02 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

02 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

1 January 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

வார்த்தை சேவையின் கூடவே மன சேவையை இயற்கையானதாக ஆக்குங்கள், சுப பாவணை நிறைந்தவராக ஆகுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று புது உலகை படைக்கக் கூடிய, உலகிற்குத் தந்தை தனது நெருங்கிய துணைவர்கள், புது உலகை படைக்கும் காரியம் செய்யும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். குழந்தை களாகிய நீங்கள் அனைவரும் தந்தையின் புது உலகைப் படைக்கும் காரியத்தில் நெருங்கிய சம்பந்திகளாக இருக்கிறீர்கள். உலகை புதிதாக ஆக்கும் காரியத்தில் இயற்கையும் சகயோகி யாக ஆகின்றது, நிகழ்கால புகழ்பெற்ற விஞ்ஞானிக் குழந்தைகளும் சகயோகிகளாக ஆகின்றனர். ஆனால் நீங்கள் அனைவரும் நெருங்கிய துணைவர்கள் ஆவர். அனைத்துக் குழந்தைகளின் இந்த பிராமண வாழ்க்கையின் விசேஷ கடமை அல்லது சேவை என்ன? இரவு-பகல் சேவையில் ஆர்வம்-உற்சாகத்துடன் பறந்து கொண்டிருக்கிறீர்கள். எந்த காரியத்திற்காக? உலகை புதிதாக ஆக்குவதற்காக. உலகத்தினர் புது ஆண்டு கொண்டாடுகின்றனர். ஆனால் உங்களது உள்ளத்தில் இந்த ஆர்வம் இருக்கிறது – இந்த உலகை அந்த அளவிற்கு புதியதாக ஆக்கி விட வேண்டும், அங்கு அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும். மனித ஆத்மாக்கள், இயற்கை சதோ பிரதானமாக ஆகிவிட வேண்டும். பழைய உலகை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நாலாபுறமும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். கதறி அழும் உலகை சுகமான உலகமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றோம். அதில் ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு காரியம், ஒவ்வொரு பொருள் புதியதாக ஆகிவிடும். உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அனைத்தும் புதியது தான் பிடிக்கின்றது அல்லவா! பழைய பொருட்கள் பிடித்தாலும் கூட நினைவுச் சின்னமாக இருக்கும், பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்காது. அருங்காட்சியகத்தில் நினைவுச் சின்னமாக வைத்திருப்பர். ஆனால் புதிய பொருள் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும். இந்த நேரத்தில் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் பழைய உலகில் இருந்தாலும் கூட புதிய உலகில் இருக்கிறீர்கள். மற்ற ஆத்மாக்கள் பழைய உலகில் இருக்கின்றனர், ஆனால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? நீங்கள் புது யுகத்தில் சங்கமத்தில் இருக்கிறீர்கள். பழைய வாழ்க்கை முடிவடைந்து விட்டது. இப்பொழுது புதிய பிராமண வாழ்க்கையில் இருக்கிறீர்கள். உலகத்தினர் ஒரு நாள் புது ஆண்டாக கொண்டாடுகின்றனர். ஆனால் உங்களுடையது புது யுகம், புது வாழ்க்கையாகும். ஒவ்வொரு காரியம், ஒவ்வொரு விநாடி புதியதாகும். நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். ஒருபுறம் பழைய உலகம், மற்றொரு புறம் புது உலகை பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். ஆக புத்தி எந்தப் பக்கம் செல்கின்றது? புதியதின் பக்கமா? அல்லது அவ்வப்பொழுது பழைய உலகின் பக்கமும் சென்று விடுகிறதா? பழைய உலகம் பிடித்திருக்கிறதா என்ன? எந்த பொருள் பிடிக்கவில்லையோ, அதில் புத்தி ஏன் செல்கிறது? பழைய உலகில் துக்கம், அசாந்தி, குழப்பம் அனுபவம் செய்து விட்டீர்கள், இன்னும் சிறிது அனுபவம் செய்ய வேண்டுமா?

இன்று சந்திப்பதற்காக மற்றும் கொண்டாடுவதற்காக வந்திருக்கின்றேன். நீங்கள் அனைவரும் கூட தூர தேசத்திலிருந்து புது ஆண்டு கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்கள். புது ஆண்டிற் காக, தனக்காக, உலக சேவைக்காக மற்றும் தனது நெருங்கிய துணைவர்களுக்காக, இயற்கைக் காக மற்றும் தனது தூரத்து குடும்பத்தினருக்காக என்ன யோசனை செய்திருக்கிறீர்கள்? புது ஆண்டில் என்ன புதுமை செய்வீர்கள்? தனக்காக மட்டுமே சிந்திக்கவில்லை தானே! எல்லை யற்ற தந்தையின் குழந்தைகளாகிய நீங்களும் எல்லை யற்றவர்களாக இருக்கிறீர்கள். எனவே அனைவருக்காகவும் சிந்திப்பீர்கள் தானே! ஏனெனில் இந்த நேரத்தில் பாப்தாதாவின் கூடவே நீங்கள் அனைவரும் கூட பொறுப்பாளிகளாக இருக்கிறீர்கள். தந்தை செய்விக்கக் கூடியவர், ஆனால் செய்வதற்கு நிமித்தமானவர்கள் நீங்கள் தானே!

புது ஆண்டில் என்ன புதுமை கொண்டு வர வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாப்தாதா டைரக்சன் கொடுத்திருந்தார். இடையில் ஒரு ஆண்டு அதிகம் கிடைத்து விட்டது. ஆக இன்று அமிர்தவேளையில் ஒவ்வொரு குழந்தையும் தனக்குள் எந்த அளவிற்குப் புதுமை கொண்டு வந்திருக்கின்றனர்? என்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். மனதில், வார்த்தைகளில், செயலில் என்ன புதுமை கொண்டு வந்திருக்கிறீர்கள்? மேலும் சேவை-தொடர்பில் என்ன புதுமை கொண்டு வந்திருக்கிறீர்கள்? அடுத்த ஆண்டு மனதிற்கான சார்ட் வைக்கக் கூறியிருந்தேன், அந்த மனதின் சார்ட் எப்படி இருக்கிறது? இவ்வாறு அனைத்து விசயங்களின் சார்ட் சோதனை செய்யுங்கள். புதுமை என்றால் விசேஷதா. அனைத்து விசயங்களிலும் விசேஷதா கொண்டு வந்திருக்கிறீர்களா? பறக்கும் கலை என்ற கணக்கில் மனதின் விசேஷதா எப்படி இருக்கிறது. பறக்கும் கலையினரின் விசேஷதா என்றால் ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தானாகவே சுப பாவணை மற்றும் சுப விருப்பத்தின் சுத்த வைபிரேசன் தனக்கும், மற்றவர்களுக்கும் அனுபவம் ஆக வேண்டும். அதாவது மனதின் மூலம் ஒவ்வொரு நேரத்திலும் அனைத்து ஆத்மாக்களுக்காகவும் ஆசிர்வாதங்கள் தானாகவே வெளிப்பட வேண்டும். இந்த சேவையில் மனம் சதா பிசியாக இருக்க வேண்டும். வார்த்தைகளின் சேவையில் சதா பிசியாக இருப்பதில் அனுபவிகளாக ஆகி விட்டீர்கள். சேவை கிடைக்கவில்லையெனில் தன்னை காலியாக அனுபவம் செய்கிறீர்கள். இவ்வாறு ஒவ்வொரு நேரத்திலும் வார்த்தைகளின் கூடவே மன சேவை தானாகவே நடை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். வார்த்தைகளின் சேவைக்கு மிக நல்ல திட்டங்களை உருவாக்குகிறீர்கள் – இந்த மாநாடு செய்வோம், தேசிய மாநாடு, அகில உலக மாநாடு செய்வோம், வர்க்க சேவை செய்வோம்.ஆக வார்த்தைகளின் சேவையில் தன்னை பிசியாக வைத்துக் கொள்ள ஒன்றுக்குப் பின் மற்றொரு திட்டத்தை முன் கூட்டியே யோசிக்கிறீர்கள். இதில் பிசியாக இருப்பதற்கு வந்து விட்டது. அதிகப்பட்சம் நல்ல ஆர்வத்துடன் இந்த சேவையில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். பிசியாக இருக்கும் முறை வந்து விட்டது. ஆனால் மன சேவையிலும் பிசியாக இருக்க வேண்டும் – இதில் குறைந்த பட்சமாக இருக்கிறீர்கள், அதிகபட்சமாக இல்லை. ஏதாவது ஒரு விசயம் வருகின்ற பொழுது அந்த நேரத்தில் விசேஷமாக மன சேவையின் நினைவு வருகிறது. ஆனால் எவ்வாறு வார்த்தை களின் சேவை இயற்கையாக ஆகிவிட்டதோ, அவ்வாறு மன சேவையும் இயற்கையாக இருக்க வேண்டும். இந்த விசேஷதா இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. வார்த்தைகளின் கூடவே மன சேவையும் செய்து கொண்டே இருந்தால் நீங்கள் குறைவாக பேச வேண்டியிருக்கும். பேசுவதில் என்ன சக்தியை பயன்படுத்துகின்றீர்களோ, அது மன சேவையின் சகயோகத்தின் காரணத்தினால் வார்த்தைகளின் சக்தி சேமிப்பாகி விடும். மேலும் மனதின் சக்திசாலியான சேவை அதிக வெற்றியை அனுபவம் செய்ய வைக்கும். எந்த அளவிற்கு இப்பொழுது உடல், மனம், செல்வம் மற்றும் நேரத்தை ஈடுபடுத்துகின்றீர்களோ, அதை விட குறைவான நேரத்தில் வெற்றி அதிகமாக கிடைக்கும். மேலும் தனக்காகவும் சில நேரம் உழைப்பு செய்ய வேண்டியிருக்கிறது – தனது குணங்களை மாற்றிக் கொள்வதில் அல்லது குழுவுடன் சேர்ந்திருப் பதில் அல்லது சேவையில் வெற்றி குறைவாக இருப்பதைப் பார்த்து மனம் உடைந்து போவது போன்ற இந்த அனைத்தும் சமாப்தி ஆகிவிடும். எந்த சிறு சிறு விசயங்கள் பெரிதாகி விடுகிறதோ, அவை அனைத்தும் இது மாயாஜாலம் ஆகிவிட்டது என்று நீங்கள் சிந்திக்கும் அளவிற்கு சமாப்தி ஆகிவிடும். இப்பொழுது மாய மந்திரம் பிடித்திருக்கிறது அல்லவா! ஆக இந்த பயிற்சி மாய மந்திரமாக ஆகிவிடும். எங்கு மந்திரம் இருக்கிறதோ, அங்கு வித்தியாசம் விரைவில் வந்து விடும், அதனால் தான் மாய மந்திரம் என்று கூறுகின்றோம். எனவே இந்த ஆண்டு மாய மந்திரத்தை பயன்படுத்துங்கள். இந்த புதுமை அல்லது விசேஷதா செய்யுங்கள். மேலும் மாய மந்திரம் எது? மனம் மற்றும் வார்த்தை – இரண்டையும் இணையுங்கள். இரண்டி லும் சமநிலை, இரண்டும் சமமாக இருப்பது – இது தான் மாய மந்திரமாகும். மனதில் சதா சுப பாவணை அல்லது சுப ஆசிர்வாதம் கொடுக்கும் பயிற்சி இயற்கையானதாக ஆகிவிடும் போது உங்களது மனம் பிசியாக ஆகிவிடும். மனதில் ஏற்படும் குழப்பங்களிலிருந்து தானாகவே தூர விலகி விடுவீர்கள். தனது முயற்சியில் சில நேரங்களில் மனம் உடைந்து போவது போன்ற வைகள் இருக்காது. மாய மந்திரமாக ஆகிவிடும். குழுவில் சில நேரங்களில் பயந்து விடுகிறீர் கள். பாபா மற்றும் நான் என்று நான் உறுதிமொழி கொடுத்திருந்தேன், குழுவில் இருப்பேன் என்று நான் உறுதிமொழி கொடுக்கவில்லை என்று யோசிக்கிறீர்கள். தந்தை மிகவும் நல்லவ ராக இருக்கின்றார், தந்தையுடன் இருப்பதும் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் குழுவில் அனைவரின் சன்ஸ்காரங்களை புரிந்து கொண்டு நடப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் இதுவும் மிக எளிதாக ஆகிவிடும். ஏனெனில் மனதார, உள்ளப்பூர்வமாக ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் ஆசிர்வாதம், சுப பாவணை, சுப விருப்பம் சக்திசாலியாக இருக்கின்ற காரணத்தினால் மற்றவர்களது சன்ஸ்காரங்கள் மறைந்து விடும். அது உங்களை எதிர் கொள்ளாது. அது மறைந்து மறைந்து சமாப்தி ஆகிவிடும். பிறகு கூறுவீர்கள் – என்னால் 40 – ன் கூடவும் இருக்க முடியும். இந்த ஆண்டு நாலாப்புறங்களிலும் உள்ள உள்நாடு-அயல்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொரு நேரத்திலும் இந்த புதுமை அல்லது விசேஷதா தனக்குள் கொண்டு வர வேண்டும். இப்பொழுது 9 இலட்சம் ஆகவில்லை என்று சில நேரங்களில் யோசிக்கிறீர்கள் அல்லவா! கடைசியில் 33 கோடி தேவதைகள் இருப்பார்கள் – இந்த விசயத்தை விட்டு விடுங்கள். 9 இலட்சம் நல்ல ஆத்மாக்கள் தேவை. முதல் இராஜ்யத்தில் நல்ல ஆத்மாக்கள் தேவை. பிரஜைகளும் நல்ல நம்பர் ஒன்னாக தேவை. ஏனெனில் ஒன்-ஒன்-ஒன் ஆரம்பமாகும். ஆக அதில் இருக்கக் கூடிய இயற்கை, மனிதன், பொருட்கள் அனைத்தும் நம்பர் ஒன்னாக இருக்கும். இப்பொழுது 9 இலட்சம் நம்பர் ஒன் பிரஜைகளை தயார் செய்திருக்கிறீர்களா? எத்தனை இலட்சம் தயார் செய்திருக்கிறீர்கள்? நீங்கள் தயாரிக்கும் ரிப்போர்ட்டில் அவ்வப் பொழுது வந்து செல்பவர்களையும் சேர்த்து விடுகிறீர்கள் அல்லவா! ஆனால் இப்பொழுது பாதி கூட தயார் ஆகவில்லை. நம்பர் ஒன் பிரஜைகளும் கூட குறைந்தது தந்தையின் அனுபவம் அவசியம் செய்வார்கள். சகயோகம் செய்வது என்பது முதல் அடியாகும். ஆனால் இரண்டாவது அடி சகயோகிகள் அன்பானவர்களாக ஆவார்கள். சமர்ப்பணம் அல்ல, அது வேறு விசயம். ஆனால் சதா தந்தையின் அன்பில் இருப்பார்கள். குடும்பத்தில் அல்லது சகோதர-சகோதரிகள் அன்பில் அல்ல. என்ன சேவை செய்கிறீர்களோ, அதன் மீது அன்பு வைத்திருக்கின்றனர் – இது வரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் தந்தையின் அன்பின் அனுபவம் செய்ய வேண்டும். அவர்களது உள்ளத்திலும் மனதார பாபா என்று வெளிப்பட வேண்டும், அப்பொழுது தான் பிரஜை உருவாகும். பிரம்மாவின் பிரஜை, முதலில் விஷ்வ மகாராஜனுக்கு ஆவார். யாருக்கு பிரஜை யாக ஆவார்களோ, அவர்களது அன்பு இப்பொழுதிலிருந்தே தேவை அல்லவா! இன்னும் அதிக சேவைகள் இருக்கின்றன என்று யோசிக்கிறீர்கள் அல்லவா! அதை இந்த மனம்-வார்த்தை களின் சமநிலை சேவையின் மூலம் தீவிர வேகத்தில் சேவையின் பிரபாவத்தைப் பார்ப்பீர்கள். முந்தைய சேவையை விட தற்போதைய சேவையை தீவிர சேவை என்று கூறுகிறீர்கள். நாளடைவில் இன்னும் தீவிர சேவையின் அனுபவம் செய்வீர்கள். பாப்தாதா குழந்தைகயின் சேவையில் குஷி அடைகின்றார். ஒவ்வொருவரின் சேவையைப் பார்க்கின்ற பொழுது ஒவ்வொருவரின் மீதும் அன்பு ஏற்படுகிறது. உள்நாடு அல்லது அயல்நாட்டில் சேவையின் ஆர்வம் நன்றாக இருக்கிறது. எத்தனை ஊர்களில் நாலாபுறங்களிலும் சேவை பரவிக் கொண்டிருக்கிறது. முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அன்பின் காரணத்தினால் முயற்சியாக தோன்றுவது கிடையாது. ஓடி ஓடி தன்னை பிசியாக வைத்துக் கொள்ளும் யுக்தி நன்றாக செய்கிறீர்கள். தந்தையின் அன்பு மற்றம் தந்தையின் உதவி இவ்வாறு நடத்திக் கொண்டிருக் கிறது. எவ்வளவு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றனர் – குழந்தைகளின் சேவையைப் பார்த்து பாப்தாதா குஷியடைகின்றார். இதுவரை என்ன செய்தீர்களோ, மிக நன்றாக செய்திருக் கிறீர்கள். இப்பொழுது மேலும் தீவிர சேவைக்காக என்ன விதி கூறியிருக்கின்றேனோ, இதன் மூலம் தரமான (குவாலிட்டி) ஆத்மாக்கள் நெருக்கத்தில் வருவார்கள். மேலும் அந்த தரமான ஆத்மாக்கள் பலருக்கு நிமித்தமாக ஆவார்கள். ஒருவர் மூலம் பலராக ஆகி தீவிர வேகத்தில் சேவை ஆகிவிடும். ஆனால் தரமான சேவையில் அவர்களை நிமித்தமாக ஆக்குவதற்கு அதாவது அவர்களது புத்தியை டச் செய்வதற்கு தனது மனம் மிகவும் சக்திசாலியாக இருக்க வேண்டும். ஏனெனில் தரமான ஆத்மாக்கள் வார்த்தைகளில் முன்பே புத்திசாலியாக இருப்பார் கள். ஆனால் அனுபவத்தில் பலவீமாக இருப்பார்கள், முற்றிலும் காலியாக இருப்பார்கள். ஆக யார் எந்த விசயத்தில் பலவீன மாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த பலவீனத்தை போக்குவதற்கான அம்பு தான் எய்ய வேண்டும். எப்போது அனுபவம் ஏற்படுகிறதோ, அப்போது இவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். இல்லையெனில் அவ்வப்பொழுது கலப்படம் செய்து விடுவார்கள் – நீங்களும் மிக நல்லவர்களாக இருக்கிறீர்கள், மற்ற அனைவரும் நல்லவர்களாக இருக்கிறார்கள், உங்களுக்கும் பகவான் ஆசிர்வாதம் கொடுப் பார். இதைக் கூறி முடித்து விடுவர். ஆனால் இவர்கள் ஆசிர்வாதத்தினால் நடந்து கொண்டிருக் கின்றனர், பரமாத்ம ஆசிர்வாதம் தான் இவர்களது வாழ்க்கை என்ற இந்த அனுபவம் இப்பொழுது செய்விக்க வேண்டும். இப்பொழுது சிறிது அபிமானம் இருக்கிறது. தன்னை முக்கியஸ்தன் என்று புரிந்து கொள்கின்ற காரணத்தினால் அவர்கள் தைரியம் கொடுக்கின்றனர். ஆனால் இவர்கள் நமக்கு தைரியம் கொடுக்கக் கூடியவர்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். இப்பொழுது இப்படிப்பட்ட மாய மந்திரத்தை பயன்படுத்துங்கள். இப்பொழுது வார்த்தைகளின் சேவையின் மூலம் நிலத்தை தயார் செய்திருக்கிறீர்கள், உழுதிருக்கிறீர்கள், நிலத்தை சீர்படுத்தி யிருக்கிறீர்கள். இந்த அளவிற்கு ரிசல்ட் உருவாக்கியிருக்கிறீர்கள். விதையும் தெளித்திருக் கிறீர்கள். ஆனால் அந்த விதைக்கு இப்பொழுது பிராப்தி என்ற தண்ணீர் தேவை. அப்பொழுது தான் பழத்திற்கான அனுபவம் செய்வீர்கள். மனதின் தரத்தை அதிகப்படுத்துங்கள், தரமானவர் கள் நெருக்கத்தில் வருவார்கள். இதில் இரட்டை சேவை இருக்கிறது. சுயத்திற்கு மற்றும் மற்றவர்களுக்கும் சேவை. தனக்கென்று தனியாக முயற்சி செய்ய வேண்டியிருக்காது. பிராப்தி கிடைத்திருக்கிறது என்ற ஸ்திதி அனுபவம் ஆகும். எதிர்கால விஷ்வ இராஜ்ய பிராப்தி இருக்கவே செய்கிறது. இந்த நேரத்திற்கான பிராப்தி சுயம் சதா அனைத்து பிராப்திகளிலும் நிறைந்திருப்பது மற்றும் நிறைந்தவர்களாக ஆக்குவது. இந்த நேரத்திற்கான பிராப்தி அனைத்தையும் விட மிக சிரேஷ்டமானது. எதிர்காலத் திற்கானது கண்டிப்பாக உத்திரவாதம் இருக்கிறது. பகவானின் உத்திரவாதம் ஒருபொழுதும் மாற்ற முடியாது. ஆக இவ்வாறு புது ஆண்டு கொண்டாடுவீர்கள் தானே? அனைவரையும் விட முதலில் சேவையை துவக்குவது யார்? மதுவன். ஏனெனில் மதுவனத்தினரைப் பற்றி கூறும் பொழுது அடுப்படியிலும் இருக் கின்றனர், உள்ளத்திலும் இருக்கின்றனர் என்று கூறுவது உண்டு. எல்லையற்ற அடுப்படியில் பிரம்மா போஜனம் சாப்பிடக் கூடியவர்கள். உண்மையில் நீங்கள் அனைவரும் இந்த நேரத்தில் மதுவனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், மதுவன் நிவாசிகளாக இருக்கிறீர்கள். உங்களது நிரந்தர விலாசம் என்ன? என்று உங்களிடத்தில் யாராவது கேட்டால் மதுவன் என்று தான் கூறுவீர்கள் அல்லவா! அல்லது எங்கு வசிக்கிறீர்களோ அது நிரந்தர விலாசமா? பிரம்மா குமார்-குமாரி என்றால் ஒரே ஒரு நிரந்தர விலாசமாகும். மற்றபடி அங்கு சேவையின் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக் கிறீர்கள். நான் அயல்நாட்டில் இருக்கின்றேன் என்று கிடையாது. நான் பிராமணன், என்னை பாபா அங்கு சேவையின் பொருட்டு அனுப்பி வைத்திருக்கின்றார். புத்தியின் தூண்டுதலினால் நீங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறீர்கள். தந்தையின் சங்கல்பத்தினால் அங்கு சென்றிருக்கிறீர்கள். இராஜ்யம் பாரதத்தில் செய்வீர் களாக? அல்லது இலண்டனிலா? நான் அயல்நாட்டில் பிறந்திருப்பதால் அங்கு வசிக்கக் கூடியவன் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். பிரம்மாவின் மூலம் பிறந்திருக்கிறீர்களே தவிர அயல்நாட்டில் அல்ல. இல்லையெனில் அயல்நாட்டுக் குமார், அயல்நாட்டுக் குமாரி என்று கூறிக் கொள்ளுங் கள். பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள் அல்லவா! எவ்வாறு பாரதத்தில் சிலர் உத்திர பிரதேசத் தினராக, சிலர் டில்லியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர், அவ்வாறு நீங்களும் சேவையின் பொருட்டு அயல் நாட்டிற்குச் சென்றிருக்கிறீர்கள். அயல்நாட்டினராக அல்ல. இந்த போதை இருக்கிறது அல்லவா! அது சேவையின் ஸ்தானமாகும். பிறந்த பூமி மதுவனமாகும். அந்த கணக்கு வழக்கு முடிந்ததால் தான் பிராமணனாக ஆகியிருக்கிறீர்கள். கணக்கு முடிந்ததால் கணக்கு வழக்கு எரிந்து விட்டது. அரசாங்கத்திடமிருந்து தப்பிப்பதற்காகவும் கணக்குப் புத்தகங்களை எரித்து விடுகின்றனர் அல்லவா! ஆக பழைய கணக்குகளை அழித்து விட்டீர்கள் தானே! சிலர் புத்திசாலியாக இருக்கின்றனர் எனில் அவர் தனது முழு கணக்கையும் அழித்து விடுவார். யார் புத்திசாலியாக இல்லையோ அவர் ஏதாவது செலவு கணக்கில் மாட்டிக் கொள்வர். புத்திசாலிகள் ஒருபோதும் மாட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆக கணக்கிற்கான புத்தகம் அழிந்து விட்டது என்றால் எந்த கடனும் கிடையாது, அனைத்து கணக்கும் சுத்தமாகி விட்டது. அனைவரையும் விட மிக நல்ல வழக்கம் பிராமணர்களுடையது. நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள சேவையின் துணைவர்களுக்கு, தைரியசாலி மற்றும் தந்தையின் உதவிக்கு பாத்திரமான ஆத்மாக்களுக்கு, சதா மனம் மற்றும் வார்த்தை இரண்டு சேவையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடிய தீவிர வேகத்தில் இருக்கும் சேவாதாரிகளுக்கு, சதா பாப்சமான் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆசிர்வாதம் கொடுக்கக் கூடிய மாஸ்டர் சத்குரு குழந்தைகளுக்கு, சதா தனக்குள் ஒவ்வொரு நேரத்திலும் புதுமை அல்லது விசேஷதாவைக் கொண்டு வரக் கூடிய சர்வசிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:-

டபுள் லைட் ஸ்திதி தீவிர முயற்சியின் அடையாளமாகும். அவர்களுக்கு எந்த விதமான சுமையின் அனுபவம் ஏற்படாது. இயற்கையின் மூலம் அல்லது மனிதனின் மூலம் எந்த பிரச்சனை வந்தாலும், ஒவ்வொரு பிரச்சனையிலும் தனது ஸ்திதியின் முன் எதுவும் அனுபவம் ஆகாது. டபுள் லைட் என்றால் உயர்ந்து இருப்பது, இதனால் எந்த விதமான பாதிப்பும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. கீழான விசயங்களில் இருந்து, கீழான வாயுமண்டலத்திலிருந்து மேலே இருப்பதால் குறைந்த நேரத்தில் சம்பூர்னம் ஆகக் கூடிய சிரேஷ்ட இலட்சியத்தை பிராப்தியாக அடைந்து விடுவர்.

சுலோகன்:-

அன்பில் மூழ்கிய நிலையை அனுபவம் செய்யுங்கள்

அன்பில் மூழ்கி இருக்கும் குழந்தைகளாகிய உங்களது குழு தான் தந்தையை பிரத்யக்ஷம் செய்யும். குழுவாக பயிற்சி செய்யுங்கள் – நான் பாபாவினுடையவன், பாபா என்னுடையவர். அனைத்து சங்கல்பங்களையும் இந்த ஒரு சுத்த சங்கல்பத்தில் கலந்து விடுங்கள். ஒரு விநாடி கூட இந்த அன்பில் மூழ்கிய நிலையிலிருந்து கீழே வராதீர்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top