11 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

December 10, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள் அதிசயமான ஆன்மீகப் பயணிகள். நீங்கள் இந்த யாத்திரையினால் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக ஆக வேண்டும்.

கேள்வி: -

சத்யுகத்தில் எந்த பொருள் பயன்படுவதில்லை? அது பக்தி மார்க்கத்தில் பாபாவிற்குப் பயன்படுகிறது?

பதில்:-

தெய்வீக திருஷ்டியின் சாவி. சத்யுகத்தில் இந்த சாவி அவசியம் இல்லை. பக்தி மார்க்கம். ஆரம்பமாகும் போது பக்தர்களை குஷிப்படுத்துவதற்காக காட்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. அச்சமயம் இந்த சாவி பாபாவிற்குப் பயன்படுகிறது. ஆகையால் பாபாவிற்கு திவ்ய திருஷ்டி தாதா (வள்ளல்) என்று பெயர். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு உலகத்தின் ராஜ்ய பதவியைக் கொடுக்கிறார். திவ்ய திருஷ்டியின் சாவியைக் கொடுப்பதில்லை.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இறந்தாலும் உன் வீதியில் (அருகில்) வாழ்ந்தாலும் உன் வீதியில்…….

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் ஸ்பிரிட்சுவல் சில்ட்ரன் என்று பெயர். ஸ்பிரிட் சுவல் ஃபாதர் மற்றும் ஸ்பிரிட்சுவல் சில்ட்ரன். இப்போது ஆத்மாக்களாகிய நமக்கு அங்கே சரீரம் இல்லை. ஆகவே, அங்கே எந்த ஆன்மீக உரையாடலும் இருக்காது என ஆன்மீகக் குழந்தைகள் அறிகிறீர்கள். ஆத்மாவுடன் ஆன்மீக உரையாடல் என்றால் அதாவது எப்போது இருவருக்கும் சரீரம் இருக்கிறதோ அப்போது தான் உரையாட முடிக்கிறது. ஆத்மாக்களுக்கு இங்கே அவரவர்களுக்கென சரீரம் இருக்கிறது. மற்றபடி ஆன்மீகத் தந்தை ஞானம் நிறைந்தவர் ஆவார். தனக்கென அவருக்கு உடல் கிடையாது. அவர் நிராகாரராக இருக்கிறார். சாந்தி தாமத்தில் ஆத்மாக்களாகிய நாம் அசரீரியாக இருக்கிறோம் என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள். தந்தை எப்படி அசரீரியாக அல்லது விசித்திரமாக இருக் கிறாரோ அவ்வாறே ஆத்மாக்களாகிய நீங்களும் அவ்வாறே சரீரம் இல்லாமல் இருக்கிறீர்கள். இது புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். தனியாக வந்தோம், தனியாகச் செல்ல வேண்டும் என்கிறார்கள். அதாவது இந்த சரீரம் என்ற வஸ்திரம் (ஆடை) அங்கே இருக்காது. ஆத்மா சாந்தி தாமத்தில் இருக்கும் போது அசரீரியாக இருக்கிறது. அங்கே சாந்தியில் இருக்கிறது. இப்போது ஆன்மீகத் தந்தை இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். முழு உலகத்திலும் ஆன்மீகத் தந்தை வேறு யாரும் இல்லை. மற்ற அனைவரும் உடலுக்கான தந்தை. பாபா, நான் அசரிரீயாக இருக்கிறேன் என அவரே கூறுகிறார். பேசும் போது சரீரத்தின் ஆதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது. சாஸ்திரங்களில் இயற்கையின் ஆதாரத்தை எடுக்க வேண்டி யிருக்கிறது என்ற வார்த்தை உள்ளது. ஆனால் இயற்கையினால் சரீரம் உருவாக்கப் பட்டிருக் கிறது என பாபா புரிய வைக்கிறார். நான் சாதாரண உடலை ஆதாரமாக எடுக்கிறேன்.

ஆன்மீகத் தந்தைக்கு ஆன்மீக சர்ஜன் என்று பெயர். ஏனென்றால் நினைவு அல்லது யோகத்தைக் கற்பிக்கிறார். இதன் மூலமாக நம்முடைய ஆத்மா சதா நோயற்றதாகி விடுகிறது. தந்தை வந்து நம்மை 21 பிறவிகளுக்கு நோயற்றவராக மாற்றுகிறார். பாபாவிற்கு யாத்திரை யைக் கற்றுக் கொடுக்கக் கூடிய வழிக்காட்டி என்ற பெயரும் உள்ளது. நாம் அதிசயமான ஆன்மீகப் பயணிகள். இந்த ஆன்மீக யாத்திரையை வேறு எந்த மனிதர்களும் உலகத்தில் அறியவில்லை. முக்கியமாக பாரதம் மொத்தத்தில் உலகம் முழுவதும் என்று எப்போதும் கூறப்படுகிறது. முக்கியமாக நமக்குத் தான் ஆன்மீக யாத்திரை கற்பிக்கப்படுகிறது. யார் கற்பிக்கிறார்? ஸ்பிரிட்சுவல் ஃபாதர் (ஆன்மீக தந்தை). உலகியல் யாத்திரைகளை மனிதர்கள் பல பிறவிகளாக செய்து வந்துள்ளனர். ஒரு சிலர் ஒரே பிறவியில் இரண்டு நான்கு யாத்திரைகள் கூட செல்கிறார்கள். அது ஜீவ ஆத்மாக்களின் யாத்திரை என்று கூறலாம். இது ஆத்மாக்களின் யாத்திரையாகும். இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷய மாகும். போகும் போதும் வரும் போதும் புத்தியில் பாபாவை நினைவு செய்து வந்தால் கடைசி நேரத்தில் ஸ்திதி எப்படியோ அப்படியே எதிர்காலம் அமையும். பாபாவின் நினை வில் நாம் பாபாவிடம் சென்று விடுவோம். இப்போது ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆன்மீகத் தந்தை இந்த யாத்திரையைக் கற்பிக்கிறார். கீதையில் மன்மனாபவ என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால் அதனுடைய பொருளை யாரும் புரிந்துக் கொள்ள வில்லை. என்னை நினைவு செய்தால் உங்களுடைய பாவம் எரிந்து (பஸ்மமாகிப்) போகும் என பாபா கூறுகின்றார். பிறகு என்ன நடக்கும்? நாம் நினைவினால் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாவோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இச்சமயம் அனைவரும் தமோபிரதானமாக இருக்கிறார்கள். முழு மரமும் செல்லரித்துப் போய்விட்டது. இப்போது எப்படி ஆத்மா சதோபிரமானமாக மாறுவது, வீட்டிற்கு எப்படி திரும்பி போவது? அங்கேயோ பவித்திரமான ஆத்மாகள் தான் வசிக்கிறார்கள். பிறகு இங்கே சரீரத்தை ஏற்று ரஜோ தமோவில் வருகிறார்கள்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிலை இருக்கிறது. உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என பாடுகிறார்கள். இந்த பழைய உலகத்தை இரும்பு யுகம் என்பார்கள். புது உலகத்தை (கோல்டன் ஏஜ்) சத்யுகம் என்பார்கள். இப்போது குழந்தைகளின் புத்தியில் இது இருக்க வேண்டும். சத்யுகம் இருந்த போது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. இப்போது அந்த தர்மம் இல்லை. தேவதா தர்மம், இஸ்லாமிய, பௌத்தம், கிறித்தவம்…… இவை முக்கியமானவையாகும். நான்கு யுகங்கள் முக்கிய மானவை என்று யுகங்களைப் பற்றி புரிய வைக்கப் பட்டிருக்கிறது. மற்றபடி இந்த பிராமணர்களின் சங்கமயுகம் குப்தமாக இருக்கிறது. பரம்பிதா பரமாத்மாவே வந்து பிராமண தேவதா க்ஷத்திரிய தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். இந்த அனைத்து விஷயங்களும் குழந்தைகளுக்கு நினைவிருக்க வேண்டும். மேலும் தனது புத்தியோகத்தை பாபாவுடன் இணைக்க வேண்டும். விகர்மாஜீத் ஆக வேண்டும் என்பது முக்கியமான விஷயமாகும். உண்மையில் நாம் சதோபிரதானமாக பவித்திரமாக இருந்தோம். உண்மையில் 24 கேரட் தங்கமாக இருந்தோம். பிறகு சதோவில் வந்து 22 கேரட் ஆனோம். பிறகு ரஜோவில் 18 கேரட், தமோவில் 9 கேரட் ஆகிவிட்டோம். தங்கத்திற்கு டிகிரி இருக்கிறது. இது ஆத்மா வின் விஷயம் ஆகும். குளவி அற்ப புழுக்களைக் கொண்டு வந்து அவற்றை தனக்குச் சமமாக மாற்றுகிறது. நீங்களும் பூம் பூம் என ரீங்காரமிட்டு மனிதர்களை தேவதையாக்குகிறீர்கள். குளவி புழுக்களை எடுத்து வந்து வீட்டில் தனிமையில் வைக்கிறது. அதற்குள் கூட எவ்வளவு அறிவு இருக்கிறது. உங்களுடைய ஆத்மாவில் நாடகப்படி நடிப்பின் பாகம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. போன கல்பத்திலும் ஆன்மீகத் தந்தையிடம் நாம் ஆன்மீக ஞானத்தை கேட்டோம் என நீங்கள் அறிகிறீர்கள். கல்ப கல்பமாக கேட்டுக் கொண்டேயிருப்போம். எதுவும் புதியதல்ல. இதையும் பாபா தான் புரிய வைக்கின்றார். மரத்தை அறிந்துக் கொள்ளக் கூடியவர் விதை அல்லவா? தந்தை உங்களை திரிகால தர்ஷியாக மாற்றுவதற்காக வருகிறார். முக்காலத்தைப் பற்றிய ஞானத்தைக் கொடுக்கிறார் அல்லவா? உங்களை உயிருடன் தத்தெடுக்கிறார். குமாரிகளைக் கூட உயிரோடு இவர் என்னுடைய மனைவி என தத்தெடுக்கிறார்கள். இப்போது பிரஜாபிதா பிரம்மாவிற்கு மனைவி இல்லை. எனவே இவர் தத்தெடுக்கப்படுகிறார். பரம்பிதா பரமாத்மா பிரம்மா மூலமாகத் தத்தெடுக்கிறார். இவர் நம்முடைய தந்தை என நீங்களும் கூறுகிறீர்கள். பரம்பிதா பரமாத்மா பாபா நீங்கள் என்னுடைய குழந்தைகள் என கூறுகின்றார். அந்த சிவபாபா ஆன்மீகமானவர். பிரஜாபிதா பிரம்மா தாதா (பெரிய அண்ணன்) சரீரத்தில் இருப்பவர். ஆன்மீகத் தந்தை சரீரத்தில் வராதவரை எப்படி ஞானம் கொடுப்பார். பரம்பிதா பரமாத்மா விற்குத் தான் நாலெட்ஜ்ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) என்று பெயர். எந்த விதமான ஞான மானாலும் எப்போதும் ஆத்மாவில் தான் இருக்கிறது. உலகியல் ஞானத்தையும் ஆத்மா தான் படிக்கிறது இல்லையா? ஆனால் தமோபிரதானமாக இருக்கின்ற காரணத்தால் ஆத்ம அபிமானியாக யாரும் இல்லை. இப்போது நீங்கள் ஆத்ம அபிமானியாகிறீர்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்களைப் புரிய வைக்க மாட்டார்கள். இச்சமயம் தன்னை ஆத்மா என்று உணர்ந்து பாபாவை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். ஏனென்றால் பாவங்களின் சுமை இச்சமயம் தலையில் இருக்கின்றது. அதை இறக்கிவிட வேண்டும். இந்த நேரத்தில் தான் தந்தையை, பதீதர்களை வந்து பாவனமாக்குங்கள் என அழைக்கிறார்கள். ஆத்மா தான் அபவித்ரமாக தமோபிரதானமாக மாறுகிறது. இதனால் தான் பாபாவை நினைக்கிறது. பரம்பிதா பரமாத்மா புள்ளியாக இருக்கிறார் என பக்தர்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. பிந்துவிற்கு கோவில் கட்ட முடியாது. அழகாகவும் இருக்காது. ஒன்று லிங்கத்தை உருவாக்கு கிறார்கள். பிறகு 1000 சூரியனை விட பிரகாசமானவர் என்று காட்சிக்காக கூறுகிறார்கள். லிங்கம் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதா? அர்ஜுனனுக்குக் காட்டப்பட்டது போல இருக்கிறதா? அவருக்கு மிகவும் பிரகாசமான காட்சி கிடைத்தது. அவர் என்னால் இந்த சக்தியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறினார். இது போன்ற வார்ததை களைக் கேட்டீர்கள் அல்லவா? இங்கே கூட ஆரம்பத்தில் காட்சிகள் கிடைத்தது. போதும் நிறுத்துங்கள். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என கூறினார்கள். கண்கள் சிவந்து விட்டது. நாங்கள் பரமாத்மாவினுடைய காட்சியைப் பார்த்துவிட்டோம் என நினைக் கிறார்கள். யார் காண்பித்தது? கிருஷ்ணன் காண்பிக்கவில்லை.

சிவபாபா தான் காட்சியைக் காண்பித்தார். அவருக்கு திவ்ய திருஷ்டி தாதா (வள்ளல்) என்று பெயர். குழந்தைகளாகிய உங்களுக்கு நான் சாவியை கொடுப்பதில்லை என பாபா கூறுகின்றார். இந்த பொருள் பக்தி மார்க்கத்தில் எனக்கே பயன்படுகிறது. சத்யுகத்தில் இதற்கு அவசியம் இல்லை. நீங்கள் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராகிறீர்கள். நான் உங்களுக்கு உலக ராஜ்யத்தின் பாக்கியத்தைக் கொடுத்துவிட்டு என்னுடைய பரந்தாமத்தில் சென்று அமருகிறேன் என பாபா கூறுகிறார். நான் பூஜைக்குரியவராகவும் பூஜாரியாகவும் ஆவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புத்திசாலியாகிறீர்கள். நடத்தையினால் இவர் எவ்வளவு இனிமையானவர், இவருடைய தாரணை மிகவும் நன்றாக இருக்கிறது என புரிந்துக் கொள்ளப்படுகிறது. எத்தனை தலைப்புகளை உருவாக்குகிறார்கள். பாபா என்ன தலைப்பு (டாபிக்) கொடுக்கின்றாரோ அதைக் குறித்துக் கொள்ள வேண்டும். இன்று யாத்திரையைப் பற்றி புரிய வைப்பார். யாத்திரை இரண்டு விதமாக இருக்கிறது. இது நம்பர் ஒன் டாபிக் ஆகும். மனிதர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தில் உடல் மூலமாக யாத்திரை செல்கிறார்கள். ஞான மார்க்கத்தில் உடல் மூலமான யாத்திரை கிடையாது. உங்களுடையது ஆன்மீக யாத்திரையாகும். இந்த யாத்திரையினால் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாறுவீர்கள் என பாபா கூறுகிறார். ஆத்மா பவித்திரமாக (தூய்மை) அடையாமல் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. அனைத்து ஆத்மாக்களும் இங்கே தான் வந்துக் கொண்டிருக்கின்றன. யாரும் போவதில்லை. சத்யுகத்தில் தேவி தேவதை களின் ராஜ்யம் இருந்த போது ஒரு பிள்ளை, ஒரு பெண் இருந்தார்கள். அதுவும் யோக பலத்தினால் பிறந்தார்கள் என அரசாங்கத்திற்குக் கூட நீங்கள் புரிய வைக்க முடியும். இப்போது சிந்தித்துப் பாருங்கள். சத்யுகத்தில் எவ்வளவு குறைவான மனிதர்கள் இருப்பார் கள். மேலும் சம்பூர்ண நிர்விகாரியாக லஷ்மி நாராயணனின் ஆட்சி நடந்தது. நிச்சயமாகப் பிள்ளை கூட இருக்கும். நாம் யோக பலத்தினால் உலகத்திற்கு அதிபதியாகும் போது, யோக பலத்தினால் குழந்தை பிறக்காதா என்ன ! இது நாடகத்தில் நிச்சயக்கப்பட்டிருக்கிறது. பவித்திரமாக இருக்கும் காரணத்தால் பிள்ளை பிறக்கப்போகிறான் என்ற காட்சி கிடைக்கிறது. குஷி ஏற்படுகிறது. விகாரத்தின் எந்த விஷயமும் அங்கு இல்லை. குழந்தை எப்படி பிறக்கும் என கேட்கிறார்கள். ஆண் பப்பாளி மரமும் பெண் பப்பாளி மரமும் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் போது பழம் உருவாகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று அருகாமையில் இல்லை என்றால் பழம் உருவாகாது அல்லவா? அதிசயமாக இருக்கிறது அல்லவா? எனவே அங்கே குழந்தைகள் ஏன் யோக பலத்தினால் பிறக்காது என கூறுங்கள். மயிலின் எடுத்துக் காட்டு இருக்கிறது. அதுவே தேசியப் பறவை ! அன்பின் கண்ணீரினால் கர்ப்பமாகிறது. இது விகாரம் இல்லை அல்லவா! இந்த பாரதம் சிவாலயமாக இருந்தது. சிவபாபா உருவாக் கினார். இப்போது இராவணன் வேசியாலயமாக மாற்றி இருக்கிறான். சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இராவண ஜெயந்தி எங்கே என்பது யாருக்கும் தெரியாது. இராவணனைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவனை உருவாக்கி தசரா அன்று எரிக்கிறார்கள். இராவணன் என்ற 5 விகாரங்களை இந்த பட்டாசுகளால் எரிக்கத் தேவை யில்லை என உங்களுக்குத் தெரியும். யோக பலத்தினால் அதை வெற்றி அடைய வேண்டும். அந்த யோகத்தை பாபா தான் வந்து கற்றுக் கொடுக்கிறார். யோகியாய் இரு ! ஹோலியாய் இரு! (புனிதமாகுக) என கூறுகிறார்கள். மன்மனாபவ என்னை நினையுங்கள் என்ற வார்த்தைகள் கீதையில் உள்ளது. இந்த யாத்திரையினால் தான் நீங்கள் சாந்தி தாமத்திற்குச் செல்வீர்கள். பிறகு அமர லோகத்திற்கு வருவீர்கள். மனிதர்கள் யாத்திரைக்குச் செல்லும் போது பவித்திர மாக இருக்கிறார்கள். காசிக்குச் செல்பவர்கள் பவித்ரமாக இருக்கிறார்கள். ஆனால் காசியில் வசிப்பவர்கள் பவித்திரமாக இல்லை. இங்கே இராவண இராஜ்யத்தில் பதீதர்களின் விவகாரம் பதீதர்களோடு தான் இருக்கிறது. அங்கே பாவனமானவர் களின் விவகாரம் பாவன மானவர்களோடு இருக்கிறது. இருப்பினும் கீழே தான் இறங்க வேண்டியிருக்கிறது.

அரைக் கல்பம் பகல், அரைக் கல்பம் இரவு என பாபா புரிய வைக்கிறார். இது பிராமணர்களின் விஷய மாகும். பிராமணர்கள் தான் மீண்டும் தேவதைகளாக மாறுகிறார்கள். புதிய உலகத்தில் லஷ்மி நாராயணனன் எங்கிருந்து வந்தார்கள்? யாரும் போரிடவில்லை. மகாபாரத யுத்தத்தைக் காண்பிக்கிறார்கள். பிறகு அதனுடைய ரிசல்ட் எதுவும் காண்பிப் பதில்லை. பஞ்ச பாண்டவர்கள் இருந்தார்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் எத்தனை பாண்டவர்கள் இருக்கிறீர்கள். நீங்களே ஆன்மீக வழிகாட்டிகள். இப்போது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என அறிகிறீர்கள். தந்தை வருவதே அனைவரையும் அழைத்துச் செல்வதற்காகும். அவரே சுப்ரீம் வழிகாட்டி அல்லது கைடு, -பரேட்டர், மாயாவிடம் இருந்து விடுவித்து உடன் அழைத்துச் செல்கிறார். உடன் அழைத்துச் செல்லக் கூடிய கைடு நிச்சயமாக வேண்டும். இந்த விஷயங்களை நன்றாக புத்தியில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த சாஸ்திரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் படிக்க முடியும். இந்த ஞானத்தை பாபா தான் கொடுக்கின்றார். பிறகு சாஸ்திரங்கள் படிக்க வேண்டியதே இல்லை. பாபாவிடம் கேட்டு தாரணை செய்ய வேண்டும். நம்பர்ஒன் நினைவு யாத்திரையாகும். அதன் மூலமாகத்தான் பவித்திரமாக மாற முடியும். உலக வரலாறு புவியியலை யார் வேண்டுமானாலும் புரிய வைக்க முடியாது. யாத்திரையில் மிகவும் அரை குறையாக இருக்கின்றனர். யாத்திரையில் தான் தடைகள் ஏற்படுகிறது. ஞானம் மிகவும் எளிதாக இருக்கிறது.

இது நாடகத்தின் சக்கரம் என பாபா புரிய வைக்கிறார். அதில் நான்கு பாகங்கள் சமமாக உள்ளன. லட்சக்கணக்கான வருடங்கள் என்றால் மனிதர்கள் எவ்வளவு அதிகரித்து இருப்பார்கள். பிறப்பு வேண்டாம் என அரசாங்கம் கூட எவ்வளவோ சொல்கின்றது. இதுவோ பாபாவின் வேலையாகும். அவர்கள் அனைவரும் உலகீய யுக்திகளைக் (வழிகளை) கண்டுபிடித்திருக்கிறார்கள். பாபாவினுடையது ஆன்மீக யுக்தியாகும். நான் பல தர்மங்களை அழித்து ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறேன் என பாபா கூறுகிறார். சத்யுகத்தில் ஒரு வழி மட்டுமே இருக்கும். இங்கே இருக்க முடியாது. தங்களை சகோதர சகோரர் என யாரும் புரிந்துக் கொள்வதில்லை. பாபா குழந்தைகளுக்கு பல யுக்திகளைப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். தன்னிடம் தலைப்புகளின் பட்டியலை வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைப்பும் முதல் தரமானதாக இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் அதிகமாக விவாதிக்க வேண்டியதில்லை என பாபா கூறுகிறார். ஆத்மாக்களாகிய அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை, நான் பரமாத்மா என்னைத் தான் பகவான் என் கிறார்கள் என சிவபாபா கூறுகிறார் என்பதை மட்டும் கூற வேண்டும். வேறு எந்த மனிதரையும் பகவான் என்று கூற முடியாது. ஆன்மீக யாத்திரை மற்றும் உலகியல் யாத்திரை யினுடைய தலைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. உலகியல் யாத்திரைகள் மரண உலகத்தில் நடைபெறுகிறது. இது மரண உலகம் ஆகும். அது அமர உலகம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் கல்ப கல்பமாக பாபாவின் உதவியாளர் ஆகிறீர்கள். ஆகவே நீங்கள் ஆன்மீக இனிமையான குழந்தைகள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தான் புத்திசாலியாகி மற்றவர்களையும் மாற்ற வேண்டும். தன்னுடைய நடத்தை மிகவும் இராயலாகவும்,n இனிமையாகவும் இருக்க வேண்டும்.

2. ஆன்மீக யாத்திரையில் ஈடுபட வேண்டும். தங்களிடம் நல்ல தலைப்புகளை குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைப்பு பற்றியும் விசார் சாகர மந்தனம்(ஞான கடலை கடைதல்) செய்ய வேண்டும்.

வரதானம்:-

எந்த குழந்தைகள் சதா உள்முக சொரூபத்தில் நிலைத்திருக்கின்றார்களோ அதாவது உள்முக சொரூபத் திலிருந்து அந்தர்முகியாக இருக்கின்றார்களோ அவர்கள் ஒரு போதும் எந்த விஷயத்திலும் ஒன்றி விட மாட்டார்கள். பழைய உலகம், சம்மந்தம், செல்வம், பதார்த்தம் எது அல்ப காலம் மற்றும் வெளிப்பார்வைக்கு மட்டும் உள்ளதோ அதில் ஏமாறுவது இல்லை. உள்முக சொரூபத்தின் ஸ்திதியில் இருப்பதால் குப்தமாக இருக்கக்கூடிய சக்தி சொரூபம் பிரத்யட்சம் ஆகிவிடும் மற்றும் இந்த சொரூபத் தினால் பாபாவுடைய பிரத்யட்சதா ஏற்படும். இந்த மாதிரி உயர்ந்த செயல் செய்யக்கூடியவர் தான் உண்மையான அன்பானவர் ஆவார்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top