31 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 30, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! அதிகாலையில் எழுந்து தந்தையை அன்போடு நினைவு செய்தீர்கள் என்றால் கல் புத்தியிலிருந்து தங்க புத்தியாக மாறி விடுவீர்கள்.

கேள்வி: -

21 பிறவிகளுக்கு மிகுந்த செல்வம் நிறைந்தவராக ஆவதற்கான சாதனம் (வழிமுறை) என்ன?

பதில்:-

அழிவற்ற ஞான இரத்தினங்களை தானம் செய்தீர்கள் என்றால் மிகுந்த செல்வம் நிறைந்த வராக ஆகி விடுவீர்கள், ஏனென்றால் இந்த ஒவ்வொரு ஞான ரத்தினமும் இலட்சக் கணக்கான ரூபாயின் மதிப்பு மிக்கவை ஆகும். ஒருவர் எந்த அளவு தானம் செய்கின்றனரோ, தந்தையை நினைவு செய்கின்றனரோ அந்த அளவு அவர்களுக்கு குஷியின் எல்லை அதிகரித்தபடி இருக்கும்.

கேள்வி: -

தன்னால் எந்த பாவ கர்மமும் ஏற்படாமலிருப்பதற்காக எந்த பத்தியம் தேவைப்படுகிறது?

பதில்:-

அன்னத்தின் (உணவின்) பத்தியம் தேவைப்படுகிறது. பாவாத்மாக்களின் அன்னம் உள்ளே செல்லும் போது அதனுடைய தாக்கம் ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் சூழ்நிலையும் பார்த்து தந்தை வழி கூறுகிறார்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. யார் அம்ர்ந்திருப்பது, யார் வந்திருக்கிறார்? ஆத்மாக்களாகிய நாம் அனைவருமே இந்த சமயத்தில் பதீதமாக (தூய்மையற்றவர்களாக) இருக்கிறோம் என ஜீவாத்மாக்கள் அறிவார்கள். குறிப்பாக பாரதமும், பொதுவாக முழு உலகமும். அனைவருமே ஓ பதீத பாவனா என கூக்குரலிடு கின்றனர். இது தூய்மையற்ற உலகமாகும். அனைத்து ஆத்மாக்களுமே தூய்மையற்றவர்களாக, துக்கம் நிறைந்தவர்களாக, கருப்பாக ஆகி விட்டனர். பதீத பாவனர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை யாவார், அவர் ஞானக்கடல், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் என சொல்லப்படுகிறார். குழந்தைகள் தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றனர். குழந்தை களுக்கு எங்கிருந்து அறிமுகம் கிடைத்தது? பதீத பாவன தந்தையிடம் தான், சத்யுகம் இருந்தபோது அங்கே இராஜா, இராணி மற்றும் பிரஜைகள் என அனைவருமே தூய்மையாய் இருந்தனர். அனைவருமே தங்க யுகத்தில் இருந்தனர். ஜீவாத்மாக்களாகிய நாம் அமர்ந்திருக்கிறோம் என குழந்தைகளாகிய உங்களுக்கு புரிந்திருக்கிறது. ஆத்மா சரீரத்துடன் இருக்கும்போது சுகம் அல்லது துக்கத்தை அனுபவம் செய்ய வேண்டி யிருக்கிறது. ஆத்மா சரீரத்தில் இல்லாதபோது சரீரத்திற்கு எதுவும் தெரியாது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றில் தொடர்பை இணைக்கும்போது அது சைதன்யமாக (உயிரோட்டம் உள்ளதாக) ஆகிவிடுகிறது. சரீரம் ஜடமாகும். ஜடம் கூட வளர்ச்சியை அடைகிறது. முதலில் 5 தத்துவங்களாலான பொம்மை உருவாகிறது, அதில் கர்மேந்திரியங்கள் வளரும்போது ஆத்மா பிரவேசம் செய்கிறது, பிறகு உயிரோட்டம் உள்ளதாக ஆகிவிடுகிறது. இப்போது ஜீவாத்மாக்களாகிய நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், உங்கள் முன்னால் தந்தை அமர்ந்திருக் கிறார். அவரும் கூட பரம சுப்ரீம் ஆத்மா வாக இருக்கிறார் மற்றும் எப்போதும் தூய்மையான வராக இருக்கிறார். இப்போது தந்தை குழந்தை களுக்கு வழி கூறுகிறார் – குழந்தைகளே, நீங்களும் தந்தையைப் போல தூய்மை யடைய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவில்லத வர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் முதலில் சாந்தி தாமத்தில் இருந்தீர்கள். ஆத்மாக்களாகிய நாம் சிவபாபா விடம் வந்துள்ளோம் அவர் இந்த சாதாரண சரீரத்தை தாரணை செய்திருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். பரமபிதா பரமாத்மாவைத் தவிர இப்படி குழந்தை களுக்கு அமர்ந்து வழி கூறுபவர் வேறு யாரும் இருக்க முடியாது. பரமாத்மா ஒரு போதும் வரமாட்டார், அவர் பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். நாம் மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்து சந்தித்திருக்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எப்படி தந்தை நம்மை தூய்மையாக்குகிறார் என புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா தூய்மை இழந்ததால் சரீரமும் தூய்மையற்ற தாகி விட்டது. இப்போது மீண்டும் தூய்மையடைய வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் மூலவதனத்தில் தூய்மை யாக இருந்தோம். இப்படியெல்லாம் தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும். மனன சிந்தனை செய்ய வேண்டும். இப்போது ஆத்மாக்களாகிய உங்களுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் நிர்வாண தாமத்தில் இருந்தோம், பிறகு சத்யுகத்தில் சுகத்தின் நடிப்பை நடிக்க வருகிறீர்கள். நீங்கள் ஆல்ரவுண்டர் (முழு சக்கரத்திலும் வருபவர்கள்) ஆகையால் உங்களுக்கு முதன் முதலாக ஞானம் கிடைத்திருக்கிறது. சிவபாபா பிரம்மாவின் மூலம் பிராமணர்களின் படைப்பை படைக்கிறார் என நீங்கள் அறிவீர்கள். ஜீவாத்மாக் களாகிய உங்களை சூத்திர வர்ணத்திலிருந்து பிராமண வர்ணத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என பாபா சொல்கிறார். சூத்திரரிலிருந்து இப்போது பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மா வாய் வழி வம்சத்தினராக ஆகியுள்ளீர்கள். ஏன்? ஆஸ்தியை அடைவதற்கு. சங்கமத்தில் தான் பிரம்மா வாய் வழி வம்சத்தவர் உருவாகின்றனர். உங்களுக் காகத்தான் சங்கமயுகம் உள்ளது. நாம் முதலில் தூய்மை யாக இருந்தோம், இப்போது தூய்மையற்றவர்களாக ஆகியிருக்கிறோம், மீண்டும் நாமே தூய்மை யடைகிறோம் என ஆத்மாக்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள். ஓ பதீத பாவன பாபா எங்களை மீண்டும் வந்து தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குங் கள். இவ்வாறெல்லாம் தனக்குத் தான் பேசிக் கொள்ளுங்கள். இப்போது ஆத்மாவுக்கு சத்துணவு (ஞானம்) கிடைத் திருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாய் இருக்கும்போது முக்தி தாமத்தில் வசித்துக் கொண்டிருந்தோம், பிறகு சொர்க்கத்தில் வந்தோம், இத்தனை பிறவிகள் எடுத்தோம், பிறகு கீழே இறங்கி விட்டோம் (நரகம்) மீண்டும் தங்க யுகத்திற்குச் செல்ல வேண்டும். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கூட கூறியிருந் தேன் என பாபா சொல்கிறார். இல்லற விஷயங்களில் தொழில் முதலானவை செய்தாலும் தன்னை ஆத்மா என மட்டும் புரிந்து கொள்ளுங்கள், இப்போது நாம் தூய்மையடைய வேண்டும். வீட்டுக்குச் செல்ல வேண்டும். தூய்மையான உலகின் எஜமானாக ஆக வேண்டும். இப்போது நாம் இரும்பு யுகத்திலிருந்து எப்படி தங்க யுகத்திற்குச் செல்வது என்ற கவலை எப்போதும் இருக்க வேண்டும். பாபா சகஜமான யுக்தியை சொல்கிறார் – என்னை மட்டும் நினைவு செய்தீர்களானால் தூய்மை யடைவீர்கள். கீதையில் இரண்டு முறை மன்மனாபவ என்ற மகா வாக்கியம் வருகிறது. ஓ குழந்தைகளே தேக அபிமானத்தை விடுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் அதிகாரம் நிறைந்தவர். உங்களுக்கு அனைத்து சாஸ்திரங் களின் சாரத்தை, சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானத்தைப் புரிய வைத்திருக்கிறேன். நீங்கள் எவ்வளவு என்னை நினைவு செய்வீர்களோ அவ்வளவுக்கு உங்களுடைய ஆத்மா தூய்மை யடைந்தபடி இருக்கும், வேறு உபாயம் எதுவுமில்லை. கல் புத்தி தங்க புத்தியாக ஆக வேண்டும். கங்கா ஸ்நானத்தின் மூலம் தூய்மையடைய மாட்டோம். ஒருவேளை அப்படி ஆனாலும் இங்கே இருக்கவே போவதில்லை. இரும்பு யுகத்திற்கு அனைவருமே வரவே வேண்டும். முதலில் அதிகாலை யில் இந்த சிந்தனையில் அமர வேண்டும். இராமனை அதிகாலையில் நினைவு செய்யுங்கள் என்று சொல் கின்றனர் அல்லவா ஓ என்னுடைய புத்தியே இப்போது தந்தையை நினைவு செய் என ஆத்மா சொல்கிறது. புத்தியின் தொடர்பை தந்தையுடன் இணைக்க வேண்டும். இப்போது எந்த அளவு யார் ஈடுபடுத்துவார்களோ அந்த அளவு கல்லிலிருந்து தங்க புத்தியாக ஆகிக் கொண்டே செல்வார்கள். தங்க புத்தியாக ஆக்குபவர் ஒரு தந்தையே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் வந்து சங்கமயுகத்தில் உங்களை அப்படி உருவாக்குகிறேன் என சொல்கிறார். ஒரு வினாடியின் விசயம் அல்லவா. மருத்துவர்கள் மருந்து கொடுக்கும் போது நோய் உள்ளுக்குள்ளேயே நீங்கி விடுகிறது, அது போல நீங்கள் கூட வாய் மூலம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என தந்தை சொல்கிறார். கை கால்களின் மூலம் கூட எதுவும் செய்ய வேண்டியதில்லை. புத்தியின் மூலம் மட்டும் நினைவு செய்ய வேண்டும். கல்பத்திற்கு முன்பும் கூட நீங்கள் நினைவு செய்தீர்கள். அதன் மூலம் பாவ கர்மங்கள் பஸ்பமாகிப் போயின. இப்படி உங்களுக்கு புரிய வைத்திருந்தேன், இப்போது மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் தங்க புத்தி உள்ளவர்களாக ஆக வேண்டும். தந்தை சொல்கிறார் – உங்களுடைய பதித பாவன தந்தையாகிய நான் ஒவ்வொரு கல்பத்திலும் ஸ்ரீமத் கொடுப்பதற்காக சங்கமத்தில் வருகிறேன். ஓ என்னுடைய இனிமையான செல்லக் குழந்தைகளே, இதனை ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின் மூலம் கேட்கிறது. இந்த பிரம்மாவின் வாய், கௌமுக் என சொல்கின்றனர் அல்லவா. பசு மிருகம் அல்ல. இந்த பசு தாயாக ஆகிவிட்டார் அல்லவா? இந்த பசுவின் வாய் மூலம் சொல்கிறார். கோவிலில் பிறகு பசுவின் முகத்தைக் கொடுத்து விட்டார்கள். அதனுடைய வாயிலிருந்து நீர் வருகிறது. அது கௌமுக் (பசுவின் வாய்) என புரிந்து கொள்கின்றனர். கங்கையின் நீர் என புரிந்து கொள்கின்றனர். இந்த ஞானத்தை தந்தை இவர் மூலம் கொடுக்கிறார் என இப்போது நீங்கள் அறிகிறீர்கள். கௌ அதாவது பசு, தாய் அல்லவா. இவர் பெரிய தாய். இவருக்கு தாய் யாரு மில்லை. சாகார மம்மாவுக்கும் கூட இவர் தாய் அல்லவா. தாய்மார்களாகிய நீங்கள் அனைவரும் பசுக்கள், உங்களுடைய வாயிலிருந்து இந்த ஞானம் மழையாகப் பொழிகிறது. மற்றபடி நீராலான நதிகள் அனைத்து இடங்களிலும் உள்ளன, அந்த கங்கை பதீத பாவனி (தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடியதாக) ஆக முடியாது. கங்கைக் கரையிலும் கோவில் உள்ளது, அங்கே தேவதைகளின் மூர்த்திகள் உள்ளன. அந்த தேவதைகளுக்குள் ஞானம் இல்லை. ஞானம் உங்களுக்கு கிடைக்கிறது, அதன் மூலம் நீங்கள் தேவதைகள் ஆகிறீர்கள். தேவதைகளை ஞானி என சொல்வதில்லை. விஷ்ணுவுக்கு அலங்காரத்தைக் கொடுக் கின்றனர், உண்மையில் அது பிராமணர்களாகிய உங்களுடைய அலங்காரமாகும். குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுற்ற வேண்டும், இதில் இம்சையின் விஷயம் எதுவும் கிடையாது. இவை யனைத்தும் ஞானத்தின் விஷயங்களாகும். ஞானத்தின் சங்கை முழங்க வேண்டும் மற்றும் சக்கரத்தை நினைவு செய்ய வேண்டும். இது சுயதரிசன சக்கரமாகும், அவர்கள் இராட்டையை வைத்து விட்டனர். தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக நீங்கள் இங்கேயே ஆக வேண்டும். கதாயுதமும் கூட ஞானத்தினுடையதாகும். அதன் மூலம் மாயையின் மீது வெற்றியடைய வேண்டும். ஆக இவை யனைத்தும் உங்களுடைய அலங்காரங்கள் ஆகும்.

இது நரகம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், சொர்க்கம் அந்தப் பக்கமாக உள்ளது. நாம் சங்கமத்தில் இருக்கிறோம். ஒரு பக்கம் அழுக்கான தண்ணீர், மறுபக்கம் தூய்மையான தண்ணீர் உள்ளது. அதனுடைய சங்கமம் (சந்திக்குமிடம்) இருக்கிறது, அதனை சென்று பார்க்கின்றனர். இவர் ஞானக் கடலான பரமபிதா பரமாத்மா மற்றும் நீங்கள் அழுக்கான நதிகள் ஆவீர்கள். தந்தை அமர்ந்து தமக்குச் சமமாக தூய்மை யாக ஆக்குகிறார். தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் சுயதரிசன சக்கரத்தை சுற்றுங்கள், இதில் இரக்கம் முதலான எந்த விஷயமும் கிடையாது. ஆசிரியர் ஐயா, நீங்கள் இரக்கம் காட்டினீர்கள் என்றால் நாங்கள் உயர்ந்த பதவியை அடைவோம் என ஆசிரியரிடம் எப்போதாவது சொல்வார்களா என்ன? படியுங்கள் என ஆசிரியர் சொல்வார். நான் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் படிப்பை சொல்லித் தருகிறேன் என தந்தை சொல்கிறார். பதீத பாவனா வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் இந்த நாடகத்தின் நடிகர்கள் மற்றும் நாடகத்தின் முதல், இடை, கடைசி, படைப்பவர், டைரக்டரை தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் கல்புத்தியாக இருக்கிறீர்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிவதன் மூலம் தங்க புத்தியுள்ளவர்களாக ஆகிவிடுகிறீர்கள். அதிகாலையில் வெறும் அரை – முக்கால் மணி நேரம் அமர்ந்து இந்த மனன சிந்தனை செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். நிறைய விஷயங்களை உங்களுக்கு கூறுகிறார். அவர்கள் 18 அத்தியாயங்களை உருவாக்கியுள்ளனர். பக்தி மார்க்கத்தில் பிறகு நாடகத்தின்படி இந்த சாஸ்திரங்கள் முதலானவை கள் இருக்கும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அமிர்த வேளை எழுந்து தனக்குள் பேசிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் தந்தையை நினைவு செய்து தூய்மையடைய வேண்டும். மாலையின் மணியாக வேண்டும். பாபாவின் நினைவின் மூலம் தூய்மையடைவீர்கள், எந்த அளவு தானும் தூய்மை யடைந்து மற்றவர்களையும் தூய்மை யாக்கியபடி செல்வீர்களோ அந்த அளவு குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களின் தானத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். செல்வந்தர் கள் தான புண்ணியம் செய்கின்றனர் அல்லவா. நீங்கள் அழிவற்ற ஞான இரத்தினங்களின் தானத்தைச் செய்பவர்கள். ஒவ்வொரு இரத்தினமும் இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்பு டையவை ஆகும். நீங்கள் தூய்மையடைந்த அளவுக்கு 21 பிறவிகளுக்கு அளவற்ற செல்வங்கள் நிறைந்தவர்களாக ஆகி விடுவீர்கள். நீங்கள் தங்க புத்தியுள்ளவர்களாக இருந்தபோது சுகம், அமைதி, செல்வம் அனைத்தும் இருந்தன. இப்போது கல்புத்தியுடையவர்களாக ஆகியதால் அனைத்தும் இல்லாமல் போய் விட்டன. இப்போது தந்தை சொல்கிறார் – தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்திக் கொண்டு அதிகாலை எழக்கூடிய பயிற்சி செய்யுங்கள். அது நல்ல நேரம் ஆகும். காரிருள் சூழ்ந்த இரவில் மனிதர்கள் கொடிய பாவங்கள் செய் கின்றனர். இப்போது நீங்கள் தூய்மை யடைய வேண்டும். நீங்கள் 100% நிர்விகாரிகளாக இருந்தீர்கள். இப்போது ஆத்மாவில் துரு படிந்திருக்கிறது, அது யோக பட்டியின் மூலம், யோக அக்னியின் மூலம் நீங்கும். இந்த ஞானம் மற்றும் யோகத்தின் அறிவு வினாசமாவதில்லை. கொஞ்சம் கேட்டால் கூட பிரஜைகளில் வந்து விடுவார்கள். குழந்தைகளே, கல்பத்திற்கு முன்பு போல முழு ஆஸ்தியையும் எடுங்கள் என தந்தை சொல்கிறார். (கல்பத்திற்கு முன்பு போல) அவர்களே இராஜாவாகவும், அவர்களே பிரஜைகள் முதலானவர் களாகவும் ஆவார்கள். அஞ்ஞான காலத்தில் கூட தான புண்ணியங்கள் செய்தார்கள் என்றால் அரச குடும்பத்தில் சென்று பிறவி எடுப்பார்கள். சிலர் கர்மங்களுக்குத் தகுந்தாற்போல ஏழைகளின் வீட்டில் சென்று பிறவி எடுப்பார்கள். தந்தை அமர்ந்து கர்மம், அகர்மம் மற்றும் விகர்மங்களின் விளைவுகளைப் பற்றி புரிய வைக்கிறார். சத்யுகத்தில் கர்மம் அகர்மமாக ஆகிவிடுகிறது, ஏனென்றால் மாயையே இருக்காது. இது இராவண இராஜ்யமாகும். அது இராம இராஜ்யம் ஆகும். இப்போது இராவண இராஜ்யத்தின் வினாசம் ஆகி, சத்யுகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தந்தை மிகவும் நல்ல விதமாக புரிய வைக்கிறார். கன்யாக்கள் மிகவும் நல்ல விதமாக புரிய வைக்க வேண்டும், பந்தனமற்றவர்களாக இருக்கின்றனர், கன்னியாக்களின் வருமானத்தை தாய்-தந்தையர் சாப்பிடுவதில்லை. தாய் தந்தையர் கன்யாக்களை பூஜிக்கின்றனர். கன்னியர் விகாரியாக ஆகும்போது அனைவருக்கும் முன்பாக தலை வணங்க வேண்டியிருக்கிறது. கன்யாக்கள் கூட தேவதைகளுக்கு முன்பாக தலை வணங்குகின்றனர் ஏனென்றால் தூய்மையற்ற தாய் தந்தையரிடம் பிறவி எடுக்கின்றனர் அல்லவா. தேவதைகளோ தூய்மையாகத்தான் இருக்கின்றனர். நாமே தேவதைகளாக இருந்தோம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்து தூய்மையற்றவர்களாக ஆகி இருக்கிறோம், கீழே இறங்கியபடி வந்தோம். இப்போது நாம் மீண்டும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும், பிறகு எந்த பாவ கர்மமும் ஏற்படாது. பாவாத்மாக்களின் உணவு உள்ளே செல்லாது. பத்தியத்தைப் பற்றி சொல்லப்படுகிறது அல்லவா. இல்லாவிட்டால் அதன் தாக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் ஒரு சில இடங்களில் சூழ்நிலை களையும் அனுசரிக்க வேண்டியிருக்கிறது. கர்மங்களின் கணக்கு வழக்கு உள்ளது, தனியாக சமைக்க விட மாட்டார்கள். நல்லது, தந்தையை நினைவு செய்தபடி சாப்பிடுங்கள், தவிர்க்க முடியாது – பாபாவை நினைவு செய்து சாப்பிடுங்கள். மறந்து விட்டீர்கள் என்றால் உங்கள் மீது அதன் பாதிப்பு ஏற்பட்டு விடும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நெருக்கத்தில் வந்தபடி இருப்பீர்கள்.. இப்போதோ முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தை நேரடியாக புரிய வைக்கிறார், ஓ குழந்தைகளே, ஓ குழந்தைகளே என சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார், ஆக தந்தையை நினவு செய்ய வேண்டும், பிறகு செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம். யார் செய்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக பலன் அடைவார்கள். நேரடியான விஷயம் ஆகும்.

இது மருத்துவமனை என்பதை புரிந்து கொண்டு விட்டீர்கள். ஆரோக்கியம், செல்வத்திற்கான பல்கலைக் கழகமும் ஆகும். வெறும் 3 அடி நிலம் தேவை. அவ்வளவுதான். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையைப் பாருங்கள் எப்படி படிப்பிக்கிறார். எந்தளவு அகங்காரமே இல்லாத தந்தையாக இருக்கிறார். தூய்மையற்ற சரீரம், தூய்மையற்ற உலகத்தில் அமர்ந்து குழந்தைகளாகிய உங்கள் மூலம் எவ்வளவு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். குழந்தைகளே, மீண்டும் நீங்கள் தம்முடைய ஆஸ்தியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சாட்சியாகி பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் யார் நன்றாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள், இதில் வெறும் 3 அடி நிலம் தேவைப்படுகிறது. கல்கத்தாவில் செண்டர் இருக்கிறது, எவ்வளவு பேருக்கு நன்மை நடந்து கொண்டிருக்கிறது, யார் தங்களுக்குள் கலந்து செண்டரை நடத்துகின்றனரோ அவர்களுக்கும் பதவி கிடைத்து விடும். வகுப்பறை அளவுக்கு அறை இருந்தால் அதில் அனைவருமே வகுப்பை கேட்க முடியும். அவ்வளவுதான். நாம் தங்க யுகத்திற்குச் செல்ல வேண்டும். நினைவைத் தவிர வேறு எந்த உபாயமும் கிடையாது. தந்தை சொல்கிறார் – குழந்தைகளே, தனக்கும் பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும். நீங்கள் இந்த மருத்துவ மனையை திறந்து வையுங்கள். உங்களுக்கு இங்கே நிறைய பேருடைய ஆசீர்வாதம் கிடைக்கும். மனிதர்கள் மற்றவர்களுக்காக கல்லூரியை திறக்கின்றனர். தான் படிப்பதில்லை, அவர் களுக்கு அடுத்த பிறவியில் நல்ல படிப்பு கிடைத்து விடுகிறது. தந்தை சொல்கிறார் – செல்வந்த ரானாலும், ஏழைகள் ஆனாலும், 3 அடி நிலத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், அதில் அமர்ந்து ஞானம் மற்றும் யோகத்தை கற்றுக் கொடுக்கலாம், கல்லிலிருந்து தங்கமாக மாற்றலாம். சகோதரன், சகோதரியாக ஆக்கி விடுகின்றனர், விஷத்தின் ஆஸ்தியிலிருந்து விடுவித்து விடுகின்றனர், பிறகு உலகம் எப்படி நடக்கும் என்றெல்லாம் சொல்கின்றனர். அந்த உலகம் ஏதும் (போக) விகாரத்தின் பலத்தினு டையதாக இருக்காது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே யோக பலத்தின் மூலம் குழந்தை பிறக்கும். இப்போது நீங்கள் அந்த புதிய உலகத்தின் எஜமானாக ஆகிறீர்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. அதிகாலையில் எழக்கூடிய பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்து கண்டிப்பாக ஞானத்தின் மனன சிந்தனை செய்ய வேண்டும். அரை, முக்கால் மணி நேரமாவது அமர்ந்து தன்னிடம் தானே பேசிக் கொள்ள வேண்டும். புத்தியை ஞானத்தால் நிரப்ப வேண்டும்.

2. நிறைய பேருடைய ஆசீர்வாதங்களை அடைவதற்காக 3 அடி நிலத்தில் கல்லூரி மற்றும் மருத்துவ மனையை திறந்து விட வேண்டும். தந்தைக்குச் சமமாக அகங்காரமற்றவராகி சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:-

ஞானத்தில் புதுமை என்பதன் அர்த்தம், புத்திசாலி ஆகி நடந்து கொள்வது, அதாவது தங்களுக் குள் இருக்கும் குறைகளை முடித்துக் கொண்டே செல்வதாகும். யோகத்தின் பிரயோகத்தில் புதுமை என்றால் அதன் சதவிகிதத்தை அதிகப் படுத்துவது. அது போலவே நான்கு பாடங்களிலும் சுயத்தின் முன்னேற்றத்தில் புதுமை, விதியில் புதுமை, பிரயோகத்தில் புதுமை, சேவையில் புதுமை, மற்றவர்களை சகயோகி ஆக்குவது மற்றும் சதவிகிதத்தை அதிகப்படுத்துவதில் புதுமையை அனுபவம் செய்வது என்றால் தீவிர புருஷார்த்தி ஆவது. இதன் மூலம் தான் சமீபத்தில் இருப்பதாக அனுபவம் செய்வீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top