11 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 10, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! இந்த படிப்பு உங்களை நரனிலிருந்து நாராயணராக நாரியிலிருந்து லஷ்மியாக மாற்றுகிறது. ஆகையால் படிப்பின் மீது மிக மிக கவனம் வைக்க வேண்டும்.

கேள்வி: -

வேறு எந்த தீர்த்த யாத்திரைக்கு அல்லது காட்டிற்குச் சென்றாலும் கிடைக்காத எந்த ஆஸ்தி பாபா மூலமாக குழந்தைகளுக்குக் கிடைக்கிறது?

பதில்:-

பாபா மூலமாக குழந்தைகளுக்கு சுகம் சாந்தி செல்வத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. அது வேறு எங்கும் கிடைக்காது. மனிதர்கள் அமைதிக்காக காட்டிற்குச் செல்கிறார்கள். ஆனால் அமைதி ஆத்மாக்களாகிய நமது சுய தர்மம் என நீங்கள் அறிகிறீர்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உங்களை அடைந்து நாங்கள் உலகை அடைந்தோம்…

ஓம் சாந்தி. பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஏனென்றால் நீங்கள் இப்போது பணக்காரர் ஆகிவிட்டீர்கள். மற்ற மனிதர்கள் அனைவரும் ஏழைகளாக இருக்கின்றனர். செல்வந்தர் என்று ஒரு பாபாவிற்குத் தான் கூறப்படுகிறது. வீட்டில் யாராவது சண்டையிட்டுக் கொள்கின்ற போது உங்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாதா என கேட்கப்படுகின்றது. இப்போது முழு உலகில் உள்ள மனிதர்கள் சண்டையிட்டுக் கொள் கிறார்கள். ஒருவர் மற்றொருவரை கொலையும் செய்து விடுகிறார்கள். இந்த காமம் மிகப் பெரிய எதிரி, இதன் மூலம் அனைவரும் முதல், இடை, இறுதி வரை துக்கம் அடைகிறீர்கள் என்று தந்தை தான் வந்து புரிய வைக்கிறார். இப்போது நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து. எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியை அடைந்து கொண்டிருக் கிறீர்கள். எங்களுக்கு அமைதி வேண்டும் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அமைதி என்றால் என்ன? எங்கிருந்து கிடைக்கிறது? காட்டிற்குப் போவதால் அமைதி கிடைக்குமா? சுகம், சாந்தி எப்போது யார் கொடுக்கிறார்கள்?. தீர்த்த யாத்திரைகளுக்கு எதற்காகச் செல்கிறார்கள்? இதையும் யாரும் அறியவில்லை. பக்தி செய்வதால் பகவான் கிடைப்பார் என கேட்டிருக்கிறார்கள். பகவானைப் பற்றி அறியவில்லை. நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சுகம் சாந்தி கொடுக்கிறேன் என பாபா கூறுகின்றார். இப்போது சுகம் சாந்தி செல்வம் யாரிடமும் இல்லை. கொடுப்பவரைப் பற்றியும் யாரும் அறியவில்லை. துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரே என்று நீங்கள் பாடுகிறீர்கள் என தந்தை வந்து புரிய வைக்கிறார். ஓ, பதீத பாவனா வந்து தூய்மை யாக்குங்கள் என்று காந்திஜியும் அழைத்தார். பதீத பாவன சீதாராம் என பாடுகிறார்கள். ஆனால் பொருள் புரிவ தில்லை. பக்தி ஏன் செய்கிறார்கள். அதனால் என்ன கிடைக்கும்? எதையும் அறிய வில்லை. இந்த பக்தியும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. துவாபர யுகத்திலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது. இராவணன் என்றால் என்ன என மனிதர்கள் அறியவில்லை. எது வரை இராவணணை எரித்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள். அவருடைய பிறவி எப்போது உண்டானது. இராவணனின் பூதத்தை உருவாக்கி எரிக்கிறார்கள். ஆத்மா ஒரு போதும் எரிவ தில்லை. இந்த விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய நீஙகள் தான் அறிகிறீர்கள். இன்றிலிருந்து 5000 வருடத்திற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது. இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. லஷ்மி நாராயணனுக்குத் தான் பகவான் பகவதி என்று கூறப்படுகிறது. பிறகு திரேதாவில் இராம இராஜ்யம் இருந்தது. அவர்களுக்கு இந்த இராஜ்யம் எப்படி கிடைத்தது? பிறகு அந்த இராஜ்யம் எங்கே போனது? எதையும் அறிய வில்லை. அதாவது படைப்பின் முதல், இடை, இறுதியைப் பற்றி யாரும் அறியவில்லை. நீங்கள் இந்த ஞானத்தினால் சொர்க்கத்தின் அதிபதியாகிறீர்கள். பள்ளிக் கூடத்தில் படிப்பினால் சிலர் வக்கீலாக, சிலர் நீதிபதி யாக மாறுகிறார்கள். லஷ்மி நாராயணனாக மாறுவதில்லை. இவர்கள் எந்த படிப்பினால் இந்த பதவியை அடைந்தனர். இது யாருக்கும் தெரியவில்லை. பகவான் வாக்கு- நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். நான் உங்களை இப்படி மாற்றுகிறேன் என கூறக்கூடியவர்கள் யாரும் இல்லை. இந்த லஷ்மி நாராயணனின் வம்சம் இந்த படிப்பினால் உருவாகிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். உலகத்தில் இந்த விஷயங்களை யாரும் அறியவில்லை. சத்யுகத்திற்கு லட்சகணக்கான வருடங்கள் என கூறிவிட்டனர் என்றால், லஷ்மி நாராயணன் எங்கே சென்றனர் என்பதை எப்படி அறிவார்கள்? பாரதத்தில் லஷ்மி நாராயணனின் சித்திரங்கள் நிறைய இருக்கிறது என பார்த்துக் கொண்டிருக் கின்றீர்கள். நிறைய கோவில்களை உருவாக் யிருக்கிறார்கள். இதன் மூலமாக நமக்கு செல்வம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். மகாலஷ்மி யிடமிருந்து ஒவ்வொரு தீபாவளி அன்றும் செல்வத்தைக் கேட்கிறார்கள். ஆனால் நிச்சயமாக நாராயணன் இருப்பார். தீபாவளி அன்று பூஜை செய்கிறார்கள். பிறகு அவர்களுக்கு அற்ப கால சுகத்தின் பாவனை நிறைவேறி விடுகிறது. அப்போது லஷ்மியிடமிருந்து செல்வம் கிடைக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் லஷ்மி நாராயணன் இருவரும் இருக்கிறார்கள். லஷ்மி, மகாலஷ்மி இருவரும் தனித்தனி கிடையாது. இந்த விஷயங்களை மனிதர்கள் அறியவில்லை. பாபா தான் புரிய வைக்கிறார். தற்காலத்தில் மனிதர்கள் ஈஸ்வரனை கல்லிலும் முள்ளிலும் இருக்கிறார் என கூறி விடுகிறார்கள். அனைவரும் கல்புத்தியாக இருக்கின்றனர் என பாபா கூறு கின்றார். சத்யுகத்தில் தங்க புத்தியாக இருக்கும். லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்த போது தங்கம் வைரத்தின் மாளிகை இருந்தது. இது 5000 வருடத்தின் விஷயம் ஆகும். சாஸ்திரங் களில் கல்பத்தின் ஆயுள் லட்சக் கணக்கான வருடங்கள் என எழுதப்பட்டிருக்கிறது. பக்தி மார்க்கத்தில் ஏணிப்படியில் கீழே இறங்க வேண்டியிருக்கிறது என பாபா கூறுகிறார். நாடகத்தின் படி துர்கதி ஏற்படும் போது தான் நான் வருகிறேன். வந்து புதிய உலகத்தை உருவாக்குவேன். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புது உலகத்திற்கு அதிபதியாவதற்காக இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மகாபாரத போரினால் பழைய உலகம் அழியும் என நீங்கள் அறிகிறீர் கள். இந்த நாடகம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. சத்யுகத்தில் தேவி தேவதை களின் இராஜ்யம் இருந்தது. 5000 வருடம் ஆகிவிட்டது. 2500 வருடங்கள் சூரிய வம்சம் சந்திர வம்சத்தின் இராஜ்யம் நடந்தது. பிறகு துவாபர யுகத்திலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகியது. மனிதர்கள் தூய்மையற்றவர்களாக ஆகிக் கொண்டே போகிறார்கள். நம்மை யார் பதீதமாக்கியது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. நாம் தூய்மையாக இருந்தோம் பிறகு எப்படி பதிதமாக மாறினோம். தந்தை வந்து புரிய வைக்கின்றார். இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகியதிலிருந்து நீங்கள் பதீதமாகிக் கொண்டே போகிறீர்கள். இராவணன் பிறந்து இப்போது 2500 வருடங்கள் ஆகி விட்டது. சிவபாபா பிறவி எடுத்து 5000 வருடங்கள் ஆகிவிட்டது. அவருடையது இராம இராஜ்யம், அவனுக்கு இராவண இராஜ்ஜியம் என கூறப் படுகிறது. உண்மையில் இராமர் என்று கூறக்கூடாது. தற்காலத்தில் மனிதர்களின் பெயரை இராமச்சந்திரன், கிருஷ்ண சந்திரன் என வைக்கிறார்கள். 5000 வருடங்களுக்கு முன்பு பாரதம் தங்கப்பறவையாக இருந்தது. அதற்கு தங்க உலகம் என்று கூறப்படுகிறது. வைகுண்டம் இருந்தது. ஆனால் எங்கே இருந்தது. இதை யாரும் அறியவில்லை. ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? சிருஷ்டி என்றால் என்ன? எதையும் அறிய வில்லை. அப்போது தான் அவர்களுக்கு கீழான புத்தி என கூறப்படுகிறது. ரிஷி, முனி போன்றோர் கூட படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, இறுதியை அறியவில்லை. எனவே எங்களுக்கு தெரியாது, தெரியாது என்கிறார்கள். தந்தை பற்றியும் அறியவில்லை. ஆஸ்தியை பற்றியும் அறியவில்லை. பாபா மூலமாக உலகத்தின் இராஜ்ய பதவியே ஆஸ்தியாகக் கிடைக்கிறது. அதையும் அறியவில்லை. இப்போது முழு உலகத்தின் முதல், இடை, இறுதியை நீங்கள் அறிகிறீர் கள். எனவே, நீங்கள் தான் டபுள் அகிம்சையாளர்கள். அமைதி யாரிடமிருந்து எங்கிருந்து கிடைக்கிறது என்பது மனிதர்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும் என்று சன்னியாசிகளிடம் சென்று கூறுகிறார்கள். இப்போது நமக்கு அமைதி இங்கே எங்கிருந்து கிடைக்கும். கர்மம் செய்ய வேண்டும் அல்லவா? சாந்தி தாமத்தில் தான் அமைதி கிடைக்கும். ஒரு வேளை வீட்டில் ஒருவர் அசாந்தி அடைந்து விட்டால் முழு வீடும் அசாந்தி அடைந்து விடும். இனிமையான இல்லத்தில் அமைதி கிடைக்கிறது. பிறகு அங்கிருந்து ஆத்மாக்களாகிய நம்மை புது உலகில் பாகத்தை நடிப்பதற்காக பாபா அனுப்பி விடுகிறார். பாபா நரகத்திற்கு அனுப்ப மாட்டார். சாந்திதாமத்திலிருந்து சுகதாமத்திற்குப் போவீர்கள். இது பகவானின் பாடசாலை என நீங்கள் அறிகிறீர்கள். இது ஒன்றும் சத்சங்கம் கிடையாது. இங்கே குழந்தைகளுக்கு முன்பு பகவான் வாக்கு நடைபெறுகிறது. நிராகார் சிவபாபா சரீரத்தில் பிரவேசம் ஆகி, குழந்தைகளாகிய உங்களிடம் பேசுகிறார். ஆத்மா கூட சரீரத்தில் இருக்கிறது அல்லவா? ஆத்மாவிற்கு கர்மேந்திரியம் கிடைக்கும் போது பேசுகின்றது. இப்போது ஆத்மாக் களுக்கு பாபா வந்து படிக்க வைக்கின்றார். பதீத பாவனா….. அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளலே, விடுவிக்கக் கூடியவர், வழிகாட்டி என பரமாத்மாவை அழைக்கிறார்கள். ஆனால் எப்படி விடுவித்து வழி காட்டியாக இருந்து எங்கே அழைத்துச் செல்வார் என்பதை அறியவில்லை. வெறுமனே அலறிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இறை தந்தை வந்திருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். அவரே வந்து உங்களை சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். பிறகு நீங்கள் சுகதாமத்திற்குச் சென்று விடுவீர்கள். பாபா ஒரேமுறை வந்து அனைவருக்கும் வழிகாட்டியாகின்றார். பிறகு புது உலகில் பாபா வழிகாட்ட மாட்டார். இச்சமயம் மனிதர்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கின்ற காரணத்தால் நாம் எப்படி வீட்டிற்குத் திரும்பிப் போவது என்பதை அறியவில்லை. பறக்க முடியாது. அங்கே செல்வதற்காக நிறைய பக்தி செய்கிறார்கள். ஆனால் நாம் தூய்மை யற்றவர்களாக இருக்கிறோம். ஆகையால் போக முடியாது என்பதை அறியவில்லை. பதீத பாவனர் தந்தை வந்து தூய்மையாக மாற்றினால் தான் நாம் போக முடியும். இப்போது பாபா தூய்மையாக மாறுவதற்காக உங்களுக்கு வழிகாட்டுகிறார். அனைவரையும் அழுக்கிலிருந்து தூய்மையாக மாற்ற வேண்டும். இப்போது எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள். சத்யுகத்தில் தேவதைகளின் இராஜ்யம் இருந்த போது புதிய மரத்தில் 9 லட்சம் இருக்கிறார்கள். முதலில் சில இலைகள் இருக்கும் அல்லவா? பிறகு பெரியதாகிக் கொண்டே போகிறது. முதலில் ஒரு தர்மத்தை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் தங்களை நரகவாசி என நினைக்க மாட்டீர்கள். மற்ற அனைவரும் நரகவாசியாவர். ஆனால் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை. இச்சமயம் அனைவரின் முகமும் மனிதர்கள் போன்று இருக்கிறது. நடவடிக்கைகள் குரங்கு போன்று இருக்கிறது. பெரிய பெரிய இராஜாக்கள் கூட லஷ்மி நாராயணனின் பாதங்களில் தலை வணங்குகிறார்கள். இப்போது அவர்கள் யாரும் தூய்மை யற்றவர்களை தூய்மையாக மாற்ற மாட்டார்கள். மேலும் அவர்கள் யாரும் இரக்க மனம் உடையவர் கிடையாது. யாராவது துக்கம் அடையும் போது அவர்கள் மீது இரக்கம் காட்டப் படுகிறது. இரக்க மனம் உடையவர் ஒரேயொரு தந்தை தான். தந்தை தான் வந்து கல்புத்தி உடையவர்களை தங்க புத்தி உடையவராக மாற்றுகிறார். இப்போது நீங்கள் தேவதையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். இதுவே நரனிலிருந்து நாராயணனாக மாறக் கூடிய பாட சாலை ஆகும். இது இராஜயோகம் ஆகும். ரிஷி, முனி போன்ற யாரும் கீதையின் இராஜயோகத்தை யார் கற்பித்தார் என்பதை அறியவில்லை. கீதையை முற்றிலும் மாற்றி விட்டனர். கிருஷ்ணர் இராஜ யோகத்தைக் கற்பித்தார் என நினைக்கிறார்கள். கிருஷ்ண பகவான் வாக்கு-மன்மனாபவ என்கிறார்கள். அவரோ சத்யுகத்தின் இளவசரன் ஆவார். அவர் சங்கமயுகத்தில் இராஜயோகத்தைக் கற்று இராஜ்ஜிய பதவி அடைகிறார். அவரை பகவானாக்கி விட்டனர். நிறைய மனிதர்கள் கீதையைக் கேட்கிறார் கள். ஆனால் ஒருவருக்குக் கூட கீதையின் பகவான் சிவன் தான், கிருஷ்ணர் கிடையாது என்பது தெரியவில்லை. அனைத்தும் ஒன்றே என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர் களிடம் தான் தலையைப் போட்டு அடித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. கிருஷ்ணர் தான் பகவான் என 63 பிறவிகளாக நினைத்து வந்தனர். துவாபர யுகத் திலிருந்து சாஸ்திரங் களை உருவாக்கினர். நிச்சயமாக முதன் முதலில் கீதை உருவாகி இருக்கும். இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும். ஞான மார்க்கத்தின் சாஸ்திரம் ஒன்று கூட இல்லை. கீதை தான் நம்பர் ஒன் ஆகும். பிற்காலத்தில் இந்த வேதம் உபநிடதங்கள் உருவாகியுள்ளன. அவைகள் அனைத்தும் கீதையின் குழந்தைகளாகும். அவைகளைப் படித்து படித்து கீழே இறங்கிக் கொண்டே வந்திருக்கிறார்கள். இப்போது 84 பிறவிகள் முடியப் போகிறது. இப்போது முதல் நம்பருக்குப் போக வேண்டும். நீங்கள் இப்போது மீண்டும் சத்யுகத்தின் லஷ்மி நாராயணன் ஆவதற்காக இங்கே படிக்க வந்துள்ளீர்கள். அனைவரும் லஷ்மி நாராயணன் ஆக முடியாது. இந்த இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் யார் இராஜ்யத்தை உருவாக்கினர். இது யாருடைய புத்தியிலும் வராது. கலியுகத்தில் இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதற்கு தானியங்கள் கூட கிடைப்பதில்லை. சத்யுகத்தில் லஷ்மி நாராயணனின் இராஜ்யம் மட்டும் தான் இருக்கும். இங்கே எத்தனை தர்மங்கள் (மதம்) இருக்கின்றது, பாருங்கள். மிகப் பெரிய மகாபாரத போர் எதிரிலேயே இருக்கிறது. இருப்பினும் மனிதர்களின் கண் திறக்கவில்லை. இந்த மிகப் பெரிய போர் போன கல்பத்திலும் நடந்தது, அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று, எதையும் அறியவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் பிராமணன் பிராமணிகள் தான் அறிகிறீர்கள். உங்களை பாபா பிரம்மா மூலமாக தத்தெடுத்திருக்கிறார். பகவான் உங்களைப் படிக்க வைத்து உங்களை லஷ்மி நாராயணனாக மாற்றுகிறார் என்றால், நன்றாகப் படிக்க வேண்டும். பாபா வையும் புது உலகத்தையும் மட்டும் நினைத்தால் நீங்கள் புதிய உலகிற்குச் சென்று விடுவீர்கள். பிறகு நன்கு படித்து மற்றவர்களையும் படிக்க வைத்தால் இராஜா இராணி ஆகலாம். எவ்வளவு ஆன்மீக சேவை செய்கிறீர்கள். நீங்கள் தான் ஆன்மீக சமூக சேவகர். மற்றபடி முழு உலகிலும் உடலுக்கான சமூக சேவகர் உள்ளனர். ஆத்மாக்களாகிய உங்களுக்கு தினமும் ஞானம் கொடுக்கின்றார். ஆத்மாக் களின் சேவை செய்கிறீர்கள் அல்லவா? அதை ஆத்மாக்களின் சேவை என்று கூறப்படுகிறது. இதை ஆன்மீகத் தந்தை தான் கற்பிக்கின்றார். இதுவே மனிதனை தேவதையாக மாற்றும் பாடசாலை ஆகும். நிச்சயம் மாறலாம். எப்போது நீங்கள் படித்து தயாராகி விடுகிறீர்களோ அப்போது வினாசமும் ஆரம்பம் ஆகும். பிறகு நீங்கள் போகலாம். இராமரும் போனார் இராவணனும் போனார்….. என கூறுகிறார்கள் அல்லவா? மிகச் சிலரே இருப்பார்கள். அவர்களே இங்கங்கு மாறிக் கொண்டே இருப்பார்கள். பிறகு நீங்கள் சொர்க்கத் திற்கு வருவீர்கள். உங்களுக்காக இப்போது புதிய உலகம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் சொர்க்கவாசியாவதற்காகப் படித்துக் கொண்டி ருக்கிறீர்கள். இது நரகம் ஆகும். இப்போது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் பிராமணன் பிராமணி ஆகவில்லை என்றால், ஆஸ்தியை அடைய முடியாது. ஆஸ்தி பிராமணர் களுக்குக் கிடைக்கிறது. அவர்கள் ஒரு பாபாவைத் தவிர வேறு எந்த தேகதாரியையும் நினைப்ப தில்லை. மற்றபடி ஏதோ சிறிது கேட்டால் கூட பிரஜையில் வந்து விடுவார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஆன்மீக சமூக சேவகர் ஆகிப் படிக்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும். பாபாவுடன் வரக்கூடிய புது உலகத்தையும் நினைவு செய்ய வேண்டும்.

2. பாபாவிற்குச் சமமாக இரக்க மனம் உடையவராகி, அனைவரையும் தங்க புத்தியாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:-

ஏதாவது பழைய உலகத்தின் கவர்ந்திழுக்கக்கூடிய காட்சிகள், குறுகிய காலத்திற்கு சுகமளிக்கும் சாதனங்களை பயன்படுத்துகிறீர்கள் அல்லது பார்க்கிறீர்கள் என்றால் அந்த சாதனங்களுக்கு வசப்பட்டு (அடிமையாகி) விடுகிறோம். சாதனங்களின் ஆதாரத்தில் பயிற்சி செய்கிறீர்கள் என்றால் மணல் மீது கட்டிடங்களை உருவாக்குவது போன்றது, ஆகையால் எந்தவித அழியக்கூடிய சாதனங்களின் ஆதாரத்தில் அழிவற்ற பயிற்சி இருக்கக் வேண்டா.ம். சாதனங்கள் என்பது ஒரு கருவியாக இருக்கிறது, ஆனால் பயற்சி என்பது படைப்பிற்கான ஆதாரமாகும். ஆகையால் பயிற்சிக்கு மதிப்பு கொடுத்தீர்கள் என்றால் பயிற்சி வெற்றியை அடைய வைக்கிறது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top