11 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
April 10, 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய புத்தியில் முழு நாளும் சேவையைப் பற்றிய சிந்தனைதான் வர வேண்டும். நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் கண் இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆவீர்கள்.
கேள்வி: -
உயர்ந்த பதவியை அடைவதற்காக முக்கியமான எந்த தாரணை இருக்க வேண்டும்?
பதில்:-
எப்பொழுது தனது கர்மேந்திரியங்கள் மீது முழுமையிலும் முழுமையான கட்டுப்பாடு இருக்குமோ, அப்பொழுதே உயர்ந்த பதவி கிடைக்கும். ஒருவேளை, கர்மேந்திரியங்கள் கட்டுப் பாட்டில் இல்லை, நடத்தை சரியாக இல்லை, மிக அதிகமான விருப்பங்கள் உள்ளன, பேராசை உள்ளது எனில், உயர்ந்த பதவியிலிருந்து வஞ்சிக்கப்பட்டுவிடுவீர்கள். உயர்ந்த பதவியை அடைய வேண்டுமெனில், தாய், தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள். கர்மேந்திரியங் களை வென்றவர்கள் ஆகுங்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
கண் இழந்தவர்களுக்கு வழி காண்பியுங்கள் பிரபு
ஓம் சாந்தி. இந்தப் பாடல் கண்காட்சியில் ஒலிக்கச் செய்வதற்கான மிக நல்ல பாடல் ஆகும். கண் காட்சியில் பாடல் ஒலிக்க முடியாது என்பது கிடையாது. இதைப் பற்றிக் கூட நீங்கள் புரிய வைக்க முடியும். ஏனெனில், அனைவரும் அழைக்கின்றனர். ஆனால், எங்கு செல்ல வேண்டும் மற்றும் யார் அழைத்துச் செல்வார்கள் என்பதை அறியவில்லை. நாடகம் அதாவது விதியின் அனுசாரம் பக்தர்கள் பக்தி செய்ய வேண்டும். எப்பொழுது பக்தி முடிவடைகிறதோ, அப்பொழுதே தந்தை வருகின்றார். வீதி வீதியாக எவ்வளவு அலைகின்றனர்! மேளா, திருவிழாக்கள் போன்றவை நடைபெறுகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக் கின்றன. சிரத்தையோடு தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்வது, அலைந்து திரிவது வழக்கத்தில் உள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது என்றால் அரசாங்கம் தபால்தலை போன்றவற்றை வெளி யிடுகிறது. சாதுக்களுடைய தபால்தலையைக் கூட வெளியிடுகிறது. பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். இவை அனைத்தும் இராவண இராஜ்யத்தின் அதாவது மாயையின் பகட்டு ஆகும். அதனுடைய திரு விழாவும் நடைபெற வேண்டும். அரைக் கல்பமாக நீங்கள் இராவண இராஜ்யத்தில் அலைந்து கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது பாபா வந்து இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கின்றார். தாமே பூஜைக்குரியவர், தாமே பூஜாரி என்ற இந்த மகிமை யாருடையது என்பதை உலகம் அறியவில்லை. முதலில் 16 கலைகள் சம்பூரணமாக, பூஜைக்குரியவர்களாக இருக்கின்றோம். பிறகு, 2 கலைகள் குறைந்துவிடுகின்றன. அவர்களை அரை பூஜைக்குரியவர் கள் எனலாம். முழு பூஜைக்கு உரியவர்கள் பிறகு, இரண்டு கலைகள் குறைவதால் அரை பூஜைக்கு உரியவர் கள் என்று கூற முடியும். பூஜாரியிலிருந்து பிறகு பூஜைக்கு உரியவர்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர், அரை பூஜைக்கு உரியவர்கள் ஆகிவிடுவீர்கள். இப்பொழுது இந்தக் கலியுகத்தின் இறுதியில் நமது பூஜாரி நிலையின் நடிப்பானது முடிந்துவிடுகிறது. பூஜைக்கு உரியவர்களாக ஆக்குவதற்காக பாபா வரவேண்டிய தாக உள்ளது. இப்பொழுது பாபா உலகத்தின் எஜமானர் ஆக்குகின்றார். இதுவும் உலகம் தான், அதுவும் உலகமாக (சத்யுகம்) இருக்கும். அங்கே மிகவும் குறைவான மனிதர்களே இருப்பார் கள். ஒரு தர்மம் இருக்கும். அனேக தர்மங்கள் ஆகிவிடுவதனாலேயே குழப்பம் ஏற்படுகிறது.
இப்பொழுது தகுதியானவர் ஆக்குவதற்காக பாபா வந்திருக்கிறார். எந்தளவு பாபவை நினைவு செய்வீர்களோ அந்தளவு தனக்கும் நன்மை செய்வீர்கள். நன்மை செய்வதற்கான ஆர்வம் எந்தளவு உள்ளது என்று பார்க்க வேண்டும். மனிதர்கள் நல்ல முறையில் புரிந்துகொள்ளும் படியான சித்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஓவியர்களுக்கு இருக்கிறது. நாம் எல்லையற்ற தந்தையின் சேவை செய்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். பாரதத்தை சொர்க்கமாக்க வேண்டும். கண்காட்சியில் பாருங்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள்! எனவே, கண்காட்சியில் அத்தகைய சித்திரங்களை உருவாக்க வேண்டும், யார் வந்தாலும், இந்த சித்திரம் மிகச் சரியான வழியை காண்பிக்கக் கூடியது என்று புரிந்துகொள்ள வேண்டும். திருவிழாக்கள் போன்றவை என்ன உள்ளனவோ, அவை இதற்கு முன் ஒன்றுமே இல்லை. இந்த ஞானத்தைப் புரிந்துள்ள ஓவியருடைய புத்தியில் அனேகருக்கு நன்மை ஏற்படும்படியான சித்திரங்களை உருவாக்க வேண்டும் என்பது இருக்கும். இரவு பகலாக புத்தி இந்த விˆயத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். இந்த பொருட்கள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. மரணம் திடீரென்று வருகிறது. ஒருவேளை, காலணி (செருப்பு) போன்றவற்றின் நினைவில் இருக்கும்பொழுது மரணம் வந்துவிடுகிறதென்றால் காலணி போன்ற பிறப்பு கிடைக்கும். இங்கேயோ தேக சகிதம் அனைத்தையும் மறந்துவிட வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தந்தை யார்? என்பதைக் கூட நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஆத்மாக்களின் தந்தையை அறிவீர்களா? என்று எவரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். தெரியாது என்று கூறுவார்கள். எவ்வளவு நினைவு செய்கிறார்கள்! வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள். தேவிகளிடம் கூட சென்று வேண்டு கின்றனர். தேவியினுடைய பூஜை செய்தார்கள் மேலும், ஏதாவது கிடைத்துவிடுகிறது என்றால், அவ்வளவுதான் அவர்களிடம் பலியாகிவிடுகிறார்கள். பின்னர், பூஜாரியையும் கூட பிடித்துக் கொள்கின்றனர். அவரும் கூட ஆசிர்வாதம் செய்கின்றார். எவ்வளவு மூடநம்பிக்கை! எனவே, அத்தகைய பாடல்களின் விளக்கத்தை கண் காட்சியில் கூட புரியவைக்க முடியும். இந்தக் கண்காட்சி கிராமம் கிராமமாகச் செல்லும். தந்தை ஏழைப்பங் காளனாக இருக்கின்றார். அவர்களை நன்றாக முன்னேற்ற வேண்டும். செல்வந்தரோ கோடியில் ஒருவர்தான் வருவார். பிரஜைகள் அனேகர் உள்ளனர். இங்கே மனிதரிலிருந்து தேவதை ஆக வேண்டும். தந்தையிட மிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. முதன் முதலில் தந்தை நமக்குக் கற்பிக்கின்றார் என்று அவரை அறிந்துகொள்ள வேண்டும். இந்த சமயத்தில் மனிதர்கள் எவ்வளவு கல்புத்தி உடையவர்களாக இருக்கின்றனர்! இத்தனை பேர் சேவை கேந்திரங்களுக்கு (சென்டர்) வருகின்றனர், அனைவருக்கும் நம்பிக்கை உள்ளதா என்றும் பார்க்கின்றார். தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கின்றார் என்பதைக் கூட புரிந்திருக்கவில்லை.
இந்தப் பாவ உலகத்திலிருந்து… என்ற மற்றுமொரு பாடலும் உள்ளது. அதுவும் நல்ல பாடலாகும். இது பாவங்கள் நிறைந்த உலகமாகும். பகவானின் வாக்கியம் – இது அசுர சம்பிர தாயம் ஆகும், நான் இதை தெய்வீக சம்பிரதாயமாக ஆக்குகின்றேன். பின்னர், மனிதர்களின் கமிட்டிகள்(செயற்குழு) போன்றவை இந்தக் காரியத்தை எவ்வாறு செய்ய முடியும்? இங்கே அனைத்தும் புத்திக்கான விசயம் ஆகும். நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருக்கிறீர்கள், உங்களை எதிர்காலத்திற்காக தூய்மையான தேவதை ஆக்குகின்றேன் என்று பகவான் கூறுகின்றார். இந்த சமயத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்களாக(பதீதமாக) உள்ளனர். பதீதம் என்ற வார்த்தையே விகாரத்தைக் குறிப்பதாகும். சத்யுகத்தில் விகாரமற்ற உலகமாக இருந்தது. இது விகாரி உலகம் ஆகும். கிருஷ்ணருக்கு 16108 இராணிகள் இருப்பதாகக் காண்பித்துள்ளனர். இது கூட நாடகத்தில் பதிவாகி உள்ளது. என்னவெல்லாம் சாஸ்திரங்கள் உருவாக்கி இருக்கின்றனரோ, அவற்றில் அவதூறாக எழுதி விடுகின்றனர். சொர்க்கத்தைப் படைக்கும் பாபாவைப் பற்றியும் கூட என்னென்ன கூறுகின்றனர்! பாபா நம்மை எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார்! என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு நல்ல அறிவுரைகள் வழங்குகின்றார்! உண்மையிலும் உண்மையான சத்சங்கம் இது வாகும். மற்ற அனைத்தும் பொய்யான சங்கம்(தொடர்பு) ஆகும். அத்தகையவர்களை பின்னர், பரமபிதா பரமாத்மா வந்து உலகத்தின் எஜமானர் ஆக்குகின்றார். குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது கண் இழந்தவர் களின் ஊன்றுகோல் ஆகவேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். யார் சுயம் ஆயத்தம் (தயார்) ஆக வில்லையோ அவர்கள் பிறருக்கு ஊன்றுகோலாக எவ்வாறு ஆவார்கள்! ஞானம் ஒருபொழுதும் அழிந்து போவதில்லை. ஒரு முறை தாய், தந்தை என்று கூறினாலே ஏதாவது கொஞ்சம் பலன் கிடைத்து விடும். ஆனால், வரிசைக்கிரமமான பதவி உள்ளது அல்லவா! நடத்தை மூலம் கூட கொஞ்சம் தெரிந்துவிடும். பிறகும் கூட முயற்சி செய்விக்கப் படுகிறது. என்ன கிடைத்துள்ளதோ அது போதும் என்பது கூடாது. முயற்சி மூலம் உயர்ந்த பிராப்தி கிடைக்கும். முயற்சி இல்லாமல் தண்ணீர் கூட கிடைக்காது. இதை கர்மச் சேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இங்கே கர்மம் செய்யாமல் மனிதர்கள் இருக்க இயலாது. கர்ம சந்நியாசம் என்ற வார்த்தையே தவறானது ஆகும். அனேகர் ஹடயோகம் செய்கின்றனர். தண்ணீர் மீது, நெருப்பின் மீது நடப்பதற்குக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், என்ன லாபம்? வீணாக ஆயுளை இழக் கின்றனர். இராவணனுடைய துக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே பக்தி செய்யப்படுகிறது. விடுபட்டு பின்னர் வீடு திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையினால், நாங்கள் முக்திதாமம் செல்ல வேண்டும் அல்லது சுகதாமம் செல்ல வேண்டும் என்று அனைவரும் நினைவு செய்கின்றனர். இரண்டுமே கடந்தகாலம் ஆகி விட்டன. பாரதம் சுகதாமமாக இருந்தது. இப்பொழுது நரகமாக உள்ளது எனில், நரகவாசி என்று சொல்லலாம் அல்லவா! இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று சுயம் நீங்களே கூறுகிறீர்கள். நல்லது, அவ்வாறெனில் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா! சொர்க்கத்திற்கு எதிரானது நரகம் ஆகும். மற்றபடி, அதுவோ சாந்திதாமம் ஆகும். பெரிய முக்கிய மனிதர்கள் இதைக்கூட புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் நரகத்தில் இருக்கிறோம் என்று தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கின்றனர். நீங்கள் மிகுந்த யுக்தியுடன் நிரூபித்து எடுத்துரைக்க வேண்டும். இந்தக் கண்காட்சியானது மிக உயர்ந்த காரியம் செய்து காண்பிக்கும். இந்த சமயத்தில் மனிதர்கள் எவ்வளவு பாவம் செய்கின்றனர்! சொர்க்கத்தில் அத்தகைய விசயங்கள் இருக்காது. அங்கோ பிராப்தி கிடைக்கிறது. நீங்கள் மீண்டும் சொர்க்கம் செல்கிறீர்கள். அனேக முறை இந்த உலகத்தின் எஜமானர்களாக நாம் ஆகி இருக்கிறோம், பின்னர் இப்பொழுது மீண்டும் ஆகிக் கொண்டு இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். உலகில் எவருக்கும் தெரியாது. உங்களில் கூட சிலர் மட்டும் புரிந்திருக்கின்றனர். இந்த விளையாட்டிலிருந்து எவரும் விலக இயலாது. மனிதர்கள் எப்பொழுது துக்கம் நிறைந்தவர்கள் ஆகின்றனரோ அப்பொழுது மோட்சத்தை விரும்புகின்றனர். நல்ல முறையில் முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். தாய், தந்தையைப் பின்பற்றி நல்ல பதவியை அடையுங்கள், தனது நடத்தையை சீராக மாற்றுங்கள். தந்தை அறிவுரைகள் வழங்குகின்றார். பிறகு, அதன்படி ஏன் நடப்பதில்லை? அதிகமான விருப்பங்கள் இருக்கக் கூடாது. யக்ஞத்திலிருந்து என்ன கிடைக்கிறதோ அதை உண்ண வேண்டும். பேராசை உள்ளது, கர்மேந்திரியங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனில், பதவி கூட உயர்ந்ததாக அடைய முடியாது. எனவே, அத்தகைய பாடலை கண்காட்சியில் ஒலிக்கச் செய்து அதைப் பற்றி நீங்கள் புரிய வைக்க இயலும்.
நீங்கள் சிவபாபாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிவபாபாவிற்கும் மேலே(உயர்ந்தவர்) வேறு எவரும் கிடையாது. உங்கள் அனைவரையும் விட உயர்ந்தவர் எவராவது இருப்பார்கள்! 84 பிறவிகளில் 84 தாதா, பாபா கூட கிடைக்கின்றனர். சிவபாபா படைப்பாளர் ஆவார். இப்பொழுது புதிய படைப்பைப் படைத்துக் கொண்டு இருக்கின்றார். அதாவது பழையதை புதியதாக ஆக்குகின்றார். நாம் கருமையிலிருந்து வெண்மை (தூய்மை) ஆகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சொர்க்கத்தில் முதல் எண்ணில் வருபவர் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். பின்னர், இறுதியில் அவரது பிறப்பு உள்ளது. பிறகு, இவரே முதல் எண்ணிற்கு உரியவர் ஆகிறார். முழுமையிலும் முழுமையான 84 பிறவிகளை ஸ்ரீகிருஷ்ணர் எடுத்திருக்கிறார். சூரிய வம்சத்தின் தெய்வீக சம்பிரதாயத்தினர் முழுமையான 84 பிறவிகள் எடுக்கின்றனர். எந்த ஸ்ரீகிருஷ்ணர் முதல் எண்ணில் இருந்தாரோ, அவருடைய கடைசி பிறவியில் பிரவேசம் செய்து, பிறகு, அவரை ஸ்ரீகிருஷ்ணர் ஆக்குகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. அழியக்கூடிய ஆசைகள் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம். தன்னுடைய மற்றும் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
2. தேக சகிதம் அனைத்தையும் மறந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆகையினால், புத்தி எங்காவது மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.
வரதானம்:-
போர்களத்தில் யார் சேனைகளாக (படைவீரர்கள்) இருக்கும் பொழுது அவர்கள் ஒருபொழுதும் கவனக்குறைவாக இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் கவனமாக விழிப்புணர்வோடு இருப்பார்கள். நீங்களும் கூட பாண்டவ சேனைகளாக இருக்கிறீர்கள். இதில் சிறிதளவு கூட அலட்சியம் வந்து விடக்கூடாது. கவனம் என்பது இயல்பானதாக மாறிவிட வேண்டும். பலருக்கு கவனத்தில் இருப்பது கூட டென்சன் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் டென்சனான வாழ்க்கை எப்பொழுதும் வாழ முடியாது. ஆகையால் இயல்பான கவனத்தை தனது பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். கவனம் வைப்பதினால் தானாகவே நினைவு சொரூபம் ஆகிவிடலாம். மறதி என்ற பழக்கம் போய்விடும்.
சுலோகன்:-
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியம்
1. நினைவின் தொடர்பு ஞானத்தோடு உள்ளது, ஞானம் இல்லாமல் நினைவு யதார்த்தமாக இருக்க முடியாது.
முதலாவதாக மனிதர்கள் தனது சுகம் நிறைந்த வாழ்க்கையை உருவாக்குவதற்காக எந்தவொரு முக்கிய ப்யாயிண்டை (கருத்தை) புத்தியில் வைக்க வேண்டும்? தந்தையாகிய பரமாத்மாவின் குழந்தையாக இருக்கிறோம் என்பதை முதலில் இந்த முக்கிய விஷயம் புரிந்துக் கொள்ள வேண்டும். அந்த தந்தையின் நினைவில் ஒவ்வொரு நொடியும் சுவாசத்திற்கு சுவாசம் நிறைந்திருக்க வேண்டும், அந்த பயிற்சியில் இருப்பதற்கான முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். சுவாசம் சுவாசம் என்பதன் அர்த்தம் முழுவதுமாக புத்தியில் நினைவு இருக்க வேண்டும், இதைத் தான் நிரந்தர யோகம், துண்டிக்கபடாத தொடர்ச்சியான நினைவு என்று சொல்லப்படுகிறது. இது வாயினால் உச்சரிக்கக் கூடிய நினைவு அல்ல, மேலும் ஏதாவதொரு சிலையை முன்னால் வைத்து அதை கவனிப்பதும் அல்ல. ஆனால் இது புத்தியின் நினைவு மூலம் நினைவு செய்வதாகும். பரமத்மாவின் முழுமையான அறிமுகம் இருக்கும் பொழுது தான் அந்த நினைவு நிரந்தரமாக இருக்க முடியும்.. அப்பொழுது கவனம் முழுமையாக இருக்க முடியும். ஆனால் பரமாத்மா கீதையில் தெளிவாக சொல்கிறார், என்னை கவனிப்பதினாலோ, ஜெப்பிதினாலோ (மாலை உருட்டுதல்) சந்திக்க முடியாது. மேலும் என்னுடைய வடிவத்தை முன்னால் வைக்காமல் அவரை நினைவு செய்ய வேண்டும். ஆனால் ஞானம் யோகத்தின் மூலம் பரமாத்மாவை அடைய வேண்டும். ஆகையால் முதலாவதாக ஞானம் தேவைப்படுகிறது, ஞானம் இல்லாமல் நினைவு நிலையாக இருக்க முடியாது. நினைவினுடைய தொடர்பே ஞானம் ஆகும். இப்பொழுது ஞானத்தின் மூலம், மனதினால் கற்பனை செய்வது அல்லது அமர்ந்து தர்சனம் செய்வது பார்த்துக் கொண்டிருக்கும் பொருளிற்கான ஞானம் இருக்கும் பொழுது தான் யோகம் மற்றும் கவனம் சரியாக இருக்க முடியும், ஆகையால் நான் யாராக இருக்கிறேன், என்னிடம் எப்படி யோகத்தில் ஈடுபட வேண்டும் என்பதை பரமாத்மா சொல்கிறார். அதற்கான ஞானமும் வேண்டும். ஞானத்திற்காக முதலில் நல்ல தொடர்பு வேண்டும், இப்பொழுது இந்த அனைத்து ஞானத்தின் பாயிண்டையும் புத்தியில் வைக்கும் பொழுது தான் யோகத்தில் சரியாக இருக்க முடியும்.
2. உலகத்தின் ஆரம்ப காலகட்டம் எப்படி இருக்கும்? பரமாத்மா உலகத்தை எப்படி உருவாக்கினார் என்று மனிதர்கள் கேட்கிறார்கள்? முதலில் எப்படிப்பட்ட மனிதனை உருவாக்கினார், இப்பொழுது அவர்களுடைய பெயர் ரூபத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். பரமாத்மா உலகத்தை முதலில் பிரம்மாவின் உடலில் இருந்து ஆரம்பம் செய்கிறார், முதல் மனிதன் பிரம்மாவை உருவாக்குகிறார். இப்பொழுது அவரை பற்றி புரிய வைக்கப்படுகிறது. பரமாத்மா தான் உலகத்தை உருவாக்குகிறார், எனவே அவசியம் பரமாத்மாவும் இந்த உலகத்தில் தனது நடிப்பை நடிக்கிறார். இப்பொழுது பரமாத்மா எப்படி நடிப்பை நடிக்கிறார்? முதலில் பரமாத்மா உலகத்தை உருவாக்குகிறார், அதல் முதலில் பிரம்மாவை உருவாக்குகிறார், எனவே முதலில் பிரம்மாவின் ஆத்மா தூய்மையாக்கப்படுகிறது. அவர் தான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிறார், அந்த உடல் மூலம் மீண்டும் தேவி தேவதைகளின் உலகம் ஸ்தாபனை ஆகிறது. எனவே தெய்வீக உலகத்தின் படைப்பு பிரம்மாவின் உடல் மூலம் செய்ய வைக்கிறார், எனவே தேவி தேவதைகளின் முதல் பிதா பிரம்மாவாக இருக்கிறார், பிரம்மா தான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிறார். அவர் தான் ஸ்ரீ கிருஷ்ணரின் கடைசி பிறவியாக பிரம்மா ஆகிறார். இப்பொழுது அப்படிப்பட்ட உலகத்தின் நியமம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அதே ஆத்மா தான் சுகத்தின் நடிப்பை முழுமையாக நடித்து விட்ட பிறகு துக்கத்தின் நடிப்பை நடிக்க வருகிறது. எனவே இரஜோ, தமோ நிலையை கடந்து மீண்டும் சூத்ரனிலிருந்து பிராமணன் ஆகிறார். எனவே பிரம்மாவின் வம்சத்தை சேர்ந்த நாம் தான் சிவ வம்சத்தை சேர்ந்த உண்மையான பிராமணர்களாக இருக்கிறோம். யார் பிரம்மாவின் மூலம் அழிவற்ற ஞானத்தை பெற்று தூய்மை ஆகிறார்களோ, அவர்களை தான் பிரம்மாவின் வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
3. ஓம் என்ற வார்த்தையின் சரியான பொருள் நாம் ஓம்சாந்தி என்று சொல்கிறோம் என்றால் முதலில் ஓம் என்ற வார்த்தையின் முழுமையான பொருளை புரிந்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை யாரிடமாவது ஓம் என்பதன் பொருளை என்னவென்று கேட்டால் அவர்கள் அதனுடைய பொருளை மிகவும் நீண்டதாக சொல்வார்கள். ஓம் என்பதன் பொருள் ஓம்கார் என்று மிகவும் சப்தத்தோடு உச்சரிக்கிறார்கள். இந்த ஓம் என்ற வார்த்தையை வைத்து மிகப்பெரிய சாஸ்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஓம் என்ற வார்த்தையின் பொருள் நீண்டதாக இல்லை.. தன்னை சுயம் பரமாத்மா ஓம் என்ற வார்த்தையின் பொருளை மிகவும் சுலபமாக மற்றும் எளிமையாக புரிய வைக்கிறார், ஓம் என்பதன் பொருள் – நான் ஆத்மா என்னுடைய உண்மையான தர்மம் சாந்த சொரூபமாகும். இப்பொழுது இந்த ஓம் என்பதன் பொருளில் நிலைத்து இருக்க வேண்டும். எனவே ஓம் என்பதன் பொருள் நான் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தையாக இருக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் ஓம் என்பதின் பொருளை மட்டுமே நிலைத்திருக்க வேண்டும். மற்றபடி வாயில் ஓம் என்று உச்சரிப்பு செய்வதற்கான அவசியமில்லை. இதை புத்தியில் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். ஓம் என்பதன் பொருள் என்னவோ அந்த சொரூபத்தில் நிலைத்திருக்க வேண்டும். மற்றபடி உலகத்தினர் ஓம் என்பதன் பொருளை சொல்கிறார்களே தவிர அந்த சொரூபத்தில் நிலைத்திருப்பதில்லை. நாம் ஓம் என்பதன் சொரூபத்தை தெரிந்திருக்கும் பொழுது தான் அந்த சொரூபத்தில் நிலைத்திருக்க இயலும். பரமாத்மா விதை சொரூபமானவர் என்பதையும் தெரிந்திருக்கிறோம், மேலும் அந்த விதை ரூபமான பரமாத்மா இந்த முழு மரத்தையும் எப்படி உருவாக்குகிறார், அதனுடைய முழு ஞானமும் நமக்கு கிடைத்திருக்கிறது. நல்லது ஒம்சாந்தி.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!