04 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

December 3, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! தேக அபிமானம் உங்களை மிகவும் துக்கமானவர்களாக ஆக்குகிறது, ஆகையால் ஆத்ம அபிமானியாக ஆகுங்கள், ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் தான் பாவங்களின் சுமைகள் அழியும்.

கேள்வி: -

சத்யுகத்தில் செல்வந்தர் பதவி எதன் ஆதாரத்தில் பிராப்தியாக கிடைக்கும்?

பதில்:-

ஞான தாரணையின் ஆதாரத்தில் செல்வந்தர்களாக ஆவீர்கள். யார், எந்த அளவிற்கு ஞான செல்வத்தை தாரணை செய்து, தானம் செய்கிறார்களோ அந்த அளவிற்கு அவர் செல்வந்தர் என்ற பதவி அடைவார், சதா செல்வந்தராக ஆவார். படிப்பு படிக்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும். மற்றபடி உலக மகாராஜா ஆவதற்காக மிக ராயலான (உயர்வான) சேவை செய்ய வேண்டும். அனைத்து குறைகளையும் நீக்கி விட வேண்டும். முழுமையாக ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். மிக தைரியமாக மற்றும் கம்பீரமாக தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஏ மனிதர்களே! பொறுமையாக இருங்கள் …..

ஓம்சாந்தி. இதை கூறியது யார்? தந்தை குழந்தைகளுக்கு கூறியிருக்கின்றார், பொறுமை யாக இருங்கள். முழு உலகிற்கும் கூறவில்லை. அனைவரும் குழந்தைகள் தான், ஆனால் அனைவரும் அமரவில்லை. இந்த துக்கதாமம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தை கள் மட்டுமே அறிவீர்கள். சுகதாமத்திற்காக நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் அல்லது ஸ்ரீமத் படி நடந்து கொண்டி ருக்கிறோம். குழந்தைகளுக்கு பொறுமையை ஏற்படுத்துகின்றார். உண்மையில் முழு உலகிற்கும் குப்தமான முறையில் பொறுமை கிடைத்துக் கொண்டி ருக்கிறது. நாம் எதிரில் கேட்கிறோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அனைவரும் கேட்பது கிடையாது. அவர் எல்லையற்ற தந்தை, எல்லை யற்ற துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கக் கூடியவர். துக்கத்தை நீக்கி சுகத்திற்கான வழி கூறுகின்றார். நீங்கள் சுகமாக இருக்கும் போது துக்கத்தின் பெயர் இருக்கவே முடியாது. சுகமான உலகம் சத்யுகம் என்றும், துக்கமான உலகம் கலியுகம் என்றும் கூறப்படுகிறது. இதையும் குழந்தைகள் மட்டுமே அறிவீர்கள். சத்யுகத்தில் முழு சுகம் இருக்கிறது, அதேபோல 16 கலைகள் நிறைந்து இருப்பீர்கள். எவ்வாறு சந்திரனும் 16 கலைகள் நிறைந்து இருக்கும், பிறகு கலைகள் குறைந்து குறைந்து எவ்வளவு சிறியதாக ஆகி விடுகிறது! அதாவது காரிருள் ஏற்பட்டு விடுகிறது. 16 கலைகளுடன் இருக்கும் போது முழு சுகம் இருக்கும். கலியுகத்தில் 16 கலைகள் முழுமையாக இல்லையெனும் போது துக்கம் இருக்கும். இந்த முழு உலகிற்கும் மாயை என்ற கிரகணம் பிடித்து விடுகிறது. ஆகையால் இப்போது உங்களிடம் இருக்கக் கூடிய தேக அபிமானத்தை முதலில் விட்டு விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த தேக அபிமானம் உங்களுக்கு மிகுந்த துக்கம் கொடுக்கிறது. ஆத்ம அபிமானியாக இருந்தால் தான் தந்தையை நினைவு செய்ய முடியும். தேக அபிமானத்தில் இருக்கும் போது தந்தையை நினைவு செய்ய முடியாது. இது அரைக் கல்பத்திற்கான தேக அபிமானமாகும். இந்த கடைசிப் பிறவியில் ஆத்ம அபிமானியாக ஆவதன் மூலம் ஒன்று பாவங்களின் சுமைகள் அழிந்து விடும், பிறகு 16 கலைகள் சம்பூர்ண சதோ பிரதானமாக ஆவீர்கள். பலர் தேக அபிமானத்தின் விசயத்தையும் புரிந்து கொள்வது கிடையாது. தேக அபிமானம் தான் மனிதர்களை துக்கமானவர்களாக ஆக்குகிறது. பிறகு தான் மற்ற விகாரங்கள். ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் இந்த அனைத்து விகாரங்களும் நீங்கிக் கொண்டே செல்லும். இல்லையெனில் நீக்குவது கடினமாகி விடும். தேக அபிமானத்தின் பழக்கம் உறுதியாக இருப்பதால் தன்னை தேஹி அபிமானி ஆத்மா என்று புரிந்து கொள்வதே கிடையாது. இதில் அனைத்து விகாரங்களையும் தானம் செய்ய வேண்டியிருக் கிறது. முதன் முதலில் தேக அபிமானத்தை விட வேண்டும். காமம், கோபம் போன்ற அனைத்தும் பிறகு தான் வருகின்றன. அவர் உங்களது தந்தை ஆவார். தேக அபிமானத்தின் காரணத்தினால் லௌகீகத் தந்தையைத் தான் தந்தை என்று புரிந்து வந்தீர்கள். நான் தூய்மை ஆவது எப்படி? என்பது தான் இப்போது முக்கிய விசயமாகும். தூய்மை இல்லாத உலகில் அனை வரும் தூய்மை யற்றவர்களாக இருக்கின்றனர், தூய்மையாக யாரும் இருக்க முடியாது. ஒரே ஒரு தந்தை தான் அனைவரையும் தூய்மைபடுத்தி குஷி குஷியாக திரும்பி அழைத்துச் செல்கிறார்.

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு பற்றிய சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. உயிருடன் இருந்து கொண்டே இறக்க வேண்டும். தேக அபிமானத்தை விடுவது என்றால் இறப்பதாகும். நான் ஆத்மா, தந்தையை நினைவு செய்து தூய்மை இல்லா நிலையிலிருந்து தூய்மை ஆகிவிட வேண்டும். தூய்மை ஆவதற்கான இந்த யுக்தியை பாபா தான் புரிய வைத்திருந்தார். இப்போது மீண்டும் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். பிறகு கல்ப கல்பத்திற்கும் புரிய வைப்பார். உலகில் வேறு யாரும் புரிய வைக்க முடியாது. முக்கியமான விசயம் சிவனை நினைவு செய்வதாகும். அதுவும் கூட இங்கு வந்து பி.கு மூலம் கேட்கும் போது தான், ஏனெனில் தாத்தாவின் ஆஸ்தியை அடைய வேண்டும். ஆக தந்தை (பிரம்மா பாபா) அவசியம் தேவை, அவர் மூலம் அடைய வேண்டும். சாகாரத்தின் மூலம் அவசியம் ஆலோசனைகளைப் பெற வேண்டும். நான் சிவபாபாவை நினைவு செய்வேன், பிரம்மாவை விட்டு விடுவேன் என்று பல குழந்தைகள் நினைக்கின்றனர். ஆனால் சிவபாபா கூறுவதை எப்படி கேட்பீர்கள்? எனக்கு பிரம்மா பாபாவிடம் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறுகின்றனர். நல்லது, நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு சிவ பாபாவை நினைவு செய்யுங்கள். வீட்டிற்கு சென்று அமர்ந்து விடுங்கள். ஆனால் சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானத்தை அடைகிறீர்கள், அதை எப்படி கேட்பீர்கள்? இதை புரிந்து கொள்ளா மல் நினைவு மட்டும் எப்படி செய்ய முடியும்? ஞானம் இவர் மூலம் தான் அடைய வேண்டும் அல்லவா! பிறகு ஒருபோதும் ஞானம் அடைய முடியாது. தினமும் புதுப் புது விசயங்கள் தந்தையின் மூலம் அடைகிறோம். பிரம்மா மற்றும் பிரம்மா குமாரிகள் இன்றி எப்படி புரிந்து கொள்ள முடியும்? இவை அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் அமர்ந்த படியே கர்மாதீத நிலை அடைவதற்கான முயற்சியை யார் செய்கிறார்களோ அவர்கள் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். ஜீவன் முக்திக்குச் செல்ல முடியாது. ஞான செல்வத்தை தாரணை செய்து மற்றும் செய்விக்கும் போது செல்வந்தர்களாக ஆவீர்கள். இல்லையெனில் சதா செல்வந்தர் களாக எப்படி ஆவீர்கள்? முரளியையும் அவசியம் ஆதாரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். படிப்பு படிக்க வேண்டும் அல்லவா! முக்திக்குச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்துடன் பலர் வருவார்கள். நீங்கள் தந்தையை மட்டும் நினைவு செய்தால் சதோ பிரதானமாக, தூய்மையாக ஆகிவிடுவீர்கள் என்று நீங்கள் அனைத்து மனிதர்களுக்கும் புரிய வைக்கிறீர்கள். பிறகு ஞான செல்வம் அடையும் போது தான் சத்யுகத்தில் செல்வந்தர்களாக ஆவீர்கள். இல்லையெனில் முக்திக்கு சென்று பிறகு பக்தி மார்க்கத்திற்கான நேரத்தில் வந்து பக்தி செய்வீர்கள். யாருக்கும் நன்மை செய்ய முடியாது, ஏனெனில் மனிதன் தேவதை ஆவதற்கு அவசியம் ஞானம் தேவை. ஞானம் கேட்டு பிறகு கூறவும் வேண்டும். கண்காட்சிகளில் பாருங்கள் புரிய வைக்க எவ்வளவு மூளையை செலவழிக்க வேண்டியிருக்கிறது! இருப்பினும் யாருடைய புத்தியிலும் அமருவது கிடையாது. ஆத்மா எவ்வளவு சிறிய பிந்துவாக இருக்கிறது! ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவர்களுக்கான பாகம் கிடைத்திருக்கிறது. இதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர் கள். அனைத்து மனிதர்களும் நடிகர்கள் ஆவர். இவை அனைத்தும் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட்டு ஆகும். பழைய உலகமும் விநாசம் ஆக வேண்டும். இராமரும் சென்று விட்டார், இராவணனும் சென்று விட்டான்……. என்று பாடப் பட்டிருக் கிறது. யார் சென்றாலும் குழந்தைகளுக்கு துக்கம் ஏற்படவே முடியாது. இது ஏற்கெனவே உருவாக்கப் பட்ட நாடகம், அனைத்தும் விநாசம் ஆகியே தீர வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசர், அரசி, சாது, சந்நியாசி அனைவரும் இறந்து விடுவர், அவர்களது சாம்பலை எடுத்துக் கொள்வார்கள். இதுவும் தனது பெயரை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக செய்கின்றனர், இதில் எந்த நன்மையும் கிடையாது. அவரது ஆத்மாவிற்கு எந்த சுகமும் கிடைப்பது கிடையாது. மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் செய்கிறார்களோ அனைத்தும் அறியாமல் செய்கின்றனர். இப்போது தந்தை உங்களை எவ்வளவு புத்திசாலிகளாக ஆக்குகின்றார். அடிக்கடி வந்து இந்த சித்திரங்களைப் பார்க்க வேண்டும். ஆக பாபா நமக்கு கற்பித்து என்ன ஆக்கிக் கொண்டிருக்கின்றார்! ஆனால் அதிர்ஷ்டம் இல்லையெனில் நடைமுறைபடுத்த மாட்டார்கள். பாபா பல விசயங்களைப் புரிய வைக்கின்றார், அதை நடைமுறைபடுத்த வேண்டும். தந்தையின் குழந்தையாக ஆகி சேவை செய்வது கிடையாது. தந்தையோ கல்யாணகாரி ஆக இருக்கின்றார். சில குழந்தைகள் பலரை மேலும் தீங்கு செய்து கொண்டே இருக்கின்றனர். நன்மை செய்வதற்கான எண்ணம் உள்ளவர்களையும் கெடுத்து விடு கின்றனர். இவ்வாறு கேடான செயல்களையும் செய்கின்றனர். பூதங்கள் பிரவேசம் ஆகிவிடுகிறது அல்லவா! அதனால் தான் சத்குருவை நிந்திப்பவர்கள் நிலைத்திருக்க முடியாது என்றும் பாடப் பட்டிருக்கிறது. இதில் பாப்தாதா இருவரும் வந்து விடுகின்றனர். நிராகாரமானவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு என்ன சொல்ல முடியும்? பகவான் தான் துக்கம் கொடுக்கின்றார் …. என்று பக்தி மார்க்கத்தில் கூறிவிட்டனர். அஞ்ஞானத்தின் காரணத்தினால் தான் அவ்வாறு புரிந்திருந்தனர். அஞ்ஞானத்திற்கு வசமாகி தந்தையை எவ்வளவு நிந்தனை செய்தோம் என்பதை இப்போது குழந்தைகள் அறிவீர்கள். தமோபிர தானமானவர்களை சதோ பிரதான மானவர்களாக ஆக்கக் கூடியவர்கள் யாரும் கிடையாது, பதிலாக பரமாத்மா சர்வவியாபி என்று மேலும் தவறான வழி காண்பிக்கின்றனர். மனிதர்கள் எவ்வளவு குழப்பமடைந்து விடுகின்றனர்! அதனால் தான் பிரம்மாவின் உடலில் பரமாத்மா எப்படி வர முடியும்? என்று கேட்கின்றனர். பிறகு யாருடைய உடலில் வருவார்? கிருஷ்ணரின் உடலில் வருவாரா? பிறகு பிரம்மா குமார், குமாரியாக எப்படி ஆக முடியும்? அவர்கள் தெய்வீக குமார், குமாரி களாக ஆகிவிடுவர். பிராமணர்கள் அவசியம் பிரம்மா குமார் மற்றும் குமாரிகளாக இருப்பர். பிராமணர்களின்றி பாபா எதுவும் செய்ய முடியாது, ஆகையால் இவரது சித்திரம் அவசியம் காண்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த பிரம்மாவும் பிராமணன் ஆவார். பிரஜாபிதா பிரம்மா பாரதத்தில் தேவை. வீட்டில் அமர்ந்த படியே பலருக்கு பிரம்மாவின் சாட்சாத்காரம் நாளுக்கு நாள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். யாருக்கு வரவேண்டிய பாகம் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் ஓடி வருவார்கள். பகவான் நிச்சயம் ஏதாவது ரூபத்தில் இருப்பார் என்று பலர் நினைக்கின்றனர். பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் சாட்சாத்காரம் செய்விக்க முடியாது. சிவபாபா பிரம்மா வின் மூலம் தான் ஸ்தாபனை செய்கின்றார். ஞானம் கொடுக்கின்றார் மற்றும் பிராமண தர்மத்தையும் ஸ்தாபனை செய்கின்றார். பிராமண தர்மம் அவசியம் தேவை. அவர் உயர்ந்த திலும் உயர்ந்தவர். பிரஜாபிதா பிரம்மா மிகவும் உயர்ந்தவர் அல்லவா! அவரைத் தான் கடவுளுக்கு அடுத்தபடியானவர் என்று கூறுகிறோம். சூட்சும வதனத்தில் வேறு யாரும் கிடையாது. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை ஆகும், அவ்வளவு தான். பிறகு பிரம்மா தேவதையாக ஆகிவிடுவார். 84 பிறவிகளுக்குப் பிறகு மீண்டும் பிரம்மாவாக ஆகிவிடுவார். பிரம்மா, சரஸ்வதி பிறகு லெட்சுமி, நாராயணனாக ஆகின்றனர். ஞான ஞானேஸ்வரியாக இருப்பவர்கள் பிறகு இராஜ இராஜேஸ்வரியாக ஆகின்றனர். பிரம்மா விஷ்ணுவாக, விஷ்ணு பிரம்மாவாக எப்படி ஆகிறார் என்பது மிகவும் முதல் முக்கியமான கருத்தாகும். இதை நல்ல முறையில் புரிய வைக்க முடியும். இந்த ஞானம் ஒரு தந்தையின் மூலம் அடைகிறோம். நீங்கள் பிரம்மாவைப் பற்றி ஏன் குழப்பமடைகிறீர்கள்? என்று கண்காட்சிகளில் நீங்கள் நல்ல முறையில் புரிய வையுங்கள். இவ்வளவு பிராமண, பிராமணிகள் இருக்கின்றனர், அவசியம் முதலில் பிராமணர்களாக ஆகும் போது தான் விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக, தேவதைகளாக ஆக முடியும். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்பது மிகவும் பிரசித்தமாக இருக்கிறது. இப்போது இரவாகும். இவ்வாறு சித்திரங்களின் எதிரில் சென்று பயிற்சி செய்யுங்கள். யார் சேவை செய்வார்களோ அவர்களுக்கு சேவையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் வராது. சேவைக்காக ஓடிக் கொண்டே இருப்பார்கள். புத்தியில் ஞானச் சிந்தனை ஒடிக் கொண்டே இருக்கும், நல்ல முறையில் புத்தி நிறைந்திருக்க வேண்டும், அப்போது தான் ஆர்வம் பொங்கி வரும். சேவைக்காக ஒடிக் கொண்டே இருப்பர். ஞானம் இருக்கிறது, ஆனால் புரிய வைக்க முடியவில்லை என்று இருக்கவே முடியாது. பிறகு எதற்காக ஞானம் கற்கின்றீர்கள்? கற்றுக் கொண்டீர்கள் எனில் தானம் செய்ய வேண்டும். ஞான தானம் செய்யவில்லை, தனக்குச் சமம் ஆக்க முடியவில்லையெனில் எந்த நிலை பிராமணர்களாக இருக்கிறீர்கள்? மூன்றாம் நிலை ஆகிவிடுவீர்கள். முதல் தரமான பிராமணர் களின் வேலையே இது தான். பாபா தினமும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். சேவை மற்றும் டிஸ்சர்வீஸ் இது குழந்தைகளின் மூலம் தான் ஏற்படுகிறது. ஒருவேளை சேவை செய்யவில்லையெனில் அவசியம் டிஸ்சர்வீஸ் செய்து கொண்டிருப்பீர்கள். நல்ல நல்ல குழந்தைகள் எங்கு சென்றாலும் அவசியம் சேவையே செய்வர். எப்போது ஞானம் முழுமையாகி விடுகிறதோ பிறகு ஒப்பற்ற குழந்தைகளின் மூலம் எந்த தவறும் ஏற்படாது, அப்போது தான் மாலையின் மணியாக ஆவீர்கள். முக்கியமானது 8 மணிகளாகும். தேர்வும் மிகவும் பெரியது அல்லவா! பெரிய தேர்வுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் தேர்ச்சி பெறுவர். ஏனெனில் பிறகு அரசாங்கமும் வேலை கொடுக்க வேண்டி யிருக்கிறது. பாபாவும் உலகிற்கு எஜமானர்களாக ஆக்க வேண்டியிருக்கிறது, அதனால் தான் மிகக் குறைவானவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். பிரஜைகள் இலட்சக்கணக்கானவர்களாக ஆகிவிடுவர், அதனால் தான் மகாராஜா ஆவீர்களா? அல்லது செல்வந்த பிரஜைகளாக ஆவீர்களா? என்று பாபா கேட்பார். அல்லது ஏழைகளாக ஆவீர்களா? சொல்லுங்கள் என்ன ஆவீர்கள்? மகாராஜாக்களிடம் வேலைக்காரர்கள் பலர் இருப்பர். பிறகு அவர்களுக்கு சீதனமும் கொடுப்பர். முயற்சி செய்து நல்ல பதவி அடைய வேண்டும். அனைவரும் அழைக்கு மளவிற்கு புத்திசாலிகளாக ஆக வேண்டும். குறிப்பிட்டு சிலரைத் தான் அழைக் கின்றனர். இதை அறிவீர்கள் அல்லவா! மற்றபடி யாரிடம் இலட்சணம் இல்லையோ அவர் களை ஒருபோதும் யாரும் அழைக்கவே மாட்டார்கள். ஆனால் நான் மூன்றாம் நிலையில் இருக்கிறேன் என்ற சுயம் அறிந்து கொள்வது கிடையாது. சிலர் சேவாதாரிகளாக இருக் கின்றனர், இங்கு அங்கு என்று சேவையில் ஓடுகின்றனர். தொழிலைப் பற்றியும் சிந்திக்காமல் சேவைக்கு ஓடுகின்றனர். சிலர் எந்த தொழில் இல்லாவிட்டாலும் சேவை செய்வது கிடையாது, ஆர்வம் கிடையாது. அதிர்ஷ்டம் இல்லை அல்லது கிரஹச்சாரம் இருக்கிறது. சேவை அதிகம் இருக்கிறது. உழைப்பும் ஏற்படுகிறது. களைப்படைந்தும் விடுகின்றனர். புரிய வைத்து புரிய வைத்து தொண்டை வரண்டு விடுகிறது. இவ்வாறு மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கும் தொண்டை வரண்டு விடுகிறது. அதற்காக அவர்கள் நன்றாக சேவை செய்திருக்கிறார்கள் என்பது அர்த்தம் கிடையாது. நல்ல, ராயலான சேவை செய்பவர்கள் யார்? என்பதை பாபா அறிவார். ஆனால் சிலரிடத்தில் குறைகளும் இருக்கின்றன. பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்கின்றனர். பிறகு நல்ல அறிவுரைகள் கொடுத்து சீர்திருத்த வேண்டியிருக்கிறது. பெயர், உருவத்தில் ஒருபோதும் மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். ஆத்மா மிகச் சிறிய புள்ளியாக இருக்கிறது. தன்னை சிறு புள்ளி என்று புரிந்து கொண்டு பாபாவை நினைவு செய்வதில் அதிக உழைப்பு இருக்கிறது. சிவபாபா, நான் உங்களை அதிகம் நினைவு செய்கிறேன் என்று மேலோட்டமாக கூறிவிடுகிறீர்கள். ஆனால் புத்தியில் மிகச் சரியான முறையில் நினைவு இருக்க வேண்டும். மிக தைரியமாக அல்லது மிக ஆழமாக நினைவு செய்ய வேண்டும். இந்த முறையில் மிகக் குறைந்தவர்கள் தான் நினைவு செய்கின்றனர். இதல் அதிக உழைப்பு இருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) ஞான ரத்தினங்களினால் தனது புத்தி என்ற பையை நிறைத்துக் கொண்டு தானம் செய்ய வேண்டும். இதே தொழிலில் சுறுசுறுப்புடன் இருந்து முதல் தரமான பிராமணர்களாக ஆக வேண்டும்.

2) கல்யாணகாரி தந்தையின் குழந்தைகளாக இருக்கிறீர்கள், ஆகையால் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். மற்றவர்களது பாவனைகளைக் கெடுப்பது, தவறான அறிவுரைகளைக் கொடுப்பது போன்ற தீய காரியங்களை ஒருபோதும் செய்யக் கூடாது.

வரதானம்:-

சரீர நிர்வாகத்திற்காக பல சாதனங்களை தனதாக்குகின்றீர்கள் அவ்வாறு ஆன்மீக உயர்வுக்காகவும் சாதனங்களை தனதாக்குங்கள். இதற்காக சதா அகால மூர்த்தி என்ற ஸ்திதியில் நிலைத்திருப் பதற்காக பயிற்சி செய்யுங்கள். யார் தன்னை அகால மூர்த்தி ஆத்மா என்று புரிந்து கொண்டு நடக்கிறார் களோ அவர்கள் திடீர் மரணத்திலிருந்து, கெட்ட காலத்திலிருந்து மற்றும் அனைத்து பிரச்சனை களிலிருந்தும் தப்பித்து விடுவர். மன ரீதியான கவலைகள், மனரீதியான பிரச்சனை யிலிருந்து விடுபடுவதற்கான தன்னுடைய பழைய சரீர உணர்வை நீக்கிக்கொண்டே செல்லுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top