14 May 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

May 13, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்யுங்கள், ஆனால் குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் தந்தையை நினைவு செய்து உலகத்திற்கு அமைதியின் தானம் அளியுங்கள், தனக்குச் சமமாக ஆக்கக்கூடிய சேவை செய்யுங்கள்.

கேள்வி: -

சூரியவம்ச குலத்தில் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி என்ன செய்ய வேண்டும்?

பதில்:-

1. சூரியவம்ச குலத்தில் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றால் தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் பிறரையும் செய்ய வைத்திடுங்கள். எவ்வளவுக் கெவ்வளவு சுயதரிசனசக்கரதாரி ஆவீர்களோ மற்றும் ஆக்குவீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள்.2. முயற்சி செய்து மதிப்புடன் தேர்ச்சிப் (பாஸ் வித் ஹானர்) பெறுங்கள். தண்டனை அடையும் படியான எந்தக் கர்மமும் செய்யக் கூடாது.தண்டனை அடைபவர்களின் பதவி பிரஷ்டமாகிவிடுகிறது (கீழானதாகி விடுகிறது).

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இந்த பாவ உலகத்திலிருந்து..

ஓம்சாந்தி. இது குழந்தைகளின் வேண்டுதல் ஆகும். எந்தக் குழந்தைகளுடைய வேண்டுதல்? யார் இதுவரை அறியவில்லையோ அவர்களுடைய வேண்டுதல் ஆகும். இந்த பாவ உலகத் திலிருந்து பாபா நம்மை புண்ணிய உலகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள். அங்கே எப்பொழுதும் ஓய்வே ஓய்வு தான் இருக்கும். துக்கம் என்ற பெயரே கிடையாது. நாம் அந்த சுகதாமத் திலிருந்து பிறகு இந்த துக்கதாமத்திற்கு எவ்வாறு வந்தோம்? என்று இப்பொழுது தனது உள்ளத்திடம் கேள்வி கேட்கப்படுகிறது. பாரதம் பழமையான தேசம் என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றனர். பாரதம் தான் சுகதாமமாக இருந்தது. ஒரே ஒரு பகவான் பகவதியின் இராஜ்யம் நடைபெற்றது. பகவான் கிருஷ்ணர், பகவதி இராதை அதாவது பகவான் நாராயணர் பகவதி இலட்சுமி இராஜ்யம் செய்தார்கள். இப்பொழுது பாரதவாசிகளே தங்களை பதீதமானவர் கள், கீழானவர்கள் என்று ஏன் கூறிக்கொள்கின்றனர் என்பதை அனைவரும் அறிவார்கள். பாரதம் தங்கக் குருவியாக இருந்தது, பாரஸ்நாத், பாரஸ்நாதினியின் இராஜ்யம் நடைபெற்றது. பிறகு, இந்தத் தாழ்ந்த நிலையை எவ்வாறு அடைந்தது? என்பதையும் அறிவார்கள். எனக்கும் கூட இங்கே தான் பிறப்பு இருக்கிறது. ஆனால், எனது பிறப்பு தெய்வீகமானது என்று பாபா புரிய வைக்கின்றார். நாம் சிவனுடைய வம்சத்தினர் மற்றும் பிரஜாபிதா பிரம்மா குமாரர்கள், குமாரிகள் ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையினால், காட்ஃபாதரை (இறை தந்தையை) அறிவீர்களா? என்று முதன்முதலில் கேளுங்கள் என்று பாபா புரிய வைத்திருக் கின்றார். தந்தை அல்லவா, பிறகு சம்பந்தம் பற்றி என்ன கேட்கிறீர்கள்? என்று கூறுவார்கள். தந்தை ஆகிவிட்டார். அனைத்து ஆத்மாக்களும் சிவனது வம்சத்தினர் எனில் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். பிறகு, சாகார பிரஜாபிதா பிரம்மாவுடன் என்ன சம்பந்தம் உள்ளது? தந்தை அல்லவா என்று அனைவரும் கூறுவார்கள். அவரை ஆதிதேவன் என்றும் கூறுகின்றனர். சிவன் நிராகார தந்தை ஆகிவிட்டார் அவர் அழிவற்றவர் . ஆத்மாக்கள் கூட அழிவற்றவை ஆகும். மற்றபடி, சாகாரத்தில் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கின்றனர். நிராகார நிலையில் சிவனது வம்சத்தினர் ஆவோம். அதில் பிறகு, குமாரர் குமாரிகள் என்று கூறப்படுவதில்லை. ஆத்மாக் களில் குமாரர் குமாரி என்ற நிலை கிடையாது. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் எனும்போது அதில் குமாரர்கள், குமாரிகள் இருக்கின்றார் கள். முதலிலிருந்தே சிவனுடைய வம்சத்தினர் ஆவோம். சிவபாபா மறுபிறப்பு எடுப்பதில்லை. ஆத்மாக்களாகிய நாம் மறுபிறப்பு எடுக்கிறோம். நல்லது, புண்ணிய ஆத்மாக்களாக இருந்த நீங்கள் பிறகு, எவ்வாறு பாவ ஆத்மாக்கள் ஆனீர்கள்? பாரதவாசிகளாகிய நீங்கள் தனக்குத் தானே அடி கொடுத்துக் கொண்டீர்கள் என்று தந்தை கூறுகின்றார் பரமபிதா என்றும் அழைக் கின்றீர்கள், பின்னர் அவரை சர்வவியாபி என்று கூறிவிடுகிறீர்கள். புண்ணிய ஆத்மாவாக ஆக்கக்கூடிய தந்தையை நீங்கள் நாய், பூனை, கல், முள் ஆகிய அனைத்திலும் இருப்பதாகக் கூறிவிட்டீர்கள். அவர் எல்லையற்ற தந்தை ஆவார். அவரை நீங்கள் நினைவு செய்கிறீர்கள். அவரே பிரஜாபிதா பிரம்மாவின் வாய் மூலம் பிராமணர்களைப் படைக்கின்றார் பிராமணர் களாகிய நீங்கள் தேவதை ஆகிறீர்கள். பதீதத்திலிருந்து பாவனம் ஆக்கக்கூடியவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே ஆவார். அவரை அனைவரையும்விட அதிகமாக நீங்கள் நிந்தனை செய்து விட்டீர்கள். ஆகவே, உங்கள் மீது தர்மராஜா மூலம் வழக்கு நடத்தப்படும். அனைத்தையும் விட பெரிய உங்களது எதிரி – 5 விகாரங்கள் என்ற இராவணன் ஆவான். உங்களுடையது இராமர் புத்தி, மற்ற அனைவரு டையதும் இராவண புத்தி ஆகும். இராம இராஜ்யத்தில் நீங்கள் எவ்வளவு சுகம் நிறைந்தவர் களாக இருந்தீர்கள்! இராவண இராஜ்யத்தில் நீங்கள் எவ்வளவு துக்கம் நிறைந்தவர்கள் ஆகி விட்டீர்கள்! அங்கே தூய்மையான அரச பரம்பரை இருக்கும். இங்கே தூய்மையற்ற அரச பரம்பரை உள்ளது. இப்பொழுது யாருடைய வழிப்படி நடக்க வேண்டும்? பதீத பாவனர் ஒரே ஒரு நிராகாரமானவர் மட்டும் தான். ஈஸ்வரன் சர்வ வியாபியாக இருக்கின்றார். ஈஸ்வரன் ஆஜராகி முன் நிற்கின்றார் சபதம் கூட அவ்வாறு எடுக்க வைக்கின்றார்கள். தந்தை, இந்த சமயம் ஆஜராகி முன்னால் இருக்கின்றார் என்பதை குழந்தை களாகிய நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கின்றீர்கள். நாம் கண்கள் மூலம் பார்க்கின்றோம். பரமபிதா பரமாத்மா இந்த சரீரத்தில் வந்திருக்கின்றார் என்பது ஆத்மாவிற்குத் தெரிந்து விடுகிறது. நாம் அறிந்திருக்கின்றோம், தெரிந்திருக்கின்றோம். சிவபாபா மீண்டும் பிரம்மாவிற்குள் பிரவேசம் செய்து, நமக்கு வேத சாஸ்திரங்களின் சாரம் மற்றும் சிருஷ்டியின் ஆதி, மத்திய, அந்திமத்தின் இரகசியத்தை எடுத்துரைத்து திரிகாலதரிசியாக ஆக்கிக்கொண்டிருக் கின்றார் சுயதரிசன சக்கரதாரியைத் தான் திரிகாலதரிசி என்று சொல்லப்படுகின்றது. விஷ்ணுவிடம் இந்தச் சக்கரத்தைக் காண்பிக் கின்றனர் பிராமணர்களாகிய நீங்கள் தான் பின்னர் தேவதை ஆகிறீர்கள். தேவதைகளின் ஆத்மா மற்றும் சரீரம் ஆகிய இரண்டும் தூய்மையாக இருக்கின்றன. உங்களுடைய சரீரமோ விகாரத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக் கின்றது அல்லவா. உங்களுடைய ஆத்மா இறுதியில் தூய்மையாகி விடுகிறது, ஆனால், சரீரமோ பதீதமாக உள்ளது அல்லவா? ஆகவே, உங்களுக்கு சுயதரிசன சக்கரத்தைக் கொடுக்க இயலாது. நீங்கள் சம்பூரணம் ஆகின்றீர்கள், பின்னர் விஷ்ணுவின் வெற்றிமாலை ஆகின்றீர்கள். ருத்ரமாலை மற்றும் பிறகு விஷ்ணுவின் மாலை. ருத்ரமாலை நிராகார மாலையாகும் மற்றும் அவர்கள் எப்பொழுது சாகாரத்தில் இராஜ்யம் செய்கின்றார்களோ, அப்பொழுது மாலை ஆகி விடுகின்றது. இந்த அனைத்து விஷ்யங்களை யும் இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பதீத பாவனரே! வாருங்கள் என்று பாடவும் செய்கிறார்கள் எனில் அவர் அவசியம் ஒருவராக மட்டும் தான் இருப்பார் அல்லவா? அனைத்து தூய்மையற்றவர்களையும் தூய்மையாக்கக் கூடியவர் ஒரு தந்தையே ஆவார். எனவே, பதீதமானவர் மிகவும் அன்பான நிராகார இறை தந்தை ஆகிவிட்டார். அவர் பெரிய தந்தை ஆவார். சிறிய தந்தையையோ அனைவரும் பாபா, பாபா என்று அழைத்துக்கொண்டே இருக்கின்றனர். எப்பொழுது துக்கம் ஏற்படுகின்றதோ அப்பொழுது பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்கின்றனர். இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். முதன் முதலில் இந்த விசயத்தைப் புரிய வைக்க வேண்டும் – பரமபிதா பரமாத்மாவிடம் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது? சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர். நிராகார பரமபிதா பரமாத்மாவின் மகிமை மிக உயர்ந்ததாகும். தேர்வு எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரிய பட்டம் (டைட்டில்) கிடைக்கிறது அல்லவா? பாபாவினுடைய டைட்டிலோ மிகப் பெரியதாகும். தேவதைகளின் மகிமை சாதாரணமானது தான். சர்வகுண சம்பன்னம், 16 கலைகளில் சம்பூரணம். பெரிய ஹிம்சை என்னவென்றால் காமம் என்ற வாளால் ஒருவருக்கு ஒருவர் ஆதி, மத்திமம் மற்றும் அந்திமத்தில் துக்கம் கொடுக்கின்றனர். இது மிகப்பெரிய ஹிம்சை ஆகும். இப்பொழுது நீங்கள் இரட்டை அஹிம்சாவாதி ஆக வேண்டும்.

பகவானின் மகாவாக்கியம்- ஹே குழந்தைகளே! நீங்கள் ஆத்மாக்கள் ஆவீர்கள், நாம் பரமாத்மா ஆவோம். நீங்கள் 63 பிறவிகளாக விˆக் கடலில் இருந்தீர்கள். இப்பொழுது நான் உங்களை பாற்கடலிற்கு அழைத்துச் செல்கின்றேன். மற்றபடி, கடைசி கொஞ்ச சமயத்திற்காக நீங்கள் தூய்மையாக இருப்பதற்கான உறுதிமொழி செய்யுங்கள். இது நல்ல வழி அல்லவா? எங்களை பாவனம் ஆக்குங்கள் என்று கூறவும் செய்கின்றனர். பாவனமான ஆத்மாக்கள் முக்தியில் இருக்கின்றன. சத்யுகத்தில் இருப்பது ஜீவன் முக்தி நிலையாகும். ஒருவேளை சூரிய வம்சத்தினர் ஆக வேண்டும் என்றால் முழுமையாக முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் பிறரையும் நினைவு செய்ய வைத்திடுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு சுயதரிசன சக்கரதாரி ஆவீர்களோ மற்றும் ஆக்குவீர் களோ அவ்வளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள். இப்பொழுது பாருங்கள், இந்தக் குழந்தை பிரேம் டெராடூனில் இருக்கின்றார் டெராடூன் வாசிகள் அத்தனை பேரும் சுயதரிசன சக்கர தாரிகளாக ஆகாமல் இருந்தனர், இப்பொழுது எப்படி ஆனார்கள்? பிரேம் குழந்தை தனக்குச் சமமாக ஆக்கிவிட்டது. இவ்வாறு தனக்குச் சமமாக ஆக்குவதன் மூலம் தெய்வீக மரம் வளர்கிறது. கண் இழந்தவர்களை அலங்கரிக்கப்பட்டவர்களாக ஆக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும் அல்லவா? 8 மணி நேரம் உங்களுக்கு சுதந்திரம் உண்டு. சரீர நிர்வாகத்திற்காக தொழில் முதலியவை செய்ய வேண்டும். எங்கே சென்றாலும் முயற்சி செய்து என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையை எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு நீங்கள் முழு சிருஷ்டிக்கும் சாந்தியின் தானம் அளிக்கிறீர்கள் என்பதாகும். நினைவின் மூலம் சாந்தியின் தானம் அளிப்பது ஒன்றும் கடினமானது அல்ல. ஆம், அவ்வப் போது நினைவில் அமர வைக்கப்படுகிறது. ஏனெனில், குழுவின் பலம் சேர்கிறது. சிவபாபாவை நினைவு செய்து அவரிடம் பாபா, இவர் நமது குலத்தைச் சேர்ந்தவர் இவரது புத்தியின் பூட்டைத் திறங்கள் என்று கூறுங்கள் என்று பாபா புரிய வைத்து இருக்கின்றார். இது கூட நினைவு செய்வதற்கான யுக்தி ஆகும். நடந்தாலும், போனாலும், வந்தாலும் சிவபாபாவின் நினைவு இருக்க வேண்டும், பாபா இவருக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள்- இதை தனது பயிற்சியாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஆசீர்வாதம் கொடுக்கக்கூடிய கருணை உள்ளம் உடையவர் ஒரே ஒரு பாபா மட்டுமே ஆவார். ஹே பகவான்! இவர் மீது இரக்கம் காண்பியுங் கள். பகவானைத் தான் கூறுவார்கள் அல்லவா? அவரே கருணைக் கடல், ஞானக் கடல், ஆனந்தக் கடல் ஆவார்;. தூய்மையிலும் முழுமையாக இருக்கின்றார். அன்பிலும் முழுமையாக இருக்கின்றார். எனவே, பிராமண குல பூஷ்ணர்களும் தங்களுக்குள் எவ்வளவு அன்பாக இருக்க வேண்டும்! யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. அங்கே மிருகங்கள் போன்றவை கூட யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே சகோதர சகோதரனாக இருந்தபோதிலும், சிறிய விசயத்திற்காக தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள். அங்கேயோ, மிருகங்கள் போன்றவை கூட சண்டை போடுவதில்லை. நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளவில்லை எனில் நீங்கள் மிகுந்த தண்டனை அடைவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். பதவி தாழ்ந்ததாகிவிடும். தண்டனைக்குத் தகுதி யானவராக நாம் ஏன் ஆக வேண்டும்! மதிப்போடு தேர்ச்சி பெற வேண்டும் அல்லவா? கடைசியில் பாபா அனைத்து காட்சியும் காண்பித்துக்கொண்டே இருப்பார். இப்பொழுது குறைவான சமயமே உள்ளது. ஆகையால், துரிதமாக்கிக்கொண்டே செல்லுங்கள். நோய்வாய்ப் பட்டிருக்கும் பொழுது கூட அனைவருக்கும் ராம், ராம் எனக் கூறுங்கள் என்று கூறுகின்றனர், உள்ளத்திலிருந்து கூறுகிறார்கள். கடைசியில் கூட சிலர் மிகவும் தீவிரமாகச் செல்கின்றனர். உழைத்து முன்னேறி விடுகின்றனர். நீங்கள் அதிக அதிசயங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். நாடகத்தின் இறுதியில் அதிசயமான காட்சி இருக்கிறது அல்லவா? கடைசியில் தான் ஆஹா, ஆஹா என்பது ஏற்படுகின்றது, அந்த சமயத்திலோ மிகுந்த குஷியில் இருப்பீர்கள். யாரிடம் ஞானம் இல்லையோ அவர்களோ அங்கேயே மூர்ச்சை அடைந்து விடுவார்கள். அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில் மருத்துவர்கள் பலவீனமானவர்களை நிற்க வைப்ப தில்லை. பிரிவினையின் போது என்ன நடந்தது, அனைவரும் பார்த்தீர்கள் அல்லவா? இதுவோ மிகவும் வேதனை நிறைந்த சமயம் ஆகும். இதை இரத்த வெள்ளம் என்று கூறப் படுகிறது. இதைப் பார்ப்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். உங்களுடையது 84 பிறவிகளின் கதையாகும். நாமே தேவி, தேவதையாக இராஜ்யம் செய்தோம். பிறகு, மாயைக்கு வசமாகி இல்லற மார்க்கத்தில் சென்றுவிட்டோம், பிறகு, இப்பொழுது தேவதை ஆகின்றோம். இதை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் கூட படகு கரை சேர்ந்து விடும். இதுவே சுயதரிசன சக்கரம் அல்லவா. நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிக குழந்தைகளுக்கு, ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தைக்குச் சமமாக அனைத்து குணங்களில் நிறைந்தவர் ஆக வேண்டும். தங்களுக்குள் மிகவும் அன்போடு இருக்க வேண்டும். ஒருபோதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.

2. போகும்போதும், வரும்போதும் தந்தையை நினைவு செய்வதற்கான பயிற்சி செய்ய வேண்டும். நினைவில் இருந்து முழு உலகத்திற்கும் அமைதியின் தானம் அளிக்க வேண்டும்.

வரதானம்:-

தடைகளை அழிக்கும் ஸ்திதியில் நிலைத்திருப்பதால் எவ்வளவு பெரிய தடையும் விளையாட்டாக அனுபவம் ஆகும். விளையாட்டு என்று புரிந்துகொள்ளும் காரணத்தினால் தடைகளைக் கண்டு ஒருபொழுதும் பயப்படமாட்டீர்கள். ஆனால், குஷி குஷியாக வெற்றியாளர் ஆகிவிடுவீர்கள் மற்றும் டபுள் லைட்டாக இருப்பீர்கள். நாடகம் என்ற ஞானத்தின் நினைவினால் ஒவ்வொரு தடையும் புதிதல்ல (நத்திங் நியூ), மிகவும் பழைய விசயம் என்று தோன்றும். அனேக முறை வெற்றியாளர் ஆகியிருக்கின்றேன் – இத்தகைய நிச்சயபுத்தி உடைய ஞானத்தின் இரகசியங்களைப் புரிந்திருக்கக் கூடிய குழந்தைகளுடைய நினைவுச் சின்னமே அச்சல்கர் (அபு மலையில் இருக்கும் ஒரு இடம்) ஆகும்.

சுலோகன்:-

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிப்பான மகாவாக்கியம்

நாம் நல்ல அல்லது தீய செயல் என்ன செய்கின்றோமோ அதற்கான பலன் கட்டாயம் கிடைக்கிறது. எவ்வாறு ஒருவர் தானம், புண்ணியம் செய்கின்றார் யாகம் வளர்க்கின்றார், வழிபாடு, பாராயணம் செய்கின்றார் என்றால் நான் ஈஸ்வரன் பெயரில் என்னவெல்லாம் தானம் செய்தேனோ, அது பரமாத்மாவின் தர்பாரில் சேர்ந்துவிடுகிறது என்று நினைக்கின்றார். எப்பொழுது நாம் இறந்து போவோமோ, அப்பொழுது அதன் பலன் அவசியம் கிடைக்கும், மேலும், நமக்கு முக்தி கிடைத்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வதால் எந்த பலனும் சதா காலத்திற்குக் கிடைப்பதில்லை என்பதை நாம் அறிந்துகொண்டோம். என்ன கர்மம் நாம் செய்வோமோ, அதிலிருந்து அல்பகாலத்திற்கான ஒரு துளி சுகத்தின் பிராப்தி கட்டாயம் கிடைக்கிறது. எதுவரை இந்த நடைமுறை வாழ்க்கை சதா சுகம் நிறைந்த தாக ஆகவில்லையோ, அதுவரை அதற்கான ரிட்டர்ன் கிடைக்காது. நீங்கள் என்ன வெல்லாம் செய்து வந்திருக்கின்றீர்களோ, அதை செய்ததனால் உங்களுக்கு முழுமையான இலாபம் கிடைத்துள்ளதா? என்று நாம் யாரிடமாவது கேட்டால் அவர்களிடம் இதற்கான பதில் எதுவும் இருக்காது. இப்பொழுது அது பரமாத்மாவிடம் சென்று சேர்ந்ததா அல்லது இல்லையா, அது நமக்கு என்ன தெரியும்? எதுவரை தன்னுடைய நடைமுறை வாழ்வில் கர்மம் சிரேஷ்டமாக ஆகவில்லையோ, அதுவரை எவ்வளவு தான் உழைத்தாலும் முக்தி, ஜீவன்முக்தி கிடைக்காது. நல்லது, தானம், புண்ணியம் செய்யப்பட்டது ஆனால் அதை செய்வதனால் எந்த விகர்மமும் பஸ்மம் ஆகவில்லை, பிறகு முக்தி, ஜீவன்முக்தி எவ்வாறு கிடைக்கும்? இத்தனை புனித மகாத்மாக்கள் உள்ளனர், எதுவரை அவர்களுக்கு கர்மங்களைப் பற்றிய ஞானம் இல்லையோ, அதுவரை அவர்களுடைய கர்மம் அகர்மமாக ஆக முடியாது, அவர்கள் முக்தி, ஜீவன்முக்தியை அடையமாட்டார்கள். சத்திய தர்மம் என்பது என்ன, சத்திய கர்மம் என்பது என்ன என்பது அவர்களுக்கும் தெரியாது. வாயினால் இராம், இராம் என்று சொல்வதனால் மட்டும் முக்தி கிடைக்காது. இறந்த பிறகு நமக்கு முக்தி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்துவிடு கின்றார்கள். மரணத்திற்குப் பிறகு என்ன பலன் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவே தெரியாது. எதுவுமே கிடைக்காது. மற்றபடி மனிதர்கள் தன்னுடைய வாழ்வில் தீய கர்மம் செய்தாலும், நல்ல கர்மம் செய்தாலும் அதற்கான பலனை இந்த வாழ்க்கையிலேயே அனுபவிக்க வேண்டும். இப்பொழுது எவ்வாறு சுத்த கர்மம் செய்து தன்னுடைய நடைமுறை வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற இந்த முழு ஞானம் நமக்கு பரமாத்மா ஆசிரியர் மூலம் கிடைத்துக்கொண்டு இருக்கின்றது. நல்லது. ஓம் சாந்தி.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top