26 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

26 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

25 June 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

தபஸ்யாவின் நேரடியான (வெளிப்படையான) பலன் - குஷி

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாப்தாதா தனது அனைத்து தபஸ்விகளின்இராஜாகுழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். தபஸ்வியாகவும் இருக்க வேண்டும், மேலும் இராஜ்யஅதிகாரியாகவும் இருக்கிறார்கள்.ஆகையால்தபஸ்யாவின்இராஜாவாக இருக்கிறீர்கள். தபஸ்யா என்றாலே இராஜ்ய அதிகாரியாவது. தபஸ்யா இராஜா ஆக்குகிறது. எனவே அனைவரும் இராஜா ஆகுவீர் கள் அல்லவா. தபஸ்யாவின் சக்தி என்ன பலனை தருகிறது? அடிமைத்தனத் திலிருந்து அதிகாரி என்றால் இராஜா ஆக்கிவிடுகிறது, ஆகையால் தபஸ்யாவின் மூலம் இராஜ்ய பாக்கியம் அடைகிறது என்று பாடவும் செய்கிறார்கள். எனவே பாக்கியம் எவ்வளவு உயர்ந்த தாக இருக்கிறது. அப்படிப்பட்ட பாக்கியம் முழு கல்பத்தில் யாருக்குமே கிடைக்காது. இத்தனை பெரிய பாக்கியமாக இருக்கிறது, அதை (பாக்கியத்தை) உருவாக்கக்கூடிய வள்ளலை தன்னுடை யவராக ஆக்கிவிட்டோம். ஒவ்வொரு பாக்கியத்தையும் தனி தனியாக யாசிப்பதற்கான அவசியம் இல்லை. பாக்கியத்தை உருவாக்குவதினால் அனைத்து செல்வத்தையும் ஆஸ்தியாக பெற்றுவிடுவீர்கள். ஆஸ்தி யாசிப்பதினால் கிடைப்பதில்லை. அனைத்து பாக்கியமும்,, பாக்கியத்தை உருவாக்கக்கூடியவர் தானாகவே கொடுக்கிறார். தபஸ்யா என்றால் ஆத்மா சொல்கிறது நான் உன்னுடையவன், நீ என்னுடையவன், இதைத் தான் தபஸ்யா என்று சொல்லப்படுகிறது. இந்த தபஸ்யாவின் பலத்தின் மூலம் பாக்கியத்தை உருவாக்கக்கூடியவரை தன்னுடையவராக மாற்றிவிடுவது. பாக்கியத்தை உருவாக்கக் கூடியவர்பாபாவும் சொல்கிறார் நான் உன்னுடையவன். எனவே எவ்வளவு உயர்ந்த பாக்கிய மாக ஆகிவிட்டது. பாக்கியத்தின் கூடவே சுயராஜ்யமும் இப்பொழுது கிடைத்திருக்கிறது. எதிர்கால விஷ்வ இராஜ்யம் என்பது சுயராஜ்யம் தான் ஆதாரமாக இருக்கிறது. ஆகையால் தபஸ்யாவிராஜ் (துறவிகளின் தலைவன்) இருக்கிறீர்கள். பாப்தாதாவிற்கும் தனது ஒவ்வொரு இராஜ்ய அதிகாரி குழந்தை களை பார்த்து மகிழ்ச்சியடைக்கின்றார். பக்தியில் பல பிறவிகளில் பாப்தாதாவிற்கு முன்னால் என்ன சொன்னீர்கள்? நினைவு இருக்கிறதா இல்லை மறந்து விட்டீர்களா? அடிக்கடி தன்னை நான் உங்களின் சேவகன், நான் உங்களின் சேவகன் என்று சொன்னீர்கள். நான் உங்களுடைய சேவகன் என்று குழந்தைகளாகவும் சேவகனாக வும் இருக்கிறீர்கள். ஆகையால் தந்தை நமக்கு சேவகனாக இருக்கிறார் என்பதற்கு பதிலாக என்ன அனுபவம் செய்கிறீர்கள்? நான் உன்னுடைய வனாக இருக்கிறேன். எனவே சேவகன் நிலையிலிருந்து இராஜாவாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுதும் ஒருபொழுதும் சேவகனாக மாறுவதில்லை தானே? அடிமைத்தன்மையின் பழைய சம்ஸ்காரங்கள் ஒருபொழுதும் இமர்ஜ் (வெளிபடுதல்) ஆவதில்லை தானே? மாயாவிற்கு அடிமையாகிறீர்களா? இராஜாவாக இருப்பவர்கள் ஒருபொழுதும் அடிமை ஆவதில்லை. அடிமைத்தனம் போய்விட்டதா? அல்லது அவ்வப்பொழுது நன்றாகவும் இருக்கிறதா? எனவே தபஸ்யாவின் சக்தி மிகவும் உயர்ந்தது. மேலும் தபஸ்யா என்ன செய்கிறது? தபஸ்யாவில் கடின உழைப்பு செய்கிறீர்களா? தபஸ்யா என்றால் என்ன? என்பதை பாப்தாதா சொல்லி யிருக்கிறார். மகிழ்ச்சியை கொண்டாடு வது. தபஸ்யா என்றால் மிகவும் எளிதாக நடனம் ஆடுவது மற்றும் பாடுவது. நாட்டியம் ஆடுவது மிகவும் எளிதாக இருக்கிறதா கடினமாக இருக்கிறதா? மகிழ்ச்சியாக தோன்றுகிறதா அல்லது கடின உழைப்பு செய்ய வேண்டியிருக் கிறதா? எனவே தபஸ்யாவில் என்ன செய்கிறீர்கள்? தபஸ்யாவின் உடனடி பலன் குஷியாகும். அதனால் குஷியில் என்ன ஏற்படு கிறது? நடனம் ஆடுதல். தபஸ்யா என்றால் குஷியில் நடனம் ஆடுதல், மேலும் பாபா மற்றும் தனது ஆதி அனாதி (சத்யுகம், பரந்தாமம்) சொரூபத்தின் குணங்களை பாடுவது. எனவே இந்த பாடல் எவ்வளவு பெரியதாகவும் மிகவும் எளிமையான தாகவும் இருக்கிறது. இதில் தொண்டை (குரல் வளம்) நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்பதற்கான அவசியமில்லை. நிரந்தரமாக இந்த பாடலை பாடிக்கொண்டே இருக்க முடியும். நிரந்தர குஷியில் நடனம் ஆடிக்கொண்டேயிருங்கள். எனவே தபஸ்யாவின் பொருள் என்னவாக இருக்கிறது? ஆடுவது மற்றும் பாடுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது. ஏதாவது சிறிய தவறு ஏற்படும் பொழுது தான் தலை பாரம் ஆகிறது. பிராமண வாழ்க்கையில் ஒருபொழுதும் யாருக்கும் தலை பாரம் ஏற்படுவது கிடையாது. மருத்துவமனை அமைப்பவர் களுக்கு தலை சுமையாகிவிடுகிறதா என்ன? டிரஸ்டி அருகாமையில் அமர்ந்திருக்கிறார் அல்லவா. தலை சுமையாகி விடுகிறது, ஆனால் செய்பவர் செய்விப்பவர் பாபா இருக்கும் பொழுதும் உங்களூக்கு என்ன சுமை இருக்க போகிறது? இவர் நிமித்தமானவர் ஆக்கி பாக்கியத்தை உருவாக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். உங்களுடைய பொறுப்பு என்னவாக இருக்கிறது? பாபாவின் பொறுப்பு என்பதற்கு பதிலாக தன்னுடையது என்று புரிந்துக்கொள்ளும் பொழுது தான் தலை சுமையாகிவிடுகிறது. சர்வசக்திவான் பாபா என்னுடைய துணையாக இருக்கிறார் என்றால் சுமை அனுபவம் ஆகுமா என்ன? ஏதாவது சிறிய தவறு ஏற்பட்டுவிடுகிறது, என்னுடைய பொறுப்பு என்று புரிந்து கொள்ளும் பொழுது தான் சுமை அனுபவமாகிறது. எனவே பிராமண வாழ்க்கையே ஆடுவது, பாடுவது மற்றும் ஆனந்தத்தோடு இருப்பதாகும். கர்மணாசேவையாக இருந்தாலும், வார்த்தைகளினால் சேவையாக இருந்தாலும் சரி, இது போன்ற சேவையும் கூட ஒரு விளையாட்டு தான். சேவை என்பது ஏதோ ஒரு பொருள் அல்ல. ஒரு சிலர் புத்தியினால் விளையாடுகிறார்கள், ஒரு சிலர் இலேசாக விளையாடுகிறார்கள். ஆனால் விளையாட்டாகத் தான் இருக்கிறது. புத்தியின் விளையாட்டில் புத்தி சுமையாகி விடுகிறதா என்ன! அதனால் அனைத்துமே விளையாட்டாகத் தான் இருக்கிறது. அதனால் இவர்கள் அனைவருமே விளையாடத் தான் செய்கிறார்கள். எனவே மிகவும் யோசிக்க வேண்டிய செயலாக இருக்கலாம், கவனம் கொடுத்து செய்ய வேண்டிய செயலாக இருக்கலாம், ஆனால் மாஸ்டர் சர்வசக்திவான் ஆத்மாவிற்கு அனைத்துமே விளையாட்டாகத் தான் இருக்கும். அவ்வாறு அனுபவம் ஏற்படுகிறதா? அல்லது சிறிதளவு செய்த பிறகு களைத்து போய் விடுகிறீர்களா? அநேகர்களைப் பற்றவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவ்வப்பொழுது களைத்து போய் விடுகிறார்கள். இது தான் யோகத்தை பயன்படுத்து வதாகும், அனைத்து (ஸ்தூல) பொக்கிஷங்களாக இருக்கலாம், நேரமாக இருக்கலாம், எண்ணங்களாக இருக்கலாம், ஞானத்தின் பொக்கிஷமாக அல்லது ஸ்தூலஉடலாக இருந்தாலும் கூட ஒருவேளை யோகத்தை உபயோகம் செய்யும் விதிப்படிபயன்படுத்தினீர்கள் என்றால் ஒவ்வொரு பொக்கிஷமும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும். இந்த தபஸ்யா வருடத்தில் யோகத்தை பயன்படுத்துகிறீர்கள் அல்லவா. எதை பயன்படுத்துகிறீர்கள்? இந்த ஒவ்வொரு பொக்கிஷத்தையும் பயன்படுத்துங்கள். எப்படி பயன்படுத்துவது? எந்தவொரு பொக்கிஷத்தை பயன்படுத்தினாலும், குறைந்த செலவில் அதிக இலாபம் அடைய வேண்டும். உழைப்பு குறைவாகவும், வெற்றி அதிகமாகவும் இருக்கும் விதியை பயன்படுத்துங்கள். நேரத்திற்கு ஏற்றவாறு எண்ணங்களை உருவாக்குங்கள் – இது தான் உயர்ந்த பொக்கிஷமாகும். எனவே எண்ணங்களை குறைவாக பயன்படுத்துங்கள், ஆனால் பிராப்தி அதிகமாக இருக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் இரண்டு அல்லது நான்கு நிமிடங்கள் எண்ணங்களை பயன்படுத்திய பிறகு யோசித்தப்பிறகு வெற்றி அல்லது பலனை அடைய முடிகிறது, ஆனால் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு நொடிகளில் செய்ய முடியும். இதைத்தான் சாகாரத்திலும் கூட பிரம்மா பாபா குறைந்த செலவில் நிறைந்த இலாபம் என்று சொல்லியிருந்தார். குறைந்த செலவு செய்யுங்கள், ஆனால் 100 மடங்கு இலாபத்தை பெறுங்கள். இதனால் என்னாகும்? சேமிப்பு செய்யப்பட்ட நேரம் மற்றும் எண்ணங்களை மற்றவர்களுக்காக சேவையில் பயன்படுத்த முடியும். யார் செல்வத்தை சேமிப்பு செய்து இருக்கிறார்களோ, அவர்களால் தான் தானம், புண்ணியம் செய்ய முடியும். ஒருவேளை எவ்வளவு சம்பாத்தியம் செய்கிறார்களோ, அதை தனக்கே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் தானம் புண்ணியம் செய்ய முடியாது. இது போன்று தான் யோகத்தை பயன்படுத்துவதாகும். குறைந்த நேரத்தில் அதிகப்படியான ரிசல்ட் (பலன்) குறைந்த எண்ணங்களினால் அதிகப்படியான அனுபவம் செய்யும் பொழுது தான் ஒவ்வொரு பொக்கிஷத் தையும் மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியும். அவ்வாறு தான் வார்த்தைகள் மற்றும் செயல்களையும் குறைந்த செலவில் அதிக வெற்றி பெறும் பொழுது தான் அதிசயம் நிகழ்கிறது. பாப்தாதா என்ன அதிசயம் செய்தார்? மிகவும் குறைந்த நேரத்தில் என்னவாக இருந்ததை என்னவாக மாற்றிவிட்டார்? அப்பொழுது தான் அதிசயம் செய்து விட்டார் என்று கூறுகிறார்கள். ஒன்றுக்கு பல கோடி மடங்கு அனுபவம் ஏற்படுகிறது. அதனால் தான் அதிசயம் என்று சொல் கிறார்கள். எப்படி பாப்தாதாவின் பொக்கிஷங்களின் பிராப்தி மற்றும் அனுபவத்தை அதிகமாக செய்ய வைக்கிறார். அதுபோல நீங்கள் அனைவரும் யோகத்தை பயன்படுத்துங்கள். பாபா நீங்கள் அதிசயம் செய்து காட்டி விட்டீர்கள் என்ற பாடலை மட்டும் பாடிக்கொண்டு இருக்காதீர்கள். நீங்களும் கூட அதிசயம் செய்யக் கூடியவர்கள் தான். செய்துக்கொண்டும் இருக்கிறீர்கள். ஆனால் தபஸ்யாவின் காரணத் தினால் பெருபான்மையானவரின் பலன் என்ன கண்டீர்கள்?

தபஸ்யாவின் ஊக்கம் உற்சாகம் நன்றாக இருக்கிறது. கவனமும் இருக்கிறது. வெற்றியும் கிடைக்கிறது. ஆனால் தனக்காக அனைத்து பொக்கிஷங்களையும் அதிகமாக பயன்படுத்து கிறீர்கள். தான் அனுபவம் செய்ய வேண்டும், இதுவும் நல்ல விஷயம் தான். ஆனால் தபஸ்யா வருடத்தில் தனக்காகவும் உலகத்தின் சேவைக்காகவும் தான் கொடுத்திருக்கிறார். தபஸ்யா வின் வைப்ரேஷன் உலகத்தில் மேலும் மிக வேகமாக பரப்புங்கள். யோகத்தை பயன்படுத்துவது மற்றும் அனுபவத்தின் சோதனை சாலையில் பயன்படுத்தும் வேகத்தை அதிகரியுங்கள். தற்சமயத்தில் அனைத்து ஆத்மாக்களுக்கும் அவசியமாக தேவைப்படுவது – உங்களுடைய சக்திசாலியான வைப்ரேஷன் மற்றும் வாயுமண்டலம் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவ தாகும். ஆகையால் பயன்படுத்துவதைஅதிகரியுங்கள். ஒத்துழைப்பு கொடுக்கும் குழந்தைகளும் மிகுந்து இருக்கின்றனர். இந்த சகயோகம் (உதவி) தான் யோகத்தில்மாற்றத்தை ஏற்படுத்து கிறது. ஒரு தரப்பினர் அன்பான சகயோகிகள், மற்றொரு தரப்பினர் உதவிசெய்யும் யோகிகள். மேலும் மூன்றாவது தரப்பினர் நிரந்தரமாக யோகத்தைபயன்படுத்துவோர். இப்பொழுது தன்னிடம் கேளுங்கள் நான் எதில்இருக்கின்றேன்? ஆனால் பாப்தாதாவிற்கு மூன்று விதமான குழந்தைகள் மீதும் அன்பு இருக்கிறது. பல குழந்தைகளின் வைப்ரேஷன் பாப்தாதாவிடம் சென்றடைகிறது. வித விதமான வைப்ரேஷன் இருக்கிறது. இசாரா (சைகை) யின் மூலம் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா. இந்த தபஸ்யாவருடத்தில் என்ன வெல்லாம் நடைபெறுகிறதோ, அதற்கான காரணம் என்ன? பெரியதிலும் பெரிய திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறீர்கள், இதற்கான காரணம் என்ன? இது தான் தபஸ்யாவின் பலன் என்று யாராவது புரிந்திருக் கிறீர்களா? தபஸ்யாவருடத்தில் ஏன் என்று யாராவது நினைக்கிறீர்களா? இரண்டு விதமான வைப்ரேஷன் வருகிறது. ஆனால் இந்த சமயத்தின் வேகம் மற்றும் தபஸ்யா வின் வைப்ரேஷன் மூலம் தேவைகள் முழுமை அடைய வேண்டும், இது தான் தபஸ்யா சக்தியின் பலனாக இருக்கிறது. பலனை அனுபவம் செய்ய வேண்டுமல்லவா. தபஸ்யா அனைத்து அவசியங்களையும் தகுந்த நேரத்தில் எளிதாக பூர்த்தி செய்ய முடிகிறது என்று டிராமா காட்டுகிறது. புரிந்ததா. இது ஏன் நடக்கிறது என்று கேள்வியை எழுப்ப முடியாது. தபஸ்யா என்றால் வெற்றியை அனுபவம் செய்வதாகும். போகப்போக முடியாததை எப்படி முடிக்க முடிகிறது என்ற அனுபவம் அதிகமாகவே செய்துக்கொண்டேயிருப்போம். தடைகள் வருவது இதுவும் நாடகத்தில்ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த தடைகளும் கூட முடியாததை முடிக்கக்கூடியஅனுபவத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நீங்கள் அனைவரும் அனுபவசாலியாகவும்ஆகிவிட்டீர்கள். ஆகை யால் தடைகளும் கூட விளையாட் டாக தோன்றுகிறது. எப்படி கால்பந்து விளையாட்டு விளையாடுகிறீர்கள் அல்லவா. என்ன செய்கிறீர்கள்? பந்து வரும் பொழுது தான் எட்டி உதைக்கிறீர்கள். ஒருவேளை பந்து வரவில்லை யென்றால் எப்படி எட்டி உதைப்பீர்கள்? எப்படி விளையாட்டு இருக்கும்? இதுவும் கால்பந்து விளையாட்டாக இருக்கிறது அல்லவா. விளையாட்டு விளையாடும் பொழுது மஜா (ஆனந்தம்) வருகிறதா அல்லது குழப்பம் ஏற்படுகிறதா? எனது கால்களிடத்தில் பந்து வந்து உதைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறீர்கள் அல்லவா. இந்த விளையாட்டு நடைப்பெற்றுக் கொண்டேயிருக்கும், எதுவும் புதியதல்ல. நாடகம் விளையாட்டு காட்டுகிறது, மேலும் முழுமை யான வெற்றியையும் காட்டுகிறது. இது தான் பிராமண குலத்தின் பழக்க வழக்கமாக இருக்கிறது. நல்லது.

இந்த குரூப்பிற்கு மிகவும் வாய்ப்பு கிடைக்கிறது. ஏதாவது செயலுக்கு நிமித்தம் ஆவது, ஏதாவது விதியின் மூலம் நிமித்தம் (பொறுப்பாளர்) ஆவது, அதாவது வாய்ப்பை பெறக்கூடிய உரிமையாளர் ஆவது. இன்றைய உலகத்தில் செல்வந்தர்கள் பலர் இருக்கிறார் கள். ஆனால் உங்களிடம் அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய செல்வம் என்னவாக இருக்கிறது, அது உலகத்தினரிடம் இல்லை? மேலும் அதனுடைய அவசியம் செல்வந்தர் களுக்கும் தேவைப் படுகிறது என்றால் ஏழைகளுக்கும் தேவைபடுகிறது. அது எப்படிப்பட்ட செல்வமாக இருக்கிறது? அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய அவசியமான செல்வம் கருணையாகும். ஏழையாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் இன்றைய காலத்தில் கருணை இல்லாமல் இருக்கிறது. கருணை என்ற செல்வம் தான் அனைத்தையும் விட மிகப்பெரிய செல்வமாக இருக்கிறது. வேறு எதுவும் வேண்டாம். ஆனால் கருணையின் மூலம் அனைவரையும் திருப்தி செய்ய முடியும். மேலும் உங்களுடைய கருணையானது ஈஸ்வரிய குடும்பத்தின் கருணை யாகும். குறுகிய காலத்தின் கருணை அல்ல. குடும்பத்தின் கருணை தான் அனைத்தையும் விட மிகப்பெரிய கருணையாக இருக்கிறது, மேலும் இது அனைவருக்கும் அவசியமானதாக இருக்கிறது. அதை நீங்கள் அனைவருக்கும் கொடுக்க முடியும். ஆன்மீக கருணை உடல் மனம் மற்றும் செல்வத்தையும் பூர்த்தி செய்ய முடியும். நல்லது இதன் மீது பிறகு சொல்கிறேன்.

நாலாபக்கத்திலுமுள்ள தபஸ்வியின் இராஜாவான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் யோகத்தை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் வெற்றியின் உயர்ந்த அனுபவத்தை செய்யக்கூடிய, சதா நான் உன்னுடையவன், நீ என்னுடையவன் என்ற இந்த தபஸ்யாவில்முழ்கியிருக்கக்கூடிய, சதா ஒவ்வொரு நேரமும் தபஸ்யாவின் மூலம் குஷியில் ஆடவும், மேலும் பாபா மற்றும் தனது குணத்தை (ஆதி, அனாதி) பாடக்கூடிய, அதுபோல உள்நாடு, வெளிநாட்டின் அனைத்து நினைவு சொரூப குழந்தை களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:-

பிராமண குழந்தைகளாகிய உங்களுக்கு அநாதி (என்றென்றும் இருக்கும்) தந்தை மற்றும் ஆதி (பிரம்மா) தந்தை மூலம் அலௌகீக பிறவி கிடைத்திருக்கிறது. இவர்களுடைய பிறவியே பாக்கியத்தை உருவாக்கக் கூடியவரின் மூலம் கிடைத்திருக்கிறது. அவர்கள் (நாம்) எவ்வளவு பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள். தனது இந்த உயர்ந்த பாக்கியத்தை நினைவில் வைத்துக் கொண்டே புன்முறுவலுடன் இருங்கள். ஒவ்வொரு நடத்தை மற்றும் முகத்தில் இந்த நினைவு சொரூபம் வெளிப்படையாக தனக்கு அனுபவம் ஆகிறது, மற்றவர் களுக்கும் தென்படுகிறது. தனது நெற்றியின் நடுவில் பாக்கியத்தின் ரேகை ஜொலிப்பு தென்பட வேண்டும் – அப்பொழுது தான் உயர்ந்த பாக்கியசாலி ஆத்மா என்று சொல்ல முடியும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top