25 April 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

April 24, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.

கர்மாதீத் நிலையின் ஆழமான விளக்கம்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று விதேகி (தேகமற்ற) பாப்தாதா தங்களுடைய விதேகி ஸ்திதியில் நிலைத்து இருக்கக் கூடிய சிரேஷ்டமான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் விதேகி ஆவதற்கான மற்றும் கர்மாதீத் ஆவதற்கான சிரேஷ்ட இலட்சியம் வைத்து சம்பூரண நிலைக்கு அருகாமையில் வந்துகொண்டு இருக்கின்றார்கள். யார் யார் எவ்வளவு அருகாமையில் வந்துள்ளார்கள், தந்தை பிரம்மாவை எந்தளவு பின்பற்றி இருக்கின்றார்கள் மற்றும் இப்பொழுதும் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று பாப்தாதா குழந்தைகளுடைய கர்மாதீத் விதேகி ஸ்திதியின் நெருக்கமான நிலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தந்தைக்கு அருகாமையில் வருவதும் சமமாக ஆவதுமே அனைவருக்கும் இலட்சியமாக உள்ளது. ஆனால், நடை முறையில் வரிசைக்கிரமமாக ஆகிவிடுகின்றனர். இந்த தேகத்தில் இருந்து கொண்டே விதேகி அதாவது கர்மாதீத் ஆவதற்கான உதாரணமாக சாகாரத்தில் தந்தை பிரம்மாவைப் பார்த்திருக்கின்றீர்கள். எனவே, கர்மாதீத் ஆவதற்கான விசேஷத்தன்மை என்ன? எதுவரை இந்த தேகம் உள்ளதோ, கர்மேந்திரியங்களுடன் இந்தக் கர்மசேத்திரத்தில் நடிப்பு நடித்துக் கொண்டு இருக்கின்றீர்களோ, அதுவரை கர்மம் (செயல்) செய்யாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது. கர்மாதீத் என்றால் கர்மம் செய்தாலும் கர்மத்தின் பந்தனத்தில் இருந்து கடந்த நிலை என்று அர்த்தம். ஒன்று பந்தனம் மற்றும் இரண்டாவது சம்பந்தம். கர்மேந்திரியங்கள் மூலம் கர்மத்தின் சம்பந்தத்தில் வருவது என்பது வேறு, கர்மத்தின் பந்தனத்தில் மாட்டிக் கொள்வதென்பது வேறு. கர்மபந்தனமானது கர்மத்தின் எல்லைக்குட்பட்ட பலனுக்கு வசமாக்கிவிடுகிறது. வசமாகு தல் என்ற வார்த்தையே ஏதாவது ஒன்றினுடைய கட்டுப்பாட்டில் வந்துவிடுவது என்பதை நிரூபிக் கிறது. கட்டுப் பாட்டில் வரக்கூடியவர்கள் பூதத்திற்கு சமமாக அலைந்து திரிபவர்களாக ஆகிவிடு கின்றார்கள். அசுத்த ஆத்மா பூதம் ஆகி எப்பொழுது பிரவேசம் செய்கிறதோ, அப்பொழுது மனித ஆத்மாவின் நிலை என்னவாகிறது? தன் வசத்தை இழந்து அலைந்து திரிவார்கள். இவ்வாறு கர்மத்திற்கு வசமானவர்கள் என்றால் கர்மத்தின் அழியக்கூடிய பலனுடைய இச்சைக்கு வசமானவர்கள் என்று அர்த்தம். எனவே, கர்மம் கூட பந்தனத்தில் கட்டுப் படுத்தி புத்தி மூலம் அலைய வைக்கிறது. எது தன்னையும் துன்பப்படுத்துகிறது மற்றும் பிறரையும் துன்பப்படுத்து கிறதோ, அதையே கர்மபந்தனம் என்று கூறப்படுகிறது. கர்மாதீத் என்றால் கர்மத்திற்கு வசமாகுபவர்கள் அல்ல, ஆனால், எஜமானன் ஆகி, அதிகாரி ஆகி கர்மேந்திரியங்களின் சம்பந்தத்தில் வருவது, அழியக்கூடிய விருப்பத்தில் இருந்து விடுபட்டு கர்மேந்திரியங்கள் மூலம் கர்மம் செய்விப்பது என்பதாகும். எஜமான ராகிய ஆத்மாவை கர்மம் தனது அடிமை ஆக்கக் கூடாது, ஆனால், ஆத்மா அதிகாரி ஆகி கர்மம் செய்விக்க வேண்டும். கர்மேந்திரியங்கள் தன்னுடைய கவர்ச்சியில் கவர்ச்சிக் கின்றன அதாவது ஆத்மாக்கள் கர்மத்திற்கு வசமாகிவிடு கின்றனர், அடிமை ஆகிவிடு கின்றனர், பந்தனத்தில் கட்டப்பட்டு விடுகின்றனர். கர்மாதீத் என்றால் இவற்றிலிருந்து விடுபட்ட நிலை என்று அர்த்தம். கண்ணின் வேலை பார்ப்பது, ஆனால், பார்க்கும் கர்மத்தை செய்விப்பது யார்? கண் கர்மம் செய்யக்கூடியது மற்றும் ஆத்மா கர்மம் செய்விக்கக் கூடியதாகும். எனவே, செய்விக்கக் கூடிய ஆத்மா, செய்யக்கூடிய கர்மேந் திரியத்திற்கு வசமாகு வது என்பதையே கர்ம பந்தனம் என்று கூறப்படுகிறது. செய்விப்பவராகி கர்மம் செய்வியுங்கள், இதையே கர்மத்தின் சம்பந்தத்தில் வருவது என்று கூறப்படுகிறது. கர்மாதீத் ஆத்மா சம்பந்தத்தில் வரும் ஆனால், பந்தனத்தில் வராது. அவ்வப்பொழுது, பேச விரும்பவில்லை ஆனால் பேசி விட்டேன், செய்ய விரும்ப வில்லை ஆனால் செய்துவிட்டேன் என்று கூறுகின்றீர்கள் அல்லவா. இப்பேற்பட்ட வர்களை கர்மத்தின் பந்தனத்திற்கு வசமான ஆத்மா என்று சொல்லப்படுகிறது. இத்தகைய ஆத்மாவை கர்மாதீத் ஸ்திதிக்கு நெருக்கத்தில் இருப்பவர்கள் என்று கூறலாமா? அல்லது தொலைவில் இருப்பவர்கள் என்று கூறலாமா?

கர்மாதீத் என்றால் தேகம், தேகத்தின் சம்பந்தம், பொருள், லௌகீகம் மற்றும் அலௌகீகம் ஆகிய இரண்டு சம்பந்தங்களில் இருந்தும், பந்தனத்தில் இருந்தும் விடு பட்டவர்கள் ஆவார்கள். தேகத்தின் சம்பந்தம், தேகத்தின் உறவுகளுடைய சம்பந்தம் என்ற வார்த்தை பேச்சு வழக்கில் வருகிறது, ஆனால், தேகத்தில் அல்லது சம்பந்தத்தில் ஒரு வேளை அடிமைத்தனம் உள்ளது என்றால் சம்பந்தம் கூட பந்தனம் ஆகிவிடுகிறது. சம்பந்தம் என்ற வார்த்தை பற்றற்ற மற்றும் அன்பான நிலையை அனுபவம் செய்விக்கக் கூடியது. இன்றைய அனைத்து ஆத்மாக்களின் சம்பந்தம் பந்தனமாக மாறிவிட்டது. எப்பொழுது சம்பந்தமானது பந்தனமாக மாறிவிடுகிறதோ, அப்பொழுது பந்தனம் சதா தனக்கு ஏதாவது ஏதாவது தொந்தரவு செய்து கொண்டே இருக்கும், துக்கத்தின் அலையை அனுபவம் செய்விக்கும், துயரத்தின் அனுபவம் செய்விக்கும். அழியக்கூடிய பிராப்திகள் கிடைத்திருக்கும்போதிலும் அல்ப காலத்திற்காக அந்த பிராப்திகளின் சுகத்தை அனுபவம் செய்வார்கள். சுகத்தின் கூடவே அவ்வப்போது பிராப்தி சொரூபத்தின் அனுபவம் ஏற்படும், அவ்வப்போது பிராப்திகள் கிடைத்தாலும் அபிராப்தி நிலையின் அனுபவம் ஏற்படும். நிறைந்த நிலையில் இருந்தபோதிலும் தன்னை காலியாக அனுபவம் செய்வார்கள். அனைத்தும் இருந்தபோதிலும் இன்னும் வேண்டும் என்ற அனுபவம் செய்து கொண்டே இருப்பார்கள் மற்றும் எங்கு வேண்டும் வேண்டும் என்பது உள்ளதோ, அங்கு ஒருபொழுதும் திருப்தி இருக்காது. மனமும் திருப்தியாக இருப்பது, உடலும் திருப்தியாக இருப்பது, பிறரும் திருப்தியாக இருப்பது என்பது சதா காலமும் இருக்க முடியாது. ஏதாவது ஏதாவது விசயத்தில் தன் மீது கோபம் அல்லது பிறர் மீது கோபம் மனம் விரும்பாமலேயே வருகிறது. ஏனெனில், கோபம் கொள்வது என்றால் இரகசியத் தைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். அதிகாரியாகி கர்மேந்திரியங்கள் மூலம் கர்மம் செய்விக்கக் கூடிய இரகசியத்தைப் புரிந்து கொள்ளவில்லை எனில் கோபம் தான் வரும் அல்லவா. கர்மாதீத் நிலையில் இருக்கும் ஆத்மாக்கள் ஒருபொழுதும் கோபப் பட மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் கர்ம சம்பந்தம் மற்றும் கர்மபந்தனத்தின் இரகசியத்தை அறிந்துள்ளார்கள். கர்மம் செய்யுங்கள் ஆனால், வசமாகி செய்யாதீர்கள், அதிகாரியாகி எஜமானன் ஆகி செய்யுங்கள். கர்மாதீத் என்றால் தனது பழைய கர்மங் களின் கணக்கு வழக்கினுடைய பந்தனத்திலிருந்து கூட விடுபட்ட நிலை என்பதாகும். பழைய கர்மங்களின் கணக்கு வழக்கினுடைய பலன் சொரூபமாக உடல் நோய் வருகிறது, தனது மனதின் சம்ஸ்காரங்களால் பிற ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களோடு மோதல் ஏற்படுகிறது. ஆனால், கர்மாதீத் நிலை அடைந்தவர்கள் கர்மவினைப் பயனுக்கு வசமா காமல் எஜமானன் ஆகி அதை முடிவடையச் செய்வார்கள். கர்மயோகி ஆகி கர்ம வினைப் பயனை முடிவடையச் செய்வது என்பது கர்மாதீத் ஆவதன் அடையாள மாகும். யோகத்தின் மூலம் கர்மவினைப் பயனை, புன்னகைத்துக் கொண்டே கழுமரத் திலிருந்து முள்ளாக ஆக்கி எரித்துவிட வேண்டும் அதாவது கர்மவினைப் பயனை முடித்து விட வேண்டும். வியாதியின் ரூபமாக ஆகக்கூடாது. யார் வியாதியின் ரூபமாக ஆகிவிடுகின்றார்களோ, அவர்கள் சுயம் சதா வியாதியைப் பற்றியே வர்ணனை செய்துகொண்டே இருப்பார்கள். மனதிலும் வர்ணனை செய்வார்கள், வாயினாலும் வர்ணனை செய்வார்கள். இரண்டாவது விசயம் – வியாதியின் ரூபமாக ஆன காரணத் தினால் தானும் துன்பப்படுவார்கள் மற்றும் பிறரையும் தொந்தரவு செய்வார்கள். அவர்கள் கூச்சலிடுவார்கள் மற்றும் கர்மாதீத் நிலையில் இருப்பவர்கள் அதை சமாளிப்பார்கள். சிலருக்கு கொஞ்சம் வலி ஏற்பட்டாலும் அதிகமாகக் கூச்சலிடுவார்கள் மற்றும் சிலர் அதிக வலி இருந்தாலும் சமாளித்துக் கொள்வார்கள். கர்மாதீத் நிலையில் இருப்பவர்கள் தேகத்தின் எஜமானனாக இருக்கும் காரணத்தினால் கர்மவினைப் பயன் இருந்தபோதிலும் கூட விடுபட்ட வராக ஆகுவதற்கான பயிற்சியாளராக இருப்பார்கள். இடை இடையில் அசரீரி ஸ்திதியின் அனுபவமானது வியாதியின் உணர்விலிருந்து கடந்து செல்ல வைத்து விடுகிறது. எவ்வாறு அறிவியல் சாதனத்தின் மூலம் மூர்ச்சை அடையச் செய்துவிடு கின்றனர், அப்பொழுது வலி இருந்தாலும் அதை மறந்துவிடுகிறார்கள், வலியை உணர்வ தில்லை, ஏனெனில், மருந்தின் போதை இருக்கும். கர்மாதீத் நிலையில் இருப்பவர்கள் அசரீரி ஆவதற்கான பயிற்சியாளராக இருக்கும் காரணத்தினால் இடை இடையில் இந்த ஆன்மிக ஊசி (இன்ஜெக்சன்) போடுவது போன்று ஆகிறது. இந்தக் காரணத்தினால் கழுமரத்திலிருந்து முள் போன்று அனுபவம் ஆகிறது. மற்றுமொரு விசயம் – தந்தையைப் பின்பற்றுபவராக இருக்கும் காரணத்தினால் விசேஷமாக கட்டளைப்படி நடப்பவராக இருப்பதற்கான பிரத்யட்ச பலனாக தந்தையிடமிருந்து விசேஷமாக உள்ளத்தின் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. ஒன்று – தன்னுடைய அசரீரி ஆவதற்கான பயிற்சி, இரண்டாவது – கட்டளைப்படி நடப்பவராக ஆவதற்கான பிரத்யட்சபலனாகக் கிடைக்கும் தந்தையின் ஆசீர்வாதங் கள் ஆகிய இவை இரண்டும் அந்த வியாதி அதாவது கர்மவினைப் பயனை கழுமரத்திலிருந்து முள்ளாக ஆக்கிவிடுகிறது. கர்மாதீத் நிலை அடைந்த சிரேஷ்ட ஆத்மாக்கள் கர்மவினைப் பயனை கர்மயோக ஸ்திதியில் மாற்றிவிடுவார்கள். இவ்வாறு அனுபவம் ஆகிறதா? அல்லது மிகப் பெரிய விசயம் என நினைக்கின்றீர்களா? சுலபமானதா? அல்லது கடினமானதா? சிறிய விசயத்தைப் பெரிய விசய மாக ஆக்குவது அல்லது பெரிய விசயத்தை சிறிய விசயமாக ஆக்குவது என்பது தன்னுடைய ஸ்திதியின் ஆதாரத்தில் உள்ளது. துக்கப்படுவது அல்லது தன்னுடைய அதிகாரி நிலையின் பெருமையில் இருப்பதென்பது தன்னிடமே உள்ளது. என்ன இப்படி ஆகிவிட்டது என்றோ அல்லது என்ன நடந்ததோ, அது நல்லது தான் நடந்தது என்றோ புரிந்துகொள்வது தன் கையில் உள்ளது. இந்த நம்பிக்கையானது தீயதைக் கூட நல்லதாக மாற்ற முடியும். ஏனெனில், கணக்கு வழக்கு முடிவடையும் காரணத்தினால் மற்றும் அவ்வப்போது நடைமுறைத் தேர்வு நாடகத்தின் அனுசாரமாக வரும் காரணத்தினால் சில விசயங்கள் நல்ல ரூபத்தில் முன்னால் வரும் மற்றும் சில நேரம் நல்ல ரூபமாக இருந்தபோதிலும் வெளியில் தென்படும் ரூபத்தில் நஷ்டமாகத் தோன்றும். இதையே, இந்த ரூபத்தில் சரியாக நடக்கவில்லை என்று கூறுகிறீர்கள். விசயங்கள் வரும், இப்பொழுது வரை கூட அத்தகைய விசயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன மற்றும் வந்துகொண்டே இருக்கும். ஆனால், நஷ்டத்தின் திரைக்குள்ளே இலாபம் மறைந்திருக் கிறது. வெளித்திரை நஷ்டமானதாகத் தென்படும். சிறிது நேரத்திற்கு பொறுமையான மனோ நிலை யோடு, சகித்துக்கொள்ளும் மனோநிலையோடு உள்நோக்குமுகம் உடைய வராகிப் பாருங்கள், அப்பொழுது வெளித்திரைக்குள் என்ன மறைந்திருக்கிறதோ, அது உங்களுக்குத் தென்படும், மேலோட்டமாகப் பார்த்தாலும் பார்க்கமாட்டீர்கள். தூய அன்னப்பறவை ஆவீர்கள் அல்லவா? அந்த அன்னப்பறவையால் கூழாங்கல் மற்றும் இரத்தினத்தை தனித்தனியாகப் பிரிக்க முடிகிறது. தூய அன்னப்பறவைகள் போன்று இருப்பவர்கள் மறைந்திருக்கும் இலாபத்தை எடுத்துக்கொள்வார்கள், நஷ்டத்திற்கு நடுவில் இலாபத்தைத் தேடுவார்கள். புரிந்ததா? விரைவில் பயந்துவிடுகிறீர்கள் அல்லவா. இதனால் என்ன ஆகிறது? நல்லது என்ன சிந்திக்கின்றீர்களோ, அதுவும் பயத்தின் காரணத்தினால் மாறிவிடுகிறது. எனவே, பயப்படாதீர்கள். கர்மத்தைப் பார்த்து கர்மத்தின் பந்தனத் தில் மாட்டிக்கொள்ளாதீர்கள். என்ன ஆனது, எப்படி ஆனது, அப்படி ஆகியிருக் கக்கூடாது, எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது, ஒருவேளை என்னுடைய பாக்கியமே இதுதானோ என்று தோன்றுகிறது – இந்தக் கயிறுகளால் கட்டிக்கொள்கிறீர்கள். இந்த சங்கல்பம் கூட கயிறுகள் ஆகும். ஆகை யினால், கர்மத்தின் பந்தனத்தில் வந்துவிடுகிறீர்கள். வீண் எண்ணங்களே கர்மபந்தனத்தின் சூட்சுமக் கயிறுகள் ஆகும். என்ன நடக்கிறதோ, அது நல்லதே நடக்கிறது, நானும் நன்றாக இருக்கின்றேன், தந்தையும் நல்லவர், நாடகமும் நன்றாக உள்ளது என்று கர்மாதீத் ஆத்மா கூறுவார். இது பந்தனத் தைத் துண்டிக்கக்கூடிய கத்தரிக்கோலாக வேலை செய்கிறது. பந்தனம் அறுபட்டு விட்டால் கர்மாதீத் ஆகிவிட்டீர்கள் என்பதாகும் அல்லவா. கல்யாணகாரி தந்தை யினுடைய குழந்தை களாக இருக்கும் காரணத்தினால் சங்கமயுகத்தின் ஒவ்வொரு வினாடி யும் கல்யாணகாரி (நன்மை நிறைந்தது) ஆகும். உங்களுடைய தொழிலே ஒவ்வொரு வினாடியும் நன்மை செய்வதாகும், உங்களுடைய சேவையே நன்மை செய்வதாகும். பிராமணர்களுடைய தொழிலே விஷ்வ பரிவர்த்தக் (உலகை மாற்றுபவர்), விஷ்வகல்யாணி (உலகத்திற்கு நன்மை செய்பவர்) என்பதாகும். அத்தகைய நிச்சயபுத்தி உடைய ஆத்மாவிற்கு ஒவ்வொரு நொடியும் உறுதியாக நன்மை நிறைந்ததாக இருக்கும். புரிந்ததா?

கர்மாதீத் என்பதன் விளக்கம் நிறைய உள்ளது. எவ்வாறு கர்மங்களின் நிலை (பலன்) ஆழமானதோ, அவ்வாறு கர்மாதீத் நிலையின் விளக்கமும் மிகவும் மகான்தன்மை உடையதாகும். மேலும், கர்மாதீத் ஆகவேண்டியது அவசியம் ஆகும். கர்மாதீத் ஆகாமல் (தந்தையுடன்) இணைந்து செல்ல முடியாது. தந்தையுடன் யார் செல்வார்கள்? யார் சமமாக இருப்பார்களோ, அவர்களே செல்வார்கள். கர்மாதீத நிலையை எவ்வாறு பிராப்தியாக அடைந்தார் என்று தந்தை பிரம்மாவைப் பார்த்திருக்கிறீர்கள். கர்மாதீத் ஆகுவதற்காக பின்பற்றுவது என்றால் இணைந்து செல்வதற்குத் தகுதியானவர் ஆவதாகும். இன்று இவ்வளவு மட்டும் சொல்கின்றார்கள், இவற்றை சோதனை செய்ய வேண்டும், பிறகு, இன்னும் சொல்வார்கள். நல்லது.

சர்வ அதிகாரி ஸ்திதியில் நிலைத்திருக்கக் கூடிய, கர்மபந்தனத்தை கர்மசம்பந்தமாக மாற்றக் கூடிய, கர்மவினைப் பயனை கர்மயோக ஸ்திதியில் கழுமரத்தை முள்ளாக மாற்றக்கூடிய, ஒவ்வொரு வினாடியும் நன்மை செய்யக்கூடிய, சதா தந்தை பிரம்மாவிற்கு சமமாக கர்மாதீத் நிலையின் நெருக்கத்தை அனுபவம் செய்யக்கூடிய, அத்தகைய விசேˆ ஆத்மாக்களுக்கு பாப்தாதா வின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

பார்ட்டிகளுடனான அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு :

1. சதா தன்னை, சக்திசாலியான தந்தையினுடைய சக்திசாலியான குழந்தையாக அனுபவம் செய்கின்றீர்களா? அவ்வப்போது சக்திசாலி நிலை, அவ்வப்போது பலவீன மான நிலை – இவ்வாறு இல்லை தானே? சக்திசாலி என்றால் சதா வெற்றியாளர். சக்தி சாலியாக இருப்பவர் ஒரு பொழுதும் தோல்வி அடைய முடியாது. கனவில் கூட தோல்வி அடைய முடியாது. கனவு, சங்கல்பம் மற்றும் கர்மம் ஆகிய அனைத்திலும் சதா வெற்றி யாளராக இருப்பதையே சக்திசாலி நிலை என்று கூறுகின்றார்கள்.அத்தகைய சக்திசாலியாக இருக்கின்றீர்களா? ஏனெனில், யார் இப்போதைய வெற்றியாளராக இருக்கின்றார்களோ, அவர்களே நீண்டகாலத்திற்கு வெற்றிமாலையில் மகிமைக் கும் பூஜைக்கும் தகுதியானவர்களாக ஆகின்றார்கள். ஒருவேளை, நீண்டகால வெற்றியாளராக இல்லை யென்றால், சக்தி இல்லை என்றால் நீண்டகால மகிமைக்கும் பூஜைக்கும் தகுதியானவர் ஆகவில்லை என்று அர்த்தம். யார் சதா மற்றும் நீண்டகால வெற்றியாளர்களோ, அவர்களே நீண்டகாலத்திற்கு வெற்றிமாலையில் மகிமைக்கும் பூஜைக்கும் தகுதி யானவர்கள் ஆகின்றார்கள். மேலும், யார் அவ்வப்பொழுது வெற்றியாளர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் அவ்வப்போது அதாவது 16000 மணி மாலையில் வருவார்கள். எனவே. நீண்டகாலத்திற்கான கணக்கும் உள்ளது மற்றும் சதா காலத்திற் கான கணக்கும் உள்ளது. 16000 மணி மாலை அனைத்து கோவில்களிலும் இருப்பதில்லை, ஏதோ சில இடங்களில் இருக்கிறது.

2. அனைவரும் தங்களை இந்த விசாலமான நாடகத்தில் ஹீரோ (கதாநாயகன்) கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கின்றீர்களா? உங்கள் அனைவருக்கும் ஹீரோ பாகம் கிடைத்துள்ளது. ஏன் ஹீரோ நடிகர் ஆகியிருக்கிறீர்கள்? ஏனெனில், உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை யார் ஜீரோவாக (பூஜ்யம் – புள்ளி) இருக் கின்றாரோ, அவருடன் பாகம் ஏற்று நடிப்பவர்கள் ஆவீர்கள். நீங்கள் கூட ஜீரோ அதாவது புள்ளி ஆவீர்கள். ஆனால், நீங்கள் சரீரம் தரித்தவர்கள் ஆகின்றீர்கள் மற்றும் தந்தை எப்பொழுதும் ஜீரோவாக இருக்கின்றார். எனவே, ஜீரோவுடன் நடிப்பு நடிக்கக் கூடிய ஹீரோ நடிகர் நான் என்ற இந்த நினைவு இருந்தது என்றால் சதா சரியான நடிப்பு நடிப்பீர்கள், தானாகவே கவனம் ஏற்படும். எவ்வாறு எல்லைக்குட்பட்ட நாடகத் தில் ஹீரோ நடிகருக்கு எவ்வளவு கவனம் இருக்கிறது! அனைவரையும் விட பெரியதிலும் பெரிய ஹீரோ நடிப்பு உங்கள் அனைவருடையது ஆகும். ஆஹா, முழு விஷ்வத்தின் ஆத்மாக்களும் அடிக்கடி மறுபடியும் வாருங்கள் (ர்ய்ஸ்ரீங் ம்ர்ழ்ங் – ஹேயர் ஹேயர்) என்று சொல்லும் படியானது என்னுடைய ஹீரோ நடிப்பு – சதா இந்த போதை மற்றும் குஷியில் இருங்கள். துவாபரயுகத்தில் இருந்து கீர்த்தனை என்ன பாடுகிறார்களோ, அது உங்களுடைய இந்த சமயத்தின் ஹீரோ நடிப்பினுடைய நினைவுச் சின்னம் ஆகும். எவ்வளவு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது! நீங்கள் சுயம் ஹீரோ ஆகியிருக் கின்றீர்கள், ஆகையினால், உங்களுக்குப் பின்னர் இப்பொழுது வரை கூட உங்களது மகிமை இருந்து வருகிறது. கடைசி பிறவியில் கூட தன்னுடைய மகிமையைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள். கோபி வல்லபருக்கும் கூட மகிமை உள்ளது, கோபாலருக் கும் மகிமை உள்ளது, கோபிகைகளுக்கும் மகிமை உள்ளது. தந்தைக்கு சிவன் ரூபத்தில் மகிமை உள்ளது எனில், குழந்தைகளுக்கு சக்திகள் ரூபத்தில் மகிமை உள்ளது. எனவே, சதா ஹீரோ நடிப்பு நடிக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்கள் ஆவோம் என்ற இந்த நினைவில் குஷியில் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.

குமாரர்களுடன் : 1.) சகஜயோகி குமாரர் ஆவீர்கள் அல்லவா? நிரந்தர யோகி குமார், கர்மயோகி குமார் ஏனெனில், குமாரர் எந்தளவு தன்னை முன்னேற்ற விரும்பு கிறீர்களோ, அந்தளவு முன்னேற்ற முடியும். ஏன்? பந்தனமற்றவர்களாக இருக்கின்றீர்கள், சுமை கிடையாது மற்றும் பொறுப்பு கிடையாது, ஆகையினால், இலகுவாக இருக்கின்றீர்கள். இலகுவாக இருக்கும் காரணத் தினால் எவ்வளவு மேலே (உயர்வாக) செல்ல விரும்பு கிறீர்களோ, செல்ல முடியும். நிரந்தர யோகி, சகஜயோகி – இதுவே உயர்ந்த ஸ்திதியாகும், இதுவே உயரச் செல்வதாகும். அவ்வாறு உயர்ந்த ஸ்திதி உடையவர்கள் வெற்றிக் குமாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வெற்றியாளர் களாக இருக்கிறீர்களா அல்லது அவ்வப்போது தோல்வி, அவ்வப்போது வெற்றி என்ற இந்த விளையாட்டு விளையாடுவதில்லை தானே? ஒருவேளை, அவ்வப்போது தோல்வி, அவ்வப்போது வெற்றியின் சம்ஸ்காரம் இருக்குமானால் ஏக்ரஸ் ஸ்திதியின் அனுபவம் ஏற்படாது. ஒருவருடைய அன்பில் மூழ்கியிருக்கும் அனுபவம் செய்யமுடியாது.

2) சதா ஒவ்வொரு கர்மத்தில் அதிசயம் செய்யக்கூடிய குமாரர்கள் ஆவீர்கள் அல்லவா. எந்தவொரு கர்மமும் சாதாரணமாக இருக்கக் கூடாது, அதிசயமானதாக இருக்க வேண்டும். எவ்வாறு தந்தையின் மகிமை பாடுகிறீர்கள், தந்தையின் அதிசயத்தைப் பாடுகிறீர்கள். அதுபோன்று குமாரர் என்றால் ஒவ்வொரு கர்மத்திலும் அதிசயத்தைக் காண்பிக்கக் கூடியவர்கள். சில நேரம் ஒரு மாதிரி, சில நேரம் வேறொரு மாதிரி இருப்பவர்கள் அல்ல. எங்கேயாவது யாராவது இழுத்தார்கள் என்றால் அங்கே சென்று விடுவது – இப்பேற்பட்டவர்கள் அல்ல. உருண்டு விழக்கூடிய குவளை அல்ல. சில நேரம் ஒரு இடத்தில் உருண்டு விழுவது, சில நேரம் இன்னொரு இடத்தில் உருண்டு விழுவது – இப்பேற்பட்டவர்கள் அல்ல. அதிசயம் செய்யக் கூடியவர்கள் ஆகுங்கள். அழிவற்றவர் கள், அழிவற்றதை உருவாக்கக் கூடியவர்கள் – இத்தகைய சவால் விடக் கூடியவர்கள் ஆகுங்கள். ஒவ்வொரு குமாரரும் நடமாடும் ஃ.பரிஷ்தா ஆக வேண்டும், தொலைவில் இருந்தே ஃபரிஷ்தா நிலையின் ஜொலிப்பின் அனுபவம் ஏற்பட வேண்டும். இத்தகைய அதிசயம் செய்து காண்பியுங் கள். வார்த்தைகள் மூலம் செய்யப்படும் சேவை யின் நிகழ்ச்சிகள் அனேகம் உருவாக்கிவிட்டீர் கள், அதை மேலும் செய்வீர்கள், ஆனால், தற்சமயம் பிரத்யட்ச சான்றை (ஃப்ரூப்) விரும்புகின்றார் கள். பிரத்யட்ச சான்றே அனைத்தையும் விட சிரேஷ்டமான சான்றாகும். இத்தனை பேரும் பிரத்யட்ச சான்றாக ஆகிவிட்டால் சேவை எளிதாக நடந்தேறிவிடும். ஃபரிஷ்தா நிலையில் சேவை செய்யுங் கள், அப்பொழுது உழைப்பு குறைவாகவும் வெற்றி அதிகமாகவும் கிடைக்கும். வார்த்தை களால் மட்டும் சேவை செய்யாதீர்கள், ஆனால், மனம், பேச்சு மற்றும் கர்மம் ஆகிய மூன்றையும் இணைத்து சேவை செய்யுங்கள். இதையே அதிசயம் என்று கூறப்படுகிறது. நல்லது.

விடைபெறும் சமயம்: நாலாபுறங்களிலும் உள்ள தீவிர முயற்சியாளர்கள், சதா சேவாதாரிகள், சதா டபுள் லைட் ஆகி பிறரையும் டபுள் லைட் ஆக்கக்கூடிய, வெற்றியை அதிகாரமாக அடையக் கூடிய, சதா தந்தைக்கு சமமாக முன்னேறக்கூடிய மற்றும் பிறரையும் முன்னேற்றக்கூடிய, அத்தகைய சதா ஊக்க உற்சாகத்தில் இருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சினேகி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் மிக மிக அன்புடன் கூடிய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்

வரதானம்:-

தந்தை குழந்தைகளுக்கு மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்கான எச்சரிக்கை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். ஆகையினால், இப்பொழுது சிறிதளவு கூட கவனக் குறைவாக இருப்பதற்கான சமயம் அல்ல. இப்பொழுது அடி அடியிலும் எச்சரிக்கை வைத்து, ஒரு அடியில் பலகோடிகளின் வருமானம் செய்து பதம்பதி (கோடீஸ்வரர்) ஆகுங்கள். உங்களுக்கு பத்மாபதம் பாக்கியசாலி என்ற பெயர் உள்ளது என்றால் அதற் கேற்றவாறு செயலும் செய்ய வேண்டும். ஒரு அடி கூட கோடி வருமானம் இல்லாமல் இருந்துவிடக் கூடாது. எனவே, மிகவும் யோசித்து புரிந்து ஸ்ரீமத் அனுசாரம் ஒவ்வொரு அடியும் எடுத்துவையுங்கள். ஸ்ரீமத்தில் மன வழியைக் கலப்படம் செய்யாதீர்கள்.

சுலோகன்:-

Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top