09 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
November 8, 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இனிய தந்தை மற்றும் இனிய இராஜ்யத்தை நினைவு செய்தால் மிக மிக இனிமையானவர்களாக ஆகிவிடுவீர்கள்.
கேள்வி: -
குழந்தைகளாகிய நீங்கள் எந்த முயற்சி செய்து மனிதனிலிருந்து தேவதையாக ஆகிறீர்கள்?
பதில்:-
நீங்கள் இப்போது ஞான மானசரோவரில் மூழ்கி எழுந்து ஞான பரிகளாக (தேவதை களாக) ஆகிறீர்கள், ஞானக் குளியல் மூலம் உங்களது தோற்றம் மாறிக் கொண்டே செல்கிறது. நம்மிட முள்ள அவகுணங்கள் நீங்கிக் கொண்டே செல்கிறது. தந்தை மற்றும் விஷ்ணுபுரியை நினைவு செய்து நீங்கள் தூய்மையான தேவதைகளாக ஆகிவிடுகிறீர்கள். தேவதைகளிடம் தூய்மைக்கான கவர்ச்சி தான் இருக்கிறது. இதன் காரணத்தினால் தான் மனிதர்கள் தேவதை களின் கோவில் களுக்கு வெகு தொலைவிலிருந்தும் கூட கவர்ச்சிக்கப்பட்டு செல்கின்றனர்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
நமது தீர்த்த யாத்திரை தனிப்பட்டது …..
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள். குழந்தைகள் தான் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்று பாடப்படுகின்றனர். ஞான சூரியன், ஞான சந்திரன், ஞான அதிர்ஷ்ட நட்சத்திரங்கள். அந்த சூரியன், சந்திரன் உலகிற்கு வெளிச்சம் கொடுக் கின்றன, அதனால் தான் உங்களுக்கு மகிமை பாடப்படுகிறது. நீங்கள் ஞான நட்சத் திரங்கள், அவற்றை ஞான நட்சத்திரம் என்று கூறுவது கிடையாது. ஞான சூரியன் என்ற பெயர் கேட்டதும் ஒருவேளை அந்த சூரியன் ஞான சொரூபமாக இருக்குமோ என்று நினைக்கின்றனர். ஏனெனில் கல், முட்களில் பகவான் இருக்கிறார் என்று நினைப்பதால் சூரியனையும் அதிகம் ஏற்றுக் கொள்கின்றனர். தன்னை சூரியவம்சி என்று கூறிக் கொள்கின்றனர். சூரியனை பூஜிக்கின்றனர். கொடியிலும் சூரியனை சின்னமாகக் காட்டு கின்றனர். உங்களுடையது திரிமூர்த்தி கொடியாகும். எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது! இதில் வாய்மையே வெல்லும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் உலகை அவர் (சிவபாபா) தான் வெற்றியடையச் செய்விக் கின்றார். நீங்கள் சிவசக்தி பாண்டவ சேனைகள். அவர்கள் திரிமூர்த்தி மார்க்கம், திரிமூர்த்தி இல்லம் என்று பெயர் வைத்து விட்டனர். இதன் பொருளையும் தந்தை புரிய வைக்கின்றார், இந்த திரிமூர்த்திகளின் மூலம் நான் என்ன காரியங்களைச் செய் விக்கின்றேன்! பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை ……. அவர்கள் திரிமூர்த்தியில் சிவனை நீக்கி சித்திரத்தில் தவறு செய்து விட்டனர். இந்த திரிமூர்த்தி சித்திரத்தில் எவ்வளவு இரகசியங்கள் இருக்கிறது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். சத்திய சிவபாபா பிரம்மாவின் மூலம் இராஜ்யத்தை கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நாம் சிவபாபாவின் மூலம் கல்பத்திற்கு முன்பு போன்று மீண்டும் தூய்மை, சுகம், சாந்தி மற்றும் செல்வம் நிறைந்த இராஜ்யம் அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எப்போதும் கல்வியை பிரம்மச்சரியத்தின் போது தான் கற்றுக் கொள்வார்கள். இப்போது சிலர் திருமணத்திற்குப் பிறகும் கல்வி கற்கின்றனர். ஏனெனில் வருமானம் அதிகம் ஏற்படுகிறது. இங்கு உங்களது வருமானம் கணக்கிட முடியாதது. சிவபாபா நம்மை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்திருக் கின்றார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஸ்ரீமத் சிரேஷ்டமானது என்று பாடப் பட்டிருக்கிறது. பாபாவின் குழந்தையாக ஆகியிருக்கிறார்கள் எனில் அவசியம் தந்தையின் வழிப்படி நடப்பார்கள். சகோதரன் சகோதரனின் வழிப்படி நடக்கமாட்டார்கள். அவ்வாறு பல பிறவிகள் நடந்து கொண்டு விட்டீர்கள், இப்போது பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும். சாது, சந்நியாசி போன்ற அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவர். உயர்ந்த வழி கொடுப்பதற்காக இப்போது தந்தை வந்திருக்கின்றார். இயற்கை வைத்தியத்திலும் அதிக மருந்துக்களை தயாரிக் கின்றனர். அவை அனைத்தும் அல்ப காலத்திற்கானது. இது 21 பிறவிகளுக்கான இயற்கை வைத்தியமாகும். குளிர்ந்த நீரில் குளியுங்கள் என்று அவர்கள் கூறுவர். இதை செய்யுங்கள், உணவு முறைகளில் பத்தியம் கடைபிடியுங்கள் என்பார்கள். இங்கு அந்த உணவு முறை பற்றிய விசயம் கிடையாது. என்னை நினைவு செய்தால் நீங்கள் இனிமையானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்று இங்கு இனிய தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார். தேவதைகள் இனிமையானவர்கள் அல்லவா! அவர்களிடத்தில் எவ்வளவு கவர்ச்சி இருக்கிறது! முன்பு சிவன் கோவில்களும் உயர்ந்த மலைகளின் மீது உருவாக்கப்பட்டது. தரிசனம் செய்வதற்காக மனிதர்கள் நடந்தே சென்றனர். ஏனெனில் தூய்மை கவர்ச்சி செய்தது. தேவதைகள் தூய்மையாக இருந்த பொழுது உலகை இராஜ்யம் செய்தனர். இப்போது அவர் களது சிலைகளுக்கு முன் சென்று வணங்குகின்றனர். இப்போது அந்த இனிய தந்தையை அனைவரும் நினைவு செய்கின்றனர். அவர் வருவதும் இங்கு தான். அவசியம் அவரிடமிருந்து வைகுண்டத்தின் சுகம் கிடைத்திருப்பதால் தான் அவரை நினைவு செய்கின்றனர். எப்போது இராவண இராஜ்யம் முடிவடையுமோ அப்போது தந்தை வந்து சொர்க்க இராஜ்யத்தை கொடுப்பார். பாபா பாரதத்தில் தான் வருகின்றார். சிவஜெயந்தியும் பாரதத்தில் தான் கொண்டாடு கின்றனர். ஆனால் அவரிட மிருந்து என்ன கிடைக்கிறது? என்பது யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய உங்களை இனிமை யானவர்களாக ஆக்குவதற்காக நான் வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் எவ்வளவு அழுக்கானவர்களாக ஆகி விட்டீர்கள்! பாபா ஞானம் நிறைந்தவர் ஆவார், இப்போது உங்களுக்கு அனைத்து ஞானமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. விதையிடம் தான் அனைத்து ஞானமும் இருக்கும் அல்லவா! அவர் விதையானவர், சத்தியமானவர், சைத்தன்யமானவர், மேலும் ஞானக் கடலாகவும் இருக்கின்றார், உண்மையை கூறுகின்றார். அவரும் ஆத்மா தான், ஆனால் பரம் (சுப்ரீம்) ஆவார். பரம் ஆத்மா என்றால் பரமாத்மா. அவர் சதா பரந்தாமத்தில் இருக்கக் கூடியவர், உயர்ந்ததிலும் உயர்ந்தவர். பெயர், உருவம் அற்றவர் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் பெயர், உருவமின்றி எந்த பொருளும் இருக்காது. அவரது பெயர் சிவன். அனைவரும் அவரை பூஜிக்கின்றனர், அவர் நிராகாரமானவர். இப்போது வந்திருக்கின்றார். முன்பு நாம் தேக அபிமானத் தில் இருந்தோம். இப்போது தந்தை கூறுகின்றார் லி குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகுங்கள். மன்மனாபவ என்று கீதையிலும் இருக்கிறது. சிவனின் பெயருக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயர் போட்டதால் பெரும் தவறாகிவிட்டது. இருப்பினும் புத்தகம் படிப்பதனால் இராஜ்யம் கிடைத்து விடாது. சத்யுகத்தில் தான் இராஜ்யம் இருக்கும். தந்தை அவசியம் சங்கமத்தில் வருவார். இப்போது நாடகப்படி பக்தி முடிவடைகிறது. பக்திக்குப் பின்பு ஞானம். இது பழைய உலகம், சத்யுகம் புது உலகமாகும். சத்யுகத்தில் சூரியவம்சத்தினர் இராஜ்யம் செய்தனர். நரனிலிருந்து நாராயணன், நாரியிலிருந்து லெட்சுமி ஆவதற்கான இராஜயோகம் இதுவாகும். சத்யுகத்தில் இவர்களது இராஜ்யம் இருந்தது. இப்போது கலியுகத்தில் பாருங்கள் என்ன இருக்கிறது! இப்போது நீங்கள் சத்யுகம் செல்வதற்காக படித்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தினுடைய வேதம், சாஸ்திரம் போன்ற அனைத்தையும் விட வேண்டியிருக்கிறது. ஞானம் கிடைத்த பின்பு பக்தி அவசியமில்லை. ஞானத்தின் மூலம் நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறோம்.
பக்தியின் பலன் கொடுப்பதற்காக பாபா வந்திருக்கின்றார். ஞானம் கூறிக் கொண்டிருக் கின்றார். இப்போது நாம் அவசியம் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக வேண்டும். ஏனெனில் தூய்மை யற்றவர்கள் திரும்பிச் செல்ல முடியாது. முக்திதாமத்திலும் அனைவரும் தூய்மையான ஆத்மாக் களாகத் தான் இருக்கின்றனர். சுகதாமத்திலும் கூட அனைவரும் தூய்மையாக இருக்கின்றனர். இப்போது கலியுகத்தில் அனைவரும் தூய்மை யற்றவர்களாக இருக்கின்றனர். இப்போது இவர் களை தூய்மையாக்குவது யார்? தூய்மைபடுத்தக் கூடிய ஒரே ஒரு தந்தை தான். நான் இவரது பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் வருகிறேன் என்று தந்தை கூறு கின்றார். அனைவரையும் விட நம்பர் ஒன் பக்தனாக இந்த தாதா (பிரம்மா) இருந்தார். பிரம்மா என்று கூறினாலும் சரி அல்லது லெட்சுமி நாராயணனுடைய ஆத்மா என்று கூறினாலும் சரியே. இது புரிந்து கொள்வதற்கு மிகவும் நல்ல விசயமாகும். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா மற்றும் பிரம்மா வின் நாபியிலிருந்து விஷ்ணு வெளிப்பட்டார் …….. விஷ்ணு 84 பிறவிகளுக்குப் பிறகு பிரம்மாவாக ஆகிறார். இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. தந்தையும் (பிரஜாபிதா) கீதை படித்திருக்கின்றார். எப்போது ஞானம் வந்ததோ, பாபா உலக இராஜ்யத்தை கொடுக் கின்றார் என்பதை புரிந்து கொண்டார். விஷ்ணுவின் சாட்சாத்காரமும் ஏற்பட்டது. பிறகு உடனேயே கீதை போன்றவைகளை படிப்பதை விட்டு விட்டார். பாபாவின் பிரவேசம் ஏற்பட்டது அல்லவா! பிறகு ஒருபோதும் கை தொடவேயில்லை. ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய ஆரம்பித்தார். நானும் அந்த தந்தை கூறுவதை கேட்க ஆரம்பித்தேன் என்று இவர் (பிரம்மா) கூறுகின்றார். நான் அனைத்து குழந்தை களுக்கும் கூறுகிறேன் எனில் இவரும் கேட்பார் என்று சிவபாபா கூறுகின்றார். இவரது உடலில் நான் பிரவேசம் செய்து வருகிறேன், அதனால் தான் இவருக்கு அர்ஜுன் என்று பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. சாஸ்திரங்களில் குதிரை ரதத்தை காண்பித்திருக்கின்றனர். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! குதிரை வண்டியில் ஒரே ஒருவருக்கு அமர்ந்து ஞானம் கூறினாரா என்ன? இவ்வாறு எப்படி இருக்கும்? என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா எப்படி கற்பிக்கிறார்? என்பதை நீங்கள் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு கிளைகள் (சென்டர்ஸ்) இருக்கிறது. ஆக படிப்பதற்கு அவசியம் பாடசாலை தேவைப் படுகிறதே தவிர யுத்த மைதானம் அல்ல. பாபா இராஜயோகம் கற்பிக்கின்றார். சத்யுகத்தில் எந்த சாஸ்திரமும் இருக்காது. நான் இப்போது ஞானம் கூறுகிறேன். அவ்வளவு தான், சத்யுகத்தில் அவசியம் கிடையாது. பழைய உலகில் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தும் சாம்பலாக ஆகிவிடும். இது இராஜஸ்வ அஸ்வமேத யக்ஞமாகும். (அசுவம்) குதிரை என்று இந்த ரதம் கூறப்படுகிறது. இவரும் சுவாஹா செய்ய வேண்டும். ஆத்மா தந்தையினுடையதாக ஆகிவிட்டது, பிறகு இந்த பழைய சரீரமும் அழிந்து விடும். கிருஷ்ண புரிக்கு இந்த அசுத்தமான சரீரத்தை எடுத்து செல்லமாட்டீர்கள். ஆத்மா அழிவில்லாதது. பாய் எரிந்து விடும், நூல் எரியாது என்பதை ஹோலியில் (விழா) பார்க்கிறீர்கள். பாபா எல்லையற்ற விசயங்களைப் புரிய வைக் கின்றார் – இதுவரை என்ன கேட்டீர்களோ, அவை (மற்ற விசயங்கள்) அனைத்தையும் மறந்து விடுங்கள். இப்போது பாரதம் பொய்யான கண்டமாக ஆகிவிட்டது. நேற்று சத்திய கண்டமாக இருந்தது. சத்திய கண்டமாக தந்தை உருவாக்கினார், இராவணன் பொய்யான கண்டமாக ஆக்கிவிட்டான். இந்த இராவணன் அனைவருக்கும் பழைய எதிரி யாகும். யாராவது, ஏதாவது கூறி விட்டால் அவ்வளவு தான் அந்த வழிப்படி நடக்க ஆரம்பித்து விடுகின்றனர். எவ்வாறு தில்வாடா கோவிலில் ஆதிதேவனுக்கு மகாவீர் என்ற பெயர் வைத்து விட்டனர்! மகாவீர் என்று ஹனுமான் கூறப்படு கிறார். அவர் எங்கு இருக்கிறார், இவர் எங்கு இருக்கிறார்! இந்த கோவிலில் அப்படியே உங்களது நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. மேலே சொர்க்கம், கீழே தபஸ்யா. ஆதிநாதனின் மூர்த்தி தங்கத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதம் தங்கக் குருவியாக இருந்தது என்று கூறுகின்றனர் அல்லவா! பாரதத்தில் இருந்த தங்கம் போன்று வேறு எந்த இடத்திலும் கிடையாது. தங்கத்தினால் மாளிகை கட்டினர். கூரையிலும், சுவர்களிலும் வைரங்கள் பதியப்பட்டிருக்கும். கோவில்களில் எவ்வளவு வைரங்கள் இருந்தன, அதை பிறகு கொள்ளையடித்து சென்றனர். மசூதி களில் கொண்டு சென்று வைத்தனர். ஆக அந்த நேரத்தில் என்ன மதிப்பு இருந்திருக்கும்! அளவற்ற செல்வம் இருந்தது, அதனால் தான் கொள்ளையடித்து சென்றனர். பழமையான பாரதம் செல்வ செழிப்புடன் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். இப்போது எவ்வளவு ஏழையாக ஆகி விட்டது! ஏழைகளின் மீது கருணை ஏற்படுகிறது. இராவணன் எவ்வளவு செல்வ மற்றவர் களாக ஆக்கிவிட்டான்! தந்தை மீண்டும் செல்வந்தர்களாக ஆக்குகின்றார். இது எல்லையற்ற நாடக மாகும், இதன் முதல், இடை, கடையை யாரும் அறியவில்லை. தந்தை ஞானம் நிறைந்தவர் ஆவார். அதற்காக அனைவருக்குள்ளும் (மனதில்) இருப்பதை பார்க் கின்றார் என்பது கிடையாது. இவை அனைத்தும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. யார் பாவங்கள் செய்கிறார்களோ அதற்கான தண்டனை கிடைக்கவே செய்கிறது. என்னைத் தான் ஞானம் நிறைந்தவர், தூய்மை ஆக்குபவர் என்று கூறுகின்றனர். ஹே பாபா, வாருங்கள், வந்து எங்களுக்கு ஞானம் கொடுங்கள், தூய்மை யானவர்களாக ஆக்குங்கள் என்று அழைக்கின்றனர். ஆக நான் வந்து இந்த காரியம் செய்கிறேன். மற்றபடி சாஸ்திரங்களில் என்ன விசயம் இருக்கிறதோ அதை மறந்து விடுங்கள், நான் என்ன கூறுகிறனோ அதை மட்டுமே கேளுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது தந்தையின் மூலம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு சூரிய வம்சத்தினர் களாக ஆவீர்கள். பிறகு சந்திர வம்சத்தினர்களாக, வைஷ்ய வம்சத்தினர்களாக, சூத்ர வம்சத்தினர்களாக ஆவீர்கள். இந்த ஞானம் உங்களது புத்தியில் இருக்கிறது. சத்யுகத்தில் அனைத்தும் மறந்து விடும். அங்கு தந்தையை யாரும் நினைக்க மாட்டார்கள். ஆஸ்தி கிடைத்த பின்பு எதற்காக நினைவு செய்ய வேண்டும்! எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறீர்கள்! இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. விருட்சபதியாக இருப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். என்னை நினைவு செய்யுங்கள் என்று அவர் கூறுகின்றார். படைப்பவர் ஒரே ஒருவர் தான் இருப்பாரா? அல்லது கல்-முள்ளும் படைப்பவராக இருக்குமா?
இராவணன் உங்களது புத்தியை எவ்வளவு கெடுத்து விட்டான்! என்று தந்தை கூறுகின்றார். பெரிய பெரிய வித்வான்களுக்கு எவ்வளவு அகங்காரம் இருக்கிறது! தந்தையை அறியவேயில்லை. படைப்பின் முதல், இடை, கடையையும் அறியவில்லை. நான் உங்களுக்கு இராஜ்யம் கொடுத்திருந் தேன், நீங்கள் அனைத்து செல்வங்களையும் அழித்து விட்டீர்கள், இப்போது யாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள், அதனால் தான் அசுர வம்சத்தினர் என்று சொல்லப்படுகிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். தேவதைகளுக்கு எவ்வளவு மகிமை பாடப்படுகிறது! பிறகு எங்களிடம் எந்த குணங் களும் இல்லை என்று கூறுகின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் குணங்களை தாரணை செய்ய வேண்டும், அவகுணங்களை நீக்கி விட வேண்டும். இராவணன் உங்களை குரங்கு போன்று ஆக்கிவிட்டான். இப்போது தந்தை உங்களை தேவதைகளாக ஆக்குகின்றார். யாரிடம் 5 விகாரங்கள் உள்ளதோ அவர்கள் குரங்கு என்று கூறப்படுகின்றனர். (நாரதரின் உதாரணம்) இப்போது உங்களது தோற்றம் மாறிக் கொண்டே இருக்கிறது, பிறகு நாம் தேவதைகளாக ஆகிவிடு வோம். இந்த ஞான ஏரியில் மூழ்கி எழுந்து நாம் ஞான தேவதைகளாக ஆகிவிடுகிறோம். இதையே அவர்கள் நீர் நிறைந்த குளத்தை மானசரோவர் என்று புரிந்து கொள்கின்றனர். இது ஞான குளியலுக்கான விசயமாகும். இதை குழந்தைகள் அறிவீர்கள், பாபா 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு போன்று அதேபோல புரிய வைத்துக் கொண்டிருக் கின்றார். இதில் எந்த சந்தேகமும் வரக் கூடாது. தூய்மைபடுத்தக் கூடிய தந்தை மற்றும் விஷ்ணுபுரியை நினைவு செய்தால் நீங்கள் தூய்மை ஆகிவிடுவீர்கள். மனிதர்கள் முக்திக்காக எவ்வளவு தலையை உடைத்துக் கொள்கின்றனர்! ஆனால் வீடு பற்றி யாருக்கும் தெரியாது. ஆத்மா ஐக்கியமாகி விடும் என்று சிலர் நினைக் கின்றனர். ஆத்மா மற்றொரு சரீரத்தை எடுப்பது கிடையாது என்று சிலர் நினைக்கின்றனர். பல வழிகள் உள்ளன, தந்தையை யாரும் அறியவேயில்லை. முழு உலகமும் கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று நினைக்கிறது. இங்கு தந்தை கூறுகின்றார் லி சிவபகவானின் மகா வாக்கியம். எவ்வளவு இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது! பெயரையே முற்றிலுமாக மாற்றி விட்டனர். நல்லது.
இனிமையிலும் இனிய குழந்தைகளே! என்று பாப்தாதா இருவரும் கூறுகின்றனர். இருவரின் குழந்தைகள் அல்லவா! இவரும் மாணவர், நீங்களும் மாணவர்கள். இவரும் படித்துக் கொண்டிருக் கிறார். யார் பாரதத்தை தூய்மையாக்கும் சேவை செய்கிறார்களோ அவர்கள் தான் குழந்தைகள் ஆவர். யார் தூய்மை ஆகவில்லையோ அவர்களை பாபா பார்த்தும் பார்க்காமல் இருந்து விடுவார். தண்டனை அடைந்து பிறகு வந்து வேலைக் காரனாக ஆவார்கள். யார் தூய்மையானவர்களாகி றார்களோ அவர்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) இனிமையானவர்களாக ஆவதற்காக இனிய தந்தையை மிக அன்பாக நினைவு செய்ய வேண்டும். சத்திய தந்தையிடம் சத்தியமாக இருக்க வேண்டும். ஒரு தந்தையின் உயர்ந்த வழிப்படி நடக்க வேண்டும்.
2) முயற்சி செய்து சம்பூர்ணமானவர்களாக வேண்டும். பாரதத்தை தூய்மை ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும். எந்த விசயத்திலும் சந்தேகம் வரக் கூடாது.
வரதானம்:-
என்னவெல்லாம் விசயங்களை பார்க்கிறீர்களோ, கேட்கிறீர்களோ அவற்றின் சாரத்தை புரிந்துக் கொண்டு விடுங்கள். மேலும் என்ன வார்த்தைகள் பேசுகிறீர்களோ, என்ன கர்மம் செய்கிறீர்களோ, அவற்றில் சாரம் நிரம்பியதாக இருந்தது என்றால், முயற்சி சரளமானதாக (இயல்பானதாக) ஆகி விடும். அப்பேர்ப்பட்ட சரள முயற்சியாளர் (புருசார்த்தி) அனைத்து விசயங்களிலும் ஆல்ரவுண்டு ஆக இருப்பார். அவரிடம் எந்தவொரு குறைவும் தென்படாது, எந்தவொரு விசயத்திலும் தைரியம் குறைவாக இருக்காது. என்னால் இது செய்ய முடியாது என்ற வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளிப்படாது. அப்பேர்ப்பட்ட சரள முயற்சியாளர்கள் சுயம் தாங்களும் சரளமான உள்ளம் கொண்டிருப்பார்கள் மேலும் மற்றவர்களையும் சரளமான உள்ளம் உடையவர்களாக ஆக்கி விடுவார்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!