21 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 20, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சுப பாவனை (நல்ல உணர்வு) மற்றும் சுப காமனா (விருப்பத்தின்) சூக்ஷ்மமான சேவை

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று உலகத்திற்கு நன்மை செய்யக்கூடிய பாப்தாதா உலகத்திற்கு நன்மை செய்யக்கூடிய தனது உதவி யாளர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். உலக நன்மை செய்யும் காரியத்தில் தந்தையின் காரியத்தில் அனைத்து குழந்தைகளும் உதவியாளர்களாக இருக்கிறார்கள். உலகத்திலுள்ள குழப்பமான ஆத்மாக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டுமென்று இந்தவொரு எண்ணம் ஒவ்வொரு வரின் மனதிலும் எப்பொழுதும் இருக்க வேண்டும். நடந்தாலும், சுற்றினாலும் எந்தவித காரியம் செய்தாலும் மனதில் இந்த நல்ல உணர்வு இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்திலும் பாவணை இருக்கிறது. ஆனால் பக்தி நிறைந்த ஆத்மாக்கள் குறுகிய காலத்தின் நன்மைக்காக விசேஷமான பாவணை இருக்கிறது. ஞானம் நிறைந்த ஆத்மாவாகிய குழந்தைகளாகிய உங்களின் ஞானம் புரிந்துக்கொண்டு அனைத்து ஆத்மாக்களுக்காகவும் உருவாக்கும் நன்மையின் பாவணை சதா காலத்திற்காகவும் அனைவருக்கும் நன்மை ஏற்பட வேண்டுமென்ற உணர்வு இருக்கும். ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் பல பிறவிகள் மகிழ்ச்சிகரமாகவும், பிராப்திகளின் முழுமையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு தற்சமயத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் உங்களுக்கு இருக்கும். ஏனெனில் அழிவற்ற தந்தையின் மூலம் ஆத்மாக்களாகிய உங்களுக்கு அழிவற்ற ஆஸ்தி கிடைக்கிறது. உங்களுடைய உணர்வுகளின் பலனாக உலகத்திலுள்ள ஆத்மாக்களை மாற்றம் செய்துக் கொண்டிருக்கிறது மேலும் வரக்கூடிய காலங்களில் இயற்கை உட்பட அனைத்தும் மாற்றம் அடைந்துவிடும். ஆத்மாக்களாகிய உங்களுடைய சிரேஷ்ட பாவணை (உயர்ந்த உணர்வு) மிக உயர்ந்த பலனை அடைய வைக்கிறது. ஆகையால் உலகத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஆத்மாக்களின் புகழ் பாடப்படுகிறது. இந்தளவு தங்களின் சுபபாவணையின் மகத்துவத்தை தெரிந்திருக்கிறீர்களா? தனது சுபபாவணையை சாதாரணமாக புரிந்துக் கொண்டு காரியத்தில் பயன்படுத்துகிறீர்களா? அல்லது மகத்துவத்தை தெரிந்துக் கொண்டு செயல்படு கிறீர்களா? உலகத்தினர்களும் சுபபாவணை என்ற வார்த்தையை சொல்கிறார்கள்? ஆனால் உங்களின் சுபபாவணை என்பது நன்மையுடையதாக மட்டுமல்ல, அதற்கும் மேலாக சக்திசாலி யாகவும் இருக்கிறது. ஏனெனில் சங்கமயுகத்தை சேர்ந்த சிரேஷ்ட ஆத்மாக்களாக நீங்கள் இருக்கிறீர்கள். சங்கமயுகத்திற்கு நாடகத்திட்டப்படி உடனடி பலனை அடைகிறீர்கள். யாரெல்லாம் உங்களின் சம்மந்தம் மற்றும் தொடர்பில் வருகிறார்களோ, அவர்களுக்கு அந்த நேரத்தில் அமைதி மற்றும் அன்பின் பலனாக அனுபவம் செய்ய வைக்கிறது.

சுபபாவனை, நல்ல விருப்பத்தின் இல்லாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் – இந்த ஆத்மாவும் ஆஸ்திக்கு அதிகாரி ஆகவேண்டும் என்ற கருணை நிறைந்த விருப்பம் எப்பொழுதும் இருக்க வேண்டும். இவர்கள் நம்முடைய ஈஸ்வரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் கருணை ஏற்பட வேண்டும். எனவே இதை ஏன இழக்க வேண்டும்? சுபபாவணை இருக்கிறதல்லவா? சுபவிருப்பம் மற்றும் சுபபாவணை லி இது தான் சேவையின் ஆஸ்திவாராமாகும். ஏதாவதொரு ஆத்மாவிற்கு (யாருக்காவது) சேவை செய்கிறீர்கள், ஒருவேளை உங்களுக்குள் சுபபாவணை, சுபவிருப்பம் இல்லையென்றால் ஆத்மாக்களுக்கு உடனடி பலன் அடைய முடியாது.. சட்டப்படி, முறைபடி லி எதை கேட்டிட்ர்களோ, அதை சொல்வது

என்பது ஒருவிதத்தில் சேவை செய்வது. அடுத்தாக சுபபாவணை, சுபவிருப்பத்தோடு சேவை புரிவது மற்றொருவிதமான சேவையாகும். உங்களுடைய நல்ல உணர்வுகள் பாபாவிடத்தில் பாவணை உருவாக்குகிறது, மேலும் பாபாவின் மூலம் பலனை பெற வைப்பதற்காக நிமித்தமாகி விடுகிறது. சுபபாவணை – வெகுதொலைவிலுள்ள எந்தவொரு ஆத்மாவிற்கும் பலனை பெற வைப்பதற்கான நிமித்தமாக ஆக்கிவிடுகிறது. விஞ்ஞான சாதனங்கள் வெகுதொலைவில் அமர்ந்துள்ள ஆத்மாக்களிடம் நெருங்கிய தொடர்பை செய்ய வைப்பதற்கு நிமித்தமாக ஆகிவிடு கிறது. நீங்கள் பேசுவதை சென்று சேர்க்கிறது, உங்களுடைய செய்தியை கொண்டு சேர்க்கிறது. காட்சியையும் பார்க்க முடிகிறது. எனவே விஞ்ஞானத்தின் சக்தி குறுகிய காலத்திற்காக நெருக்கத் தின் பலனை கொடுக்க முடிகிறது என்றால் உங்களுடைய அமைதியின் சக்திசாலியான சுபபாவணை வெகு தொலைவிலுள்ள ஆத்மாக்களுக்கு பலனை தர முடியாதா? ஆனால் இதற்கான ஆதாரம் தனக்குள் அந்தளவு அமைதியின் சக்தி சேமிப்பாக செய்து இருக்க வேண்டும். அமைதியின் சக்தி அலௌகீக அனுபவத்தை செய்ய வைக்கிறது. வரும் காலங்களில் இதை வெளிப்படை யாகவே அனுபவம் செய்வார்கள்.

சுபபாவணை என்றால் சக்திசாலியான எண்ணம். அனைத்து சக்திகளின் மூலம் எண்ணங்களின் வேகம் தீவிரமாக இருக்கும். எந்தளவு தான் விஞ்ஞானம் அதிவேகமாக சாதனங்களை உருவாக் கட்டும், அவை அனைத்தையும் விட அதிவேகமானது எண்ணங்களின் சக்தியாகும். எந்தவொரு ஆத்மாவிற்கும் அல்லது எல்லைக்கு அப்பாற்பட்ட உலகத்திலுள்ள ஆத்மாக்களுக்காக சுப பாவணை வைக்கிறீர்கள் அதாவது இந்த ஆத்மாவிற்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற சக்திசாலி யான நல்ல மற்றும் தூய்மையான எண்ணத்தை உருவாக்குகிறீர்கள். உங்களுடைய எண்ணம் அல்லது உணர்வு உருவாக்கி மேலும் அவர்களுக்கு ஆத்மாவாகிய எனக்கு யாரோ ஒருவர் விசேஷமாக அமைதி மற்றும் சக்தியின் உதவியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். பல காரியங் களில் எனக்கு தைரியம் மற்றும் தகுதி போதுமான அளவு இல்லை, ஆனாலும் பாப்தாதாவின் அதிகப்படியான உதவியினால் இந்த காரியம் எளிதாக வெற்றி அடைந்துவிட்டது, அல்லது இந்த தடை முடிந்துவிட்டது என்று இப்பொழுதும் பல குழந்தைகள் அனுபவம் செய்கிறார்கள். அதுபோல மாஸ்டர் விஷ்வ கல்யாணகாரி ஆத்மாக்களின் சூட்சம சேவை வெளிப் படையான ரூபத்தில் அனுபவம் செய்வார்கள். நேரமும் குறைவாக செலவாகும், மற்றும் சாதனங்களும் குறைவாக தேவைப்படும் செல்வமும் குறைவாக தான் செலவாகும். இதற்காக மனம் மற்றும் புத்தி எப்பொழுதும் ஃப்ரியாக (வீணானது இல்லாமல்) இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் மனம் மற்றும் புத்தியை பிசியாக (தேவையில்லாமல் பயன்படுத்துதல்) வைத்துள்ளீர்கள், ஆகையால் சேவையில் சூட்சம நிலையின் லைன் (இணைப்பு) தெளிவாக இருப்ப தில்லை. சாதாரணமான விஷயங்களிலும் தனது மனம் மற்றும் புத்தியின் லைன் அதிகமாக வீண் ஆகிறது, ஆகையால் இந்த சூட்சம சேவை அதிவேகத்தோடு செயல்படுவதில்லை. இதற்காக விசேஷமான முறையில் கவனம் லி தனிமை மற்றும் ஒருமுகப்படுத்துதல்.

தனிமையை விரும்பக்கூடிய ஆத்மாக்கள் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் இடைல இடையில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் ஒதுக்கி தனிமையை அனுபவம் செய்ய முடியும். தனிமையை விரும்பக்கூடிய சக்திசாலி ஆகிவிடுகிறார்கள், தனது சூட்சம சக்திகளான – மனம் புத்தியை எந்த சமயம் வேண்டுமோ, எங்கு வேண்டுமோ ஒருமுகப்படுத்த முடியும். வெளிப்புற சூழ்நிலைகள் குழப்பம் நிறைந்ததாக இருந்தாலும் தனிமையை விரும்பு ஆத்மா ஒருவருக்குள் நொடியில் ஒருமுகப்படுத்த முடியும். கடலுக்கு மேல் பகுதியில் அலைகளின் சப்தம் எவ்வளவு தான் இருந்தாலும், எவ்வளவு தான் அலைகழித்தாலும், கடலுக்கு அடியில் அலைகழிவதில்லை. எனவே ஒருவருக்குள் (பாபாவின் நினைவில்) இருக்கும் பொழுது, ஞான கடலுக்குள் சென்று

விட்டால், குழப்பங்கள் முடிந்துவிடும், ஒருமுகப்படுத்த முடியும். கேட்டீர்களா? சூட்சம சேவை என்றால் என்ன? சுபபாவணை, சுபவிருப்பம், என்ற வார்த்தைகள் அனைவரும் சொல்கிறார்கள், ஆனால் இதனுடைய முக்கியத்துவத்தை தெரிந்துக் கொண்டு நடைமுறையில் கொண்டு வருவ தினால் பல ஆத்மாக்களுக்கு உடனடி பலனை அனுபவம் செய்ய வைக்கக்கூடிய கருவி ஆகுங்கள். நல்லது.

டீச்சர்களுடைய வேலையே – சேவை செய்வது தான். ஆசிரியர்களின் முக்கியத்துவம் சேவையாக இருக்கிறது. ஒருவேளை சேவை வெளிப்படையாக தெரியவில்லை என்றால் அவர்களை தகுதி வாய்ந்த ஆசிரியரின் பட்டியலில் கணக்கிட முடியாது. ஆசிரியர்களின் மகான் தன்மை சேவையாக இருக்கிறதல்லவா. சேவையின் நுட்பமான ரூபத்தை கேட்டீர்கள். வார்த்தைகளின் சேவை செய்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள், ஆனால் வார்த்தை மற்றும் மனதின் சுபபாவணை என்ற சேவையும் இணைந்தே இருக்க வேண்டும். வார்த்தைகள் மற்றும் உணர்வுகள் இரட்டை வேலை செய்யும். இந்த சூட்சம சேவையின் பயிற்சி நெடுங்காலமாக அதாவது இப்பொழுதிலிருந்து வேண்டும். ஏனெனில் வரக்கூடிய காலங்களில் சேவையின் வடிவமைப்பு மாறிக் கொண்டே யிருக்கும். பிறகு அந்த நேரத்தில் சூட்சம சேவையில் தன்னை பிசியாக வைத்துக் கொள்ள முடியாது, வெளிப்புற சூழ்நிலைகள் புத்தியை கவர்ந்திழுத்துக் கொண்டேயிருக்கும். ரிசல்ட் (முடிவு) என்னவாக இருக்கும்? நினைவு மற்றும் சேவையில் சமநிலை வைக்க முடியாது. ஆகையால் இப்பொழுதிலிருந்து தனது மனம்லிபுத்தியின் சேவையின் கோட்டை சோதனை செய்யுங்கள். ஆசிரியர்களுக்கு சோதனை செய்ய வருகிறதல்லவா. டீச்சர்ஸ் மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள், அதனால் அவர்கள் தெரிந்திருந்திருப்பதால் தான் கற்றுத் தருகிறார்கள் அல்லவா. இப்பொழுது தகுதிவாய்ந்த ஆசிரியர்களாக இருக்கிறீர்கள் அல்லவா. தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் விசேஷத்தன்மை லி அவர்கள் நிரந்தரமாக மனதிலும், வார்த்தைகளிலும், கர்மணா (செயல்) சேவையில் எப்பொழுதும் பிசியாக இருப்பார்கள். எனவே மற்ற விஷயங் களிலிருந்து தானாகவே விடுபட்டு விடுவார்கள். நல்லது. குமாரிகள் கூட வந்துள்ளார்கள்.

குமாரிகள் என்றால் நம்பிக்கைக்குரிய ஆசிரியர்கள். அப்பொழுது தான் பிரம்மா குமாரிகள் என்று சொல்ல முடியும். ஒருவேளை நம்பிக்கைக்குரிய சேவாதாரிகளாக இல்லையென்றால் நயா பைசாவிற்கு (சில்லறை காசுக்கு) தகுதியுடைய குமாரிகள். குமாரிகள் என்ன செய்கிறார்கள்? வேலையில் நயா பைசாவிற்காக கூடைகளை (சுமையை) சுமக்ககூடியவர்களாக இருக்கிறார்கள் அல்லவா. கூடைகளை சுமப்பதற்கு தயாராக இருக்கிறார்கள், ஆனால் பகவானின் வீட்டில் அதாவது சேவை நிலையத்தில் இருப்பதற்கு தைரியம் வைப்பதில்லை, குமாரிகளை பார்த்து பாப்தாதாவிற்கு நகைப்பு (சிரிப்பு) வருகிறது. அதுபோன்ற பலவீனமான குமாரிகள் இல்லை தானே. படித்துக் கொண்டிருந்தாலும், வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது உலகத்திற்கு சேவை செய்ய வேண்டுமென்று முதலிலேயே இலட்சியம் வைத்து விடுகிறீர்கள். வேலைக்கு செல்லுவது என்றால் தன்னை பார்த்துக் கொள்வது. குழந்தைலிகுட்டிகள் இல்லை, பிறகு யாரை பார்த்துக் கொள்ள போகிறீர்கள். இதற்காகத் தான் வேலை செய்கிறீர்கள், தன்னை ஒய்வாக நன்றாக பார்த்துக் கொள்ளலாம், எப்படிவேண்மென்றாலும் இருக்கலாம், ஆனால் உலகிய ஆத்மாக்களுக்கு பாபா வின் பாலணையை செய்யுங்கள், இந்த இலட்சியத்தை வையுங்கள். அநேக ஆத்மாக்களுக்கு நிமித்தம் ஆக முடியுமென்றால் தனது ஆத்மாவிற்கு மட்டும் பாலணை (கவனித்து கொள்வது) செய்துக் கொள்வது லி அதற்கு முன்னால் எம்மாத்திரம்? பலருடைய ஆசீர்வாதங்களை பெறுவது லி இந்த வருமானம் எவ்வளவு பெரியது. அந்த வருமானத்தில் ஐந்து ஆயிரம், ஐந்து இலட்சம் கூட சம்பாதிக்கலாம், ஆனால் இங்கு பல ஆத்மாக்களிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவது லி இது எவ்வளவு பெரிய வருமானம். மேலும் இது பலபிறவிகளுக்கு துணையாக வரும். அந்த ஐந்து

இலட்சம் எங்கு செல்லும்? விட்டிலோ அல்லது பேங்கிலோ (வங்கியில்) இருக்கும்.. எப்பொழுதும் உயர்ந்த இலட்சியத்தை வையுங்கள், சாதாரணமானதாக அல்ல. சங்கமயுகத்தில் இந்த ஒரு பிறவியில் இந்த எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையில் நிமித்தமானவராக ஆவதற்கான பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. சத்தியுகத்திலும் இதுபோன்ற வாய்ப்பு கிடையாது. வேலை வாய்ப்பிற்காக ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று நாளிதழ்களை பார்க்கிறீர்கள் அல்லவா. பாபா அவரே சேவைக்கான வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார். எனவே தகுதிவாய்ந்த வலது கரம் ஆகுங்கள். சாதாரண மான பிரம்மா குமாரி ஆக வேண்டாம். தகுதி வாய்ந்த சேவாதாரி ஆக வில்லை என்றால் சேவை செய்வதற்கு பதிலாக சேவையை பெற்றுக் கொள்கிறார்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர் ஆவது கடினமானது அல்ல. தகுதிவாய்ந்த சேவாதாரியாக இல்லாத பொழுது லி என்ன ஆகுமோ, இயலுமோ இயலாதோ என்ற பயம் ஏற்படுகிறது. தகுதி இல்லையென்றால் பயம் வருகிறது. யார் தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, கவலையற்ற மகாராஜாவாக இருக்கிறார்கள். ஸ்தூல மான தகுதிகளாக இருந்தாலும், ஞானத்தின் தகுதிகளாக இருந்தாலும் மனிதனை மதிப்பு உடையவராக மாற்றும். தகுதி இல்லையென்றால் மதிப்பும் இருக்காது. சேவை யின் தகுதி தான் அனைத்தையும் விட பெரியதாகும். அப்படிப்பட்ட தகுதிவாய்ந்த ஆத்மாவை எந்த விஷயமும் தடுத்து நிறுத்த முடியாது. தகுதி யுடையவர் ஆவது என்றால் எனக்கு ஒரே ஒரு பாபா மட்டும் தான். வேறு எந்த விஷயமும் இல்லை. கேட்டீர் களா குமாரிகளே! நல்லது.

குமாரர்களும் அதிகப்படியாக வந்துள்ளீர்கள். குமாரர்கள் மிகவும் ஒடிக் கொண்டேயிருக் கிறார்கள். சேவையிலும் மிக நன்றாக உற்சாகத்தோடு ஒடிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்திலிருந்து இதுவரை தடைகளற்ற குமாரர்களாக இருப்பது தான் அவர்களின் விசேஷத் தன்மை மற்றும் மகான் தன்மையாக இருக்கிறது. ஒருவேளை குமாரர்கள் மிகவும் தடைகளற்ற வர்களாக இருக்கிறார்கள் என்றால் அப்படிப்பட்ட குமாரர்கள் மிகவும் புகழுக்குரிய வர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் உலகத்தினர்கள் கூட குமாரிகளை காட்டிலும் குமாரர்கள் குமாரர்களாக (பிரம்மசரியம் பின்பற்றுவது) இருப்பது மிகவும் கடினம் எனப் புரிந்துள்ளார்கள். நீங்கள் தான் (உலகத்தினர்கள்) முடியாது என்று சொல்கிறீர்கள், ஆனால் நாங்கள் தடைகளற்ற குமாரர்களாக இருக்கிறோம் என்று உலகத்திற்கு சவால் விடுபவர்கள். அப்படி உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடியவர்கள் மகான் குமாரர்களாக இருக்கிறார்கள். பாப்தாதா அப்படிப்பட்ட குமாரர் களுக்கு எப்பொழுதுமே இதயபூர்வமாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். புரிந்ததா. அவ்வப் பொழுது மிக நன்றாக இருக்கிறீர்கள், அவ்வப்பொழுது ஏதாவது தடை ஏற்படுகிறதென்றால் மேலும் கீழும் ஆகிவிடுவது லி அவ்வாறு அல்ல. குமாரர்கள் என்றாலே பிரச்சனைக்குரியவர் ஆவதல்ல. பிரச்சனைகளில் தோல்வி பெறுபவர் அல்ல. குமாரர்கள், குமாரிகளை விடவும் நம்பர் முன்னால் செல்ல முடியும், ஆனால் தடைகளற்ற குமாராக இருக்க வேண்டும். ஏனெனில் பல குமாரர்கள் தங்களுக்கு ஒரு துணை இல்லை, யாராவது துணையாக இருக்க வேண்டும், ஒரு துணை வேண்டும் என்ற தடையை எதிர்க் கொள்கிறார்கள். அதனால் ஒரு சில குமாரர் கள் ஏதாவதொரு விதத்தில் ஒரு துணையை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் பேசுவதற்காக, அமர்வது போன்ற துணையை உருவாக்கிக் கொள்வதற்கான எண்ணம் வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட குமாரர்களும் இருக்கிறார்கள் – ஒரு பாபாவை தவிர வேறு எந்த துணையையும் உருவாக்குவ தில்லை, துணையை வைத்துக் கொள்வதில்லை. எப்பொழுதும் பாபாவின் துணையில் இருக்கக் கூடிய குமாரர்கள் சதா சுகமாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் எப்படிப்பட்ட குமாரர்களாக இருக்கிறீர்கள்? சின்ன சின்ன துணை வேண்டுமா? முழு குடும்பமே துணையாக இருக்கிறார்களா? ஆனாலும் சரி தான், ஆனால் இரண்டு லி மூன்று அல்லது ஒருவராவது துணையாக வேண்டும் என்பது தவறானது. எனவே இப்பொழுது நீங்கள் யார்? தடைகளற்றவர்களாக இருக்கிறீர்கள்

அல்லவா. புதியதாக வந்துள்ள குமாரர்களும் அதிசயம் செய்து காட்ட முடியும். அனைத்திற்கும் மேலாக உலகம் உங்களுக்கு முன்னால், பாபாவிற்கு முன்னால் தலை வணங்க வேண்டும் அல்லவா. எனவே குமாரர்களின் அதிசயங்கள் உலகத்தை தலை வணங்க வைக்கும். குமாரர்களின் அதிசயமே அதிசயம் தான் என்று உலகம் உங்களின் குணங்களை புகழ் பாடும். அதிகப்படியான குமாரர்கள் சேவையில் துணையில் இருந்துக் கொள்கிறார்கள், ஆனால் குமாரர்களுக்கு சிறிதளவு தோழமையில் இருப்பதற்கான எண்ணம் வருகிறது என்றால் பாண்டவ பவன் உருவாக்கி கொள்ளுங்கள், அப்படி ஏதாவது செய்துக் காட்டுங்கள். ஆனால் இன்று பாண்டவ பவன் உருவாக்கு கிறீர்கள் ஒருவர் கிழக்கு பக்கம் செல்வார், மற்றொருவர் வடக்கு பக்கம் செல்வார், அப்படிப்பட்ட பாண்டவ பவனை உருவாக்க வேண்டாம்.

பாப்தாதாவிற்கு குமாரர்கள் மீது பெருமை இருக்கிறது, தனியாக இருந்தாலும் முயற்சி செய்துக் கொண்டே செல்கிறார்கள். குமாரர்கள் தங்களுக்குள் இரண்டு மூன்று பேர் ஒன்றாக இணைந்து ஏன் செயல் பட முடிவதில்லை, பெண்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்பதல்ல. இரண்டு குமாரர்களும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒருவர் மற்றொருவர்களுக்கு தடையற்றவராக இருக்க வேண்டும். இப்பொழுது தனது நெருப்பை (கோபம் லி ஆவேசம்) காட்ட வேண்டாம். நேரத்திற்கு தகுந்தாற் போல் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தால் என்ன செய்து காட்ட முடியாது? மற்ற விஷயங்கள் வந்து விடுவதால், பாப்தாதா பாண்டவ பவன் உருவாக்குவதற்கு தடை விதித்துள்ளார். ஆனால் யாராவது உதாரணமாக இருந்து காட்டுங்கள். பாண்டவ பவனை உருவாக்கி விட்டு, அதன் பிறகு யார் நிமித்தமாக இருக்க தாதிகள், தீதிகள் இருக்கிறார்களோ, அவர்களின் நேரத்தை எடுத்துக் கொள்வது. அப்படி அல்ல தடைகளற்றவர்களாக இருங்கள், ஒருவர் மற்றொருவரோடு தகுதியுடைய குமாரர்களாக இருங்கள், பிறகு பாருங்கள் லி எவ்வளவு நல்ல பெயர் உருவாகும். கேட்டீர்களா குமாரர்களே தகுதி வாய்ந்த குமாரர்களாக ஆகுங்கள். தடைகளற்ற குமாரர்களாக ஆகுங்கள். சேவை செய்யும் இடத்தில் பிரச்சனைகுரியவர் ஆகாதீர்கள், ஆனால் பிரச்சனைகளை நீக்கக் கூடியவர் ஆகுங்கள். பிறகு பாருங்கள் குமாரர்களின் மதிப்பு அதிகரிக்கும். ஏனெனில் குமாரர்கள் இல்லாமல் சேவை செய்ய இயலாது. எனவே குமாரர்கள் என்ன செய்ய வேண்டும்? அனைவரும் சொல்லுங்கள் லி தடைகளற்ற குமாரர்களாக மாறி காட்டுவோம். (குமாரர்கள் பாப்தாதாவிற்கு முன்பாக எழுந்து நின்று உறுதிமொழி செய்தார்கள்). இப்பொழுது அனைவருடைய புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. நாங்கள் எழுந்தோம் ஆனால் யாரும் பார்க்க வில்லை என்று புரிந்துக் கொள்ள வேண்டாம். புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. நன்றாக இருக்கிறது லி தைரியமுள்ள குழந்தைகளுக்கு பாபாவின் உதவி இருக்கிறது, முழு குடும்பமும் உங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். நல்லது.

நாலாபக்கமுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சதா பாப்தாதா தனது அன்பான, ஒத்துழைப் பின் குடைநிழல் உட்பட இதயபூர்வமான வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். உள்நாடுலிவெளிநாட்டின் சேவையின் செய்திகள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு குழந்தைகளும் தனது மனதின் உண்மையான விஷயங்களை கொடுத்துக் கொண்டேயிருக் கிறார்கள். முக்கியமாக வெளிநாட்டின் கடிதங்கள் அதிகப்படியாக வந்துக் கொண்டே யிருக் கின்றன. எனவே சேவையின் செய்தியை கொடுக்கக் கூடிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்களுடன் இணைந்து சதா சுய சேவை மற்றும் உலக சேவையில் வெற்றியாளர் ஆகுக என்ற வரதானமும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். சுய முயற்சியின் விஷயத்தில் கொடுக்கக் கூடியவர்களுக்கு பாப்தாதா இந்தவொரு வரதானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் லி எப்படி உண்மையாக இதய பூர்வமாக பாபாவை திருப்தி செய்கிறீர்களோ, அதுபோல சதா தன்னையும் தனது சம்ஸ்காரங் களிடம், குழுவோடு இரகசியம் அறிந்த அதாவது திருப்தியாக இருங்கள். ஒருவர் மற்றவர்களின்

சம்ஸ்காரங்களின் இரகசியத்தை தெரிந்துக் கொள்வது, சூழ்நிலைகளை தெரிந்துக் கொள்வது லி இது தான் இராஜயுக்த மனநிலையாகும். மற்றப்படி உண்மையான மனதோடு தனது கணக்கு வழக்குகளை கொடுப்பது மற்றும் அன்பின் ஆன்மீக உரையாடலின் கடிதம் எழுதுவதோடு முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் அன்பான ஆன்மீக உரையாடல் சதா நெருக்கத்தில் அனுபவம் செய்ய வைக்கும். இது தான் கடிதங்களுக்கான பதிலளிப்பதாகும்.

கடிதங்கள் எழுதுவதில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். விரைவாக எழுதி முடித்து விடுகிறார்கள். பாரதவாசிகளும் விரிவான கடிதங்களை அனுப்ப ஆரம்பிக்க வேண்டாம். பாப்தாதா சொல்லியிருக்கிறார் லி இரண்டு வார்த்தைகளில் ஓ.கே (மிக நன்றாக இருக்கிறேன்) சேவை செய்திகளை எழுதுங்கள் மற்றபடி ஓ.கே. இதில் அனைத்தும் வந்துவிடும். இது போன்ற கடிதங்கள் படிப்பதும் எளிமையாக இருக்கும், எழுதுவதும் எளிமையாக இருக்கும். ஆனால் ஒருவேளை ஓ.கே வாக இல்லையென்றால் ஓ.கே என்று எழுத வேண்டாம். ஓ.கே ஆன பிறகு எழுதுங்கள். கடிதங்கள் படிப்பதில் கூட நேரம் தேவைப்படுகிறதல்லவா. எந்த செயல் வேண்டுமானாலும் செய்யுங்கள், எப்பொழுதும் சுருக்கமாக இனிமையாக இருக்கட்டும். யாராவது படித்தாலும் குஷியாக ஏற்படும். ஆகையால் இராமயணம் போன்றவற்றை எழுதி அனுப்ப வேண்டாம். புரிந்ததா. செய்திகளை கொடுக்க வேண்டும் ஆனால் செய்திகளை கொடுக்க தெரிந்துக் கொள்ள வேண்டும். நல்லது.

அனைவருக்கும் சுபபாவணை மற்றும் சுபவிருப்பத்தின் சூட்சமமான சேவையின் முக்கியத்து வத்தை தெரிந்துக் கொள்ளக் கூடிய மகான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:-

நிரந்தரமான யோகியாக இருப்பதை போன்று நிரந்தரமான வெற்றியாளர் ஆகிவிட்டால், உண்மையான சேவாதாரி ஆகிவிடலாம். ஏனெனில் வெற்றி அடைந்த ஆத்மா, ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் அனுபவத்தை பெறுகிறார்கள் என்றால் அவர் களுடைய இந்த மாற்றத்தை பார்த்து பல ஆத்மாக்களுக்கு சேவை தானாகவே நடந்துவிடும். அவர்களுடைய கண்கள் ஆன்மீக தன்மை அனுபவம் செய்ய வைக்கிறது, நடத்தை பாபாவின் சரித்திரத்தை சாட்சாத்காரம் செய்ய வைக்கிறது. நெற்றியிலிருந்து மஸ்தக்மணி (ஆத்மீக ஒளி) சாட்சாத்காரம் செய்ய வைக்கிறது. அப்படிப்பட்ட தனது அவ்யக்த முகத்தினால் சேவை செய்யக் கூடிய விசேஷமான ஆத்மாவை தான் உண்மையான சேவாதாரி என்று சொல்லப்படுகிறது.

சுலோகன்:-

அறிவிப்பு: நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்று கிழமையான இன்று ஐக்கிய நாடு சபை இன்றைய நாளை சாலை விபத்து நாளாக அங்கிகரித்துள்ளது. ஆகையால் இராஜயோகிகளாகிய சகோதர சகோதரிகள் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தந்தை பரமாத்மாவின் நினைவில் இருந்து தனது மாஸ்டர் இரக்க மனம் உடையவராக இருந்து சாலை விபத்தில் சரீரத்தை விட்ட அனைத்து ஆத்மாக்களுக்கும் தங்களது அமைதியின் அலைகளைத் தரவும் மேலும் நமது அன்பான சிரத்தாஞ்சாலியை செலுத்துவோம்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top