12 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

12 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

11 November 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! ஒவ்வொரு பாகமாக ஏற்று நடிக்கக் கூடிய பாகதாரி ஆத்மாவும் பாதி நேரம் சுகமான பாகத்தையும் பாதி நேரம் துக்கமான பாகத்தையும் ஏற்று நடிக்கிறது. இது கூட ஈஷ்வரிய சட்டமாகும்.

கேள்வி: -

தந்தை புரிய வைக்கும் விளக்கவுரை குழந்தைகளின் புத்தியில் சரியான முறையில் எப்பொழுது பதியும்?

பதில்:-

புத்தி சுத்தமாக ஆகும் பொழுது ! எந்த அளவிற்கு யார் முயற்சி செய்து துருவை நீக்கிக் கொண்டே செல்வார்களோ அந்த அளவிற்கு தந்தையின் விளக்கவுரை புத்தியில் பதிந்து கொண்டே போகும். இதுவரை குழந்தைகள் சதோ நிலை வரை கூட வந்து சேர்ந்திருப் பது அரிதாக உள்ளது. ஒவ்வொருவரது முயற்சியும் அவரவர்களது. ஒரு சிலர் சதோநிலையில் இருக்கிறார்கள். ஒரு சிலர் தமோ நிலையிலும் இருக்கிறார்கள். ஆனால் ஆக வேண்டியது சதோபிரதான நிலையாகும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

தூர தேசத்தில் இருப்பவர் .. ..

ஓம் சாந்தி. மேளா அல்லது கண்காட்சியில் குழந்தைகள் புரிய வைக்கும் பொழுது, எதெல்லாம் புரிய வைக்க பொருத்தமான விஷயங்களோ அவற்றை அவசியம் புரிய வைக்க வேண்டி இருக்கும். இதில் எல்லா சகோதர ஆத்மாக்களின் எல்லையில்லாத தந்தை ஒரே ஒருவர் ஆவார் என்பதை அவசியம் புரிய வைக்க வேண்டி இருக்கும். பாரதத்தின் ஆதி சனாதன தர்மம் என்பது என்ன என்பதையும் கேட்க வேண்டி இருக்கிறது. அவர்களோ ஆதி சனாதன இந்து என்றே நினைக்கிறார்கள். இஸ்லாமியர், பௌத்தர், கிறித்தவர்கள் ஆகி யோருக்கு தமது தர்மத்தை யார் மற்றும் எப்பொழுது ஸ்தாபனை செய்தார் என்பது தெரியும். பாரதவாசிகளினுடையது இந்து தர்மமா? இல்லை தேவி தேவதா தர்மமா? இதை யார் மற்றும் எப்பொழுது ஸ்தாபனை செய்தார்? இதை பாரத வாசிகள் முற்றிலுமே அறியாமல் உள்ளார்கள். ஆனால் இது புரிய வைப்பதற்கான மிக அவசியமான விஷயமாகும். இது யாருடைய கவனத்திலும் வருவதில்லை. பழமையான பாரத தேசம் என்று பாடப்படுகிறது. ஆனால் நம்முடையது ஆதி சனாதன தேவி தேவதா தர்ம மாகும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்து என்பது ஒரு தர்மமே கிடையாது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவி தேவதை தர்மம் இருந்தது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். உண்மையில் அந்த நேரத்தில் இலட்சுமி நாராயணர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களை இந்து என்று அழைத்துக் கொண்டிருக்க வில்லை. நல்லது. இந்து தர்மத்தின் நூற்றாண்டு கூட ஏதாவது இருக்க வேண்டும். விக்கிரம சகாப்தம் என்று கூறுகிறார்கள். தேவதைகள் மனித வழியில் செல்லும் பொழுது தங்களை இந்து என்று அழைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அப்பொழுதிலிருந்து விக்கிரம சகாப்தம் என்று கூறி இருக்கக் கூடும். எனவே பாதி பாதி ஆகி விட்டது. அச்சமயத்தில் அதை ஆதி சனாதன தேவி தேவதை என்று கூற மாட்டார்கள். தர்மம் ஸ்தாபனை ஆகும் பொழுது சகாப்தம் என்று கூறப்படு கிறது. அதை யார் ஸ்தாபனை செய்தார்? விகர்ம சகாப்தத்தை இராவணன் ஸ்தாபனை செய்தார். அச்சமயத்தில் எல்லோருடைய கர்மம் விகர்மம் ஆகிக் கொண்டே இருந்தது. கர்மம், அகர்மம், விகர்மம் என்ற பெயர்கள் உள்ளது அல்லவா? எனவே விக்கிரம இராஜாவின் சகாப்தமும் நடக்கிறது. அது பாதி காலம் ஆகி விட்டது. இப்பொழுது இந்த விக்கிரம சகாப்தம் இந்துக்களின் சகாப்தம் இல்லை அல்லவா? எனவே பாரதத்தினுடைய ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் எப்பொழுது ஸ்தாபனை ஆகியது என்று கேட்க வேண்டும். தெரிய வேண்டும் அல்லவா? இது மிகவும் நாசுக்கான விஷயங்கள் ஆகும். இது தெரிய வரும் பொழுது தான் புது உலகமாக இருந்தது என்று கணக்கு போட முடியும். பிறகு இரவு பகல் அவசியம் ஆகிறது. பாதி பாதி அவசியம் ஆகும். இது ஒரு ஈசுவரிய நியமம் ஆகும். இந்த விளக்கவுரையை அவசியம் கொடுக்க வேண்டும். இது போல யாரும் ஒரு பொழுதும் சமாசாரம் கொடுக்கவில்லை. கிறித்துவர் களினுடையதும் பாதி சுகம். பாதி துக்கத்தின் பாகம் நடக்கும். நாங்கள் புரிய வைக்கும் இந்த விஷயங்களில் முழு சரித்திரம் பூகோளம் வந்து விடுகிறது. யாரெல்லாம் மனிதர்கள் வருகிறார் களோ அவர்களுக்கு துக்கம் சுகத்தின் பாகம் கிடைத்துள்ளது. ஓரிரண்டு பிறவிகளுக்காக வருகிறார்கள் என்றாலும் கூட பாதி பாதி இருக்கும். இது ஒரு ஈசுவரிய சட்ட மாகும். கண்காட்சி யில் கேட்கும் பொழுது நன்றாக இருக்கிறது நன்றாக இருக்கிறது……. என்கிறார்கள். வெளியில் வந்த உடனேயே மறந்து விடுகிறார்கள். யாரோ ஒருவர் தான் கவனம் செலுத்துகிறார். ஒரு சிலர் ஒரு மாதமாக வந்து கூட பிறகு காணாமல் போய் விடு கிறார்கள். ஒரு சிலர் 10 நிமிடங்களில் புரிந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் 1 மணி நேரம். ஒரு சிலரோ சிறிது காலம் வந்து விட்டு போகப் போக களைத்து விடுகிறார்கள். இது போல சென்டர்களில் ஆகிக் கொண்டே இருக்கிறது. எப்படி தெய்வீக சம்பிரதாயம் ஆகிக் கொண்டே இருக்கிறது. இதுவும் அதிசயம் ஆகும் – புதிய உலகத்தின் தர்மம் பழைய உலகத்தில் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயங்கள் குழந்தை களாகிய உங்களுடைய புத்தியில் வரு கிறது. தந்தை மூலமாக நீங்கள் உங்களுடைய 84 பிறவிகள் பற்றி அறிந்துள்ளீர்கள். நான் 84 பிறவிகளின் கதையை கூற வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். எனவே அவசியம் கடைசியில் தான் வந்து கூறுவார் அல்லவா? துவாபரத்தின் இடையிலோ வந்து கூற முடியாது. ஏனெனில் பின்னால் வரக் கூடியவர்கள் இப்பொழுது இன்னும் ஜன்மமே எடுக்கவில்லை. இராஜயோகத்தின் ஞானம் துவாபரத்தில் கிடைக்க முடியாது. மகாபாரதப் போர் கூட துவாபரயுகத்தில் நடக்க முடியாது. மகாபாரதப் போருக்கு பின்னர் தான் சத்யுக ஸ்தாபனை ஆகிறது. அதாவது தேவி தேவதா தர்ம ஸ்தாபனை ஆகிறது. அதற்கு முன்பு பிராமண தர்மம் ஸ்தாபனை ஆகிறது. எனவே அவசியம் பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்திருக்க கூடும். எனவே பிராமணர்கள் ஜன்மம் எடுத்திருக்கக் கூடும் அல்லவா? விராட ரூபம் காண்பித்திருக் கிறார்கள். அதில் சிவனைக் காண்பிக்கவில்லை. பின் பிராமணர்களின் குடுமியையும் காண்பிக்க வில்லை. கண்காட்சியில் விராட ரூபத்தின் படம் இருப்பது அவசியம் ஆகும். பிரம்மா மூலமாக முதலில் அவசியம் பிராமணர்களைப் படைப்பார். பிறகு அவர் பிராமணர்களை எப்பொழுது மற்றும் எங்கே படைக்கிறார்? பிராமணர்களினுடையது சங்கமம் ஆகும். சூத்திரர்களினுடையது கலியுகம் ஆகும். இப்பொழுது நீங்கள் தங்களை பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் என்று அழைத்துக் கொள்கிறீர்கள். பிரஜை என்றாலே மனிதப் படைப்பு. எனவே அவசியம் பிராமணர்களாக இருப்பார்கள். கிருஸ்துவை கிறித்துவ தர்மத்தின் பிதா என்று கூறுவார்கள். இவர் பிரஜாபிதா ஆவார். பகவான் பிரம்மா மூலமாக மனித சிருஷ்டியைப் படைக்கிறார். அப்படியின்றி கிறிஸ்து மூலமாக, பௌத்தர்கள் மூலமாகப் படைக்கிறார் என்பதல்ல. மனித சிருஷ்டி ஆரம்பமே பிரம்மா மூலமாக ஆகிறது. எனவே அவசியம் முதன் முதலில் பிராமணர்களைத் தான் படைப்பார். பிராமணர்களை பிறகு தேவதையாக ஆக்குகிறார். விராட ரூபத்தை பாரதத்தில் தான் காண்பிக் கிறார்கள். மற்ற தர்மத்தினர் விராட ரூபத்தை அமைக்க முடியாது. இந்த புதுப் புது விஷயங்களை தந்தை தான் புரிய வைக்கிறார். புது கருத்துக்களும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பழைய கருத்துக்களும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் புதுப் புது குழந்தைகளுக்குக் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொஞ்சம் புதியது, கொஞ்சம் பழையது பாயிண்ட்ஸ் கிடைக்க வேண்டும். அ (தந்தை) மற்றும் ஆ (ஆஸ்தி) புத்தியில் இல்லாதவரை வேறு என்ன புரிந்து கொள்வார்கள். அ, ஆ என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை அனைவருக்கும் ஒருவரே ஆவார். அவர் அவசியம் வரவும் செய்கிறார். சிவஜெயந்தி பாரதத்தில் தான் கொண்டாடுகிறார்கள். ஆனால் சிவ ஜெயந்தி என்றால் என்ன என்பது பாரதவாசிகளுக்குத் தெரியாது. பிரம்மா விஷ்ணு சங்கரன் பற்றியும் தெரியாது. கிருஷ்ணர் பற்றியும் தெரியாது. ஸ்ரீலட்சுமி நாராயணரின் இராஜ்யம் எப்பொழுது இருந்தது, இதுவும் தெரியாது. கிறிஸ்து வாழ்ந்து சென்றுள்ளார். அவருடைய போப்களின் முழு பட்டியல் இருக்கும். ஆனால் இந்த இலட்சுமி நாராயணர் பாரதத்தில் ஆட்சி புரிந்து சென்றுள்ளார்கள் என்பது பாரதவாசிகளுக்குத் தெரியாது. எதெல்லாம் சித்திரங்கள் அமைக் கிறார்களோ, பூஜை செய்கிறார்களோ அவர்களுடைய தொழிலை முற்றிலுமே அறியாமல் இருக்கிறார்கள். தேவதைகளிடமிருந்து பிறகு க்ஷத்திரியர்கள் இராஜ்யம் எப்படி எடுத்தார்கள்? சண்டையிட்டார்களா என்ன? இராஜ்யம் மாறுகிறது என்றால் அவசியம் யாராவது வெற்றி அடைந்திருப்பார்கள். அங்கு இந்த விஷயமே கிடையாது. அவர்கள் நல்ல முறையில் இராஜ்யத்தை அளிப்பார்கள். மனிதர்கள் எவ்வளவு இருளில் இருக்கிறார்கள்! உங்களுக்கு எவ்வளவு வெளிச்சம் (தெளிவு) கிடைக்கிறது! எல்லா விஷயங்களும் யாருக்காவது நினைவு இருக்கும் என்றும் கூற முடியாது. இல்லை என்றால் பாபா என்ன புரிய வைத்தாரோ அவை அனைத்தையும் கண்காட்சியில் புரிய வைக்க வேண்டும். கண் காட்சியில் ஒரு நாள் வருகிறார் கள், பிறகு அடுத்த நாள் வருவதே இல்லை. புரிந்திருக்கிறார்களா இல்லையா என்பது எதுவுமே தெரிவதில்லை. தேவி தேவதா தர்மம் எங்கே போயிற்று என்பது முதலில் எங்களுக்குத் தெரியாமலிருந்தது என்று அபிப்பிராயத்தில் எழுத வைக்க வேண்டும். சகாப்தத்தைக் கூறுங்கள். இந்து தர்மம் எப்பொழுது முதல் ஆரம்பமாகியது? ஒவ்வொருவர் என்னென்ன புரிய வைக் கிறார்கள். இது யாருக்கும் தெரிய வருவதில்லை. அபிப்ராயத்தை எழுத வைப்பவர்களும் இருக்க வேண்டும். நீங்கள் நிரூபித்துக் கூறுகிறீர்கள். இது 5 ஆயிரம் வருடங்களின் சக்கரம் எழுதுங்கள். சகாப்தம் ஆகியவை பற்றி யாருக்குமே தெரியாது. இந்த விஷயங்களை எந்த சாஸ்திரங் களிலாவது கேட்டிருக்கிறீர்களா? பிறகு நாம் எங்கிருந்து கற்றுக் கொண்டோம்? எனவே நமக்கு கற்பிப்பவர் அவசியம் பகவானாக இருப்பார். பகவானைத் தவிர இந்த விஷயங்களை யாருமே புரிய வைக்க முடியாது. அவர் அவசியம் யாருடைய உடலிலாவது வருவார். பரமாத்மா ஞானக் கடல் ஆவார். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார். முதல் இடை கடை பற்றிய ஞானம் அளிக்கிறார். அவர் பெயர் சிவன் என்பதாகும். பக்தி மார்க்கத்தில் அவருக்கு ஏராளமான பெயர்கள் வைத்து விட்டுள்ளார்கள். குறைந்தது அவரவர் மொழிகளில் அவருக்கு ஒன்றரை இலட்சம் பெயர் வைக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு தினமும் எவ்வளவு புரிய வைக்கிறார்! ஆனால் இன்னும் சுத்தமான புத்தியுடையவர் ஆகவில்லை. முயற்சி செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் துரு நீங்கிக் கொண்டே போகும். இதுவரைக்கும் குழந்தைகள் சதோ நிலைவரைக்கும் வந்து சேர்ந்திருப்பது அரிதாக உள்ளது. அவர்களில் ஒரு சிலர் தமோ, சதோபிரதான நிலை, சதோ, ரஜோ, தமோ என்று வரிசைக்கிரமமாக உள்ளார்கள். ஒவ்வொருவருடைய முயற்சி அவரவருடையது நடக்கிறது. இச்சமயம் மனிதர்களுடையது விநாச காலத்தில் அன்பில்லாத புத்தி ஆகும். பாண்டவர் களினுடையது மட்டுமே அன்பான புத்தி ஆகும். அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அசுரர் மற்றும் தேவர் இருவருமே மனிதர்கள் ஆவார்கள். அப்படியின்றி அசுரர்களுக்கு ஏதோ பயங்கரமான முகங்கள் இருக்கும் என்பதல்ல. அவர்கள் சண்டையில் குண்டுகள் கேஸ் அகியவற்றிலிருந்து தப்பித்து இருப்பதற்காக ஆடை அணிகிறார்கள். அவர் கள் அசுர சம்பிரதாயத்தினர் ஆவார்கள். நீங்கள் இராம சம்பிரதாயத்தினர் ஆவீர்கள். ஏனெனில் நீங்கள் 5 விகாரங்களை விட்டிருக்கிறீர்கள். தூய்மையாக ஆகி முழு உலகத்தின் மீது நீங்கள் ஆட்சி புரிவீர்கள். உங்களுக்கு யாருடனும் சண்டை கிடையாது. பாபா எவ்வளவு விஷயங் களைப் புரிய வைக்கிறார். ஒரு சிலர் 1 – 2 மாதம் வந்து பிறகு களைத்து விடுகிறார்கள். பிறகு அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிய வைக்கப் படுகிறது. சாதாரண பிரஜைகளில் வருவார்கள். பிரஜைகள் ஏராளமானோர் ஆகக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது கூட பாருங்கள் பிரஜைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் உணவு குறைவின் காரணமாக மனிதர்கள் பசியில் இறந்து விடுகிறார்கள். ஒரு சில இடங்களில் மழை இல்லாத காரணத்தால் பஞ்சம் ஏற்பட்டு விடுகிறது. அரசாங்கம் என்ன செய்ய முடியும்? இது இயற்கைச் சேதங்களாகும். இப்பொழுது கனத்த மழை பெய்யும். விநாசமாகப் போகிறது. எனவே நீங்கள் என்னென்ன சாட்சாத்காரம் செய்தீர்களோ (காட்சி தெரிதல்) அவை எல்லாமே நடைமுறையில் நடக்கும். சாட்சாத்காரத்தில் ஒரு கிருஷ்ணரின் அரண்மனையைப் பார்ப்பீர்கள். முழுமையாக எல்லாமே பார்க்க முடியாது. நல்லது. விநாசம் நடந்தது என்று பார்த்தார்கள். சரீரத்தை விட்டார்கள் என்றால், எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். முழு உலகமே முடிந்து விடப் போகிறது. பிறகு உலகமே மாறிப் போய் விடும். உங்களுக்கு எல்லாமே மறந்து போய் விடும். இப்பொழுது உங்களுக்குள் ஆரம்பம் முதல் கடைசி வரையிலான எல்லா ஞானமும் உள்ளது. மூலவதனம், சூட்சும வதனத்தின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற முழு ஞானத்தை தந்தை அளித்துள்ளார். யாருக்குள் எவ்வளவு அதிகமான ஞானம் உள்ளதோ அந்த அளவிற்கு அதிகமாக போதை இருக்கும். இப்பொழுது நீங்கள் மாஸ்டர் நாலேஜ்ஃபுல் ஆகி விட்டீர்கள். பிறகு விநாசம் ஆகி விடும் பொழுது நமது சரீரம் அழிந்து போய் விடும். இந்த பிறவி வரை மட்டும் தான் ஞானம் இருக்கும். எனவே நாம் இந்த சரீரத்தை விட்டு விட்டு போய் இளவரசர் இளவரசி ஆவோம் என்று அந்த அளவிற்கு புத்தியில்போதை இருக்க வேண்டும். மனிதர்கள் படித்து விட்டு போய் சம்பாத்தியம் செய்கிறார்கள். நான் ஒன்றும் சம்பாத்தியம் செய் வதில்லை என்று தந்தை கூறுகிறார். நான் உங்களுக்குக் கற்பித்து எனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் சம்பாத்தியம் செய்கிறீர்கள். பிறகு இழக்கவும் செய்கிறீர்கள். உங்களுக்கு முழுமையாக முதல் இடை கடை பற்றிய ஞானம் உள்ளது. பாபாவிற்கும் ஞானம் உள்ளது. அதை பாகத்திற்கேற்ப வந்து புரிய வைக்கிறார். பிறகு பாபா நிர்வாண தாமம் சென்று விடுகிறார். அனைத்து ஆத்மாக் களும் சென்று விடுவார்கள். பிறகு அங்கு யார் யாருடைய பாகம் இருக்குமோ அவர்கள் இராஜதானியில் வந்து சென்று கொண்டே இருப்பார்கள். மீதி நேரம் சாந்திதாமத்தில் இருப்பார் கள். உயர்ந்த பதவியை அடைவதற்காக குழந்தைகளுக்கு எவ்வளவு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. புதியவர்கள் யாருக்குமே புத்தியில் பதிய முடியாது. ஞானம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று அவ்வளவு மட்டும் கூறுவார்கள். பிறகு அவர்களுடைய தொழில் காரியங்களில் சென்று விடுவார்கள். வெளியில் செல்வதால் மாயை மறக்க வைத்து விடுகிறது. பூட்டால் பூட்டி விடுகிறது. ஒரு சில குழந்தைகளுக்கு அப்பேர்ப்பட்ட நிலைமை ஆகிறது. முழுமையாக தாரணை ஆவதில்லை. முதலில் உள்ளுக்குள் யார் வந்தாலும் இவர்கள் எல்லோருமே பிரம்மா குமார் குமாரிகள் ஆவார்கள் என்று கூறுங்கள். சிவபாபா பிரம்மா மூலமாக விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கலியுகத்தின் கடைசியாகும். பிறகு சத்யுகமாக மாறிவிடும். எனவே பிரம்மாவின் குழந்தைகள் எல்லோரும் பிரம்மா குமாரர்கள் ஆவார்கள். பிறகு தேவதை ஆகிவிடுவார்கள். இது போல சேவை சமாசாரம் பாபாவிற்கு கிடைத்துக் கொண்டே இருந்தால் பாபா ஆலோசனை அளிப்பார். ஆனால் பாபாவிற்கு முழுமையாகக் கூறுவதில்லை. நிறைய பேருக்கு கிரகச்சாரம் பிடிக்கிறது. இப்பொழுது பார்த்தீர் களானால் முதல் தரம், நாளைக்குப் பார்த்தீர்களானால் மூன்றாம் தரம் ஆகி விடுகிறார்கள். கிரகச்சாரம் பிடிக்காமல் இருந்திருந்தால் ஆச்சரியப்படும் வகையில் ஓடிப் போய் விடுபவர்களாக ஏன் ஆகிறார்கள்? எந்த குழந்தைகள் கண்காட்சிகளில் நல்ல முறையில் போய் சேவை செய்கிறார்களோ அவர்கள் தங்கள் நேரத்தையும் பயனுள்ளதாக ஆக்குகிறார்கள். பாப்தாதாவை ஒரு பொழுதும் விடக் கூடாது. பாபா குழந்தை களுக்கு ஏதாவது கூறவும் செய்வார். பின் உடனே அன்பும் செய்வார். பாபாவினுடைய மனதில் குழந்தைகளினுடையது எதுவும் இருப்பதில்லை. இது அறிவுரை கூறுவதற்காக மட்டுமே கற்பிக்கிறார்.

இங்கு குழந்தைகளுக்கு டோலி. இனிப்பு வழங்கப்படுகிறது. ஏனெனில் எல்லையில்லாத தந்தை ஆவார் அல்லவா? லௌகீக தந்தை கடையிலிருந்து வருகிறார் என்றால் அவசியம் குழந்தைகள் நினைவிற்கு வருகின்றனர். தந்தை ஏதாவது டோலி(இனிப்பு) வாங்கி கொண்டு வருவார். வெளியில் சென்டரில் டோலி கிடைப்பதில்லை. இங்கு தந்தை முன்னால் அமர்ந்துள்ளார். பாபா எல்லாமே குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். துவாபரத்தில் சதோபிரதானமாக இருந்த ரிஷி முனிவர்களின் புத்திக்கு பூட்டு பூட்டப்பட்டு இருக்கவில்லை. அவர்களும் படைப்பவர் மற்றும் படைப்பை தாம் அறியாமல் இருக்கிறோம் என்று கூறி கொண்டிருந்தார்கள். இன்று கலியுகத்தில் எல்லோருடைய புத்திக்கும் பூட்டு பூட்டப்பட்டிருக் கிறது. பிறகு அவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்? சாஸ்திரங்களை அந்த ரிஷி முனிவர்கள் தான் படித்துக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு புரிய வைப்பதற்காக நிறைய பாயிண்ட்டுகள் கிடைக்கின்றன. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. பகவான் நமக்கு கற்பித்து பகவதி- பகவானாக ஆக்குகிறார் என்ற இதே குஷி அல்லது போதையில் இருக்க வேண்டும். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை புத்தியிலிருத்தி மற்றவர்களுக்குக் கூற வேண்டும்.

2. எப்படி தந்தை எந்த ஒரு குழந்தையின் விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்வ தில்லையோ அதே போல யாருடைய விஷயத்தையும் மனதில் வைக்க கூடாது.

வரதானம்:-

எந்த ஒரு காரியத்தையும் கர்மயோகி என்ற நிலையில் பரிவர்த்தனை செய்யுங்கள். வெறும் காரியங்கள் மட்டுமே செய்பவர்களாக இருக்காதீர்கள், ஆனால் கர்மயோகியாக இருங்கள். கர்மம் என்றால் விவகாரம் மற்றும் யோகா என்றால் பரமாத்ம நினைவு – இரண்டும் சமநிலையாக இருக்க வேண்டும். சரீர நிர்வாகத்தின் காரணமாக ஆத்ம நிர்வாகத்தை மறந்து விடக் கூடாது. எந்த காரியம் செய்தாலும் அது ஈஸ்வரிய சேவையின் பொருட்டு இருக்க வேண்டும். இதற்கு சேவைக்கு நிமித்தமானவன் அல்லது செய்பவன் என்ற நினைவிற்கான சங்கல்பம் சதா இருக்க வேண்டும். செய்விப்பவரின் நினைவு மறக்காமல் இருக்கும் போது சேவையில் உருவாக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top