10 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

April 9, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

பறக்கும் கலைக்கு ஆதாரம் ஆர்வம்-உற்சாகம் என்ற இறக்கை

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று அனைத்துக் குழந்தைகளின் அன்பு நிறைந்த சந்திப்பிற்கான பாவனை மற்றும் சம்பூர்னம் ஆவதற்கான சிரேஷ்ட விருப்பம் நிறைந்த சுபமான ஆர்வம்-உற்சாகத்தின் அதிர்வலைகளைப் பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையிடம் அதிலும் இந்த கல்பத்தில் முதல் முறை சந்திக்கக் கூடிய குழந்தைகளின் உற்சாகம் மற்றும் இந்த கல்பத்தில் பல முறை சந்திப்பு செய்திருக்கும் குழந்தைகளின் உற்சாகம் தனித் தனியானது. இதையே நீங்கள் தங்களது மொழியில் புது குழந்தைகள் மற்றும் பழைய குழந்தைகள் என்று கூறுகிறீர்கள். ஆனால் அனைவரும் மிகவும் பழையவர்கள். ஏனெனில் பழையவர்களாக இருப்பதால் தந்தையின் பக்கம், பிராமணக் குடும்பத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு இங்கு அழைத்து வந்திருக்கிறது. அடை யாளத் திற்காகத் தான் புதியவர்கள் மற்றும் பழையவர்கள் என்று கூறப்படுகிறது. ஆக புதுக் குழந்தைகளின் ஆர்வம்- உற்சாகம் என்னவெனில் குறுகிய காலத்தில் மிக அதிகமாக பறந்து சென்று பாப்சமான் ஆகி காண்பிக்க வேண்டும். பழைய ஆத்மாக்களிடம் பாப்தாதாவிடமிருந்து என்ன பாலனை கிடைத்ததோ, பொக்கிஷங்கள் கிடைத்ததோ அதற்குக் கைமாறு தந்தையின் முன் வைக்க வேண்டும் என்ற சிரேஷ்ட சங்கல்பம் இருக்கிறது. இருவரின் ஆர்வம்-உற்சாகம் சிரேஷ்டமானது. மேலும் இந்த ஆர்வம்-உற்சாகம் தான் இறக்கையாக ஆகி பறக்கும் கலையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. பறக்கும் கலைக்கான இறக்கை ஞானம்-யோகமாக இருந்தாலும் பிரத்ட்ச சொரூபத்தில் முழு தினச்சரியத்தில் ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நாளும் புது ஆர்வம்-உற்சாகம் தானாகவே உருவாகிறது. எங்கு ஆர்வம்-உற்சாகம் இருக்கிறதோ, அதுவே பறக்கும் கலைக்கு ஆதாரமாகும். எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும், சுத்தப்படுத்தும் காரியமாக இருந்தாலும், பாத்திரங்கள் சுத்தப்படுத்தும் காரியமாக இருந்தாலும், சாதாரண காரியமாக இருந்தாலும் அதில் ஆர்வம்-உற்சாகம் இயற்கையாக மற்றும் நிரந்தரமாக இருக்கும். ஞானப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது-கற்றுக் கொடுக்கும் போது அல்லது நினைவில் அமரும் போது-ஒருவரை நினைவில் அமர்த்தும் போது அல்லது ஆன்மீக சேவையில் பிசியாக இருக்கும் போது அந்த நேரத்தில் மட்டும் ஆர்வம்-உற்சாகம் இருக்கிறதா? அல்லது சாதாரண காரியம் என்பதால் ஸ்திதியும் சாதாரணமாக ஆகி விடுகிறது, ஆர்வம்-உற்சாகமும் சாதாரணம் ஆகிவிடுகிறது எனில் இது பறக்கும் கலையின் அடையாளம் அல்ல. பறக்கும் கலையில் உள்ள சிரேஷ்ட ஆத்மாவின் ஆர்வம்-உற்சாகத்தின் இறக்கை சதா பறந்து கொண்டே இருக்கும். எனவே பாப்தாதா அனைத்து குழந்தைகளின் ஆர்வம்-உற்சாகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைவரிடத்திலும் இறக்கை இருக்கிறது, ஆனால் அவ்வப்பொழுது ஆர்வம்-உற்சாகம் பறந்து பறந்து கலைப்படைந்து விடு கிறீர்கள். ஏதாவது சிறிய-பெரிய காரணம் உருவாகி விடுகிறது, அதாவது தடைகள் வருகிறது. சில நேரங்களில் அன்பாக கடந்து விடுகிறீர்கள், ஆனால் சில நேரம் பயந்து விடுகிறீர்கள். இதையே நீங்கள் குழப்பம் என்று கூறுகிறீர்கள். ஆகையால் எளிதாக கடந்து செல்ல முடியாத காரணத்தினால் களைப்படைந்து விடுகிறீர்கள். ஆனால் சிறிது சிறிது களைப்படைகிறீர்கள், இருப்பினும் இலட்சியம் சிரேஷ்டமாக இருக்கிறது, குறிக்கோள் மிகவும் பிரியமானதாக இருக் கிறது. ஆகையால் பறக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். சிரேஷ்ட இலட்சியம் மற்றும் பிரியமான குறிக்கோள், மேலும் தந்தையின் அன்பின் அனுபவம் களைப்பு என்ற கீழான ஸ்திதியில் நிலைத்திருக்க விடுவதில்லை. ஆகையால் மீண்டும் பறக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். ஆக பாப்தாதா குழந்தைகளின் இந்த விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்கின்றர். தந்தையின் அன்பு நிறுத்த விடுவது கிடையாது. மேலும் அன்பில் அதிகபட்சம் தேர்ச்சி அடைந்து விட்டீர் கள். ஆகையால் எவ்வளவு தான் தடைகள் நிறுத்துவதற்கு முயற்சி செய்தாலும் செய்யட்டும். இது மிகவும் கடினம், இதற்குப் பதிலாக எப்படி இருந்தேனோ, அப்படியே இருந்து விடலாம் என்று அவ்வப்பொழுது நினைக்கிறீர்கள். ஆனால் விரும்பினாலும் வேகமான வாழ்க்கையில் செல்வதற்கான போதை வருவது கிடையாது. ஏனெனில் முதலில் இந்த பரமாத்மா அன்பு மற்றும் தேகதாரிகளின் அன்பு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உள்ளுக்குள் இருக்கின்றது. பறந்து பறந்து நின்று விடும் கலையில் வருகின்ற பொழுது இரண்டு பாதைகளின் நடுவில் வந்து விடுகிறீர்கள். இந்தப் பக்கம் செல்வதா? அல்லது அந்தப் பக்கம் செல்வதா? எதில் செல்வது? ஆனால் பரமாத்ம அன்பின் அனுபவம் குழப்ப நிலையை தெளிவாக்கி விடுகிறது, மேலும் ஆர்வம்-உற்சாகத்தின் இறக்கை கிடைக்கச் செய்கிறது. எனவே யோசித்தாலும் கூட நிற்கும் கலையிலிருந்து பறக்கும் கலையில் பறந்து விடுகிறீர்கள். விசயங்கள் மிக மிகச் சிறியதாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் பெரியதாக தோன்றுகிறது. சரீரத்தில் பலவீனமாக இருப்பவருக்கு ஒரு குடுவை (கிளாஸ்) தண்ணீர் எடுப்பதும் கடினமாக இருக்கும். தைரியம் உள்ளவர்களுக்கு இரண்டு வாளி தூக்குவதும் விளையாட்டாக இருக்கும். அதே போன்று சிறிய விசயத்தையும் பெரியதாக அனுபவம் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள். ஆக ஆர்வம்- உற்சாகத்தின் இறக்கை சதா பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தினமும் அமிர்தவேளையில் எந்த நினைவின் மூலம் முழு நாளும் ஆர்வம்-உற்சாகத்துடன் இருக்க முடியும் என்ற வித விதமான ஆர்வம்-உற்சாகத் திற்கான கருத்துக்களை தன் எதிரில் கொண்டு வாருங்கள். நான் ஜோதிர்பிந்து, தந்தையும் ஜோதிர்பிந்து, வீட்டிற்குச் செல்ல வேண்டும், பிறகு இராஜ்யத்தில் வர வேண்டும் என்ற இந்த ஒரே கருத்து சில நேரங்களில் குழந்தை களுக்கு சலிப்பு ஏற்படுத்தி விடுகிறது. பிறகு ஏதாவது புதிது தேவைப்படுகிறது என்று நினைக்கிறீர்கள். ஆனால் தினசரி முரளியில் ஆர்வம்-உற்சாகத்திற்கான பலவித கருத்துக்கள் இருக்கின்றன. அந்த ஆர்வம்-உற்சாகத்திற்கான விசேஷ கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். மிக நீண்ட பட்டியலை உருவாக்கி விட முடியும். டைரியிலும் குறிப்பெடுங்கள், புத்தியிலும் குறிப்பெடுங்கள். புத்தியில் வெளிப்பட வில்லை யெனில் டைரியில் பாருங்கள். பல வகையான கருத்துக்கள் தினமும் புதிய ஆர்வம்-உற்சாகத்தை அதிகப்படுத்தும். பல வகைகளை விரும்புவது தான் மனித ஆத்மாக்களின் குணமாகும். ஆகையால் ஞானக் கருத்துக்களை சிந்தித்தாலும் சரி அல்லது ஆன்மீக உரை யாடல் செய்தாலும் சரியே. முழு நாளும் பிந்துவை நினைவு செய்தால் சலிப்பு ஏற்பட்டு விடும். தந்தையும் பிந்துவாக இருக்கின்றார், நானும் பிந்துவாக இருக்கின்றேன். சங்கமயுகத்தில் ஹீரோ நடிகனாகவும் இருக்கின்றேன், ஜீரோவின் கூடவே ஹீரோவாகவும் இருக்கின்றேன். ஜீரோவாக மட்டும் கிடையாது. சங்கமயுகத்தில் ஹீரோவாக இருக்கின்ற காரணத்தினால் முழு நாளும் பல விதமான நடிப்புகளை நடிக்கின்றேன். ஜீரோவாகிய நான் முழு கல்பத்திலும் என்னுடைய நடிப்பு என்ன? இந்த நேரத்தில் என்னுடையது ஹீரோ பார்ட். யாருடன் நடிக் கின்றேன்? எவ்வளவு காலம் மற்றும் என்ன நடிப்பு நடிக்க வேண்டும்? இவ்வாறு பல வகைகளில் ஜீரோ (ஆத்மா) ஆகி தனது ஹீரோ நடிப்பின் நினைவில் இருங்கள். நினைவு செய்வதில் சில நேரம் விதை ரூப ஸ்திதியில் இருங்கள், சில நேரம் பரிஸ்தா ரூபத்தில், சில நேரம் ஆன்மீக உரையாடல் செய்யுங்கள். சில நேரம் தந்தையிடமிருந்து அடைந்த பொக்கிஷங்களின் ஒவ்வொரு இரத்தினத்தையும் எதிரில் கொண்டு வாருங்கள். எந்த நேரத்தில் எதில் விருப்பம் இருக்கிறதோ அவ்வாறு நினைவு செய்யுங்கள். எந்த நேரத்தில் எந்த சம்பந்தத்தில் தந்தையை சந்திப்பது, தந்தையின் அன்பை விரும்புகிறீர்களோ, அந்த சம்பந்தத்தில் சந்திப்பு கொண்டாடுங் கள். ஆகையால் சர்வ சம்பந்தங்களினால் தந்தை உங்களை தன்னுடையவராக ஆக்கியிருக் கின்றார், நீங்களும் தந்தையை சர்வ சம்பந்தங்களினால் தன்னுடையவராக ஆக்கியிருக் கிறீர்கள். ஒரே ஒரு சம்பந்தம் மட்டும் கிடையாது. பல சம்பந்தங்கள் இருக்கிறது அல்லவா? ஆனால் ஒரு விசயம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் – தந்தையைத் தவிர, தந்தை யின் பிராப்திகளைத் தவிர அல்லது தந்தையின் பொக்கிஷங்களைத் தவிர வேறு எந்த நினைவும் வரக் கூடாது. பலவிதமான பிராப்திகள் இருக்கின்றன, பலவிதமான பொக்கிஷங்கள் இருக்கின்றன, பலவிதமான சம்பந்தங்கள் இருக்கின்றன, பலவிதமான குஷிக்கான விசயங்கள் இருக்கின்றன, ஆர்வம்-உற்சாகத்திற்கான விசயங்கள் இருக்கின்றன. அதே விதிப்படி பயன்படுத்துங்கள். தந்தை மற்றும் நான் இதுவே பாதுகாப்பின் கோடாகும். இந்த நினைவு என்ற கோட்டை விட்டு வெளியில் வராதீர்கள். இது கோடு பரமாத்மாவின் பாதுகாப்புக் குடையாகும். எதுவரை இந்த குடை என்ற கோட்டிற்குள் இருப்பீர்களோ, அதுவரை மாயாவிற்கு எந்த தைரிய மும் இருக்காது. பிறகு கடின உழைப்பு, நிறுத்தங்கள், தடைகள் போன்ற சப்தங்களிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். ஆதி ஸ்தாபனையின் பொழுது சத்யுக ஆத்மாக்கள் பிரவேசம் ஆனார்கள். அந்த ஆத்மாக்களுக்கு விகாரங்கள் என்றால் என்ன? துக்கம் என்றால் என்ன? மாயை என்றால் என்ன? இது போன்ற சப்தங்கள் அறியாமல் இருந்தனர். குழந்தைகளுக்கு இந்த அனுபவம் இருக்கிறது அல்லவா? பழையவர்கள் இந்த விசயங்களை அறிவீர்கள். அதே போன்று யார் தந்தை மற்றும் நான் என்ற நினைவின் கோட்டிற்குள், குடைக்குள் இருக்கிறார்களோ, அவர்கள் இது போன்ற சப்தங்களை அறியாதவர்களாக ஆகிவிடுவார்கள். இதனால் சதா பாதுகாப்பாக இருக்கிறார்கள், சதா தந்தையின் இதயத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு இதயம் அதிகமாக பிடிக்கும் அல்லவா! பரிசும் இதயம் போன்று உருவாக்கிக் கொண்டு வருகிறீர்கள். கேக் இதயம் போன்று உருவாக்குகிறீர்கள், அட்டைப் பெட்டியும் இதயம் போன்று உருவாக்கு கிறீர்கள். எனவே இருப்பதும் இதயத்தில் தானே? தந்தையின் இதயத்தில் மாயை வர முடியாது. ஒரு காட்டை வெளிச்சமானதாக ஆக்கி விட்டால் காட்டு இராஜா சிங்கமும் வர முடியாது, ஓடி விடும். தந்தையின் இதயம் எவ்வளவு ஒளி நிறைந்ததாகவும், சக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது! இதற்குள் மாயையின் எந்த ரூபமும் வர முடியாது. ஆக கடின உழைப்பிலிருந்து பாதுகாப்பு அடைந்து விடுகிறீர்கள் அல்லவா! பிறப்பும் எளிதாக ஏற்பட்டது, பிறப்பு எடுத்ததில் ஏதாவது சிரமம் இருந்ததா என்ன? தந்தையின் அறிமுகம் கிடைத்தது, புரிந்து கொண்டீர்கள், விநாடியில் அனுபவம் செய்தீர்கள். தந்தை என்னுடையவர், நான் தந்தையினுடையவன். பிறப்பு எளிதாக ஏற்பட்டது, அலையவில்லை. உங்களது தேசம் என்ற வீட்டில் தந்தை குழந்தைகளை நிமித்தமாக ஆக்கி அனுப்பி வைத்தார். தேடுவது அல்லது அலையாமல் இருந்தீர்கள். வீட்டில் அமர்ந்து கொண்டே தந்தை கிடைத்து விட்டார் அல்லவா! இவர்கள் இப்பொழுது சந்திப்பதற்காக அன்பாக பாரதத்திற்கு வருகின்றனர். ஆனால் அறிமுகம் அங்கு தான் கிடைத்தது, பிறப்பு அங்கு தான் ஏற்பட்டது அல்லவா? பிறப்பு எளிதாக ஏற்பட்டது, பாலனையும் மிக எளிதாக கிடைக்கிறது. அனுபவம் செய்தால் போதும். எளிதாகத் தான் செல்ல இருக்கிறீர்கள். தந்தையின் கூடவே செல்ல வேண்டும் அல்லவா! அல்லது இடையிடையில் தர்மராஜபுரியில் நிற்க வேண்டுமா? அனைவரும் கூடவே செல்லக் கூடியவர்கள் தானே! கூடவே இருக்கின்றோம், கூடவே செல்வோம் என்ற திட சங்கல்பம் அனைவரிடத்திலும் இருக்கிறது. அதன் பிறகு பிரம்மா பாபாவின் கூடவே இராஜ்யத்தில் அல்லது நடிப்பதற்கு வருவீர்கள் – உறுதியான சங்கல்பம் இருக்கிறது தானே? நாட்கள் செல்லச் செல்ல களைப்படைந்து விட்டால் நின்று விடுவீர்கள், பிறகு என்ன செய்வீர்கள்? ஏனெனில் அந்த நேரத்தில் தந்தை நிற்கமாட்டார். இப்பொழுது நின்று கொண்டிருக்கின்றார். இப்பொழுது நேரம் கொடுத்திருக்கின்றார், அந்த நேரத்தில் நிற்கமாட்டார். அந்த நேரத்தில் விநாடியில் பறந்து விடுவார். இப்பொழுது புதுப் புது குழந்தைகளுக்கு தாமதம் ஆகியிருக்கிறது. ஆனால் மிகவும் தாமதம் (டூ லேட்) என்ற பலகை மாட்டப்படவில்லை. இவர்கள் கடைசியில் வந்திருந்தாலும் வேகமாகச் சென்று முதல் நம்பரில் வர வேண்டும் என்பதற்காக இப்பொழுது புதுப்புது குழந்தைகளுக்காக புது உலகம் வருவது நின்று இருக்கிறது. அனைவரும் கூடவே செல்வதற்கு தயாராக இருக்கிறீர்கள் தானே? யார் இந்த கல்பத்தில் முதல் முறை வந்திருக்கிறீர்களோ அவர்களுக்கு பாப்தாதா வாழ்த்துக்கள் கொடுக்கின்றார். சிறு சிறு குழந்தைகளின் மீது பெரியவர்களுக்கு அன்பு இருக்கும். ஆக தந்தை மற்றும் மூத்த சகோதர-சகோதரிகள் உங்கள் மீது விசேஷ அன்பு வைத்திருக்கின்றனர். செல்ல மானவர்களாக ஆகி விட்டீர்கள் அல்லவா! புதுக் குழந்தைகள் செல்லவமானவர்கள். புதியவர்களாக இருந்தாலும், பழையவர்களாக இருந்தாலும் அனைவரும் வேகமாகச் சென்று முதலில் வர வேண்டும். குடைக்குள் இருக்க வேண்டும், சதா இதயத்தில் இருக்க வேண்டும் – இது தான் அனைவரையும் விட மிக வேகமாக செல்வதாகும்.

தன்னைத் தான் ஒருபோதும் சலிப்படையச் செய்யாதீர்கள். சதா தனக்குள் பலவிதமான ரூபங்கள் ஆர்வம்-உற்சாகத்தை வெளிப்படுத்துங்கள். நமது கலாச்சாரத்திற்கும், இந்தியாவின் கலாச்சாரத்திற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது என்று இரட்டை அயல்நாட்டினர் சிலர் அவ்வப்பொழுது நினைக்கின்றனர். இந்தியக் கலாச்சாரம் சில நேரம் பிடித்திருக்கிறது, சில நேரம் பிடிக்கவில்லை. ஆனால் இது இந்தியக் கலாச்சாரமும் கிடையாது, அயல்நாட்டுக் கலாச் சாரமும் கிடையாது. இது பிராமணக் கலாச்சாரம் ஆகும். பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்ற பெயர் அனைவருக்கும் பிடித்திருக்கிறது தானே? பிரம்மா பாபாவின் மீதும் அதிக அன்பு இருக்கிறது, மேலும் பி.கு. வாழ்க்கையும் மிகவும் பிடித்திருக்கிறது. சில நேரங்களில் வெள்ளை ஆடைக்குப் பதிலாக வண்ண ஆடைகள் நினைவிற்கு வருகிறது. ஏனெனில் வெள்ளை ஆடை விரைவில் அசுத்தமாகி விடுகிறது. அலுவலகத்திற்குச் செல்கிறீர்கள் அல்லது எந்த இடத்திற்குச் சென்றாலும் நீங்கள் என்ன ஆடை அணிய வேண்டுமோ அதற்கு பாப்தாதா தடுக்க வில்லை. ஆனால் இது நமது அயல்நாட்டுக் கலாச்சாரம், இது எனக்கு அழகாக இருக்கும் என்ற விருத்தியுடன் அணிந்து கொள்ளாதீர்கள். சேவை பாவணையுடன் அணிந்து கொள்ளுங்கள், அழகு என்ற இலட்சியத்துடன் அல்ல. பிராமண வாழ்க்கையின் இலட்சியம் இருக்க வேண்டும். சேவையின் பொருட்டு, தேவையைப் பொருட்டு அணிந்து கொள்ளுங்கள், எந்த தடையும் இல்லை. ஆனால் அதுவும் நிமித்தமாக இருக்கும் ஆத்மாக்களின் மூலம் சரிபார்க்கவும். பாப்தாதா ஒப்புதல் கொடுத்து விட்டார், நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? என்று இருக்கக் கூடாது. சில நேரங்களில் மிகவும் சிரிப்பான விசயமும் செய்கிறீர்கள். கருத்துக்காக கூறப்பட்ட விசயங் களை நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் அதனுள் இருக்கும் நியமத்தை மறந்து விடுகிறீர்கள். பாப்தாதாவிற்கு புத்திசாலித்தனம் பிடிக்கும். ஆனால் புத்திசாலித்தனம் வரை யறையுடன் இருக்க வேண்டும், எல்லையற்று இருக்கக் கூடாது. சாப்பிடுங்கள், குடியுங்கள், அணியுங்கள், விளையாடுங்கள் – ஆனால் வரையறைக்குள். ஆக எந்த கலாச்சாரம் பிடித்திருக் கிறது? எது பிரம்மா பாபாவின் கலாச்சாரமோ, அது பிரம்மா குமார், குமாரிகளின் கலாச்சாரம் ஆகும். பிடித்திருக்கிறது அல்லவா? இவர்களிடத்தில் ஒரு விசயம் பிடித்திருக்கிறது, வெளிப்படையாக பேசி விடுகின்றனர், அனைவரும் ஒரே மாதிரியாகக் கிடையாது. சிலர் தங்களது பலவீனங்களை வர்ணிக்கின்றனர், மேலும் அலட்சியமாக இருந்து மாற்ற முயற்சி செய்வதில்லை. நான் பலவீனமாக இருக்கின்றேன் என்பதை அடிக்கடி நினைக்கின்றனர். இவ்வாறு நாசூக் ஆகாதீர்கள். சிறப்பம்சங்களை மறந்து விடுகின்றனர், பலவீனத்தையே நினைத்துக் கொண்டிருப்பர், இவ்வாறு இருக்கக் கூடாது. பலவீனங்கள் அவசியம் கூற வேண்டும், ஆனால் தந்தையிடம் கொடுத்து விட்டீர்கள் எனில் பிறகு அது யாரிடம் இருக்கும்? பிறகு ஏன் நான் இவ்வாறு இருக்கின்றேன் என்று நினைக்க வேண்டும். தந்தையிடம் கொடுத்து விட்டீர்கள் அல்லவா! பாப்தாதாவிற்கு கடிதம் எழுதி பலவீனங்களை கொடுத்து விடுகிறீர்களா? அல்லது கடிதம் எழுதி பாப்தாதாவின் அறையில் வைத்து விட்டு பதில் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? பாப்தாதா அப்படியே பதில் கூறி விடமாட்டார். எந்த குறையை நீங்கள் கொடுத்து விட்டீர்களோ, பாப்தாதா அந்த இடத்தில் உங்களுக்கு சக்தி, குஷி, ஆர்வம்-உற்சாகத்தை நிறைத்து விடுவார். ஆக பாப்தாதா என்ன கொடுக்கின்றாரோ, அதை பெற்றுக் கொள்வது கிடையாது. பதில் கிடைக்கவில்லை என்று மட்டுமே யோசிக்கிறீர்கள். தந்தை என்ன கொடுக்கிறாரோ, அதை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். பதிலை எதிர்ப்பார்க்காதீர்கள்-சக்தி, குஷி அடைந்து கொண்டே செல்லுங்கள். பிறகு பாருங்கள் எவ்வளவு நன்றாக ஆர்வம்-உற்சாகம் இருக்கிறது என்று! எந்த நேரத்தில் தனது பலவீனங்களை எழுதுகிறீர்களோ அல்லது நிமித்த ஆத்மாக்களிடம் கூறுகிறீர்களோ, கொடுத்து விட்டீர்கள் என்றால் அழிந்து விட்டது. இப்பொழுது என்ன கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை சிந்தியுங்கள். பாப்தாதா விடம் ஒவ்வொருவரிடமிருந்து எவ்வளவு கடிதம் வருகிறது! பாப்தாதா பதில் எழுதுவது கிடையாது. ஆனால் எது அவசியமோ, என்ன குறை இருக்கிறதோ, அதை நிரப்பி விடுகின்றார். மற்றபடி அன்பு நினைவுகள் தினமும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார். அன்பு நினைவுகள் கிடைக்காத நாள் ஏதாவது இருக்கிறதா? பாப்தாதா அனைவருக்கும் இரண்டு-மூன்று பக்கங்கள் கடிதம் எழுதுகின்றார். (முரளி) இவ்வளவு நீண்ட பத்திரம் தினமும் யாரும் யாருக்கும் எழுதுவது கிடையாது. உங்களுக்கு எவ்வளவு தான் பிரியமானவராக இருந்தாலும், யாராவது இவ்வளவு நீண்ட கடிதம் எழுதியிருக்கிறீர்களா? முரளி கடிதம் அல்லவா! உங்களது விசயங்களுக்கு பதில் கிடைக்கிறது தானே? ஆக இவ்வளவு நீண்ட கடிதம் எழுதியும், கூறியும் – நீங்கள் விசேஷ கடிதம் எழுதுகிறீர்கள் எனில் அதற்கு விசேஷ பதிலும் கூறுகின்றார். ஏனெனில் செல்லமானவர்கள், தேடிக் கண்டெடுக்கப்பட்டவர்கள். பதிலுக்கு பாப்தாதா சக்தி மற்றும் குஷி அதிகமாக கொடுக்கின்றார். புத்தியை சதா கவனமாக மற்றும் தெளிவாக வைத்துக் கொண்டால் போதும். முன்பே கூறியிருந்தேன், அந்த விசயத்தை தனது புத்தி யிலிருந்து நீக்கி விடுங்கள். அந்த விசயத்தை புத்தியில் வைத்திருந்தால் புத்தி தெளிவாக இருக்காது. ஆகையால் தந்தை எது பதிலுக்கு கொடுக்கின்றாரோ, அது கலப்படம் ஆகிவிடும். சில நேரம் இழந்து விடுகிறீர்கள். சில நேரம் கலப்படம் செய்து விடுகிறீர்கள்.

சில நேரங்களில் சில குழந்தைகள் என்ன செய்கின்றனர் – இன்று சமாச்சாரம் (செய்தி) கூறுகின்றேன். சேவை செய்து கொண்டு தான் இருக்கின்றேன், ஆனால் நான் சதா உதவி யாளராக இருக்கின்றேன் என்பது தந்தையின் உறுதிமொழி ஆகும். ஆனால் இந்த சேவையில் உதவி செய்யவில்லை, வெற்றி குறைவாக கிடைத்திருக்கிறது என்று சிலர் நினைக்கின்றனர். பாப்தாதா ஏன் உதவி செய்யவில்லை? ஒருவேளை நான் தகுதியானவன் இல்லையோ? என்று நினைக்கின்றனர். என்னால் சேவை செய்ய முடியாது, நான் பலவீனமாக இருக்கின்றேன். வீணாக யோசிக்கின்றனர். ஆனால் குழந்தைகள் சேவையில் உதவி வேண்டி தந்தையிடம் சங்கல்பம் செய்கின்றார் எனில் திறந்த மனதுடன் செய்யுங்கள். இதற்குக் கைமாறாக பாப்தாதா சேவைக்கான நேரத்தல் விசேஷமாக உதவி செய்வார், அதற்கு ஒரு விதியை உருவாக்குங்கள். எப்படிப்பட்ட கடின சேவையாக இருக்கட்டும், அந்த சேவையை புத்தியினால் தந்தையிடம் அர்ப்பணித்து விடுங்கள். நான் செய்தேன், வெற்றி கிடைக்கவில்லை. நான் என்பது எங்கிருந்து வந்தது? தந்தை செய்பவர்-செய்விப்பவர் என்ற பொறுப்பை மறந்து தன் மீது ஏன் சுமக்கிறீர்கள்? இது தவறாகி விடுகிறது. தந்தையின் சேவையாகும், தந்தை அவசியம் செய்வார். தந்தையை முன் நிறுத்துங்கள், தன்னை முன் நிறுத்தாதீர்கள். நான் இதை செய்தேன், நான் என்ற சப்தம் வெற்றியை தூரம் ஆகிவிடுகிறது. புரிந்ததா. நல்லது.

நாலாபுறங்களிலும் சதா ஆர்வம்-உற்சாகத்தில் பறக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆத்மாக்களுக்கு, சதா தந்தையின் இதயத்தில் இருக்கக் கூடிய விசேஷ மணிகளுக்கு, சதா தந்தை மற்றும் நான் என்ற நினைவு என்ற குடைக்குள் இருக்கக் கூடிய சதா நிற்கும் கலை-கீழிறங்கும் கலையிலிருந்து விலகி பறக்கும் கலையில் முன்னேறக் கூடியவர்களுக்கு, சதா தன்னை பலவித கருத்துக்களின் மூலம் குஷி மற்றும் போதையில் முன்னேற்றக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:-

பிராமண வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாகும். ஆனால் மகிழ்ச்சியாக இருப்பதன் பொருள் – எது தோன்றுகிறதோ அதை செய்தேன், மூழ்கினேன் என்பது கிடையாது. இந்த அல்பகால சுகத்திற்கான மகிழ்ச்சி அல்லது அல்பகால சம்பந்தம்-தொடர்பின் மகிழ்ச்சியானது சதா கால மகிழ்ச்சியின் நிலையிலிருந்து வேறுபட்டது. எது தோன்றியதோ அதை பேசினேன், எது தோன்றியதோ அதை செய்தேன் – நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இப்படிப்பட்ட அல்பகால மகிழ்ச்சியாளர்களாக ஆகாதீர்கள். சதா கால ஆன்மீக மகிழ்ச்சியில் இருங்கள். இது தான் யதார்த்த பிராமண வாழ்க்கையாகும். மகிழ்ச்சியின் கூடவே கர்மத்தின் ஆழமான இரகசியங் களை அறிந்து கொண்டவர்களாகவும் ஆகுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top