30 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 29, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! அதிகாலையில் எழுந்து பாபாவை நினைவு செய்வீர்களானால் சதோபிரதானம் ஆகி விடுவீர்கள். அமிர்தவேளை சமயம் மிக நல்லதாகும்.

கேள்வி: -

கட்டளைக்குக் கீழ்ப்படிகின்ற குழந்தைகளின் அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:-

பாபாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியக்கூடிய குழந்தைகள் உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான தந்தையின் மகாவாக்கியங்களைத் தலை மீது வைத்துக் (பணிவுடன் ஏற்று நடந்து) கொள்வார்கள். அதாவது தங்களின் வாழ்க்கையில் தாரணை செய்வார்கள். அவர்களின் நடத்தை மிகவும் ராயலாக (அரசருக்குகந்ததாக) இருக்கும். அவர்கள் மிகவும் பொறுமைசாலியாக இருப்பார்கள். அவர்களுக்கு உலகத்தின் எஜமான் தன்மையின் குப்த நஷô இருக்கும். கீழ்ப்படிதலான குழந்தைகள் தங்களின் எந்த ஒரு செயலாலும் பாப்தாதாவுக்கு அவமரியாதை (இன்சல்ட்) நேரும்படி செய்ய மாட்டார்கள். இன்சல்ட் செய்பவர்கள் அதாவது அவமரியாதை செய்யும் குழந்தைகள் சேவைக்கு மிகவும் குந்தகம் செய்கின்றனர். கீழ்ப்படிதலான குழந்தைகள் சதா தந்தையைப் பின்பற்றுவார்கள். ஒரு போதும் தலைகீழான காரியம் செய்ய மாட்டார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள்…

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாட்டின் இரண்டு வார்த்தைகள் கேட்டீர்கள். இப்போது குழந்தைகளோ இதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டனர், அதாவது தந்தை இங்கே இருக்கிறார். தந்தை அமர்ந்து சரியான விஷயத்தைச் சொல்கிறார். ஏனென்றால் மனிதர்கள் ஞானத்தைப் பற்றியோ ஈஸ்வரனோடு சந்திப்பதைப் பற்றியோ என்ன சொல்கிறார் களோ, அதெல்லாம் தவறாக உள்ளது. இப்போது பாடலின் சொற்களைக் கேட்டீர்கள் – ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள்….. ஆனால் ஆகாயம் என்பது சிம்மாசனமா என்ன? இது யாருக்கும் தெரியாது. பதீத-பாவனரோ வந்து தான் ஆக வேண்டும். சிலர் பகவான் இல்லை எனச் சொல்கின்றனர். சிலர் எல்லாமே பகவான் தான் எனச் சொல்கின்றனர். எதற்காக வருவார்? குழந்தைகள் நீங்கள், தந்தை வந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு இந்த பக்தி மார்க்கத்தின் மகிமைப் பாடல் முதலியவற்றைக் கேட்பது நன்றாக இருப்பதில்லை. பதீத-பாவனர் வந்து தம்முடைய அறிமுகம் கொடுத்து, படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்கிறார். மற்றப்படி உலகத்தில் யாரும் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இங்கேயும் எத்தனை வழி முறைகளைப் பின்பற்றும் மனிதர்கள்! உள்ளனர். மனிதர்கள் தூய்மை ஆவது என்பது முடியாத காரியம் எனச் சொல்கின்றனர். அதுவும் நிச்சயமாக எது வரை பகவான் வரவில்லையோ, அது வரை தூய்மையாக எப்படி ஆக முடியும்? பரமாத்மா தான் வந்து கற்றுத் தருகிறார், மேலும் தூண்டுதலும் தருகிறார்-இதில் பிராப்தி எவ்வளவு என்று நீங்கள் அறிவீர்கள், பாபா சொல்கிறார்-என்னுடையவர்களாக ஆகிவிட்டு ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் தண்டனை அடைய நேரிடும். எப்படி தந்தை சின்னக் குழந்தைகளின் நடத்தை சரியில்லாதிருப்பதைப் பார்க்கின்றனர் என்றால் அடி கொடுத்து விடுகின்றனர். இந்தத் தந்தை அடியோ கொடுப்பதில்லை. இதைப் புரிய வைக்க மட்டும் செய்கிறார் – இரத்தத்தினால் கூட உறுதிமொழி எழுதிக் கொடுக்கின்றனர். பிறகும் தோற்றுப் போகின்றனர். மனிதர்களுக்குத் தெரியவே இல்லை எனும் போது தூய்மையாவதால் என்ன கிடைக்கும்? தூய்மை அற்றவர்கள் என்று யார் சொல்லப் படுகிறார்கள்? பாபா புரிய வைக்கிறார்-யார் விகாரத்தில் செல்கின்றனரோ, அவர்கள் தூய்மை அற்றவர்கள் விகாரத்தை விடுவது முடியாதது என மனிதர்கள் நினைக்கின்றனர். அவர் களுக்குச் சொல்லுங்கள், தேவி-தேவதைகளோ சம்பூர்ண நிர்விகாரிகளாக இருந்தனர். சித்திரங்களைக் காட்ட வேண்டும். இது நிர்விகாரி உலகமாக இருந்தது இல்லையா? தூய்மையாக இருந்தனர் என்றால் பாரதம் எவ்வளவு செல்வம் மிகுந்த தேசமாக இருந்தது! சிவாலயமாக இருந்தது. விகாரமின்றி உலகம் எப்படி விருத்தி யாகும் என்ற கவலை மனிதர் களுக்கு உள்ளது. உலகம் மக்கள் தொகை அதிகமாகி விடக் கூடாது என்று அரசாங்கம் சங்கடத்தில் உள்ளது. பிறகும் கூட ஒவ்வொரு வருடமும் ஜனத்தொகை எவ்வளவு அதிகமாகிக் கொண்டே உள்ளது! குறைவதோ மிகவும் கடினம். இங்கே எல்லையற்ற தந்தை சொல்கிறார், நீங்கள் தூய்மை யானவர்களானால் உங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்கி விடுவேன். கிடைக்கும் வருமானம் மிகப் பெரியது. குழந்தைகள் அறிவார்கள், நிச்சயமாக மாயாஜீத் ஆவதன் மூலம் நாம் ஜெகத்ஜீத் ஆவோம். இராவணனை வெற்றி கொண்டு இராமராஜ்யத்தை அடைவோம். அங்கே இந்த விகாரங்கள் இருக்க முடியாது. அவற்றை நீங்கள் வெற்றி கொண்டு விட்டீர்கள் இல்லையா? இந்த விஷயங்களை யாரேனும் புரிந்து கொள்வது கடினம். விகாரம் இல்லாமல் உலகம் எப்படி நடை பெறும் எனக் கேட்கின்றனர். இப்படி-இப்படி யாராவது பேசுவார்களானால் இவர்கள் ஆதி சநாதன தர்மத்தினர் அல்ல எனப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கே போய் நீங்கள் சொற்பொழிவு செய்தாலும் சொல்லுங்கள் – பகவான் வாக்கு, பகவான் சொல்கிறார், காமம் மகாசத்ரு என்று. அதன் மீது வெற்றி பெறுவதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர் ஆவீர்கள். மிகவும் நேரடியாகவே புரிய வைக்கப் படுகின்றது. ஆனாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது புரிய வைப்பவர்களுக்கு புத்தி இல்லை. பாபாவோ புரிந்து கொள்கிறார், குழந்தைகள் ஒரு ரூபாயில் ஐந்தணா கிட்டதட்ட 3ல் 1 பங்கு அளவு கூடக் கற்றுக் கொள்ளவில்லை. அல்லது தாங்கள் முழு யோகி ஆகிவில்லை என்றால் சக்தி கிடைப்பதில்லை. நினைவினால் தான் சக்தி கிடைக்கிறது. பாபா சர்வசக்திவான் அத்தாரிட்டி இல்லையா? யோகம் (நினைவின் தொடர்பு) இருந்தால் சக்தியும் கிடைக்கும். யோகமோ அநேகக் குழந்தைகளுக்கு முற்றிலும் குறைவாக உள்ளது. உண்மை யையும் யாரும் எழுதுவதில்லை. நினைவின் சார்ட்டைக் குறித்து வைக்க வேண்டும் – அதுவும் கடினமாக உள்ளது. ஆசிரியரே சார்ட் வைப்பதில்லை எனும்போது மாணவர்கள் எப்படி வைப்பார்கள்? அநேக மாணவர்கள் (யோகத்தில்) நினைவு யாத்திரையில் மிகத் தீவிரமாக உள்ளனர். முக்கிய விஷயம் பாபாவை நினைவு செய்ய வேண்டும். யோகம் என்ற சொல் சாஸ்திரங் களினுடையது. மனிதர்கள் கேட்டுக் குழம்பிப் போகின்றனர். யோகம் கற்றுத் தாருங்கள் எனக் கேட்கின்றனர். அட, யோகம் ஒன்றும் கற்றுக் கொள்வதற்கானதல்ல. அதிகாலை எழுந்து தானாகவே (தந்தையை) நினைவு செய்ய வேண்டும். இதில் ஆசிரியரின் தேவை என்ன இருக்கிறது, அமர்ந்து கற்றுத் தருவதற்கு? அதனால் நினைவு என்ற சொல் சரியானது. யோகம் கற்றுக் கொள்கிற விஷயம் கிடையாது. இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. பாபா சொல்கிறார் – தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்வீர்களானால் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். அமிர்தவேளை நினைவு செய்வது நல்லது. பக்தியும் கூட அதிகாலை எழுந்து செய்கின்றனர். இவரும் கூட (பிரம்மா) சிவபாபாவை நினைவு செய்கிறார். எதற்காக நினைவு செய்கிறார்? ஏனென்றால் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் சிவனை நினைவு செய்கின்றனர் என்றாலும் கூட சிவனிடம் என்ன கிடைக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. இப்போது பாபா ஸ்ரீமத் தருகிறார், தனக்கு நன்மை செய்து கொள்வதற்காக – என்னை நினைவு செய்யுங்கள். நினைவினால் தான் சக்தி வரும். சக்தியினால் விகர்மங்கள் விநாசமாகும். ஞானத்தினால் விகர்மங்கள் விநாசமாகாது. ஞானத்தினால் பதவி கிடைக்கும். தூய்மை இல்லாமலிருந்து தூய்மையாவது நினைவினால் தான். அநேகக் குழந்தைகள் இதில் தோல்வி அடைகின்றனர். மிக நல்ல மகாரதிகள் 5 அணாவுக்குக் கூட நினைவு செய்வதில்லை. சிலரோ ஒரு பைசாவுக்குக் கூட நினைவு செய்வதில்லை. இதில் மிகுந்த முயற்சி உள்ளது. ஞானத்தையோ உடனே கற்றுக் கொள்கின்றனர். ஆனால் எப்போது துன்பம் நீங்குகிறதோ, அப்போது தான் நினைவில் இருப்பார்கள். அப்போது தான் ஜென்ம- ஜென் மாந்தரத்தின் விகர்மங்கள் விநாசமாகும். தந்தையை அழைக்கின்றனர் – வந்து எங்களை தூய்மையில்லாத நிலையிலிருந்து தூய்மை யாகுங்கள். தூய்மையாகவோ ஏராளமான பேர் ஆகின்றனர். ஆனால் யார் நல்லபடியாக நினைவில் உள்ளனரோ, அவர்கள் தான் உயர்ந்த ஆஸ்தி பெறுவார்கள். உங்களில் யார் பந்தனத்தில் சிக்கியுள்ளார்களோ அவர்கள் அதிகமாக நினைவு செய்கின்றனர். நினைவினால் தான் விகர்மங் கள் விநாசமாக முடியும். ஆக, யாராவது பவித்திரமாக இருப்பது முடியாத காரியம் எனச் சொல்வார்களானால் அவர்களிடம் பேசுவதே கூடாது. நிர்விகாரி பாரதம் இருந்ததென்றால் சதோபிரதானமாக இருந்தனர். ஆனால் பணக்காரர்களின் புத்தியில் இந்த ஞானம் பதிவதே கடினமாகும். ஏனென்றால் நினைவில் தான் கடின முயற்சி உள்ளது.

பாபா சொல்கிறார், இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே அதிலிருந்தும் விலகி இருங்கள். உண்மையில் விதிமுறைகள் மிகக் கடுமையானவை. நீங்கள் ஜென்ம-ஜென்மாந்தரமாகவோ பாவாத்மாக்களுக்கு தானம் கொடுத்து பாவாத்மா ஆகியே இருந்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் பாவாத்மாக்களுக்குப் பைசா கொடுக்க முடியாது. ஆனால் தாத்தாவின் ஆஸ்தி இருந்தால் கொடுத்தாக வேண்டியுள்ளது. அதனால் பாபா சொல்கிறார், முதலில் அனைத்து (லௌகிக) காரியங்களில் இருந்து விடுபட்டுப் பிறகு சமர்ப்பணம் ஆகி விடுங்கள். இப்படியும் கோடியில் சிலரே வெளிப்படுகின்றனர். மிகப் பெரிய குறிக்கோள் ஆகும். தந்தையைப் பின்பற்ற வேண்டும். நஷ்டோமோகா ஆவது (முழு பற்றற்ற நிலை அடைவது) ஒன்றும் சாதாரணமான விஷயமல்ல. மிகுந்த முயற்சி செய்ய வேண்டும். உலகத்தின் எஜமானர் ஆவதென்றால் பிராப்தி எவ்வளவு பெரியது! கல்ப-கல்பமாக யார் உலகத்தின் எஜமானர் ஆகியிருக்கின்றனரோ, அவர்கள் தான் மீண்டும் ஆவார்கள். டிராமாவின் ரகசியமும் கூட சிலருடைய புத்தியில் தான் பதிகின்றது. பணக்காரர்களோ எழுந்து நிற்பது (சமர்பணம்) கடினமாகும். ஏழைகளோ உடனே சொல்லி விடுகின்றனர் – பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை. பிறகு அவர்களுக்கு சேவையும் செய்ய வேண்டும். தூய்மை அடைவதற்கு நினைவும் கூட வேண்டும். இல்லையென்றால் அதிக தண்டனை பெற நேரிடும். தண்டனை பெற்றால் பதவியும் குறைந்ததாக ஆகி விடும். யார் நினைவு செய்வதில்லையோ, அவர்கள் தான் தண்டனை பெறுகின்றனர். ஞானம் எவ்வளவு தான் எடுத்துக் கொண்டாலும் சரி, அதனால் விகர்மங்கள் விநாசமாவதில்லை. தண்டனை பெற்றுப் பிறகு கொஞ்சம் பதவி பெறுவது என்பது ஆஸ்தி பெறுவதாக ஆகாது. தந்தையிடமோ முழு ஆஸ்தி பெறுவதற்காக தந்தைக்குக் கீழ்ப்படிதலானவராக ஆக வேண்டும். உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையின் மகாவாக்கியங்களைத் தலை மீது வைத்துக் கொள்ள (முக்கியத் துவம் தர) வேண்டும். கிருஷ்ணரின் ஆத்மாவும் கூட இச்சமயம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சுமி-நாராயணரின் அநேக ஜென்மங்களின் கடைசியில் நான் மீண்டும் அவர்களுக்கு ஞானம் கற்பித்து ஆஸ்தி கொடுக்கிறேன். உங்களிலும் கூட சிலர் இளவரசர்-இளவரசி ஆகக் கூடியவர்கள் இருப்பார் கள் இல்லையா? இராஜ குடும்பத்தினரின் நடத்தை மிகவும் பொறுமையுடன் கூடியதாக இருக்கும். குப்த நஷô இருக்கும். (பிரம்மா) பாபா எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்! இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது நானோ போய் உலக மகாராஜன் ஆகப் போகிறேன் என்பது அவருக்குத் தெரியும். இவரும் தூய்மை இல்லாம-ருந்தார். இவரோ சிவபாபாவின் ரதம். அதனால் இங்கே இவர் ஆசனத்தில் அருகில் அமர வேண்டி உள்ளது. இல்லை யென்றால் பாபா எங்கே அமர்வார்? இவரும் உங்களைப் போன்ற மாணவர் ஞானம் கற்கின்றார். அநேகக் குழந்தைகள் தந்தையை அறிந்து கொள்ளவில்லை. தந்தையுடன் கூடவே தர்மராஜரும் உள்ளார். பாபா சொல்கிறார், எனது ஆணையை ஏற்று நடக்கவில்லை, எனக்கு அவமரியாதை செய்தீர்கள் என்றால் தர்மராஜர் அதிக தண்டனை கொடுப்பார். நேரடியாக எனக்கோ என்னுடைய குழந்தைக்கோ அவமரியாதை செய்கிறீர்கள். பாபாவின் ஒரே ஒரு தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தை (பிரம்மா). அன்போ உள்ளது தான் அல்லவா? இவருக்கு அவமரியாதை செய்கிறீர்கள் என்றால் எவ்வளவு தண்டனைகள் பெற வேண்டியதிருக்கும்! கொஞ்சம் ஆபத்துகள் வரட்டும், பிறகு பாருங்கள், எத்தனைப் பேர் ஓடி வருகிறார்கள் என்று. நீங்கள் அனைவரும் ஓடி வந்திருக்கிறீர்கள். இவர் மாயமந்திரம் முதலிய எதுவும் செய்யவில்லை. மந்திரவாதி சிவபாபா. இவருக்குள் சிவபாபா வருகிறார் என்ற கவனம் கூட அநேகருக்கு வருவதில்லை. சிவபாபா முன்னிலையில் நாம் தலைகீழாக எதையாவது செய்து விடுகிறோம் என்றால் பாபா சொல்வார்-இவர் தகுதியற்ற குழந்தை என்று. இவருக்குள் இரண்டு பேர் உள்ளனர் இல்லையா? அதனால் தந்தி அனுப்பும் போது எழுதுகின்றனர்-பாப்தாதா. ஆனால் இதைப் பற்றியும் கூடக் குழந்தைகள் புரிந்து கொள்வதில்லை-பாப்தாதா எப்படி இணைந்துள்ளனர் என்று. பாப் (தந்தை) தாதா (பிரம்மா) மூலம் ஆஸ்தி தருகிறார். பாப்தாதா யார் என்று நீங்கள் அறிவீர்கள். யாராவது கேட்கலாம்-நீங்கள் பாப்தாதா என்று யாரைச் சொல்கிறீர்கள்? பாப்-தாதா என்பது ஒருவருடைய பெயராக இருக்க முடியாது. ஆக, குழந்தைகள் யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். எப்போது நீங்கள் புரிய வைக்கிறீர்களோ, அப்போது தான் சிவபாபா தாதா மூலம் ஆஸ்தி தருகிறார் என்பது அவர்களின் புத்தியில் பதியும். இப்போது விநாசமோ நடைபெறப் போகிறது. அதற்கு முன்பாக இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் கற்றுக் கொள்ளுங் கள். அரைக்கல்பமாக எந்தத் தந்தையை அழைத்தீர்களோ, அவர் ஞானம் தருவதற்காக வந்துள்ளார். பிறகும் சொல்கின்றனர்-புரிந்து கொள்வதற்கு நேரம் இல்லை என்று. அப்படியானால் நீங்கள் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை எனச் சொல்வார்கள். உங்களுடைய அதிர்ஷ்டத்தில் சொர்க்கத்தின் சுகம் இல்லை. மற்றப்படி இங்கே தலைவணங்குதல் முதலிய எதையும் செய்யத் தேவை இல்லை. சந்நியாசிகளுக்கு முன்பாக அவசியம் காலில் விழுவார்கள். இவரோ குப்தமாக உள்ளார் இல்லையா? இன்னும் போனால் இவரது செல்வாக்கு அதிகமாக வெளிப்படும். அந்தச் சமயம் கூட்டம் அதிகமாகி விடும். மக்கள் கூட்டத்தில் எவ்வளவு மனிதர்கள் இறந்து போகின்றனர்! பிரதம மந்திரி முதலானவர்களின் தரிசனத்திற்காக எவ்வளவு கூட்டம் நின்று கொண்டுள்ளது! இங்கே தந்தை குழந்தைகளுடன் எவ்வளவு குப்தமாக அமர்ந்துள்ளார்! இங்கே யாரைப் பார்ப்பார்கள்? இவரைப் பற்றி நகை வியாபாரியாக இருந்தார் எனப் புரிந்து கொண்டுள்ளனர். சாஸ்திரங்களிலும் உள்ளது – பிரம்மா மூலம் மனித சிருஷ்டியை எப்படிப் படைத்தார்? பாபா சொல்கிறார், நான் இவருக்குள் பிரவேசமாகிப் படைக்கிறேன். இதுவும் எழுதப் பட்டுள்ளது, ஆனால் கல்புத்தியினர் புரிந்து கொள்வ தில்லை. பாபா வந்து குழந்தைகளை தூய்மையின்மையி-ருந்து தூய்மையாக்கி மாற்றல் (டிரான்ஸ்ஃபர்) தூய்மையானவர் செய்கிறார். மற்றப்படி எந்த ஒரு புதிய படைப்பையும் படைக்க வில்லை. இது தூய்மை இல்லாதவர்களைப் தூய்மையாக்குவதற்கான யுக்தி. விராட ரூபத்தின் சித்திரம் அவசியம் இருக்க வேண்டும். சித்திரம் பெரியதாக இருக்குமானால் புரிய வைப்பதிலும் சுலபமாக இருக்கும். கல்புத்தியை தங்க புத்தியாக மாற்றுவது அவ்வளவு எளிதா என்ன? சிலரோ தோசைக் கல்-ல் தெளிக்கும் தண்ணீர் போல் பார்த்து விட்டுச் சென்று விடுகின்றனர். பிரஜை ஆகக் கூடியவர்களாக இருப்பார்களானாலும் கூட ஏதாவது புத்தியில் பதியும். நாம் தான் பிராமணர், நாம் தான் தேவதை ஆவோம். ஹம் ஸோ என்பதன் அர்த்தத்தை பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைத்துள்ளார்! ஆத்மா தான் பரமாத்மா என்று அவர்கள் சொல்கின்றனர். இங்கே நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாவாகவே இருக்கிறோம். நாம் ஆத்மா முதலில் பிராமண், பிறகு நாம் தான் தேவதை, நாம் தான் சத்திரியர்……… ஆகிறோம். நாம் எத்தனை வர்ணத்தினராக ஆகிறோம்! 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகிறோம். மற்றப்படி பின்னால் தாமதமாக வருபவர்களுக்கு ஏறத்தாழ எத்தனைப் பிறவிகள் இருக்கும்? கணக்கை வெளிப்படுத்த முடியும். பாபாவின் மனதிற்குப் பிடித்த மிக நல்ல சித்திரங்களைத் தயார் செய்ய வேண்டும். சித்திரங்களை உருவாக்குவதில் உதவக் கூடிய 2-4 நல்ல குழந்தைகள் வேண்டும். பாபா செலவைக் கொடுப் பதற்குத் தயாராக உள்ளார். பிறகு உண்டியலை பாபா தாமாகவே நிரப்புவார். பாபா சொல்கிறார், முக்கியமான சித்திரங்களை டிரான்ஸ் லைட்டில் செய்ய வேண்டும். மனிதர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். கண்காட்சியையும் இது போல் தயார் செய்ய வேண்டும். ஆனால் குழந்தைகளை எழுந்து நிற்கச் (தயார்) செய்வதற்காக பாபா முயற்சி செய்ய வேண்டி உள்ளது. பாபாவின் நினைவு முக்கியம். நினைவின் மூலம் தான் நீங்கள் தூய்மை இல்லாமலிருந்து தூய்மையான படைப்பின் எஜமானர் ஆவீர்கள். வேறு எந்த உபாயமும் கிடையாது. நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் பாபாவை நினைவு செய்யுங்கள். சக்கரத்தை நினைவு செய்ய வேண்டும். உங்கள் சுபாவம் (நடத்தை) மிகவும் ராயலாக (அரசருக்குரியதாக) இருக்க வேண்டும். போகப் போக சிலரை பேராசையும், சிலரை மோகமும் பிடித்துக் கொள்கிறது. சிலர் மனதுக்குப் பிடித்த பொருளில் மூழ்கிப் போய் விடுகின்றனர். அது கிடைக்காமல் போனால் நோயாளி போல் ஆகி விடுகின்றனர். இது போன்ற காரணத்திற்கான பழக்கம் எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது. நல்லது

.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தனக்கு நன்மை செய்துக் கொள்வதற்காக பாபாவின் கட்டளையை ஏற்று நடக்க வேண்டும். பாப்தாதாவுக்கு ஒரு போதும் அவமரியாதை செய்யக் கூடாது. எந்தவிதமான பேராசை அல்லது மோகத்தின் பழக்கமும் வைத்திருக்கக் கூடாது.

2) தனது சுபாவத்தை மிகவும் ராயலாக (மேன்மையானதாக) ஆக்கிக் கொள்ள வேண்டும். அதிகாலை அமிர்தவேளையில் எழுந்து பாபாவை நினைவு செய்வதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:-

தனது உண்மையான (பொஸிசன்) நிலையில் நிலைத்திருப்பது – இது தான் நினைவு யாத்திரை ஆகும். நான் யாராக இருக்கிறேன், யாருடையவனாக இருக்கிறேன் – அதில் நிலைத்திருங்கள். இதே உண்மையான சொரூபத்தின் நிச்சயம் மற்றும் அநேக முறை வெற்றி பெற்றிருக்கும் நினைவு மூலமாக எப்பொழுதும் போதையின் நிலை என்ற ஆனந்த கடலின் அலைகளில் மிதந்துக் கொண்டே இருப்பீர்கள் சுகமளிக்கும் வள்ளலின் குழந்தைகளாக இருக்கும் பொழுது துக்கத்தின் அலைகள் எப்படி வர முடியும். சர்வசக்திவானின் குழந்தைகள் சக்தியற்றவர்களாக எப்படி ஆக முடியும். இதே (பொஸிசன்) நிலையின் அனுபவங்களில் இருந்தீர்கள் என்றால் உங்கள் உருவத்தின் மூலமாக தந்தை மற்றும் ஆசிரியரின் தோற்றம் இயல்பாக வெளிப்பட்டு விடும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top