10 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 9, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! பாரதம் அனைவருடைய தீர்த்த ஸ்தலம் ஆகும். ஆகையினால், அனைத்து தர்மத்தினருக்கும் தீர்த்த ஸ்தலமான பாரதத்தின் மகிமையை எடுத்துக் கூறுங்கள், அனைவருக்கும் செய்தி கொடுங்கள்.

கேள்வி: -

எந்த முயற்சியின் மூலம் உங்களுடைய அந்த் மதி சோ கதி ஏற்படும்? தூக்கத்தை வென்றவர்கள் ஆகிவிடுவீர்கள்?

பதில்:-

இரவு தூங்கச் செல்லும் முன்பு தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டேயிருங்கள். எப்பொழுது தூக்கம் வருகிறதோ, அப்பொழுது தூங்கிவிடுங்கள். பின்னர் அந்த் மதி சோ கதி (இறுதி கால மனநிலையின் படி) ஆகி விடும். அதிகாலை எழுந்தவுடன் அதே பாய்ண்ட் நினைவு வந்து கொண்டே இருக்கும். அத்தகைய பயிற்சி செய்தால் நீங்கள் தூக்கத்தை வென்றவர்கள் ஆகிவிடுவீர்கள். யார் செய்வார்களோ அவர்கள் (பலன்) அடைவார்கள். செய்பவர்களுடைய நடத்தை புகழடைந்து ஆகிவிடும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

யார் அந்த நாயகனுடன் இருக்கிறார்களோ…

ஓம்சாந்தி. யார் அந்த நாயகனுடன் இருக்கிறார்கள். இப்பொழுது உலகத்தில் அனேக தந்தைகள் உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவருடைய தந்தை, படைப்பாளர் ஒருவர் தான். அவரே ஞானக் கடலாக இருக்கின்றார். ஞானத்தின் மூலம் தான் சத்கதி ஏற்படுகிறது. எப்பொழுது சத்யுகத்தின் ஸ்தாபனை ஏற்பட வேண்டுமோ, அப்பொழுது மனிதருடைய சத்கதி ஏற்படுகிறது. சத்கதியை கொடுக்கும் வள்ளல் என்று பாபாவிற்குத் தான் சொல்லப் படுகிறது. எப்பொழுதெல்லாம் சங்கமயுக சமயம் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ஞானக்கடல் வந்து சத்கதிக்கு அழைத்துச் செல்வார். இந்த நேரம் அனைவருக்கும் துர்கதி உள்ளது. துர்கதி கூட அனைவருக்கும் ஒன்று போல் இருப்ப தில்லை. பாரதம் அனைத்தையும் விட பழமை யானதாகும். பாரதவாசிகளுடைய 84 பிறவிகள் பாடப்பட்டுள்ளது. எந்த மனிதர்கள் முதன் முதலில் வருவார்களோ, அவசியம் அவர்கள் தான் 84 பிறவிகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பார்கள். தேவதைகளுடையது 84 பிறவிகள் என்றால் பிராமணர்களுடையதும் 84 பிறவிகளாகும். முக்கிய மானவர்களைத் தான் உயர்த்தப்படுகிறது. தந்தை பிரம்மா மூலம் புதிய உலகைப் படைப்பதற்காக முதன்முதலில் சூட்சும உலகத்தைப் படைக் கின்றார், பின்னர், புதிய சிருஷ்டியின் ஸ்தாபனை ஏற்படுகிறது. திரிலோகநாதன் ஒரு தந்தை தான் ஆவார். மற்றபடி அவருடைய குழந்தைகளும் தன்னை மூன்று உலகங்களின் தலைவன் என்று கூறிக்கொள்ள முடியும். இங்கே அனேக மனிதர்கள் திரிலோகநாதன் என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். இரண்டு தேவதைகளுடைய பெயர் வைக்கப்படுகிறது. கௌரி சங்கர், இராதை சியாம், இப்பொழுது இராதை கிருஷ்ணர் தனித்தனி இராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். யார் நல்ல குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்களுடைய புத்தியில் மிக நல்ல கருத்து களுடைய (பாய்ண்ட்ஸ்) தாரணை இருக்கிறது. யார் புத்திசாலி மருந்துவராக இருப்பாரோ, அவருடைய புத்தியில் அதிகமான மருந்துகளின் பெயர் இருக்கும். இங்கே கூட தினமும் புதுப்புது பாய்ண்ட்ஸ் வெளிப்படுகிறது. யாருக்கு நல்ல பயிற்சி இருக்குமோ, அவர்கள் புதுப்புது பாய்ண்ட்ஸ் களை தாரணை செய்வார்கள். யார் தாரணை செய்வதில்லையோ, அவர்களை மகாரதி என்று கூற முடியாது. அனைத்திற்கும் ஆதாரம் புத்தி ஆகும் மற்றும் அதிர்ஷ்டத்தினுடைய விஷயமும் உள்ளது. இதுவும் நாடகம் ஆகும். நாடகத்தை யாரும் அறியவில்லை. நாம் ஆத்மா, சரீரத்தை தாரணை செய்து நடிப்பை நடிக்கின்றோம் என்பதைக் கூட புரிந்திருக்கிறார்கள். ஆனால் நாடகத் தின் முதல், இடை, கடை பற்றி அறியவில்லை என்றால், எதையுமே அறியவில்லை என்றே அர்த்த மாகும். உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பிறருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பது குழந்தைகளுடைய கடமை ஆகும். முழு உலகத்திற்கும் சொல்ல வேண்டும். எங்களுக்குத் தெரியவே தெரியாது என்று யாரும் சொல்லிவிடக் கூடாது. வெளிநாட்டில் இருந்தும் கூட அனேக பேர் வரப் போகிறார்கள். பாம்பேயில் அவர்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்படும். அந்த மக்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களிடம் பணம் அதிகமாக உள்ளது. சிவனை தன்னுடைய பெரிய குரு என்று ஏற்றுக் கொள்வார்கள் அல்லவா? ஆகையினால் இந்த தர்ம பிதாக்களுடைய நடிப்பைப் பற்றியும் புரிய வைக்கப்படுகிறது. இந்த கிறிஸ்து, இப்ராஹிம் முதலிய அனைவரும் சந்திப்பதற்காக வருவார்கள் என்பதை ஆரம்பத்தில் குழந்தைகள் காட்சி யாகப் பார்த்திருக்கிறார்கள். அவர்களுடைய சேவைக்களத்தை உருவாக்க வேண்டும். அனைத்து சுற்றுலா பயணிகளும் பாம்பேக்கு வருகின்றார்கள். பாரதம் அனைவரையும் மிகவும் ஈர்க்கிறது. உண்மையில் பாரதம் தந்தையினுடைய ஜென்ம பூமி ஆகும். பின்னர் அனைவருக்குள்ளும் பகவான் இருக்கிறார் என்று சொல்வதால் எல்லையற்ற தந்தையின் மகத்துவத்தை மறைத்து விட்டனர். பாரதம் அனைத்தையும் விட உயர்ந்த தீர்த்த ஸ்தலம் ஆகும் என்று இப்பொழுது நீங்கள் புரிய வைக்கிறீர்கள். மற்ற அனைத்து தூதுவர்களும் தங்களது தர்மத்தை (மதம்) ஸ்தாபனை செய்வதற்காக வருகின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அவர்களுடைய தர்மத்தைச் சேர்ந்தவர் களும் வருகிறார்கள். இப்பொழுது இறுதி நேரம் ஆகும். நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால், உங்களை இங்கு அழைத்து வந்தது யார் என்று அவர்களிடம் கேளுங்கள். கிறிஸ்து கிறிஸ்தவ தர்மத்தை ஸ்தாபனை செய்தார். அவர் உங்களை இங்கு அழைத்து வந்தாரா என்ன? இப்பொழுது அனைவரும் களைப்படைந்து திரும்பச் செல்வதற்கு முயற்சி மேற்கொள்கிறார்கள். அனைவரும் தம் பாகத்தை நடிப்பதற்காக வருகிறார்கள். நடிப்பை நடித்து நடித்து இறுதியில் துக்கத்தில் வந்து தான் ஆகவேண்டும். பின்னர், துக்கத்திலிருந்து விடுவித்து சுகத்திற்கு அழைத்துச் செல்வது தந்தையினுடைய வேலை ஆகும். தந்தையினுடைய பிறப்பிடம் பாரதம் ஆகும். இதன் மகத்துவத்தை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்திருக் கிறீர்கள். யார் அறிந்திருக் கிறார்களோ, அவர்களுக்கு போதை அதிகமாக இருக்கும். கல்ப கல்பமாக பாரதத்தில் பாபா வருகின்றார். இதை அனைவருக்கும் கூறவேண்டும், அழைப்பு கொடுக்க வேண்டும். படைப் பின் ஞானத்தை யாரும் அறியவில்லை. எனவே, அத்தகைய சேவாதாரி ஆகி, தனது பெயரை புகழடையச் செய்ய வேண்டும். இந்த மேளா அனைத்து இடங்களுக்கும் செல்லும். எனவே, யார் கூர்மையான புத்தியுடைய குழந்தைகளோ, அவர்களுடைய உதவியைக் கேட்கின்றார் கள். அவர்களுடைய பெயரை ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒன்று சிவபாபாவை ஜெபிக்கிறார்கள்; இரண்டாவது பிரம்மா பாபாவையும், மூன்றாவது குமாரக்கா, (பிரகாஷ்மணி தாதி) கங்கே, மனோகரை ஜெபிப்பார்கள். பக்தி மார்க்கத்தில் கையில் மாலையை வைத்து உருட்டு கிறார்கள். இப்பொழுது வாயினால் பெயரை ஜெபிக்கிறார்கள். இன்னார் மிகவும் சேவாதாரியாக உள்ளார், அகங்காரம் அற்றவராக இருக்கிறார், இனிமையானவராக இருக்கிறார், தேக அபிமானம் இல்லை. அன்பு கொடுங்கள், அன்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அல்லவா? நீங்கள் துக்கம் நிறைந்தவராக ஆகி இருக்கிறீர்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நானும் உதவி செய்வேன். நீங்கள் வெறுப்பு காட்டினீர்கள் என்றால், அது தன்மீது வெறுப்பு காட்டுவதாகும், பதவி கிடைக்காது. எவ்வளவு அளவிட முடியாத செல்வம் கிடைக்கிறது! யாருக்காவது லாட்டரி கிடைத்துவிட்டால் எவ்வளவு குஷி ஏற்படுகிறது! அதில் கூட எவ்வளவு பரிசு கிடைக்கிறது! பின்னர், இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசும் கிடைக்கிறது. இது கூட ஈஸ்வரிய பந்தயம் ஆகும். ஞானம் மற்றும் யோகத்தினுடைய பந்தயம் ஆகும். யார் இதில் வேகமாகச் செல்வார்களோ, அவர்களே கழுத்து மாலையாக ஆவார்கள், சிம்மாசனத்தில் அருகாமையில் அமர்வார்கள்.

நீங்கள் அனைவரும் கர்மயோகி ஆவீர்கள். தன்னுடைய வீட்டையும் பராமரியுங்கள். வகுப்பில் ஒரு மணிநேரம் படிக்க வேண்டும். பின்னர், வீட்டில் சென்று திரும்பப் படிக்க வேண்டும். பள்ளியிலும் அவ்வாறு செய்வார்கள் அல்லவா! படித்துவிட்டு பின்னர் வீட்டில் சென்று திரும்பவும் படிப்பார்கள். தந்தை கூறுகின்றார், ஒரு மணி நேரம், அரைமணி நேரம் பகலில் எட்டு மணிநேரம் உள்ளது, அதிலும் கூட ஒருமணி நேரம், நல்லது, அரை மணி நேரம், 15-20 நிமிடம் கூட வகுப்பில் படித்து, தாரணை செய்து பின்னர் தொழிலுக்குச் செல்லுங்கள். முன் வரிசையில் பாபா உங்களை அமர வைத்தார், எனவே தந்தையின் நினைவில் அமருங்கள், சுயதரிசன சக்கரத்தை சுழற்றுங்கள் என்று உங்களை அமர வைத்தார். நினைவைப் பற்றிய ஞானம் இருந்தது அல்லவா! தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து கொண்டே, சுயதரிசன சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே எப்பொழுது தூக்கம் வருகிறதோ, அப்பொழுது தூங்கிவிடுங்கள். பின்னர், அந்த் மதி சோ கதி (இறுதிகால எண்ணம் அல்லது விருப்பம்) ஆகி விடும். பின்னர், அதிகாலை எழும்பொழுது அதே பாய்ண்ட்ஸ் நினைவு வந்து கொண்டே இருக்கும். அத்தகைய பயிற்சி செய்து செய்து செய்து நீங்கள் தூக்கத்தை வென்றவர்கள் ஆகிவிடுவீர்கள். யார் செய்வார்களோ அவர்கள் பலனை அடைவார்கள். செய்பவர் களுடைய நடத்தை பிரசித்தமாக இருப்பது தெரியவரும். இவர்கள் ஞானத்தை ஆழ்ந்து சிந்திக்கிறார்கள் (விசார் சாகார் மந்தன்), தாரணை செய்கிறார்கள், பேராசை போன்ற எதுவுமே இல்லை என்பது தெரியும். இந்த சரீரம் பழையது ஆகும். இதைப் பற்றி கூட அதிகமாக சிந்திக்கக் கூடாது. எப்பொழுது ஞான யோகத்தினுடைய முழுமையான தாரணை ஏற்படுமோ, அப்பொழுதே இது சரியாக இருக்கும். தாரணை இல்லையென்றால், சரீரம் இன்னும் கெட்டு விடும். கெட்டு கெட்டு முற்றிலுமாக பிணம் (அழுகி) போல் ஆகிவிடும். புது சரீரம் பின்னர் எதிர்காலத்தில் கிடைக்கப் போகிறது. ஆத்மாவை தூய்மையாக்க வேண்டும். இது பழைய அழுக்கான சரீரம் ஆகும். இதற்கு எவ்வளவு தான் பவுடர் பூசினாலும் இது பைசாவுக்கு மதிப்பு இல்லாதது. இப்பொழுது உங்கள் அனைவருக்கும் சிவபாபாவுடன் நிச்சயம் ஆகி இருக்கிறது. திருமணம் நடக்கும் நாளில் பழைய ஆடையை அணிவார்கள். இப்பொழுது இந்த சரீரத்திற்கு ஸ்துôலமான அலங்காரம் அதிகமாக செய்யக்கூடாது. ஞான யோகத்தின் மூலம் தன்னை அலங்கரித்தீர்கள் என்றால், தேவதைகள் ஆகிவிடுவீர்கள். இது ஞான மான சரோவர் ஆகும். இதில் ஞானத்தினுடைய முழுக்கு போட்டுக் கொண்டே இருந்தால், நீங்கள் சொர்க்கத்தின் பரி (தேவதை கள்) ஆகிவிடுவீர்கள். பிரஜைகளை பரி என்று சொல்ல மாட்டார் கள். கிருஷ்ணர் (பெண்களை) துரத்தினார், பின்னர் மகாராணியாக, பட்டத்து ராணியாக ஆக்கினார் என்று கூறுகிறார்கள். துரத்தி, பிரஜையில் சண்டாளன் ஆக்கினார் என்று சொல்ல மாட்டார்கள். துரத்தியது பட்டத்துராணி ஆக்குவதற்காகவே ! நீங்களும் கூட அவ்வாறு முயற்சி செய்ய வேண்டும். என்ன கிடைக்கிறதோ கிடைக்கட்டும் என்பது கூடாது. இது பாடசாலை ஆகும். இங்கே முக்கியமானது படிப்பு ஆகும். கீதா பாடசாலை அதிகமாக உருவாக்குகிறார்கள். கீதை சொல்கிறார்கள், மனப்பாடம் செய்விக் கிறார்கள். ஏதாவது ஒரு சுலோகத்தை எடுத்து பின்னர் அதைப் பற்றி விஸ்தாரமாகப் புரிய வைக்கிறார்கள். சிலர் அப்படியே படிக்கிறார்கள், சிலர் ஒரு சுலோகத்தைப் பற்றி அரைமணி நேரம், முக்கால் மணிநேரம் சொற்பொழிவு செய்கிறார்கள். அதன் மூலம் எந்த இலாபமும் இல்லை. இங்கேயோ தந்தை கற்பிக்கிறார். இலட்சியம் தெளிவாக உள்ளது. வேறு எந்த வேதசாஸ்திரம் பயில்வதில் இலட்சியம் கிடையாது. முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்ன கிடைக்கும்? எப்பொழுது அதிக பக்தி செய்கிறார்களோ, அப்பொழுதே பகவான் கிடைப்பார். இரவுக்குப் பின் பகல் அவசியம் வரும். சிலர் கல்பத்தின் ஆயுளை என்னவெல்லாம் சொல்கிறார்கள்! இப்பொழுது புரியவைப்பதற்கான சக்தியும் இருக்க வேண்டும். யோகபலத்தின் மூலமாக காரியம் செய்ய வேண்டும். ஒருவேளை செய்ய இயலவில்லை என்றால், சக்தி இல்லை என்பதாகும். யோகம் இல்லை. யார் யோக யுக்த் குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாபா கூட உதவி செய்கிறார். நாடகத்தில் என்ன உள்ளதோ, அது திரும்ப நடக்கிறது. ஒவ்வொரு வினாடியும் கடந்துகொண்டே இருக்கிறது, டிக் டிக் என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. நாம் ஸ்ரீமத்படி செயல்களைச் செய்கிறோம். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால், சிரேஷ்ட மானவர் ஆக முடியாது. வரிசைக்கிரமம் உள்ளதல்லவா! எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று இந்த மக்கள் நினைக்கிறார்கள், ஆனால், அதன் அர்த்தத்தை அறியவில்லை. என்ன ஒன்றுபட வேண்டும்? ஒரு தந்தை ஆகிவிடவேண்டுமா? அல்லது ஒரே சகோதரர்கள் ஆகிவிட வேண்டுமா என்ன? ஒருவேளை சகோதரர்கள் ஆகவேண்டும் என்று கூறினால் கூட ஒருவகையில் சரிதான் !. ஸ்ரீமத்படி நாம் ஒன்றாக ஆக இயலும். நீங்கள் அனைவரும் ஒரு வழிப்படி நடக்கிறீர்கள். உங்களுடைய தந்தை, ஆசிரியர், குரு ஒருவர் தான். யார் முழுமையாக ஸ்ரீமத்படி நடப்பதில்லையோ, அவர்கள் சிரேஷ்ட மானவர்கள் ஆக இயலாது. ஒருவேளை முற்றிலுமாக நடக்கவில்லை என்றால், இல்லாமல் போய்விடுவார்கள். யார் தகுதியானவராக, புத்திசாலியாக இருப்பார்களோ, அவர்களைத் தான் பந்தயத்தில் ஈடுபடுத்துவார்கள். பெரிய பந்தயத்தில் நல்ல குதிரையை ஈடுபடுத்துவார்கள். ஏனென்றால், பந்தயம் கூட பெரிய அளவில் வைப்பார்கள். இது கூட மனித அஸ்வங்களின் (குதிரைகள்) பந்தயம் ஆகும். இறைவனுக்கும் (ஹூசேன்) குதிரை இருப்பதாகக் காண்பிக் கிறார்கள். இரண்டு விதமான ஹிம்சைகள் உள்ளன. காமவிகாரம் முதல் எண்ணில் உள்ளது. அரைக் கல்பமாக தன்னையும் கொலை செய்து, பிறரையும் கொலை செய்து வந்திருக்கிறார்கள். இந்த ஹிம்சையை யாரும் அறியவில்லை. சந்நியாசிகளும் கூட அவ்வாறு புரிந்திருக்கவில்லை, இது விகாரம் என்று மட்டும் சொல்கிறார்கள். குழந்தைகளே, இந்தக் காமம் மகா எதிரி ஆகும். இது முதல், இடை, கடையில் துக்கம் தரக்கூடியதாகும் என்று தந்தை கூறுகின்றார். நம்முடையது இல்லற மார்க்கம் ஆகும், இராஜயோகம் ஆகும் என்பதையும் நிரூபித்துச் சொல்ல வேண்டும். உங்களுடையது ஹடயோகம் ஆகும். நீங்கள் சங்கராச்சாரியிடம் இருந்து ஹடயோகம் பயில் கிறீர்கள். நாங்கள் சிவாச்சாரியாரிடம் இருந்து இராஜயோகம் பயில்கிறோம். பின்னாளில் உங்களுடைய (பி.கே) பிரத்யட்சதா (வெளிப்பாடு) அவசியம் ஏற்படும். தேவதைகள் 5 ஆயிரம் வருடங்களில் 84 பிறவிகள் எடுக்கிறார்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை எடுப்பார்கள்? என்று கேள்வி கேட்கிறார் கள். கிறிஸ்து பிறந்து 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன, சராசரியாக அவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்திருப்பார்கள் என்று இப்பொழுது கணக்கிடுங்கள். 30 – 32, இது தெளிவாக உள்ளது. யார் அதிக சுகத்தை அனுபவிக்கிறார்களோ, அவர்களே அதிக துக்கத்தையும் அனுபவிப் பார்கள். மற்ற தர்மத்தினருக்குக் குறைவான சுகம், குறைவான துக்கம் கிடைக்கிறது. சராசரியான கணக்கு போட வேண்டும். முக்கியமான குரு யார் இருக்கிறார்களோ, அவர்களது பிறவிகளை கணக்கிடலாம். பின்னால் வருபவர்கள் சில சில பிறவிகள் எடுக்கிறார்கள். புத்தருடையது, இப்ராஹிமுடையதையும் கூட கணக்கு போட முடியும். ஒன்று இரண்டு பிறவிகளுடைய வித்தியாசம் இருக்கும். துல்லியமாகச் சொல்ல முடியாது. ஏறக்குறைய பிறவிகளைக் கணக்கிடலாம் என்று புரிய வைக்கின்றார். இந்த அனைத்து விஷயங்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை ஆகும். யாராவது கேட்டால் என்ன புரிய வைப்பது? அப்பொழுதும், முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். ஏனென்றால் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். எத்தனை பிறவி எடுத்திருப் பார்களோ, அத்தனையே எடுப்பார்கள்! தந்தையிடமிருந்து ஆஸ்தியை பெறுங்கள் என்று சொல்லுங்கள். நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். உழைப்பிற்கான வேலை இது.

குழந்தைகள் பாம்பேயில் மிகுந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதிகமான வெற்றி பெற வேண்டும். இதில் புத்தி தேவை. பாபாவின் செல்வத்தின் மீது மிகுந்த அன்பு இருக்க வேண்டும். சிலர் செல்வத்தைப் பெறுவதில்லை. ஞான இரத்தினங் களைப் பெறுங்கள் மற்றும் தாரணை செய்யுங்கள் என்று கூறினால் என்ன செய்வது! எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள். புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அது உங்களுடைய விதி ! நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு, ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. சரீரத்தை நன்றாக வைத்துக் கொள்வதற்காக ஞான யோகத்தினுடைய தாரணை செய்ய வேண்டும். எந்த ஒரு பொருள் மீதும் பேராசை வைக்கக் கூடாது. இந்த ஞான யோகத்தின் மூலம் அலங்கரிக்க வேண்டும். ஸ்தூல அலங்காரத்தினால் அல்ல.

2. ஒரு மணிநேரம், அரை மணிநேரம், படிப்பை அவசியம் படிக்க வேண்டும். ஞானம் மற்றும் யோகத்தில் ரேஸ் (பந்தயம்) செய்ய வேண்டும்.

வரதானம்:-

வெற்றியாளர் ஆவதற்காக ஒவ்வொருவரின் மனதிலுள்ள இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவருடைய வாயிலிருந்து வெளிப்படும் சப்தத்தின் மூலம் அவருடைய மனதின் இரகசியத்தை அறிந்து கொள்வீர்களானால் வெற்றியாளர் ஆக முடியும். ஆனால் மனதின் இரகசியத்தை அறிந்து கொள்வதற்காக உள்முக நோக்கு வேண்டும். எந்த அளவு உள்முகநோக்கில் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு ஒவ்வொருவருடைய மனதின் இரகசியத்தை அறிந்து கொண்டு, அவரைத் திருப்திப் படுத்த முடியும். திருப்திப் படுத்துபவர் தான் வெற்றியாளர் ஆகிறார்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top