23 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 22, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! இந்த டிராமாவில் நீங்கள் கதாநாயகன்-கதாநாயகி பாகத்தில் நடிப்பவர்கள், முழுக் கல்பத்திலும் உங்களைப் போல் கதாநாயகன் நடிப்பின் பாகம் வேறு யாருக்கும் இல்லை.

கேள்வி: -

மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கான (பரீட்சை) தேர்வில் யார் தேர்ச்சிப் பெற முடியும்?

பதில்:-

யார் தந்தையைப் பின்பற்றி தந்தைக்குச் சமமாகப் தூய்மையாகின்றனரோ, அவர்கள் தான் இந்தப் பரீட்சையில் தேர்ச்சிப் பெற முடியும். 21 பிறவிகளுக்கான எல்லையற்ற ஆஸ்தி கிடைக் கிறது என்றால் நிச்சயமாகக் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். இப்போது முயற்சி செய்யவில்லை என்றால் கல்ப-கல்பாந்தரமாகச் செய்ய மாட்டீர்கள். பிறகு உயர்ந்த பதவியை எப்படி அடைவீர்கள். தூய்மையானவர்களாக ஆவீர்களானால் நல்ல பதவி பெறுவீர்கள். இல்லை யென்றால் தண்டனைகள் அடைய நேரிடும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளோடு பாபா நேரிடையாக உரையாடிக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் அறிந்திருப்பார்கள், நம்மிடம் தான் எல்லையற்ற தந்தை உரையாடிக் கொண்டிருக் கிறார். அவர் அனைவரையும் விட மிக இனிமையானவர். தந்தையும் இனிமையானவர், ஆசிரியரும் இனிமை யானவர். ஏனென்றால் இருவரிடம் இருந்தும் ஆஸ்தி கிடைக்கின்றது. குருவிடம் இருந்து பக்தியின் ஆஸ்தி கிடைக்கின்றது. இங்கோ ஒருவரிடமே மூன்றும் கிடைக்கின்றன. குஷியும் ஏற்படுகின்றது. நீங்கள் அவருக்கு முன்பாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், பதீத-பாவனர் எனச் சொல்லப்படும் எல்லையற்ற தந்தை தான் மனித சிருஷ்டியின் விதை வடிவமாக உள்ளார். அந்த (ஸ்தூல)விதை ஜடமாக உள்ளது. இவர் சைதன்ய மானவர். இவர் சத் சித் ஆனந்த சொரூபம் எனச் சொல்லப் படுகின்றார். பிறகு அவருக்கு மகிமையும் உள்ளது. அவர் ஞானக்கடலாக உள்ளார். ஆனால் அவரிடமிருந்து என்ன ஞானம் கிடைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. நீங்கள் அறிவீர்கள், யாருக்கு பாபா ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்கள் தான் பக்தி மார்க்கத்தில் இவருக்குக் கோவில், சாஸ்திரங்கள் முதலியவற்றை உருவாக்குகின்றனர். இதையும் நீங்கள் அறிவீர்கள், நிச்சயமாக ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகும் இந்தக் கல்பத்தின் சங்கமயுகம் வருகின்றது. இது ஆன்மிக அவிநாசி புருúஷôத்தம சங்கமயுகம் எனச் சொல்லப் படுகின்றது. இவ்வாறே உத்தம புருஷர்கள் அநேகர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு பிறவியிலேயே உத்தம ஆத்மாக்களாக ஆகின்றனர். பிறகு மத்யம், கனிஷ்டமாக (மிகவும் தாழ்ந்தவர்) ஆகின்றனர். இந்த லட்சுமி-நாராயணர் பாருங்கள், எவ்வளவு உத்தம ஆத்மாக்கள்! இவர்கள் புருúஷôத்தமர்கள். அத்தகைய உத்தமமானவர்களாக இருவரையும் யார் ஆக்கினார்? பாடப்படுகிறது-உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான், அவர் மேலே இருக்கிறார். மனித சிருஷ்டியில் உயர்ந்த வரிலும் உயர்ந்தவர்கள் இந்த மகாராஜா-மகாராணி. உயர்ந்ததிலும் உயர்ந்த பாரதத்தில் இராஜ்யம் செய்து வந்தனர். இப்போது அந்த இராஜ்யத்தை அவர்கள் எப்படி அடைந்தார்கள்? இது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட தந்தை, உங்களை இவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக்குபவர் எவ்வளவு இனிமை யானவராக இருக்க வேண்டும்! அவருடைய வழிமுறைப்படி நடக்க வேண்டும். அது போல் உயர்ந்த, உலகத்தின் எஜமானராக ஆக்குபவர் பாபா, எவ்வளவு சாதாரண ரீதியில் கற்பிக்கிறார்! இதையும் நீங்கள் அறிவீர்கள்,

எல்லையற்ற தந்தை பாரதத்தில் வருகிறார். சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர். பாரதத்தை வந்து சொர்க்கமாக ஆக்குகிறார். இப்போது நினைவு வந்து விட்டது, அதாவது நாம் சொர்க்கவாசி 84 பிறவிகள் எடுத்து நரகவாசி ஆகி விட்டிருக்கிறோம். பிறகு சொர்க்கவாசி ஆக்குவதற்காக பாபா வந்துள்ளார். இப்போது பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் ஆத்மா நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். சதோபிரதானம் ஆகாமல் யாருமே திரும்பிச் செல்ல முடியாது. இல்லையென்றால் தண்டனையடைய நேரிடும். தண்டனையும் கூட ஆத்மாவுக்குத்தான் கிடைக்கிறது இல்லையா? கர்ப்ப சிறையில் சரீரத்தை தாரணை செய்ய வைத்துப் பிறகு தண்டனை தருகிறார். குழந்தைகள் மிகுந்த துக்கத்தை அனுபவிக்க வேண்டி யுள்ளது. ஐயோ எனக் கூக்குரல் இடுகின்றனர். இனி பாவம் செய்ய மாட்டேன் எனச் சொல் கின்றனர். குழந்தைகள் நீங்கள் கர்ப்ப சிறையில் செல்ல வேண்டியது இருக்காது. அங்கே கர்ப்ப மாளிகை இருக்கும். ஏனென்றால் பாவங்கள் செய்யப் படுவதில்லை. இங்கே இராவண இராஜ்யத்தில் பாவங்கள் நடப்பதால் தான் ராமராஜ்யம் வேண்டும் எனக் கேட்கின்றனர். ஆனால் இராவண இராஜ்யம் என்பது என்ன மாதிரியானது என்பது அவர்களுக்குத் தெரியாது. எரிக்கின்றனர் என்றால் அழிந்து போக வேண்டும். மீண்டும் மீண்டும் எரிக்கின்றனர் என்றால் சாக வில்லை என்றாகிறது. பிறகு இவற்றையெல்லாம் செய்வதால் என்ன பயன்? அவர்கள் சென்று இலங்கையை கொள்ளை அடித்து வருகின்றனர். அப்போது உளுத்துப் போன மரத்துண்டைக் கூட அதைத் தங்கம் என நினைத்துக் கொண்டு வருகின்றனர். உண்மையில் நீங்கள் இச்சமயம் இராவணன் மீது வெற்றி பெறுகிறீர்கள். மேலும் பொன்யுகத்திற்கு எஜமானர் ஆகிறீர்கள். அஜ்மீரில் வைகுண்டத்தின் மாடல் செய்து வைக்கப் பட்டுள்ளது. இப்போது நீங்கள் தெரிந்து கொண்டீர்கள், பாபா வந்துள்ளார், குழந்தைகளை மீண்டும் சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குவதற்காக. வைரம்-வைடூரியங்களால் ஆன அரண்மனைகளில் இருந்து நாம் இராஜ்யம் செய்வோம்.

இப்போது குழந்தைகள் நீங்கள் யோகபலத்தினால் நிர்விகாரி சதோபிரதானமாக ஆகிறீர்கள். ஆத்மா சம்பூர்ண நிர்விகாரி ஆகிப் பிறகு சாந்திதாமம் சென்று விடும். அங்கே துக்கத்தின் விஷயம் கிடையாது. பாபா புரிய வைத்துள்ளார், இந்த நாடகத்தில் உங்களுக்கு அனைவரைக் காட்டிலும் முக்கியமான கதாநாயகன்-கதாநாயகி பாகம். இராஜ்யத்தை அடைவதும் இழப்பதும் விளையாட்டு. கதாநாயகன்-கதாநாயகி நீங்கள் தான். ஹீரோ என்பதன் அர்த்தம் முக்கிய பார்ட்தாரி. நீங்கள் பொன் யுகத்தில் தூய்மையான இல்லற ஆஸ்ரமத்தில் இருந்தீர்கள். இரும்பு யுகத்தில் தூய்மையற்ற இல்லற விவகாரங்கள் உள்ளன. இப்போது பாபா பொன்யுகத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கே லட்சுமி-நாராயணர் சூரியவம்சிகளின் இராஜ்யம் இருக்கும். அவர்கள் புனர்ஜென்மம் எடுத்துச் சந்திர வம்சத்தில் வருவார்கள். வளர்ர்சி ஆகிக் கொண்டே இருக்கும். இப்போது எத்தனைக் கோடி ஆகி விட்டிருக்கிறது! பிறப்பைக் குறைக்க வேண்டும் என்று இப்போது சொல்கின்றனர். ஓரிரு குழந்தைகளுடன் இருப்பவர்கள் நிறுத்த மாட்டார்கள். இப்போது நீங்களோ அறிவிப்பு செய்ய முடியும்- ஜனத்தொகையைக் குறைப்பதோ தந்தையின் கையில் உள்ளது. பாபா அறிந்துள்ளார், அதிக மனிதர்கள் இருப்பார்களானால் இறந்து போவார்கள். நான் வந்துள்ளேன், அனைவரையும் அழித்து ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்வதற்காக. அங்கே 9 லட்சம் பேர் இருப்பார்கள். சூ மந்திரம் ஆகிறது இல்லையா? கலியுகம் என்ற இரவு முடிவடைந்து பகல் ஆரம்பமாகி விடும். ஜனத் தொகையைக் குறைப்பதற்காக எவ்வளவு செலவு செய்கின்றனர்! பாபாவுக்கு எந்த ஒரு செலவும் கிடையாது. இயற்கைச் சேதங்கள் ஏற்படும். அனைத்தும் அழிந்து போகும். டிராமாவில் இது விதிக்கப்பட்டுள்ளது. அந்த மனிதர்கள் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் யாதவர்கள், பாரதவாசிகள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஒரு பக்கம், இந்தப் பக்கம் இரண்டு சகோதர-

சகோதரர்கள். யார் இப்போது கலியுகத்தில் சகோதர- சகோதரர்களாக இருக்கிறீர்களோ, நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் வெளிவந்திருக்கிறீர்கள். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆத்மா அசலில் சகோதர-சகோதரர்கள். ஆத்மாக் களாகிய உங்களோடு தான் பாபா முதல்-முதலில் சந்தித்துள்ளார். ஓட்டப் பந்தயத்தில் யார் முதலில் செல்கின்றனரோ, அவர்கள் பரிசைப் பெறுகிறார்கள். உங்களுடையது நினைவின் ஓட்டப் பந்தயம். இது எந்த ஒரு சாஸ்திரத்திலும் கிடையாது. பாபா சொல்கிறார், என்னோடு நினைவை இணையுங் கள். இந்த நினைவின் யாத்திரை இச்சமயம் தான் நடைபெறுகின்றது. இந்த யாத்திரையை வேறு யாரும் கற்றுத்தர முடியாது. சத்யுகத்தில் ஆன்மிக யோகமும் இருக்காது, சரீர சம்மந்தமான யோகமும் இருக்காது. அங்கே அதற்கான அவசியமே கிடையாது. இது இந்தச் சமயம் உங்களது புத்தியில் பதிகின்றது. டிராமாவில் ஒவ்வொரு விநாடியின் பாகமும் புரிய வைக்கப்படுகின்றது. இது சுயதரிசனச் சக்கரம் எனச் சொல்லப் படுகின்றது. உண்மையில் சுயதரிசனச் சக்கரதாரியாக இப்போது நீங்கள் ஆகிறீர்கள். 84 பிறவிகளின் அதாவது சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் உங்களிடம் உள்ளது. ஸ்வ அதாவது- சுயம் என்றால் ஆத்மா. ஆத்மாவுக்கு இந்த ஞானம் உள்ளதென்றால் இப்போது குழந்தைகள் நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி ஆகியிருக்கிறீர்கள். நான் உங்களை ஆன்மிகக் குழந்தைகளே என அழைக்கிறேன். சுயதரிசனச் சக்கரதாரி பிராமண குலத்தின் அணிகலன்கள். இந்த வார்த்தைகளின் அர்தத்தைப் புதியவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது. இந்த அலங்காரத்தை உங்களுக்குக் கொடுப்பதில்லை. ஏனென்றால் உங்களில் அநேகர் ஓடிப் போய் விடுகிறார்கள். இப்போது உங்களது புத்தியில் 84 பிறவிகளின் சக்கரம் உள்ளது. இப்போது முதல் நம்பரில் செல்வீர்கள். முதலில் வீட்டுக்குச் சென்று விட்டுப் பிறகு தேவதை ஆவார்கள். பிறகு சத்திரிய, வைசிய, சூத்திரர் ஆவீர்கள். எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! இந்தளவு கூட யாராவது நினைவு செய்வீர்களானால் மிகப்பெரும் சௌபாக்கியம்! இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது. பிறகு நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம். மற்றப்படி சாஸ்திரங்களில் அதிகம் கட்டுக் கதைகளை எழுதி வைத்துள்ளனர். அனைவருக்கும் அன்பானவரான கிருஷ்ணரைப் பற்றியும் எழுதியுள்ளனர், பாம்பு தீண்டியது, இது நடந்தது…. என்பதாக. கிருஷ்ணர், ராதையைக் காட்டிலும் பிரியமானவராக உள்ளார். ஏனென்றால் முரளி இசைத்துள்ளார். இது உண்மையில் ஞானத்தின் விஷயம். நீங்கள் இந்தச் சமயம் ஞான-ஞானேஸ்வரி. பிறகு படித்து ராஜ-ராஜேஸ்வரி ஆகிறீர்கள். இது நோக்கம்-குறிக்கோளாகும். இங்கே உங்கள் குறிக்கோள் என்ன என்று யாராவது கேட்கலாம். மனிதரில் இருந்து தேவதை ஆவது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். நாம் தான் தேவதையாக இருந்தோம். 84 பிறவிகளுக்குப் பின் சூத்திரர் ஆனோம். இப்போது மீண்டும் பிராமணர் ஆகியிருக்கிறோம். பிறகு தேவதை ஆவோம். படிப்பு சொல்லித் தருபவர் ஞானக் கடலாகிய பரமாத்மா, கிருஷ்ணரல்ல. இந்த இராஜயோகத்தை யாருமே கற்பிக்க முடியாது. நீங்கள் சொல்கிறீர்கள், பாபா, நாங்கள் கல்ப-கல்பமாகத் தங்களிடம் வந்து இராஜ்ய பாக்கியத்தைப் பெறுகிறோம். இதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த மகாபாரத யுத்தத்தினால் தான் சொர்க்கத்தின் வாசல் திறக்கப் போகிறது. பாபா வந்து இராஜயோகம் கற்பிக்கிறார் என்றால் நிச்சயமாக சொர்க்கம் வந்தாக வேண்டும். நரகம் முடிந்து போக வேண்டும். இந்த மகாபாரத யுத்தம் சாஸ்திரங்களில் உள்ளது.

(இருமல் வந்தது) இது யாருக்கு ஏற்படுகிறது? சிவபாபாவுக்கா அல்லது பிரம்மா பாபாவுக்கா? (பிரம்மாவுக்கு). இது கர்மபோகமாகும். கடைசி வரை நடந்து கொண்டே இருக்கும். எப்போது சம்பூர்ணமாக ஆகி விடுகின்றாரோ, பிறகு இந்த சரீரமும் இருக்காது. இது கர்மபோகம் எனச் சொல்லப்படுகின்றது. சத்யுகத்தில் கர்மபோகம் இருப்ப தில்லை. நாம் சதா ஆரோக்கியமானவராக,

சதா செல்வந்தராக ஆகிறோம். சதா மகிழ்ச்சியாக இருப்போம். ஏனென்றால் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் துக்கம் ஏற்படுகிறது. அதுவும் எப்போது பக்தி கலப்பட பக்தியாக ஆகி விடுகிறதோ, அப்போது துக்கம் அதிகமாகிறது. அப்போது ஐயோ-ஐயோ என்று கதறுகின்றனர். பிறகு விநாசம் நடைபெறுகின்றது. இப்போது நீங்கள் நேரிடையாக கேட்கிறீர்கள் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி வருகின்றது! நீங்கள் அறிவீர்கள், இவர் (சிவபாபா) நம்முடைய உண்மையான தந்தை, உண்மையான ஆசிரியர், உண்மையான சத்குரு ஆவார். இந்த மகிமை ஒரே ஒரு நிராகார் தந்தைக்குரியதாகும். அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராகிய பகவான். அந்தத் தந்தையை நினைவு செய்வீர்களானால் உயர்ந்த பதவி பெறுவீர்கள். இங்கே யாராவது சாது-சந்நியாசி மகாத்மா ஒன்றும் ஆசனத்தில் அமர்வதில்லை. ஒரு போதும் காலில் விழவும் அனுமதிப்பதில்லை. தந்தை சொல்கிறார்-நான் உங்களுடைய கீழ்ப்படி தலான சேவகன். எனக்குக் கால் எங்கே இருக்கிறது? நீங்கள் யாருக்குத் தலைவணங்குவீர்கள்? அநேக குருமார்களுக்கு முன் விழுந்து தலைவணங்கி-வணங்கியே முட்டி கூடத் தேய்ந்து விட்டது. எது பக்தி மார்க்கத்தில் நடைபெறுகிறதோ, அது ஞான மார்க்கத்தில் நடக்க முடியாது. பக்தி மார்க்கத்தில் சொல்கின்றனர், ஹே ராம்…… பாபா சொல்கிறார், இங்கே சப்தம் எதுவும் கூடாது. தன்னை ஆத்மா என உணர்ந்து குப்தமான பாபாவை நினைவு செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு உள்ளுக்குள் பாபாவின் நினைவு உள்ளது. ஆத்மாவுக்குத் தெரியும், இவர் நம்முடைய பாபா. நீங்கள் உள்ளுக்குள் குப்தமாக நினைவு செய்ய வேண்டும். இது அஜபா மந்திரம் ஏதும் சொல்லாமல் நினைவு என்று கூறப்படுகிறது. ஜபம் செய்ய வேண்டாம். மாலையை உள்ளுக்குள் சுற்றுங்கள் அல்லது வெளியில் சுற்றுங்கள் – விஷயம் ஒன்று தான். உள்ளுக்குள் சுற்றுவதென்பது ஒன்றும் குப்தமல்ல. குப்த விஷயம்-தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். அவர் சிவபாபா, இவர் பிரஜாபிதா பிரம்மா. உங்களுக்கு அலங்காரம் செய்வதற்காக இரட்டை எஞ்சின் கிடைக்கிறது. இவருடைய (பிரம்மா) ஆத்மாவும் அலங்கரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு அனைவரும் தந்தை வீட்டுக்குச் சென்று விடுவார்கள். அங்கிருந்து பிறகு மாமனார் வீடாகிய விஷ்ணுபுரிக்கு வந்து விடுவார்கள். இது டபுள் தந்தை வீடு-அலௌகிக், அவர் லௌகிக், இவர் பரலௌகிக். இந்த அலௌகிகத் தந்தை பற்றி யாருக்கும் தெரியாது. அதனால் தான் இந்த தாதாவை ஏன் அமர்த்தி வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்கின்றனர். இவர் உடல் மூலமாகத் தான் பரமாத்மா பாடம் கற்பிக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இவர் அநேக ஜென்மங்களின் கடைசியில் பூஜைக்குரிய நிலையில் இருந்து பூஜாரி ஆகியிருக்கிறார். ராஜாவிலிருந்து ஏழையாக ஆகியிருக்கிறார். பாபா புரிய வைக்கிறார்-இந்த சரீரத்தில் நான் பிரவேசமாகிறேன். பிறகும் கூட யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. கோவில்களில் நந்தியை வைத்துள்ளனர். இப்போது சங்கரோ சூட்சுமவதன வாசி. சூட்சுமவதனத்தில் நந்தி முதலியவையோ கிடையாது. நந்தி என்றால் ஆண். பாகீரதத்தை ஆணாகக் காட்டியுள்ளனர். மனிதர்களோ முற்றிலும் புத்தியற்றவர்களாக ஆகி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார், இராவணன் புத்தியற்றவர்களாக ஆக்கியுள்ளான். தாங்களே சொல்கின்றனர், இராமராஜ்யம் வேண்டும் என்று. இப்போது இராமராஜ்யமோ சத்யுகத்தில் தான் இருக்கும். கலியுகத்தில் இருப்பது இராவண இராஜ்யம். இராம் மற்றும் இராவணன் பாரதத்தில் உள்ள விஷயம். சிவஜெயந்தியும் பாரதத்தில் தான் கொண்டாடுகின்றனர். இராவண ஜெயந்தி கொண்டாடுவதில்லை. ஏனென்றால் அவன் விரோதி. யார் சுகம் தருகிறாரோ, அவருக்குத் தான் ஜெயந்தி கொண்டாடப் படுகின்றது. இப்போது சிவபாபா வந்து ஞானம் சொல்கிறார், இராவணன் மீது வெற்றி பெறச் செய்கிறார். இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், இராவணன் என்பது என்ன பொருள், எப்போது வருகிறான், சரியான கணக்கு சொல்லப் படுகின்றது. இந்த விஷயங்களை நல்லபடியாக தாரணை செய்யுங்கள். மறந்து விடாதீர்கள். ஞானக்கடலிடம் மேகமாகி

வந்திருக்கிறீர்கள். நிரப்பிக் கொண்டு மழை பொழிவிக்க வேண்டும். தாரணை மிக நன்றாக இருக்க வேண்டும். இங்கே நீங்கள் முன்பாக அமர்ந்துள்ளீர்கள். உணர்வு வருகிறது, நாம் எல்லையற்ற தந்தை முன்பாக, வீட்டில் அமர்ந்துள்ளோம். பிராமணகுல பூஷணர்களாகவும் உள்ளோம். மம்மா பாபாவும் உள்ளனர். பாபா நமக்கு ஆசிரியர் ரூபத்தில் கற்பித்துக் கொண்டிருக்கிறார். சத்குரு ரூபத்தில் உடன் அழைத்துச் செல்வார். அந்த குருமார்கள் உடன் அழைத்துச் செல்வதில்லை. குருவின் வேலை சிஷ்யர்களை உடன் அழைத்துச் செல்வதாகும். உண்மையில் அவர்கள் சிஷ்யர்கள் (பின்பற்றுவோர்) கூடக் கிடையாது. அந்த (குரு) சந்நியாசி, இவர்கள் இல்லற வாசிகள் என்றால் எப்படி சிஷ்யர்கள் ஆக முடியும்? நீங்கள் சிவபாபாவையும் பின்பற்றுகிறீர்கள், பிரம்மா பாபா வையும் பின்பற்றுகிறீர்கள். எப்படி இவர் ஆகிறாரோ, அதே போல் நீங்களும் ஆகிறீர்கள். நாம் ஆத்மா தூய்மையாகி பாபாவிடம் சென்று விடுவோம். பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். உண்மையிலும் உண்மையான .ஃபாலோவர்ஸ் பின்பற்றுபவர்கள் நீங்கள்.

பாபா சொல்கிறார்-உங்களை அழைத்துச் செல்வதற்காக நான் வந்துள்ளேன். இப்போது ஞான சிதையில் அமர்வீர்களானால் அழைத்துச் செல்வேன். சத்யுகத்தில் லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அந்தச் சமயம் மற்ற அனைத்து தர்மத்தினரும் சாந்திதாமத்தில் இருந்தனர். இந்த விஷயங்கள் மிகவும் சகஜமானவை. பாபாவின் ஃபாலோவர்ஸ் ஆகுங்கள். எவ்வளவு தூய்மையானவர்களாகிறீர்களோ,, அதற்கேற்ப நல்ல பதவி பெறுவீர்கள். இல்லையென்றால் தண்டனைகள் பெற நேரிடும். நிச்சயமாகச் சென்று தான் ஆக வேண்டும். 21 பிறவிகளின் ஆஸ்தி கிடைக்கிறதென்றால் ஏன் முயற்சி செய்யக் கூடாது? இப்போது முயற்சி செய்யவில்லை என்றால் கல்ப-கல்பாந்தரமாக செய்ய மாட்டீர்கள். பிறகு உயர்ந்த பதவி எப்படிப் பெறுவீர்கள்? இது பெரிய எல்லையற்ற வகுப்பு. ஒரே பரீட்சை தான். மனிதரிலிருந்து தேவதை ஆக வேண்டும்.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) ஒரு தந்தையின் உண்மையிலும் உண்மையான சீடராக (பின்பற்றுபவர்கள்) ஆகி முழுமையாக தூய்மை அடைய வேண்டும். 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும்.

2) வாயினால் ஹே சிவபாபா என்று கூடச் சொல்லக் கூடாது. சப்தத்திற்கு அப்பாற்பட்டுச் செல்ல வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து உள்ளுக்குள் பாபாவை நினைவு செய்ய வேண்டும்

வரதானம்:-

எந்த குழந்தைகள் சூட்சும கட்டளைகளை பாலனை செய்கிறார்களோ, அவர்களுக்குள் தான் ஸ்தூல கட்டளையை பாலனை செய்யக் கூடிய சக்தி வர முடியும். சூட்சுமமான மற்றும் முக்கியமான கட்டளையாவது – நிரந்தரமாக நினைவில் இருங்கள். மேலும் மனம் சொல் செயலில் தூய்மை ஆகுங்கள். எண்ணத்தில் கூட (அபவித்திரதா) தூய்மையின்மை அல்லது அசுத்த தன்மை இருக்கக் கூடாது. எண்ணத்தின் அளவில் கூட பழைய அசுத்த சம்ஸ்காரம் தீண்டுகிறது என்றால் முழுமையான வைஷ்ணவர் அல்லது முழுமையான தூய்மை யானவர் என்று கூற மாட்டார்கள். எனவே ஒரு எண்ணம் கூட கட்டளைக்கு புறம்பாக நடக்கக் கூடாது. அப்பொழுது தான் முழுமையாக கட்டளைப்படி நடப்பவர் என்று கூறுவார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top