22 May 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

May 21, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

உலகமாற்றத்தில் வேகத்தைக் கொண்டு வருவதற்கான சாதனம் ஏகாக்ரதா சக்தி மற்றும் ஏக்ரஸ் ஸ்திதி

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று தூரதேசத்தில் இருக்கும் தந்தை தன்னுடைய தூரதேசம் மற்றும் தேசத்தில் இருக்கும் குழந்தைகளை சந்தித்து வாழ்த்துக்களைக் கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். நீங்கள் அனை வரும் கூட தூரதேசத்தில் இருந்து வந்திருக்கின்றீர்கள். தந்தையும் தூரதேசத் தில் இருந்து வந்திருக்கின்றார். குழந்தைகள் தந்தைக்கு வாழ்த்துக்கள் கொடுப்பதற்காக வந்திருக்கின்றீர்கள் மற்றும் தந்தை குழந்தைகளுக்கு கோடி மடங்கு வாழ்த்துக்கள் கொடுக் கின்றார். கொண்டாடு வது என்றால் சமமாக ஆக்குவது. உலகத்தில் கொண்டாட மட்டும் செய்கின்றார்கள் ஆனால், தந்தை கொண்டாடுகின்றார் என்றால் உருவாக்குகின்றார் என்று அர்த்தம். அனைத்து குழந்தை களும் அதாவது அவர்கள் சாகார ரூபத்தில் எதிரில் இருப்பவர் களோ அல்லது ஆகார ரூபத்தில் எதிரில் இருப்பவர்களோ, அனைத்து குழந்தைகளும் உலகத்தின் மூலை மூலையிலும் தந்தையின் வைரத்திற்கு சமமான ஜெயந்தியை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள். பாப்தாதா ஆகாரி ரூபத்தில் எதிரில் உள்ள குழந்தைகளுக்கும் வைரத்திற்கு சமமான ஜெயந்திக் கான வைரத்திற்கு இணையான பல கோடி மடங்கு வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த மகான் அவதார ஜெயந்தியை குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் கொண்டாடி தானும் வைரத்திற்கு இணையானவர்கள் ஆகிவிட்டீர்கள். கொண்டாடுவது என்றால் உருவாக்குவது என்று இதையே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையினுடைய நெற்றியில் பல கோடி மடங்கு பாக்கியவான் ஆவதற்கான நட்சத்திரம் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றது. எனவே, கொண்டாடி கொண்டாடி சதா காலத்திற்கும் பாக்கியவான் ஆகி விட்டீர்கள். இத்தகைய அலௌகீக ஜெயந்தியை முழு கல்பத்தில் எவரும் கொண்டாடுவது இல்லை. மகான் ஆத்மாக்களின் ஜெயந்தியை கொண்டாடுகின்றார்கள், ஆனால், அந்த மகான் ஆத்மாக்கள், கொண்டாடுபவர்களை மகான் ஆக்குவதில்லை. இந்த சங்கமயுகத்தில் தான் குழந்தைகளாகிய நீங்கள் பரமாத்ம ஜெயந்தியைக் கொண்டாடி மகான் ஆகிவிடுகின்றீர்கள், சிரேஷ்டத்திலும் சிரேஷ்ட ஆத்மா ஆகிவிடுகின்றீர்கள். அத்தகைய வைரத்திற்கு இணையான வாழ்க்கையை உருவாக்கி ஜென்ம ஜென்மங்களுக்கு வைரங்கள் மற்றும் இரத்தினங்களோடு விளையாடுகின்றீர்கள். இன்றைய நினைவுச்சின்ன தினமானது தந்தை யினுடையது மட்டு மல்ல ஆனால், குழந்தைகளுக்கும் பிறந்த நாள் ஆகும். ஏனெனில், எப்பொழுது தந்தை அவதாரம் செய்கின்றாரோ, அப்பொழுது தந்தையுடன் பிரம்மா தாதாவும் (சகோதரன்) மாற்றமடைந்த ஆத்மாவாக அவதாரம் செய்கின்றார். தந்தை மற்றும் தாதா ஆகிய இருவருடைய அவதாரமும் இணைந்தே நடக்கின்றது. பிராமணர்கள் இல்லாமல் ஸ்தாபனைக்கான யக்ஞத்தை பாப்தாதா படைக்க முடியாது. ஆகையினால், பாப்தாதா மற்றும் பிராமணக் குழந்தைகள் இணைந்தே அவதாரம் செய்கின்றார்கள். எனவே, இதை யாருடைய பிறந்த தினம் என்று சொல்லலாம் – உங்களுடையதா அல்லது தந்தையினுடையதா? உங்களுடையதும் தான் அல்லவா! எனவே, நீங்கள் தந்தைக்கு வாழ்த்துக்கள் கொடுக்கின்றீர்கள் மற்றும் தந்தை உங்களுக்கு வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்.

சிவ ஜெயந்தி அதாவது பரமாத்ம ஜெயந்தியை மகா சிவராத்திரி என்று ஏன் கூறு கின்றார்கள்? சிவராத்திரி என்று மட்டும் சொல்வதில்லை, ஆனால், மகா சிவராத்திரி என்று சொல்கின்றார்கள். ஏனெனில், இந்த அவதார தினத்தில், உலகத்தை தூய்மையின் விரதத்தால் மகான் சிரேஷ்டமானதாக ஆக்குவோம் என்ற மகான் சங்கல்பத்தின் விரதத்தை சிவ தந்தை, பிரம்மா தாதா மற்றும் பிராமணர்கள் எடுத்துள்ளார்கள். விசேஷமாக ஆதி தேவன் பிரம்மா, தன்னுடைய நிமித்த பிராமணர்களான ஆதி குழந்தைகளுடன் சேர்ந்து இந்த மகான் விரதத்தை மேற்கொள் வதற்கு நிமித்தம் ஆனார், எனவே, மகான் ஆக்குவதற்கான விரதத்தை மேற்கொண்ட தெய்வீகமான தினம் ஆகும், ஆகையினால், மகா சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது. மேலும், பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் இந்த மகான் விரதத்தை மேற்கொண்டு இருக்கின்றீர்கள், இதனுடைய ஞாபகார்த்த சொரூபமாக இன்று வரை கூட பக்தர்கள் விரதம் அனுஷ்டிக் கின்றார்கள். இந்த மகான் ஜெயந்தி உறுதிமொழி எடுப்பதற்கான ஜெயந்தி ஆகும். ஒருபுறம் பிரத்யட்சம் ஆகுவதற்கான ஜெயந்தியாக உள்ளது, மறுபுறம் உறுதிமொழி எடுப்பதற்கான ஜெயந்தியாக உள்ளது. ஆதி சமயத்தில் நீங்கள் யாரெல்லாம் நிமித்தமானீர் களோ, ஆதி தேவனுடன் சேர்ந்து ஆதி இரத்தினங்கள் யாரெல்லாம் வெளிப்பட்டார்களோ, அவர்களுடைய உறுதி மொழியின் பிரத்யட்ச பலனாக நீங்கள் அனைவரும் உருவாகி இருக்கின்றீர்கள். பாருங்கள், எங்கெங்கோ மூலைக்கு சென்றுவிட்டீர்கள். எவ்வளவு மூலைக்கு சென்று விட்டீர்கள், ஆனால், தந்தை மண்ணில் மறைந்திருந்த தன்னுடைய வைரத்திற்கு இணையான குழந்தைகளைக் கண்டுபிடித்து விட்டார் அல்லவா. இப்பொழுதோ உலகத்தின் மூலை மூலையிலும் ஹோலியஸ்ட் (மிகவும் புனிதமான) மற்றும் ஹையஸ்ட் (மிகவும் உயர்ந்த) வைரங்களாக ஜொலித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். எனவே, இது பரமாத்ம ஜெயந்தி யினுடைய விரதம் மற்றும் உறுதிமொழியின் பலன் ஆகும். நீங்கள் அனைவரும் இப்பொழுதும் நாலாபுறங்களிலும் சிவத் தந்தையின் கொடிக்கு முன்னால் உறுதிமொழி எடுக்கின்றீர்கள் அல்லவா. எனவே, இந்த ஆதி வழக்கத் தின் விதியை இப்பொழுது வரை நீங்களும் செய்து கொண்டு இருக்கின்றீர்கள். இது பரமாத்ம ஜெயந்தி, இதையே சிவ ராத்திரி என்றும் அழைக்கின்றார்கள். இராத்திரி என்றால் இருள் என்று அர்த்தம். இருளில் மனிதன் அல்லது பொருள் எப்படி உள்ளதோ அப்படி தென்படுவதில்லை. அது இருக்கும் இடத்தில் இருக்கும் போதும் தெரிவதில்லை. எப்பொழுது தந்தை அவதாரம் செய்கின்றாரோ, அப்பொழுது நீங்களும், நீங்கள் யாராக இருக்கின்றீர்கள், எப்படி இருக்கின்றீர்கள் என்று தன்னைத் தானே பார்க்க முடியாமல் இருந்தீர்கள், தந்தையையும் பார்க்கவோ, அறியவோ முடியாமல் இருந்தீர்கள். நான் ஆத்மா என்பது இருந்தபோதிலும் ஞானம் அல்லது அனுபவத்தின் கண் மூலம் பார்க்க முடியாமல் இருந்தீர்கள். கண் இருந்த போதிலும் இருளில் இருந்தீர்கள். கண்கள் சரியான காரியத்தை செய்யவில்லை. தெளிவாகத் தெரியவில்லை. எனவே, நீங்களும் இருளில் இருந்தீர்கள் அல்லவா. தன்னையே பார்க்க முடியாமல் இருந்தீர்கள், ஆகையினால், தந்தை முதலில் இந்த இருளை அகற்றுகின்றார். எனவே, சிவ ராத்திரி என்றால் இருளை அகற்றி யதார்த்த மான ஒளி ஏற்றுவது என்று அர்த்தம். ஆகையினால், சிவ ராத்திரி என்று சொல்லி கொண்டாடு கின்றார்கள். பக்தி மார்க்கத்தின் விதிகள் கூட உங்களுடைய யதார்த்தமான விதிகளின் ஞாபகார்த்தம் ஆகும். ஒருபுறம் பக்தர்களின் விதி மற்றும் மறுபுறம் குழந்தைகளின் சம்பூரண விதி உள்ளது. இரண்டையும் பார்த்து தந்தை மகிழ்ச்சி அடைகின்றார். நம்முடைய பக்தர்கள் பின்பற்றுவதில் எவ்வளவு புத்திசாலிகளாக இருக்கின்றார்கள் என்று நீங்களும் கூட மகிழ்ச்சி அடைகின்றீர்கள் அல்லவா. கடைசி பிறவி வரை கூட தன்னுடைய பக்தி யினுடைய விதிகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். இவை அனைத்தும் புள்ளி ரூபமாகிய தந்தை மற்றும் உங்களுடைய அதிசயமாகும். சிவ பாபாவுடன் சேர்த்து சாலிகிராமமும் பூஜிக்கப் படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் பிந்து (புள்ளி) சொரூபத்தின் மகத்துவத்தை அறிந்திருக் கின்றீர்கள், ஆகையினால், இன்று வரை பக்தர்களிடம் சிவன் அதாவது பிந்து சொரூபத்திற்கான மகத்துவம் உள்ளது. அவர்கள் பிந்து ரூபத்தை மட்டும் அறிந்திருக் கின்றார்கள், யதார்த்தமாக அறிந்திருக்கவில்லை, தன் அறிவுக்கு எட்டியவரை அறிந்திருக் கின்றார்கள். தந்தையை புள்ளியாக (பிந்து) மட்டுமல்ல, ஆனால், புள்ளியின் கூடவே அவர் அனைத்து பொக்கிஷங்களின் கடலாகவும் (சிந்து) இருக்கின்றார், எனவே, புள்ளியின் கூடவே கடல் போன்ற சொரூபத்தையும் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இரண்டு ரூபத்தையும் அறிந்திருக்கின்றீர்கள் அல்லவா? கடல் சொரூபத்தை அறிந்துகொண்டு நீங்களும் மாஸ்டர் கடல் ஆகிவிட்டீர்கள். உங்களுக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் நிறைந்திருக்கின்றன – கணக்கிட முடியுமா! எண்ணிலடங்காத, அளிவிடமுடியாத மற்றும் அழிவற்ற பொக்கிஷங்கள் உள்ளன. அனைவரும் மாஸ்டர் கடல் ஆகிவிட்டீர்கள் அல்லவா அல்லது இப்பொழுது ஆகவேண்டுமா?

தபஸ்யா வருடத்தில் என்ன செய்யப் போகின்றீர்கள்? தபஸ்யா என்றால் என்னவெல்லாம் சங்கல்பம் செய்கிறீர்களோ, அதை உறுதியாகச் செய்வதாகும். தபஸ்யா என்றால் மன ஒருமுகப்பாடு மற்றும் உறுதித்தன்மை என்று அர்த்தம். இப்பொழுதும் யோகி வாழ்க்கையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் யோகி வாழ்க்கை வாழ்பவர்கள் தானே? அல்லது 8 மணி நேரம், 6 மணி நேரம் அல்லது சில மணி நேரம் யோகம் செய்பவர்களா? வாழ்க்கையோ யோகி வாழ்க்கை தான், பிறகும் குறிப்பாக தபஸ்யா வருடம் என்று ஏன் வைக்கப்பட்டுள்ளது? பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் யோகி வாழ்க்கை வாழக்கூடிய யோகி ஆத்மாக்கள் என்ற ரூபத்தில் பார்க்கின்றார்கள் மற்றும் வாழ்வதும் யோகி வாழ்க்கையே. மற்ற வாழ்க்கையோ முடிவடைந்துவிட்டது. வழிதவறித் தடுமாறிய போகி (உலகாய சுகத்தை அனுபவிக்கும்) வாழ்க்கையினால் களைப் படைந்து, நம்பிக்கையிழந்த பின் சிந்தித்து, புரிந்துகொண்டு யோகி ஆகியிருக்கின்றீர்கள். சிந்தித்து, புரிந்துகொண்டு ஆகியிருக்கின்றீர்களா அல்லது பிறர் சொல் கேட்டு ஆகியிருக் கின்றீர்களா? அனுபவம் செய்து ஆகியிருக்கின்றீர்களா அல்லது அனுபவத்தைக் கேட்டதால் மட்டும் ஆகியிருக்கின்றீர்களா? அனுபவி ஆகி யோகி ஆகியிருக்கின்றீர்களா அல்லது வெறும் கேட்டது மற்றும் பார்த்ததால் மட்டுமே நன்றாகத் தோன்றியதா? பார்த்து மட்டும் வியாபாரம் செய்திருக்கின்றீர்களா அல்லது கேட்டு மட்டும் வியாபாரம் செய்திருக்கின்றீர்களா? யாரும் ஏமாற்றியதால் நீங்கள் இங்கே வரவில்லை தானே? நல்ல முறையில் பார்த்து விட்டீர்களா? இப்பொழுதும் பாருங்கள். எந்த மந்திரமும் போடப்பட வில்லை தானே? மூன்று கண்களையும் திறந்து வியாபாரம் செய்திருக் கின்றீர்களா? ஏனெனில், புத்தியும் கண் ஆகும். இந்த இரண்டு கண்கள் மற்றும் புத்தி என்ற கண் ஆகிய மூன்று கண்களையும் திறந்து வியாபாரம் செய்திருக்கின்றீர்கள். அனைவரும் உறுதியாக இருக்கின்றீர்களா?

அனைத்து குழந்தைகளும் இனிமையிலும் இனிமையான உரையாடல் செய்கின்றார்கள். பாபா நானோ உங்களுடையவர் தான், வேறு எங்கும் செல்லவே மாட்டேன், மேலும், ஞானி, யோகி வாழ்க்கையும் நன்றாக இருக்கின்றது, ஆனால், கொஞ்சம், கொஞ்சம் ஏதாவது, ஏதாவது விசயத்தில் சகித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது என்று கூறுகின்றார்கள். இது எப்பொழுது வரை இருக்கும், எப்படி இருக்கும்,…..? என்று அந்த சமயம் மனம் மற்றும் புத்தி தடுமாற்றத்தில் வந்துவிடுகின்றது. நடு நடுவில் தடுமாற்றம் என்ன ஏற்படுகிறதோ – அது தன்னாலோ, சேவையினாலோ அல்லது தன்னுடன் இருப்பவர்களாலோ – அந்த தடுமாற்றமானது நிரந்தரம் என்பதில் வித்தியாசத்தைக் கொண்டு வந்துவிடுகிறது. எனவே, சகிப்புத்தன்மையின் சதவிகிதம் கொஞ்சம் குறைந்து விடுகிறது. உறுதியாக இருக்கின்றார்கள், ஆனால், உறுதியானவர்களையும் கூட அவ்வப்போது இந்த விசயங்கள் அசைத்துவிடுகின்றன. எனவே, தபஸ்யா வருடம் என்றால் சர்வ குணங்களில், சர்வ சக்தி களில், சர்வ சம்பந்தங்களில், சர்வ சுபாவ சமஸ்காரங்களில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவது என்பதாகும். இப்பொழுது தேர்ச்சி பெற்று இருக்கின்றீர்கள் ஆனால், முழுமையாகத் தேர்ச்சி பெறவில்லை. ஒன்று தேர்ச்சி பெறுவது, இரண்டாவது முழுமையாகத் தேர்ச்சி பெறுவது மற்றும் மூன்றாவது மதிப்புடன் தேர்ச்சி பெறுவது. தபஸ்யா வருடத்தில் ஒருவேளை மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர்கள் குறைவான எண்ணிக்கையில் உருவானாலும் அனைவருமே முழுமையாகத் தேர்ச்சி பெற்றவர்களாக ஆக முடியும். மேலும், முழுமையாகத் தேர்ச்சி பெறுவதற்கு அனைத்தையும் விட எளிய சாதனம் என்னவென்றால் என்ன தேர்வு வந்தாலும் – இந்த தபஸ்யா வருடத்திலும் தேர்வு வரும், வராது என்பது கிடையாது ஆனால், தேர்வு எனப் புரிந்துகொண்டு கடந்து செல்லுங்கள். பிரச்சனையை, பிரச்சனை என்று புரிந்து கொள்ளாதீர்கள், தேர்வுத் தாள் எனப் புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு புரிந்து கொள்பவர்கள் தேர்வினுடைய கேள்வியில் இது ஏன் வந்தது, எப்படி வந்தது, யார் செய்தது? என்று விஸ்தாரத்தில் செல்லமாட்டார்கள். தேர்ச்சி பெற வேண்டும் என்று சிந்தித்து தேர்வைக் கடந்து செல்வார்கள். எனவே, தேர்வுத்தாள் எனப்புரிந்து கடந்து செல்லுங்கள். இது என்ன இப்படி ஆகிவிட்டது, இப்படியும் நடக்குமா என்ன மற்றும் தன்னுடைய பலவீனத்தைப் பற்றி சொல்லும்போதும் கூட இது இருக்கத் தான் செய்கிறது என்று எண்ணாதீர்கள். தனக்காக யோசிக்கும்பொழுது இது இருக்கத் தான் செய்கிறது, இவ்வளவு இருக்கத் தான் செய்யும் என்று யோசிக்கிறீர்கள் மற்றும் பிறருக்காக சிந்திக்கும் பொழுது இதை ஏன் செய்தார்கள், என்ன செய்திருக்கிறார்கள் என்று யோசிக்கின்றீர்கள். இந்த அனைத்து விசயங்களையும் தேர்வுத் தாள் எனப் புரிந்து கொண்டு முற்றுப் புள்ளி வைப்பதற்கான இலட்சியம் வைத்து கடந்து செல்லுங்கள். தேர்ச்சி பெற வேண்டும், கடந்து செல்ல வேண்டும் மற்றும் தந்தையுடன் இருக்க வேண்டும். அப்பொழுது முழுமையாகத் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகிவிடுவீர்கள். புரிந்ததா?

சில விசயங்களில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று இருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது முடிவில் (ரிசல்ட்டில்) பார்க்கப்பட்டது. தன்னுடைய பழைய சுபாவம் மற்றும் சமஸ்காரம் மட்டும் அவ்வப்போது புதிய வாழ்க்கையில் எமர்ஜ் ஆகிவிடுகின்றன. தன்னுடைய மற்றும் பிறருடைய சுபாவ சமஸ்காரத்தின் மோதல் ஏற்படுகிறது. தன்னுடைய பலவீனமான சமஸ்காரம் பிறருடைய சமஸ்காரத்தோடு மோதுகிறது. இந்த பலவீன மானது இப்பொழுது விசேஷமாக இலட்சியத்தை சென்று அடைவதில் தடை ஏற்படுத்துகிறது. முழுமையாகத் தேர்ச்சி பெறுவதற்குப் பதிலாக பாஸ் மார்க் கொடுத்துவிடுகிறது. தன்னுடைய சுபாவ சமஸ்காரத்தை, சங்கல்பம் அல்லது கர்மத்தில் கொண்டு வராதீர்கள், பிறருடைய சுபாவ சமஸ்காரத்தோடு மோதாதீர்கள். இரண்டிலும் சகித்துக் கொள்ளும் சக்தி மற்றும் கரைத்துக் கொள்ளும் சக்தி அவசியமாக உள்ளது. அது முழுமையான தேர்ச்சிக்கு அருகாமையில் கொண்டுவர விடுவதில்லை. மேலும், இதுவே அவ்வப்போது கவனக்குறைவு, அவ்வப்போது அலட்சியம் வருவதற்கு காரணம் ஆகிவிடுகிறது. தபஸ்யா வருடத்தில் மனம், புத்தியை ஒருமுகப் படுத்த வேண்டும், அதாவது நான் முழுமையாகத் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என்ற ஒரே சங்கல்பத்தில் இருக்க வேண்டும். ஒருவேளை, மனம், புத்தி கொஞ்சம் நிலையற்றதாக ஆகிவிட்டால் உறுதித்தன்மையோடு அதை மீண்டும் ஒருமுகப்படுத்துங்கள். செய்தே ஆகவேண்டும், நடந்தே தீரவேண்டும். பலவீனங்கள் என்ன வெல்லாம் உள்ளனவோ, அவை அனைத்தையும் தபஸ்யாவின் யோக அக்னியில் சாம்பல் ஆக்கிவிடுங்கள். யோக அக்னி கொழுந்துவிட்டு எரிகிறதா? ஈடுபாடு என்ற அக்னியில் இப்பொழுதும் இருக்கின்றீர்கள், ஆனால், அவ்வப்போது அக்னியின் சதவிகிதம் கொஞ்சம் குறைந்துவிடுகிறது. அணைந்துவிடு வதில்லை, குறைந்துவிடுகிறது. கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் எந்த பொருளைப் போட்டாலும் அது மாற்றமடைகிறது அல்லது சாம்பல் ஆகிவிடுகிறது. மாற்றம் செய்வது மற்றும் சாம்பல் ஆவது ஆகிய இரண்டிற்கும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு தேவை. யோகம் என்பது அக்னியாகும். ஈடுபாட்டி னுடைய அக்னியும் எரிந்துகொண்டு இருக்கிறது. ஆனால், எப்பொழுதும் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். சில நேரம் வேகமாக, சில நேரம் குறைவாக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு பொருளை நன்றாக உருவாக்க விரும்புகின்றீர்கள் மற்றும் நேரத்திற்குள் உருவாக்க விரும்புகின்றீர்கள் என்றால் இங்கு ஸ்தூலமான நெருப்பைக் கூட அதற்கேற்றவாறு வைப்பீர் கள். அந்த பொருள் சரியான நேரத்தில் மற்றும் நல்லவிதமாக தயார் ஆகிவிடும்படியாக அந்த அக்னியை எரிய விடுவீர்கள். ஒருவேளை, இடையில் நெருப்பு அணைந்துவிட்டது என்றால் சரியான நேரத்தில் பொருள் தயாராக முடியுமா? தயார் ஆகிவிடும், ஆனால், நேரத்தில் தயார் ஆகாது. எனவே, உங்களுடைய யோக அக்னியும் இடை இடையே தளர்ச்சியாகிவிடுகிறது என்றால் சம்பன்னம் ஆகிவிடுவீர்கள் ஆனால், இறுதியில் ஆவீர்கள். கடைசியில் சம்பன்னம் ஆகக்கூடியவர்களுக்கு வேகம் (ஃபாஸ்ட்) மற்றும் முதல் (ஃபர்ஸ்ட்) இராஜ்ய பாக்கியத்தின் அதிகாரம் கிடைக்க முடியாது. உங்கள் அனைவருடைய இலட்சியம் முதல் ஜென்மத்தில் இராஜ்ய பாக்கியத்தை அடைவதா அல்லது இரண்டாவது, மூன்றாவது ஜென்மத்தில் வருவதா? முதல் ஜென்மத்தில் வரவேண்டும் அல்லவா?

தபஸ்யா வருடம் என்றால் வேகமான புருஷார்த்தம் செய்து முதல் ஜென்மத்தில் முதல் நம்பர் ஆத்மாக் களுடன் இராஜ்யத்தில் வருவதாகும். வீட்டிற்கு கூடவே செல்ல வேண்டும் அல்லவா. மேலும், இராஜ்யத்திலும் பிரம்மா பாபாவுடன் கூடவே வரவேண்டும். ஆகவே, தபஸ்யா வருடம் என்று ஏன் வைக்கப்பட்டிருக்கின்றது என்பது புரிந்ததா? ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள். இப்பொழுதும் கூட விரும்பவில்லை என்றாலும் வீணானது வந்து விடுகிறது.. சில நேரம் சுத்த சிரேஷ்ட சங்கல்பங்களை விட வீணானதின் பக்கம் (தராசு போல்) கனமானதாக ஆகிவிடுகிறது. தபஸ்யா என்றால் வீணான சங்கல்பங்களின் முடிவு என்பதாகும். ஏனென்றால், இந்த சமாப்தி தான் சம்பூரணத்தன்மையைக் கொண்டு வரும். சமாப்தி செய்யாமல் சம்பூரணத்தன்மை வராது. எனவே, இன்றைய தினத்திலிருந்து தபஸ்யா வருடத்தை ஆரம்பம் செய்துகொண்டு இருக்கின்றீர்கள். ஊக்கம், உற்சாகத்திற்காக பாப்தாதா வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்கள். நான்கு பாடங்களிலும் முழுமையாகத் தேர்ச்சி அடையக் கூடிய மதிப்பெண் பெற வேண்டும். என்னுடைய மூன்று பாடங்கள் சரியாக இருக்கின்றன, ஒன்றில் மட்டுமே குறை இருக்கிறது என்று நினைக்காதீர்கள். முழுமையாகத் தேர்ச்சி அடைந்துவிடுவீர்களா? இல்லை, இருந்தாலும் தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டியலில் வந்துவிடுவீர்கள். முழுமையான தேர்ச்சி அதாவது நான்கு பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற வேண்டும். சதா ஒவ்வொரு ஆத்மாவிற் காகவும் நன்மை பாவனை, அவர்கள் உங்களுடைய ஸ்திதியை அசைப்பதற்கு முயற்சி செய்யலாம், ஆனால், தீமை செய்பவர்கள் மீதும் நன்மை நிறைந்த பாவனை, நன்மை நிறைந்த திருஷ்டி (பார்வை), நன்மை நிறைந்த விருத்தி (உள்ளுணர்வு), நன்மை நிறைந்த கிருத்தி (செயல்) செய்ய வேண்டும். இப்பேற்பட்டவர்களையே கல்யாணகாரி ஆத்மா என்று சொல்லப்படுகிறது. சிவன் என்பதன் அர்த்தம் கூட கல்யாணகாரி என்பது அல்லவா? எனவே, சிவஜெயந்தி என்றால் நன்மை நிறைந்த பாவனை என்று அர்த்தம். நன்மை செய்பவர்களுக்கு நன்மை செய்வது என்பதை அஞ்ஞானிகளும் செய்கின்றார்கள். நல்லவர்களிடம் நன்றாக நடக்க வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்திருக் கின்றார்கள். ஆனால், தீமை நிறைந்த உள்ளுணர்வு (விருத்தி) உடையவர்களை தன்னுடைய நன்மை நிறைந்த உள்ளுணர்வு மூலம் மாற்றம் செய்யுங்கள் மற்றும் மன்னித்துவிடுங்கள். மாற்றம் செய்ய முடியவில்லை என்றாலும் மன்னிக்க முடிகிறது அல்லவா! மாஸ்டர் மன்னிப்புக் கடலாக இருக்கின்றீர்கள் அல்லவா! ஆகவே, உங்களுடைய மன்னிப்பு அந்த ஆத்மாவிற்கு படிப்பினை ஆகிவிடும். இன்றைய நாட்களில் படிப்பினை கொடுப்பதனால் சிலர் புரிந்து கொள்கின்றார்கள், சிலர் புரிந்துகொள்வதில்லை. இதை செய்யுங் கள் என்றால் அது படிப்பினை ஆகிவிடும். மன்னிப்பு என்றால் சுபபாவனையினுடைய ஆசீர்வாதங்கள் கொடுப்பது, சகயோகம் கொடுப்பது என்பதாகும். இப்பொழுது படிப்பினை கொடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. இப்பொழுது அன்பு கொடுங்கள், மரியாதை கொடுங்கள், மன்னித்து விடுங்கள். சுபபாவனை வைத்திடுங்கள், சுபவிருப்பம் வைத்திடுங்கள். இதுவே படிப்பினை கொடுப்பதற்கான விதியாகும். அந்த விதி இப்பொழுது பழையதாகிவிட்டது.. எனவே, புதுமையான விதியை நடைமுறை படுத்தத் தெரிகிறது அல்லவா? தபஸ்யா வருடத்தில் இந்த புது விதியின் மூலமாக அனைவரையும் மேலும் சமீபத்தில் கொண்டு வாருங்கள். கொஞ்சம் மணிகள் தயாராரும் ஆகிவிட்டனர், ஆனால், மாலை இப்பொழுது வரை தயாராகவில்லை என்று முன்பே கூறியிருக்கின்றோம் அல்லவா. நுôலும் இருக்கிறது, மணிகளும் இருக்கின்றன ஆனால், மணியோடு மணி நெருக்கத்தில் இல்லை, எனவே, மாலை தயாராகவில்லை. தனிப்பட்ட முறையில் மணி தயாராக உள்ளது, ஆனால், குழுவில், நெருக்கத்தில் தயாராகவில்லை. எனவே, தபஸ்யா வருடத்தில் தந்தைக்கு சமமாகவோ ஆகியே தீரவேண்டும் ஆனால், மணியோடு மணி அருகாமையிலும் வரவேண்டும். புரிந்ததா? மற்றபடி யோகியாக இருந்தீர்கள், யோகியாக இருக்கின்றீர்கள், சதா யோகி வாழ்க்கை யிலேயே இருக்க வேண்டும். நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் விடு பட்டவராகி, அன்பானவராகி பார்த்துக்கொண்டே செல்லுங்கள். நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் தனிப்பட்டது. உலகத்திற்கு எது அன்பற்ற காட்சியாக உள்ளதோ, அது உங்களுக்கு அன்பானதாக உள்ளது. என்னவெல்லாம் நடக்கின்றதோ அதில் ஏதாவதொரு இரகசியம் அடங்கியுள்ளது. இரகசியத்தை தெரிந்து இருப்பதனால் ஒருபொழுதும் எந்த விசயத்திலும், எந்த காட்சியிலும் கோபப்படமாட்டீர்கள். இரகசியத்தை அறிந்திருப்பவர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள். இரகசியத்தை அறியாதவர்கள் கோபம் கொள்கின்றார்கள்.

இரட்டை அயல்நாட்டினரும் இந்த முறை சிவ ஜெயந்தி கொண்டாடும் சமயத்தில் வந்து இருக்கின்றீர்கள். சென்றே ஆகவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை வைத்ததால் வந்தடைந்துவிட்டீர்கள் அல்லவா. செல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தவர்கள் வராமல் இருந்துவிட்டார்கள். இப்பொழுதோ இது ஒன்றுமே இல்லை, இனிமேல்தான் வரப்போகிறது. இப்பொழுது இயற்கை முழுவேகத்துடன் கொந்தளிப்பை ஆரம்பிக்க வில்லை. கொந்தளிக்கிறது ஆனால், பிறகு உங்களைப் பார்த்து கொஞ்சம் அமைதியாகி விடுகிறது. என்னுடைய எஜமானன் தயாராகவில்லை, யாருக்கு வேலைக்காரன் ஆகுவது என்று அதுவும் பயப்படுகிறது. பயமற்றவர்கள் தானே? பயப்படுபவர்கள் இல்லை தானே? மரணத்தைக் கண்டு மக்கள் பயப்படு கின்றார்கள் ஆனால், நீங்களோ மரணித் தவர்கள் தான். பழைய உலகத்தில் இருந்து இறந்து விட்டீர்கள் அல்லவா? புது உலகத்தில் வாழ் கின்றீர்கள், பழைய உலகத்தில் இருந்து இறந்து விட்டீர்கள், எனவே, மரணம் அடைந்தவர் களுக்கு மரணத்தைப் பார்த்து என்ன பயம்? மேலும், நீங்கள் டிரஸ்டி தானே? ஒருவேளை, எனது என்பது ஏதாவது இருந்தாலும் மாயா பூனை மியாவ், மியாவ் என்று கத்தும். நான் வரவா, நான் வரவா . . . என்று கத்தும். நீங்களோ டிரஸ்டியாக இருக்கின்றீர்கள். சரீரம் கூட எனது கிடையாது. மக்களுக்கு இறந்துவிடுவோமோ என்ற கவலை இருக்கின்றது அல்லது பொருட்களைப் பற்றிய அல்லது குடும்பத்தைப் பற்றிய கவலை ஏற்படுகிறது. நீங்களோ டிரஸ்டியாகவே இருக்கின்றீர்கள். விடுப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள் அல்லவா அல்லது கொஞ்சம் கொஞ்சம் பற்று இருக்கின்றதா? தேக உணர்வு உள்ளதால் கொஞ்சம் கொஞ்சம் பற்று இருக்கிறது, எனவே, தபஸ்யா என்றாலே ஜுவாலை சொரூபம் மற்றும் பயமற்றவர் ஆகுவதாகும். நல்லது.

அன்பான இரண்டு தாதிகளும் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள், பார்த்துக் கொண்டு இருக் கின்றார்கள். ஏதாவது புதுமையைப் பார்க்க வேண்டும் அல்லவா. ஒன்று பேச்சின் மூலம் செய்யப்படும் சேவை, மற்றொன்று ஃபரிஸ்தா மூர்த்தி மற்றும் அன்பு நிறைந்த பார்வையின் மூலம் செய்யப்படும் சேவை என்பதை பாப்தாதா முன்னமே கூறியிருக்கின்றார்கள். இவர்களுக்கு இந்த சேவைக்கான பாகம் கிடைத்திருக்கின்றது. ஆரம்பத்திலிருந்து வார்த்தை மற்றும் கர்மத்தின் மூலம் சேவை செய்துகொண்டு இருக் கின்றார்கள். இந்த விதிப்படி செய்யப்படும் சேவையும் நாடகத்தில் இருக்கிறது, இறுதியில் இந்த சேவைதான் மீதம் இருக்கும். இந்த நடிப்பு கொஞ்ச சமயத்திற்காக இவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. பிறகும் இவர்கள் மிகவும் அன்பான குழந்தைகள் அல்லவா. இவர் களுடைய கணக்கு வழக்கு முடிவடைவதிலும் சேவை உள்ளது. கணக்கு நிமித்த மாத்திரம் உள்ளது ஆனால், இரகசியம் என்னவென்றால் அதிலும் சேவை அடங்கியுள்ளது. எல்லை யற்ற விளையாட்டில் இதுவும் ஒரு அற்புதமான விளையாட்டு ஆகும். இருவருடைய பாகமும் புதுமையானது. இவர்கள் வெகுவிரைவாக கணக்கு வழக்கை முடிவடையச் செய்து சம்பன்ன நிலை மற்றும் சம்பூர்ண நிலைக்கு அருகாமையில் சென்று கொண்டு இருக் கின்றார்கள். தனியாகச் செல்லமாட்டார்கள் – இவ்வாறு எவரும் நினைக்காதீர்கள். ஒவ்வொரு வரும் கணக்கை முடிக்கத்தான் வேண்டும். ஆனால், சிலர் கணக்கை மட்டும் முடிக்கின்றார்கள், சிலர் கணக்கை முடித்துக் கொண்டே சேவை செய்கின்றார்கள். அனைவரும் வெற்றியாளர்கள் ஆகிவிட்டீர்கள் அல்லவா? அனை வருடைய ஆசிர்வாதங்கள் என்ற மருந்து கூட ஈட்டியிலிருந்து முள் போன்று ஆக்கிவிடுகிறது. கணக்கு வழக்கின் பிரபாவத்தில் வரவில்லை. இருவரும் சரியாகிவிட்டனர். பத்தியத்தில் மட்டும் இருக்கின்றனர். ஓய்வு கூட பத்தியம் தான். எவ்வாறு உணவில் பத்தியம் உள்ளதோ, அதுபோல் இது செல்வது, வருவது, பேசுவது போன்றவற்றின் பத்தியம் ஆகும். அன்பானது என்ன செய்ய முடியாது! அன்பு கல்லையும் கரைக்க முடியும் என்ற பழமொழி உள்ளது எனில், இந்த நோயை மாற்ற முடியாதா? மாறிவிட்டது அல்லவா! இருதய நோய் மாறிவிட்டது. கல்லிலிருந்து தண்ணீர் போல் ஆகிவிட்டது அல்லவா! இது உங்கள் அனைவருடைய அன்பு ஆகும். மீதம் இப்பொழுது தண்ணீர் மட்டும் உள்ளது, கல் கரைந்துவிட்டது. ஓய்வில் இருப்பதனால் இருவருடைய முகமும் ஜொலிக்கின்றன. பரிவாரத்தின் அன்பு கூட மிகவும் உதவி செய்கிறது. நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து உலக நன்மைக்கான சிரேஷ்ட பாவனை வைக்கக்கூடிய நாலாபுறங்களிலும் உள்ள அத்தகைய உறுதியான எண்ணம் செய்யக்கூடிய, தபஸ்யா மூலம் தன்னையும், உலகத்தையும் மாற்றக்கூடிய, ஒருமுகப்படுத்தும் சக்தி மூலம் ஏக்ரஸ் தீவிர ஸ்திதியில் இருக்கக்கூடிய, அத்தகைய தபஸ்வி ஆத்மாக்களுக்கு, சிநேகி ஆத்மாக்களுக்கு, சதா தந்தையின் கூடவே இருக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா வெவ் வேறு விதியோடு சேவையில் துணையாக இருக்கும் குழந்தைகளுக்கு மகா பரமாத்ம ஜெயந்தியின் வாழ்த்துக்கள் மற்றும் அன்பு நினைவுகளை சுவீகாரம் செய்யுங்கள் மற்றும் கூடவே நமஸ்காரம் உரித்தாகுக!

வரதானம்:-

எந்தக் குழந்தைகள் அஷ்ட சக்திகளால் நிறைந்தவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் ஒவ்வொரு செயலிலும் நேரத்தின் அனுசாரம் சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொரு சக்தியையும் காரியத்தில் ஈடுபடுத்துகின்றார்கள். அஷ்ட சக்திகள் அவர்களை இஷ்ட தேவதையாக மற்றும் அஷ்ட இரத்தினமாக ஆக்கிவிடுகிறது. அத்தகைய அஷ்ட சக்திகள் நிறைந்த ஆத்மாக்கள் சமயத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப ஸ்திதியை சுலபமாக உருவாக்கி விடுகின்றார்கள். அவர்களுடைய ஒவ்வொரு அடியிலும் வெற்றி அடங்கியிருக்கும். எந்த சூழ்நிலையும் அவர்களை உயர்ந்த ஸ்திதியிலிருந்து கீழே இறக்க முடியாது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top