29 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris

May 28, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! பாபா எவ்வாறு அன்புக் கடலாக இருக்கின்றார், அவரைப் போன்று அன்பை இவ்வுலகில் வேறு யாரும் கொடுக்க முடியாது, அவ்வாறு குழந்தைகள் நீங்களும் தந்தைக்குச் சமமாக ஆகுங்கள். யாரையும் துக்கப்படுத்தாதீர்கள்.

கேள்வி: -

எப்படிப்பட்ட சிந்தனைகள் செய்வதனால் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்?

பதில்:-

1. இப்பொழுது நாம் ஞான இரத்தினங்களால் தனது புத்தியை நிரப்புகின்றோம், பிறகு புது உலகத்தில் எல்லா சுரங்கங்ளும் நிறைந்து இருக்கும், சத்யுகத்தில் நாம் தங்கமாளிகை உருவாக்கு வோம்.

2. நம்முடைய பிராமண குலம் மிகவும் உத்தமமானதாகும், நாம் மிகவும் உண்மையான சத்திய நாராயணர் கதை, அமரகதையைக் கேட்கின்றோம் மற்றும் கூறுகின்றோம். இப்படிப்பட்ட சிந்தனை கள் வருவதனால் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. குழந்தைகள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள், இதற்கான ஸ்ரீமத், அதாவது மிக உயர்ந்த வழி கிடைத்துள்ளது. நினைவு யாத்திரை மிகவும் இனிமையானதாகும். எந்தளவு தந்தையை நினைவு செய்கின்றீர்களோ அந்தளவு பாபா இனிமையானவராக உங்களுக்கு அனுபவம் ஆவார் என்பதை குழந்தைகள் முயற்சியில் அனுசாரப்படி புரிந்துள்ளனர். ஏனென்றால் தந்தை மிகவும் இனிமையானவர் அல்லவா! ஒரு பாபா மட்டுமே அன்பு செலுத்துபவர், மற்ற அனைவரும் கஷ்டம் தருபவர்கள். முழு உலகத்திலும் ஒருவருக்கொருவர் தொல்லை கொடுக் கின்றனர். தந்தை அன்பு செலுத்துவதை குழந்தைகள் நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார் – நான் யாராக இருக்கின்றேன், எவ்வாறு இருக்கின்றேன், எவ்வளவு பெரியவராக இருக்கின்றேன், இதைப்பற்றிக் கூறுங்கள். புள்ளியாக இருக்கின்றார் எனக் கூறுகின்றனர், ஆனால் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளே அடிக்கடி மறந்துவிடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் பெரிய பெரிய சித்திரங்களை வைத்து பூஜை செய்து வந்தோம், இப்பொழுது புள்ளியாக எப்படி நினைவு செய்வது என கேட்கின்றனர். புள்ளி, புள்ளியைத்தான் நினைவு செய்ய வேண்டுமல்லவா! நான் புள்ளியாக இருக்கின்றேன் என ஆத்மா அறிந்திருக்கின்றது, நம்முடைய தந்தையும் அவ்வாறு தான் இருக்கின்றார். ஆத்மாதான் ஜனாதிபதியாகவும், சாதாரண வேலைக்காராகவும் ஆகின்றது. ஆத்மாதான் சரீரத்தின் மூலம் தனது பங்கைச் செய்கின்றது. தந்தை அனைவரையும் விட இனிமையாக இருக்கின்றார். பதீத பாவனரே, துக்கத்தைப் போக்கி சுகத்தை தருபவரே! வாருங்கள் என நினைவு செய்கின்றனர். யாரை புள்ளியென கூறுகின்றோமோ அவர் மிகவும் சூட்சுமமாக இருந்தாலும் மகிமை அளவற்றதாக இருக்கின்றது என குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஞானக்கடலாக, அமைதிக்கடலாக இருக்கின்றார் என பாடினாலும் அவர் எவ்வாறு சுகத்தைத் தருகின்றார் என புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். யாரெல்லாம் எந்தளவு ஸ்ரீமத்படி நடக்கின்றனர் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும். சேவை செய்வதற்காக ஸ்ரீமத் கிடைக்கின்றது. இவ்வுலகில் நிறைய மனிதர்கள் நோயாளியாக இருக்கின்றனர், சிலர் ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர். சத்யுகத்தில் நீண்ட ஆயுட்காலம் இருந்தது, சராசரியாக 125-150 ஆண்டுகள் வாழ்வார்கள், ஒவ்வொருவரும் தனது முழு ஆயுட்காலத்தையும் வாழ்ந்து முடிப்பார்கள். ஆனால் இப்போதைய உலகம் மிகவும் கெட்டுப்போன உலகம், மீதி மிகவும் குறைந்த காலம் தான் இருக்கின்றது. மனிதர்கள் இன்னும் பெரிய பெரிய தர்ம சாலைகளை உருவாக்கிவருகின்றனர். இன்னும் எவ்வளவு காலம் இந்த உலகம் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. கோயில்களை உருவாக்குவதற்கு பல இலட்சங்களை செலவு செய்கின்றனர், ஆனால் எவ்வளவு காலம் இருக்கும் எனத் தெரியாது. இவையெல்லாம் வெகு சீக்கிரம் முடிந்து விடும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கு பாபா ஒருபோதும் தடை செய்வதில்லை. நீங்கள் உங்களுடைய வீட்டில் ஒரு அறையில் இந்த ஹாஸ்பிடல் மற்றும் யுனிவர்சிட்டியை உருவாக்குங்கள். நீங்கள் செலவில்லாமல் 21 பிறவி களுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை இந்த ஞானத்தின் மூலம் அடையுங்கள் என சொல்லுங்கள். நீங்கள் அதிகமாக சுகத்தை அடைகின்றீர்கள், தமோபிரதானம் ஆனபிறகு அதிகமான துக்கம் ஏற்படுகின்றது. எந்தளவு தமோபிரதானம் அதிகமாகின்றதோ அந்தளவு துக்கம், அசாந்தி அதிகமாகிவிடும். மனிதர்கள் அதிகமாக துக்கம் அடைவார்கள், அதன் பிறகு வெற்றி முழக்கம் ஏற்படும். குழந்தைகள் வினாசத்தை திவ்யமான பார்வையால் பார்த்தீர்கள், அதனை பிறகு நடைமுறையில் காண்பீர்கள். ஸ்தாபனையின் சாட்சாத்காரத்தை நிறைய குழந்தைகள் பார்த்தார்கள். சிறிய குழந்தைகளும் நிறைய பார்த்தார்கள், ஆனால் ஞானம் எதுவும் தெரிய வில்லை. ஆகவே பழைய உலகத்தின் வினாசம் அவசியம் ஏற்படும். தந்தை மட்டுமே வந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தருகின்றார், ஆனால் குழந்தைகள் உயர்ந்த பதவியை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை வந்து அனைத்தையும் புரிய வைக்கின்றார், மற்றவர்களுக்கு இந்த உலகம் சிறிது காலம் என்பது தெரியாது. தந்தை கூறுகின்றார் – நான் உங்களுக்கு கொடுக்கக்கூடிய வள்ளலாக இருக்கின்றேன். பதீதபாவனரே வாருங்கள், எங்களை பாவனமாக்குங்கள் என மனிதர்கள் கூறுகின்றனர்.

தந்தை கூறுகின்றார் – முதலில் நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக, சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்பொழுது தமோபிரதானமாக ஆகிவிட்டீர்கள். நாம் முழு உலகத்தையும் அரசாட்சி செய்தோம் என்பது இதற்கு முன் உங்களுக்குத் தெரியாது. மீண்டும் நாம் உலகத்தை அரசாட்சி செய்வோம் என்பது உங்களுடைய புத்தியில் இப்பொழுது வந்துவிட்டது. இவ்வுலகின் வரலாறு பூகோளம் மீண்டும் சுழல்கின்றது. 5000 ஆண்டுகளுக்கு முன்பாக நான் வந்திருந்தேன், உங்களை சொர்க்கத்தின் எஜமானராக ஆக்கியிருந்தேன், பிறகு நீங்கள் 84 பிறவிகளின் ஏணிப்படியில் இறங்கி விட்டீர்கள் என்பதை தந்தை புரியவைக்கின்றார். இந்த விசயங்கள் எந்தவொரு சாஸ்த்திரத் திலும் இல்லை. சிவபாபா சாஸ்த்திரத்தைப் படித்து வரவில்லைதானே! அவருக்குத்தான் ஞானத்தின் முழு அதிகாரமும் இருக்கின்றது. மற்றவர்கள் சாஸ்த்திரத்தைப் படித்து அதனுடைய அதிகாரம் உடையவராக ஆகின்றனர். ஆனாலும் பதீத பாவனரே வாருங்கள் என கூறிக்கொண்டு கங்கையில் நீராடச் செல்கின்றனர். பக்தி என்பது நடைமுறையில் இல்லற வாழ்க்கையை சேர்ந்தவர்களுக்கு உரியதாகும். அவர்களுக்கு சத்கதி கொடுக்கும் வள்ளல் யார் எனத் தெரியாது. நீங்களும் பதீதபாவனரே ! வாருங்கள், என அழைத்தீர்கள் என தந்தை புரிய வைக்கின்றார். நான் உங்களை பாவனமாக ஆக்குகின்றேன், மேலும் உங்களுக்கு கல்வியும் தருகின்றேன், மற்றபடி எங்கள் மீது ஆசீர்வாதம் செய்யுங்கள் என கேட்பதற்கு அவசியமில்லை. நான் டீச்சராக இருக்கின்றேன், எனவே நீங்கள் என்னிடம் கருணை காட்டுங்கள் என ஏன் கேட்க வேண்டும்? ஆசீர்வாதங்களை நீங்கள் அனேக பிறவிகளாக அடைந்துவந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தாய் தந்தையின் பொக்கிஷத்தின் எஜமானராக ஆகுங்கள், மேலும் ஆசீர்வாதங்களுக்கு என்ன அவசியம் இருக்கின்றது! குழந்தை பிறந்தாலே தந்தையின் பொக்கிஷத்திற்கு எஜமானராக ஆகிவிடுவர். லௌகீக தந்தையிடம் கருணை காட்டுங்கள் என கூறுங்கள், இங்கு அதற்கான விசயம் இல்லை. இங்கு தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். பாபா புள்ளியாக இருக்கின்றார் என்பதும் யாருக்கும் தெரியாது. அனைவரும் பரமபிதா, பரமாத்மா, இறை தந்தை என கூறுகின்றனர். ஆகவே பரமாத்மா வானவர் அனைவரையும் விட மிகவும் உயர்வாகத்தான் இருப்பார். மற்ற அனைவரும் ஆத்மாக்கள். பரமாத்மா தந்தை வந்து குழந்தைகளை தனக்குச் சமமாக ஆக்குகின்றார், வேறு எந்த விசயமும் இல்லை. எல்லையற்ற தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர், அவர் நம்மை சொர்க்கத் தின் எஜமானராக ஆக்குகின்றார் என்ற விசயம் வேறு யாருடைய புத்தியிலும் இருக்க முடியாதல்லவா! கிருஷ்ணருடைய கையில் உலக உருண்டை காட்டப்படுகின்றது. குழந்தை பிறந்த நேரத்தில் இருந்து ஆயுட்காலம் ஆரம்பமாகின்றது. ஸ்ரீகிருஷ்ணர் முற்றிலும் 84 பிறவிகள் எடுக்கின்றார், கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்தவுடன் 84 பிறவிகளின் கணக்கு ஆரம்பமா கின்றது. இலட்சுமி – நாராயணராக ஆவதற்கு சுமார் 30-35 ஆண்டுகள் ஆகின்றது. ஆகவே 5000 ஆண்டுகளில் இருந்து 30-35 ஆண்டுகளை கழித்துப் பார்த்தால் சரியான கால அளவைத் தெரிந்து கொள்ளலாம். சிவபாபா எப்பொழுது வந்தார் என்ற சரியான காலத்தைக் கணக்கிட முடியாது. ஆரம்பத்தில் இருந்து சாட்சாத்காரம் ஏற்பட்டது. முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்லாவின் தோட்டத்தைப் பார்த்தார்கள், அவர்கள் தீவிரமான பக்தி செய்யவில்லை, வீட்டில் இருந்தபடியே காட்சிகளைக் கண்டனர். ஆனாலும் சிலர் எவ்வளவு தீவிரமான பக்தி செய்தனர், இதனையும் தந்தை வந்து புரியவைக்கின்றார். பாபா தூர தேசத்தில் இருந்து வந்திருக்கின்றார், இவருக்குள் பிரவேசமாகி நமக்கு கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளனர். பிறகு இங்கிருந்து வெளியே சென்றால் நஷா குறைந்துவிடுகின்றது. நினைவு நன்றாக இருந்தால் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும், மேலும் கர்மாதீத் நிலை ஏற்படும். ஆனால் இதற்கு இன்னும் நேரம் தேவைப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மா கடைசி பிறவியில் முழு ஞானமும் நிறைந்துள்ளது, பிறகு அடுத்த பிறவிக்காக கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்தவுடன் துளியளவும் ஞானம் இருக்காது. கிருஷ்ணர் முரளி கூறவில்லை, அவருக்கு ஞானம் தெரியாது. இலட்சுமி – நாராயணருக்கே ஞானம் தெரியாத போது ரிஷி, முனிவர்கள், சன்னியாசிகளுக்கு எவ்வாறு தெரியும். உலகத்தின் எஜமானராக இருந்தவர்களுக்கே ஞானம் தெரியாத போது சன்னியாசிகளுக்கு எப்படித் தெரியும்? ஸ்ரீகிருஷ்ணர் கடலின் மத்தியில் ஆலிலையில் வந்தார், அது செய்தார், இது செய்தார் என நிறைய கதைகளை எழுதிவிட்டனர். கங்கை நதியில் காலை வைத்ததால் கங்கை தாழ்வாக சென்றுவிட்ட தாக கூறிவிட்டார்கள், மனிதர்கள் எவ்வளவு விசயங்களை உருவாக்கிவிட்டனர் என யோசித்துப் பாருங்கள். எந்த விதமான தலைகீழான விசயங்கள் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள் என தந்தை புரிய வைக்கின்றார். மனிதர்கள் எவ்வளவு சாஸ்த்திரங்கள் படிக்கின்றனர். படித்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், இந்த தேகத்தையும் மறந்து விடுங்கள் என தந்தை கூறுகின்றார். ஆத்மாவானது வெவ்வேறு சரீரத்தினுடைய பெயர், தோற்றம், காலத்தோடு வெவ்வேறு பங்கினை ஏற்று நடிக்கின்றது. இப்போதைய சரீரமானது மிகவும் கெட்டுப்போனது என தந்தை கூறுகின்றார். அதாவது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் அழுக்காகிவிட்டது. ஆத்மாதான் அழகானதாகவும், அழகற்றதாகவும் ஆகின்றது. ஆத்மா தூய்மையாக இருந்தபொழுது அழகானதாக இருந்தது. பிறகு காமவிகாரம் எனும் நெருப்பினால் கருப்பாகிவிட்டது. இப்பொழுது ஞானம் எனும் நெருப்பில் தந்தை ஈடுபடுத்தி ஆத்மாவை சுத்தமாக்குகின்றார். என்னை நினைவு செய்வதால் ஆத்மாவின் அழுக்கு நீங்கும் என பதீதபாவனர் கூறுகின்றார். கலியுகத்தின் கடைசியில் நீங்கள் ஏழ்மை நிலை அடைந்துவிட்டீர்கள், பிறகு சத்யுகத்திற்குச் சென்று நீங்கள் தங்க மாளிகைகளை உருவாக்குவீர்கள். இங்கு வைரங்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கின்றது, ஆனால் அங்கு வைரங்கள் கற்களைப் போன்று நிறைந்திருக்கும். இப்பொழுது நீங்கள் ஞான இரத்தினங்களால் புத்தியை நிறைக்கின்றீர் கள். கடலாக இருப்பவர் இரத்தினங்களை கை நிறைய நிறைத்துக்கொண்டு வந்துள்ளார் என மகிமை செய்யப்படுகின்றது. இப்பொழுது கடலில் இருந்து நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு சுரங்கங்கள் அனைத்தும் நிறைந்து இருக்கும் என்பதை காட்சி யாகவும் நீங்கள் பார்த்தீர்கள். அந்த காட்சியில் தங்கத்தால் ஆன செங்கல் இருந்ததாகவும், அதை எடுத்துக்கொண்டு கீழே வரும்பொழுது காணாமல் போனதாகவும் குழந்தைகள் கூறினார்கள், அங்கு தங்கச் செங்கலினால் மாளிகை உருவாக்கப்படும். இதைத்தான் மாயாவி விளையாட்டு என காண்பித்துள்ளனர். இவ்வாறு சிந்தனைகள் வரும்பொழுது உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். சிவபாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பாகவும் வந்திருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. 5000 ஆண்டுகளுக்கு முன்பாக சிவபாபா உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்றுக்கொடுத்தார், ஒவ்வொரு கல்பமும் உங்களுக்குத்தான் கற்றுக்கொடுப்பார். யாரெல்லாம் பிராமணர்களாக ஆகின்றார்களோ அவர்களே மீண்டும் தேவதை களாக ஆவார்கள். விராட ரூப சித்திரத்தில் பிராமணர்களைக் காட்டாமல் விட்டுவிட்டனர். பிராமண குலம் அனைத்தையும் விட மிகவும் உயர்ந்ததாகும், அவர்கள் ஸ்தூலமான பிராமணர் கள், நீங்கள் ஆன்மீக பிராமணர்கள். நீங்கள் மிகவும் உண்மையான கதையைக் கூறுபவர்கள். இதுதான் சத்திய நாராயணரின், அமர கதையாகும். உங்களுக்கு அமர கதை கூறி அமர நிலை ஏற்படுத்தப்படுகின்றது. இந்த மரண உலகம் முடியப்போகின்றது. நான் உங்களை என்னோடு அழைத்துச்செல்ல வந்திருக்கின்றேன் என சிவபாபா கூறுகின்றார். கடைசி காலத்தில் எத்தனை ஆத்மாக்கள் வீட்டை நோக்கிச் செல்வார்கள், துளி அளவும் சப்தம் இருக்காது. தேனீக்கள் கூட்டமாக பறக்கும் போது எவ்வளவு சப்தம் ஏற்படுகின்றது. ராணி தேனீயைத் தொடர்ந்து அனைத்து தேனீக்களும் செல்லும், அவர்களிடம் கூட ஒற்றுமை இருக்கின்றது. குளவியின் உதாரணம் கூட இங்கு தான் உள்ளது. நீங்கள் மனிதர்களை ஞானத்தினுடைய சப்தத்தை குளவி போன்று காதில் ஊதி தேவதைகளாக, பாவனமான உலகின் எஜமானராக ஆக்குகின்றீர்கள். உங்களுடைய மார்க்கம் (வழி) இல்லறமாகும், இதில் அதிகமாக தாய்மார்களின் எண்ணிக்கை இருப்பதனால் வந்தே மாதரம் என மகிமை செய்யப்படுகின்றது. பிரம்மா குமாரி மூலமாக தந்தை யின் 21 பிறவிகளுக்கான பொக்கிஷம் கிடைக்கும். தந்தை சதா சுகத்தின் பொக்கிஷத்தைத் தரு கின்றார். யார் சேவை செய்கின்றார்களோ, படிக்கின்றார்களோ, எழுதுகின்றார்களோ அவர்களே எஜமானர்களாக ஆகின்றார்கள். இராஜாவாக ஆவது நல்லதா அல்லது சாதாரண வேலைக்காரனாக ஆவது நல்லதா என நினைத்துப்பாருங்கள். கடைசி நேரத்தில் உங்களுக்கு நாம் எவ்வாறு ஆவோம் எனத் தெரிந்து விடும். உயர்ந்த பதவி இல்லையெனில் நாம் ஏன் ஸ்ரீமத்படி நடக்கவில்லை என வருந்துவார்கள். ஆகவே தந்தையைப் பின்பற்றுங்கள். சிலர் சென்டருக்காக தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியைத் தருகின்றனர், ஆனாலும் மாமிசத்தை உண்கின்றனர், இதனால் சுத்தமான சூழ்நிலை ஏற்படாது. தனது வீட்டின் மூலம் சொர்க்கம் உருவாகின்றது, எனவே தானும் சொர்க்கத்தில் வரவேண்டுமல்லவா! வெறும் ஆசிர்வாதத்தை நம்பி இருக்கக்கூடாது. தந்தையை நினைவு செய்து தூய்மையானால் தான் அவர் நம்மை தன்னுடன் அழைத்துச்செல்வார். உங்களுக்கு எவ்வளவு பெரிய லாட்டரி கிடைத்துள்ளது, எனவே உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். தந்தையை எவ்வளவு நினைவு செய்கின்றீர்களோ அவ்வளவு பாவங்கள் அழியும். தந்தையைப் போன்று அன்பை வேறுயாரும் கொடுக்க முடியாது, அவர் அன்புக்கடலாக இருக்கின்றார், நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். ஒருவேளை நீங்கள் யாருக்காவது துன்பம் கொடுத்தாலோ, தொந்தரவு செய்தாலோ நீங்களும் தொல்லைகள் அடைந்து இறப்பீர்கள். பாபா சாபம் கொடுக்கவில்லை, புரியவைக்கின்றார். சுகத்தைக் கொடுத்தால் சுகமாக இருப்பீர்கள், அனைவருக்கும் அன்பு கொடுங்கள். பாபாவும் அன்புக்கடலாக இருக்கின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. எந்தவிதமான தலைகீழான விசயங்களையும் கேட்டு அதன்மீது நம்பிக்கை ஏற்படக்கூடாது. இதற்கு முன் படித்த தலைகீழான விசயங்களை மறந்து, அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

2. வெறும் ஆசிர்வாதங்களை எதிர்பார்க்காமல், தன்னைத்தான் தூய்மையாக ஆக்க வேண்டும். ஒவ்வொரு அடியிலும் தந்தையைப் பின்பற்ற வேண்டும், யாருக்கும் கஷ்டம் தருவதோ, துக்கத்தை தருவதோ கூடாது.

வரதானம்:-

எப்பொழுது சக்திசாலியான எண்ணங்களைப் படைப்பீர்களோ, அப்பொழுது எண்ணங்களுக்கு வெற்றி கிடைக்கும். யார் அதிக சங்கல்பங்களைப் படைக்கின்றார்களோ, அவர்களால் அவற்றை பாலனை செய்ய முடியாது. ஆகையினால், படைப்பு எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அவ்வளவு சக்தியற்றதாக இருக்கும். எனவே, முதலில் வீணான படைப்பை நிறுத்துங்கள். அப்பொழுதே வெற்றி கிடைக்கும். மேலும், கர்மம் செய்வதற்கு முன்னர் முதல், இடை மற்றும் முடிவு நிலையை அறிந்து, பிறகு கர்மம் செய்யுங்கள். இதுவே கர்மங்களில் வெற்றி அடைவதற்கான யுக்தி ஆகும். இதன் மூலமே சம்பூரண மூர்த்தியாக ஆகுவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top