16 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 15, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

ஆன்மீக பெருமிதத்தில் (ஃபகுர்) இருந்து (பேஃபிகர்) கவலையில்லாத சக்கரவர்த்தி ஆகுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்றைக்கு பெரியதிலும் பெரிய தந்தை குழந்தைகளுக்கு அலௌகீக தெய்வீக சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளுக்குமான வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உலகத்தாருக்கு விசேஷமாக ஒரு பெரிய நாள் (பண்டிகை) இருக்கும். மேலும் பண்டிகையன்று என்ன செய் கிறார்கள்? பெரிய மனதுடன் கொண்டாடிக் கொண்டிருக் கிறோம் என்று அவர்கள் நினைக் கிறார்கள். ஆனால் அவர்களுடைய கொண்டாடுதல் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். அவர்களுடைய கொண்டாடுதல் மற்றும் பெரியதிலும் பெரிய தந்தையின் பெரிய மனதுடைய குழந்தைகளாகிய உங்களுடைய கொண்டாடுதல் – எவ்வளவு தனிப்பட்டதாகவும் பிரியமானதாகவும் இருக்கிறது. எப்படி உலகத்தாருடைய பண்டிகை (பெரிய நாள்) இருக்கிறது. மகிழ்ச்சியில் ஆடியும் பாடியும் ஒருவருக்கொருவர் அன்றைய நாளுக்கான வாழ்த்துக்கள் கொடுக்கிறார்கள். அதே போல குழந்தைகளாகிய உங்களுக்கு சங்கமயுகம் தான் பெரிய யுகம் ஆகும். ஆயுளில் சிறியது ஆகும். ஆனால் விஷே தன்மைகள் மற்றும் பிராப்தி அளிப்பதில் எல்லாவற்றையும் விட பெரிய யுகம் ஆகும். எனவே சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பெரிய நாள் ஆகும். ஏனெனில் பெரியதிலும் பெரிய தந்தை பெரிய யுகமான சங்கமயுகத்தில் தான் சந்திக்கிறார். கூட கூடவே தந்தை மூலமாக பெரியதிலும் பெரிய பிராப்தி கூட இப்பொழுது தான் ஏற்படுகிறது. பாப்தாதா அனைத்துக் குழந்தைகளையும் பெரிய திலும் பெரியவராக, புருஷோத்தமராக இப்பொழுது ஆக்குகிறார். எப்படி இன்றைய நாளின் விசேஷ தன்மை ஆவது – மகிழ்ச்சி கொண்டாடுவது. மேலும் ஒருவருக்கொருவர் பரிசு கொடுப்பது, வாழ்த்துக் கொடுப்பது. மேலும் ஃபாதர் (தந்தை) மூலமாகத் தான் பரிசு கிடைக்கக் கூடிய நாளாக கொண்டாடுகிறார்கள். உங்கள் அனைவருக்கும் தந்தை சங்கமயுகத்திலேயே பெரியதிலும் பெரிய பரிசு என்ன கொடுத்துள்ளார்? நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளங்கையில் சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியம் எடுத்து வந்துள்ளேன் என்று பாப்தாதா எப்பொழுதும் கூறுகிறார். எனவே எல்லாருடைய உள்ளங்கையிலும் சொர்க் கதினுடைய இராஜ்ய பாக்கியம் இருக்கிறது அல்லவா? அதற்கு திரி பர் பஹிஷத் – உள்ளங்கையில் சொர்க்கம் என்று கூறுகிறார்கள். இதை விட பெரிய பரிசு வேறு யாராலும் கொடுக்க முடியுமா? எவ்வளவு தான் ஒரு பெரிய மனிதர் பெரிய பரிசு கொடுக்கட்டும், ஆனால் தந்தையின் பரிசிற்கு (கிஃப்ட்) முன்னால் அது எம்மாத்திரம்? எப்படி சூரியனுக்கு முன்னால் தீபம் போன்றது. எனவே சங்கமயுகத்தின் நினைவார்த்தத்தின் அடையாளங்கள் மற்ற தர்மங்களிலும் இருந்து விட்டுள்ளது. உங்களுக்கு பெரிய யுகத்தின் பெரிய தந்தை பெரியதிலும் பெரிய பரிசு கொடுத்துள்ளார். எனவே இன்றைய பெரிய நாளன்று இந்த விதி மூலமாக கொண்டாடு கிறார்கள். அவர்கள் கிறிஸ்மஸ் ஃபாதர் என்று கூறுகிறார்கள். ஃபாதர் (தந்தை) எப்பொழுதும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய வள்ளல் ஆவார். லௌகீக ரீதியில் ஆகட்டும் – பாருங்கள் – ஃபாதர் குழந்தைகளின் வள்ளலாக இருப்பார். இவர் எல்லையில்லாத ஃபாதர் ஆவார். எல்லையில்லாத ஃபாதர் பரிசு கூட எல்லையில்லாதது தான் கொடுக்கிறார். மேலும் வேறு எந்தவொரு பரிசும் எவ்வளவு காலம் நடக்கும்? எவ்வளவு நல்ல நல்ல வாழ்த்துக்களின் கார்டு பரிசாக கொடுக்கிறார்கள். ஆனால் இன்றைய நாள் கழிந்து விட்டது என்றால் அந்த கார்டுகளை என்ன செய்வார்கள்? கொஞ்ச காலம் தான் நடக்கிறது அல்லவா? உண்பதற்கும், அருந்துவதற்கும் இனிப்புப் பொருட்கள் கூட கொடுப்பார்கள். அது கூட எவ்வளவு காலம் நடக்கும்? எவ்வளவு நேரம் குஷி கொண்டாடுவார்கள்? ஒரு இரவு ஆடுவார்கள், பாடுவார்கள். ஆனால் ஆத்மாக் களாகிய உங்களுக்கு தந்தை எப்பேர்ப்பட்ட பரிசு கொடுக்கிறார் என்றால் அது இந்த பிறவியிலோ கூட இருக்கவே இருக்கும். ஆனால் ஜென்ம ஜென்மமாக கூட இருக்கும். வெறுங்கையுடன் வந்தோம் மேலும் வெறுங்கையுடன் செல்ல வேண்டும் என்று உலகத்தார் கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தை மூலமாக கிடைத்திருக்கும் பொக்கி‘ங்களில் நிரம்பியவர்களாக ஆகி செல்வோம். மேலும் அநேக ஜென்மங்கள் நிரம்பியவர்களாக இருப்போம் என்று நீங்கள் பெருமிதத்துடன் கூறுகிறீர்கள். 21 பிறவிகள் வரையும் இந்த பரிசு கூடவே இருக்கும். இப்பேர்ப்பட்ட பரிசு எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? எந்தவொரு வெளி நாடுகளின் தேசத்தின் இராஜா அல்லது இராணி ஆகட்டும், இப்பேர்ப்பட்ட பரிசு அளிக்க முடியுமா? முழுமையான சிம்மாசனமே வேண்டுமானாலும் கொடுத்து விடட்டும் – இந்த அரியணையை நீங்கள் எடுத்துக் கொண்டு விடுங்கள் என்று முன் வந்து கொடுக்கட்டும். நீங்கள் என்ன செய்வீர்கள்? யாராவது எடுத்துக் கொள்வார்களா? தந்தையின் இதய சிம்மாசனத்திற்கு முன்னால் இந்த சிம்மாசனம் கூட எம்மாத்திரம்? எனவே நீங்கள் அனைவரும் ஃபகுர் – பெருமிதத்தில் இருக்கிறீர்கள். ஃபகுர் என்றால் ஆன்மீக போதை. இந்த ஆன்மீக (ஃபகுர்) போதையில் இருப்பவர்கள் எந்தவொரு விஷயத்திற்கும் (ஃபிகர்) கவலைப்படுவதில்லை. கவலையில்லாத சக்கரவர்த்தி ஆகி விடுகிறார்கள். இப்பொழுதைய நேரத்திற்கும் சக்கரவர்த்தி. மேலும் வருங்காலத்தில் கூட இராஜ்யத்தை அடைகிறீர்கள். எனவே எல்லாவற்றையும் விட பெரியது மற்றும் எல்லா வற்றையும் விட சிறந்தது இந்த கவலையில்லாத அரசாட்சி ஆகும். ஏதாவது கவலை இருக்கிறதா? மேலும் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு குழந்தை குட்டிகளின் கவலை இருக்கிறதா? குமாரர்களுக்கு உணவு தயாரிப்பதற்கான கவலை அதிகமாக இருக்கிறது. குமாரி களுக்கு என்ன கவலை இருக்கிறது? நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதை பற்றிய கவலை இருக்கிறதா? கவலையற்றவர்கள் ஆவீர்கள் அல்லவா? யாருக்கு கவலை இருக்கிறதோ, அவர்கள் கவலையற்ற அரசாட்சியின் ஆனந்தத்தை பெற முடியாமல் இருப்பார்கள். உலக அரசாட்சியோ 20 பிறவிகள் இருக்கும். ஆனால் இந்த கவலையில்லாத அரசாட்சி மேலும் இதய சிம்மாசனம் – இந்த ஒரேயொரு யுகத்தில் தான் கிடைக்கிறது, ஒரு பிறவிக்காக. எனவே ஒன்றினுடைய மகத்துவம் இருக்கிறது அல்லவா?

பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளுக்கு இது தான் கூறுகிறார் – பிராமண வாழ்க்கை என்றால் கவலை யில்லாத சக்கரவர்த்தி. பிரம்மா தந்தை கவலையில்லாத சக்கரவர்த்தி ஆகும் பொழுது என்ன பாடல் பாடினார் – அடைய வேண்டியதை அடைந்து விட்டது, இனி மீதம் என்ன காரியம் இருக்கிறது. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? சேவையின் காரியம் மீதம் இருக்கிறது. ஆனால் அது கூட செய்விப்பவரான தந்தை செய்வித்துக் கொண்டிருக்கிறார். மேலும் செய்வித்துக் கொண்டே இருப்பார். நாம் செய்ய வேண்டி இருக்கிறது – இப்படி நினைத்தால் சுமை ஏற்பட்டு விடுகிறது. தந்தை நம் மூலமாக செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்றால் கவலை யற்றவர் ஆகி விடுவீர்கள். இந்த சிறந்த காரியம் ஆகத் தான் வேண்டி உள்ளது. மேலும் ஆகி விட்டது போலவே தான் என்று நிச்சயம் இருக்கிறது. எனவே நிச்சய புத்தி, நிச்சிந்தையானவராக, கவலையற்றவராக இருக்கிறீர்கள். இதுவோ குழந்தைகள் மும்முரமாக (பிஸி) இருப்பதற்காக சேவையினுடைய ஒரு விளையாட்டு செய்வித்துக் கொண்டிருக்கிறார். கருவியாக (நிமித்தமாக) ஆக்கி நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தில் சேவையின் பலனுக்கு அதிகாரியாக ஆக்கி கொண்டிருக்கிறார். காரியம் (காம்) தந்தையினுடையது, பெயர் (நாம்) குழந்தை களினுடையது. பலன் என்ற பழத்தை குழந்தைகளுக்கு ஊட்டுகிறார். சுயம் தான் சாப்பிடுவதில்லை. எனவே கவலையற்றவர்கள் ஆனீர்கள் அல்லவா? சேவையில் வெற்றிக் கான எளிய சாதனமே இது தான். செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு வேளை நான் செய்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தீர்கள் என்றால் ஆத்மாவின் சக்திக்கேற்ப பலன் கிடைக்கிறது. தந்தை செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்றால், தந்தை சர்வசக்திவான் ஆவார். எனவே கர்மத்தின் பலன் கூட அந்த அளவிற்கே சிறந்ததாக கிடைக் கிறது. எனவே எப்பொழுதும் தந்தை மூலமாக அடைய பெற்றிருக்கும் கவலையில்லாத அரசாட்சி அல்லது உள்ளங்கையில் சொர்க்கத்தின் இராஜ்ஜிய பாக்கியம் என்ற காட்லி கிஃப்ட் – இறை பரிசினை நினைவில் வைத்திருங்கள். தந்தை மற்றும் பரிசு இரண்டும் நினைவில் இருந்தது என்றால், ஒவ்வொரு நாள் மட்டுமென்ன, ஆனால் ஒவ்வொரு கணம் கூட பெரியதிலும் பெரிய கணம் ஆகும். பெரிய நாள் (பண்டிகை) ஆகும் – இவ்வாறு உணருவீர்கள். உலகத்தாரோ வாழ்த்துக்கள் மட்டும் கொடுக்கிறார்கள். என்ன கூறுகிறார்கள்? ஹேப்பி மகிழ்ச்சியாக இருங்கள். ஹெல்தி வெல்தி – ஆரோக்கிய மாகவும் செல்வத்துடனும் இருங்கள் என்று கூறி விடுகிறார்கள். ஆனால் அவ்வாறு ஒன்றும் ஆகி விடுவதில்லை அல்லவா? தந்தையோ எப்பேர்ப்பட்ட வாழ்த்து அளிக்கிறார் என்றால் எப்பொழுதிற்குமாக ஹெல்த், வெல்த், ஹேப்பி வரதானங்கள் ரூபத்தில் கூடவே இருக்கிறது. வாயால் மட்டும் கூறிவிட்டு குஷிப் படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு ஆக்குகிறார். மேலும் ஆவது தான் கொண்டாடுவது ஆகும். ஏனெனில் அவினாஷி தந்தை யின் வாழ்த்துக் கூட அவினாஷி – அழியாததாக இருக்கும் அல்லவா? எனவே வாழ்த்துக்கள் என்பது வரதானமாக ஆகி விடுகிறது.

நீங்கள் அடிமரத்திலிருந்து வெளிப்பட்டவர்கள் ஆவீர்கள். இவை எல்லாமே கிளைகள் ஆகும். இந்த எல்லா தர்மங்களும் உங்களுடைய கிளைகள் ஆகும் அல்லவா? கல்ப விருட்சத்தின் கிளைகள் ஆகும். எனவே விருட்சத்தின் அடையாளமாக கிறிஸ்மஸ் ட்ரீ காண்பிக்கிறார்கள். கிறிஸ்மஸ் ட்ரீ எப்பொழுதாவது அலங்கரிக்கப்பட்டதாக பார்த்திருக்கிறீர்களா? இதில் என்ன செய்கிறார்கள்? (மேடையில் இரண்டு கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்துக் வைத்திருக்கிறார்கள்). இதில் என்ன காண்பித்திருக்கிறார்கள். விசேஷமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஏற்றப்பட்ட மின்சார விளக்குகளை காண்பிக்கிறார்கள். சிறிய சிறிய மின்சார விளக்குகளால் தான் அலங்கரிக்கிறார்கள். இதனுடைய அர்த்தம் என்ன? கல்ப விருட்சத்தில் நீங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் ஆவீர்கள். மேலும் யாரெல்லாம் தர்ம பிதா – மதத் தலைவர்கள் வருகிறார்களோ, அவர்கள் கூட தங்கள் கணக்குப்படி சதோபிரதானமாக இருப்பார்கள். எனவே கோல்டன் ஏஜ் – தங்க யுகத்தின் ஆத்மா பிரகாசமுடையதாக இருப்பார். எனவே இந்த கல்ப விருட்சத்தின் அடையாளத்தை மற்ற தர்மங்களின் கிளையை சேர்ந்தவர்கள் கூட ஒவ்வொரு வருடமும் அடையாளமாக கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள். முழு விருட்சத்தின் கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர் ஆவார் அல்லவா? அந்த தந்தை கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர் ஆவார்? தந்தை பிரம்மாவை முன்னால் வைத்துள்ளார். சாகார சிருஷ்டியின் ஆத்மாக்களின் ஆதி பிதா ஆதிநாதன் பிரம்மா ஆவார். எனவே கிரேட் கிரேட் கிராண்டு ஃபாதர் ஆவார். ஆதி தேவனுடன் கூட நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா? இல்லை ஆதி தேவன் தனியாக இருக்கிறாரா? ஆதி ஆத்மாக்களாகிய நீங்கள் கூட இப்பொழுது ஆதி தேவனுடன் கூட இருக்கிறீர்கள். மேலும் இனி முன்னாலும் கூட கூடவே இருப்பீர்கள். இவ்வளவு போதை இருக்கிறதா? குஷியின் கீதம் எப்பொழுதும் பாடிக் கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா? இல்லை இன்று மட்டும் தான் பாடுவீர்களா?

இன்றைக்கு விசேஷமாக இரட்டை வெளிநாட்டினரின் (டபிள் ஃபாரினர்ஸ்) நாள் ஆகும். உங்களுக்கு தினமும் பெரிய நாளாக (பண்டிகை) இல்லை. இன்று மட்டுமா? நாலா புறங் களிலும் தேச விதேசத்தின் குழந்தைகள் கல்ப விருட்சத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக தென்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சூட்சும ரூபத்திலோ எல்லாரும் மதுபன் வந்து சேர்ந்துள் ளார்கள். அவர்கள் கூட எல்லாரும் ஆகாரி ரூபத்தில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சாகாரி ரூபத்தில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். அனைவருடைய உள்ளங் களும் தந்தையினுடைய காட்லி கிஃப்ட் – இறை பரிசினை பார்த்து குஷியில் நடனமாடிக் கொண்டிருக் கின்றன. பாப்தாதா கூட அனைத்து சாகார ரூபத்தில் மற்றும் ஆகாரி ரூபத்தில் இருக்கும் குழந்தைகளை பார்த்து எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பீர்களாக என்ற வாழ்க்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். எப்பொழுதும் தில்குஷ் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டே இருங்கள். மேலும் பிராப்தியின் கீதம் பாடிக் கொண்டே இருங்கள். நாடகப்படி பாரதவாசிகளுக்கு விசேஷ பாக்கியம் கிடைத்துள்ளது. நல்லது.

எல்லா டீச்சர்களும் பெரிய நாளை கொண்டாடினீர்களா? இல்லை தினமும் கொண்டாடு கிறீர்களா? பெரிய தந்தை ஆவார், மேலும் நீங்களும் பெரியவர்கள் ஆவீர்கள். எனவே உலகத்தாருடைய பெரிய நாளுக்கு (பண்டிகை) நீங்களும் மகத்துவம் கொடுக்கிறீர்கள். இதில் கூட நீங்கள் பெரியவர்கள், சிறிய சகோதரர்கள் அனைவருக்கும் உற்சாகமூட்டுகிறீர்கள். எல்லா டீச்சர்களும் கவலையில்லாத சக்கரவர்த்தி ஆவீர்களா? சக்கரவர்த்தி என்றாலே எப்பொழுதும் நிச்சயம் மற்றும் (நஷா) போதையில் நிலைத்திருப்பவர்கள். ஏனெனில் நிச்சயம் வெற்றி யாளராக ஆக்குகிறது. மேலும் (நஷா) போதை குஷியில் எப்பொழுதும் உயர பறக்க வைக்கிறது. எனவே கவலையில்லாத சக்கரவர்த்தியாகத் தான் இருப்பீர்கள் அல்லவா? ஏதாவது கவலை இருக்கிறதா என்ன? சேவை எப்படி அதிகரிக்கும், நல்ல நல்ல மாணவர்கள் எப்பொழுது வருவார்கள் என்றே தெரியவில்லையே, எதுவரை சேவை செய்ய வேண்டி இருக்கும் – இவ்வாறு யோசிப்பது ஒன்றுமில்லையே? யோசிக்காதவராக ஆகும் பொழுது தான் சேவை அதிகரிக்கும். யோசிப்பதால் அதிகரிக்காது. யோசிக்காதவர் ஆகி புத்தியை (ஃப்ரீ) சுதந்திரமாக வைத்தீர்கள் என்றால் தந்தையின் சக்தியை உதவியின் ரூபத்தில் அனுபவம் செய்வீர்கள். யோசிப் பதிலேயே புத்தியை பிஸியாக வைத்தீர்கள் என்றால் தந்தையின் டச்சிங், தந்தையின் சக்தியை கிரகிக்க முடியாதவர்களாக ஆகி விடுவீர்கள். பாபா மற்றும் நான் – கம்பைண்டு – இணைந்திருக்கிறோம். செய்விப்பவர் மற்றும் செய்வதற்கு கருவியாக இருக்கும் நான் ஆத்மா. இதற்கு தான் யோசிக்காதவர், அதாவது ஒருவரின் நினைவு என்று கூறுவார்கள். சுபசிந்தனையில் இருப்பவர்களுக்கு ஒரு பொழுதும் சிந்த்தா – கவலை ஏற்படு வதில்லை. எங்கு கவலை இருக்கிறதோ, அங்கு சுபசிந்தனை இல்லை. மேலும் எங்கு சுபசிந்தனை இருக்கிறதோ, அங்கு கவலை இல்லை. நல்லது.

நாலாபுறங்களின் காட்லி கிஃப்ட்டிற்கு அதிகாரி, பெரியதிலும் பெரிய தந்தையின், பெரியதிலும் பெரிய பாக்கியவான் ஆத்மாக்கள், ஆதி பிதாவிற்கு சதா துணையாக இருக்கும் ஆதி ஆத்மாக்கள், சதா பெரியதிலும் பெரிய தந்தை மூலமாக அன்பினுடைய நல்வாழ்த்துக்கள், அவினாஷி வரதானத்தை பெற்று விடக் கூடிய அனைத்து சாகாரி ரூபம் தரித்திருக்கும் மற்றும் ஆகாரி ரூபம் தரித்திருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தில்குஷ் மிட்டாய் – மனதை மகிழ்ச்சிபடுத்தும் இனிப்புடன் கூடவே அன்பு நினைவு மற்றும் நமஸ்காரம்.

பூனா – பீதர் குரூப் – தினமும் அமிருத வேளை தில்குஷ் மிட்டாய் சாப்பிடுகிறீர்களா? யார் தினமும் அமிருத வேளை தில்குஷ் மிட்டாய் சாப்பிடுகிறார்களோ அவர்கள் சுயம் தாங்களும் நாள் முழுவதும் குஷியாக இருப்பார்கள். மேலும் மற்றவர்களும் அவர்களை பார்த்து குஷி படுவார்கள். இது எப்பேர்ப்பட்ட சத்துணவு என்றால் – எப்பேர்ப்பட்ட நிலைமை வந்து விட்டாலும் சரி, ஆனால் இந்த தில்குஷ் சத்துணவு நிலைமைகளை சிறியதாக ஆக்கி விடுகிறது. மலையை பஞ்சாக ஆக்கி விடுகிறது. இந்த சத்துணவில் அவ்வளவு பலம் இருக்கிறது. எப்படி சரீரத்தின் கணக்குப்படி கூட யார் ஆரோக்கியமாக அல்லது சக்திசாலியாக இருப்பாரோ, அவர் ஒவ்வொரு நிலைமையையும் சுலபமாக கடந்து செல்வார். மேலும் யார் பலவீனமாக இருப்பாரோ, அவர் சிறிய விஷயத்தில் கூட பயந்து விடுவார். பலவீனமா னோருக்கு முன்னால் நிலைமைகள் பெரியதாக ஆகி விடுகிறது. மேலும் சக்திசாலியாக இருப்பவர்களுக்கு முன்னால் நிலைமைகள் மலையிலிருந்து பஞ்சு போல ஆகி விடுகிறது. எனவே தினமும் தில்குஷ் மிட்டாய் சாப்பிடுவது என்றால் சதா மன மகிழ்ச்சியுடன் இருத்தல். இந்த அலௌகீக குஷியின் நாட்கள் எவ்வளவு குறைவாக உள்ளன. தேவதைகளின் குஷி மற்றும் பிராமணர்களின் குஷியில் கூட வித்தியாசம் இருக்கிறது. இந்த பிராமண வாழ்க்கை யின் பரமாத்ம குஷி, அதீந்திரிய சுகத்தின் உணர்வு தேவதைகளின் வாழ்க்கையில் கூட இருக்காது. எனவே இந்த குஷியை எவ்வளவு வேண்டுமோ கொண்டாடுங்கள். இன்று குஷி கொண்டாடுவதற்கான நாள் என்று தினமும் நினையுங்கள். இங்கு வந்ததால் குஷி அதிகரித்து விட்டுள்ளது அல்லவா? இங்கிருந்து கீழே இறங்கிய உடனேயே குறைந்து ஒன்றும் போய் விடாதே? பறக்கும் கலை இப்பொழுது தான் இருக்கிறது. பிறகோ எவ்வளவு அடைந்தீர்களோ அவ்வளவு சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் தில்குஷ் மிட்டாய் சாப்பிடக் கூடியவர்கள். மேலும் மற்றவர்களுக்கும் ஊட்டுபவர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் எந்த அளவு கொடுப்பீர்களோ, அந்த அளவிற்கு இன்னும் அதிகரித்துக் கொண்டு போகும். பாருங்கள், குஷியின் முகம் எல்லாருக்கும் நன்றாக பிடிக்கிறது. மேலும் துக்கம் அசாந்தியின் பயப்படக் கூடிய முகமாக ஒருவருடையது இருந்தது என்றால் நல்லதாக தோன்றாது அல்லவா? மற்றவர்களுக்கு அது நல்லதாக படாமல் இருக்கும் பொழுது நம்முடையது கூட நமக்கு நல்லதாக படக் கூடாது. எனவே எப்பொழுதும் குஷியான முகத்துடன் சேவை செய்துக் கொண்டே இருங்கள். தாய்மார்கள் அப்பேர்ப்பட்ட சேவை செய்கிறீர்களா? வீட்டில் இருப்பவர்கள் உங்களை பார்த்தவுடன் குஷி அடைந்து விட வேண்டும். யாராவது ஞானத்தை வேண்டுமானால் தீயது என்று கூட நினைக்கலாம். பிறகும் குஷியின் வாழ்க்கையை பார்த்து இவர்களுக்கு ஏதோ கிடைத்திருக்கும் காரணத்தால் தான் குஷியாக இருக்கிறார்கள் என்று மனதில் அவசியம் அனுபவம் செய்கிறார்கள். வெளியில் அபிமானம் காரணமாக எதுவும் சொல்லாமல் இருந்தால் கூட உள்ளுக்குள் உணர்ந்திருப்பார்கள். மேலும் கடைசியிலோ பணிந்து தான் ஆக வேண்டும். இன்றைக்கு நிந்தனை செய்கிறார்கள். நாளைக்கு பாதங்களில் வணங்குவார்கள். எங்கு வணங்குவார்கள்? ஆஹா பிரபு என்று கூறி அவசியம் வணங்கி தான் ஆக வேண்டும். எனவே அப்பேர்ப்பட்ட நிலை ஏற்பட்டால் தானே வணங்கு வார்கள் அல்லவா? எவரொருவரும் ஒருவருக்கு முன்னால் வணங்குகிறார்கள் என்றால் அவசியம் அவரிடம் ஏதோ பெரிய தன்மை இருக்கிறது. ஏதோ விசேஷ தன்மை இருக்கிறது. அந்த விசேஷ தன்மை மீது வணங்குகிறார். அப்படியே யாரும் வணங்க மாட்டார்கள் அல்லவா? தென்பட வேண்டும் – இவர்களை போல வாழ்க்கை யாருடையதும் இல்லவே இல்லை. எப்பொழுதும் குஷியாக இருக்கிறார்கள். அழக் கூடிய நிலைமையில் கூட குஷியாக இருக்க வேண்டும். மனம் குஷியாக இருக்க வேண்டும். அப்படியின்றி சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் மனம் குஷியாக இருக்க வேண்டும். பாண்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்பேர்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு ஏற்படுகிறதா? இல்லை இப்பொழுது குறைவாக இருக்கிறதா? குஷியான மனநிலை உடையவர்கள் தங்களது முகத்தினால் நிறைய சேவை செய்கிறார்கள். வாயால் பேசுங்கள், பேசாமல் இருங்கள். ஆனால் உங்களுடைய (ஸுரத்) தோற்றம் ஞானத்தின் (ஸீரத்) குணங்களை இயல்பாகவே வெளிப்படுத்தும். எனவே தில்குஷ் மிட்டாய் சாப்பிட வேண்டும், மேலும் மற்றவர்களுக்கும் ஊட்ட வேண்டும் என்பதையே நினைவில் கொள்ள வேண்டும். யார் சுயம் சாப்பிடுகிறாரோ, அவரால் மற்றவர்களுக்கு சாப்பிட கொடுக்காமல் இருக்க முடியாது. நல்லது.

பெல்காம் சோலாப்பூர் குரூப் – தங்களது இந்த சிறந்த வாழ்க்கையை பார்த்து சந்தோஷப்படுகிறீர்களா? ஏனெனில் இந்த வாழ்க்கை வைரத்திற்கு சமமான வாழ்க்கை ஆகும். வைரத்திற்கு மதிப்பு இருக்கிறது அல்லவா? எனவே இந்த வாழ்க்கையை அவ்வளவு விலை மதிப்பிட முடியாதது என்று புரிந்து ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். பிராமண வாழ்க்கை என்றால் அலௌகீக வாழ்க்கை. அலௌகீக வாழ்க்கையில் சாதாரண நடத்தை இருக்க முடியாது. என்ன கர்மம் செய்தாலும் சரி, அது அலௌகீகமாக இருக்க வேண்டும். சாதாரண மானதாக அல்ல. அலௌகீக சொரூபத்தின் ஸ்மிருதி (நினைவு) இருக்கும் பொழுது தான் அலௌகீக கர்மம் ஏற்படுகிறது. ஏனென்றால் எப்படி ஸ்மிருதி இருக்குமோ, அப்படி தான் ஸ்திதி – மனநிலை இருக்கும். ஒரு தந்தையை தவிர வேறு யாருமில்லை என்பது நினைவில் இருக்கட்டும். எனவே தந்தையின் ஸ்மிருதி (நினைவு) சதா ஸமர்த் – சத்திசாலியாக ஆக்கு கிறது. எனவே செயல் கூட சிறந்ததாக அலௌகீகமானதாக ஏற்படுகிறது. நாள் முழுவதும் எப்படி அஞ்ஞானி வாழ்க்கையில் எனது எனது என்று கொண்டே இருந்தீர்கள், இப்பொழுது இதே எனது என்பதை தந்தையின் பக்கம் ஈடுபடுத்தி விட்டீர்கள் அல்லவா? இப்பொழுது மற்ற எல்லா எனது எனது என்பது முடிந்து போய் விட்டது. பிராமணன் ஆவது என்றால் எல்லாமே உன்னுடையது என்று செய்து விட்டீர்கள். எனது என்பதை உனது, உனது என்பதை தவறாக எனது என்று செய்து விடுவது இல்லையே? ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் என்னுடையவர் என்பார்கள் மற்றும் எந்த காரியமும் இல்லை என்றால் உனது என்று கூறி விடுவார்கள். எனது என்று தாராளமாக கூறுங்கள், ஆனால் மேரா பாபா – என்னுடைய பாபா என்று கூறுங்கள். மற்ற எல்லா எனது எனது என்பதை விடுத்து ஒரேயொருவர் என்னுடையவர். ஒரேயொரு மேரா – என்னுடையவர் என்று கூறும் பொழுது உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். சுமை இறங்கி விடும். இல்லையென்றால் இல்லற வாழ்க்கையில் எவ்வளவு சுமை இருக்கிறது. இப்பொழுது லேசானவராக டபிள் லைட் ஆகி விட்டீர்கள். எனவே எப்பொழுதும் பறக்கும் கலை உடையவர் ஆவீர்கள். பறக்கும் கலையை தவிர நின்று விடும் கலையில் நின்று விடக் கூடாது. எப்பொழுதுமே பறந்து கொண்டே செல்லுங்கள். தந்தை தன்னுடையவராக ஆக்கி விட்டுள்ளார் என்ற இதே குஷியில் எப்பொழுதும் இருங்கள்.

வரதானம்:-

நிகழ்காலத்தில் தங்களுக்குள் விசேஷ கர்மம் மூலமாக குணங்களின் வள்ளல் ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே ஞானத்துடன் கூட கூடவே குணங்களை வெளிப்படுத்துங்கள். நான் சதா குண மூர்த்தி ஆகி அனைவரையும் குண மூர்த்தி ஆக்குவதற்கான விசேஷ காரியம் செய்தே ஆக வேண்டும் என்ற இதே சங்கல்பம் செய்யுங்கள். அப்பொழுது வீணானவற்றை பார்ப்பதற்கு, கேட்பதற்கு அல்லது செய்வதற்கான நேரமே இருக்காது. மற்றவர்களை பார்ப்பதற்கு பதிலாக பிரம்மா தந்தையை (ஃபாலோ) பின்பற்றியபடியே ஒவ்வொரு செகண்டும் குணங்களை தானம் செய்துக் கொண்டே சென்றீர்கள் என்றால் சர்வ குணங்களில் நிறைந்தவராக ஆவது மற்றும் ஆக்குவதில் எடுத்துக் காட்டாக ஆகி முதல் நம்பரில் வந்து விடுவீர்கள்.

சுலோகன்:-

அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.

இந்த பரமாத்ம அன்பு எப்பேர்ப்பட்ட சுகம் அளிக்கும் அன்பு என்றால் இந்த அன்பில் ஒரு நொடி கூட மூழ்கி விட்டீர்கள் என்றால் அநேகவிதமான துக்கங்களை மறந்து விடுவீர்கள் மற்றும் எப்பொழுதிற்குமாக சுகத்தின் ஊஞ்சலில் ஊஞ்சலாட முற்பட்டு விடுவீர்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

1 thought on “16 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris”

  1. 🕉️💗OM SHANTI 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕊️🕊️🕊️🕊️🕊️👃☀️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top