் இருப்பார் கள். அதே நேரத்தில் அவரை கேளுங்கள் இது சரியா? என்று உடன் பதில் தருவார்கள் சரியோ, தவறோ, ஆனால் நடந்து விடுகிறது சொல்லவும் செய்வார்கள், மறந்தும் போவார்கள் அவர்களை என்ன வென்று சொல்வது? கேட்பவர்கள் கேட்பது மிக நன்றாக உள்ளது ஒவ்வொன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஞானக் கருத்துக்கள். ஆனால் பயன்படுத்தும்போது சக்திவாய்ந்த ஞானம் வெற்றி தரவில்லை, அரை குறை வெற்றியேத் தருமானால் அவர்களை என்னவென்று சொல்வது? கேட்பவர் என்று தானே சொல்வோம்.

தன்னுள்ளடக்கி வைப்பவர் இன்னல்கள் எது வந்தாலும் திரிகால தரிசி நிலையில் நிலைத்து தன்னிலை மூலமாக வருகின்ற சூழ்நிலை ஒன்றுமே இல்லாததாக கடந்து சென்று விடுவார்கள். இதனையே தன்னுள்ளடக்குவது அதாவது தக்க நேரத்தில் செயலில் பயன் படுத்துவது, சமயத்திற்கேற்ப ஒவ்வொரு சக்தியையும், பாயிண்டையும், ஒவ்வொரு குணத்தையும் கட்டளைப் படி நடத்த வேண்டும் ஸ்தூலமாக ஒரு பொக்கிஷம் உள்ளதென்றால் அந்த பொக்கிஷம் தன்னைத் தானே பயன்படுத்திக்கொள்வ தில்லை, மனித ஆத்தமாக்களே பொக்கிஷங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் தான் விரும்பியபடி எப்போது வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ அவ்வாறே பயன்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு மேற்கூறிய அனைத்து பொக்கிஷங்களுக்கும் எஜமான் யார்? நீங்களா, மற்றவரா? நீங்கள் எஜமான் அல்லவா. எஜமானின் வேலை என்ன? பொக்கிஷம் எஜமானை பயன்படுத்துமா? எஜமான் பொக்கிஷத்தை பயன்படுத்துவாரா? ஆக ஒவ்வொரு பொக்கிஷத்திற்கும் எஜமானாகி தக்க சமயத்தில் ஞானியாகி, புத்திசாலியாகி, திரிகாலதரிசியாகி பொக்கிஷத்தை பயன்படுத்துங்கள். மாறாக நீங்கள் கட்டளையிட்ட நேரத்தில் பொறுமை சக்தி வராமல் வேலை முடிந்தவுடன் வரக்கூடாது. உள்ளடக்கும் சக்தியும் எந்த சமயத்தில் எந்த விதிப்படி வேண்டுமோ அவ்வாறே அதே சமயத்தில் செயல்பட வேண்டும். மாறாக உள்ளடக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் சிறிதளவு வாயில் வந்துவிட்டது. அரைமணி நேரம் பொறுத்திருந்தேன். ஒருநொடியே பேசிவிட்டேன். இதனை என்னவென்று சொல்வது? பொக்கிஷத்திற்கு எஜமானா அடிமையா?

சர்வ சக்திகளும் பாபாவின் அதிகாரத்தில் உள்ள பொக்கிஷம் ஆஸ்தி, பிறப்புரிமை ஆகும். பிறப்புரிமையின் மீது எவ்வளவு பெருமிதம் உள்ளது. சிறிய ராஜகுமார் தான், என்ன பொக்கிஷம் உள்ளதென்பது கூட தெரியாது. ஆனால் சிறிதளவு நினைவு வந்தவுடன் எவ்வளவு பெருமிதம் வந்து விடுகிறது. நான் ராஜாவின் குழந்தை. இது எஜமான் எனும் பெருமிதம் அல்லவா! ஆகவே பொக்கிஷங்களை செயலில் பயன்படுத்துவார்கள்.

செயலில் குறைவாக பயன்படுத்துகின்றீர்கள். மகிழ்கின்றீர்கள், எல்லாம் கிடைத்து விட்டது, நிரம்பியுள்ளது. ஆனால் செயலில் ஈடுபடுத்துவது அதனால் தானும் பயனடைந்து பிறரையும் பயனடையச் செய்வது இதில் நம்பர்வார் ஆகின்றனர். இல்லையெனில் நம்பரில் வருவது ஏன்? தருபவர் ஒருவரே அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் தருகின்றார் இருப்பினும் நம்பர் ஒன்? பாப்தாதா பார்க்கின்றார். பொக்கிஷம் அதிகம் கிடைத்துள்ளது, அனைத்தும் நிரம்பியுள்ளது, ஆனால் நிரம்பிய தன்மையின் லாபத்தைப் பெறவில்லை. எப்படி லௌகீகத்திலும் கூட சிலருக்கு செல்வத்தால் ஆனந்தம் அடைவார்கள், லாப மீட்டும் முறையும் தெரிந்திருப்பார்கள், சிலரிடம் செல்வம் இருக்கும் பயன்படுத்தத் தெரியாது. எனவே இருந்தும் இல்லாத நிலையே எதனை கோடிட்டு வைக்க வேண்டும்? கேட்பவராக மட்டும் இல்லாமல் பயன்படுத்தும் விதிமூலம் இப்போதும் பயனடைந்து அநேக பிறவி களுக்கு சத்கதி அடையுங்கள். தெய்வீக குணமும் தந்தையின் ஆஸ்தியே. கிடைத்த ஆஸ்தியை செயல்படுத்துவதில் என்ன கடினம். கட்டளையிடுங் கள். கட்டளையிடவராதா? எஜமானுக்குத் தான் கட்டளையிட வரும். பலவீனமானவருக்கு கட்டளையிட வராது. சொல்லலாமா வேண்டாமா, உதவி கிடைக்குமா, கிடைக்காதா தெரிய வில்லையே என யோசிப்பார் அவர், தனது பொக்கிஷம் அல்லவா. தந்தையின் சொத்து தன் சொத்து தந்தையினுடையது நமதில்லையா? தந்தை எதற்காக கொடுத்தார்? தனதாக்கிக் கொள்ள கொடுத்தாரா? செயல்படுத்தவே கிடைத்துள்ளது. ரிசல்ட்டை பார்க்கின்றபொழுது அனைத்து பொக்கிஷங்களையும் சேமிப்பதற்கான விதி குறைவாகவே பயனில் வருகின்றது. ஞானக் கருத்துக்களை திரும்ப திரும்ப நினைப்பது மற்றும் புத்தியில் வைப்பது மட்டும் ஞானத்தின் அர்த்தமல்ல. ஞானமென்பது புரிதல், திரிகாலதரிசி ஆவதற்கான புரிதல் சத்யம், அசத்தியத்தை புரிதல், சமயத்திற்கேற்ப செயல்படுவதற்கான புரிதல், இதுவே ஞானம் என்று சொல்லப்படும்.

ஒருவர் எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தும் தக்க சமயத்தில் புத்தியிழந்து செயல் பட்டால் அவரை ஞானி என்பார்களா? புத்திசாலி புத்தியற்ற செயலைச் செய்தால் அவரை என்ன சொல்வது ? புத்தியற்றவருக்கு எதுவும் சொல்வதில்லை. ஆனால் புத்திசாலிக்கு அனைவரும் இவர் புத்திசாலி என்று சமிக்ஞை செய்வார்களா? ஞான கஜானாவை தாரணை செய்வது, சேமிப்பது அதாவது ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு செயல், ஒவ்வொரு விவகாரத்திலும் புரிதலுடன் நடந்து கொள்வது. புரிந்ததா நீங்கள் மகான் புத்திசால அல்லவா. ஞானி ஆத்மாவா, ஞானம் கேட்கின்ற ஆத்மாவா நீங்கள் எதுவரையில் நடைமுறையில் செயலிலும் சொல்லிலும் எவ்வளவு தூரம் ஞானி ஆத்மாவாக உள்ளேன் என்பதை சோதனை செய்யுங்கள். கை உயர்த்தச் சொன்னால் எல்லோரும் லட்சுமி நாராயணன் ஆவோம் என்பீர்கள். யாருமே ராம் சீதா ஆவோ என்று சொல்ல மாட்டீர்கள். ஆனால் ஏதேனும் ஒன்று ஆவீர்கள் அல்லவா. அனைவரும் சொல்வீர்கள் நாங்கள் விஸ்வ மகாராஜா ஆவோம். நல்லது. அப்படி உயர் லட்சியமே இருக்க வேண்டும். ஆனால் இலட்சியத் தோடு இருந்து விடாமல், இலட்சியமும் இலட்சணமும் சமமாக வேண்டும். விஸ்வ மகாராஜன் எனும் இலட்சியம் வைத்துக் கொண்டு செயலில் ஒரு குணமும் சக்தியும் கட்டளையை ஏற்கவில்லையென்றால் அவர் எப்படி விஸ்வ மகாராஜன் ஆவார்? தனது பொக்கிஷம் தனது வேலைக்கே உதவாதபொழுது உலக பொக்கிஷத்தை என்ன வென்று காப்பாற்றுவார்? எனவே அனைத்து பொக்கிஷமும் நிரம்பியவராகுங்கள் முக்கியமாக நிகழ்காலத்தில் அனைவரிடமும், பாப்தாதாவிடமும் ஒவ்வொரு சமயத்திலும் ஆசி பெறும் வண்ணம் சுலபமான முயற்சியே செய்யுங்கள்.

ஆசிகள் யாருக்கு கிடைக்கும்? யார் தானும் திருப்தியாயிருந்து அனைவரையும் திருப்தி செய்வாரோ அவருக்கே ஆசி கிடைக்கும். எங்கே திருப்தி இருக்குமோ அங்கே ஆசிகள் இருக்கும். வேறெதும் தெரியவில்லையென்றாலும் பரவாயில்லை. குணங்கள் அனைத்தையும் கையாளுவது கடினமாக உள்ளதா, அனைத்து சக்திகளையும் கட்டுப் பாட்டில் வைப்பது கடினமாக உள்ளதா, அதையும் விட்டு விடுங்கள். ஆனால் அனைவருக் கும் ஆசி தர வேண்டும் அனைவரிடமிருந்தும் ஆசி பெற வேண்டும் இந்த ஒன்றினை மட்டும் தாரணை செய்யுங்கள். இதில் அனைத்தும் அடங்கும். தெய்வீக குணம், சக்திகள் யாவும் தானே வந்து விடும். யாரேனும் உங்களுக்கு துக்கமே கொடுத்தாலும் நீங்கள் ஆசியே வழங்குங்கள். அப்போது பொறுமை சக்தி, எதிர்கொள்ளும் சக்தி, சகித்துக் கொள்ளும் குணம் யாவும் இருப்பதாக புரிந்து கொள்ளப்படும். ஆசி பெறுவது மற்றும் ஆசி தருவது இதில் விதையும் மரமும் உள்ளடங்கியிருப்பதாகும். இதற்கு விதியாக இரு சொல்லை நினைவில் கொள்க. ஒன்று அறிவுரை மற்றொன்று மன்னிப்பு இறக்கம் அனேகர் அறிவுரை தர எத்தனிக்கின்றனர். மன்னிக்கத் தெரிவதில்லை. மன்னிப்பது, மன்னிப்பதே அறிவுரை தருவதாகும். அறிவுரை தருகின்றபொழுது மன்னிக்க மறந்து விடுகின்றீர்கள் ஆனால் மன்னித்து விட்டால் அறிவுரை தானே வந்து விடும். அறிவுரையாளர் ஆவது மிக சுலபம். ஒருவாரம் கோர்ஸ் முடிந்த உடனேயே ஆசிரியர் ஆகின்றனர். ஆக மன்னிக்க வேண்டும், இறக்க மன முள்ளவராக வேண்டும், ஆசிரியராகமட்டும் ஆக்க கூடாது. மன்னிப்பவர் ஆகுங்கள், இப்போதிருந்தே இந்த சம்ஸ்காரத்தை கையாளும் போது தான் ஆசிகள் தர முடியும். மேலும் இப்போதிருந்தே ஆசி தரும் சம்ஸ்காரத்தை உறுதி செய்தால் உங்களுடைய ஜட மூர்த்தி களிடமிருந்தும் ஆசிகளைப் பெற்றுக் கொண்டேயிருப்பார்கள். சித்திரங்களுக்கு முன்னால் சென்று என்ன சொல்கிறார்கள்? ஆசி தாருங்கள், கருணை காட்டுங்கள். உங்களுடைய வரை படங்களான ஜட சித்திரங்களிடமிருந்தே ஆசிகள் கிடைக்கும் பொழுது சைத்தன்ய ஆத்மாக்களான உங்களிட மிருந்து எவ்வளவு ஆசிகள் கிடைக்கும் ஆசிகளெனும் அழியாத பொக்கிஷம் பாப்தாதாவிடமிருந்து ஒவ்வொரு அடியிலும் கிடைத்த வண்ணம உள்ளது. பெறுபவர் பெறலாம். நீங்களே பாருங்கள், ஸ்ரீமத் படி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என்ன அனுபவம் ஆகிறது? பாபாவின் ஆசிகள் கிடைக்கிறதல்லவா. ஆக ஒவ்வொரு அடியும் ஸ்ரீமத்படி நடந்தால் ஒவ்வொரு அடியிலும் எவ்வளவு ஆசிகள் கிடைக்கும், ஆசிகளெனும் பொக்கிஷம் எவ்வளவு நிரம்பிவிடும்.

ஒருவர் உமக்கு எதை வேண்டுமாயினும் தரலாம், ஆனால் நீங்கள் அவருக்கு ஆசியே தர வேண்டும். ஒருவர் கோபமே கொண்டாலும் அவருக்கும் ஆசியே, கோபத்தில் இருப்பவருக்கு ஆசியா, சண்டையா? ஒருவர் எவ்வளவு தான் கோபம் கொண்டாலும் உங்களுக்கு அவர் நினை வூட்டுகிறார். நான் பலவீனமாக உள்ளேன். ஆனால் நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான் அன்றோ! ஆக ஆசி கிடைக்கும் தானே. நினைவூட்டப்பட்டது, நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான், நீங்கள் குளிர் நீரைத் தெளிப்பவர் அன்றோ! ஆக கோபக்காரர் ஆசிகளை வழங்கினார் அல்லவா. அவர்கள் என்ன வேண்டுமாயினும் செய்யட்டும் நீங்கள் அவர்களிடமிருந்து ஆசீயே பெறுங்கள். கேள்விப்பட்டீர் களா, ரோஜா மலரைப் பாருங்கள் எத்தனை சிறப்பியல்புடையது, எவ்வளவு அழுக்கான துர் நாற்றமுள்ள உரத்திடமிருந்து எதனைத்தான் எடுத்துக் கொண்டாலும் நறு மணத்தையே பெறுகிற தல்லவா. ரோஜா மலர் ஒன்று துர்நாற்றத்திலிருந்து நறுமணம் பெற முடியுமெனில் நீங்கள் கோபக்காரரிடமிருந்து ஆசிகள் பெற முடியாதா? விஸ்வ மகாராஜன் ரோஜா மலர் ஆக வேண்டுமா? அல்லது நீங்கள் ஆக வேண்டுமா? இது சரியானால் நான் சரி ஆகிவிடுவேன் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். எப்போதாவது கடலிடம் சென்று சொல்வீர்களா? ஏ, அலையே பெரியதாக அல்ல, சிறியதாக வா, வளைந்து வராதே, நேராக வா? இவ்வுலகமும் கடன் தான். அலைகள் அனைத்துமே சிறியதாகவோ, பெரியதாகவோ, வளைவாகவோ, நேராகவோ, இருக்கும். இது சரியானால் நான் சரி ஆவேன் என்று எதனையும் ஆதாரமாகக் கொள்ளாதீர்கள். வரும் இன்னல்கள் பெரியதா நீங்கள் பெரியவரா? பாப்தாதாவிடம் அனைத்து விசயங்களும் வந்து சேருகின்றது. இதனை சரிய செய்யுங்கள் நான் சரியாகி விடுவேன். கோபப்படும் இவரை குளிர வையுங்கள் நானும் சீதளமாவேன். தொந்தரவும் செய்யும் இவரை ஒதுக்கி வையுங்கள் சேவை நிலையம் சரியாகி விடும். இவ்வாறெல்லாம் ஆன்மீக உரையாடல் செய்யாதீர்கள். உங்களுடைய சுலோகனே இதுதான். பழி வாங்காதே தன்னை மாற்றிக் காட்டு. இவர் ஏன் இப்படி செய்கிறார், இப்படி செய்யக் கூடாதே இவர் மாறியே ஆக வேண்டும். ஆனால் முதலில் தன்னை மாற்றுங்கள். சுயமாற்றத்தாலேயே உலக மாற்றம், பிறர் மாற்றம் நிகழும் அல்லது பிறர் மாற்றத்தால் தன் மாற்றம் நிகழுமா? சுலோகனை தவறாக்கி விடவில்லையே ? என்ன செய்வீர்கள்? தன்னை மாற்றுவீர்களா அல்லது பிறர் மாற்றத்திலேயே நேரத்தை இழப்பீர்களா? தன்னை மாற்றாமல் பிறரை மாற்றுவதிலேயே முயற்சி செய்து ஒரு வருடத்தைக் கூட செலவழித்துப் பாருங்கள். காலம் தான் மாறுமே தவிர நீங்களும் மாற மாட்டீர்கள், அவரும் மாற மாட்டார். புரிந்ததா! அனைத்து பொக்கிஷங்களுக்கும் எஜமானாவது என்பது தக்க சமயத்தில் பொக்கிஷங்களை செயலில் ஈடுபடுத்துவதாகும் நல்லது.

அனைத்து பொக்கிஷங்களாலும் நிரம்பிய ஆத்மாக்களுக்கு, அனைத்து பொக்கிஷங் களையும் செயலில் பயன்படுத்துபவருக்கு அபிவிருத்தி செய்யும் ஞானி ஆத்மாக்களுக்கு, அனைத்து பொக்கிˆங்களுக்கும் எஜமானாகி நேரத்திற்கேற்ப விதிப்பூர்வமாக செயல் முறைப்படுத்தும் சிரேஸ்ட ஆத்மாக்களுக்கு, ஒவ்வொரு சக்தி குணங்களின் அத்தாரிட்டி யாகி தன்னிடமும் அனைவரிடமும் நிரப்பிவிடும் விசேஷ ஆத்மாக்களுக்கு என்றென்றும் ஆசிகளெனும் பொக்கிஷத்தால் சுலபமாக முயற்சியை அனுபவம் செய்யும் சகஜயோகி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:-

உங்களுடைய வேலைக்கு உதவுகின்ற அறிவியல் சானங்கள், நாடகப்படி பாபாவிற்கு எப்போது அவசியமாகிறதோ அப்போதே அவர்களுக்கும் புத்தியில் (டச் ஆகிறது) தூண்டப் படுகிறது. ஆனால் இந்த சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு அதற்கே வசப்பட்டு விடாதீர்கள். ஒருபோதும் எந்த சாதனமும் அதன் வசம் ஈர்த்து விடக்கூடாது. மாஸ்டர் படைப்பவர் ஆகி படைப்பிடமிருந்து லாபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மாறாக அதன் வசமாகிவிட்டால் அது துக்கம் தரும் எனவே சாதனத்தை பயன்படுத்திய பொழுதும் சாதனையில் நிரந்தரமாக இணைந்திருங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top