18 April 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

April 17, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.

சங்கமயுகத்தின் பிராமண வாழ்க்கையின் மூன்று சிறப்பு அம்சங்கள்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாப்தாதா தனது அனைத்து எப்பொழுதும் துணையாக இருக்கக் கூடிய, சதா உதவியாளராக இருக்கக் கூடிய, சேவைக்கு துணையாக இருந்து சேவை செய்யக் கூடிய மேலும் கூடவே இருக்கக் கூடிய சிரேஷ்ட குழந்தைகளைப் பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறார். துணையாக இருக்கக்கூடியவர் என்றாலே எளிதாக இயல் பான யோகி ஆத்மாக்களாக இருப்பர். சதா சேவை யில் உதவியாளராகவும் துணையாகவும் இருந்து நடக்கக் கூடிய அதாவது ஞானம் நிறைந்த ஆத்மாக்கள், உண்மையான சேவாதாரி கள். கூடவே இருப்பவர்கள் என்றால் சமமானவர்களாகவும் நிறைந்தவர்களாகவும் கர்மாதீத் நிலையை அடையும் ஆத்மாக்கள். பாப்தாதா அனைத்து குழந்தை களிடத்தில் இந்த மூன்று விஷயங்களின் சிறப்பு அம்சங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார், இந்த மூன்று விஷயங்களில் எந்தளவு சம்பூரண நிலை (முழுமை) அடைந்திருக்கிறார்கள்? சங்கம யுகத்தின் சிரேஷ்ட பிராமண வாழ்க்கையின் விசேஷத் தன்மைகளில் இந்த மூன்று விஷயங்கள் அவசியமாக இருக்கிறது. யோகி ஆத்மா (நினைவு சொரூபமானவர்), ஞானம் நிறைந்த ஆத்மா மற்றும் பாபாவிற்கு சமமாக கர்மாதீத் நிலையை அடையக்கூடிய ஆத்மா – ஒருவேளை இந்த மூன்று விஷயங்களில் ஏதாவது ஒன்றில் குறை இருக்கிறது என்றாலும் கூட பிராமண வாழ்க்கை யின் விசேஷத் தன்மைகளின் அனுபவசாலி ஆக முடியாது. அதாவது சம்பூரண பிராமண வாழ்க்கையின் சுகம் மற்றும் பிராப்திகளை இழக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் சம்பூரண மாக (முழுமையாக) அடைய வேண்டும் என்ற வரதானம் கொடுத்திருக்கிறார். சக்திக்கு ஏற்றவாறு யோகி ஆகுங்கள், மற்றும் சக்திக்கு ஏற்றவாறு ஞானத்தின் சொரூபம் ஆகுங்கள் என்று வரதானம் கொடுக்கவில்லை. இதன் கூடவே முழு கல்பத்தில் சங்கமயுகம் தான் விசேஷமான யுகமாக இருக்கிறது. இந்த யுகம் அதாவது இந்த நேரத்தையும் கூட ஆசீர் வாதம் அளிக்கும் நேரம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் வரத்தை அளிக்கும் தந்தை வரத்தை அளிப்பதற்காக இந்த சமயத்தில் தான் வருகிறார். வரத்தை அளிக்கும் வள்ளல் வருவதன் காரணத்தினால் நேரம் கூட வரம் நிறைந்தாக ஆகிவிட்டது. இந்த நேரத்திற்கான வரதானம் இதுவே. அனைத்து பிராப்திகளிலும் முழுமையானவர் ஆவதற் கான காலமாகவும் இருக்கிறது. நிறைவான மனநிலையை அடைவதற்காகவும் கூட ஆசிர்வாதம் அளிக்கும் நேரமாக இருக்கிறது. மேலும் முழு கல்பமும் செயலுக்கு தகுந்தபடி வெகுமதி (பலனை) அடைகிறார்கள், அல்லது எப்படி செயலோ, அதற்கு பலன் தானாகவே கிடைக்கிறது, ஆனால் இந்த வரமளிக்கும் நேரத்தில் ஒரு அடி உங்களின் செயலுக்கு மேலும் பலமடங்கு பாபாவின் உதவி எளிதாகவே கிடைக்கிறது. சத்யுகத்தில் ஒன்றுக்கு பலமடங்கு பலன் கிடைப்பதில்லை. ஆனால் இப்பொழுது கிடைத்துள்ள பலன்களை அனுபவம் செய்வதற்கான அதிகாரி ஆகிறீர்கள். (மற்ற யுகங்களில்) சேமித்து வைத்துள்ள பலன்களின் கணக்கு குறைந்துக் கொண்டே மட்டும் தான் வருகிறது. கலைகள் குறைகிறது. ஒரு யுகம் முடிந்த பிறகு கலைகள் கூட 16 கலைகளிலிருந்து 14 கலையாக ஆகிவிடுகிறது அல்லவா. ஆனால் எந்த சமயத்தில் 16 கலைகளும் முழுமை யானவர்களாக ஆகிறீர்கள்? அதை அடைவதற்கான நேரம் இந்த சங்கமயுகமாகத் தான் இருக்கிறது. இந்த சமயத்தில் பாபா திறந்த உள்ளத்தோடு அனைத்து பொக்கிஷங்களின் கிடங்கு (சுரங்கம்) வரமாக, ஆஸ்தியின் ரூபத்தில் மேலும் படிப்பிற்கு பலனளிக்கும் ரூபத்தில், மூன்று விதமான உறவின் மூலம் மூன்று விதமாக விசேஷமாக திறந்த பொக்கிஷ மாக, நிறைவான (அள்ள அள்ள குறையாத) பொக்கிஷமாக குழந்தைகளுக்கு முன்பாக வைக்கிறார். கணக்கில்லாமல், ஒன்றுக்கு பலமடங்கு வரவு வைக்கிறார். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைத்தது என்று சொல்வதில்லை, ஆனால் கருணை மனமுடைவராகி, வள்ளலாகி, விதியை உருவாக்குபவராகி, அனைத்து சம்மந்தங் களிலும் சுயம் அவரே ஒவ்வொரு வினாடியும் உதவியாளர் ஆகிறார். ஒரு வினாடியின் தைரியம் மற்றும் பல வருட கடின உழைப்பிற்கு உதவியின் ரூபத்தில் எப்பொழுதும் உதவியாளராக இருக்கிறார். ஏனெனில் பல பிறவி களாக அலைந்து திரிந்து பலமில்லாத ஆத்மாக்களாக இருக்கிறார் கள், களைப்படைந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்திருக்கிறார்.

அனைத்து விதமான சுமைகளையும் என்னிடம் (பாபாவிடம்) கொடுங்கள் என்று அவரே முன்வரு கிறார். சுமைகளை ஏற்பதற்காக (சுமப்பதற்காக) முன்வருகிறார். பாக்கியத்தை அளிக்கும் வள்ளலாகி ஞானம் நிறைந்தவராக மாற்றுகிறார், உயர்ந்த செயல் செய்வதற்கான ஞானத்தை தெளிவாக புரிய வைத்து, பாக்கியத்தின் ரேகையை எந்தளவு இழுக்க (அதிகரிக்க) வேண்டுமோ அந்தளவு அதிகரித்துக் கொள்ளலாம் என்று அதற்கான பேனாவையும் உங்களிடம் தருகிறார். . அனைத்து பொக்கிஷங்களின் சாவி உங்களுடைய கைகளில் கொடுத்திருக்கிறார். மேலும் சாவி கூட மிகவும் எளிதாக இருக்கிறது. மேலும் மாயாவின் புயல் வருகிறது என்றாலும் கூட குடை நிழலாக இருந்து பாதுகாப்பாகவும் வைக்கிறார். எங்கு குடை நிழல் (பாபா) இருக்கிறாரோ, அங்கு புயல் வந்து என்ன செய்யும்? சேவாதாரியாகவும் இருக்கிறார், ஆனால் கூடவே புத்தி நிறைந்த வர்களுக் கெல்லாம் புத்தியாக இருந்து, ஆத்மாக்களுக்கு டச் (புரிய வைக்கவும்) செய்கிறார், இதன் மூலம் குழந்தைகளுக்கு பெயரும் கிடைக்கிறது, பாபா எளிதாக காரியத்தை செய்து விடுகிறார். அந்தளவு நேசத்துடனும் அன்புடனும் செல்லக் குழந்தைகளாக மாற்றி வளர்க் கிறார், அது எப்பொழுதும் பலரை ஊஞ்சலில் ஊஞ்சலாட்டுகிறது. பாதங்கள் கீழே வைக்கவிடுவதில்லை. சில சமயம் குஷி என்ற ஊஞ்சலில், சில சமயம் சுகம் என்ற ஊஞ்சலில், சில நேரங்களில் பாபாவின் மடி என்ற ஊஞ்சலில், ஆனந்தம், அன்பு, அமைதி என்ற ஊஞ்சலில் ஊஞ்சலாட்டிக் கொண்டே இருக்கிறார். ஊஞ்சாலாட்டுவது என்றாலே மகிழ்ச்சியில் முழ்குவது. இந்த அனைத்து பிராப்தி களும் இந்த வரமளிக்கும் நேரத்தின் சிறப்பாகும். இந்த சமயம் வரமளிப்பவரே படைப்பவராக இருக்கும் காரணத் தினால், பாபா மற்ற அனைத்து சம்மந்தங்களிலும் இருக்கும் காரணத்தினால் தந்தை கருணையுள்ளம் கொண்டவராக இருக்கிறார். ஒன்றுக்கு பலமடங்கு கொடுப்பதற்கான விதி இந்த நேரத்திற்கானது. கடைசியில் கணக்கு வழக்கு முடிக்கக் வைக்கக் கூடியவர் களின் தனது உதவியாளர்களை பயன்படுத்துகிறார். உதவியாளர்கள் யார் என்று தெரிந்திருக்கிறீர்கள் அல்லவா? பிறகு இந்த ஒன்றுக்கு பலமடங்கு என்ற கணக்கு (சலுகை) முடிந்து விடும். இப்பொழுது கருணையுள்ளமுடையவராக இருக்கிறார், பிறகு கணக்கு வழக்கு ஆரம்பாகும். இந்த நேரம் மன்னிப்பும் கூட கிடைத்து விடுகிறது. கடுமையான தவறைக் கூட மன்னித்து, மேலும் உதவி யாளராகி முன்னேற்றுகிறார். இதய பூர்வமாக (செய்த தவறுகளை) உணர்வது என்றாலே மன்னிப்பு கிடைத்துவிடுகிறது. உலகத்தினர் மன்னிப்பு கேட்பது போன்று, இங்கு அந்த விதிமுறையில் மன்னிப்பு கேட்க வேண்டாம். தவறுகளை உணர்தல் என்ற விதிப்படி மன்னிப்பு கிடைக்கிறது. எனவே இதய பூர்வமாக உணர்வது, யாராவது சொல்வதினால், நேரத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது, இந்த மாதிரி மன்னிப்பு கோருதல் ஏற்றுக் கொள்ளப்படாது. பல குழந்தைகள் தந்திர மாகவும் இருக்கிறார்கள். சூழ்நிலையை பார்த்து சொல்கிறார்கள் – இப்பொழுது உணர்ந்து விடலாம், மன்னிப்பு கேட்டு விடலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் பாபாவும் கூட ஞானம் நிறைந்தவராக இருக்கிறார், தெரிந்திருக்கிறார், பிறகும் புன்னகைத்துக் கொண்டே கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார், ஆனால் மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்வ தில்லை. விதி இல்லாமல் (முறை தவறி) வெற்றி கிடைக்காது அல்லவா. விதி என்பது ஒரு அடியாக இருக்கிறது, மேலும் வெற்றி என்பது பலமடங்கு கிடைக்கிறது. ஆனால் ஒரு அடி என்கின்ற விதி (நியமம்) யதார்த்தமானது அல்லவா. எனவே இந்த நேரத்தின் விசேஷத்தன்மை எந்தளவு இருக்கிறது, வரமளிக்கும் சமயம் எப்படி இருக்கிறது என்பதை பாபா விளக்கமாக கூறினார்.

வரமளிக்கும் நேரத்திலும் கூட ஆசிர்வாதங்கள் பெறவில்லை என்றால் பிறகு எப்பொழுது பெறுவீர்கள்? நேரம் முடிந்துவிடும், மேலும் சமயத்திற்கு தகுந்தாற்போல் இந்த நேரத்தின் சிறப்பம்சங்களும் கூட அனைத்தும் முடிந்து விடும். ஆகையால் என்ன செய்ய வேண்டுமோ, எதை பெற வேண்டுமோ, என்ன ஆக வேண்டுமோ, அதை இப்பொழுது ஆசிர்வாதங்கள் பெறும் ரூபத்தில் பாபாவின் உதவியாளராகி சமயத்தில் செய்துவிடுங்கள், அமைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த வைரமான வாய்ப்பு கிடைக்காது. நேரத்தின் சிறப்பம்சங்களை கேட்டீர்கள். சமயத்தின் விசேஷத் தன்மையின் ஆதாரத்தில் பிராமண வாழ்க்கையின் 3 சிறப்பம்சங்களை கூறினார் – இந்த மூன்றிலும் முழுமையானவர் ஆகுங்கள். உங்கள் அனைவரின் விசேஷமான சுலோகன் கூட இது தான் – யோகி ஆகுங்கள், தூய்மை ஆகுங்கள். ஞானம் நிறைந்தவராகுங்கள், கர்மாதீத் நிலையை அடையுங்கள், கூடவே செல்ல வேண்டுமென்றால் சதா கூடவே இருக்கக் கூடியவர்கள் தான் கூடவே செல்வார்கள். யார் கூடவே இருப்பதில்லையோ, அவர்கள் எவ்வாறு கூடவே செல்வார்கள்? கூடவே செல்வதற்கு நேரத்தில் தயாராகவில்லை. ஏனெனில் பாபாவிற்கு சமமாக ஆவது என்றாலே தயாராக இருப்பது. சமமாக இருப்பது தான் கையோடு கை கோர்த்து இருப்பது மற்றும் கூடவே (துணை) இருப்பது. (சமமாக) இல்லையென்றால் என்னாகும்? முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டே இருந்தால், இவர்களை துணைவர் என்று சொல்ல முடியாது. துணை என்றால் கூடவே செல்ல வேண்டும். நெடுங் காலமாக துணையாக இருப்பது, துணை ஆகி உதவி செய்வது – இந்த நெடுங்காலத்தின் சம்ஸ்காரம் தான் துணையாக இருந்து கூடவே சேர்ந்து போவதாகும். இப்பொழுதும் கூட கூடவே இல்லையென்றால், இதிலிருந்து தொலைவில் இருப்பது நிரூபணமா கிறது. எனவே தொலைவாக இருப்பதின் சம்ஸ்காரம் கூடவே செல்லும் சமயமும் கூட காலதாமத மாவது போன்றே அனுபவமாகும். ஆகையால் இப்போதிருந்தே மூன்று விதமான விசேஷத் தன்மைகளை சோதனை செய்யுங்கள். எப்பொழுதும் கூடவே இருங்கள். சதா பாபாவிற்கு துணையாக இருந்து சேவை செய்யுங்கள். செய்விப்பவர் பாபா, நிமித்தமாக (கருவியாக) இருந்து நான் செய்கிறேன். ஆகையால் ஒருபொழுதும் சேவையில் குழப்பத்தில் வரமாட்டீர்கள். தனியாக உணரும் பொழுது நான் என்பதில் வந்து விடுகிறீர்கள், பிறகு மாயா என்ற பூனை மியாவ்-மியாவ் என்று சொல்கிறது. நீங்கள் நான் – நான் என்று சொல்கிறீர்கள், அது (மாயா) சொல்கிறது, நான் வருகிறேன், நான் வருகிறேன். மாயாவை பூனை என்று சொல்லப்படுகிறது அல்லவா. எனவே துணையாக இருந்து சேவை செய்யுங்கள். கர்மாதீத் ஆவதற்கான வரைமுறையும் மிகவும் ஆழமானதாக இருக்கிறது, அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

இன்று இந்த மூன்று விஷயங்களை மட்டும் சோதனை செய்ய வேண்டும். மேலும் காலத்தின் சிறப்பம்சங்களின் பயனை எந்தளவு பெற்றுள்ளீர்கள்? ஏனெனில் காலத்தின் முக்கியத்துவத்தை தெரிந்துக் கொள்வது என்றாலே மகான் ஆவது. தன்னைப் பற்றி தெரிந்துக் கொள்வது, தந்தையைப் பற்றி தெரிந்துக் கொள்வது – இவற்றிற்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அந்தளவு காலத்தை பற்றி தெரிந்துக் கொள்வதும் அவசிய மாகும். ஆகவே புரிந்ததா, என்ன செய்ய வேண்டும்? பாப்தாதா அமர்ந்து முடிவுகளை சொல்லட்டுமா? – இதற்கு முன்பாக தன்னுடைய (ரிசல்ட்) முடிவுகளை தாமே வெளி யிடுங்கள். ஏனெனில் பாப்தாதா முடிவுகளை அறிவித்து விட்டால், முடிவுகளை கேட்டு விட்டு, இப்பொழுது முடிவுகள் முடிவாகிவிட்டது, இப்பொழுது என்ன செய்யலாம்? இப்பொழுது எப்படி இருக்கிறேனோ, என்னவாக இருக்கிறேனோ, அது போதும் என்று யோசிப்பீர்கள். ஆகையால் பாப்தாதா இதை சோதனை செய்யுங்கள், இதை சோதனை செய்யுங்கள் என்று மீண்டும் சொல்கிறார். இவர் (பாபா) மறைமுகமாக முடிவுகளை சொல்லிக் கொண்டிருக் கிறார். ஏனெனில் முடிவுகளை சொல்லப்படும் மற்றும் கால அவகாசமும் கொடுக்கப்படும் என்று முன்னதாகவே சொல்லியிருக்கிறார். சில சமயம் 6 மாதங்கள், சில சமயம் 1 வருடம் என்று கொடுக்கப்படுகிறது. பிறகு 6 மாத அவகாசம் முடிந்து விட்டது, ஒன்றுமே சொல்லவில்லையே என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இப்பொழுது மீண்டும் சிறிது காலம் கருணையுள்ளம், வரமளிக்க வேண்டியிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா! இப்பொழுது சித்திரகுப்தன், மறைமுகமாக இருக்கிறார். பின்பு வெளிப்படுவார். ஆனாலும் கூட மீண்டும் பாபாவிற்கு இரக்கம் வருகிறது – மேலும் ஒரு வருடம் அவகாசம் கொடுத்துவிடலாம், ஏனென்றால் குழந்தைகள் அல்லவா. பாபா நினைத்தால் என்ன செய்ய முடியாது? அனைவரை பற்றியும் ஒவ்வொரு விஷயங்களையும் அறிவிக்க முடியும். பலர் (பாபாவை) கள்ளம் கபடமற்றவர் (அப்பாவி) என்று புரிந்துக் கொள்கிறார்கள் அல்லவா. ஆனாலும் பல குழந்தைகள் இப்பொழுதும் கூட பாபாவை ஏமாளியாக ஆக்குகிறார்கள். கள்ளம் கப்டமற்றவர் தான், ஆனாலும் மகா காலானாகவும் (காலனுக் கெல்லாம் காலன்) இருக்கிறார். இப்பொழுதும் அந்த ரூபத்தை குழந்தைகளுக்கு முன்னால் காட்டுவதில்லை. இல்லையென்றால் (பாபாவிற்கு) முன்னால் நிற்க முடியாது. ஆகையால் அனைத்தும் தெரிந்தும் கூட கள்ளம் கபடமற்ற வராகவும், எதுவும் தெரியாதவராகவும் இருந்து விடுகிறார். இருப்பினும் யாருக்காக? குழந்தைகளை முழுமையாக்குவதற்காக. புரிந்ததா? பாப்தாதா இந்த அனைத்து காட்சி களையும் பார்த்து புன்னகைக்கிறார். என்னவெல்லாம் விளையாட்டு காட்டுகிறார்கள் – அனைத்தையும் பார்க்கிறார். ஆகையால் பிராமண வாழ்க்கையின் சிறப்பம்சங் களை தன்னிடத்திடத்தில் சோதனை செய்யுங்கள், மேலும் தன்னை நிரம்பியவராக்குங்கள்.

நல்லது. நாலாபக்கமுள்ள அனைத்து நினைவு சொரூபமான ஆத்மா, ஞானம் நிறைந்த ஆத்மா, பாபாவிற்கு சமமாக கர்மாதீத் நிலையை அடையக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா தன்னை அறிந்து, நேரத்தின் முக்கியத்துவத்தை தெரிந்துக் கொண்டு மகான் ஆகக்கூடிய மகான் ஆத்மாக் களுக்கு, சதா பாபாவின் அனைத்து சம்மந்தங் களையும், பிராப்தியின் பலனை பெறக்கூடிய புத்திசாலியான பரந்த மனமுடைய, தூய்மை யான புத்தியுடைய, சதா தூய்மை நிறைந்த குழந்தை களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

பார்ட்டிகளுடன் சந்திப்பு: சதா தன்னை அனைத்து சக்திகளினால் நிறைவு பெற்று மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மாவாக அனுபவம் செய்கிறீர்களா? பாபா அனைத்து சக்தி களின் பொக்கிஷங்களின் ஆஸ்தியாக கொடுத்துவிட்டார். எனவே அனைத்து சக்திகளும் தன்னுடைய சொத்து அதாவது பொக்கிஷமாகும். தனது பொக்கிஷத்தை கூடவே வைத் திருக்கிறீர்கள் அல்லவா. பாபா கொடுத் திருக்கிறார், குழந்தைகளுடையது ஆகிவிட்டது. எனவே எந்தவொரு பொருள் தன்னுடையதாக இருக்கிறதோ, அது இயல்பாகவே நினைவில் இருக்கிறது. அது என்ன பொருளாக இருந்தாலும் அழியக் கூடியதாக இருக்கிறது, ஆனால் இந்த ஆஸ்தி மற்றும் சக்திகள் அழிவற்றதாகும். இன்று சொத்து கிடைக்கிறது, நாளையே அழிந்துவிடுகிறது, அப்படி அல்ல. இன்று பொக்கிஷமாக இருக்கிறது, நாளை யாராவது எரித்துவிடுவார்கள், கொள்ளை யடித்து விடுவார்கள், – அப்படிப்பட்ட பொக்கிஷமாக இல்லை. எந்தளவு செலவு செய்கிறீர்களோ, அந்தளவு அதிகரித்துக் கொண்டே யிருக்கும். எந்தளவு ஞானத்தின் பொக்கிஷங்களை பகிர்ந்தளிக் கிறீர்களோ, அந்தளவு அதிகரிக் கிறது. அனைத்து சாதனங்களும் கூட தானாகவே கிடைத்துவிடுகிறது. எனவே சதா காலத்திற்காக ஆஸ்தியின் அதிகாரி ஆகிவிட்டீர்கள்- இந்த குஷி இருக்கிறதல்லவா. ஆஸ்தியும் எந்தளவு உயர்ந்தாக இருக்கிறது. எந்த பொருளும் கிடைக்கவில்லை என்று இல்லை, அனைத்து பிராப்தி களும் இருக்கிறது. நல்லது.

அமிர்தவேளை விடைபெறும் நேரத்தில் தாதிகளுடன் மற்றும் தாதி நிர்மல் சாந்தா அவர்களுடன் பாப்தாதாவின் சந்திப்பு: மகாரதிகளின் ஒவ்வொரு அடியிலும் சேவை அடங்கியிருக்கிறது. பேசிக் கொண்டிருந்தாலும் பேசவில்லை யென்றாலும் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு நடவடிக்கை யிலும் சேவை இருக்கிறது. சேவை இல்லாமல் ஒரு நொடியும் இருக்க முடியாது. மனதின் மூலமாக சேவை செய்வது, வார்த்தைகளின் மூலம் சேவை செய்வது, சம்மந்தம் மற்றும் தொடர்பின் மூலம் சேவை செய்வது – ஆனால் நிரந்தர யோகியாகவும் இருக்கிறீர்கள், நிரந்தர சேவாதாரியாகவும் இருக்கிறீர்கள். நல்லது, யார் மதுபனில் பொக்கிஷத்தை சேமித்துள்ளீர்கள், அதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்காக செல்கிறீர்கள். மகாரதிகளின் இருப்பிடத்தில் இருந் தாலும் கூட பல ஆத்மாக்களுக்கு ஸ்தூலமாக ஆதரவு கிடைக்கிறது. எப்படி பாபா குடை நிழலாக இருக்கிறாரோ, அதேபோல பாபாவிற்கு சமமாக குழந்தைகளும் கூட குடை நிழலாக இருக் கிறார்கள். அனைவரும் பார்த்து எவ்வளவு குஷி அடைகிறார்கள். எனவே அனைத்து மகாரதி களுக்கும் இந்த ஆசீர்வாதம் இருக்கிறது. கண்களின் (திருஷ்டி) வரதானம், நெற்றியின் (ஆத்மாவின்) வரதானம், எத்தனை வரதானம் இருக்கிறது. காரியங்கள் செய்யக் கூடிய கருவிகளாக இருக்கக் கூடிய கர்மேந்திரியங்களுக்கும் வரதானம் இருக் கிறது. கண்களின் மூலம் பார்க்கிறீர்கள் என்றால் என்ன புரிந்திருக்கிறீர்கள்? பாபாவின் பார்வை இந்த ஆத்மாக்களின் கண்கள் மூலம் அனுபவம் ஆகிறது என்று அனைவரும் புரிந்திருக்கிறார்கள். அது கண்களுக்குண்டான ஆசீர்வாதம் ஆகிவிட்டது. இந்த வாய் வரதானமாக இருக்கிறது, இந்த முகம் வரதானமாக இருக் கிறது, ஒவ்வொரு அடிக்கும் வரதானமாக இருக்கிறது. எத்தனை ஆசீர்வாதங்கள், எண்ணி விட்டீர் களா? மற்றவர் களுக்கு ஆசீர்வாதம் அளிக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு தொடக்கத்திருந்தே ஆசீர் வாதம் கிடைத்து கொண்டேயிருக்கிறது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆசீர்வாதங்கள் நிரம்பியிருக்கிறது. லட்சுமியை காட்டுகிறார்கள் அல்லவா – அவர் களுடைய கைகளிலிருந்து செல்வம் அனைவருக்கும் கிடைத்து கொண்டே யிருக்கிறது. சிறிது காலத்திற்காக மட்டும் அல்ல, சதா காலத்திற்கும் செல்வத்தின் தேவி ஆகி செல்வம் கொடுத்துக் கொண்டே யிருக்கிறார்கள். எனவே இது யாருடைய சித்திரமாக இருக்கிறது?

எனவே எத்தனை வரதானங்கள் இருக்கிறது. பாபா சொல்கிறார் – எந்த வரதானங் களையும் வைத்துக் கொள்வதில்லை. பிறகு என்ன கொடுக்கிறார்? வரதானங்களின் மூலம் அலங்கரித்துக் கொண்டிருக்கிறீர்கள் சொல்லப் படுகிறதல்லவா – கையை சுழற்றினால் ஆசீர்வாதம் கிடைத்து விடுகிறது. எனவே பாபா சமமானவர் ஆகுக என்ற வரதானம் கொடுத்துவிட்டார், இதனால் அனைத்து வரதானம் கிடைத்துவிடுகிறது. பாபா அவ்யக்தம் ஆனவுடன் அனைவருக்கும் சமமானவர் ஆகுக என்ற ஆசீர்வாதம் கொடுத்து விட்டார் அல்லவா. முன்னால் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கொடுக்கிறார். சூட்சம ரூபத்தில் அனைவருக்கும் மகாவீரர் ஆகிய பாபாவிற்கு முன்னால் இருந்தால் வரதானம் கிடைத்து விடுகிறது. நல்லது.

உங்களுடன் கூடவே மற்ற அனைவருக்கும் ஆசீர்வாதம் கூடுதலான மருந்தாகவே இருக்கிறது. ஆகையால் மிகப்பெரிய நோய் கூட சிறியதாகிவிடுகிறது. (மாயா) வெளி தோற்றத்தை மட்டும் காட்டுகிறது, ஆனால் தனது தந்திரத்தை காட்ட இயலாது. இது மிகப்பெரிய சூலத்திற்குப் (ஈட்டி) பதிலாக முள்ளாக மாறிவிடுகிறது. மற்றபடி பாபா வின் கை மற்றும் துணை எப்பொழுதும் இருக்கிறது. ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு வார்த்தையிலும் பாபாவின் ஆசீர்வாதம் – மருந்து கிடைத்து கொண்டேயிருக்கிறது. ஆகையால் கவலையற்றவராக இருங்கள். (இதிலிருந்து எப்பொழுது விடுபட்டு இருப்பீர் கள்?) அப்படி விடுபட்டு விட்டால், சூட்சமவதனத்திற்கு சென்று விடுங்கள். இதனால் மற்றவர்களுக்கும் கூட சக்தி கிடைக்கிறது. உங்கள் அனைவருக்கும் இந்த வியாதிகள் கூட சேவை செய்கிறது. எனவே நோய் என்பது நோயே இல்லை. சேவையின் சாதனமாக (கருவியாக) இருக்கிறது. இல்லையென்றால் மற்ற அனைவரும் இவ்வாறு புரிந்துக் கொள்கிறார்கள் -இவர்களுக்கு உதவியும் கிடைக்கிறது, இவர்களுக்கு அனுபவமும் சிறிதளவும் இருக்கிறது. ஆனால் அனுபவம் நிறைந்தவர்களாக்கி மற்றவர்களுக்கு தைரியம் கொடுப்பதற்கான சேவைக்காக சிறிய பாதையாக காட்டப்படுகிறது. இல்லையென்றால் அனைவரும் மனமுடைந்து போய்விடுவார்கள். நீங்கள் அனைவரும் எடுத்துக்காட்டாக இருந்து உங்கள் மூலம் சாரத்தை அறிந்தால் அனைத்தும் முடிந்து போய்விடும். எல்லை கோடு மட்டும் தான் இருக்கிறது. நல்லது.

வெளிநாட்டை சேர்ந்தவர்களுடன்: மனதார ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் சுபபாவணை வைக்க வேண்டும் – இது தான் மனதார நன்றி கூறுவது. பாபாவின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நன்றி கிடைத்துக் கொண்டே யிருக்கிறது. சங்கமயுகத்தில் அனைத்து ஆத்மாக்களுக்காக எப்பொழுதும் நன்றி யுணர்வுடன் இருப்பதற்கான காலம் என்று சங்கமயுகம் சொல்லப்படுகிறது. சங்கமயுகம் முழுவதுமே நன்றியின் நாள் என்று சொல்லப்படுகிறது. சதா ஒருவர் மற்றவருக்காக நல்ல விருப்பம், நல்ல உணர்வு கொடுத்துக் கொண்டேயிருங்கள் மற்றும் பாபாவும் கூட கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். நல்லது.

வரதானம்:-

எந்த குழந்தைகள் சேமிப்பு செய்ய அறிந்துள்ளார்களோ, அவர்கள் சக்திசாலி ஆகிறார்கள். ஒருவேளை அவ்வப்பொழுது சம்பாதிக்கிறார்கள், அவ்வப்பொழுது பகிர்ந்தளிக்கிறார்கள், தன்னிடத் தில் சேமித்துக் கொள்ளவில்லை என்றால் சக்திகளும் இருக்காது. பகிர்ந்தளிப்பதினாலோ அல்லது தானம் கொடுப்பதினாலோ மட்டும் குஷி ஏற்படுகிறது. குஷியின் கூடவே சக்திகளும் இருந்தால் எளிதாகவே தடைகளை கடந்து தடைகளை வென்றவர் ஆகிவிடலாம். பிறகு எந்தவொரு தடையும் தந்தையிடம் ஈடு பாட்டில் லயித்திருப்பதை தொல்லை செய்வதில்லை, ஆகையால் முகத்தின் மூலம் குஷியின் ஜொலிப்பு தென்படுகிறது, அதுபோல சக்திகளின் ஜொலிப்பும் கூட தென்படும்.

சுலோகன்:-

அறிவிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுகிழமை உலக அமைதிக்கான தியானம் செய்யும் நாளாக இருக்கிறது, பாபாவின் அனைத்து குழந்தைகளும் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை விசேஷமாக பரந்தாமம் என்ற உயர்ந்த இடத்தில் நிலைத் திருந்து லைட், மைட் ஹவுஸ் ஆகி இயற்கை உட்பட முழு உலகத்திற்கும் சர்ச் லைட் (ஓளி கொடுப்பது) கொடுக்கக் கூடிய சேவை செய்யுங்கள்.

Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top