06 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

December 5, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! தானமாகக் கொடுத்த பொருளை ஒருபொழுதும் திரும்ப வாங்கக் கூடாது, திரும்பப் பெற்றால் ஆசீர்வாதத்திற்குப் பதிலாக சாபம் கிடைத்துவிடும்.

கேள்வி: -

எப்படிப்பட்ட நம்பிக்கை உறுதியானால் எந்த வித விரோதத்தையும் எதிர்கொள்ள முடியும்?

பதில்:-

பகவான் நமக்குக் கிடைத்து விட்டார்,அவரை நினைவு செய்து நமது விகர்மத்தை அழிக்க வேண்டும், உலக இராஜ்யத்தை அடையவேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டால், பிறகு அனைத்து எதிர்ப்புகளும் அழிந்து போய்விடும். எதிர்கொள்ளும் சக்தி வந்துவிடும். நம்பிக்கையில் குறையிருந்தால் குழம்பிப் போய்விடுகின்றார்கள். பிறகு ஞானத்தை விட்டுவிட்டு பக்தியில் ஈடுபட்டு விடுகிறார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உங்களை அடைந்த நாங்கள் உலகினை அடைந்துவிட்டோம்…

ஓம் சாந்தி! இந்த பாடலை யார் கேட்கின்றார்கள்? குழந்தைகள் கேட்கின்றார்கள், அவர்கள் அர்த்தத் தையும் புரிந்து கொள்கின்றார்கள்.. பிரஜைகளில் யார் கேட்கின்றார்களோ, அவர்களும் உலகத்திற்கு எஜமானராக ஆகின்றார்கள். எப்படி பாரதவாசிகள் அனைவரும், இது நமது பாரதம் என்று கூறுகின்றார்களோ அப்படி, அங்கும் இராஜாவைப்போலவே பிரஜைகள் அனைவரும் உலகத்தின் எஜமானர் என்று தன்னைப் புரிந்து கொள்வார்கள். எவ்வாறு ஐரோப்பியர்கள் வந்திருந்தபோது, நாங்களும் இந்துஸ்தானத்தின் எஜமானர் என்று கூறினார்கள். ஆனாலும் அந்த சமயத்தில் இந்தியர் களே நாங்கள் இந்துஸ்தானத்தின் எஜமானர் என்று கூற மாட்டார்கள். எனெனில் அவர்கள் அடிமை களாக இருந்தார்கள். இராஜ்யம் அனைத்தும் அவர்களின் கைகளில் இருந்தது. பிறகு நமது இராஜ்ய பாக்கியத்தை இராவணன் அபகரித்துவிட்டான். இப்பொழுது நமக்கு நமது இராஜ்யம் வேண்டும். இது மாற்றான் இராஜ்யமாகும். தூரதேசத்தில் இருப்பவர்களே என்று பாடப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் தனது இராஜ்யத்தை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் யாருக்காகவும் சண்டையிடு வதில்லை. தனக்காகத்தான் நீங்கள் அனைத்தையும் செய் கிறீர்கள். படை வீரர்கள் (இராணுவ) கூட தனது அதிபருக்காகவும், பிரதம மந்திரிக்காகவும் தான் சண்டையிடுகின்றார்கள். அவர்கள் பெரிய மனிதர்களாக ஆகின்றார்கள் அல்லவா! அவர்களுக்கு போதை நன்றாக உள்ளது, பிறகும் பாரதம் நமது என்று இப்பொழுதும் கூறுகின்றார்கள். ஆனால், இது நமது இராஜ்யம் இல்லை என்று பாரதவாசி களுக்குத் தெரியாது. இது இராவணனின் இராஜ்யமாகும், இதில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இராம இராஜ்யத்தில் இது மாற்றானின் இராஜ்யம் என்று சொல்வதில்லை. இப்பொழுது பாரதத்தில் இராவணனின் முழு இராஜ்யமும் நடக்கின்றது. இராமரின் இராஜ்யம் இருந்தது, தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, இப்பொழுது இல்லை. 5000 ஆண்டுகள் கழித்து நாம் இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். யாரிடமிருந்து? பரமாத்மா தந்தையிட மிருந்து. இராம் என்ற வார்த்தை கூறுவதனால் மக்கள் குழப்புகின்றார்கள், ஆகையால் எல்லையற்ற தந்தை என்ற சொல்வது சரி. தந்தை என்ற சொல் மிகவும் இனிமையானது. தந்தை என்பது தான் ஆஸ்தியை நினைவுப் படுத்துகின்றது. ஒரு தந்தையைத் தவிர மற்ற அனைத்தையும் மறந்துவிட வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். பாபா வந்து உங்களை ஆத்ம அபிமானி ஆக்குகின்றார். நாம் ஆத்மா, ஆத்மா எத்தனை சிறிய நுணுக்க மானது. அதில் தான் 84 ஜென்மங்களிற்கான பாகம் நிறைந்துள்ளது. இதை கல் புத்தி கொண்ட மனிதர்களால் புரிந்து கொள்ளவும், புரிய வைக்கவும் முடியாது. பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கின்றீர்கள், எத்தனை சகஜமாக உள்ளது. ஆனால் மாயை மறக்கடிக்கின்றது, எனவே, குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டியதாகின்றது. இதில் எந்த ஆயுதம், அணுகுண்டு களுக்கான விசயம் கிடையாது. வேறு எந்த பயிற்சிகளும் கற்க வேண்டியது இல்லை, வேறு எந்த சாஸ்திரத்தையும் படிக்கவேண்டியதில்லை. தந்தையை மட்டும் நினைவு செய்தால் போதும். பாபா என்ன கூறுகின்றாரோ அதை தாரணை செய்யவேண்டும். நாம் நமது இராஜ்ய பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி நாடகத்தில் நடிகர்கள் தனது பாகத்தை நடித்துவிட்டு பிறகு ஆடையை மாற்றிவிட்டு தனது வீட்டிற்குச் சென்றுவிடுகின்றனர், அதேபோன்று இப்பொழுது நாடகம் முடிவடையப் போகின்றது என்று உங்களின் புத்தியிலும் இருக்கின்றது. இப்பொழுது அசரீரியாகிச் செல்ல வேண்டும். நாம் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு பாகத்தை நடிக்கின்றோம். பாதிகல்பம் இராஜ்யம் செய்து, பிறகு மறுபாதி கல்பம் அடிமையாகின்றோம். குழந்தை களுக்கு எந்த அதிகமான கஷ்டத்தையும் கொடுப்பதில்லை. புத்தியில் நினைவு மட்டும் இருக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு இதை மறக்காமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்பொழுது நாடகம் முடிவடையப் போகின்றது. இன்னும் கொஞ்சம் நாட்களே உள்ளன, நாம் போகவேண்டும். இப்படியெல்லாம் தன்னிடம் பேசிப்பேசி நீங்கள் பாவனமாகி திரும்பச் சென்றுவிடுவீர்கள். நான் பாபாவை எவ்வளவு நினைக்கின்றேன் என்று ஒவ்வொரு குழந்தையும் அறிந்து கொள்ளமுடியும். சார்ட் எழுதினாலும், எழுதவில்லை என்றாலும் புத்தியில் இருக்கின்றதல்லவா! முழுநாளும் நாம் என்னென்ன செய்தோம்? எப்படி வியாபாரிகள் தங்களது கணக்குகளை இரவில் சரிகின்றார்கள். இதுவும் ஒரு வியாபாரம் தான். இரவில் தூங்கும் சமயத்தில் தந்தையை எவ்வளவு நினைவு செய்தேன்? என்று குழந்தைகள் சோதனை செய்கின்றனர்.. எத்தனை பேருக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்தேன்? யார் புத்திசா-யாக இருக்கின்றார்களோ அவர்களின் தொழில் நன்றாக நடக்கின்றது. முட்டாளாக இருந்தால் தொழிலும் அப்படித்தான் நடக்கும். இது தனது வருமானத்தை ஈட்டுவதாகும். என்னை நினைவு செய்யுங்கள், சக்கரத்தை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார், பிறகு சக்கரவர்த்தி இராஜாவாக ஆகிவிடுவீர்கள். இதில் அதிகமான ஆசை இருக்கக் கூடாது. கிராமங்களில் இருப்பவர்களுக்கு ஆசை குறை வாக இருக்கின்றது, பணக்காரர்களுக்கு அதிகமாக இருக்கின்றது. அவர்கள் தங்களது ஏழ்மை யிலும் குஷியாக இருக்கின்றார்கள். காய்ந்த ரொட்டியை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுவிடு கின்றது. பணக்காரர்களிடம் ஆசை அதிகமாக இருக்கிறது. தாய் தந்தைக்கும் கூட தொல்லை கொடுத்து விடுகின்றார்கள். பாபா அனுபவியாக உள்ளார். ஏழைகளின் மீது இரக்கம் ஏற்படுகின்றது. பணக்காரர்களே ஞானம் கேட்கின்றார்கள் என்றால், நாமும் கேட்போம் என்று ஏழைகள் யோசிப்பார்கள். சித்திரங்கள் பாபா அதிகமாக உருவாக்க வைத்துள்ளார். சிலர், எங்களுக்கு சேவை வேண்டும் என்று கூறுகின்றார்கள். முத-ல் நீங்கள் புத்திசா-யாக ஆகுங்கள், பிறகு சேவைக்குச் செல்லுங்கள், ஏனெனில், பக்தி தற்சமயம் மிகவும் அதிகமாக உள்ளது என்று பாபா கூறுகின்றார். ஒரு பக்கம் புரியவையுங்கள். மறுபக்கம் குருக்களின் வேலை நடக்கின்றது. நீங்கள் பக்தி செய்யவில்லை எனில், எப்படி பலன் கிடைக்கும்? என்று அவர்கள் பயமுறுத்துகின்றார்கள். பக்தியால் பகவான் கிடைக்கின்றார். நமக்கு பகவான் கிடைத்துவிட்டார் என்ற முழுமையான நம்பிக்கை ஏற்படவேண்டும். என்னை நினைவு செய்யுங்கள், உங்களது விகர்மங்கள் அழிந்துவிடும், என்று தந்தை நமக்குக் கூறுகின்றார். எப்பொழுது இதில் உறுதியான நம்பிக்கை ஏற்படுகின்றதோ, அப்பொழுதே எதையும் எதிர்கொள்ள முடியும். உங்களுக்குதான் எதிர்ப்பு கள் உள்ளன. நீங்கள் ஒன்று கூறுகின்றீர்கள், அவர்கள் மற்றொன்றை கூறுகின்றார்கள். உலகத்தில் அனேக மடம், ஆசிரமங்கள் உள்ளன, அங்கு சென்று மனிதர்கள் ஏதாவது கேட்டு வருகின்றார்கள். கீதைக்குக் கூட விதவிதமான அர்த்தத்தைக் கூறுகின்றார்கள், மனிதர்கள் மாட்டிக்கொள் கின்றார்கள். ஒருபொழுதும் சன்னியாசிகள், கிரகஸ்திகளுக்கு, விகாரத்தில் செல்லாதீர்கள் என்று கூறுவதில்லை. ஒருவேளை அவர்கள் நிர்விகாரியாக ஆகுங்கள் என்று கூறினாலும் கூட என்னவாகும்? நோக்கம் மற்றும் இலட்சியம் என்று எதுவும் கிடையாது. தலைகீழான வழிகளைக் கூறுபவர்கள் உலகில் அதிகம் உள்ளனர். சத்தியமான வழிகளைக் கூறுபவர்கள் மிகவும் குறைவு. அவர்கள் மீதும் மாயாவின் போர் அதிகமாக ஏற்படுகின்றது. தூய்மை ஆகவேண்டும் என்று உள்ளம் கூறினாலும், மாயா புத்தியை சுற்றவைத்துக் கொண்டே யிருக்கும். மிகவும் தீய எண்ணங்களை வரவழைத்துக் கொண்டே யிருக்கும். மாயாவின் சண்டை அதிகமாக உள்ளது. போகப்போக புயல் அதிகமாக வருகின்றது. ஏதேனும் விகாரத்தின் பூதம் உள்ளே இருந்தால் உள்ளத்தை அரித்துக்கொண்டேயிருக்கும். யாரிட மேனும் கோபத்தை தானமாகக் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு, தான் கோபப் பட்டால், நீங்களே தான் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், பிறகு எங்களுக்கு எப்படி கூறுகிறீர்கள்? என்று அவர்கள் கேட்பார்கள். எனவே கோபத்தையும் விட்டொழிக்க வேண்டியதிருக்கின்றது. கோபத்தை யாரும் மறைத்து வைக்க முடியாது. கோபத்தில் சப்தம் அதிகமாக ஏற்படுகிறது. தங்களுக்குள் சண்டையிடு கின்றனர், ஒருவர் மற்றவர்களை நிந்திக் கின்றார்கள். கோபம் என்ற பூதம் வெளியேறுவதே இல்லை என்பதை பாபா பார்க்கின்றார். சிலர் இங்கு பாபாவிற்கு முன் இருக்கும் பொழுதே கோபப்படு கின்றார்கள். அனேகரிடம் கோபம் என்ற பூதம் வந்துவிடு கின்றது, அது மிகவும் மோசமானதாகும். தொல்லை தருகின்றார்கள். பிறகு பாபா மிகவும் அன்போடு புரிய வைக்கின்றார். ஒருவேளை பெயரை அவப்பெயர் ஆக்கிவிட்டால், பிறகு பதவியையும் தானே குறைத்துக் கொள்கின்றனர். நீங்கள் 5 விகாரங்களை தானமாகக் கொடுத்துவிட்ட பிறகு ஏன் திரும்பப் பெறுகிறீர்கள்? என்பதை புரியவைக்க வேண்டும். ஒருவேளை கோபப்பட்டுவிட்டால், கிரகணம் நீங்காது. பிறகு அது விருத்தி அடைந்து விடுகிறது. தந்தையின் ஆசீர்வாதத்திற்குப் பதில் சாபம் கிடைத்துவிடுகின்றது, ஏனெனில், தந்தையுடன் தர்மராஜரும் உள்ளார். இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. கோபப்படுவதும் பாவம் ஆகும், யாரிடம் 5 விகாரங்கள் உள்ளனவோ, அவர்கள் பாவ ஆத்மா என்று அழைக்கப்படுகின்றனர். சத்யுகத்தில் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள் ஆவார்கள். அங்கு யாரும் பாவம் செய்வதில்லை. இப்பொழுது பல பிறவிகளின் பாவங்களின் சுமை தலைமீது அதிகமாக உள்ளது. முத-ல் யோக பலத்தால் அதை நீக்கவேண்டும். மாயா மிகவும் தீயதாகும். ஆசை என்பது அனேகபேரிடம் உள்ளது. துணி, காலணி மற்றும் செல்லாத காசுக்கான ஆசை இருக்கின்றது, எனவே பொய் பேசிக்கொண்டே இருக்கின்றனர். இவையெல்லாம் ஆசையின் அடையாளங்களாகும். இங்கு எல்லாம் கிடைக்கின்றது. வெளியில் ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சனைகள் உள்ளன. தொடர்பும் மிகவும் தீயதாக உள்ளது. கணவர் பிராமணர் என்றால், மனைவி சூத்திரராக இருக்கிறார். மனைவி பிராமணர் என்றால், கணவர் சூத்திரராக இருக்கிறார். ஒரே வீட்டிலேயே அன்னமும், நாரையும் இருந்தால் மிகவும் பிரச்சனைகள் இருக்கும். தன்னை சாந்தியாக வைத்துக்கொள்ள யுக்தியைக் கையாள வேண்டியது உள்ளது. வீடுவாசலை விடுவதற்கும் பாபா அனுமதிப்பதில்லை. குழந்தை குட்டிகளுடன் போய் இருக்க வசதியான அனேக ஆசிரமங்கள் உள்ளன. பிறகு பிரச்சனைகள் அனைத்து இடங்களிலும் இருக்கும். அமைதி எங்கும் இல்லை. சத்தியத்திலும் சத்தியமான அமைதி, சுகம், தூய்மையானது 21 பிறவிகளுக்கு குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப் பட்ட வழியை வேறு யாரும் கொடுக்கமுடியாது.

நான் எவ்வளவு தூரமான தேசத்தி-ருந்து சேவை செய்ய வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். நீங்களும் சேவை செய்யவேண்டும். கண்காட்சி மற்றும் விழாக்களில் அதிகம் புரிந்து கொள்ளமுடியாது. கவர்னர் திறப்புவிழா செய்கின்றார், ஆனாலும், இவர் களுக்கு பரமாத்மா பிரம்மா மூலம் கற்பிக்கின்றார், இதன் மூலம் உலக ஆஸ்தி கிடைக்கின்றது, என்பதெல்லாம் புத்தியில் வருவதில்லை. நன்றாக உள்ளது என்று மட்டும் கூறுகிறார்கள். தாய்மார்கள் நல்ல காரியத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள், சிரேஷ்டமானவர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். கீதையை பகவான் கூறினார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதுகின்றார்கள், ஆனால் புத்தியில் தங்குவ தில்லை, மற்றும் அதைப் புரிந்து கொள்ள முயற்சியும் செய்வதில்லை. என்னை நினைவு செய்தால் நீங்கள் இந்த இலட்சுமி நாராயணர் ஆவீர்கள் என்பதை சிவபாபா பிரம்மா மூலம் கூறுகின்றார் என்பது உங்களின் புத்தியில் உள்ளது. இந்த செய்தியை அனைவருக்கும் கூறவேண்டும். நீங்கள் இறை தூதருடைய குழந்தைகள், மற்ற யாரெல்லாம் வருகின்றார்களோ அவர்கள், தர்ம ஸ்தாபனை செய்பவர்கள் ஆவர். பாபா சொர்க்கம் என்ற புது உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்ற இந்தச் செய்தியை நீங்கள் அனைவருக்கும் கூறுங்கள். நீங்கள் என்னை நினைவு செய்தால் மற்றும் தூய்மையாக இருந்தால், நீங்களும் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள் என்று பாபா கூறுகின்றார். அடிக்கடி இந்த எண்ணம் ஓட வேண்டும். பக்குவப்படாத (கச்சா) நிலையிருப்பதன் காரணத்தால், வேலைகளில் போகும் போது அனைத்தும் மறந்து போகின்றது. பிறகு, யார் சிறிது மகாவாக்கியங்களை கேட்கின்றார் களோ, அது வீணாவதில்லை. ஒவ்வொரு இரத்தினமும் குறைந்ததில்லை. ஒரு இரத்தினம் கூட சொர்க்கத்தின் எஜமானர் ஆக்க முடியும். பாரதம் நமது உயர்ந்த தேசம் என்று பாடு கின்றார்கள். நம் பாரதம் சொர்க்கமாக இருந்தது, இப்பொழுது நரகமாகி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். மனதால் என்னை நினைவு செய்யுங்கள், விகர்மம் வினாசம் ஆகிவிடும் என்று பாபா மீண்டும் கூறுகின்றார். பிரஜைகள் அனேகம் பேர் உருவாகிக்கொண்டிருக் கிறார்கள், முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. சென்டர் திறந்து கொண்டே இருக்கின்றார்கள். கிராமங்களுக்குச் சென்று சேவை செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அனேக கிராமங்களில் ஒன்றாக இணைந்து வகுப்புகள் எடுக்கின்றார்கள். பிறகு பாபாவிற்குக் கடிதம் எழுதுகின்றார்கள்.

குழந்தைகளாகிய உங்களின் வேலையே பிராமண தர்மத்தை வளர்க்கவேண்டும், அப்பொழுதே அனைத்து மனிதர்களும் தேவதைகளாக ஆவார்கள். இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற சத்சங்களில் போய் மாட்டிக்கொள்ளமாட்டார்கள். இங்கு முக்கியமான விசயமே தூய்மை ஆகும். இந்தவிசயத்தில் தான் தந்தை மகனுக்கும், மனைவி- கணவனுக் கும், கணவன் மனைவிக்கும் பகைவர் ஆகிவிடுகின்றார்கள். இவர்கள் என்ன செய் கின்றார்கள்? ஏன் இப்படி ஏற்படுகின்றது? என்று அரசாங்கம் கூட கூறுகின்றது. ஆனால் தர்மத்தில் எந்த தலையீடும் செய்யமுடியாது. சுயராஜ்யம் ஸ்தாபனை ஆகியே தீரும். முன்பு நடந்த சண்டைக்கும் இதற்கும் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. முத-ல் குண்டுகள் போன்றவை கிடையாது. நமது இராஜ்யத்தில் சண்டைகளின் பெயர் அடையாளம் கூட கிடையாது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகம்-திரேதாயுகம் சுகம், துவாபர யுகம்-க-யுகம் துக்கம். புது உலகம் மற்றும் பழைய உலகம். உலகம் ஒன்று தான், ஆனால் புதிது மற்றும் பழையதாகின்றது. இப்பொழுது பழைய உலகம் அழிந்து புதியது வரப்போகிறது. இந்த பழைய உலகம் எந்த வேலைக்கும் உதவாத போது புது உலகம் தேவை. டெல்-யில் எத்தனை முறை புதிய கட்டிடங்கள் உருவாகியிருக்கும், யாரெல்லாம் (பதவியில்) வருகின்றார்களோ அவர்கள், தனது நினைவுச் சின்னத்திற்காக இடித்து உடைத்து பிறகு புதிதாக்குகின்றார்கள். எப்பொழுது பெரிய சண்டை ஏற்படுமோ அப்பொழுது இந்த அனைத்தும் தரைமட்டமாக ஆகிவிடும். பிறகு புது உலகில் புது மாளிகைகள் உருவாக்கு வோம். பிறகு யார் எவ்வளவு படிக்கின்றார்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி அடைவார்கள். சிலர் நன்றாகப் படிக்கின்றார்கள், சிலர் குறைவாகப் படிக்கின்றார்கள். இது நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.

நாம் இப்பொழுது 84 பிறவிகள் எடுத்து முடித்து விட்டோம், இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை குழந்தைகள் பக்காவாக நினைவில் கொள்ளவேண்டும். இந்தப் பழைய உடலை விட்டுவிட்டு நாம் நமது வீட்டிற்குச் செல்வோம், அப்படிப்பட்ட பக்காவான நிலை ஏற்பட்டுவிட்டால் பிறகு என்ன தேவை? அப்படிப்பட்ட நிலையில் யாரேனும் சரீரம் விட்டால், அவர்கள் மிக உயர்ந்த குலத்தில் பிறவி எடுப்பார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு, ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தனது வருமானத்தைச் சேமிப்பதற்காக தந்தை மற்றும் சக்கரத்தை நினைவு செய்து கொண்டே இருக்கவேண்டும். மாயாவின் சக்கரத்தில் ஒருபொழுதும் வரகூடாது.அளவுக்கு அதிகமான(டூ மச்) ஆசை வைக்க வேண்டாம்.

2. மனிதரை தேவதையாக்க தனது பிராமண தர்மத்தை வளர்க்கவேண்டும். கிராமம் கிராமமாகச் சென்று சேவை செய்யவேண்டும்.

வரதானம்:-

தன்னை எப்பொழுது வெற்றி இரத்தினம் எனப்புரிந்துக் கொண்டு ஒவ்வொரு எண்ணம் மற்றும் செயலை செய்தீர்கள் என்றால் ஒருபொழுதும் தோல்வி அடைய முடியாது. மாஸ்டர் சர்வசக்திவான் ஒருபொழுதும் தோல்வி பெற முடியாது. ஒருவேளை அடிக்கடி தோல்வி ஏற்படுகிறது என்றால் தர்ம ராஜரரின் அடி வாங்க வேண்டியிருக்கும். மேலும் தோல்வி அடையக் கூடியவர்களுக்கு எதிர்காலத் தில் தோல்வி ஏற்படும். துவாபர் யுகத்திலிருந்து பல உருவ சிலைகளுக்கு பூ மாலை அணிய வேண்டியிருக்கும், ஆகையால் தோல்வி அடைவதற்கு பதிலாக பலி ஆகிவிடுங்கள், தன்னை சம்பூரண சொரூபத்தை தாரணை செய்வதற்கான உறுதிமொழி செய்தீர்கள் என்றால் வெற்றியாளர் ஆகிவிடலாம்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top