29 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

29 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

28 June 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் யாரோடும் அதிக விவாதம் செய்யக் கூடாது, அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை மட்டும் கொடுங்கள்.

கேள்வி: -

எல்லையற்ற தந்தைக்கு நேரடிக் குழந்தைகளும் இருக்கின்றனர், மாற்றாந் தாய் குழந்தைகளும் இருக்கின்றனர். நேரடிக் குழந்தைகள் யார்?

பதில்:-

யார் தந்தையின் ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ, தூய்மைக்கான உறுதியான இராக்கி அணிந்திருக்கிறார்களோ, நான் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டே இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறதோ, இப்படிப்பட்ட நிச்சய புத்தியுடைய குழந்தைகள் தான் நேரடிக் குழந்தைகள் எனப்படுவர். யார் தன் மன வழிப்படி நடக்கிறார் களோ, சில நேரங்களில் நம்பிக்கை, சில நேரங்களில் சந்தேகம், உறுதிமொழி செய்தும் துண்டித்து விடுகிறார்களோ அவர்கள் மாற்றான் தாய் குழந்தைகள் எனப்படுவர். நல்ல குழந்தைகளின் கடமை என்ன வெனில் தந்தையின் ஒவ்வொரு வார்த்தையையும் (கட்டளை) ஏற்றுக்கொள்வதாகும். தந்தை கொடுக்கும் முதல் வழி – இனிய குழந்தைகளே! இப்போது உறுதிமொழி என்ற உண்மையான இராக்கி கட்டிக் கொள்ளுங்கள், விகார நடத்தையை முடித்து விடுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

விழித்தெழுங்கள் நாயகிகளே விழித்தெழுங்கள் …

ஓம்சாந்தி. குழந்தைகள் பாட்டின் பொருளைப் புரிந்து கொண்டீர்கள். புது உலகம், புது யுகம் மற்றும் பழைய உலகம், பழைய யுகம். பழைய உலகிற்குப் பிறகு புது உலகம் வருகிறது. புது உலகை பரம்பிதா பரமாத்மா தான் படைக்கின்றார், பிறகு அவரை ஈஸ்வரன் என்று கூறினாலும், பிரபு என்று கூறினாலும் சரியே. அவரது பெயரையும் அவசியம் கூற வேண்டும். பிரபு என்று மட்டும் கூறுவதனால் நினைவின் தொடர்பு எப்படி ஏற்படும்? யாரை நினைவு செய்வது? அவருக்கு பெயர், உருவம், தேசம், காலம் கிடையாது என்று மனிதர்கள் கூறுகின்றனர். அரே, அவருக்கு சிவன் என்ற பெயர் பாரதத்தில் மிகவும் பிரபல மானதாகும், அதனால் தான் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது, அவர் தந்தை என்று கூறப்படுகின்றார். தந்தையின் அறிமுகம் கிடைக்கும் போது தான் தந்தையிடத்தில் புத்தியை செலுத்த முடியும். பிறரிடம் அதிக விவாதம் செய்வதும் தவறாகும். முதன் முத-ல் எல்லையற்ற தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். அவர் மனித சிருஷ்டியை எப்படி? எப்போது? மற்றும் எப்படிப்பட்ட உலகை படைக்கின்றார்? லௌகீகத் தந்தை யானவர் சத்யுகத்தி-ருந்து க-யுக கடைசி வரை இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும் பரலௌகீகத் தந்தை தான் நினைவு செய்யப்படு கின்றார். அவர் பரந்தாமத்தில் இருக்கக் கூடிய தந்தை. பரந்தாமத்தை ஒருபோதும் சொர்கம் என்று புரிந்து கொள்ளாதீர்கள். சத்யுகம் இங்கு இருக்கக் கூடியதாகும்(வசிப்பிடம்). பரந்தாமம் என்பது பரம்பிதா பரமாத்மா மற்றும் ஆத்மாக்கள் வசிக்கக் கூடிய இடமாகும். சொர்க்கத்தை படைப்பவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தையாக இருந்தாலும் குழந்தைகளுடைய சொர்க்க இராஜ்யம் இப்போது ஏன் இல்லை? ஆம், சொர்க்க இராஜ்யம் ஒரு காலத்தில் அவசியம் இருந்தது. புது உலகம், புது யுகம் இருந்தது. இப்போது பழைய உலகம், பழைய யுகமாகும். தந்தை சொர்க்கத்தைப் படைத்திருந்தார். இப்போது நரகமாகி விட்டது. நரகமாக ஆக்கியது யார்? எப்போது ஆக்கினார்? மாயை, இராவணன் நரகமாக ஆக்கினானா? பாரதவாசிகளுக்கு இந்த ஞானம் கொடுப்பது மிகவும் எளிதாகும். ஏனெனில் பாரதவாசிகள் தான் இராவணனை எரிக் கிறார்கள், சரியான அர்த்தை மட்டும் புரிந்து கொள்வது கிடையாது. பக்தர்கள் அனைவரும் பகவானை நினைவு செய்கின்றனர். ஆனால் அவரைப் பற்றி அறியாத காரணத்தினால் அவர் சர்வவியாபி என்றும் பெயர், உருவமற்றவர், முடிவற்றவர் என்றும் கூறிவிட்டனர். அவரது எல்லையை அடைய முடியாது, அதனால் தான் அனைத்து மனிதர்களும் நம்பிக்கை யற்றவர்களாகி சோர்வடைந்து விட்டனர். சோர்வடைந்தே ஆக வேண்டும். அப்போது தான் அவர் வருவதற்கு, சொர்க்கத்தைப் படைப்பதற்கு நேரமும் இருக்கும். நான் மீண்டும் வந்திருக் கிறேன் என்று இப்போது தந்தை கூறுகின்றார். பக்தர்களுக்கு பகவானிடமிருந்து அவசியம் பலன் கிடைக்கும். பகவான் இங்கு வந்து தான் பலன் கொடுக்க வேண்டும். ஏனெனில் அனைவரும் துய்மையின்றி இருக்கின்றனர். அங்கு தூய்மை யற்றவர்கள் செல்ல முடியாது. ஆகையால் நானே வர வேண்டியிருக்கிறது. என்னை அழைக்கிறீர்கள். பக்தர்களுக்கு பகவான் தேவை. பகவானிடமிருந்து என்ன கிடைக்கும்? முக்தி, ஜீவன் முக்தி. ஆனால் அனைவருக்கும் கொடுக்கமாட்டார். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குக் கொடுப்பார். கோடிக் கணக்கான ஆத்மாக்கள் ஆஸ்தி அடைவார்களாக என்ன? யாராவது புதியதாக வருகின்றனர் எனில் தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர், நாம் அனுபவசாலிகள் என்று கூறுங்கள். நாம் இப்போது பகவானைத் தேடி அலைவது கிடையாது. அவர் அவருக்கான நேரத்தில் வர வேண்டி யிருக்கிறது. நாமும் முன்பு மிகுந்த தேடுதலில் இருந் தோம், ஆனால் அடையவில்லை. ஜபம், தவம், தீர்த்த யாத்திரை போன்றவைகளை செய் தோம், அதிகமாகத் தேடினோம், ஆனால் கிடைக்கவில்லை. அவர் அவருக்கான நேரத்தில் பரந்தாமத்தி-ருந்து வருவார். ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தினர் 84 பிறவிகளும் எடுக்க வேண்டியிருக்கிறது. 5 வர்ணங்களும் மிகவும் பிரபலமாகும். இப்போது சூத்ர வர்ணமாகும், இதற்குப் பிறகு பிராமண வர்ணம். வர்ணங்களை வைத்தும் நன்றாகப் புரிய வைக்க வேண்டும். விராட ரூபத்திலும் வர்ணங்கள் உள்ளன. பிராமணர்களுக்கான வர்ணமும் உள்ளன, அவர்களுக்குத் தெரியாது. ஆக முதன் முத-ல் தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர், நாம் பிரம்மா குமார், குமாரிகள் என்ற அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தை வந்து பிராமணர்களைப் படைக்கின்றார், அப்போது தான் நாம் தேவதைகளாக ஆவோம். பிரஜாபிதா பிரம்மா என்று பெயர் இருக்கிறது. ஆக பிரம்மாவின் வாயின் மூலம் பிராமணர்களைப் படைக்கின்றார். பிரம்மாவின் தந்தை சிவபாபா. ஆக இது ஈஸ்வரிய குலமாகும். எவ்வாறு கிருப்லானி குலம், வாஸ்வானி குலம் இருக்கிறதோ, அதே போன்று இது உங்களது ஈஸ்வரிய குலமாகும். நீங்கள் அவரது வம்சத்தினர்கள், உண்மையான பிராமணர்கள், தூய்மைக்கான உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள். அனைவரும் குழந்தைகளாக இருந்தாலும் கூட சிலர் நேரடிக் குழந்தைகளாக இருக்கின்றனர், சிலர் மாற்றாந் தாய் குழந்தை களாக இருக்கின்றனர். நேரடிக் குழந்தைகள் என்றால் அவர்கள் தூய்மைக்கான இராக்கி கட்டியிருப்பர். இராக்கி கட்டும் விழாவும் இருக்கிறது அல்லவா! அனைத்தும் இந்த சங்கமத் திற்கான விசயமாகும். தசராவும் சங்கமயுகத்திற்கானது. விநாசத்திற்குப் பிறகு உடனேயே தீபாவளி வருகிறது, அனைவரின் தீபமும் ஏற்றப்பட்டு விடுகிறது. க-யுகத்தில் அனைவரின் ஆத்ம தீபமும் அணைந்திருக்கிறது.

தந்தையை படகோட்டி, தோட்டக்காரன் என்றும் கூறுகின்றனர். பிரம்மா, விஷ்ணு, சங்கரை படகோட்டி அல்லது தோட்டக்காரன் என்று கூறமாட்டார்கள். தந்தை வந்து தனது தோட்டத்தில் தனது குழந்தைகளைப் பார்க்கின்றார். அதில் சிலர் ரோஜவாக, சிலர் -ல்- மலராக இருக்கின்றர். ஒவ்வொருவரிடத்திலும் ஞான நறுமணம் இருக்கிறது. நீங்கள் இப்போது முள்ளி-ருந்து மலராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இது முட்கள் நிறைந்த காடாகும். எவ்வளவு சண்டை, சச்சரவுகள் இருக்கின்றன, ஏனெனில் அனைவரும் நாஸ்திகர்களாக, செல்வமற்றவர்களாக இருக்கின்றனர். செல்வந்தர் இருந்தால் தான் அவர் வழிகளைக் கூறி செல்வந்தர்களாக ஆக்க முடியும். அந்த ஞான செல்வந்தரை யாரும் அறியவில்லை. ஆக செல்வந்தர் அவசியம் வர வேண்டும் அல்லவா! தந்தை வந்து செல்வந்தர்களாக ஆக்குகின்றார். ஒரே தர்மம், ஒரே இராஜ்யம், தூய்மை தேவை என்று மனிதர்களும் விரும்புகின்றனர். சத்யுகத்தில் ஒரே தர்மம் இருந்தது அல்லவா! இப்போது துக்கதாமம் ஆகும். இப்போது நீங்கள் பிராமண வர்ணத்தினராக மாறி இருக்கிறீர்கள், பிறகு தேவதா வர்ணத்தில் செல்வீர்கள். பிறகு இந்த அசுத்தமான உலகில் வரவேமாட்டீர்கள். பாரதம் அனைத்தையும் விட உயர்ந்த கண்டமாகும். ஒருவேளை கீதையை கண்டமாக்கவில்லையெனில் இதை பாரதம் என்று யார் கூறுவர்? சிவன் கோவிலுக்கு செல்கின்றனர் அல்லவா! அது எல்லையற்ற தந்தையின் கோவில். ஏனெனில் தந்தை தான் சத்கதி கொடுக்கும் வள்ளல். செல்வமற்றவர்களை (அநாதைகளை) வந்து செல்வந்தர்களாக ஆக்குகின்றார். இந்த விசயங்களை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. மற்ற அனைவரும் பக்தி கற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். அங்கு ஞானத்திற்கான விசயம் கிடையாது. ஞானக் கடல், சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் ஆவார். சத்கதிக்காக மனிதர்கள் ஒருபோதும் குருவாக ஆக முடியாது. அந்த வேறு கலையை கற்றுக் கொடுப்பவரை குரு என்று கூறிவிடுகின்றனர். ஆனால் அந்த குருவினால் முழு உலகிற்கும் சத்கதி கொடுக்க முடியாது. எனக்கு சாதுவிடமிருந்து அமைதி கிடைக்கிறது என்று கூறலாம், ஆனால் அல்ப காலத்திற்கானது. ஆனால் சந்நியாசிகள் சொர்க்கத்தின் சுகம் காக்கையின் எச்சிலுக்கு சமம் என்று கூறகின்றனர். பிறகு சந்நியாசி களிடமிருந்து அடையக் கூடிய அமைதியும் காக்கையின் எச்சத்திற்குச் சமமாகத் தான் இருக்கும். முக்தி கொடுப்பது இல்லை அல்லவா! முக்தி மற்றும் ஜீவன்முக்தியின் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். ஸ்ரீகிருஷ்ணரின் மீது அனைவருக்கும் மிகுந்த அன்பு இருக்கிறது, ஆனால் அவரை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. இப்போது தந்தை புரிய வைக்கின்றார் – சத்யுகம் கிருஷ்ணபுரியாக இருந்தது, இப்போது கம்சபுரியாக ஆகிவிட்டது. இப்போது தந்தை வந்து மீண்டும் கிருஷ்ணபுரியாக ஆக்குகின்றார். அரைக் கல்பத் திற்குப் பிறகு மீண்டும் இராவண இராஜ்யமாக ஆகிவிடுகிறது. அரைக் கல்பம் சுகம், அரைக் கல்பம் துக்கம். சுகத்திற்கான காலம் அதிகம், ஆனால் சுகம்-துக்கத்தின் விளையாட்டு நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது. இது சிருஷ்டிச் சக்கரம் அல்லது வெற்றி தோல்விக்கான விளையாட்டு என்று கூறப்படுகிறது. நாம் மோட்சம் அடைந்து விடுவோம் என்று சந்நியாசிகள் நினைக்கின்றனர். ஆனால் யாரும் மோட்சம் அடையவே முடியாது. இந்த இரகசியத்தை யாரும் அறியவில்லை. முக்தி மற்றும் ஜீவன்முக்தியை தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. நீங்கள் தங்களது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! இங்கு பாருங்கள் – துக்கமோ துக்கம் தான் இருக்கிறது. இப்போது நாம் தந்தையின் உதவியினால் சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பிறகு நாமே எஜமானர்களாகி இராஜ்யம் செய்வோம். மற்ற அனைவரையும் முக்திதாமத்திற்கு அனுப்பி வைத்து விடுவோம். அவர்கள் மீண்டும் தங்களுக்கான நேரத்தில் வருவார்கள். அவர்களும் இறங்கும் போது முத-ல் சுகமாக இருப்பார்கள், பிறகு துக்கம் அனுபவிப்பார்கள். பக்தி மார்க்கத்தில் ஜபம், தவம் போன்றவைகள் செய்கின்றனர் அல்லவா! ஒருவரை நினைவு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதற்கு தேக அபிமானத்தை விட வேண்டியிருக்கிறது, ஆனால் யாரும் விடுவது கிடையாது. இப்போது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தந்தை குழந்தைகளிடத்தில் தான் உரையாடல் செய்கின்றார். குழந்தைகளிலும் சிலர் நேரடிக் குழந்தைகளாக, சிலர் மாற்றாந் தாய் குழந்தைகளாக இருக்கின்றனர். மாற்றாந் தாய் குழந்தை கள் என்றால் அவர்கள் தூய்மைக்கான இராக்கி அணிந்திருக்கமாட்டார்கள். நேரடிக் குழந்தை களுக்கு நான் ஆஸ்தியடைந்தே விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கும். மற்ற சிலர் தோல்வி யடைந்து விடுகின்றனர். பக்குவமற்றவர்கள், பக்குவமானவர்கள் என்று வரிசைக்கிரமம் இருக்கிறது. பக்கவாக இருப்பவர்கள் மனைவி, குழந்தை போன்ற அனைவரையும் அழைத்து வருவார்கள், தனக்கு சமம் ஆக்குவார்கள். அன்னம்-கொக்கு ஒன்றாக சேர்ந்து இருக்க முடியாது. தந்தையிடத்தில் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அனைவரையும் தூய்மையாக ஆக்குவது – இது தந்தையின் காரியமாகும். அதனால் தான் இரண்டு சக்கரமும் கூடவே செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். மனைவி மற்றும் கணவன் சேர்ந்தே வருகின்றனர் எனில் வண்டி நன்றாக செல்லும். நாம் இருவரும் தூய்மைக்கான கங்கணம் கட்டிக் கொள்ளலாம். இப்போது நாம் தூய்மையாக ஆகி தந்தை யிடமிருந்து அவசியம் ஆஸ்தி அடைவோம். பிரம்மாவின் குழந்தைகளாகி ஆகிவிட்டீர்கள் எனில் சகோதரன் சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள். பிறகு பாவ காரியம் ஏற்படவே முடியாது. விகாரத்தில் செல்ல முடியாது. ஈஸ்வரிய சட்டம் இவ்வாறு கூறுகிறது. விஷம் குடிப்பது மற்றும் பருக வைக்கும் எண்ணத்தையே விட்டு விட வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். நாம் ஒருவரையொவர் ஞான அமிர்தம் பருக வைப்போம். நாமும் தந்தை யிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி அடைவோம். நல்ல குழந்தையின் காரியம் தந்தை கூறுவதை ஏற்றுக் கொள்வதாகும். யார் ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்கள் பக்குவமற்றவர்கள். பக்குவமற்ற குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப்பதில் தந்தை அவசியம் தள்ளிப்போடுவார். பிராமணர்களாகிய நீங்கள் தேவதைகளாக ஆகக் கூடியவர்கள், ஆகவே நீங்கள் உங்களது மனைவிக்கும் ஞான அமிர்தம் பருக வைக்க வேண்டும். சிறு குழந்தை களுக்கு மூக்கைப் பிடித்து மருந்து சாப்பிட வைப்பார் கள் அல்லவா! கணவன் தான் உனது குரு, ஈஸ்வரன் என்று நீ ஏற்றுக் கொள்கிறாயா? என்று மனைவியிடம் கேளுங்கள். அப்படியானால் அவசியம் நான் உனக்கு சத்கதி கொடுப்பேன் அல்லவா! கணவன் உடனேயே மனைவியை தனக்குச் சமமாக ஆக்கி விட முடியும், மனைவி கணவனை உடனேயே ஆக்கி விட முடியாது. அதனால் தான் அபலைகளின் மீது அதிகக் கொடுமைகள் ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக அடி உதை வாங்க வேண்டியிருக்கிறது. அரசாங்கமும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறுவர். குழந்தைகளே! ஸ்ரீமத் படி நடந்தால் நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள் என்று தந்தை கூறுவார். ஒருவேளை பக்குவமற்றவர்களாக ஆகின்ற போது ஆஸ்தியை இழந்து விடுவீர்கள். அங்கு லௌகீக தந்தையிடமிருந்து குழந்தை எல்லைக்குட் பட்ட ஆஸ்தி அடைகிறது. இங்கு நல்ல குழந்தைகள் எல்லையற்ற தந்தையிட மிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைகின்றனர். இது துக்கதாமம் என்று கூறப்படுகிறது. இங்கு நீங்கள் தங்கம் அணிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் யாசிப்பவர் களாக (பிச்சைக்காரர்களாக) இருக்கிறீர்கள். அடுத்த பிறவியில் உங்களுக்கு தங்க மாளிகை கிடைக்கும். இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகை கிடைக்கும். நாம் இப்போது தந்தை யிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அடைந்து கொண்டிருக் கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் பாவனையின் பலன் கொடுக்கிறேன். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா எங்கிருக்கிறது? குருநானக்கின் ஆத்மா எங்கிருக்கிறது? என்பதை அவர்கள் அறிய வில்லை. அவர்கள் அனைவரும் மறுபிறவி எடுத்து எடுத்து தமோபிரதானம் ஆகி விட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களும் சிருஷ்டிச் சக்கரத்திற்குள் தான் இருக்கின்றனர், அனைவரும் தமோபிரதானமாக ஆகியே தீர வேண்டும். கடைசியில் தந்தை வந்து மீண்டும் அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) இப்போது தூய்மைக்கான கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தேக அபிமானத்தை விடுத்து விகார நடத்தையை மாற்ற வேண்டும்.

2) தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து நல்ல குழந்தையாக ஆக வேண்டும். ஞான அமிர்தம் பருக வேண்டும் மற்றும் பருக வைக்க வேண்டும். தனக்குள் ஞான நறுமணத்தை தாரணை செய்து நறுமணமுள்ள மலராக ஆக வேண்டும்.

வரதானம்:-

மாயா வருவதற்கான என்னென்ன வாசல்கள் உள்ளனவோ, அவை அனைத்திற்கும் நினைவு மற்றும் சேவை என்ற இரட்டைப் பூட்டுப் போட்டு விடுங்கள். நினைவில் இருக்கும் போது மற்றும் சேவை செய்யும் போதும் கூட மாயா வருகிறது என்றால் அவசியம் நினைவு அல்லது சேவையில் ஏதோ குறை உள்ளது. எதில் சுயநலம் இல்லையோ, அது தான் யதார்த்த சேவை ஆகும். சுயநலமற்ற சேவை இல்லை என்றால் பூட்டு தளர்வாக உள்ளது (சரியாகப் பூட்டப் படவில்லை). மேலும் நினைவும் கூட சக்திசாலியாக இருக்க வேண்டும். அத்தகைய இரட்டைப் பூட்டு இருந்தால் தடையற்றவராகி விடுவீர்கள். பிறகு ஏன், என்ன என்ற வீணான ஃபீலிங்கில் இருந்து விடுபட்ட ஃபீலிங் ப்ரூஃப் (வருத்த உணர்வற்ற நிலைக்கு நிரூபணமான) ஆத்மாவாக இருப்பீர்கள்.

சுலோகன்:-

மாதேஸ்வரிஜியின் மகாவாக்கியம்

உண்மையில் ஞானத்தைப் பெறுவது என்பது ஒரு விநாடியின் காரியமாகும். ஆனால் மனிதர்கள் ஒரு விநாடியில் புரிந்து கொண்டால் அவர்களுக்கு ஒரு விநாடி தான் பிடிக்கும் – தங்களின் சுயதர்மத்தை மட்டும் அறிந்து கொள்ள வேண்டும் — அதாவது நான் உண்மை யில் சாந்த சொரூப ஆத்மா மற்றும் பரமாத்மாவின் குழந்தை. இப்போது இதைப் புரிந்து கொள்வ தானால் ஒரு விநாடியின் விஷயம் தான். ஆனால் இதில் நிச்சயம் செய்வதில் சிலர் ஹடயோகம், சிலர் ஜபம் தபம், ஏதாவது ஒரு விதமான சாதனை செய்வது இதற்கெல்லாம் எந்த ஒரு அவசியமும் இல்லை. தனது ஒரிஜினல் ரூபத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். மற்றப்படி நாம் இவ்வளவு முயற்சி செய்கிறோம் என்றால் அது எதற்காக? இப்போது அது பற்றி புரிய வைக்கப் படுகிறது — நாம் இந்த விஷயத்திற்காகத் தான் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறோம். எப்படி நமது நடைமுறை வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்றால் தனது இந்த சரீர உணர்வில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். ஒரிஜினலாக ஆத்ம உணர்வு ரூபத்தில் நிலைத்திருப்பதில் அல்லது இந்த தெய்வீக குணங்களை தாரணை செய்வதில் முயற்சி அவசியம் தேவைப் படுகிறது. இதில் நாம் ஒவ்வொரு சமயம், ஒவ்வோரடி மீதும் கவனமாக இருக்கிறோம். இப்போது எவ்வளவு நாம் மாயாவிடம் எச்சரிக்கையாக இருக்கிறோமோ, அப்போது எவ்வளவு தான் குறைகள் அல்லது நஷ்டங்கள் முன்னால் வந்தாலும் அவை நம்மை எதிர்கொள்ள முடியாது. எப்போது நம்மை நாமே மறந்து விடுகிறோமோ, அப்போது மாயா நம்மை எதிர்கொள்ளும். இது நடைமுறை வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான குறிக்கோள். மற்றபடி ஞானமோ ஒரு விநாடியின் விஷயம் தான். ஓம் சாந்தி.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top