25 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

June 24, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! உண்மையான தந்தையிடம் உங்களது உண்மையிலும் உண்மையான கணக்கைக் கொடுங்கள். ஒவ்வொரு வி‘யத்திலும் ஸ்ரீமத் பெற்றுக் கொண்டே இருங்கள். இதில் தான் உங்களுடைய நன்மை உள்ளது.

கேள்வி: -

இப்பொழுது நீங்கள் எந்த ஒரு வியாபாரத்தை எந்த ஒரு விதி மூலமாக செய்கிறீர்கள்?

பதில்:-

சமர்ப்பண புத்தி ஆகி. பாபா நான் உங்களுடையவன் ஆவேன். இந்த உடல், மனம், பொருள் அனைத்தும் உங்களுடையதாகும் என்று கூறுகிறீர்கள். பாபா பிறகு கூறுகிறார் – குழந்தைகளே சொர்க்கத்தின் அரசாட்சி உங்களுடையது என்று. இது தான் வியாபாரமாகும். ஆனால் இதில் உண்மையான உள்ளம் வேண்டும். நிச்சயம் கூட பக்குவ மானதாக வேண்டும். நமது உண்மையிலும் உண்மையான கணக்கை தந்தைக்கு கொடுக்க வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

தந்தையும் நீயே, தாயும் நீயே .. .

ஓம் சாந்தி. தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்பொழுது பிரம்மா குமார் குமாரிகளாகிய நாம் ஸ்ரீமத்தினுடைய பொருளை அறிந்து விட்டுள்ளோம் என்பதை குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். சிவபாபாவின் வழிப்படி நாம் மீண்டும் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். இது உங்கள் ஒவ்வொரு வருக்கும் தெரியும் – உண்மையில் கல்ப கல்பமாக பரமபிதா பரமாத்மா வந்து பிரம்மா மூலமாக குழந்தைகளைத் தத்து எடுக்கிறார். நீங்கள் தத்து எடுக்கப்பட்ட பிராமணர்கள் ஆகிறீர்கள். தத்து எடுக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். மறைந்து போய் விட்டிருக்கும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்ரீமத்படி நாம் மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறோம். மேலும் முந்தைய கல்பத்தைப் போலவே என்னவெல்லாம் செயல்கள் நடக் கின்றனவோ, அறிவுரைகள் கிடைக்கின்றனவோ அதன்படி, முந்தைய கல்பத்தைப் போல நாம் நாடகத்தின் பிரகாரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் ஸ்ரீமத்படி நமது தெய்வீக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துள் ளோம். யார் யார் எந்த அளவு முயற்சி செய்வார்களோ – ஏனெனில் சேனையில் ஒரு சிலர் சதோபிரதான முயற்சியாளர்கள், ஒரு சிலர் சதோ, ஒரு சிலர் ரஜோ முயற்சியாளர்கள் ஆவார்கள். ஒரு சிலர் யானைப் படை, ஒரு சிலர் குதிரைப் படை, ஒரு சிலர் காலாட்படை என்று இந்த பெயர்கள் கொடுத்துள்ளார்கள். குழந்தை களுக்கு குஷி ஏற்படுகிறது. நாம் மறைமுகமாக இருக்கிறோம். ஸ்தூலமான ஆயுதங்கள் எதையும் பயன்படுத்த வேண்டிய தில்லை. தேவிகளிடம் காண்பிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் ஞானத்தின் அஸ்திர சஸ்திரங் களைக் குறிப்பதாகும். ஆயுதங்களினுடையது ஸ்தூலமான புஜபலம் ஆகிறது. ஸ்தூல வாள்கள் ஆகியவற்றை எடுப்பதில்லை என்பது மனிதர்களுக்குத் தெரியவே தெரியாது. இதற்கு ஞான அம்பு என்று கூறப்படுகிறது. சதுர்புஜத்தில் காண்பிக்கப்பட்டுள்ள அலங்காரங் களில் கூட ஞானத்தின் சங்கு இருக்கிறது. ஞானத்தின் சக்கரம் இருக்கிறது. ஞானத்தின் கதாயுதம் இருக்கிறது. எல்லாமே ஞானத்தின் விˆயங்கள் ஆகும். இல்லறத்தில் இருக்கை யிலும் தாமரை மலர் போல இருங்கள் என்றும் புரிய வைக்கப் படுகிறது. எனவே தாமரை மலர் கூட கொடுக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் நடைமுறையில் செயலில் இருக்கிறீர்கள். தாமரை மலர் போல இல்லற விவகாரங்களில் இருந்தபடியே உங்கள் புத்தியில் ஞானம் உள்ளது. நாம் ஒரு தந்தையை நினைவு செய்கிறோம். இது கர்மயோக சந்நியாசமாகும். தங்களது படைப்பையும் பராமரிக்க வேண்டும். முதலில் துக்கத்தினுடைய விவகாரங்கள் தான் இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஒருவருக் கொருவர் துக்கம் தான் கொடுத்துக் கொண்டு இருந்தீர்கள். இங்கு இருக்கும் சுகமோ காக்கை எச்சத்தைப் போல சீ-சீ ஆகும். விகாரத்தின் புழுக்களாக ஆகி விட்டுள்ளார்கள். இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். தந்தை நம்மை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். இப்பொழுது நாம் நரகத்திற்கு அதிபதியாக உள்ளோம். நரகத்தில் என்ன சுகம் இருக்கும்? குழந்தைகளாகிய நீங்கள் இதைக் கேட்கிறீர்கள் மற்றும் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை குழந்தைகளுக்கு இந்த ஞானத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக் கிறார். குழந்தைகளுக்காகத் தான் சொர்க்கம் ஆகும். குழந்தைகள் தான் நல்ல முறையில் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப புரிந்து கொள்ளக் கூடும். முதன் முதலிலோ நிச்சயம் வேண்டும். நிச்சயபுத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள். நிச்சயம் உறுதியாக இருந்தது என்றால், அவர்கள் நிச்சயத்தில் தான் இருப்பார்கள். ஒன்று சிவபாபாவின் நினைவு இருக்கும். மேலும் அளவு கடந்த குஷி ஏறி இருக்கும். சமர்ப்பண புத்தியாகக் கூட இருப்பார்கள். பாபா நான் உங்களுடையவன் ஆவேன் என்று கூறுகிறார்கள். இந்த உடல், மனம், பொருள் எல்லாமே உங்களுடையது ஆகும். சொர்க்கத்தின் அரசாட்சி உங்களு டையது என்று தந்தையும் கூறுகிறார். பாருங்கள் வியாபாரம் எப்படி இருக்கிறது? உண்மையான குழந்தை ஆக வேண்டி இருக்கும். குழந்தைகளிடம் என்ன இருக்கிறது என்று தந்தைக்கு எல்லாமே தெரிய வேண்டும். நான் என்ன கொடுக்கிறேன்? உங்களிடம் என்ன இருக்கிறது? தந்தை நல்ல முறையில் புரிய வைக்கிறார். நான் ஏழைப் பங்காளன் ஆவேன். செல்வந்தர், பணக்காரர்களுக்கோ சமர்ப்பணமாக வேண்டுமென்றால், அவர் களின் இதயம் சுருங்கி விடுகிறது. ஏழைகள் சட்டென்று கூறு கிறார்கள் அல்லவா? வியாபாரம் செய்கிறார்கள். தொழில் ஆகியவை செய்பவர்கள் தங்களது சம்பாத்தியத்திலிருந்து ஓரிரண்டு பைசா அல்லது 4 பைசா எடுத்து வைப்பார்கள். யார் தானம் செய்யும் ஆர்வம் உள்ளவர் களாக இருப்பார்களோ அவர்கள் தர்மத்திற்கென்று அதிகமாக எடுத்து வைப்பார்கள். எது செய்தாலும் ஈசுவர அர்ப்பணம் என்பார்கள். எனவே அல்ப கால சுகம் அடுத்த பிறவியில் கிடைக்கிறது. யாராவது கல்லூரி, சத்திரம், ஆஸ்பத்திரி ஆகியவை கட்டினார்கள் என்றால், அடுத்த பிறவியில் அதன் பலன் கிடைக்கிறது. புண்ணிய ஆத்மா ஆகிறார்கள் அல்லவா? அவர்களுடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்லூரியில் நல்ல முறையில் படிப்பார்கள். அது கூட எல்லாமே நான் தான் கொடுக்கிறேன். சாட்சாத்காரம் கூட நான் தான் செய்விக் கிறோன். ஒவ்வொருவருடைய கணக்கு வழக்கு கூட என்னிடம் உள்ளது. நாடகப்படி முன்கூட்டியே பொருந்தி உள்ளது. பணம் அதிகமாக உள்ளது என்றால், கோவில் ஆகியவை கூட கட்டுகிறார்கள். அது தர்மத்திற்கென்று எடுத்து வைப்பது ஆகும். தங்களது தொழிற்சாலை ஆகியவற்றின் சம்பாத்தியத்திலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து கோவில் கட்டுகிறார்கள். ஒரு சிலர் பிறகு கல்லூரி ஆகியவை கட்டுகிறார்கள். இறைவன் பெயரில் தான் செய்கிறேன் என்பார்கள். ஆக இறைவன் பதிலுக்கு கொடுப்பார். நிறைய மனிதர்கள் நாங்கள் பலன் எதிர்பாராத சேவை செய்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் பலனற்ற செயல் எதுவுமே கிடையாது. நிஷ்காம் – சுயநலமற்ற என்ற வார்த்தை எங்கிருந்து வெளிப் பட்டது? பலனற்ற சேவை ஆக முடியாது என்று தந்தை புரிய வைத்துள்ளார். பலன் அவசியம் கிடைக் கிறது. இப்பொழுது நீங்கள் இல்லற விவகாரங்களில் இருக்கவே வேண்டும். உத்தியோகம் செய்ய வேண்டும். பராமரிக்க வேண்டும். குழந்தைகள் தங்களது கணக்கை தந்தைக்குக் கொடுக்க வேண்டும். எவ்வளவு மிச்சம் ஆகிறது. நல்லது நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள். வருவாய் ஆகியவை ஒன்றுமில்லை. உங்களது படைப்பின் பாலனை கூட முழுமையாக செய்ய முடியாமல் இருக்கிறீர்கள். நல்லது. நீங்கள் ஒரு பைசா கொடுங்கள் என்று தந்தை கூறுவார். இது தான் உங்களுடைய 21 பிறவிகளுக்கான சம்பாத்தியமாகும். அது அல்ப கால சுகத்திற்காக இருந்தது. இது 21 பிறவிகளுக்காக உள்ளது. மேலும் இது நேரிடையானது. நீங்கள் விதை விதைக்க வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். குசேலர் ஒரு பிடி அரிசி கொடுத்தார். 21 பிறவிகளுக்கு அரண்மனை கிடைத்து விட்டது. ஏனெனில், ஏழையாக இருந்தார். செல்வந்தர்கள் ஒரு பிடி வைரம் கொடுத்தாலும் விˆயம் ஒன்றே தான். தந்தை எதுவும் கூறுவதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென்று வழிகூறுவார். நீங்கள் இவ்வளவு செய்யுங்கள். செலவு எல்லாம் எப்படி நடக்கிறது என்று கேட்கவும் செய்கிறார். சிறிதளவு தான் மிஞ்சுகிறது என்றால், அதற்கேற் பவே ஆலோசனை அளிப்பார். தேவைப்படும் பொழுது பயன்படட்டும். இவ்வளவு செய்யுங்கள் என்று ஆலோசனை கொடுப்பார். மற்றது நான் பொறுப்பாளி என்பார். நல்லது, வீட்டில் ஏதாவது கூடம் அமையுங்கள். அதில் பெண் குழந்தைகள் வந்து சேவை செய்வார்கள். மருத்துவமனைகள் மிகவும் பெரிய பெரியதாக அமைக்கிறார்கள். இதைக் கூட பெரியதாக அமைக்க வேண்டி வரும். நிறைய பேர் வருவார்கள். அதிகமாக பைசா இருக்கிறது என்றால், இந்த ஆஸ்பத்திரி, கல்லூரி திறவுங்கள். எப்படி எப்படி கிராமமோ அப்படி அப்படி பொருட்கள். எத்தனை குழந்தைகள் வந்து (ஹெல்த் வெல்த்) ஆரோக்கியம் மற்றும் செல்வத்தின் ஆஸ்தி எடுப்பார்கள். இப்பொழுது இப்படி இப்படி செய்வதால் உங்களுக்கு இராஜ்யம் கிடைக்கும். அநேகருக்கு நன்மையாகும். 21 பிறவிகளுக்கு நீங்கள் இது போல ஆகி விடுவீர்கள். குழந்தைகளையோ முழுமையாகப் பராமரிக்க வேண்டும். சாது சந்நியாசிகளிடம் இது போன்ற விˆயங்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு என்ன கொடுக்கிறார்களோ அதை தங்களுடையதே காரியத்தில் ஈடுபடுத்துவார்கள். தங்களுடைய சந்நியாச குலத்தின் விருத்தி செய்வார்கள். துறவிகளின் மடம் ஆகியவை அமைப்பார்கள். இங்கு யார் எந்த அளவு உழைப்பு செய்வார்களோ அந்த அளவிற்கு சிம்மாசனத்திற்கு அதிபதி ஆவார்கள். இந்த ஆஸ்தி கிடைக்கிறது. யாரெல்லாம் குழந்தைகளோ அவர்கள் அனைவருக் கும் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. குழந்தைகளே ! நீங்கள் என்னை மறந்து விட்டுள்ளீர்கள் அல்லவா? என்று மட்டுமே தந்தை கூறுகிறார். நீங்கள் எவ்வளவு வழி தவறி விட்டுள்ளீர்கள். கல் மண் ஆகியவற்றில் போய் தேடித் தேடி தங்களது கால் களையே களைப் படையச் செய்துக் கொண்டு விட்டீர்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. மீண்டும் அவ்வாறே ஆகும். சூரிய வம்சத்தினர் வந்தார்கள், சந்திர வம்சத்தினர் வந்தார்கள். பிறகு எப்படி விருத்தி ஆகிக் கொண்டே சென்றது. பிறவி எடுத்து கொண்டே சென்றார்கள். இவை எல்லாம் உங்கள் புத்தியில் உள்ளது. பக்தி மார்க்கத்தில் கூட பலன் அளிப்பவன் நானே ஆவேன். கல்லினால் ஆன ஜட விக்கிரகம் என்ன கொடுக்கும். இப்பொழுது நீங்கள் சூத்திர வர்ணத் திலிருந்து பிராமண வர்ணத்தினுடையவராக ஆகி உள்ளீர்கள்.

நாம் ஸ்ரீமத் படி மீண்டும் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். முந்தைய கல்பத்திலும் செய்திருந் தோம். மீண்டும் 84 பிறவிகளின் சக்கரத்தில் வந்து விட்டுள்ளோம். மற்றபடி இஸ்லாமிய மதம், புத்த மதம் ஆகிய இவை அனைத்தும் உப காட்சிகள் ஆகும். நாடகம் முழுவதும் பாரதத்தின் மீது தான் உள்ளது. நீங்கள் தான் தேவதைகளாக இருந்தீர்கள். நீங்கள் தான் அசுரர்களாக ஆகி உள்ளீர்கள். இராவணனின் பிரவேசம் ஆகியதால் வாம மார்க்கத்தில் விழுந்து நீங்கள் விகாரி ஆகி விடுகிறீர்கள். ப்ரஷ்டாச்சாரி நிலை (இழிந்த நிலை) ஆரம்பமாகி விடுகிறது. ப்ரஷ்டாச்சாரம் கூட முதலில் சதோபிரதானமாக, பிறகு சதோ ரஜோ தமோ ஆகிறது. இச்சமயம் முழு விருட்சமும் பட்டுப் போன நிலையை அடைந்து விட்டுள்ளது என்று தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது இது அழியத் தான் போகிறது. எந்த தேவதா தர்மம் இல்லையோ அது மீண்டும் ஸ்தாபனையாக வேண்டியுள்ளது. கல்ப கல்பமாக ஸ்தாபனை ஆகிறது. ஆனால் இதன் வர்ணனை முறைப்படி இல்லை. முதல் நம்பர் விˆயம் பகவான் கூறுகிறார் (பகவானுவாச்) என்பதாகும். பகவானோ ஒருவர் தான் அல்லவா? சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்ற ஞானத்தினால் பக்தி கூட நடக்க முடியாது. ஓ காட் என்று யாரை அழைக்கிறார்கள். சர்வ வியாபி ஆவார் என்றால் ஓ காட் என்று கூட கூற முடியாது. சதோபிர தான நினையிலிருந்து பின் சதோ ரஜோ தமோவில் வந்தே ஆக வேண்டும். எனவே எல்லோருமே பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். பதீத பாவனரே வாருங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். தந்தை வருவதே பாவனமாக ஆக்க. நீங்கள் பாவனமாக ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். துக்கத்தில் எல்லோரும் நினைவு செய்வார்கள். ஆபத்துக்கள் வரும் பொழுது ஹேபகவான் என்று நினைவு செய்கிறார்கள். ஆனால் அறியாமல் இருக்கிறார்கள். உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்களே மீண்டும் தேவி தேவதை ஆக வேண்டும். இப்பொழுது இது தீர்ப்பிற்கான நேரமாகும். அனைவருடைய கணக்கு வழக்கும் முடிய வேண்டி உள்ளது. இப்பொழுது எல்லோரும் கல்லறையைச் சேர்ந்துள்ளார்கள். தந்தை வந்து எழுப்புகிறார். இந்த ஞானம் யாரிடமும் இல்லை. வந்து கொண்டே இருப்பார்கள். ஆகிக் கொண்டே இருப்பார்கள். விருத்தி ஆகிக் கொண்டே இருக்கும். நான் இந்த நிலைமையில் எந்த பதவியை அடைவேன் என்று பாபாவிடம் கேட்க முடியும். ஆனால் உங்களுடைய நிலை மூலமாக நீங்களே புரிந்து கொள்ளலாம். இப்பொழுது இடைவெளி நிறைய உள்ளது. பாபாவை நினைவு செய்வதில் நீங்கள் அனைவரும் முயற்சியாளர்கள் ஆவீர்கள். பரிபூரணமாக (சம்பூர்ணம்) கடைசியில் ஆவீர்கள். பரீட்சை முடிந்தவுடன் பின்னர் யுத்தம் ஆரம்பமாகி விடும். நீங்கள் அருகாமையில் வந்து விடும் போது அநேகருக்கு சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) ஆகிக் கொண்டே இருக்கும். இவர்கள் என்ன பதவி அடைவார்கள் என்று ஒருவரை யொருவர் தெரிந்து கொண்டு விடுவார்கள். புரிந்து கொள்ள வேண்டிய வி‘யம் இல்லையா? ஆத்மா அறிவற்றதாக ஆகிவிட்டுள்ளது. இப்பொழுதுமீண்டும் தந்தை சோழியிலிருந்து வைரமாக ஆக்குவதற்கு அறிவாளியாக ஆக்குகிறார். குழந்தைகளே ! இது யுத்த மைதானம் ஆகும் என்று தந்தை கூறுகிறார். புயல்களோ நிறைய வரும். எல்லா வியாதிகளும் வெளி யில் வரும். உங்களுடைய கலையில் புத்திசாலி ஆகுங்கள்.

ஆசிரியர் (மல்யுத்த) ஒன்றும் உதவி செய்ய மாட்டார். வெற்றி அல்லது தோல்வி அடைவது உங்கள் கையில் உள்ளது. இது மாயையின் யுத்தம் ஆகும் என்று ஆசிரியர் கூறுகிறார். மாயை மிகவுமே தொல்லை கொடுக்கும். விரும்பாவிட்டாலும் கூட 5-6 வருடங்கள் சரியாக நடந்து கொண்டிருக்கையில் பின் புயல்கள் எவ்வளவு பலமாக வரும் என்றால் தூக்கத்தையே கெடுத்து விடும். தைரியமுடையவர்கள் களைப்படையக் கூடாது. தோல்வி அடைந்து விடக் கூடாது. இது பற்றி சிறு சிறு நாடகங்கள் கூட காண்பிக்கிறார்கள் – எப்படி பகவான் தன் பக்கம் மற்றும் இராவணன் தன் பக்கம் இழுக்கிறான். நீங்கள் நினைவில் இருக்க விரும்புகிறீர்கள். மாயை புயலில் கொண்டு வருகிறது. அப்படி ஆகும் தான் ! யுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கர்மயோகி ஆவீர்கள். அதிகாலை எழுந்து பயிற்சி செய்யுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுடையது மறைமுகமாக உள்ளது. மறைமுகமான சேனை கூட பாடப்பட்டுள்ளது. தெரியாத போர் வீரர்கள். ஆனால் மிகவும் பெயர் பெற்றவர்கள். உங்களுடைய நினைவார்த்தமான இந்த தில்வாலா கோவில் தெரியாத போர் வீரர்களின் நினைவார்த்த கோவில் ஆகும். இலட்சுமி நாராயணரினுடையது அல்ல. இவர்கள் பிறகு இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். உங்களுடையது அனைத்துமே மறைமுகமானது. ஸ்தூல வாள்கள் ஆகியவை எதுவும் கிடையாது. இதில் புத்தியினுடைய வேலை மட்டுமே உள்ளது. ஆத்மாக்கள் பரமாத்மா வெகுகாலமாக பிரிந்திருந்தார்கள் என்றும் பாடுகிறார்கள். மனிதர்களோ குரு ஆகிறார்கள். சத்குருவோ ஒரே ஒரு நிராகாரமானவர் ஆவார். அவரை பதீத பாவனர் என்று கூறுகிறார்கள் என்றால், சத்குரு ஆகிறார் அல்லவா? மற்றபடி அவர்கள் கலியுக கர்ம காண்டத்தினர் ஆவார்கள். எல்லோரும் கூப்பிடுகிறார்கள் – கரவொலி எழுப்பி பதீத பாவனரே என்கிறார் கள். அனைத்து சீதைகளின் இராமர் ஒருவர் ஆவார். இப்பொழுது உங்களுடைய புத்தியில் எல்லா ஞானமும் நிறைந்து விட்டுள்ளது. எனக்குள் எந்த ஒரு அவகுணமும் இல்லையே என்று தங்களது நிலையை சோதித்துப் பார்க்க வேண்டும். கோபத்தின் பூதம் அல்லது காமத்தின் பூதம் இருக்கக் கூடாது. என்ன ஆகிறது என்று தெரியவில்லையே ! என்று எழுதுகிறார்கள். நிறைய புயல்கள் வருகின்றன. இவையோ வரத்தான் செய்யும். மிகவுமே தொல்லைப்படுத்தும். ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா உங்களுடையதோ எவ்வளவு அதிசயமான செயல்கள் ஆகும். நீங்கள் இராஜதானியை எப்படி ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. நாம் பாரதத்தினுடைய இறை சேவகர்கள் ஆவோம். நிராகார சிவனுக்கு ஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் எப்பொழுது மற்றும் எப்படி வந்தார் என்பது தெரியாது. சிவபாபா நமக்கு பிரஜாபிதா பிரம்மா மூலமாக ஆஸ்தியை அளித்துக் கொண்டிருக் கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது பாட்டனாரின் ஆஸ்தி ஆகும். பெரும்பாலும் அவரை பாபா பாபா என்று கூறுகிறார்கள். தாதா மற்றும் பாபா. பாபா ஆத்மாவின் தந்தை, தாதா (மூத்த அண்ணா) சாகாரத்தில் இருக்கிறார். அந்த சுப்ரீம் ஆத்மா இவர் மூலமாக ஆஸ்தியை அளித்துக் கொண்டிருக்கிறார். இது புத்தியில் இருக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். மன்மனா பவ. மேலும் சக்கரத்தின் இரகசியம் கூட சுலபமானதாகும். சுயதரிசன சக்கரதாரி கூட ஆக வேண்டும். நீங்கள் சுயதரிசன சக்கரதாரி ஆவீர்கள். ஆனால் அலங்காரத்தை விஷ்ணுவிற்குக் கொடுத்து விட்டுள்ளார்கள். ஏனெனில், இப்பொழுது நீங்கள் சம்பூர்ணமாக ஆக வில்லை. முதலில் அவர் நமது தந்தை ஆவார், ஆசிரியர் ஆவார், நமக்கு கல்வி அளித்துக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம் வேண்டும். சத்குரு கூட அழைத்துச் செல்வார். அவருக்கென்று தந்தை ஆசிரியர் குரு யாரும் இல்லை. எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கப்படுகிறது. பிறகும் புத்தியில் பதிவது இல்லை. இல்லற விவகாரங்களில் இருக்கையிலும் நிர்மோஹி – மோகமற்றவர் ஆக வேண்டும். நாமோ ஒரு தந்தை யினுடையவர் ஆகி உள்ளோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் குருடர்களின் கைத்தடி ஆக வேண்டும். எந்த ஒரு நண்பர், உறவினர் ஆகியோராக இருந்தாலும் பேச்சு கொடுத்தபடியே இதையே கேளுங்கள், பதீத பாவனர் பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது? உங்களுடைய லௌகீக தந்தையோ அவர் ஆவார் அல்லவா? பிறகு பரமபிதா பரமாத்மா யாருடைய தந்தை ஆவார்? நமது தந்தை என்று அவசியம் கூறுவார்கள். நல்லது, தந்தையோ சொர்க்கத்தின் படைப்புக்கர்த்தா ஆவார். பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது இல்லை. மீண்டும் எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுங்கள். இது உங்களுடைய உரிமையாகும். நினைவு செய்வதால் நீங்கள் அங்கு சென்று விடுவீர்கள். எவ்வளவு பாயிண்ட்ஸ் இருக்கின்றன. இவற்றை புத்தியில் தாரணை செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. உள்ளுக்குள் எந்த ஒரு காமம் அல்லது கோபத்தின் அவகுணம் உள்ளதோ அதை நீக்கி உண்மையிலும் உண்மையான இறை தொண்டர்கள் ஆக வேண்டும். புயல்களின் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தோல்வி அடையக் கூடாது.

2. தந்தையின் ஆலோசனைப் படி குசேலரைப் போல ஒரு பிடி அரிசி கொடுத்து 21 பிறவிகளுக்கான அரசாட்சி பெற வேண்டும்.

வரதானம்:-

எவ்வாறு தந்தை பெரியதிலும் பெரிய குடும்பம் உடையவர், ஆனால், குடும்பம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு விடுபட்டவராக மற்றும் அனைவருக்கும் அன்பானவராக இருக்கின்றார், அவ்வாறு தந்தையைப் பின்பற்றுங்கள். குழுவில் இருந்து கொண்டே சதா தடையற்றவராக மற்றும் திருப்தியாக இருப்பதற்காக எந்தளவு சேவை உள்ளதோ, அந்தளவு விடுபட்டவராகவும் இருக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு தான் அசைத்தாலும், ஒருபுறம் ஒருவர் தொந்தரவு செய்கின்றார், மறுபுறம் இன்னொருவர் செய்கின்றார், எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை, ஒருவர் அவமரியாதை செய்கின்றார், இப்படி என்ன ஆனாலும் சரி எண்ணத்தளவில் கூட அசையாமல் இருக்க வேண்டும். அப்பொழுதே தடையற்ற ஆத்மா என்று சொல்ல முடியும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

ಹೃದಯದ ಆಸರೆ ತುಂಡಾಗದಿರಲಿ…….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top