06 June 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

June 5, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

மகிழ்ச்சியற்ற நிலைக்குக் காரணம் சிறிய-பெரிய அவமரியாதைகள்(கீழ்ப்படியாமை)

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று எல்லைக்கப்பாற்பட்ட பெரியவரிலும் பெரியவராகிய தந்தை, உயர்ந்தவரிலும் உயர்ந்த வராகிய தந்தை தம்முடைய நாலாபுறம் உள்ள குழந்தைகளுக்குள் விசேஷமாகக் கீழ்ப்படிதலான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கீழ்ப்படிதலான குழந்தைகள் என்று அனைவருமே தங்களை நினைக்கின்றனர். ஆனால் வரிசைக்கிரமமாக உள்ளனர். சிலர் சதா கீழ்ப்படிதலானவராக உள்ளனர், சிலர் கீழ்ப்படிதலானவராக உள்ளனர், சதா இல்லை, கீழ்ப்படிதலானவர்களின் பட்டியலில் குழந்தைகள் அனைவரும் வந்து விடு கின்றனர். ஆனால் வேறுபாடு நிச்சயமாக உள்ளது. கட்டளை யிடுபவராகிய பாபா குழந்தை கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஒரே கட்டளை தான் தருகிறார். தனித்தனியாக, வெவ்வேறு கட்டளைகள் கொடுப்பதில்லை. பிறகும் நம்பர்வார் ஏன் உள்ளனர்? ஏனென்றால் யார் சதா ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு கர்மம் செய்யும் போதும் பாபாவின் கட்டளையின் ஸ்மிருதி சொரூபமாக சகஜமாகவே ஆகி விடுகிறார்களோ, அவர்கள் தாமாகவே ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் கர்மத்தில் கட்டளைப்படி நடக்கின்றனர் மற்றும் சில நேரம் நடந்ததற்குப் பிறகு கட்டளையை நினைக்கின்றனர். ஏனென்றால் கட்டளையின் ஸ்மிருதி சொரூபமாக அவர்கள் இல்லை. சிரேஷ்ட கர்மத்தின் பிரத்தியட்ச பலன் என்ன கிடைக் கிறதோ, அந்தப் பிரத்தியட்ச பலனின் அனுபவம் இல்லாத காரணத்தால் கர்மத்திற்குப் பிறகு இந்த முடிவு ஏன் ஏற்பட்டது என்று நினைவு வருகிறது. கர்மத்திற்குப் பிறகு சோதித்துப் பார்ப்பார்களானால் புரிந்து கொள்கின்றனர் — பாபாவின் கட்டளை எப்படி உள்ளதோ, அதன்படி நடக்காத காரணத்தால் எந்த ஒரு பிரத்தியட்ச பலன் அனுபவமாக வேண்டுமோ, அது ஆகவில்லை. இதைத் தான் கட்டளையின் ஸ்மிருதி சொரூபமாக ஆக வில்லை எனச் சொல்வது. ஆனால் கர்மத்தின் பலனைப் பார்த்து ஸ்மிருதி வந்தது. ஆக, நம்பர் ஒன் – சகஜமாக, தானாக ஸ்மிருதி சொரூபமாக, கீழ்ப்படிதலாக இருப்பவர். மற்றும் இரண்டாவது நம்பர் – சில நேரம் ஸ்மிருதியுடன் கர்மம் செய்பவர் மற்றும் சில நேரம் கர்மத்திற்குப் பிறகு ஸ்மிருதியில் வருபவர்கள். மூன்றாவது நம்பரோ, அந்தப் பேச்சையே விட்டு விடுங்கள். இரண்டு மாலைகள் உள்ளன. முதலில் சிறிய மாலை, இரண்டாவது பெரிய மாலை. மூன்றா மவருக்கோ மாலையே இல்லை. அதனால் இரண்டு பேரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

நம்பர் ஒன் கீழ்ப்படிதலானவர்கள் சதா அமிர்தவேளையில் இருந்து இரவு வரை நாள் முழுவதிலும் செய்யும் ஒவ்வொரு கர்மத்திலும் கட்டளைப்படி நடக்கிற காரணத்தால் ஒவ்வொரு கர்மத்திலும் உழைப்பை அனுபவம் செய்வதில்லை. ஆனால் கீழ்ப்படிதலானவராக ஆவதற்கான விசேஷ பலனாக பாபாவின் ஆசிர்வாதங் களை அனுபவம் செய்கின்றனர். ஏனென்றால் கீழ்ப்படிதலான குழந்தை மீது ஒவ்வோரடியிலும் பாப்தாதாவின் மனப்பூர்வ ஆசிர்வாதங்கள் கூடவே உள்ளன. அதனால் மனப்பூர்வ ஆசிர்வாதங்களின் காரணத்தால் ஒவ்வொரு கர்மமும் பலனளிப்பதாக உள்ளது. ஏனென்றால் கர்மம் என்பது விதை மற்றும் விதையிலிருந்து கிடைக்கும் பிராப்தியானது பழமாகும். ஆக, நம்பர் ஒன் கீழ்ப்படிதலான ஆத்மாவின் ஒவ்வொரு கர்மம் என்ற விதை சக்தி சாலியாக இருக்கும் காரணத்தால் ஒவ்வொரு கர்மத்தின் பலன், அதாவது திருப்தி, வெற்றி கிடைக்கிறது. திருப்தி தனக்குத் தானாகவும் ஏற்படுகிறது மற்றும் கர்மத்தின் விளைவினாலும் ஏற்படுகிறது. மேலும் மற்ற ஆத்மாக்களின் சம்பந்தம்-தொடர்பு மூலமாகவும் ஏற்படுகிறது. நம்பர் ஒன் கீழ்ப்படிதலான ஆத்மாக்களுக்கு மூன்று விதமான திருப்தியும் தானாக மற்றும் சதா அனுபவம் ஆகிறது. அநேக முறை அநேக குழந்தைகள் தங்களின் கர்மங்களால் தாங்களே திருப்தியடைகின்றனர் – நான் மிக நன்றாக விதிப்பூர்வமாகக் கர்மம் செய்தேன், ஆனால் எங்கேயும் வெற்றி என்ற பலன், எவ்வளவு சுயம் புரிந்து கொண்டிருக்கிறேனோ, அவ்வளவு தென்பட வில்லை. மேலும் சில நேரம் பிறகு தானும் திருப்தி, பலனிலும் திருப்தி, ஆனால் சம்பந்தம்-தொடர்பில் திருப்தி ஏற்படுவதில்லை. ஆக, இதை நம்பர் ஒன் கீழ்ப்படிதலானவர் எனச் சொல்ல மாட்டார்கள். நம்பர் ஒன் கீழ்ப்படிதலானவர் மூன்று விஷயங்களிலுமே திருப்தியை அனுபவம் செய்வார்கள்.

இப்போதைய சமயத்திற்கு தகுந்தப்படி அநேக சிரேஷ்டமான கீழ்ப்படிதலான குழந்தைகள் மூலமாக அவ்வப்போது யாராவது ஆத்மாக்கள் தங்களைத் திருப்தியற்றவர் களாகவும் அனுபவம் செய் கின்றனர். நீங்கள் யோசிப்பீர்கள் – இவரிடம் அனைவரும் திருப்தியடைவார்கள் என்று அந்த மாதிரி யாரும் இருக்க மாட்டார்கள் என்று. யாராவது திருப்தியற்றவராகவும் ஆகி விடுகின்றனர். ஆனால் அதற்குப் பல காரணங்கள் உள்ளன. தங்களின் காரணத்தை அறியாத காரணத்தால் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இரண்டாவது விஷயம் – தங்களின் புத்திக்கு தகுந்தப்படி பெரியவர்களிடம் விருப்பம், ஆசை அதிகம் வைக்கின்றனர் மற்றும் அந்த ஆசை நிறைவேறவில்லை என்றால் அதிருப்தி யடைகின்றனர். மூன்றாவது விஷயம் – அநேக ஆத்மாக்களின் பழைய சம்ஸ்கார-சுபாவங்கள் மற்றும் கணக்கு-வழக்கின் காரணத்தினாலும் கூட எந்த மாதிரி திருப்தி இருக்க வேண்டுமோ, அது இருப்பதில்லை. இதனால், நம்பர் ஒன் கீழ்ப்படிதலான ஆத்மா அல்லது சிரேஷ்ட ஆத்மாக்களிடம் மற்றவர்கள் அதிருப்தி அடைவதற்குக் காரணமில்லை. ஆனால் தங்களின் சொந்தக் காரணங்களால் அதிருப்தியாக இருந்து விடுகின்றனர். ஆகவே ஒவ்வொருவராலும் யாரோ அதிருப்தியடைவதாகக் காணப் படுகிறது. ஆனால் அதிலும் கூட பெரும்பான்மையாக ஏறத்தாழ 95 சதவிகிதம் திருப்தியாக இருப்பார்கள். 5 சதவிகிதம் அதிருப்தியாகக் காணப் படுவார்கள். ஆக, நம்பர் ஒன் கீழ்ப்படிதலான குழந்தைகள் பெரும்பாலும் மூன்று ரூபங் களிலும் திருப்தியை அனுபவம் செய்வார்கள் மற்றும் சதா கட்டளைப்படி சிரேஷ்ட கர்மம் இருக்கிற காரணத்தால் கர்மம் அடிக்கடி புத்தியை, சரியாகச் செய்தோமா அல்லது செய்ய வில்லையா என்று மனதைச் சஞ்சலப் படுத்தாது – இரண்டாவது நம்பரில் உள்ளவர்களுக்கு கர்மம் செய்த பிறகு அநேக தடவை மனதில் சங்கல்பம் ஓடுகிறது – சரியாகச் செய்தோமா, செய்யவில்லையா? இதைத் தான் நீங்கள் உங்கள் பாஷையில் சொல்கிறீர்கள் – சரியாகச் செய்யவில்லை என்று மனம் அரிக்கிறது என்று. நம்பர் ஒன் கீழ்ப்படிதலான ஆத்மாவுக்கு ஒரு போதும் மனம் அரிப்பதில்லை. கட்டளைப்படி நடக்கிற காரணத்தால் சதா லேசாக இருப்பார்கள். ஏனென்றால் கர்ம பந்தனத்தின் சுமை இல்லை. இதற்கு முன்பும் கூட சொல்லியிருக்கிறோம் – ஒன்று, கர்மத்தின் சம்பந்தத்தில் வருவது, இரண்டாவது, கர்ம பந்தனத்தின் வசமாகிக் கர்மம் செய்வது. ஆக, நம்பர் ஒன் ஆத்மா கர்மத்தின் சம்பந்தத்தில் வருபவர். அதனால் சதா லேசாக இருப்பார்கள். நம்பர் ஒன் ஆத்மா ஒவ்வொரு கர்மத்திலும் பாப்தாதா மூலம் விசேஷ ஆசிர்வாதங்களின் பிராப்தியின் காரணத்தால் ஒவ்வொரு கர்மம் செய்யும் போதும் ஆசிர்வாதத்தின் பலன் சொரூபமாக சதா உள்ளார்ந்த மனோபலத்தை (வில்பவர்) அனுபவம் செய்வார்கள். சதா அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வார்கள். சதா தங்களை நிறைந்தவர்களாக, அதாவது சம்பன்னமாக அனுபவம் செய்வார்கள்.

அவ்வப்போது அநேகக் குழந்தைகள் பாபாவின் முன்னால் தங்களின் மனதின் நிலைகளைச் சொல்லும் போது என்ன சொல்கின்றனர் – ஏனென்று தெரியவில்லை, இன்று தன்னை முற்றிலும் காலியாக இருப்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறேன், எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை, ஆனால் போகும் போதே அறியாமை அல்லது கவனக் குறைவில் ஒவ்வொரு சமயம் கட்டளைப்படி காரியம் செய்வதில்லை. முதலில் சமயத்தின் அவமரியாதையின் சுமை எப்போதாவது தன் பக்க மாகக் கவர்ந்திழுக்கிறது. எப்படி பழைய பிறவிகளின் கடுமையான சம்ஸ்கார சுபாவங்கள் அவ்வப் போது விரும்பாமலே கூடத் தன் பக்கமாகக் கவர்ந்திழுக்கிறது. அது பழைய கணக்கு-வழக்கு. இது இப்போதைய வாழ்க்கையின் கணக்கு. ஏனென்றால் எந்த ஒரு கணக்கும், அது இந்தப் பிறவி னுடையதாகவோ முந்தைய பிறவியினுடையதாகவோ இருக்கலாம், அது ஈடுபாட்டின் அக்னி சொரூப ஸ்திதி இல்லாமல் சாம்பல் ஆகாது, சதா அக்னி சொரூப ஸ்திதி, அதாவது சக்திசாலி நினைவின் ஸ்திதி, விதை ரூபம், லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஸ்திதி சதா இல்லாமல் போவதற் கான காரணம் கணக்கு-வழக்கை பஸ்பம் செய்ய முடிவதில்லை. எனவே மீதமிருக்கும் கணக்கு தன் பக்கம் கவர்ந்திழுக்கிறது. அந்தச் சமயம் என்னவாயிற்று எனத் தெரியவில்லையே எனச் சொல்லும் அளவுக்கு எந்தத் தவறும் நீங்கள் செய்வதில்லை. சில நேரம் மனம் ஈடுபடுவதில்லை – நினைவில், சேவையில் அல்லது சில நேரம் வருத்தத் தின் அலை இருக்கும். ஒன்று, ஞானத்தின் மூலம் சாந்தியின் அனுபவம், இரண்டாவது, குஷியோ ஆனந்தமோ இல்லாத அமைதி நிறைந்த வெறுமையின் சாந்தி. அது ரசனையற்ற சாந்தியாக இருக்கும். மனம் மட்டும் சொல்லும் – நான் எங்காவது தனியாகப் போய் அமர்ந்து விட வேண்டும். இவையனைத்தும் ஏதேனும் அவ மரியாதையின் (கீழ்ப்படியாமை) அடையாளங்களாகும். கர்மத்தின் சுமை கவர்ந்திழுக்கிறது.

கீழ்ப்படியாமை என்பது பாவ கர்மத்தின் வடிவமாக இருக்கலாம் அல்லது ஏதேனும் பெரிய தவறு செய்வதாக இருக்கலாம். மேலும் மற்ற சிறு-சிறு கீழ்ப்படியாமைகளும் உள்ளன. எப்படி பாபாவின் கட்டளை உள்ளது – அமிர்தவேளை விதிபூர்வமாக சக்திசாலி நினைவில் இருங்கள். அமிர்தவேளை இந்தக் கட்டளைப்படி நடக்கவில்லை என்றால் அவர்களை என்னவென்று சொல்வார்கள்? கீழ்ப்படித லானவரா அல்லது கீழ்ப்படியாதவரா? ஒவ்வொரு கர்மமும் கர்மயோகி ஆகிச் செய்யுங்கள், நிமித்த உணர்வுடன் செய்யுங்கள். பணிவுள்ளவராகி செய்யுங்கள் – இவை கட்டளைகள். இது போலவே மிகப்பெரிய பட்டியல் உள்ளது. ஆனால் உதாரண ரூபத்தில் சொல்கிறோம். திருஷ்டி, விருத்தி அனைத்திற்கும் கட்டளைகள் உள்ளன. இந்த அனைத்துக் கட்டளைகளிலும் எந்த ஒரு கட்டளையை யாவது விதிப் பூர்வமாகப் பின்பற்றி நடக்கவில்லை என்றால் இது சிறிய-பெரிய அவமரியாதைகள் எனப் படும். இந்தக் கணக்கு சேமிப்பாகிக் கொண்டே இருந்தால் அது தன் பக்கமாகக் கவர்ந் திழுக்கவே செய்யும் இல்லையா? எனவே சொல்கின்றனர் — எவ்வளவு ஆக வேண்டுமோ, அவ்வளவு ஆவதில்லை. சரியாகச் சென்று கொண்டிருக்கிறீர்களா என்று கேட்கும் போது ஆம் எனச் சொல்வார் கள். மேலும் எவ்வளவு ஆக வேண்டுமோ அவ்வளவு ஆகியிருக்கிறதா என்று கேட்டால் யோசிக் கிறார்கள். இவ்வளவு சமிக்ஞை கிடைத்தும், ஞானம் நிறைந்தவராக இருந்தும், பிறகும் கூட எவ்வளவு ஆக வேண்டுமோ, அவ்வளவு ஆகவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? பழைய அல்லது தற்சமயத்தின் சுமை, டபுள் லைட் ஆக விடுவதில்லை. சில நேரம் டபுள் லைட் ஆகி விடுகின்றனர். சில நேரம் சுமை கீழே இழுத்து வந்து விடுகிறது. சதா அதீந்திரிய சுகம் மற்றும் குஷி நிறைந்த சாந்த ஸ்திதியை அனுபவம் செய்வதில்லை. பாப்தாதாவின் கீழ்ப்படிதலானவராக ஆவதற்கான விசேஷ ஆசீர்வாதத்தின் லிஃப்ட்டினுடைய பிராப்தி அனுபவமாவதில்லை. அதனால் சில நேரம் சகஜமாக உள்ளது, சில நேரம் உழைக்க வேண்டி உள்ளது. நம்பர் ஒன் கீழ்ப்படிதலானவரின் விசேஷத் தன்மை களை தெளிவாகக் கேட்டீர்கள். மற்றப்படி நம்பர் இரண்டு யார்? யாரிடம் இந்த விசேஷச தன்மைகள் குறைவாக உள்ளனவோ, அவர் நம்பர் இரண்டு மற்றும் இரண்டாவது நம்பர் மாலையினுடையவராக ஆகிறார். ஆக, முதல் மாலையில் வர வேண்டும் இல்லையா? சிறிதும் கஷ்டமில்லை. ஒவ்வோரடிக்கான கட்டளையும் தெளிவாக உள்ளது. அதன் படி நடப்பது சுலபமாக உள்ளதா அல்லது கஷ்டமா? கட்டளை தான் பாபாவின் அடி. ஆக, அடி மீது அடி எடுத்து வைப்பதோ சுலபம் தான் இல்லையா? மேலும் அனைவரும் உண்மையான சீதைகள், மணமகள்கள் நீங்கள். ஆக, மணமகள்கள் அடி மீது அடி வைக்கின்றனர் இல்லையா? இது விதி இல்லையா? அப்போது கஷ்டம் என்ன இருக்கிறது? குழந்தை என்ற உறவிலும் பாருங்கள் – குழந்தைகள் என்றால் தந்தை யின் அடி மீது அடி (பாதச்சுவடு) வைத்துச் செல்பவர்கள். எப்படி பாபா சொன்னாரோ, அப்படி நடப்பது. பாபா சொல்கிறார் மற்றும் குழந்தைகள் செய்கின்றனர். இதைத் தான் நம்பர் ஒன் கீழ்ப்படிதலானவர் எனச் சொல்வது. ஆகவே சோதனை செய்யுங்கள், மற்றும் மாற்றிக்கொள்ளுங்கள். நல்லது.

நாலாபுறமும் உள்ள அனைத்து கீழ்ப்படிதலான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா பாபா மூலம் கிடைத்துள்ள ஆசீர்வாதங்களை அனுபவம் செய்யக்கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா ஒவ்வொரு கர்மத்திலும் திருப்தி, வெற்றியை அனுபவம் செய்யக்கூடிய மகான் ஆத்மாக்களுக்கு, சதா அடி மீது அடி வைக்கக்கூடிய கீழ்ப்படிதலான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் இனிய சந்திப்பு

சதா தன்னை ஆன்மீக யாத்திரிகன் என உணர்ந்திருக்கிறீர்களா? யாத்திரை செய்யும் போது எது நினை விருக்கும்? எங்கே செல்ல வேண்டுமோ, அந்த இடம் தான் நினைவிருக் கும் இல்லையா? வேறு ஏதேனும் நினைவு வருமானால் அதை மறக்க முயற்சி செய்வீர்கள். யாராவது தேவியின் யாத்திரையில் செல்கிறார்கள் என்றால் ஜெய் மாதா – ஜெய் மாதா என்று முழங்கிக் கொண்டே செல்வார்கள். அப்போது வேறு ஏதாவது நினைவு வருமானால் அது நல்லதில்லை என நினைப்பார்கள். ஒருவர் மற்றவர்க்கு நினைவுப் படுத்தவும் செய்வார்கள் – ஜெய் மாதாவை நினைவு செய்யுங்கள், வீட்டை அல்லது குழந்தைகளை நினைவு செய்யாதீர்கள், மாதாவை நினைவு செய்யுங்கள் என்று. ஆக, ஆன்மீக யாத்திரிகர்களுக்கு சதா என்ன நினைவிருக்கிறது? தங்களின் வீடு, பரந்தாமம் நினைவிருக்கிறது இல்லையா? அங்கே தான் செல்ல வேண்டும். ஆக, தனது வீடு மற்றும் தனது ராஜ்யம் சொர்க்கம் — இரண்டும் நினைவிருக்கிறதா அல்லது மற்ற விஷயங்கள் நினைவிருக்கிறதா? பழைய உலகத் தின் நினைவு வருவதில்லை தானே? இங்கே இருக்கிறீர்கள் என்றால் நினைவு வருகிறது என்று அப்படி இல்லை. இங்கே இருந்தாலும் விலகிய நிலையில் இருக்க வேண்டும். ஏனென்றால் எவ்வளவு விலகி இருக்கிறீர்களோ, அவ்வளவு அன்போடு நினைவு செய்ய முடியும். ஆகவே சோதித்துப் பாருங்கள், பழைய உலகத்தில் இருந்தாலும் பழைய உலகத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கிறோமா? தாமரை மலர் சேற்றில் இருந்தாலும் அதிலிருந்து விலகி இருக்கிறது. ஆக, சேவைக்காக இருக்க வேண்டி உள்ளது. மோகத்தின் காரணத்தால் இல்லை. ஆக, மாதாக்களுக்கு மோகமோ இல்லை தானே? கொஞ்சம் பேரக் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகி விட்டால், பிறகு மோகம் இருக்குமா? அவர்கள் கொஞ்சம் அழுதால் உங்கள் மனமும் கொஞ்சம் அழுமா? ஏனென்றால் எங்கே மோகம் உள்ளதோ, அப்போது மற்றவரின் துக்கமும் கூட தனது துக்கமாகத் தோன்றும். அவர்களுக்குக் காய்ச்சல் வந்தால் உங்களுக்கும் கூட மனதின் காய்ச்சல் வந்து விட்டது என்று அந்த மாதிரி இருக்கக் கூடாது. மோகம் இழுக்கிறது இல்லையா? பேப்பரோ (சோதனை) வருகிறது இல்லையா? சில நேரம் ஒரு பேரனுக்கு நோய் வரலாம், இன்னொரு சமயம் வேறொரு பேரக்குழந்தைக்கு வரலாம். சில நேரம் செல்வத்தின் பிரச்சினை வரலாம். சில நேரம் தனது நோயின் பிரச்சினை வரலாம். இதுவோ நடக்கத் தான் செய்யும். ஆனால் சதா விலகி இருந்து, மோகத்தில் வராமல் இருக்க வேண்டும் – அந்த மாதிரி மோக மற்றவராக இருக்கிறீர்களா? மாதாக்களுக்கு சம்பந்தத்தின் மீது மோகம் வருகிறது, பாண்டவர் களுக்குப் பணத்தின் மீது மோகம். பணம் சம்பாதிப்பதில் நினைவு கூட மறந்து போகும். சரீர நிர்வாகத்திற்காக நிமித்த காரியம் செய்வது வேறு விஷயம். ஆனால் படிப்பு மற்றும் நினைவின் அப்பியாசத்தையும் கூட மறந்து போகிற அளவுக்கு அதில் மூழ்கி இருப்பது தான் பற்றுதலாகும். மோகமோ இல்லை தானே? எவ்வளவு பற்றற்றவராக ஆகிறீர்களோ, அவ்வளவு நினைவு சொரூபம் ஆவீர்கள்.

குமார்களுடன் : நீங்கள் அற்புதம் செய்யக்கூடிய குமார்கள் இல்லையா? என்ன அற்புதம் செய்து காட்டுவீர்கள்? சதா பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்கான ஊக்கமோ இருக்கவே செய்கிறது. ஆனால் அதற்கான விதி என்ன? தற்சமயமோ இளைஞர்கள் பக்கம் அனைவரின் பார்வையும் உள்ளது. ஆன்மீக இளைஞர்கள் தங்களின் மனோசக்தி மூலம், பேச்சு மூலம், நடத்தை மூலம் அந்த மாதிரி சாந்தியின் சக்தியை அனுபவம் செய்விக்க வேண்டும் – அதனால் இவர்கள் சாந்தியின் சக்தி மூலம் புரட்சி செய்பவர்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி உலகாயத இளைஞர்களின் நடத்தை மற்றும் முகத்தின் மூலம் ஆவேசம் தென்படுகிறது இல்லையா? பார்த்ததுமே இவர்கள் இளைஞர்கள் என்பது தெரிந்து விடுகிறது. அது போல் உங்கள் முகம் மற்றும் நடத்தை மூலம் சாந்தியின் அனுபவம் ஆக வேண்டும். இதைத் தான் அற்புதம் செய்வது எனச் சொல்வது. ஒவ்வொருவரின் உள்ளுணர்வு மூலம் வைப்ரேஷன் வர வேண்டும். எப்படி அவர்களின் நடத்தை மூலம், முகத்தின் மூலம் வைப்ரேஷன் வருகிறது — இவர்கள் இம்சை உள்ளுணர்வு கொண்டவர்கள் என்று. அது போல் உங்கள் வைப்ரேஷன் மூலம் சாந்தியின் கிரணங்கள் அனுபவமாக வேண்டும். அந்த மாதிரி அற்புதம் செய்து காட்டுங்கள். யாராவது புரட்சியின் காரியம் செய் கிறார்கள் என்றால் அனைவரின் கவனம் செல்கிறது இல்லையா? அது போல் உங்கள் மீது அனைவரின் கவனம் செல்ல வேண்டும். அந்த மாதிரி பரந்த சேவை செய்யுங்கள். ஏனென்றால் ஞானம் கேட்பதால் நன்றாக இருக்கத் தான் செய்கிறது. ஆனால் மாற்றம் அனுபவத்தைப் பார்த்து அனுபவி ஆக்குகிறது. அந்த மாதிரி ஏதாவது அசாதாரணமான காரியம் செய்து காட்டுங்கள். வாய்மொழியாலோ மாதாக்கள் கூட சேவைகள் செய்கின்றனர். நிமித்த சகோதரிகள் கூட சேவை செய்கின்றனர். ஆனால் நீங்கள் புதுமை செய்து காட்டுங்கள் அதில் அரசாங்கத்தின் கவனமும் செல்ல வேண்டும். எப்படி சூரியன் உதயமாகிறது என்றால் தானாகவே கவனம் செல்கிறது இல்லையா? — வெளிச்சம் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி உங்கள் பக்கம் கவனம் செல்ல வேண்டும். புரிந்ததா?

வரதானம்:-

ஆத்மாக்களுக்கு நீண்ட கால இச்சை அல்லது ஆசை – நிர்வாணதாமம் அல்லது முக்திதாமம் செல்ல வேண்டும் என்பது. இதற்காக அநேக பிறவிகளாக அநேக வித சாதனைகள் செய்து-செய்தே களைத்து விட்டுள்ளனர். இப்போது ஒவ்வொருவரும் சித்தியை (வெற்றி) விரும்புகின்றனரேயன்றி சாதனையை அல்ல. சித்தி என்றால் சத்கதி – ஆக, அது போல் தவித்துக் கொண்டிருக்கும், களைத்துப் போன, தாகமான ஆத்மாக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள் தங்களின் அமைதி சக்தி மற்றும் சர்வசக்திகள் மூலம் ஒரு விநாடியில் சித்தி கொடுங்கள். அப்போது உங்களை இறைவனின் உதவியாளர் எனச் சொல்வார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top