20 February 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

February 19, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

முயற்சியின் அதிவேகம் குறைவதற்கான இரண்டு முக்கிய காரணங்கள்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பிராமணர்களின் காலத்தால் அழியாத படைப்பாளியான பாப்தாதா விசேஷமாக தனது நேரடியாக நெருக்கமான படைப்பு, உயர்ந்த படைப்பான பிராமணர்களை பார்த்துக் கொண்டிருக் கிறார். பாப்தாதாவிற்கு மிகவும் அன்பான படைப்பு பிராமண ஆத்மாக்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் நெருக்கத்திலும் சமமானவராகவும் ஆவதற்கான இலட்சியத்தை சதா நினைவில் வைத்து முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை இன்று அப்பேற்பட்ட முதல் படைப்பை விசேஷமாக பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரும் தீவிர முயற்சியாளர்கள் மற்றும் முயற்சியாளர்கள் இருவரின் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார். பாப்தாதாவின் மூலம் கிடைத்துள்ள உயர்ந்த எளிமையான விதியின் மூலம் சிலசமயம் அதிவேகமாகவும் மற்றும் வேகமாகவும், சில நேரங்களில் குறைந்த வேகத்திலும் – இரண்டு விதமான பிராமண குழந்தை களை பார்த்தார். படிப்பு, பாலனை (வளர்ப்பு), பிராப்தி – அனைவருக்கும் ஒன்று போலவே ஒருவரின் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பிறகு ஏன் வேறுபாடு ஏற்படுகிறது? தீவிர முயற்சியாளர் என்றால் முதல் டிவிசனில் (பிரிவில்) வரக்கூடியவர்களாகவும், முயற்சியாளர்கள் என்றால் இரண்டாவது டிவிசனில் நெருக்கத்தில் இருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்று முக்கியமாக அனைவருடைய சார்ட்டையும் சோதனை செய்யப்பட்டது. பல காரணங்கள் இருந்தாலும், விசேஷமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அனைவரும் முதல் டிவிசனில் வரத் தான் விரும்புகிறார்கள், இரண்டாவது டிவிசனில் வருவதற்கு யாரும் விரும்புவதில்லை. ஆனால் இலட்சியம் மற்றும் இலட்சணம் இரண்டிற்குள் வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அந்த இரண்டு விசேஷ காரணங்களை என்ன பார்த்தார்?

முதலாவது – எண்ணங்களின் சக்தி தான் அனைத்தையும் விட உயர்ந்த சக்தியாக இருக்கிறது, அதை யதார்த்தமாக (சரியான) முறையில் தனக்காகவும் சேவைக்காக தகுந்த நேரத்தில் காரியத்தில் பயன்படுத்துவதற்கான சரியான முறை தெரிவதில்லை. மற்றொரு காரணம் – வார்த்தைகளின் சக்தியை சரியான முறையில், சக்திசாலியான முறையில் காரியத்தில் கொண்டு வருவதற்கான குறைபாடு. இந்த இரண்டிலும் குறை இருப்பதற்கான காரணம் – பயன்படுத்துவதற்கு பதிலாக லூஸ் (தளர்ச்சி) ஆகிவிடுகிறது. வார்த்தைகளில் சிறு வேறுபாடு தான் இருக்கிறது, ஆனால் அதனால் ஏற்படும் முடிவில் மிகுந்த வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. பாப்தாதா 3-4 நாட்களின் ரிசல்ட்டை (முடிவுகளை) பார்த்தார், ஒட்டுமொத்த ரிசல்டை பார்க்கவில்லை. ஒவ்வொருவரின் 3-4 நாட்களின் ரிசல்ட்டில் என்ன பார்த்தார்? 50% அதாவது 50-50 (பாதி பாதியாக இருந்தது). எண்ணம் மற்றும் வார்த்தைகள் இரண்டிலும் சக்திகளின் சேமிப்பு கணக்கு 50% ஆத்மாக்களின் கணக்கு சரியாக இருந்தது, ஆனால் முற்றிலும் சரியாக இருந்தது என்று சொல்ல முடியாது. மற்றும் 50% (மீதமுள்ள) ஆத்மாக்களின் சேமிப்பு கணக்கு 40% மற்றும் 60% வீணானது மற்றும் சாதாரணமானதாகவும் இருந்ததை பார்த்தார். எனவே சிந்தனை செய்யுங்கள் எவ்வளவு சேமிப்பு ஆனது. எந்த பக்கம் அதிகமான எடை உள்ளது? இதிலும் வார்த்தைகளின் காரணத்தினால் மனதின் மீதும் தாக்கம் ஏற்படுகிறது? மனம், வார்த்தைகளை தனது பக்கம் ஈர்க்கிறது. இன்று பாப்தாதா வார்த்தைகள் மற்றும் பேச்சின் பக்கம் விசேஷமான கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் வார்த்தைகளின் தொடர்பு தனது பக்கமும் இருக்கிறது, மேலும் அனைவருக் கும் துணையாக இருக்கிறீர்கள். மேலும் என்ன பார்த்தார்? மனதின் மூலம் நினைவில் இருக்க வேண்டும் – அதற்காக இன்னும் இடை – இடையில் நிகழ்ச்சிகளை (ப்ரோகிராம்) வைக்கிறார்கள். ஆனால் வார்த்தைகளுக்காக கவனகுறைவு அதிகமாக இருக்கிறது. ஆகையால் பாப்தாதா இதன் மீது விசேஷமான அண்டர்லைன் (அடிக்கோடு) செய்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாப்தாதா விசேஷ முயற்சியில் சேவையில் முன்னேறக்கூடிய மகாரதி ஆத்மாக்களுக்கு மற்ற அனைவருக்கும் மூன்று விஷயங்களில் பேச்சுக்காக (வார்த்தைகளுக்காக) சொல்லப் பட்டிருக்கிறது, குறைவாக பேசுங்கள், மெதுவாக பேசுங்கள், இனிமையாக பேசுங்கள். வீணான பேச்சிற்கான அடையாளம் – அவர்கள் அடையாளம் பேசுவார்கள், கட்டாயத்தின் பெயரில், நேரத்தை பொறுத்து, குழுவை பொறுத்து தன்னை கட்டுபடுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் அமைதியாக இருக்க யாரோ கட்டிப்போட்டது போல் உள்ளுக்குள் உணர்வார்கள். வீணான பேச்சு பெரியதிலும் பெரிய நஷ்டம் என்ன ஏற்படுத்துகிறது? ஒரு விதத்தில் உடலின் எனர்ஜியை (ஆற்றலை) வீணாக்குகிறது, ஏனெனில் செலவாகிறது. மற்றொன்று நேரம் வீணாகிறது. வீணான பேச்சு பேசுபவர்களின் பழக்கம் என்னவாக இருக்கிறது? சின்னஞ்சிறிய விஷயத்தை மிகவும் பெரிய பூதகரமாக செய்வார்கள், மேலும் பேசும் முறையையும் கதை போல பேசுவார்கள். இராமாயணம், மகாபாரதம் கதைகளை போன்று……. ஆர்வத்தோடு கேட்பார்கள் அல்லவா. ஆர்வத்தோடு பேசவும் செய்வார்கள். மற்றவர்களுக்கும் கூட ஆர்வத்தை தூண்டுவார்கள். ஆனால் ரிசல்ட் என்னவாக இருக்கும்? இராமாயணம், மகாபாரதத்தின் முடிவு என்னவாக இருக்கிறது? இராமர் வனவாசம் சென்றார், மேலும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் யுத்தம் நடந்தது – எப்படி காட்டப்படுகிறது? சாராம்சம் ஒன்றுமே இல்லை. ஆனால் இசை மிகவும் அழகாக இருக்கிறது. இதைத் தான் கதை என்று சொல்லப் படுகிறது வீணாக பேசக்கூடியவர்கள் மாயாவின் தாக்கத்தின் காரணத்தினால், யார் பலவீனமான ஆத்மாக்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்பதற்கும் சொல்வதற்கும் நண்பர்களை மிக விரைவாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட ஆத்மாக்கள் ஏகாந்த பிரியராக (தனிமையை விரும்புபவர்) ஆக முடியாது. ஆகையால் அவர்கள் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதில் புத்திசாலியாக இருப்பார்கள். சில நேரங்களில் வெளித்தோற்றத்தில் அவர்களின் குழு மிகவும் சக்திவாய்ந்ததாகவும் தெரிகிறது. ஆனால் ஒரு விஷயத்தை எப்பொழுதும் நினைவில் வையுங்கள் – மாயா செல்வதற்கான கடைசி காலடியாக இருக்கிறது. ஆகையால் விடைபெற்று விடைபெறும் பொழுதும் கூட அம்புகளை எய்திக் கொண்டேயிருக்கிறது. ஆகையால் அவ்வபொழுது, எங்காவாது மாயாவின் தாக்கம் தனது வேலையை செய்து காட்டி விடுகிறது. அது (மாயா) எளிதல் செல்லக்கூடியது அல்ல. கடைசி நிமிடம் வரை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக கடுமையான ரூபத்தில் இல்லை யென்றாலும் மிக இனிமையான ரூபத்தில் புதுப்புது தோற்றத்தை தாரணை செய்து பிராமணர்களை வீழ்த்த முயற்சி செய்கிறது. பிறகு அப்பாவி பிராமணர்கள் என்ன சொல்வார்கள்? அதைப்பற்றி இந்தந்த உருவத்தில் மாயா வருமென்று பாப்தாதா சொல்லவே இல்லை என்று கூறுவார்கள். பாப்தாதா மாயா வரும் என்று சொல்லி இருக்கிறார் என்ற கவனக்குறைவின் காரணத் தினால் தன்னை சோதனை செய்வதும் கிடையாது, மாயா வரும் என்ற பாதி வார்த்தையை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மாயாஜீத் ஆகவேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். மற்றறொரு விஷயம் – வீணானது அல்லது சாதாரணமான விஷயத்தின் வித விதமான ரூபத்தை பார்த்தார். முதலாவது – எல்லைமீறி அதாவது அளவுக்கு அதிகமாக சிரித்து கேலி கிண்டல் செய்வது. இரண்டாவது எரிச்சலுட்டும் படி பேசுவது. மூன்றாவது – இங்கு அங்குள்ள விஷயங்களை ஒன்று சேர்த்து கேட்பது சொல்வது, நான்காவது விஷயம் – சிறிதளவு சேவையின் விஷயங்கள் மற்றும் சேவை விஷயங்களின் கூடவே சேவாதாரிகளின் பலவீனங்களின் சிந்தனைகள் – இந்த கலவை சட்னி அடுத்து ஐந்தாவது – பொறுத்தமற்ற பேச்சு வார்த்தை (தெளிவற்ற வார்த்தை) அது பிராமணர்களின் அகராதியில் இல்லாத விஷயங்கள். இந்த ஐந்து விதமான ரூபத்தில் ரேகைகளை பார்த்தார். இந்த ஐந்து விஷயங்களும் தான் வீணான விஷயங் களின் கணக்கில் பாப்தாதா கணக்கில் வைக்கிறார். அப்படி புரிந்துக் கொள்ளாதீர்கள் – சிரித்து விளையாடுவது நல்ல விஷயம். சிரித்து விளையாடுவது நல்ல விஷயம் தான், அதில் ஆன்மீகத் தன்மை இருக்க வேண்டும், மேலும் யாரோடு சிரித்து விளையாடுகிறீர்களோ அந்த ஆத்மாவிற்கு நன்மை ஏற்பட வேண்டும். நேரத்தை கடத்தினீர்களா அல்லது நேரம் வீணானதாக சென்றதா? இரமணீக் (மகிழ்ச்சியாக இருப்பது) குணம் நல்ல குணமாக தான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, ஆனால் நபர்கள், நேரம், குழு, இடம், சுழ் நிலையை பொறுத்து மகிழ்ச்சி நல்லதாக மாறுகிறது. ஒருவேளை இந்த அனைத்து விஷயங்களில் ஒரு விஷயம் சரியாக இல்லையென்றாலும் மகிழ்ச்சி என்பது வீணானவற்றின் வரிசையில் கணக்கிடப்படும். மேலும் சிரித்து சந்தோஷமாக இருப்பது நல்லது தான் ஆனால் அதிகம் பேசுகிறார்கள் என்ற சர்ட்பிகேட் தான் கிடைக்கும். எனவே கலவை சட்னி ஆகிவிட்டதல்லவா. எனவே நேரத்தை வரம்பில் (கவனத்தில்) வையுங்கள். இதைத்தான் மரியாதா புருúஷôர்த்தம் (மிகவும் கண்ணியமான மனிதர்) என்று சொல்லப்படுகிறது. எனது சுபாவம் என்று சொல்கிறார்கள். அது எப்படிப்பட்ட சுபாவமாக இருக்கிறது? பாப்தாதாவின் சுபாவத்தை போன்று இருக்கிறதா? எனவே இவர்களை மரியாதா புருúஷôர்த்தம் (மிகவும் கண்ணியமானவர்) என்று சொல்ல முடியாது, சாதாராண மனிதர் என்று சொல்வார்கள். வார்த்தைகள் அவை கேட்கக்கூடியவர்களுக்கு அப்படி இருக்க வேண்டும் – இவர்கள் ஏதாவது பேசினார்கள், நாமும் கேட்கலாம் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். இதைத்தான் விலை மதிப்புடைய வார்த்தைகள் என்று சொல்லப்படுகிறது. மகாவாக்கியங்கள் அதிகமாக இருப்ப தில்லை. நினைக்கும் பொழுதெல்லாம் பேசிக் கொண்டேயிருப்பார்கள் – இதை மகாவாக்கியம் என்று சொல்லப்படுவதில்லை. எனவே சத்குருவின் குழந்தைகள் – மாஸ்டர் சத்குருவின் மகாவாக்கியங்களாக இருக்கும், வாக்கியங்களாக இருக்காது. வீணான விஷயங்களை பேசக் கூடியவர்கள் தனது புத்தியில் வீணான விஷயங்கள், வீணான செய்திகள், நாலா பக்கத்திலுமுள்ள குப்பைகளை அவசியம் ஒன்று சேர்க்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு கதையில் இரமணிக் (இனிமையை) தன்மையை கொடுக்க வேண்டியிருக்கிறது. சாஸ்திரவாதிகளின் புத்தி இருக்கிற தல்லவா. ஆகையால் எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில் என்ன அவசியமாக பேச வேண்டுமோ, யுக்த்யுக்தாக (நியாமானதாக) இருக்கிறதோ, தனக்காகவும் மற்ற ஆத்மாக்களுக்கு பலன் தரக்கூடிய வார்த்தைகளைத் தான் அவர்கள் பேசுவார்கள். வார்த்தைகளின் மீது கவனம் குறைவாக இருக்கிறது. ஆகையால் இதன் மீது இரட்டை அடிகோடு இடவேண்டும்.

விசேஷமாக இந்த வருடத்தில் வார்த்தைகளின் மீது கவனம் வையுங்கள். சோதனை செய்யுங்கள் – வார்த்தைகள் மூலம் எனர்ஜி (ஆற்றல்) மற்றும் நேரம் எவ்வளவு சேமிப்பு ஆனது எந்தளவு வீணாக சென்றது? இதை சோதனை செய்தீர்கள் என்றால் தானாகவே அந்தர்முகித் தன்மையை அனுபவம் செய்ய முடியும். அந்தர் முகியாக இருப்பது மற்றும் பேச்சு வார்த்தைகளில் வருவது இதில் இரவு பகலுக்கான வித்தியாசம் இருக்கிறது. அந்தர்முகியாக இருப்பவர்கள் எப்பொழுதும் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தபஸ்விமூர்த்தியின் அனுபவம் செய்கிறார்கள். புரிந்ததா.

புரிந்துக்கொள்வது என்றாலே ஆவதாகும். ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ளும் பொழுது அதை அவசியம் செய்து விடுவீர்கள், அவசியம் புரிந்துக் கொள்வீர்கள். ஆசிரியர்கள் புத்திசாலியாக தான் இருக்கிறார்கள். அப்பொழுது தான் பாக்கியம் கிடைக்கும் அல்லவா. நிமித்தம் ஆவதற்கான பாக்கியம் – இதற்கான மகத்துவம் சில நேரங்களில் சாதாரணமாக தோன்றுகிறது. ஆனால் இந்த பாக்கியம் நிறைந்த நேரத்தில் மிக உயர்ந்ததாக அனுபவம் செய்வீர்கள். யார் உங்களை நிமித்தம் ஆக்கியது, யார் ஆத்மாவாகிய என்னை இந்த தகுதியுடையவராக தேர்ந்தெடுத்தார் – இந்த நினைவு தான் இயல்பாகவே உயர்ந்தவராக மாற்றிவிடுகிறது. மாற்றி உருவாக்கியவர் யாராக இருக்கிறார். ஒரு வேளை இந்த நினைவில் இருந்தீர்கள் என்றால் மிகவும் எளிதாக நிரந்தர யோகி ஆகிவிடலாம். சதா மனதில், உருவாக்கக்கூடிய பாபாவின் குணங்களை பாடிக்கொண்டே இருந்தீர்கள் என்றால், நிரந்தர யோகி ஆகிவிடலாம். இது சாதாரண விஷயமில்லை. முழு உலகத்தில் கோடான கோடி ஆத்மாக்களில் இருந்து எத்தனை பேர் நிமித்த சகோதரிகளாக ஆகியிருக்கிறீர்கள். பிராமண குடும்பத்திலும் எத்தனை பேர் டீச்சராக இருக்கிறார்கள். எனவே நீங்கள் சிலரில் சிலராக ஆகிவிட்டீர்கள் அல்லவா. டீச்சர் என்றாலே சதா பகவான் மற்றும் பாக்கியத்தின் பாடலை பாடிக் கொண்டேயிருப்பது. பாப்தாதாவிற்கு ஆசிரியர்களின் மீது பெருமை ஏற்படுகிறது. ஆனால் இராஜ யுக்த் டீச்சரின் மீது பெருமை ஏற்படுகிறது. நல்லது.

இல்லறத்தில் இருப்பவர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் அல்லவா. குழப்பத்தில் வரக்கூடியவர் களாக இருக்கிறீர்களா அல்லது மகிழ்ச்சியில் இருக்கிறீர்களா? பிராமண வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் உடல், மனம், செல்வம், மனிதர்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மிகவும் ஒய்வாக தூங்குகிறீர்கள், நன்றாக சாப்பிடுகிறீர்கள். ஒய்வாக இருப்பது, சாப்பிடுவது, தூங்குவது மற்றும் படிப்பது. வேறு ஏதாவது வேண்டுமா என்ன? படிப்பு நன்றாக படிக்கிறீர்கள், அல்லது அமிர்தவேளையில் தூங்கிவிடுகிறீர்களா? அதுபோல பல குழந்தைகள் செய்கிறார்கள், முழு இரவும் விழித்துக் கொண்டேயிருந்தேன், காலையில் தூங்கிவிட்டேன். அல்லது ஏதாவதொரு சேவை செய்தீர்கள் என்றால் அமிர்தவேளையை விட்டு விடுகிறீர்கள். எனவே மகிழ்ச்சி என்ன ஆனது? அதிகப்படியாக சேமிப்பு ஆகவே இல்லை. ஒரு பக்கம் சேவை செய்தீர்கள், மற்றொரு பக்கம் அமிர்தவேளை தவறவிட்டு விடுகிறீர்கள். இதனால் என்ன ஆகும்? ஆனால் பெயருக்காக தூங்கி வழிந்துக் கொண்டே அமர வேண்டாம். அவருடைய டி.வி மிக நன்றாக இருக்கிறது. எப்படி அவர்கள் (உலகத்தினர்) யோகாசனம் செய்கிறார்கள் அல்லவா – பலவிதமான ஆசனங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. இங்கும் கூட அந்த மாதிரி ஆகிவிடுகிறது., சிந்தனை செய்கிறார்கள் – சகஜ யோகாவாக இருக்கிறது அல்லவா. ஆகையால் அமைதியாக அமருங்கள். பலருடைய இசைகளையும் கூட பாப்தாதாவிடம் கேட்பதற்கு வருகிறது. பாப்தாதாவிடம் அதற் கான கேசட் (ஒலி நாடா) இருக்கிறது. எனவே இப்பொழுது இரட்டை அண்டர்லைன் (அடிக்கோடு) செய்வீர்கள் அல்லவா. முடிவில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை பாப்தாதா பிறகு சொல்வார். நல்லது.

நாலாபக்கத்திலுமுள்ள சிரேஷ்ட இலட்சியம் மற்றும் உயர்ந்த இலட்சணத்தை தாரணை செய்யக்கூடிய தீவிர முயற்சி செய்யும் ஆத்மாக்களுக்கு, சதா தனது வார்த்தைகளை நேரம் மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு (மிதமாக) வைத்துக் கொள்ளக்கூடிய உயர்ந்த ஆத்மாக்களுக்கு, சதா மகாவீரர் ஆகி மாயாவின் அனைத்து ரூபங் களையும் தெரிந்துக் கொள்ளக்கூடிய ஞானம் நிறைந்த ஆத்மாக்களுக்கு சதா ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய கவலையற்ற மகாராஜாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

அவ்யக்த பாப்தாதாவின் பார்ட்டிகளோடு சந்திப்பு :

1. அமைதி சக்தியின் சக்தியை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்களா? அமைதியின் சக்தி நொடியில் தனது இனிமையான வீட்டை, சாந்திதாமத்திற்கு சென்றடைய வைத்து விடுகிறது. விஞ்ஞானிகள் மேலும் வேகமாக செல்லக்கூடிய சாதனத்தை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களின் சாதனம் அதிவேகமானது. நினைத்தவுடன் சென்றடைந்து விடுவோம். இவ்வளவு தூரம் எந்த செலவில்லாமல் சென்ற டைய கூடிய சாதனம் விஞ்ஞானத்தில் இருக்கிறதா? அவர்கள் ஒவ்வொரு சாதனங்களை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள், எவ்வளவு நேரத்தையும், எனர்ஜியையும் (ஆற்றல்) பயன்படுத்துகிறார்கள், நீங்கள் என்ன செய்தீர்கள்? செலவே செய்யாமல் கிடைத்துவிட்டது. எண்ணங்களின் சக்தி அனைத்தையும் விட வேகமானதாக இருக்கிறது. உங்களுக்கு சுப எண்ணங்கள் என்ற சாதனம் கிடைத்திருக்கிறது, தெய்வீக புத்தி கிடைத்திருக்கிறது. சுத்தமான மனத்தினாலும், தெய்வீக புத்தியினாலும் சென்றடைந்துவிடுகிறீர்கள். விரும்பும் பொழுது திரும்பி வரவும் முடியும், விரும்பும் பொ ழுது சென்றடையவும் முடியும்.. விஞ்ஞானிகள் வானிலை மாற்றங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்று மேக மூட்டங்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. இன்றைய காலத்தில் பாருங்கள் – மேகங்கள் சிறிதளவு பனி மூட்டத்துடன் இருந்தால் செல்ல முடியாது. மேலும் உங்களுடைய விமானம் எப்பொழுதும் தயாரக இருக்கிறதா அல்லது அவ்வப்பொழுது பனிமூட்டங்கள் ஏற்பட்டு விடுகிறதா? எப்பொழுதும் தயாராக இருக்கிறீர்களா? நொடியில் சென்றுவிடுமளவிற்கு அதிவேகமாக செல்கிறதா? மாயா ஒருபொழுதும் தடைகள் ஏற்படுத்துகிறதா? மாஸ்டர் சர்வ சக்திவானை யாரும் நிறுத்த முடியாது. சர்வ சக்திகள் இருக்குமிடத்தில் யாரால் நிறுத்த முடியும். ஏதாவதொரு சக்தி குறைவாக இருந்தால் தகுந்த நேரத்தில் ஏமாற்றி விடுகிறது. உங்களிடம் பொறுமை சக்தி இருக்கிறது, ஆனால் தீர்மானிக்கும் சக்தி பலவீனமாக இருந்தால், ஏதாவது பிரச்சனைகள் (சூழ்நிலைகள்) வரும் பொழுது, அதில் முடிவு செய்ய வேண்டியிருந்தால், அந்த நேரம் நஷ்டம் ஏற்பட்டு விடும். செய்ய வேண்டுமா, இல்லையா என்பது ஒரு கணத்தின் (நொடி) முடிவு தான், ஆனால் அதனுடைய விளைவு எவ்வளவு பெரியதாக இருக்கிறது. எனவே அனைத்து சக்திகளையும் தன்னிடமுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். நடந்துவிடும், சென்றுக் கொண்டிருக்கிறது, யோகா செய்துக் கொண்டிருக்கிறோம் என்று இருந்து விடாதீர்கள். ஆனால் யோகத்தினால் என்னவெல்லாம் பிராப்திகள் அடைய வேண்டுமோ, அவை அனைத்தும் இருக்கிறதா? அல்லது பாபாவே என்னுடையவராக ஆகிவிட்டார் என்று கொஞ்சம் கிடைத்துமே மகிழ்ச்சி அடைந்து விட்டேன். பாபா நம்முடையவர் தான், ஆனால் ஆஸ்தியும் கூட நம்முடையது தான் அல்லவா அல்லது பாபாவை அடைந்து விட்டேன் – இது சரியா? ஆஸ்திக்கு அதிகாரி ஆகவேண்டுமல்லவா? சர்வ சக்திகள் தான் பாபாவின் ஆஸ்தியாக இருக்கிறது. ஆகையால் பாபாவின் மகிமை சர்வ வல்லமை படைத்த அதிகாரி (ஆல்மைடி அத்தாரிட்டி) சர்வ சக்திகளும் சேமிப்பு ஆகியிருக்கிறதா? அல்லது சம்பாதித்தேன், சாப்பிட்டு விட்டேன் போதும் என்று அவ்வளவு தானா? பாப்தாதா போக போக (வரும் நாட்களில்) மாஸ்டர் சர்வ சக்திவானாகிய உங்களிடம் அனைவரும் யாசிப்பவர்களாக ஆகி வருவார்கள் என்பதை பாப்தாதா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். பணத்திற்காகவோ, தானியங் களுக்காகவோ யாசிக்க மாட்டார்கள், ஆனால் சக்திகளை யாசிப்பவர்களாக வருவார்கள். எனவே சேமிப்பு கிடங்கு (ஸ்டாக்) இருக்கும் பொழுது தான் கொடுக்க முடியும். யாரிடம் தனக்கு மிஞ்சி அதிகமாக இருக்கிறதோ, அவர்களால் தான் தானம் கொடுக்க முடியும். ஒருவேளை தனக்கு தேவையானது தான் இருக்கிறது என்றால் தானம் என்ன செய்வீர்கள்? எனவே அந்தளவு அதிகமாக சேமிப்பு செய்யுங்கள் சங்கமயுகத்தில் வேறு என்ன வேலை இருக்கிறது? சேமிப்பதற்கான வேலை கிடைத்திருக்கிறது. முழு கல்பத்தில் வேறு எந்த யுகத்திலும் (சங்கமயுகத்தை தவிர) சேமிக்க முடியாது. மற்றபடி செலவுகள் செய்வோம், சேமிப்பு செய்ய முடியாது. எனவே சேமிப்பு செய்வதற் கான நேரத்தில் சேமிப்பு செய்யவில்லையென்றால் இறுதி நேரத்தில் என்ன சொல்ல வேண்டியிருக்கும் – இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை. அதன் பிறகு மிகவும் தாமதம் என்ற பலகை தான் போடப் பட்டிருக்கும். இப்பொழுது தாமதம் என்ற பலகை தான் இருக்கிறது, மிகவும் தாமதம் என்ற நிலை இல்லை.

அனைத்து தாய்மார்களும் அந்தளவு சேமிப்பு செய்துள்ளீர்களா? சிவ சக்திகளாக இருக்கிறீர்களா அல்லது வீட்டை நிர்வாகம் செய்யும் தாய்மார்களாக இருக்கிறீர்களா? சிவ சக்திகள் என்று சொல்வதினால் சக்திகளின் நினைவுகள் வருகின்றன. அப்படிப்பட்ட தாய்மார்களை பாபா சக்திகளாக மாற்றியிருக்கிறார். ஒருவேளை யாராவது முகத்தை வந்து பார்த்தார்கள் என்றால் என்ன சொல்வார்கள்? அதுபோல சக்திகள் இருக்கிறார்களா என்ன? ஆனால் அந்த ஆத்மாக்கள் சக்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதை பாபா தெரிந்துள்ளார். பாபா ஆத்மாக்களை தான் பார்க்கிறார். வயதானவராக பார்க்கவில்லை, இளைஞனாக பார்க்கவில்லை, குழந்தையாக பார்க்க வில்லை. ஆத்மாவில் வயதானவர், சிறியவர் என்பது இல்லை. நம்மை பாபா சிவ சக்திகளாக மாற்றிவிட்டார் என்ற குஷி இருக்கிறதல்லவா. உலகத்தில் படித்த பட்டதாரியான தாய்மார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் பாபா விற்கு கிராமத்திலுள்ளவர்களை தான் பிடித்திருக்கிறது, ஏன் பிடித்திருக்கிறது? உண்மையான மனதில் பாபா திருப்தி யடைகிறார். பாபாவிற்கு உண்மையான மனமுடையவர்களை தான் பிடித்திருக்கிறது. யார் கள்ளம் கபடம் (சூது-வாது) இல்லாதவர்களாக அவர்களுக்கு பொய் பகட்டு செய்ய வராது. யார் தந்திரசாலியாக, விவரமாக இருக்கிறார்களோ, அவர்களிடம் இவை அனைத்தும் இருக்கும். எனவே யாருடைய மனதில் கள்ளம் கபடம் இல்லாதவர்களாக இருக்கிறார்களோ அதாவது மாயை நிறைந்த உலகத்தின் தந்திரத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள். அவர்கள் பாபாவிற்கு மிகவும் அன்பிற் குரியவர்களாக இருப்பார்கள். பாபா உண்மையான மனதை தான் பார்க்கிறார். மற்றபடி படிப்பையோ, முகத்தையோ, கிராமத்தையோ, பணத்தையோ பார்ப்பது கிடையாது. உண்மையான மனம் வேண்டும். ஆகையால் பாபாவின் பெயரே இதயபூர்வமானவர். நல்லது.

வரதானம்:-

மாற்றக்கூடிய மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகுக.
உறுதியான நம்பிக்கை பாக்கியத்தை உறுதி செய்துவிடுகிறது. பிரம்மா பாபா முதல் நம்பரில் உறுதிபட்டிருக்கிறார். அதுபோல நாமும் முதல் டிவிசனில் வந்தே தீரவேண்டும். இந்த உறுதியான நம்பிக்கையை வையுங்கள். நாடகத்தில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த பயிற்சியில் மட்டும் கவனம் வைத்தீர்கள் என்றால்; முன்னேற்றம் அடைந்து விடலாம். ஆகையால் மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகி ஒவ்வொரு காரியத்தையும் செய்யுங்கள். துணையின் அனுபவத்தை அதிகரித்து விட்டால் அனைத்தும் எளிதாகிவிடும். யாரோடு சுயம் சர்வசக்திகள் நிறைந்த பாபா இருக்கிறாரோ, அவருக்கு முன் மாயை என்பது பேப்பர் டைகர் (காகித புலி) தான் இருக்கும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top