28 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

June 27, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! பிரம்மாவின் வாய் வழி வம்சாவளி பிராமணர்களாகிய நீங்கள் தந்தையிடமிருந்து 21 பிறவிகளின் முழுமையான ஆஸ்தியை பெறுவதற்காக கண்டிப்பாக ஸ்ரீமத் (உயர்ந்த வழி) படி நடக்க வேண்டும்.

கேள்வி: -

குழந்தைகளாகிய நீங்கள் எதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுடைய திட்டம் என்ன?

பதில்:-

நீங்கள் அமரலோகத்திற்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய திட்டம் பாரதத்தை சொர்க்கமாக உருவாக்குவதாகும். நீங்கள் உங்களுடைய உடல்-மனம்-பொருளால் இந்த பாரதத்தை சொர்க்கமாக உருவாக்குவதற்கான சேவையில் ஈடுபட்டிருக்கிறீர்கள். நீங்கள் தந்தையுடன் சேர்ந்து முழுமையான உதவியாளர்களாக இருக் கிறீர்கள். அஹிம்சையின் பலத்தின் மூலம் உங்களுடைய புதிய இராஜ்யத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. மனிதர்களோ வினாசத்திற்கான திட்டங்களை தீட்டிக் கொண்டிருக் கின்றனர்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

மாதா ஓ மாதா. 

ஓம் சாந்தி. யாருடைய மகிமையைக் கேட்டீர்கள்? இரண்டு மாதர்களுடையது (தாய்மார் களுடையது). ஒன்று தந்தையின் மகிமையாக நீயே தாயும், தந்தையும். . . நிராகாரருக்கான மகிமையும் கூட அது போலவே இருக்கிறது, நீயே தாயும் தந்தையும். . . ஏனென்றால் பிதா என்றால் மாதாவும் கண்டிப்பாக தேவை. பரமபிதா பரமாத்மாவுக்கு படைப்பை படைக்கும் போது கண்டிப்பாக மாதாவும் தேவை என்பதை நீங்கள் அறிகிறீர்கள். தந்தை ஒரு சாதாரண சரீரத்தில் தான் வரவேண்டியிருக்கிறது. சிவ ஜெயந்தி அல்லது சிவராத்திரி கொண்டாடப் படுகிறது. அவசியம் பரமபிதா பரமாத்மா அவதாரம் எடுக்கிறார். எதற்காக? புதிய படைப்பை படைப்பதற்காக, பழைய படைப்பை வினாசம் செய்வதற்காக. பிரம்மாவின் மூலம்தான் படைப்பை படைக்க வேண்டும். லௌகிக தந்தையும் கூட எல்லைக்குட்பட்ட பிரம்மா ஆவார். அவர் தனது மனைவியின் மூலம் எல்லைக்குட்பட்ட படைப்பை படைக்கிறார். ஆக அவர்களை குழந்தைகள்தான் தாய் தந்தை என சொல்வார் கள். அனைவருமே சொல்ல மாட்டார்கள் – நீங்கள்தான் தாயும் தந்தையும், நாங்கள் உங்களின் பாலகர்கள் என்று. . . ஏனென்றால் இது நிறைய குழந்தைகளின் விஷயமாகும். பிரஜாபிதா பிரம்மாவுக்கு ஏராளமான குழந்தைகள் இருக்கின்றனர். ஆக கண்டிப்பாக பிரம்மாவின் கமல வாய் மூலம் பிராமண குலம் அல்லது பிராமண வர்ணத்தை எல்லைக்கப் பாற்பட்ட தந்தை படைத்திருப்பார். அவருடையது வாய் மூலமான பிறவியாகும். அந்த தாய் தந்தையருடையது வயிற்றின் (கர்ப்பத்தின்) மூலமான பிறவி எடுப்பதாகும். அவர்கள் இந்த மகிமையை செய்ய முடியாது. இந்த மகிமை எல்லைக்கப் பாற்பட்ட தாய் தந்தை யுடையதே ஆகும். நீங்கள்தான் தாயும் தந்தையும். . . நீங்கள் வந்து எங்களை தன்னுடையவர்களாக ஏற்றுள்ளீர்கள். உங்களிடமிருந்து எங்களுக்கு சொர்க்கத்தின் 21 பிறவிகளுக்கான அளவற்ற சுகம் கிடைக்கிறது. இதன்படி பிரம்மாவின் வாய் மூலம் நீங்கள் சிவபாபாவின் பேரன் பேத்திகளாக ஆகி விட்டீர்கள். பிரம்மாவின் முக வம்சாவளியாக ஜகதம்பா ஆகிறார். பாரதத்தில் நீங்கள் தாய் தந்தை என பாடுகின்றனர். . . எனும்போது கண்டிப்பாக ஜகதம்பா மற்றும் ஜகத்பிதா தேவைப்படுகின்றனர். அவர்களின் வாய் மூலமே நீங்கள் தர்மத்தின் குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள். ஆஸ்தி உங்களுக்கு சிவபாபாவிடமிருந்து கிடைக்கிறது, இந்த பிரம்மாவின் மூலம் அல்ல. அவருக்குள் பிரவேசமாகியிருக்கிறார், அவர் அம்மா எனப்படுகிறார். அம்மாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்காது. எப்போதும் தந்தையிட மிருந்துதான் ஆஸ்தி கிடைக்கிறது. உங்களுக்கும் கூட ஆஸ்தி எல்லைக்கப்பாற் பட்ட தந்தை யிடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. பக்தி மார்க்கத்தில் பாடப்படு கிறார்கள் எனும் போது பிறகு அவர்கள் வரத்தான் வேண்டும். குழந்தைகள் மிகவும் துக்கம் மிக்கவர்களாக உள்ளனர். துக்கதாமத்திற்குப் பிறகு சுகதாமம் வர வேண்டும். சத்யுகத்தில் சதோபிரதானமான சுகம் இருக்கிறது, பிறகு திரேதாவில் கொஞ்சம் குறைகிறது. இரண்டு கலைகள் குறைந்துள்ளது என சொல்லலாம். துவாபர, கலியுகங்களில் இன்னும் கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன. இப்போது இந்த சக்கரம் சுற்றத்தான் வேண்டியுள்ளது. எல்லைக்கப்பாற்பட்ட தந்தைதான் சொர்க்கத்தின் படைப்பை படைக்கிறார் என குழந்தை களுக்குத் தெரியும். அவர் கண்டிப்பாக முதலில் சூட்சும வதனத்தை படைக்க வேண்டி யுள்ளது, ஏனென்றால் பிரம்மா கண்டிப்பாக தேவைப்படுகிறார். பிரம்மாவையும் சிவபாபா தத்தெடுக்கிறார். நீங்கள் என்னுடையவர் என சொல்கிறார். இவர் (பிரம்மா) கூட சொல்கிறார் – பாபா நான் உங்களுடையவன் எனும்போது பிரம்மாவின் தந்தை சிவன் ஆகிவிட்டார். சிவபாபாவுக்கு மூன்று குழந்தைகள், மூவரின் வாழ்க்கை வரலாற்றையும் சொல்கிறார். இந்த வியக்த (தேகதாரி) பிரம்மா பிறகு அவ்யக்த பிரம்மா ஆகிறார். வியக்த பிரம்மாவின் வாரிசு களான நீங்களும் கூட பிறகு அவ்யக்த வாரிசுகள் ஆகிறீர்கள். இவை மிகவும் ஆழமான விஷயங்கள் ஆகும். பரமபிதா பரமாத்மா உலகைப் படைப்பவர் ஆவார். முதன் முதலாக சொர்க்கத்தைப் படைக்கிறார். தந்தையிட மிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க வேண்டும் அல்லவா. இப்போது நாம் நரகத்தில் இருக்கிறோம். எப்போது நாம் படைக்கப்படுகிறோமோ அப்போது ஆஸ்தி கொடுத்திருப்பார். தந்தை சொல்கிறார் – இப்போது நான் படைத்துக் கொண்டிருக்கிறேன். 5 ஆயிரம் வருடங் களுக்கு முன்பும் கூட நான் இப்படித்தான் வந்து பிரம்மாவின் மூலம் பிராமண குலத்தைப் படைத்தேன். இந்த ருத்ர ஞான யக்ஞத்தை பிராமணர்கள் தான் கவனித்துக் கொள்ள (பாதுகாக்க) முடியும். இவர்கள் பிரம்மாவின் முக வம்சாவளி பிராமணர்கள். அந்த பிராமணர் கள் விகார வழி வம்சாவளி பிராமணர்கள் என சொல்லலாம். பிரம்மாவின் முக வாய்வழி வம்சாவளி பிராமணர் என சொல்ல முடியாது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள்தான் பிரம்மா வின் வாய்வழி வம்சத்தினர். முதலில் கண்டிப்பாக பிராமணர்கள் தேவைப்படுகின்றனர். எங்கிருந்து பிராமணர்களாக மாற்றினார்? சூத்திர வர்ணம் இங்கே உள்ளது. குழந்தைகளாகிய உங்களை இப்போது பிராமண வர்ணத்தில் கொண்டு வந்திருக்கிறேன். பாதத்திலிருந்து பிறகு (குடுமி) உயர்ந்த பிராமணராக, பிராமணரிலிருந்து தேவதையாக ஆக வேண்டும். இந்த வர்ணங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தவர்களுக்காகத்தான் ஆகும், மற்ற தர்மத் தினருக்கு வர்ணங்கள் கிடையாது. 21 பிறவிகள் நீங்கள் தேவதா வர்ணத்தில் இருக்கிறீர்கள். பிராமண வர்ணத்தின் இந்த ஒரு பிறவி அல்லது ஒன்றரை பிறவியாகவும் இருக்கலாம், ஏனென்றால் எந்த குழந்தைகள் சம்ஸ்காரத்தை எடுத்துக் கொண்டு சரீரத்தை விட்டுச் சென்று விடுகின்றனரோ அவர்கள் மீண்டும் வந்து ஞானத்தை எடுக்க முடியும். ஆக தந்தை புரிய வைக்கிறார் – குழந்தைகளே, சொர்க்கத்தின் எஜமானாக ஆக வேண்டுமெனில் கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். 63 பிறவிகள் நீங்கள் ஏமாற்றத்தைச் சந்தித்தீர்கள், இப்போது நீங்கள் அளவில்லாத பெரும் துக்கத்தில் இருக்கிறீர்கள். முழு பாரதத்தின் பிரச்சினை அல்லவா. இப்போது முழு பாரதமும் சுகம் மிக்கதாக உள்ளது என்பதல்ல. ஆம், பாரதத்தில் நிறைய செல்வந்தர்கள் உள்ளனர். பாருங்கள், ஒருவர் வந்திருந்தார், கோடீஸ்வரர்தான், ஆனாலும் கால், கை செயலிழந்து விட்டன, அப்போது துக்கம்தானே. உலகில் ஒருவர் துக்கமுள்ளவராக இருந்தாலும் கண்டிப் பாக துக்க தாமம் என்றே சொல்வோம். சத்யுகத்தில் ஒருவர் கூட துக்கமுள்ளவராக இருக்க மாட்டார். பாரதம் சுக தாமமாக இருந்தது. யார் சொர்க்கத்தைப் படைத்தது? தந்தை. குழந்தைகளாகிய நாம் உரிமையாளர்கள். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கூட நாம் சொர்க்கத்தில் இருந்தோம். கிறிஸ்துவுக்கு 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கீதை சொல்ல வந்தார் என சொல்கின்றனர். ஆக 5 ஆயிரம் வருட காலம் ஆகி விட்ட தல்லவா. கிறிஸ்துவின் 2 ஆயிரம் வருடங்கள் மற்றும் அதற்கு முன் 3 ஆயிரம் வருடங்கள். ஆக இப்போது கீதை சொல்ல வந்திருக்கிறார் அல்லவா. தேவதா தர்மமும் மறைந்து விட்டது.

ஆக, குழந்தைகள் பாண்டவர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர் பகவான் ஆவார். அவர் நிராகாரமானவர். சாஸ்திரங்களில் ருத்ர ஞான யக்ஞம் உள்ளது, உண்மையில் சிவராத்திரி, சிவ ஜெயந்தியாகும். ருத்ர ஜெயந்தி, ருத்ர ராத்திரி என சொல்வதில்லை. சிவ ராத்திரி என ஏன் சொல்கின்றனர்? இப்போது எல்லைக்கப்பாற்பட்ட இரவு, அடர்ந்த காரிருளாக உள்ள தல்லவா. நான் எல்லைக்கப்பாற்பட்ட இரவு நேரத்தில் வருகிறேன் என தந்தை சொல்கிறார். இப்போது பகலாக ஆகவுள்ளது. என்னுடைய பிறவி இயற்கையான மனிதப் பிறவி போல ஏற்படுவ தில்லை. கிருஷ்ணரோ தாயின் கர்ப்ப மாளிகையில் பிறவி எடுத்தார். அந்த தாய்-தந்தையரிட மிருந்து சொர்க்கத்தின் அளவற்ற சுகம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிகிறீர்கள். சொர்க்கம் மற்றும் நரகம் என்பது எந்தப் பறவையின் பெயர் (எப்படிப்பட்டது) என உலகினருக்குத் தெரியாது. இப்போது நீங்கள் இங்கே படிக்க வந்துள்ளீர் கள், ஸ்ரீமத்படி நடக்கிறீர்கள். ஸ்ரீமத்படி நடப்பதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தின் ஸ்ரீலட்சுமி-நாராயணர் ஆகிறீர்கள். சத்யுகத்தின் எஜமான் எனும்போது கண்டிப்பாக கலியுகத்தின் கடைசி யில் அவர்களுடைய கடைசி 84ஆவது பிறவி இருக்கும், அப்போது இராஜயோகம் கற்றிருப்பார் கள். ஒருவர் மட்டுமல்ல, முழு சூரிய வம்சத்தின் குலமும் இராஜயோகம் கற்கிறது. அவர்கள் வந்து எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து சூரியவம்ச, சந்திர வம்ச இராஜ்யத்தின் ஆஸ்தியை எடுத்துக் கொண்டி ருக்கின்றனர். இப்போது நீங்கள் என்னிடம் தூய்மையாய் இருப்பதற்கான வாக்குறுதி கொடுங்கள், ஏனென்றால் தூய்மையான உலகின் ஸ்தாபனை செய்கிறேன் என தந்தை சொல்கிறார். 63 பிறவிகள் நீங்கள் பதிதர்களாக (தூய்மையற்றவர் களாக) ஆகி வந்தீர்கள், ஆகையால் துக்கம் மிக்கவர்களாக ஆகியுள்ளீர்கள். சொர்க்கத்தில் மிகவும் சுகம் மிக்கவர் களாக இருந்தீர்கள். சோழி போல் இருக்கும் இந்த பாரதம் பிறகு வைரம் போல ஆகப் போகிறது. இவர் (சிவபாபா) ஒரே தந்தை ஆவார், அவர் சொல்கிறார் – நான் மீண்டும் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்துள்ளேன். நீங்கள் இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாய் ஆகுங்கள் என எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொல்கிறார். இந்த தாய் தந்தையரிடமிருந்து நீங்கள் அமிர்தத்தை குடிக்க வேண்டும், விஷம் குடிப்பதை நிறுத்த வேண்டும். காமச் சிதையிலிருந்து இறங்கி ஞானச் சிதையில் அமருங்கள். உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. யாருக்கு ஆஸ்தியை எடுக்கும் நம்பிக்கை இல்லையோ அவர்கள் சொல்கிறார் கள் – பாபா விஷத்தை (விகாரத்தை) விடுவது மிகவும் கடினமாக உள்ளது. அட, உங்களுக்கு 21 பிறவிகளுக்கு சுகத்தின் பிராப்தி ஆகிறது எனும்போது அதற்காக நீங்கள் இதனை விட முடியாதா? பக்தி, ஜபம், தவம் முதலானவை செய்யும்போது எல்லைக்குட்பட்ட சுகம் கிடைக்கிறது. எல்லைக்கப்பாற்பட்ட சுகம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து கிடைக் கிறது. தந்தை சொல்கிறார் – சாதுக்களையும் கூட நான் முன்னேற்றுகிறேன், ஏனென்றால் சிவபாபாவை அறியாத காரணத்தால் யாரும் சத்கதியை அடைவதில்லை, யாரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. ஒருவேளை தந்தையின் வீட்டிற்கு வழி தெரிந்தது என்றால் அங்கே வந்து, சென்று கொண்டிருப்பார்கள் அல்லவா. அனைவருமே மறுபிறவிகள் எடுத்தாக வேண்டும். சதோ, ரஜோ, தமோவில் வரவே வேண்டும். இப்போது பொய்யான மாயை, பொய்யான உடலாக இருக்கிறது. யார் தர்மத்தை ஸ்தாபனை செய்தாரோ அவருடைய பெயரில் தான் சாஸ்திரங்கள் உருவாகின்றன, அதனை தர்ம சாஸ்திரம் என சொல்கின்றனர். கிறிஸ்து வந்து என்ன செய்தார்? தாமே வந்தார், அவருக்குப் பின்னால் அவருடைய குலத்தின் ஆத்மாக்கள் வர வேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும். இப்போது பாருங்கள், கிறிஸ்தவர் களாக ஆக்கிக் கொண்டே செல் கின்றனர். நிறைய இந்து தர்மத்தினரை மத மாற்றம் செய்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு தம்முடைய தர்மத்தைப் பற்றி தெரியவே தெரியாது. நாம் தேவதா வர்ணத்தில் செல்லப் போகிறோம் என இப்போது நீங்கள் அறிகிறீர்கள். கிருஷ்ணரின் ஆத்மா இப்போது படித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சங்கம யுகம் ஆன காரணத்தால் கலப்படம் செய்து விட்டனர். இந்த படங்கள் முதலான அனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட்களாகும். ஞானக் கடல் பரமபிதா பரமாத்மா ஆவார், அவர் மூலம் அனைவருக்கும் சத்கதி ஏற்படவுள்ளது. சத்யுகத்தில் சிலரே இருப்பார்கள். மற்ற அனைவரும் கணக்கு வழக்கு முடித்துக் கொண்டு முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களுக்கு அமைதியும் உங்களுக்கு சுகமும் கிடைக்கும். அளவற்ற சுகத்தை அடைவதற்காக இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். யாருடைய பாகம் இருக்கிறதோ அவர்கள்தான் ஒவ்வொரு கல்பமும் முயற்சி செய்கின்றனர். யார் பிராமணர் ஆகின்றனரோ அவர்கள்தான் சொர்க்கத்தின் எஜமான் ஆவார்கள், ஆனால் வரிசைக்கிரமமான முயற்சியின் படிதான் ஆகும். இப்போது தேவி தேவதா தர்மத்தின் மரக்கன்று (நாற்று) நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் கல்பத்திற்கு முன்பு வந்தார்களோ அவர்கள்தான் வருவார்கள். நாடகம் உங்கள் மூலம் முயற்சியும் கண்டிப் பாக செய்ய வைக்கும். இந்த சமயத்தில் அனைவருமே கல் புத்தியுள்ளவர்களாக இருக்கின்றனர். தங்க புத்தியாக சத்யுகத்தில் இருப்பார்கள். அங்கே ராஜா ராணி எப்படியோ பிரஜைகளும் அப்படியே தங்க புத்தியுள்ளவர்களாக இருப்பார்கள்.

இப்போது நீங்கள் பாண்டவ சேனையாக இருக்கிறீர்கள். நீங்கள் தந்தையின் உதவியின் மூலம் சொர்க்கத்தின் அடித்தளத்தை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொர்க்கத்தின் வரை படத்தை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அமரலோகத்திற்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தங்களுடைய வினாசத்திற்காகவே ஆகும். நீங்கள் அகிம்சையாளர்கள். அவர்கள் அனைவரும் வன்முறை யாளர்கள். வன்முறையாளர்கள் தங்களுக்குள்ளாகவே சண்டை போட்டுக் கொண்டு முடிந்து போவார்கள், பிறகு வெற்றியின் கோஷம் எழும்பும். நாடக தின்படி யார் கல்பத்திற்கு முன்பு வந்தனரோ அவர்கள்தான் அதிகரித்தபடி செல்வார்கள் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். சிலரோ தந்தையுடையவராக ஆகி பின் விட்டுப்போய் விடுகின்றனர். நீங்கள் ஸ்ரீமத்படி நடந்தீர்கள் என்றால் சூரிய வம்சத்தின் மகாராஜா, மகாராணி ஆவீர்கள். இங்கே உள்ளது முயற்சியின் விஷயமாகும். அவர்கள் மிகவும் முறைப்படி சாஸ்திரங்களின் கதைகளை சொல்கின்றனர். அதனையே கேட்டும் வந்தனர். கேட்டு கேட்டு நரகவாசிகள் ஆகினார்கள், கலைகள் குறைந்தபடி சென்றன. கணவர்தான் ஈஸ்வரன் என சொல்கின்றனர், ஆனால் குருவை பின்பற்றுகின்றனர். கலைகள் குறைந்தபடி செல்கின்றன அல்லவா. சிருஷ்டி தமோபிரதான மாக ஆகத்தான் வேண்டியுள்ளது. தந்தை ஆத்மாக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இனிமையான குழந்தைகளே இப்போது உங்களின் 84 பிறவிகள் முடிந்து விட்டன. இப்போது ஆத்ம அபிமானி ஆகுக. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. உண்மையிலும் உண்மையான பிராமணர் ஆகி இந்த ருத்ர ஞான யக்ஞத்தை பாதுகாக்கவும் வேண்டும், கூடவே எப்படி வியக்தமான பிரம்மா அவ்யக்தமாக ஆகிறாரோ அப்படி அவ்யக்தமாக ஆவதற்கான முயற்சியும் செய்ய வேண்டும்.

2. 21 பிறவிகள் வரை சுகம் மிக்கவர்களாக ஆவதற்காக இந்த ஒரு பிறவியில் தூய்மையாய் இருப்பதற்கான வாக்குறுதியை தந்தைக்குக் கொடுக்க வேண்டும். காமச் சிதையை விட்டு ஞானச் சிதையில் அமர வேண்டும். ஸ்ரீமத்படி கண்டிப்பாக நடக்க வேண்டும்.

வரதானம்:-

சத்குரு மூலமாக பிறந்த உடனேயே தூய்மை ஆகுங்கள், யோகி ஆகுங்கள் என்ற முதன் முதல் மந்திரம் கிடைத்தது. இந்த மகா மந்திரம் தான் சர்வ பிராப்திகளின் சாவி ஆகும். தூய்மை இல்லை, யோகி வாழ்க்கை இல்லை என்றால், அதிகாரி ஆக இருக்கும் பொழுது அதிகாரத்தின் அனுபவம் செய்ய முடியாது. எனவே இந்த மகா மந்திரம் அனைத்து பொக்கிஷங்களின் அனுபவத்தின் சாவி ஆகும். இப்பேர்ப்பட்ட சாவியின் மகா மந்திரம் சத்குரு மூலமாக சிறந்த பாக்கியத்தில் கிடைத்துள்ளது. அதை நினைவில் கொண்டு அனைத்து பிராப்திகளில் நிறைந்தவர் ஆகுங்கள்.

சுலோகன்:-

மாதேஷ்வரி அவர்களின் விலை மதிப்பிட முடியாத மகாவாக்கியம்.

சிருஷ்டியின் ஆரம்பம் எப்படி ஏற்பட்டது என்று மனிதர்கள் கேள்வி கேட்கிறார்கள். சிருஷ்டி யின் ஆரம்பம் நமது தர்மத்தின் மூலமாகத் தான் ஆகி உள்ளது என்பதை மட்டுமே அறிந்துள்ளார்கள். இப்ராஹீமை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் எங்களது தர்மத்தினால் சிருஷ்டி ஆரம்பமாகியது என்பார்கள். கிறித்துவர்கள் பிறகு தங்களது சமயத்தில் தான் ஆரம்பம் என்று நினைக்கிறார்கள். பௌத்தியர்கள் பிறகு தங்களது தர்மத்திலிருந்து ஆரம்பம் என்று நினைக்கிறார்கள். மேலும் முகம்மதியர்கள் எங்களது தர்மத்திலிருந்து ஆரம்பமாகியது என்பார்கள். மேலும் பாரதவாசிகள் பிறகு தங்களது தர்மத்தின் மூலம் ஆரம்பமாகியது என்று நினைக்கிறார்கள். பிறகு சிருஷ்டியின் ஆரம்பத்தில் மனிதனை எப்படி உருவாக் கினார்கள் என்ற காண்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் முதன் முதலில் எலும்புகளால் மனிதன் அமைக்கப் பட்டான். பிறகு முதலில் காற்று இருந்தது. அதன் மூலம் மூச்சு அமைக்கப் பட்டது. பிறகு நுரையீரல் அமைக்கப்பட்டது. பிறகு மனிதன் உருவாகி விட்டான் என்ற காண்பிக்கிறார்கள். அதே போல முதல் மனிதன் அமைந்தான். பிறகு முழு படைப்பு உருவாகியது. இப்பொழுது இது மனிதர்களால் கேள்விப்பட்ட மற்றும் கூறப்பட்ட விஷயங்கள். ஆனால் நமக்கு சுயம் பரமாத்மா உண்மையில் சிருஷ்டி எப்படி உருவாக்கப்பட்டது என்பதை கூறுகிறார். உண்மையில் பரமாத்மாவோ அனாதி ஆவார். பின் இந்த படைப்பு கூட அனாதி ஆகும். அந்த அனாதி படைப்பின் ஆரம்பம் கூட பரமாத்மா மூலமாகத்தான் ஏற்பட்டது. பாருங்கள் கீதையில் இருக்கிறது – பகவானுவாக்கு – பகவான் கூறுகிறார் – நான் வரும் பொழுது அசுர உலகத்தை அழித்து தெய்வீக உலகத்தை ஸ்தாபனை செய்கிறேன். அதாவது கலியுக தமோகுண தூய்மை யற்ற ஆத்மாக்களை தூய்மையாக ஆக்குகிறேன். எனவே முதன் முதலில் பரமாத்மா சிருஷ்டி யின் ஆரம்பத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கரன் என்ற மூன்று ரூபத்தை படைத்தார். பிறகு பிரம்மா மற்றும் சரஸ்வதி மூலமாக தெய்வீக உலகத்தின் ஸ்தாபனை செய்தார். ஆக சிருஷ்டி யின் ஆரம்பம் பிரம்மா மூலமாக ஆரம்பமாகியது. அந்த பிரம்மாவை கிறித்துவர்கள் ஆதாம் மற்றும் சரஸ்வதியை ஏவாள் என்றும் கூறுகிறார்கள். மேலும் முஸ்லிமில் பிறகு டாடா – ஆதம் பீபி என்கிறார்கள். இப்பொழுது உண்மையில் சரியான விஷயம் இது தான். ஆனால் இந்த ரகசியத்தை அறியாத காரணத்தால் ஒரே ஒரு பிரம்மாவிற்கு தனி தனி பெயர்கள் கொடுத்துள்ளார்கள். எப்படி பரமாத்மாவிற்கு ஒரு சிலர் காட் என்கிறார்கள். ஒரு சிலர் அல்லா என்கிறார்கள். ஆனால் பரமாத்மாவோ ஒரே ஒருவர் தான். இது மொழியில் மட்டும் இருக்கக் கூடிய வித்தியாசம் ஆகும். நல்லது. ஓம் சாந்தி.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top