14 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
January 13, 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இந்த உடல் இராவணனின் சொத்தாகும், இதனை இராவணனுக்கு கொடுத்து விட்டு அசரீரி ஆகி வீட்டுக்குச் செல்ல வேண்டும் ஆகையால் இதன் மீதிருக்கும் பற்றுதலை நீக்கி விடுங்கள்.
கேள்வி: -
முழு சிருஷ்டிக்கும் அமைதி மற்றும் சுகத்தின் தானத்தைக் கொடுப்பதற்கான விதி என்ன?
பதில்:-
அதிகாலையில் எழுந்து அசரீரி ஆகி தந்தையின் நினைவில் அமர வேண்டும். இது உலகிற்கு அமைதி தருவதற்கான விதியாகும், மேலும் சுயதரிசன சக்கரத்தைச் சுற்ற வேண்டும் – இது சுகத்தின் தானத்தை கொடுக்கக் கூடிய விதியாகும். ஞானம் மற்றும் யோகத்தின் மூலமே நீங்கள் எப்போதும் ஆரோக்கிய மிக்கவராகவும், செல்வமிகுந்தவராகவும் ஆகி விடு கிறீர்கள். சிருஷ்டி புதியதாக ஆகிவிடுகிறது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
என்னை உனது சரணத்தில் ஏற்றுக் கொள்வாய் ராமா. .
ஓம் சாந்தி. பக்தர்கள் பக்தி மார்க்கத்தில் இந்தப் பாடலைப் பாடுகின்றனர் – ஓ ராமா உன்னுடைய சரணத்தில் ஏற்றுக்கொள். சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என ஆங்கிலத்தில் அஸ்லைம் (அடைக்கலம்) சொல்கின்றனர். இந்தி வார்த்தை சரணாகதி என்ப தாகும். பக்தர்கள் பாடுகின்றனர், ஏனென்றால் இராவண இராஜ்யமாக உள்ளது. இராவணனை எரிக்கவும் செய்கின்றனர், இதிலிருந்தும் கூட இராவண இராஜ்யம் என நிரூபணமாகிறது. இதனுடைய அர்த்தத்தையும் யாரும் புரிந்து கொள்வதில்லை. இராவணனை வினாசம் செய்வதற்காக தசரா (விழாவாக) கொண்டாடுகின்றனர். இதுவும் கூட ஒரு அடையாளமாகும். இப்போது இது சங்கமயுகமாக உள்ளது, இந்த சமயத்தில்தான் இராமனின் சரணத்தில் சென்றிருப்பார்கள், இராவணனை வினாசம் செய்திருப்பார்கள். கடந்த காலத்தில் யாரெல்லாம் இருந்து சென்றிருக்கின்றனரோ அவர்களின் நாடகத்தை உருவாக்குகின்றனர். நாம் இப்போது இராவணனின் சிறையிலிருந்து இராமனின் அடைக்கலத்தில் வந்துள்ளோம் என குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். இராமராஜ்யத்தில் இராவண இராஜ்யம் இருக்க முடியாது மற்றும் இராவண இராஜ்யத்தில் இராமனின் இராஜ்யம் இருக்க முடியாது. அரை கல்பம் இராம இராஜ்யம் மற்றும் அரை கல்பம் இராவண இராஜ்யம் என பாடவும் படுகிறது. இராம இராஜ்யம் என்று சத்யுகம் மற்றும் திரேதா யுகத்தை சொல்வோம். சங்கமயுகத்தில் யாரெல்லாம் இராமனை சரணடைந்திருப்பார்களோ அவர்கள் ராம இராஜ்யத்தில் சென்றிருப்பார்கள். நாம் இப்போது இராமனின் அடைக்கலத்தில் இருக்கிறோம் என இப்போது நீங்கள் அறிவீர்கள். இந்த முழு உலகமுமே ஒரு தீவாகும், இதன் நாலாபுறங்களிலும் நீர் சூழ்ந்துள்ளது. இடையில் தீவு இருக்கிறது. பெரிய பெரிய தீவுகளில் பிறகு சிறிய சிறிய தீவுகளும் உள்ளன. இராவண இராஜ்யம் முழு உலகத்திலும் உள்ளது என இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. எப்போதிலிருந்து தொடங்குகிறது? பாதி – பாதி என புரிய வைக்கப்படுகிறது. இராம இராஜ்யத்தில் சுகம், பிரம்மாவின் பகல், இராவண இராஜ்யத்தில் துக்கம் அதாவது பிரம்மாவின் இரவாகும். அரைக் கல்பம் வெளிச்சம் என்றால் அரைக் கல்பம் இருட்டு. சத்ய திரேதா யுகங்களில் பக்தியின் பெயர் அடையாளம் கிடையாது. பிறகு அரைக் கல்பம் துவாபர கலியுகங்களில் பக்தி மார்க்கம் நடக்கிறது. பக்தி இரண்டு விதமாக இருக்கிறது. துவாபரத்தில் முதன் முதலில் கலப்பில்லாத பக்தி நடக்கிறது, கலியுகத்தில் பலரை வழிபடும் பக்தி ஆகி விடுகிறது. இப்போது பாருங்கள், மீன், ஆமை முதலான அனைத்தின் மீதும் பக்தி செய் கின்றனர். மனிதர்களின் புத்தி சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோ என ஆகவே வேண்டும். இந்த நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.
நீங்கள் இப்போது இராமன் அதாவது சிவபாபாவின் மடியில் வந்துள்ளீர்கள் என தந்தை புரிய வைக்கிறார். ஈஸ்வரனை பாபா என அழைக்கின்றனர். அவர் தந்தை என இருக்கும்போது பிறகு தந்தையை எங்கும் நிறைந்தவர் என சொல்லி எங்காவது கேட்டிருக்கிறீர்களா? இன்ன சாஸ்திரத்தில் வியாச பகவான் எழுதியுள்ளார் என சொல்வார்கள். எங்கும் நிறைந்தவர் என்ற ஞானத்தினால் உங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. சத்கதி கொடுக்கக் கூடிய ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் கண்டிப்பாக வேறு ஒருவராக இருப்பார். சத்கதியை கொடுப்பதே இறைத்தந்தை ஆவார். இது உங்களுடைய ஈஸ்வரிய பிறவியாகும். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இந்த சங்கமயுகத்தின் நேரத்தை பகல் என்றோ இரவு என்றோ எண்ணப்படுவதில்லை. இது சின்னஞ்சிறிய சங்கமயுகம், இந்த சமயத்தில் உலகம் மாற வேண்டும். இரும்பு யுகத்திலிருந்து மாறி தங்க யுகமாக ஆகிறது. இராவண இராஜ்யத்திலிருந்து மாறி இராம இராஜ்யமாக ஆகிறது. அந்த இராம இராஜ்யத் திற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆக இப்படிப்பட்ட பாடல்கள் கூட பயன்படுகின்றன. இது சுலோகத்தைப் போன்றது, இதற்கு அர்த்தம் புரிய வைக்கப்படுகிறது. ராமனின் சரணாகதியில் செல்லும்போது நீங்கள் சுகம் அதாவது இராம இராஜ்யத்தில் வருவீர்கள். நீங்கள் முதலில் சுகத்தை விரும்புகிறீர்களா அல்லது துக்கத்தை விரும்புகின்றீர் களா என கேட்பதாக ஒரு கதையும் உள்ளது. சுகம் வேண்டும் என சொன்னார்கள் ஏனென்றால் சுகத்தில் எம தூதர் கொண்டு செல்வதற்காக வருவதில்லை. ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை அமர்ந்து நல்ல விதமாகப் புரிய வைக்கிறார். நம்முடைய தேவி – தேவதா குலம் மிகவும் உயர்வானதாக இருந்தது என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. முதலில் பிராமண குலமாக இருக்கிறது, பிறகு தேவதைகள் ஆகின்றனர், அதன் பிறகு சத்திரிய, வைசிய, சூத்திரர்களாக ஆகின்றனர். நாம்தான் இந்த வர்ணங்களை கடந்து வந்தோம் என நீங்கள் அறிவீர்கள். இப்போது வந்து பிராமணர்களாக ஆகியிருக்கிறோம். இந்த விராட ரூப படம் முற்றிலும் சரியானதாகும். வர்ணங்கள் தெளிவாக்கப் படுகின்றன. 84 பிறவிகள் ஒரே சத்யுகத்தில் எடுக்க முடியாது. இந்த வர்ணங்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். நாடகத்தின் சுழற்சி முடிந்தது என்றால் 84 பிறவிகள் எடுத்தாகிவிட்டது என அர்த்தம். சக்கரத்தைச் சுற்றி வரவே வேண்டும், ஆகவேதான் தெய்வீக வர்ணத்தில் இவ்வளவு காலம், சத்திரிய வர்ணத்தில் இவ்வளவு காலம் என காட்டப்பட்டுள்ளது. முன்னர் இது தெரிந்திருக்கவில்லை. இப்படி வர்ணங்களில் வரவேண்டும் என ஒருபோதும் சாஸ்திரங்களிலும் கூறியதில்லை. 84 பிறவிகள் யார் எடுக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாவும் பரமாத்மாவும் வெகு காலம் பிரிந்திருந்தனர் என்பதை நீங்கள் தெளிவாக்க வேண்டும். முதன் முதலில் தேவி தேவதைகள்தான் பாரதத்தில் இருந்தனர். பாரதம் தங்கயுகமாக இருந்தது. அந்த சமயத்தில் வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை, மீண்டும் சக்கரம் சுழலவே வேண்டும். மனிதர்கள் மறுபிறவிகள் எடுக்கத்தான் வேண்டும். சக்கரத்தைப் புரிய வைப்பது மிகவும் சகஜமாகும். கண்காட்சிகளில் இப்படியெல்லாம் புரிய வைக்க வேண்டும் என பாபா வழி கூறுகிறார். நாம் புதிய உலகிற்குச் செல்ல வேண்டிய இந்த சமயத்தில் இது பழைய உலகமாக இருக்கிறது என தந்தை சொல்கிறார். இந்த பழைய உலகம், பழைய சரீரத்தின் சம்மந்தங்கள் முதலானவைகளை புத்தியிலிருந்து தியாகம் செய்யுங்கள். புத்தியின் மூலம் புதிய வீட்டை வரவேற்கப்படுகிறது. இது எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசமாகும். தேகத்துடன் சேர்த்து பழைய உலகத்தின் சம்மந்தங்கள் முதலான அனைத்தையும் மறக்க வேண்டும். தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் முக்தி தாமத்தில் வசிக்கக்கூடியவர்கள். இப்போது (வீட்டிற்கு) திரும்பிச் செல்ல வேண்டும் என அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தந்தை சொல்கிறார். முக்தியை அனைவருமே நினைக்கின்றனர் அல்லவா. இப்போது செல்லுங் கள் நம்முடைய வீட்டுக்கு. அங்கிருந்து நீங்கள் சரீரமின்றி (அசரீரி) வந்தீர்கள், இப்போது மீண்டும் அசரீரி ஆகித்தான் போக வேண்டும். சரீரத்தை எடுத்துச் செல்ல முடியாது. அசரீரியாய் வந்தீர்கள் எனும்போது போகும்போதும் அசரீரியாகித்தான் போக வேண்டும். எப்போது வரவேண்டும், எப்போது போக வேண்டும் என்ற சக்கரத்தின் சுழற்சியை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். சத்யுகத்தில் முதன் முதலில் தேவி-தேவதா தர்மத்தவர்கள்தான் வருகின்றனர், பிறகு வரிசைக்கிரமமாக வந்த வண்ணம் இருக்கின்றனர். மூலவதனத்திலிருந்து அனைவருமே வந்து விடும்போது பிறகு திரும்பிச் செல்வது தொடங்குகிறது. அங்கே ஆத்மா மட்டும் தான் போகும், இந்த உடலோ ராவணனின் சொத்து, இதனை இராவணனிடம்தான் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் இங்கேயேதான் வினாசமாகிறது. நீங்கள் அசரீரி ஆகி வாருங்கள். நான் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். பாபா எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கிறார், பிறகு அதனை தாரணையும் செய்ய வேண்டும். பிறகு சென்று மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். பாபா நாங்கள் கேட்டுவிட்டு பிறகு மற்றவர்களுக்கும் சொல்வோம் என நீங்கள் உறுதியளிக்கிறீர்கள். யாருக்கு இந்த பயிற்சி இருக்குமோ அவர்கள் சொல்ல முடியும். நாம் இந்த உலகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். நினைவில் அமர்ந்திருந்து அமைதியையும் சுகத்தையும் தானம் செய்ய வேண்டும், ஆகையால் இரவில் எழுந்து நினைவில் அமரும்போது சிருஷ்டிக்கு தானம் கொடுங்கள் என பாபா சொல்கிறார். அதிகாலையில் அசரீரி ஆகி அமர்ந்தீர்கள் என்றால் நீங்கள், பாரதத்திற்கு மட்டுமல்ல, முழு சிருஷ்டிக்குமே நினைவின் மூலம் அமைதியின் தானம் கொடுக்கிறீர்கள். மேலும் பிறகு சக்கரத்தின் ஞானத்தை சிந்திப்பதன் மூலம் நீங்கள் சுகத்தின் தானத்தைக் கொடுக்கிறீர்கள். சுகம் செல்வத்தின் மூலம் உண்டாகிறது. ஆக அதிகாலை எழுந்து நினைவில் அமருங்கள். பாபா, அவ்வளவுதான், இப்போது உங்களிடம் வந்தே வந்து விட்டோம். இப்போது எங்களுடைய 84 பிறவிகள் முடிந்து விட்டன. ஆக, அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவு செய்து அமைதி மற்றும் சுகத்தை தானம் செய்ய வேண்டும். பாபாவின் நினைவு மற்றும் ஞானத்தின் மூலம் ஆரோக்கியம் மற்றும் செல்வம் கிடைக்கும். நாம் எப்போதும் ஆரோக்கியம் மிக்கவர்களாக ஆகி விடும்போது சிருஷ்டியே புதியதாக ஆகி விடும். சத்யுகத்திலும் திரேதாவிலும் ஆரோக்கியம் மிக்கவர்களாகவும், செல்வம் மிகுந்தவர் களாகவும் இருக்கின்றனர். கலியுகத்தில் ஆரோக்கிய மற்றவர்களாகவும், செல்வமற்றவர் களாகவும் இருக்கின்றனர். இப்போது நாம் ஆரோக்கியமாகவும் செல்வந்தர் களாகவும் ஆகின்றோம். பிறகு அரைக் கல்பம் நம்முடைய இராஜ்யம்தான் நடக்கும். புத்தியில் இந்த ஞானம் இருக்கும்போது குஷி இருக்க முடியும். இதையும் கூட எழுதிப்போடலாம் – 2500 வருடங்களுக்கு எப்போதும் ஆரோக்கியமாகவும், செல்வந்தர்களாகவும் ஆக வேண்டும் என்றால் இந்த ஈஸ்வரிய இயற்கை வைத்திய மையத்திற்கு வாருங்கள். ஆனால் யாருக்குள் ஞானம் இருக்குமோ அவர்கள்தான் இதனை எழுதுவார்கள். நாங்கள் சென்டரை திறக்கிறோம், நீங்கள் வந்து சேவை செய்யுங்கள் என்றல்ல, யார் திறக்கிறார்களோ அவர்கள் தாமே தான் சேவை செய்ய வேண்டும். தூய்மையின் மீதுதான் அனைத்து சண்டைகளும் நடக்கிறது. விஷம் (விகாரம்) கிடைக்காததால் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இப்போது சங்கமயுகமாக இருக்கிறது. ஆக புத்தியில் சுகதாமம் மற்றும் சாந்திதாமத்தைத்தான் நினைவு செய்ய வேண்டும். துக்கதாமமாக இருப்பதால் சுகதாமத்தை நினைவு செய்கின்றனர். அப்போதுதான் பாடுகின்றனர் – துக்கத்தில் அனைவரும் நினைவு செய்வார்கள். . . இது தூய்மையற்ற உலகமாகும். கலியுகத்தின் கடைசியில் அனைவருமே தூய்மையற்றவர்களாக ஆகவே வேண்டும் என சட்டம் சொல்கிறது. சங்கமயுகம் வந்து இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை ஆகி விடும்போது பிறகு இராவண இராஜ்யம் வினாசம் ஆகிறது. இப்போது வினாசத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இராவண இராஜ்யம் முடிவுறத்தான் வேண்டும். மற்றபடி இந்த பொம்மைகளின் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு பொம்மைகளை தயாரித்தபடி இருக்கின்றனர், ஆகவே இது குருட்டு நம்பிக்கை எனப்படுகிறது. எந்த அளவு பாரதத்தில் படங்கள் உருவாகின்றனவோ அந்த அளவு வேறு எங்கும் உருவாகு வதில்லை. பாரதத்தில் அளவற்ற படங்கள் உள்ளன. பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என பாடவும் படுகிறது. பகலை பிறகு ஏன் நீண்டதாக ஆக்கி விட்டனர். இதுவும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயமாகும். முதலில் ஒருவரை மட்டுமே பக்தி செய்து பிறகு பலரை பக்தி செய்வதாக ஆகிவிட்டது. முதலில் 16 கலைகள், பிறகு 14, முடிவில் கொஞ்சம் கலைகளே இருக்கிறது. ஆனால் இந்த சமயத்தில் கலைகளே இல்லை. இந்த சமயம் தமோபிரதானமான உலகமாக இருக்கிறது. கலியுகத்தின் ஆரம்பத்தில் தமோ தொடங்குகிறது, பிறகு கடைசியில் தமோபிரதானம் என சொல்லலாம். இப்போது உலகம் மிகவும் பழையதாக ஆகி விட்டது. பழைய பொருளுக்கு தானாகவே தீ பற்றிக் கொள்கிறது. மூங்கில் காட்டில் தானாகவே தீ பற்றிக் கொள்வது போல இந்த உலகமும் ஆகப் போகிறது. அவர்களுக்குள் கொஞ்சம் ஏதாவது வேற்றுமை ஆகி விட்டாலும் கூட தீ மூண்டு விடும். வீட்டில் ஏதாவது சிறிய விஷயத்திற்கு சண்டை மூள்கிறது, தங்களுக்குள் நட்பாக இருந்து, சிறிய விஷயத்தில் விரோதம் ஏற்பட்டு விட்டது என்றால் கழுத்தை நெரிக்கவும் துணிந்து விடுகின்றனர். கோபமும் கூட ஒன்றும் குறைந்ததல்ல. ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டுவதற்காக பாருங்கள் எவ்வளவு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நாடகமாகும். இரு கிறிஸ்தவர்களுமே பெரியவர்கள், தங்களுக்குள் ஒன்று பட்டு விட்டால் என்ன வேண்டுமானாலும்சாதிக்கலாம். போப் ஆண்ட வரும் கிறிஸ்தவர்களின் தலைவர், அவருக்கு மிகுந்த மதிப்பு கொடுக்கின்றனர். ஆனால் அவர் சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இங்கும் கூட தந்தையின் பேச்சை மதிக்காத குழந்தைகள் அழியும் பதவியை அடைகின்றனர். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதை அல்லவா. வேறு எந்த சாஸ்திரங்களிலும் ஸ்ரீமத் கிடையாது. ஸ்ரீ என்றால் உயர்ந்த திலும் உயர்வானவர், அவர் ஒருபோதும் மறுபிறவிகளில் வருவது கிடையாது. மனிதர்கள் மறுபிறவிகளில் வருகின்றனர். வித்வான்கள், பிறப்பு இறப்பில்லாதவரால் உரைக்கப்பட்ட கீதையில் 84 பிறவிகள் முழுமையாக எடுக்கக் கூடியவரின் பெயரை போட்டு விட்டனர். உண்மையில் பரமபிதா பரமாத்மாதான் ஞானக்கடல், தூய்மைக் கடல், பதித பாவனர் என பாடப்பட்டுள்ளார். அவர்தான் குழந்தைகளுக்கு வரதானம் கொடுக்கிறார். அவருக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டனர். முதன் முதலில் சிவ ஜெயந்தி, பிறகு வருவது கிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவபாபா புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார், எனவே முதலில் தந்தையின் தோற்றம், பின்னர் குழந்தையின் தோற்றம். தந்தையின் தோற்றத்தின் மூலமே குழந்தை கிருஷ்ணரும் வெளிப்பட்டார். அதுவும் அவர் ஒருவர் மட்டுமே இருக்க மாட்டார். தெய்வீக சம்பிரதாயம் என சொல்லப்படுகிறது அல்லவா. ஆக, எவ்வளவு தவறு செய்து விட்டுள்ளனர். யாராவது ஒருவர் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டு விட்டார் என்றாலும் அவருடைய மாணவர்கள் உண்மையை அறிய பிரிந்து சென்று விடுவார்கள். அனைவரின் முகமும் வெளிறிப் போய் விடும். எவ்வளவு பெரிய தவறாக ஆகிறது, எனவேதான் தந்தை வர வேண்டியதாகிறது. பிறருக்கு புரிய வைப்பதிலும் நேரம் தேவைப்படுகிறது. முதன் முதலாக பரமபிதா பரமாத்மாவுக்கும் உங்களுக்கும் உள்ள சம்மந்தம் என்ன என நிச்சயப் படுத்துங்கள். அப்போது பகவான் தந்தை என புரிந்து கொள்வார்கள். பகவானை பகவானின் பதவியில் (ஸ்தானத்தில்) வையுங்கள். அனைவரும் ஒரே போல எப்படி இருக்க முடியும். அனைத்தும் பகவானின் லீலைகள், ஒரு ரூபத்தை விட்டு மற்றொன்றை எடுப்பார் என சொல்கின்றனர். ஆனால் பரமாத்மா மறுபிறவி ஏதும் எடுப்பதில்லை. இந்த பாப்தாதா இருவருமே இணைந்து இருக்கின்றனர், குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக் கின்றனர். பாப்தாதாவின் அர்த்தம் கூட யாருடைய புத்தியிலும் இல்லை. நீங்கள்தான் தாயும் தந்தையும். . . என சொல்கின்றனர். ஓ இறைத் தந்தையே ! எனவும் சொல்கின்றனர், எனும் போது கண்டிப்பாக தாயும் கூட தேவை. ஆனால் யாருடைய புத்தியிலும் வருவதில்லை.
எப்போது சரணம் ஏற்கப்படுகிறது என குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கிறார். இராவண இராஜ்யம் முடிவடையும்போது இராமன் வருகிறார். இராமனை சரணடையும்போதுதான் சத்கதி கிடைக்கிறது. இராமராஜ்யம் உருவாக வேண்டும் என சொல்கின்றனர். அவர்களுக்கு சூரிய வம்சத்தின் இராஜ்யத்தைப் பற்றி தெரியவே தெரியாது. இராமராஜ்யம், புதிய உலகம், புதிய பாரதம் உருவாக வேண்டும் என சொல்கின்றனர், அது இப்போது உருவாகிக் கொண்டி ருக்கிறது. கண்டிப்பாக உருவாக வேண்டும். நாடகம் கண்டிப்பாக நடக்க வேண்டி யுள்ளது. இது மனிதரிலிருந்து தேவதை ஆவதற்கான படிப்பாகும். மனிதர்கள் யாரையும் தேவதையாக ஆக்க முடியாது. பாபா வந்து மனிதர்களை தேவதைகளாக ஆக்குகிறார் ஏனென்றால் பாபாதான் சொர்க்கத்தை ஸதாபனை செய்கிறார். பிராமணர்களின் மாலை பாடப்படுவதில்லை. வைஜயந்தி மாலை விஷ்ணுவினுடையதாகும். இது ஈஸ்வரிய குலமாகும், இது இப்போது புதிதாக தொடங்குகிறது. முன்னர் இருந்தது இராவணனுடைய அசுர குலம் ஆகும். இராவணன் அசுரன் எனப்படுகிறார். இந்த கம்சன், ஜராசந்தன் என்ற பெயர்கள் எல்லாம் இப்போது உருவாக்கப்படுகின்றன. பிறவி பிறவிகளாக ஸ்தூல தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. சத்யுகத்தில் கூட சாகார தந்தையிடமிருந்து கிடைக்கிறது. இந்த சமயத்தில் மட்டுமே உங்களுக்கு நிராகார தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தேகத்துடன் சேர்த்து பழைய உலகின் சம்மந்தங்கள் முதலான அனைவரையும் மறந்து தன்னை ஆத்மா என புரிந்து கொள்ள வேண்டும். புத்தியின் மூலம் புதிய வீட்டை வரவேற்க வேண்டும்.
2. அதிகாலை எழுந்து முழு உலகிற்கும் அமைதி மற்றும் சுகத்தின் தானத்தைக் கொடுக்க வேண்டும்.
வரதானம்:-
எவ்வாறு சாகாரத்தில் இருப்பது எளிதாக ஆகிவிட்டதோ, அதே போன்று நான் ஆகாரி பரிஸ்தா மற்றும் நிராகார சிரேஷ்ட ஆத்மா என்ற இந்த இரண்டு நினைவும் இயற்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சிவதந்தை நிராகாரியாகவும், பிரம்மா பாபா ஆகாரியாகவும் இருக் கின்றார். இரண்டு தந்தைகளின் மீது அன்பு இருக்கிறது எனில் சமம் ஆகுங்கள். சாகாரத்தில் இருந்தாலும் அவ்வபொழுது ஆகாரி, அவ்வபொழுது நிராகாரி பயிற்சி செய்யுங்கள். இந்த பயிற்சி தான் குழப்பமான சூழ்நிலையிலும் உறுதியானவர்களாக ஆக்கிவிடும்.
சுலோகன்:-
அன்பில் மூழ்கிய நிலையை அனுபவம் செய்யுங்கள்
நமக்கு பிரியமானவரை நினைவு செய்யமாட்டோம், அவருடைய நினைவு தானாகவே வந்து கொண்டிருக்கும். அந்த அன்பு உள்ளப்பூர்வமாக இருக்க வேண்டும், உண்மையானதாக மற்றும் சுயநலமற்றதாக இருக்க வேண்டும். என்னுடைய பாபா அன்பான பாபா என்று கூறுகின்றீர்கள் எனில் அன்பானவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. மேலும் சுயநலமற்ற அன்பானது ஒரு தந்தையைத் தவிர வேறு எந்த ஆத்மாவிடமிருந்தும் அடைய
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!