29 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 29, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! ஆத்மாவை நோயற்றதாக ஆக்க வேண்டும் என்றால், ஆன்மீக கல்வியைக் கற்று மற்றும் கற்பியுங்கள். ஆன்மீக மருத்துவ மனையை திறவுங்கள்.

கேள்வி: -

எந்த ஒரு நம்பிக்கை வைக்கும் பொழுது மற்ற எல்லா விருப்பங்களும் தானாகவே நிறைவேறி விடும்?

பதில்:-

தந்தையை நினைவு செய்து (எவர்ஹெல்தி) சதா ஆரோக்கியமானவர் ஆவதற்கான விருப்பம் கொள்ளுங்கள். ஞான யோகத்தின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தீர்கள் என்றால், மற்ற விருப்பங்கள் இயல்பாகவே பூர்த்தியாகி விடும். குழந்தைகள் எந்த ஒரு மோசமான பழக்கங் களும் கொண்டிருக்கக் கூடாது. ஆல்ரவுண்டர் ஆக வேண்டும். குறைகள் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்றாலும் கூட சேவை அவசியம் செய்ய வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

தைரியமாக இரு மனிதா.. .. .

 

ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இச்சமயம் எல்லா ஆத்மாக்களுக்கும் தைரியம் அளிக்கப் படுகிறது. ஆத்மாவில் தான் மனம் புத்தி இருக்கிறது. ஆத்மா தான் துக்கமுறுகிறது. அப்பொழுது தான் ஹே ! பதீத பாவன பரமபிதா பரமாத்மா வாருங்கள் என்று அழைக்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கர் ஆகியோரை ஒரு பொழுதும் பதீத பாவனர் என்று கூறுவதில்லை. அவர்களுக்கே கூறப்படுவதில்லை என்றால் பின் இலட்சுமி நாராயணர், இராமர் சீதை ஆகியோரைக் கூட கூற முடியாது. பதீத பாவனர் ஒரே ஒருவர் ஆவார். விஷ்ணுவின் சித்திரமோ பாவனமானதாகவே இருக்கிறது. அவர் விஷ்ணுபுரியின் அதிபதி ஆவார். விஷ்ணு புரியை ஸ்தாபனை செய்பவர் சிவபாபா ஆவார். அவரே இச்சமயம் விஷ்ணுபுரியை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். அங்கு தேவி தேவதைகள் தான் இருக்கிறார்கள். விஷ்ணுவின் பரம்பரை என்று கூறினாலும் சரி, இலட்சுமி நாராயணரின் பரம்பரை என்று கூறினாலும் சரி, விஷயம் ஒன்றே தான். இந்த எல்லா பாயிண்ட்ஸ்களும் தாரணை செய்வதற்கானதாகும். தந்தை, ஆன்மீகத் தந்தை ஆவார் மற்றும் இது ஆன்மீகக் கல்வியாகும். ஆன்மீக (சர்ஜரி) மருத்துவமாகும். எனவே போர்டில் பெயர் கூட பிரம்மாகுமாரிகள் ஆன்மீக, ஈசுவரிய விஷ்வ வித்தியாலயம் என்று எழுத வேண்டும். ஆன்மீகம் என்ற வார்த்தையை அவசியம் எழுத வேண்டும். ஆன்மீக மருத்துவமனை என்றும் கூறலாம். ஏனெனில், தந்தைக்கு அழிவற்ற சர்ஜன் என்றும் கூறுகிறார்கள். பதீதபாவனர், ஞானக்கடல் என்றும் கூறுகிறார்கள். குழந்தைகளே! நான் வந்துள்ளேன் என்று அவர் தைரியம் அளித்துக் கொண்டிருக்கிறார். நான் ஆத்மாக்களுக்கு படிப்பிப்பவன் ஆவேன். என்னை- பரம ஆத்மா என்று கூறுகிறார்கள். ஆத்மாவிற்குத் தான் நோய் பீடித்திருக்கிறது. துரு ஏறி உள்ளது. சத்யுகத்தில் பவித்திர ஆத்மாக்கள் இருப்பார்கள். இங்கு அபவித்திர ஆத்மாக்களாக உள்ளார்கள். அங்கு இருப்பவர்கள் புண்ணிய ஆத்மாக்கள். இங்கு இருப்பவர்கள் பாவ ஆத்மாக்கள் ஆவார்கள். எல்லாமே ஆத்மாவைப் பொருத்த தாகும். ஆத்மாவிற்கு அறிவுரை அளிப்பவர் பரமாத்மா ஆவார். அவரைத் தான் நினைவு செய்கிறார்கள். எல்லாமே அவரிடம் தான் வேண்டப்படுகிறது. யாராவது துக்கமுற்று ஏழையாக இருக்கிறார் என்றால் கருணை புரியுங்கள், கொஞ்சம் பைசா செல்வந்தரிடமிருந்து கொடுக்குமாறு செய்யுங் கள் என்பார்கள். பைசா கிடைத்து விட்டது என்றால், இறைவன் அளித்தார் அல்லது அளிக்க வைத்தார் என்பார்கள். ஒருவர் தச்சனாக இருக்கிறார் என்றால், அவருக்கு சேட் இடமிருந்து கிடைக்கும். குழந்தைகளுக்கு தந்தையிடமிருந்து கிடைக்கிறது. ஆனால் இறைவனின் பெயர் பிரசித்தமாகி விடுகிறது. இப்பொழுது இறைவனைப் பற்றி மனிதர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். எனவே இந்த எல்லா வழிமுறை களும் (யுக்தி) கையாளப்படுகிறது. பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது? என்று கேட்கப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகதம்பாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? இராஜ இராஜேஷ்வரி – இலட்சுமி நாராயணனுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? அவர்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆவார்கள். அவசியம் சொர்க்கத்தினை ஸ்தாபனை செய்பவர் அவர் களுக்கு ஆஸ்தி அளித்திருக்கக் கூடும். இவர்கள் விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆவார்கள் அல்லவா? முக்கியமான படங்கள் சிவபாபா மற்றும் பிரம்மா, விஷ்ணு, சங்கரனுடையதாகும். விஷ்ணு வினுடையதை அலங்கரிக்கப்பட்ட ரூபத்தில் காண்பிக் கிறார்கள். விஷ்ணு மூலமாக பாலனை செய்கிறார். சங்கரன் மூலமாக விநாசம் அவர்களுடையது இவ்வளவு கடமை கிடையாது. புகழுக்கு உரியவர் சிவபாபா ஆவார். மேலும் விஷ்ணுவும் புகழுக்குரியவர் ஆகிறார். சங்கர ருடைய பாகம் தனியாகும். திரிமூர்த்தி என்று பெயர் வைத்துள்ளார்கள். இராமர் சீதை, இலட்சுமி நாராயணர் இவையே முக்கிய படங்கள் ஆகும். அதற்குப் பிறகு இருப்பது இராவணனுடைய படம். அதை பெரியதாக 46 அடி அளவில் அமைக்க வேண்டும். இராவணனை வருடா வருடம் எரிக்கிறார்கள். இவருடன் உங்களுடைய சம்பந்தம் என்ன? இவரை எரிக்கிறார்கள் என்றால், அவசியம் பெரிய எதிரி ஆகிறான். கண்காட்சியில் அவரது பெரிய படம் இருக்க வேண்டும். இவரது இராஜ்யம் துவாபரத்திலிருந்து ஆரம்பமாகிறது. அப்பொழுது தேவி தேவதைகள் வாம மார்க்கத்தில் விழுகிறார்கள். இவற்றைத் தவிர மற்றது எந்தெந்த படங்கள் இருக்கின்றனவோ அவற்றை பிறகு தனித் தனியாக கண்காட்சிகளில் காண்பிக்க வேண்டும் – இவை அனைத்தும் கலியுகத்தின் சித்திரங்களாகும். விநாயகர், அனுமார், ஆமை, மீன் ஆகிய எல்லோருடைய படங்களையும் போட வேண்டும். இது போன்று நிறைய விதவிதமான படங்கள் கிடைக்கின்றன. ஒரு பக்கம் கலியுகத்தின் படங்கள், ஒரு பக்கம் உங்களுடைய படங்கள். இவற்றின் மீது நீங்கள் புரிய வைக்கலாம். சிவபாபா மற்றும் லட்சிய நோக்கத்தின் படங்கள் முக்கியமானவை ஆகும். இலட்சுமி நாராயணரினுடையது தனி. சங்கமத்தினுடையது தனி. கலியுகத் தினுடையது தனி. படங்களின் கண்காட்சி வைப்பதற்காக மிகப் பெரிய மண்டபம் தேவைப்படும். டில்லியில் நிறைய பேர் வருவார்கள். நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் இருக்கவே இருப்பார்கள். மிகவுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதில் அடையாளம் கண்டு கொள்வது அவசியம். தலைமை நீதிபதி மூலமாக திறந்து வைக்கப் படுகிறது. அவர் கூட முதல் நம்பரில் பிரசித்தமானவர் ஆவார். ஜனாதிபதியும், தலைமை நீதிபதியும் சமம் ஆவார்கள். ஒருவர் மற்றவரை பிரமாணம் செய்விக்கிறார்கள். அவசியம் கொஞ்சம் புரிந்திருப்பார்கள். அதனால் தான் திறந்து வைப்பார்கள் அல்லவா? ஸ்தாபனைக்குத் தான் திறந்து வைப்பார்கள். அழிவுக்கான திறப்பு விழா நடத்த மாட்டார்கள். குழந்தைகளே உங்களுடைய சுகத்தின் நாட்கள் வந்து கொண்டிருக்கிறது என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். பெயர் பலகையில் கூட மருத்துவமனை என்ற பெயர் அவசியம் எழுத வேண்டும். மேலும் யார் ஸ்தாபனை செய்தார்? அவினாஷி சர்ஜன் பதீத பாவன தந்தை ஆவார் அல்லவா? பாவன உலகத்தில் பாவன மனிதர்களுக்கு ஒரு பொழுதும் நோய்கள் ஏற்படுவதில்லை. பதீத உலகத்தில் நிறைய வியாதிகள் உள்ளன. எனவே சேவைக்காக சிந்தனை செலுத்த வேண்டும். என்னென்ன படங்கள் வைக்க வேண்டும்? எப்படி புரிய வைக்க வேண்டும்? ஒரு வேளை யாராவது அறியாதவர் புரிய வைத்தார் என்றால், ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாமல் போய் விடுவார்கள். இங்கு ஒன்றுமே இல்லை என்பார்கள். பொய்க் கூறிக் கொண்டு இருக்கிறார்கள் என்பார்கள். எனவே கண்காட்சியில் ஒரு பொழுதும் புரிய வைப்பதற்காக ஞானத்தில் குறைவானவர்களை நிற்க வைக்கக் கூடாது. புரிய வைப்பவர்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான மனிதர்கள் வருகிறார்கள். பெரிய மனிதர்களுக்கு யாராவது ஞானம் புரிய வைத்தார் என்றால், முழு கண்காட்சியின் பெயரையே கெடுத்து விடுவார்கள். இன்னின்னார் எந்த விதமான ஆசிரியர் ஆவார் என்பதை பாபா கூற முடியும். எல்லோரும் ஒன்று போல புத்திசாலி கிடையாது. நிறைய தேக உணர்வுடையவர்களும் இருக்கிறார்கள்.

ஹே ! ஆத்மாக்களே ! உங்களுடைய சுகத்தின் நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். ஆனால் சொர்க்கத்தில் கூட வரிசைக்கிரமமான பதவிகள் உள்ளன. நரகத்திலும் வரிசைக்கிரமமான பதவிகள் உள்ளன. வெற்றி மாலையில் கோர்க்கப்படுபவர்கள், இராஜ இராஜேஷ்வரர் ஆகிறார்கள். ஞான ஞானேஷ்வரி ஜகதம்பாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று நாம் கேட்கவும் செய்கிறோம். ஞான ஞானேஷ்வரிக்கு இறைவன் ஞானம் அளிக்கும் போழுது இராஜ இராஜேஷ்வரி ஆகிறார். ஜகதம்பாவிற்கும் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் பிரஜாபிதா பிரம்மாவிற்கும் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். எவ்வளவு சூட்சுமமான விஷயங்களாகும். பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகதம்பா இவர்கள் யார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாமல் இருக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவிற்கு வாய் வம்சாவளி இருப்பார்கள் அல்லவா? புத்தி யுள்ளவர்களாக இருந்தார்கள் என்றால், பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகதம்பா இவர்களுக்குள் என்ன சம்பந்தம் உள்ளது. எந்த விஷயம் உங்களுக்குப் புரிய முடியாமல் உள்ளது என்று உடனே கேட்பார்கள். எப்படி இத்தனை குழந்தைகள் வாய் மூலமாகப் பிறந்துள்ளார்கள். இது போல கேள்வி கேட்பதால் வரக் கூடியவர்களின் புத்தி பற்றித் தெரிய வந்து விடும். தந்தை எல்லா இரகசியங்களையும் புரிய வைக்கிறார். திரிமூர்த்தி, கல்ப விருட்சம், காலச் சக்கரம், இலட்சுமி நாராயணரின் சித்திரம் இவற்றில் லட்சியம் நோக்கம் கூட உள்ளது. ஆஸ்தி அளிப்பவர் மேலே நின்றுள்ளார். எனவே புரிய வைப்பவர் மிகவும் புத்திசாலியானவராக இருக்க வேண்டும். கேள்விப் பதில் கூட மிகவும் நன்றாக உள்ளது. இராவணனுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது, இவன் எப்படி எதிரி ஆகிறான் என்பதை இவ்வளவு பெரிய பெரிய வித்து வான்கள், பண்டிதர்கள் ஆகியோர் ஒன்றுமே புரிந்து கொள்வது இல்லை. நாம் கூட முன்னால் புரியாமல் இருந்தோம். நான் தத்து எடுத்திருக்கும் இந்த பிரம்மா கூட தெரியாமல் தான் இருந்திருந்தார் என்று பாபா கூறுகிறார். இப்பொழுது அறிந்திருக்கிறோம். எனவே புரிய வைப்பதற்கான மிகுந்த ஆர்வம் வேண்டும். இந்த கண்காட்சி முற்றிலும் புதியது ஆகும். யாராவது இவற்றை காப்பி (நகல்) செய்தாலும் கூட அவர்களால் புரிய வைக்க முடியாது. இது அதிசயம் ஆகும். மிகுந்த போதை வேண்டும். சேவையில் முழுமையாக ஈடுபட்டு விட வேண்டும். உங்களுடைய படங்களை நிறைய கேட்பார்கள். எனவே நிறைய படங்கள் இருக்க வேண்டும். சேவைக்கான பரந்த புத்தி வேண்டும். செலவு ஆகும் தான். பைசாவோ செலவு செய்வதற்காகத் தானே இருக்கிறது. செலவு செய்துக் கொண்டே சென்றீர்கள் என்றால் வந்து கொண்டே இருக்கும். செல்வம் கொடுக்கக் கொடுக்க செல்வம் குறையாது. குழந்தைகளோ நிறைய பேர் ஆகிக் கொண்டே போவார்கள். பைசாவை சேவை யில் தான் ஈடுபடுத்த வேண்டும். இராஜதானி சத்யுகத்தில் ஆகப் போகிறது. இங்கு மாளிகைகள் ஆகியவை அமைக்க வேண்டியது இல்லை. அதில் அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவு ஆகிறது. இங்கு செலவு படங்கள் தயாரிப்பதற்காக ஆகிறது. நாளுக்கு நாள் மிகவும் நல்ல பாயிண்ட்ஸ் வெளிப் பட்டுக் கொண்டே போகிறது. இராவண இராஜ்யம் எப்பொழுது முதல் ஆரம்பமாகியது என்பது மிகவும் யுக்தியுடன் புரிய வைக்கப்படுகிறது. பாதி காலம் இராவண இராஜ்யம், பாதி காலம் இராம இராஜ்யம். இந்த இராவணனிடமிருந்து பாபா வந்து தான் விடுவிக்கிறார். வேறு யாரும் விடுவிக்க முடியாது. அதற்கு சர்வ சக்திவான் தான் வேண்டும். அவர் தான் மாயை மீது வெற்றி அடையுமாறு செய்விக்க முடியும். பிறகு சத்யுகத்தில் இந்த இராவணன் என்ற எதிரி இருக்கவே மாட்டான். மெது மெதுவாக உங்களுடைய தாக்கம் நிறைய வெளிப்படும். பிறகு பந்தனத்தில் இருக்கும் தாய்மார்கள் கன்னியர்கள் எல்லோருமே விடுபட்டு விடுவார்கள். இது நல்ல விஷயமாகும் என்று புரிந்து கொண்டு விடுவார்கள். களங்கம் ஏற்படத் தான் செய்யும். கிருஷ்ணர் மீது கூட களங்கம் விளைவித்தார்கள் அல்லவா? ஸ்தாபனையின் பொழுது விரட்டினார் போன்ற களங்கங்கள் ஏற்படுத்தினார்கள். நிந்தனை செய்தார்கள். பிறகு சொர்க்கத் திலும் கூட என்று களங்கள் ஏற்படுத்துகின்றார்கள், பாம்பு கொத்தியது, இது ஆகியது அது ஆயிற்று …. எவ்வளவு வீணான விஷயங்கள் ! கண்காட்சியில் நிறைய பேர் வருகிறார் கள். பிறகு சென்டருக்கு வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. வந்து உங்களது வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ளுங்கள். காலன் மீது வெற்றி அடையுங்கள். அங்கு எமன் உயிரைக் குடிக்க மாட்டான். யமதூதன் அழைத்துச் செல்ல வந்தான். நீ உள்ளே நுழைய முடியாது என்று அவனுக்கு கூறினார் என்று ஒரு கதை உள்ளது. இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். இதில் மிகவுமே பரந்த புத்தி வேண்டும். மேலும் (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக இருக்க வேண்டும். நாம் ஆத்மாக்கள் ஆவோம். பழைய சம்பந்தம் மற்றும் பழைய சரீரத்தின் உணர்வு இருக்கக் கூடாது. இப்பொழுது நாடகம் முடிவ டைகிறது. நாம் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறோம்.சொர்க்கத்திற்குச் சென்று நாம் புதிய சம்பந்தத்தில் இணைய வேண்டும். இந்த ஞானம் புத்தியில் உள்ளது. இந்த பழைய உலகம் முடியப் போகிறது. நம்முடைய சம்பந்தம் தந்தையுடனும், புதிய உலகத்துடனும் உள்ளன. இந்த விஷயங்களை நினைவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த ஞானம் உங்களுக்கு வருங்கால புது உலகத்திற்காகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பழைய உலகம் சுடுகாடு ஆகப் போகிறது. இதன் மீது எதற்காக மனதை ஈடுபடுத்த வேண்டும். இந்த தேக சகிதம் அனைத்துமே முடியப் போகிறது. தேஹீ அபிமானி ஆவது நல்லதாகும். நாம் பாபாவிடம் செல் கிறோம். தங்களிடமே தாங்களே உரையாட வேண்டும். அப்பொழுது தான் எவரொருவருக்கும் புரிய வைக்க முடியும்.

நமது சுகத்தின் நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எந்த அளவு தேர்ச்சி பெறுவதற்கான முயற்சி செய்வீர்களோ பின் பதவியும் உயர்ந்ததாக அடைவீர்கள். சான்றிதழ் ஆசிரியர் தான் அளிப்பார் அல்லவா? இவருக் குள் எவ்வளவு நேர்மை இருக்கிறது, எவ்வளவு சேவை செய்யக் கூடியவராக இருக்கிறார் என்பதை அவர் அறிந்துள்ளார். இவர் ஆக்கப்பூர்வமான காரியம் செய்வாரா? அழிவிற்கான காரியம் ஒன்றும் செய்வதில்லையே? சேவை செய்பவர்கள் தான் மனதில் இடம் பெறுகிறார்கள். இப்பொழுது பரிபூரணமானவர்கள் யாருமே இல்லை தான். குறைகள் எல்லோரிடமும் இருக்கிறது. பரிபூரணமாக இனி முன்னால் போகப் போக ஆக வேண்டி உள்ளது. ஆர்வம் கொள்ள வேண்டும். மனிதனின் வாழ்க்கையை எப்படி அமைப்பது? முட்களை மலராக ஆக்க வேண்டும். தந்தை கூட முட்கள் போன்ற மனிதர்களை மலராக ஆக்குகிறார். தேவதையாக ஆக்குகிறார். ஞானம் மற்றும் யோகமும் வேண்டும். குழந்தைகள் விருத்தி அடைந்து கொண்டே செல்வார்கள். பிறகு யாருமே விரோதம் செய்ய மாட்டார்கள். சரியானவர்களாக ஆகி விடுவார்கள். இங்கு யாருமே தேவதை கிடையாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் அளிக்க வேண்டியுள்ளது. ஆல்ரவுண்டு புத்தி வேண்டும். சேவை சரியான முறையில் யாராவது செய்கிறார்களா இல்லையா? யாரும் ஓய்வுப் பிரியராக இல்லையே? நாள் முழுவதும் இது வேண்டும், அது வேண்டும் என்று அப்படி யாரும் இல்லையே? இதற்கு பேராசை என்று கூறப்படுகிறது. நல்ல ஆடை வேண்டும். நல்ல உணவு வேண்டும். நிறைய விருப்பங்கள் இருக்கிறது, உண்மையில் யக்ஞத்தில் என்ன கிடைக்கிறதோ அது நல்லது. சந்நியாசிகள் ஒரு பொழுதும் மற்றவர்கள் பொருளை எடுக்க மாட்டார்கள். இது பழக்கம் நல்ல இல்லை என்று புரிந்திருப்பார்கள். சிவபாபாவின் யக்ஞத்திலிருந்து எல்லாமே சரியாக கிடைக்கிறது. பிறகும் ஏதாவது ஆசை இருக்கும். முதலில் ஞான யோகத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். அந்த விருப்பங்களை பிறவிதோறும் வைத்துக் கொண்டு வந்தீர்கள்.இப்பொழுது பாபாவை நினைவு செய்வதால் நாம் (எவர் ஹெல்தி) சதா காலத்திற்கும் ஆரோக்கியமாகி விடுவோம் என்ற விருப்பம் கொள்ள வேண்டும். எனவே இது ஆன்மீக மருத்துவ மனையாகும் என்பதை அவசியம் எழுத வேண்டும். அதன் மூலம் மனிதர்கள் இது மருத்துவமனை அல்லது கல்லூரி ஆகும் என்பதைப் புரிந்து கொள்வார்கள். பாபா கட்டடத்தைக் கூட மருத்துவமனை மற்றும் கல்லூரியின் அமைப்பில் தான் அமைத்திருக்கிறார். கல்லூரிகளில் எந்த ஒரு அலங்காரமும் இருக்காது. எளிமையாக இருக்கும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஓய்வுப் பிரியராக ஆகக் கூடாது. சேவையில் மிக மிக ஆர்வம் கொள்ள வேண்டும். சேவையில் தான் பணத்தை செலவு செய்ய வேண்டும். மனிதர்களின் வாழ்க்கையை முள்ளிலிருந்து மலராக ஆக்க வேண்டும்.

2. எப்பொழுதும் ஆக்கப்பூர்வமான செயலையே செய்ய வேண்டும். அழிவிற்கானது அல்ல. தங்களுக்குத் தாங்களே உரையாட வேண்டும்: நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? என்ன ஆகிக் கொண்டிருக்கிறோம்.

வரதானம்:-

சக்திசாலியான நினைவு ஒரு நேரத்தில் இரட்டை அனுபவத்தை செய்விக்கிறது. ஒருபுறம் நினைவானது நெருப்பாகி எரிக்கக்கூடிய வேலை செய்கிறது, மாற்றம் செய்யும் வேலை செய்கிறது மற்றும் மறுபுறம் குஷி மற்றும் இலகுவான தன்மையின் அனுபவத்தை செய்விக்கிறது. அத்தகைய விதிப்பூர்வமான சக்திசாலியான நினைவையே சரியான நினைவு என்று கூறப்படுகிறது. அத்தகைய சரியான நினைவில் இருக்கக்கூடிய நினைவு சொரூபமான குழந்தைகளே சக்திசாலியானவர்கள். இந்த நினைவின் மூலம் சக்திசாலி ஆகுவதே முதல் பரிசைப் பெறுவதற்கான அதிகாரி ஆக்கிவிடுகிறது.

சுலோகன்:-

அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.

பரமாத்ம அன்பு இந்த சிரேஷ்டமான பிராமண பிறப்பின் ஆதாரம் ஆகும். அன்பு உள்ளது என்றால் உலகம் உள்ளது, உயிர் உள்ளது, அன்பு இல்லை என்றால் உயிரும் இல்லை, உலகமும் இல்லை என்று கூறுவார்கள். உலகம் ஒரு துளியின் தாகத்தில் உள்ளது மற்றும் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த பிரபுவின் அன்பு ஆஸ்தியாக உள்ளது. இந்த பிரபுவின் அன்பினால் வளர்கின்றீர்கள் அதாவது பிராமண வாழ்க்கையில் முன்னேறுகின்றீர்கள். எனவே, சதா அன்புக் கடலில் லவ்லீன் ஆகி இருங்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top