22 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 21, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! நீங்கள் உட்கார்ந்தாலும், எழுந்தாலும் அனைத்தையும் செய்து கொண்டிருந்தாலும் சும்மா (அமைதியாக) இருங்கள். பாபாவை நினைத்தால் ஆஸ்தி கிடைக்கும். இதில் பாட்டு கவிதை போன்றவைகளின் அவசியம் இல்லை.

கேள்வி: -

பாபாவை விடுவிக்கக் கூடியவர் என்று கூறுவதால் எந்த ஒரு விˆயம் நிரூபணமாகிறது?

பதில்:-

பாபா துக்கங்களிலிருந்து மற்றும் 5 விகாரங்களிலிருந்து விடுவிக்கக்கூடியவர் என்றால் நிச்சயமாக அதில் மாட்ட வைக்கக்கூடியவர்கள் வேறு யாராவது இருப்பார்கள். விடுவிக்கக் கூடியவர் ஒருபோதும் மாட்ட வைக்க மாட்டார். அவருக்கு துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என கூறப்படுகிறது என்றால் அவர் எப்படி யாருக்காவது துக்கம் கொடுக்க முடியும். குழந்தைகள் துக்கம் அடையும் பொழுது அந்த தந்தையை நினைக் கிறார்கள். துக்கம் அளிக்கக்கூடியவன் இராவணன். இராவணன் மாயை சாபம் கொடுக்கிறது. பாபா ஆஸ்தி கொடுப்பதற்காக வந்திருக்கிறார்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

யார் தந்தையுடன் இருக்கிறார்களோ .

ஓம் சாந்தி. இந்த ஞான மார்க்கத்தில், பாடல்கள், கவிதைகள், உரையாடல்கள் போன்றவற்றிற்கு அவசியம் இல்லை. இது அனைத்தும் பக்தி மார்க்கத்தில் உள்ளது. இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விˆயம் ஆகும். ஒவ்வொரு விˆயத்தையும் புத்தியினால் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இது மிகவும் எளிய ஞானம் ஆகும். ஒரு பாயின்டினால் கூட மனிதர்கள் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பாடல் பாடுவதற்கோ அல்லது கவிதைகள் எழுதுவதற்கோ அவசியம் இல்லை. இல்லறத்தில் இருங்கள், தொழில் போன்றவைகளைச் செய்யுங்கள். அது அனைத்தையும் செய்து கொண்டே நீங்கள் என்னிடம் இருந்து ஆஸ்தியை எப்படி அடைய முடியும் என பாபா கூறுகிறார். உட்கார்ந் தாலும், எழுந்தாலும், அனைத்து காரியங்களை செய்தாலும் சும்மா இருங்கள் என அவர் புரிய வைக்கிறார். பாபா புரிய வைத்த விˆயங்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிது என உள்ளுக்குள் சிந்தனை சென்று கொண்டே இருக்க வேண்டும். புதிய உலகம் பழைய உலகம் ஆவதற்கு நேரம் ஆகிறது. பிறகு பழையதிலிருந்து புதியதாவதற்கு அவ்வளவு காலம் தேவை யில்லை. பாபா புதிய சிருஷ்டியைப் படைக்கிறார். பிறகு பழையதாகி விடுகிறது என குழந்தை களுக்குப் புரிய வைக்கப் பட்டிருக்கிறது. சுகம் மற்றும் துக்கத்தின் உலகம் நிச்சயம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் யார் துக்கத்தை கொடுக்கிறார்கள் மற்றும் யார் சுகத்தை கொடுக்கிறார். இது யாருக்கும் தெரியவில்லை. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். இந்த சக்கரத்திலிருந்து நாம் வெளியே செல்ல முடியாது. இதற்குத் தான் நாடகம் என்று கூறப்படுகிறது. நாடகம் என்பதற்குப் பதிலாக டிராமா என்று கூறினால் நன்றாக இருக்கும். நாடகத்தில் எதை வேண்டு மானாலும் மாற்றிக்கொள்ள முடியும். யாரை வேண்டு மானாலும் நீக்கலாம். யாரை வேண்டு மானாலும் சேர்த்துக் கொள்ளலாம். முன்பு நாடகம் தான் இருந்தது. பயாஸ்கோப் போன்றவை இப்போது தான் வந்திருக்கிறது. பயாஸ்கோப்பில் எந்தப்படம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ அதுவே ரிப்பீட் ஆகும். இந்த ஞானத்தைக் கூட இதன் மூலமாக முழுமையாக புரிந்து கொள்வதற்காக இந்த பயாஸ்கோப் வந்திருக்கிறது. நாடகத்தில் வித்தியாசம் உள்ளது. பயாஸ்கோப்பில் வித்தியாசம் ஏற்படுவதில்லை. இது புதிய தூய்மையான உலகம் மற்றும் பழைய உலகத்தின் ஒரு கதையாகும். நாடகத்தின் ஆயுள் எவ்வளவு என்பது மனிதர்களுக்குத் தெரிய வில்லை. மிகவும் நீண்ட ஆயுளைக் கொடுத்து விட்டனர். மனிதர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. புதிய உலகத்தில் எவ்வளவு புத்திசாலிகள், செல்வந்தர்கள், தூய்மை யானவர்கள் இருந்தனர். அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக இருந்தனர். பாபா இன்று ஏன் இப்படிப் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார். குழந்தைகள் கூட இவ்வாறு சென்று சொற்பொழி வாற்ற வேண்டும். முதன் முதலில் பாரதத்தின் புகழ்பாட வேண்டும். இவ்வாறு பாரதத்தை யார் மாற்றியது.? பரம்பிதா பரமாத்மாவினுடைய மகிமைகள் வெளிப்படும். அவரைத்தான் அனைவரும் நினைக்கிறார்கள். ஏன் நினைக்கிறார்கள்? ஏனென்றால் பழைய உலகத்தில் துக்கம் நிறைய இருக்கின்றது. ஐந்து விகாரங்கள் தான் துக்கத்தை அளிக்கின்றது. சத்யுகம் திரேதாயுகத்திற்கு சுகதாமம் என்று கூறப்படுகிறது. அதுதான் ஈஸ்வரனால் ஸ்தாபிக்கப்பட்ட தாகும். மற்ற அனைத்தும் அசுரனால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இதில் மனிதர்கள் ஐந்து விகாரங்களில் மாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். பாபா தான் விடுவிக்கக்கூடியவர் என புரிந்து கொள்கிறார்கள். யார் விடுவிக்கக் கூடியவரோ அவர் மாட்டி வைக்க மாட்டார். அவருடைய பெயரே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆகும். நாம் அவரை துக்கத்தை அளிப்பவர் என்று கூற முடியாது. இந்த துக்கத்தை அளிக்கக்கூடியது ஐந்து விகாரங்கள் தான். அதனிடமிருந்து தான் பாபா வந்து விடுவிக்கிறார். மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விˆயமாகும். முழு உலகிலும் இந்த இராவணின் இராஜ்யம் இருக்கிறது, வெறும் இலங்கை மட்டும் அல்ல. மனிதர்களுக்கு அவரவருக்கென்று புத்தியில் சிந்தனை இருக்கின்றது. யாருக்கு புத்தியில் என்ன வருகிறதோ அதை எழுதி விடுவார்கள். அதே போன்று தான் இந்த சாஸ்திரங்களும்! அவரவருடைய சாஸ்திரங்களை உருவாக்கி விடுகிறார்கள். மனிதர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த வேத சாஸ்திரங்களைப் படித்தல், யாகம் தவம் போன்றவைகளை செய்தல் இப்படி எது செய்தாலும் அது இறங்கும் கலையாகும். இது பகவான் வாக்கு. எதை எதை நீங்கள் செய்தீர்களோ அத்தனையும் நீங்கள் தங்களை விழ வைப்பதற்கே. உங்களுக்கு விழுவதற்கான வழி கிடைத் திருக்கிறது. ஏனென்றால் இறங்கும் கலையாகும். தூய்மையான உலகம் இருந்தது. இப்பொழுது அழுக்கான உலகம் ஆகிவிட்டது. அரைக்கல்பம் புதிய உலகம், அரைக்கல்பம் பழைய உலகமாகும். இப்படி 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் பகல் முடிவடைந்து, இரவு ஆரம்பமாகிறதோ அவ்வாறே பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு என பாடப்படுகிறது. விஷ்ணுவின் பகல் இரவு என்று கூறமாட்டார்கள். இது எவ்வளவு ஆழமான விˆயம்! பாபாவைத் தவிர வேறு யாருக்கும் புரிய வைக்க முடியாது. இப்பொழுது தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானத்தில் போக வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். இப்போது இன்னும் தங்களுடைய அரசாட்சி உருவாக வில்லை. பாபா எவ்வளவு எளிதாக குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார். சிவபாபாவை மட்டும் நினைக்க வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகவேண்டும். இந்த விˆயங்களைக் கூட அபலைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்ள முடியும். புதிய உலகம் மற்றும் பழைய உலகம். புதிய உலகத்தைப் படைக்கக்கூடியவர் பாபா ஆவார். புதிய உலகம் சொர்க்கமாக இருந்தது. பிறகு நரகத்தை யார் உருவாக்கினார். இராவணன். இந்த ரகசியம் கூட உங்களுக்கு புரிய வைக்கப் பட்டிருக்கிறது. எந்த ஒரு வித்வானும், பண்டிதர்களும் இதைப் புரிய வைக்க முடியாது. அவர்களோ உலகமே பொய், அனைத்தும் கற்பனை என கூறிவிட்டனர். ஒரு வேளை உலகமே உருவாகவில்லை என்றால் நீங்கள் எங்கே அமருவீர்கள் என்று அவர்களுக்கு, புரிய வைக்கலாம். இந்த உலகம் திரும்ப வருகிறது என்றால் அதைப் பற்றி முழுமையான ஞானம் வேண்டும் அல்லவா? ஞானம் இல்லாத காரணத்தால் அனைத்தும் பொய் என்று கூறி விடுகிறார்கள். யார் எதைச் சொன்னாலும் சத்தியம். நீங்கள் ஒரு விˆயத்திலேயே மகிழ்ச்சி அடைகிறீர்கள். பாபா மிகவும் நன்கு புரிய வைக்கின்றார். பாபா அரைக் கல்பத்திற்கு சொத்து கொடுத்துள்ளார். பிறகு இராவணன் தோல்வி அடைய வைக்கின்றான். இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது நாம் ஈஸ்வரனுடையவராகியிருக்கிறோம். மேலும் அவருடைய ஸ்ரீமத் படி நடந்து கொண்டிருக்கின்றோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இந்த சித்திரங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. அனைவரிடமும் பெரிய சித்திரம் இருக்க வேண்டும். பெரிய சித்திரங்களை வைத்துப் புரிய வைப்பது. நல்லது. சக்கரம் எதிரில் இருக்கிறது. சங்கமயுகம் கூட எதிரிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. கலியுகம் கருப்பாக அழுக்காக இருக்கிறது. அதில் இரும்பின் துரு பிடித்திருப்பதால் கருப்பாக இருக்கிறது. பாரதம் எவ்வளவு தங்க யுகமாக இருந்தது. இப்போது மீண்டும் அதை இரும்பு யுகத்திலிருந்து மாற்ற வேண்டும். அதனுடைய உருவாக்கமும் இதனுடைய அழிவும் ஏற்பட வேண்டும். பரம்பிதா பரமாத்மா திருமூர்த்தி என பாடப்பட்டிருக்கிறது. திருமூர்த்தியின் பொருள் கூட யாரும் புரிந்து கொள்ளவில்லை. சாலைக்கு கூட திருமூர்த்தி என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் பிரம்மா விஷ்ணு சங்கரர் தான் திருமூர்த்தியாவர். இந்த மூன்று தேவதைகளும் தனித் தனியாவர். இவர்கள் அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பரம்பிதா பரமாத்மா சிவன் செய்து செய்விப்பர் ஆவார். அவரை மறைத்துவிட்டனர். தேவதைகளுக்கும் மேலே அந்த நிராகாரர் பகவான் தான் இருக்கின்றார். பாபா எப்படி நிராகாரரோ ஆத்மாக்களாகிய நாமும் நிராகார் ஆவோம். நாம் இங்கே நடிப்பதற்காக வந்திருக்கின்றோம். லட்சுமி நாராயணனுடைய ஆட்சி இருந்தது. ஒருவருக்கு பின் ஒருவர் ஆட்சி செய்து கொண்டே வருகின்றனர். சொர்க்கத்தின் மகிமையைக் கூற வேண்டியிருக்கின்றது. பாரதம் எவ்வளவு செல்வந்த நாடாக இருந்தது. தூய்மை, அமைதி, சுகம் இருந்தது. ஒருபோதும் அகால மரணம் ஏற்படவில்லை, புதிய உலகமாக இருந்தது. பாபா தான் புதிய உலகத்தை படைத்தார். பாபா 16 கலைகள் உடையவராக மாற்றுகிறார். குழந்தைகளே மன்மனாபவ, என்னை மட்டும் நினையுங்கள் பாபா கூறுகின்றார். இது பகவான் வாக்காகும். அவர் பதீத பாவனர் என கூறப்படுகிறது. கிருஷ்ணருக்கு ஞானக்கடல் என்று கூறமுடியாது. பிறகு கீதையில் கிருஷ்ணருடைய பெயர் ஏன் போடப்பட்டு இருக்கிறது. யார் மூலமாவது காட்சி கிடைத்தது என்றால் இது கிருஷ்ணரின் ரூபம் என்பார்கள். உலகத்தில் பல்வேறு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். யார் மீதாவது பாவனை வந்து விடுகிறது. பிறகு அவர்களுடைய டாலரை செய்து கழுத்தில் போட்டுக் கொள்கிறார்கள். குருவின் டாலரை போட்டுக் கொண்டு குருவை நினைக்கிறார்கள். ஈஸ்வரன் சர்வ வியாபி அவ்வளவு தான். பிறகு குரு மற்றும் ஈஸ்வரனுக்குள் வித்தியாசம் இல்லை. இவ்வாறு பலர் இருக்கிறார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு பழைய உலகம் மற்றும் புதிய உலகத்தின் இரகசியத்தைப் புரிய வைத்திருக் கிறார். தந்தை புதிய உலகத்தை படைக்கிறார். இப்போது வந்து புதிய உலகத்தை ஸ்தாபனை செய்யுங்கள் அல்லது எங்களை தூய்மையாக்கி அழைத்துச் சொல்லுங்கள் என அனைவரும் பாபாவை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இரண்டு தாமங்கள் இருக்கின்றன. நிர்வாண தாமம் மற்றும் சுகதாமம். சந்நியாசிகள் முக்திக்காக ஞானத்தை அளிக்கின்றனர். ஜீவன் முக்திக்காக அளிக்க முடியாது. நீங்கள் தேவி தேவதா தர்மத்தினர். பூஜாரி ஆகியிருக்கிறீர்கள். பிறகு பூஜைக்குரியவர் ஆகவேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் சத்யுகத்தின் இலவரசன் ஆவார். அவருக்கு மகிமைகள் இருக்கின்றது. குமார், குமாரியினுடைய மகிமையும் இருக்கின்றது. ஏனென்றால் தூய்மை யாக இருக்கின்றார்கள் அல்லவா.? இல்லை எனில் கிருஷ்ணரை விட இராதைக்கு மகிமை நிறைய இருக்க வேண்டும். ஆனால் இது யாருக்கும் தெரியாது. முதலில் ராதை பிறகு கிருஷ்ணர் ஏன்? ராதை கிருஷ்ணன் என்கிறார்கள். கிருஷ்ணர் இராதை என்று ஒரு சிலர் தான் கூறுவார்கள். ஆண் குழந்தை சொத்துக்கு உரிமையாளர் ஆகிறார் என நினைக்கிறார்கள். ஆகவே கிருஷ்ணரின் மகிமை அதிகமாகும். இங்கே நீங்கள் அனைவரும் குழந்தைகள்.

எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி கல்ப கல்பத்திற்கும் அடைவீர்கள் என பாபா கூறுகின்றார். பாபா ஆத்மாக்களுடன் பேசிக் கொண்டு இருக்கின்றார். நீங்கள் முயற்சியினால் உயர்ந்த பதவி பெற முடியும். வெளிநாடுகளில் பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி யோடு கொண்டாடுகிறார்கள். இங்கே ஆண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஒவ்வொரு வரின் பழக்கமும் தனித்தனி. பாபா சொத்தைக் கொடுக்கிறார். பிறகு மாயை சாபம் கொடுக்கிறது என குழந்தைகளுக்கு புத்தியில் இருக்கிறது. அந்த இறை தந்தை சொர்க்கத்தைப் படைக்கக்கூடியவர் ஆவார். கிருஷ்ணருக்காக ஒருபோதும் கூறமுடியாது. பரமாத்மாதான் நரகத்தை சொர்க்கமாக மாற்றுகின்றார். சகஜ ஞானம் மற்றும் யோகத்தைக் கற்பிக்கின்றார். இவ்வாறெல்லாம் நீங்கள் சொற்பொழிவாற்றலாம். கீதையில் கிருஷ்ணரின் பெயரைப்போட்டு மாற்றி விட்டனர். கீதையின் பகவான் நிராகார் பரமாத்மா ஆவார். கிருஷ்ணர் கிடையாது. ஸ்ரீகிருஷ்ணரோ படைப்பு ஆவார். அவருக்கு கூட சொத்து தந்தையிடமிருந்து தான் கிடைத்தது. அது எப்படி? வந்தால் புரிய வைப்போம். ஏதாவது ஒரு விˆயத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றி புரிய வைத்துக்கொண்டே செல்லுங்கள். பழைய உலகம் புதிய உலகம் பற்றி புரிய வைத்தால் அதில் அனைத்தும் வந்து விடுகிறது. இப்போது பல தர்மங்கள் இருக்கின்றன. அதற்கிடையில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக்கொண்டு இருக்கின்றது. இந்த 5 விகாரங்களை விடுங்கள். எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. வீட்டில் கூட யார் மீதும் கோபப்படக்கூடாது. எந்த மாதிரியான காரியம் நாம் செய்கின்றோமோ நம்மைப் பார்த்து பிறகு மற்றவரும் செய்வார்கள் என்ற எண்ணம் வர வேண்டும். நாம் விகாரி ஆகினால் என்னைப் பார்த்து மற்றவரும் விகாரி ஆவார்கள். இப்போது தூய்மையாகுங்கள் என பாபா கட்டளை இடுகின்றார். மனைவியையும் தூய்மையாக்குங்கள். யார் மீதும் கோபப்படாதீர்கள். ஆண் படைக்கக்கூடியவர் என்றால் மனைவிக்கும் புரிய வைக்க வேண்டும். பிறகு ஒரு வேலை அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் என்ன செய்ய முடியும். தூய்மையான உலகத்திற்கு அதிபதி யாகலாம். நீங்கள் எப்படி 84 பிறவிகள் எடுத்து முதலில் நீங்கள் தூய்மையாக சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு ரஜோ தமோ ஆனீர்கள். என பாபா புரிய வைக்கின்றார். இப்போது மீண்டும் என்னை நினைத்தால் தூய்மையாகலாம். கீதையின் வார்த்தைகளைத் தான் பகவான் கூறிக்கொண்டு இருக்கின்றார். கீதையில் கிருஷ்ணரின் பெரை போட்டதால் அவருடைய முழு வாழ்க்கைக் கதையும் முடிந்து போகிறது. புரிய வைப்பதற்குக் கூட தைரியம் வேண்டும். பல குழந்தைகள் நாங்கள் சிவபாபாவை ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம். அவர் மூலமாகத்தான் நன்மை ஏற்பட வேண்டும். தவறு செய்கிறார்கள் என்றால் பாபா டைரக்ˆன் அளிப்பார். ஆனால் பல குழந்தைகள் உப்புத் தண்ணீர் போன்று ஆகிவிடுகிறார்கள். உப்புத் தண்ணீர் ஆகக்கூடாது. இப்படி செய்யாதீர்கள் என புரிய வைக்கப்படுகிறது. ஒரு சிலரோ ஒருவருக்கொருவர் மரியாதையும் கொடுப்பதில்லை. இப்படியும் இருக்கிறார்கள் தன்னையும் விட பெரியவர்களை நீ நீ என்று கூறி பேசுகிறார்கள். புத்திசாலி குழந்தைகளுக்கு சேவையைப் பற்றி மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். இன்னார் சென்டர் திறந்திருக்கிறார்கள் நாம் அவரிடத்தில் சென்று சேவை செய்ய வேண்டும். சொல்லாமல் யார் செய்கிறார் களோ அவர்கள் தேவதைகள். சொல்லி செய்தால் அவர்கள் மனிதர்கள். சொல்லியும் செய்யவில்லை என்றால்…….. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகத் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. எந்த காரியத்தை நாம் செய்கிறோமோ நம்மைப் பார்த்து மற்றவர்கள் செய்ய ஆரம்பித்து விடுவர். ஆகையால் ஒருபோதும் ஸ்ரீமத்திற்கு விபரீதமாக, விகாரங்களுக்கு வசமாகி எந்த ஒரு கர்மமும் செய்யக் கூடாது. எப்பொழுதும் இந்த விˆயத்தை நினைவில் வைக்க வேண்டும்.

2. சேவையில் ஆர்வம் இருக்க வேண்டும். சொல்லாமலே சேவையில் ஈடுபட வேண்டும். ஒருபோதும் தங்களுக்குள் உப்புத் தண்ணீர் போன்று இருக்கக் கூடாது.

வரதானம்:-

சங்கமயுகம் என்பதே ஆன்மீக மகிழ்ச்சியில் இருப்பதற்கான யுகமாக இருக்கிறது. ஆகையால் சதா ஆனந்தத்தில் இருங்கள். ஒருபொழுதும் சோர்வடைந்து விடாதீர்கள். எந்தவொரு பிரச்சனை அல்லது தேர்வில் சில நொடிகள் கூட வாடிவிடக்கூடாது. மேலும் அந்த நொடி கடைசி வினாடியாக வந்துவிட்டது என்றால் கடைசி மனநிலை தான் அடுத்த பிறவியின் நிலை ஆகும். ஆகையால் எவரெடியாக இருங்கள். எந்தவொரு பிரச்சனையும் சம்பூரணமானவராக ஆவதற்கு தடை ரூபமாக இருக்காது. நான் உலகத்தில் அனைவரையும் விட மதிப்பு வாய்ந்த. விசேˆ ஆத்மாவாக இருக்கிறேன் என்ற நினைவு எப்பொழுதும் இருக்க வேண்டும். என்னுடைய ஒவ்வொரு எண்ணம், வார்த்தை மற்றும் செயலும் விசேˆமானதாக இருக்கும், ஒரு நொடி கூட வீணாகது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top