13 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 12, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இந்த முள் நிறைந்த காட்டை தெய்விக மலர்களின் தோட்டமாக ஆக்க வேண்டும். புது உலகை நிர்மாணிக்க வேண்டும்.

கேள்வி: -

குழந்தைகள் நீங்கள் பாபா உடன் கூடவே சேர்ந்து என்ன சேவை செய்கிறீர்கள், அதை வேறு யாரும் செய்வதில்லை?

பதில்:-

முழு உலகத்திலும் சூரியவம்சி, சந்திரவம்சி ராஜதானியின் ஸ்தாபனை செய்வதற்கான சேவையை, குழந்தைகள் நீங்கள் பாபாவுடன் சேர்ந்து செய்கிறீர்கள். அதை வேறு யாரும் செய்ய முடியாது. நீங்கள் இப்போது புது உலகின் அஸ்திவாரத்தை இட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நிச்சயமாக இந்தப் பழைய உலகம் விநாசமாகும். தெய்விக மலர்களின் தோட்டத்தை உருவாக்குவது, முட்களின் காட்டை அழிப்பது – இது பாபாவின் காரியமாகும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஓம் நமோசிவாய……

ஓம் சாந்தி. இப்போது சாது சந்நியாசிகள் அல்லது வித்வான்கள் சொற்பொழிவு செய்கிறார்கள் என்றால் முதலில் யாருக்காவது நமஸ்காரம் செய்கின்றனர். சிலர் சிவாய நமஹ எனச் சொல் கின்றனர். சிலர் கிருஷ்ணா நமஹ எனச் சொல்கின்றனர். சிலர் கணேஷ் நமஹ எனச் சொல் கின்றனர். ஆனால் நமஸ்தே சொல்வதோ, உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை ஒருவருக்கே சொல்ல வேண்டும். குழந்தைகள் அறிவார்கள், உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் ஒருவர், அவரது பெயர் சிவன். சிவாய நமஹ என்று பாடவும் செய்கின்றனர். சிவனை எப்போதுமே பாபா என அழைக்கின்றனர். சிவபாபா முதன்-முதலில் படைப்பினைப் படைக்கிறார். படைப் பவர் ஒருவரே! படைப்பும் உண்மையில் ஒன்று தான். படைப்பவர் என்று தந்தையையும் படைப்பு என்று உலகத்தையும் சொல்லப் படுகின்றது. தந்தை படைக்கும் புதிய உலகத்தை நிச்சயமாகப் புதியதாகத் தான் படைப்பார். ஆனால் தந்தை அவசியம் பழைய உலகத்தில் தான் வருவார். அதனால் தந்தை பதீத-பாவனர் எனச் சொல்லப் படுகிறார். முழு உலகத்தின் மனிதர்கள் அனைவரும் அதிலும் குறிப்பாக பாரதவாசிகள் தந்தையை – பதீத-பாவனா வாருங்கள் என்று நினைவு செய்கின்றனர். அனைவரும் துக்கம் நிறைந்தவர்களாக, தூய்மை இழந்தவர்களாக ஆகிவிடும் போது தான் தந்தையை அழைக்கின்றனர். ஆனால் எப்போது துக்கத்தில் வந்தனர், எப்போதிருந்து நினைவு செய்கின்றனர் என்பது பற்றித் தெரியாது.

பாபா அமர்ந்து புரிய வைக்கிறார் – முன்பும் கூடப் புரிய வைத்திருந்தார், ஹே குழந்தைகளே, நீங்கள் உங்கள் சுகம்-துக்கத்தின் பிறவிகளை அறிய மாட்டீர்கள். ஞானக்கடல், ஞானம் நிறைந்த நான் அமர்ந்து உங்களுக்குப் புரிய வைக்கிறேன். சிவபாபா சொல்கிறார், நான் மனித சிருஷ்டியின் விதை வடிவமாகவும் இருக்கிறேன், என்னைப் பதீத-பாவனர் எனவும் அழைக் கின்றனர் என்றால் நிச்சயமாக தூய்மை இல்லாத உலகமும் உள்ளது, தூய்மையான உலகமும் உள்ளது. தூய்மையான உலகம் சொர்க்கம் அல்லது கார்டன்(பூந்தோட்டம்) எனச் சொல்லப்படுகின்றது. பிறகு எப்போது உலகம் தூய்மை அற்றதாக ஆகிறதோ, அப்போது முள் நிறைந்த காடு எனச் சொல்லப் படுகின்றது. கணக்கற்ற ஏராளமான மனிதர்கள் ஆகி விடு கின்றனர். மாயாவின் இராஜ்யம் ஆரம்பமாகி விடுகின்றது. இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் பாரதம் இறைவனின் மலர்த்தோட்டமாக இருந்தது என்பதை யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க வேண்டும். மனிதர்கள் மிகவும் சுகமாக இருந்தனர். புது உலகில் பாரதம் மட்டுமே இருந்தது. வேறு எந்த ஒரு கண்டத்தின் பெயர் அடையாளமும் இல்லாதிருந்தது. புதிய பாரதத்தில் பிறகு புது டில்லியும் இருந்தது. அது பரிஸ்தான் என்றும் சொல்லப் பட்டது. பாரதம் வைரம் போல் இருந்தது. அதைத் தான் சுகதாமம் எனச் சொன்னார்கள். இப்போதோ பாரதம் பழையதாக உள்ளது. அதைத் தான் துக்கதாமம் எனச் சொல்கின்றனர். இப்போது பாபா புரிய வைக்கிறார், தற்சமயம் டில்லியில் உலகம் எப்படிப் புதியதாக ஆகிறது என்பதை மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக உலக நவ நிர்மாண் (புதிய படைப்பு) கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்- சித்திரங்களை முன்னால் வைத்து வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இது போன்ற உலக நவநிர்மாண் கண்காட்சியை வேறு யாரும் திறந்து வைக்கவும் முடியாது. பிரம்மாகுமார் குமாரிகள் அமர்ந்து புரிய வைப்பது இது முதல் முறையாகும். பாரதம் புதியதாக இருந்த போது தான் சுகம் நிறைந்ததாக இருந்தது. லட்சுமி-நாராயணர் இராஜ்யம் செய்திருந்தனர். விஷ்ணுபுரி புது உலகமாக இருந்தது. புது உலகின் நிர்மாணம் அல்லது அஸ்திவாரம் அமைப்பது என்பது பரமபிதா பரமாத்மாவின் காரியமாகும். தங்களை பதீத் பிரஷ்டாச்சாரி (தூய்மையற்ற கீழானவர்கள்) எனச் சொல்லிக் கொள்பவர்களாகிய பாரதவாசிகள் புது உலகின் நிர்மாணம் (ஸ்தாபனை) செய்ய முடியாது. நீங்கள் அறிவீர்கள், அந்த மனிதர்கள் என்னென்ன அஸ்திவாரங்களை இடுகின்றனர். பாபா சொல்கிறார், நான் சொர்க்கமாகிய புது உலகின் அஸ்திவாரத்தை அமைக்கின்றேன். பழைய உலகத்தின் விநாசம் ஏற்படப் போகின்றது. இது முள் நிறைந்த உலகம். மனிதர்கள் முட்களைப் போல் உள்ளனர். ஒருவர்-மற்றவர்க்கு துக்கம் கொடுத்துக் கொண்டே உள்ளனர். பாரதம் அல்லாவின் தோட்டமாக இருந்தது. கடவுள் அதை ஸ்தாபனை செய்திருந்தார். சிவாய நமஹ என்றும் சொல்கின்றனர். சிவபாபா எப்படி ஸ்தாபனை செய்தார்? நிச்சயமாக பிரம்மா மூலமாக அல்லாவின் தோட்டம் அல்லது தெய்விக மலர்களின் தோட்டத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். முட்கள் நிறைந்த காட்டை மாற்றி தெய்விக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்வார். குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுக்கிறார். இங்கேயும் கூடக் குழந்தைகள் அழைப்புக் கொடுத்துள்ளனர் – பாபா வந்து பாருங்கள், நாங்கள் சித்திரங்களை வைத்து மற்றவர்களுக்கு புரிய வைக்கிறோம் – புது உலகின் ஸ்தாபனை மற்றும் பழைய உலகின் விநாசம் எப்படி நடைபெறுகின்றது என்று தாங்கள் வந்து பாருங்கள் மற்றும் ஸ்ரீமத் கொடுங்கள். அழைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது இந்தச் சித்திரங்களை வைத்து யாருக்கும் புரிய வைப்பதோ மிகவும் சுலபம். மேலே பரமபிதா பரமாத்மாவின் சித்திரம் உள்ளது. சிவாய நமஹ அனைவரிலும் உயர்ந்தவர். அவர் பிறகு புது உலகைப் படைக்கிறார். புதிய பாரதத்தில் இந்த தேவி-தேவதா, லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. ஆக, உயர்ந்தவரிலும் உயர்ந்த பரமபிதா பரமாத்மா, அவர் பிறகு சூரிய வம்சி, சந்திரவம்சி ராஜதானியை பிரம்மா மற்றும் பிரம்மாகுமார் குமாரிகள் மூலம் ஸ்தாபனை செய்கிறார். அவர்கள் சத்யுக ஆரம்பத்தில் இருந்தனர் என்றால் நிச்சயமாகக் கலியுகத்தின் கடைசியில் தான் செய்திருப்பார். அதை இப்போது மீண்டும் சங்கமயுகத்தில் செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் ஆத்மாக்கள் அனைவரும் சிவனின் குழந்தைகள் மற்றும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் தான். ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அதன் நடிப்பின் பாகம் முழுவதும் விதிக்கப் பட்டுள்ளது. யார் 84 பிறவிகள் எடுக்க வேண்டி உள்ளதோ, அவர் தான் முதல் பார்ட்தாரி ஆவார். புனர்ஜென்மம் எடுக்கும் வழக்கமோ ஆரம்பத்தில் இருந்தே நடந்து வந்துள்ளது. சதோபிரதான், பிறகு சதோ ரஜோ தமோ ஆகியுள்ளனர். சதோபிரதானமாக இருந்த போது சூரியவம்சி லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. 16 கலை சம்பூர்ணமாக இருந்தனர். பிறகு 14 கலை உள்ளவர்களாக ஆயினர். இந்த இரண்டு யுகங்களும் மலர் களின் தோட்டம் எனச் சொல்லப் படுகின்றது. அது சுகதாமமமாக இருந்தது. இதைச் சித்திரங்களை வைத்துப் புரிய வைப்பது மிகவும் சுலபம். மேலே சிவபாபா, அவர் மூலமாக உலக நவ நிர்மாணம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கர்….. இவர்களைப் படைப்பவர் சிவபாபா. இதைக் குழந்தைகள் புரிய வைக்க வேண்டும் – புது உலகின் ஸ்தாபனை மற்றும் பழைய உலகின் விநாசம் நடைபெறுகின்றது. இப்போது இத்தனை தர்மங்கள் அனைத்தும் உள்ளன – ஒரே ஒரு தேவி-தேவதா தர்மம் மட்டும் இல்லை. அது மறைந்து விட்டுள்ளது. யார் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனரோ, அவர்கள் தங்களை இந்து எனச் சொல்லிக் கொண்டுள்ளனர். ஏனென்றால் சத்யுகத்தில் அனைவரும் தூய்மையாக இருந்தனர். இப்போது அனைவரும் தூய்மையற்றவர்கள் பாபாவின் பெயரே பதீத-பாவனர். இப்போது தூய்மை இழக்கச் செய்பவர் யார்? இதை பாபா தான் புரிய வைக்கிறார். குழந்தைகள் பிறகு மற்ற சகோதர-சகோதரிகளுக்குப் புரிய வைக்கின்றனர். தூய்மையற்றவர் களாக ஆக்குபவன் இராவணன். அவனை வருடா வருடம் எரிக்கின்றனர். இராவணனுக்கு எந்த ஒரு வடிவமும் கிடையாது. குப்தமாக இருக்கிறான். 5 விகாரங்கள் பெண்ணினுடையவை, 5 விகாரங்கள் ஆணினுடையவை. பாரதத்தின் பெரியதிலும் பெரிய விரோதி இராவணன் ஆவான். அவன் தான் பாரதத்தைச் சோழி போல் ஆக்கியிருக்கிறான். இப்போது இந்த இராவணன் மீது எனது அறிவுரைப்படி வெற்றி கொள்ளுங்கள். இச்சமயம் அனைவரும் தூய்மை இல்லாமல் ஆகி விட்டுள்ளனர். இந்தக் காரணத்தால் பரமபிதா பரமாத்மாவின் ஸ்ரீமத் தான் வேண்டும். ஸ்ரீமத் என்பது பகவானுடையது. பகவான் சொல்கிறார்-ஹே குழந்தைகளே, அல்லது ஆத்மாக்களே, நீங்கள் காலம் முழுவதும் தேக அபிமானியாகவே இருந்திருக்கிறீர்கள். இப்போது தேகி (ஆத்ம) அபிமானி ஆகுங்கள். ஆத்மாக்கள் நீங்கள் அமரர்கள். நீங்கள் தான் சரீரத்தை விடுகிறீர்கள், பிறகு எடுக்கிறீர்கள். பாபா சொல்கிறார்-ஹே பிரம்மா, நீ தன்னை அறிந்து கொள்ளவில்லை. உன்னை வைத்துத் தான் பாடுகின்றனர் – பாதிக் கல்பம் பிரம்மாவின் பகல், பாதிக் கல்பம் பிரம்மாவின் இரவு. குழந்தைகள் நீங்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் கண்காட்சி திறக்கப் பட்டுள்ளது. இப்போது இந்தச் சித்திரங்கள் மூலம் புரிய வையுங்கள். இப்போது இந்த பிரம்மா மற்றும் பிரம்மாகுமார் குமாரிகள் பரமபிதா பரமாத்மா மூலம் தங்களின் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டுள்ளனர் இவ்வாறு பாடப்படுகின்றது – ஞான சூரியன் வெளிப் பட்டதும் அஞ்ஞான இருள் அழிந்தது…… அந்த சூரியனின் விஷயம் கிடையாது. நான் ஞான சூரியன் இச்சமயம் ஞான மழை பொழிவித்துக் கொண்டிருக்கிறேன். இதன் மூலம் நீங்கள் தூய்மை இல்லா நிலையி-ருந்து தூய்மையானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மழை நீர் யாரையும் தூய்மையாக்காது. என்னைப் பதீத-பாவனர் எனச் சொல்கின்றனர். என்னிடம் தான் ஞானம் உள்ளது – தூய்மை இல்லாம-ருந்து தூய்மையாக, பிறகு தூய்மை நிலையி-ருந்து தூய்மை இல்லாமல் எப்படி ஆகின்றனர்? தூய்மையான உலகம் புது உலகம் என்றும் தூய்மை இல்லாதது பழைய உலகம் என்றும் சொல்லப்படுகின்றது. தூய்மையற்றவராக்குவது இராவணன். இராவணனை சைத்தான் என்றும் இராமரை பகவான் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த சீதையின் ராமர் அல்ல.

குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஸ்தாபனை மற்றும் விநாசத்தின் இரகசியத்தையும் புரிய வைக்க வேண்டும். இதற்காக இந்த உலக நவநிர்மாணக் கண்காட்சி நடத்தப் படுகின்றது. எந்த ஒரு சாஸ்திரத்திலும் இது இல்லை – பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் சுகதாமத்தின் ஸ்தாபனை செய்கிறார். இராவணன் பிறகு துக்கதாமமாக ஆக்குகிறான். பாபா வந்து சுகதாம மாக ஆக்குகிறார். அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம். சத்யுக திரேதாயுகம் பகல், துவாபர கலியுகம் இரவு. இரவில் தாழ்வான நிலை அடைகின்றனர். பகவானைத் தேடுவதற்கு அலைந்து திரிந்து ஏமாற்றமடைகின்றனர். இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. அரைக்கல்பம் ஞானம், அரைக்கல்பம் பக்தி. ஞானத்தின் கடல் அல்லது ஞான சூரியன் என்று பரமபிதா பரமாத்மா தான் சொல்லப் படுகின்றார். பாரத்தில் தான் சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர். இதிலிருந்து பாரதம் தான் சிவனின் ஜென்மபூமி என்பது உறுதியாகின்றது. நானும் தூய்மை இல்லாத உலகில் தான் வர வேண்டியுள்ளது. அப்போது தான் வந்து தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவேன். யார் பூஜைக்குரிய லட்சுமி-நாராயணராக இருந்தனரோ, அவர்களே தான் பூஜாரி ஆகியுள்ளனர். தாங்களே தான் பூஜைக்குரியவர், தாங்களே தான் பூஜாரி. அதே லட்சுமி-நாராயணரின் ஆத்மா, அவர்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டும் என உள்ளதோ, அவர்கள் வெவ்வேறு பெயர்-வடிவங்களில் எடுக்கின்றனர். ஆக, ஸ்தாபனை செய்கிற இந்த பிரம்மா தான் பிறகு பாலனை செய்கிறார். இப்போது அந்த ஆத்மா தூய்மை இல்லாமல் ஆகியுள்ளது பிறகு அவருடைய சரீரத்தில் தான் வந்து அவருடைய பெயரை பிரம்மா என வைக்கிறேன். முதல்-முதலிலோ இந்த விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும் – பரமபிதா பரமாத்மாவோடு உங்களுக்கு என்ன சம்மந்தம்? நிச்சயமாக தந்தை என்று தான் சொல்வார்கள். அவரோ அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆகிறார். சிவபாபாவுக்கு நீங்கள் அனைவரும் குழந்தைகள். இச்சமயம் பக்தர்களாக இருக்கிறீர்கள். பகவானை அனைவரும் நினைவு செய்கின்றனர். பக்தர்கள் அழைக்கின்றனர், பகவானே எங்களுக்கு பக்தியின் பலனைக் கொடுங்கள், நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம், ஜீவன்முக்தி கொடுங்கள். சாதுக்களும் கூட சாதனை செய்கிறார்கள், எங்களுக்கு முக்தி-ஜீவன் முக்தி கொடுங்கள். இச்சமயம் அனைவரும் அழைக்கின்றனர்-வந்து தூய்மை இழந்தவர்களைப் தூய்மையாக்குங்கள். பாபா டைரக்ஷன் தருகிறார், இப்படி-இப்படிப் புரிய வையுங்கள். நாம் ஆத்மாக்கள் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள். இப்போது ஒரு சரீரம் விட்டு வேறொன்றை எடுத்து அவசியம் பாகத்தை நடித்தாக வேண்டும். வர்ணங்களையும் கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த டிராமா அவிநாசியாக உருவாக்கப்பட்டுள்ளது. சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது. இது எப்படிச் சுற்றுகிறது என்று அறிந்து கொள்ள வேண்டும், பதீத-பாவனர் ஒருவர் படைப்பவர் ஒருவர், உலகமும் ஒன்று தான். பாவனத்திலிருந்து எப்படி தூய்மையை இழந்தோம் எனக் கேட்கின்றனர். இராவணனின் அசுர வழிப்படி நடப்பதால் 5 விகாரங்கள் வந்து விடுகின்றன. 5 விகாரங்கள் தான் இராவணன் வழி என்று சொல்லப் படு கின்றது. அதனால் இராவணனை எரிக்கின்றனர். ஆனால் இராவணன் எரிவதில்லை. இப்போது பாபா சொல்கிறார், குழந்தைகளே, நீங்கள் இந்த இராவணன் மீது வெற்றி கொள்ள வேண்டும். யார் வெற்றி பெறுகின்றனரோ, அவர்கள் தான் இராமராஜ்யத்தின் அதிபதி ஆவார்கள். இது கடைசி ஜென்மம், அதாவது சிருஷ்டியின் கடைசி ஆகும். சிருஷ்டியை ஆரம்பித்து வைப்பதும் பாபா தான். கடைசி நேரத்தின் விநாசத்தையும் பாபா செய்விக்கிறார். பாடப்பட்டுள்ளது – பிரம்மா மூலம் ஸ்தாபனை, இப்போது பிரம்மா தனியாகவோ இருக்க மாட்டார். பிரம்மாகுமார் மற்றும் குமாரிகள் மூலம் பாரதத்தை தெய்விக மலர்களின் தோட்டமாக்குகிறேன். இதுவோ முட்களின் காடு. இதை இப்போது நெருப்புப் பற்றிக் கொள்ளப் போகிறது. நீங்கள் இப்போது விழித்துக் கொண்டு விட்டீர்கள். மனிதர்களோ உறங்கி விட்டுள்ளனர். இங்கோ துக்கம்-அசாந்தி உள்ளது. குழந்தைகள் எப்போதும் தங்களின் சாந்திதாமம் என்ற இனிய வீட்டை நினைவு செய்ய வேண்டும். அதனால் இனிய ராஜ்யம் ஆஸ்தியாகக் கிடைக்கும். இந்த இராவண இராஜ்யத்தை மறந்து கொண்டே செல்லுங்கள். பரிஸ்தானாக (தேவதைகளின் உலகம்) இருந்த பாரதம் கப்ரிஸ்தான் (சுடுகாடு) ஆகியுள்ளது. பிறகு மீண்டும் பரிஸ்தான் ஆகும். இது சக்கரமாகும். உலகம் புதியதாகத் தயாராகி விடுமானால் பழையதை அவசியம் தீப்பற்றிக் கொள்ளும். இப்போது நீங்கள் புது உலகிற்காகத் தயாராக வேண்டும். பிறகு அங்கே சென்று வைர-வைடூரியங்களால் ஆன மாளிகைகளை உருவாக்குவீர்கள். இப்போதோ குடிசைகள். கல்ப-கல்பமாக தூய்மை இல்லாத உலகம் மீண்டும் தூய்மையாகின்றது. தூய்மையான உலகம் மீண்டும் தூய்மையற்றதாகின்றது. மெது-மெதுவாகப் தூய்மை இழக்கின்றது. புதிய கட்டடம் விரைவில் உருவாகின்றது. பழையதாக ஆவதில் சமயம் பிடிக்கின்றது. ஞானத்தினால் நீங்கள் புது உலகின் எஜமானர் ஆகி விடுவீர்கள். இப்போது நீங்கள் 16 கலை உள்ளவர்களாக ஆகிறீர்கள். பிறகு 14 கலை, பிறகு மெது-மெதுவாகக் கலைகள் குறைந்து கொண்டே செல்லும். இப்போது கலியுகத்தில் எந்த ஒரு கலையும் இல்லை. பாரதம் தூய்மையாக இருந்தது. இப்போது தூய்மையற்றதாகி விட்டது. இந்த விளையாட்டு பாரதத்தில் தான் நடைபெறுகின்றது. இராவணனிடம் தோல்வி மேல் தோல்வி…… இப்போது நீங்கள் ஸ்ரீமத் படி வெற்றி பெறுகிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) ஸ்ரீமத் படி பாரதத்தைப் தூய்மையாக்குகிற சேவை செய்ய வேண்டும். இராவணனின் வழியை விட்டு விட்டு ஒரு பாபாவின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.

2) இந்த துக்க உலகத்தை மறந்து தன்னுடைய இனிய வீடாகிய சாந்திதாமத்தை நினைவு செய்ய வேண்டும். தன்னை புது உலகிற்குச் செல்வதற்குத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

வரதானம்:-

ஒவ்வொரு சிரேஷ்ட பிராமண ஆத்மாகளின் ஒவ்வொரு காரியத்திலும் பிரம்மா பாபாவின் செயல்களின் கண்ணாடியாக இருக்கிறது. பிரம்மா பாபாவின் செயல் உங்கள் காரியம் என்ற கண்ணாடியில் தென்பட வேண்டும். எந்த குழந்தைகள் கவனம் வைத்து ஒவ்வொரு காரியம் செய்கிறார்களோ, அவர்களின் வார்த்தை, நடத்தை, எழுந்திருப்பது, அமர்வது அனைத்தையும் பிரம்மா பாபாவிற்கு சமமாக இருக்கும். ஒவ்வொரு காரியமும் ஆசீர்வாதத்திற்கு தகுதிவாய்ந் ததாக இருக்கும், வாயினால் எப்பொழுதும் வரதானங்கள் வெளிவந்துக் கொண்டேயிருக்கும். பிறகு சாதாரண காரியத்திலும் விசேˆத்தன்மை தென்படும். எனவே இந்த சான்றிதழை பெறும் பொழுது தான் பாபாவிற்கு சமமானவர் என்ற சொல்ல முடியும்.

சுலோகன்:-

அன்பில் முழ்கியிருப்பதற்கான அனுபவம் செய்யுங்கள்:

பாபாவிற்கு குழந்தைகள் மீது அந்தளவு அன்பு இருக்கிறது, அவர் எப்பொழுதும் சொல்கிறார் – குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ, யாராக இருக்கிறார்களோ, அப்படியே என்னுடையவர்கள். அதுபோல நீங்களும் சதா அன்பில் முழ்கியிருங்கள். மனதார நீங்களும் சொல்லுங்கள் – யார் எப்படியிருந்தாலும், அவர்கள் அனைவரும் உங்களுடையவர்கள் தான். ஒருபொழுதும் அசத்தியமான (பொய்யான) இராஜ்யத்தில் வராதீர்கள், தனது சத்திய சொரூபத்தில் நிலைத்திருங்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top