05 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

05 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

4 November 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! (விசார் சாகர் மந்தன்) சிந்தனைக் கடலை கடைந்து சேவைக்கான பல்வேறு வழி முறைகளை (யுக்திகள்) உருவாக்குங்கள். அதன் மூலம் அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கிடைத்து விடும்.

கேள்வி: -

தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக எந்த ஒரு (யுக்தி) வழி முறையைக் கூறுகிறார்?

பதில்:-

தங்களது உயர்ந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், உள்ளுக்குள் இருக்கும் அனைத்து சீ – சீ யான தீய பழக்கங்களை நீக்கி விடுங்கள். பொய் பேசுவது, கோபப்படு வது போன்றவை மிகவும் மோசமான பழக்கங்கள் ஆகும். சேவையில் ஆர்வம் கொள்ளுங்கள். எவ்வாறு தந்தை நிரகங்காரியாக ஆகி சேவை செய்கிறாரோ அவ்வாறு கூடுமானவரை மற்றவர் களின் நன்மையின் பொருட்டு ஆன்மீக சேவையில் மும்முரமாக இருங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இறந்தாலும் உங்கள் வாசலிலேயே.. .

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் முதன் முதலாக தந்தை யார் என்ற இந்த பாயிண்ட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் புரிய வைக்க வேண்டும். நாம் எல்லையில்லாத தந்தையின் குழந்தைகள் ஆவோம் என்ற நிச்சயம் ஏற்படும் பொழுது குழந்தை களுக்கு அதீந்திரிய சுகத்தின் உணர்வு ஏற்படு கிறது. அவ்வளவே! இந்த ஒரே ஒரு விஷயத்தினால் குஷியின் அளவு ஏறுகிறது. இது நிலையான குஷிக்கான பாயிண்ட் ஆகும். நாம் நம்மை பிரம்மா குமார் குமாரிகள் என்று அழைத்துக் கொள்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது புதிய படைப்பு ஆகும். எனவே முதலில் இவர் நமது தந்தை ஆவார் என்பதை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும். தந்தைக்கு கீழே இருப்பது விஷ்ணு (திரிமூர்த்தியின் படத்தில்) தந்தையிட மிருந்து விஷ்ணுபுரியின் ஆஸ்தி கிடைக்கிறது என்றால், எவ்வளவு குஷி இருக்க வேண்டும். இதனை நிச்சயம் செய்வித்து பிறகு எழுத வைக்க வேண்டும். விஷ்ணுவின் பொருள் வைஷ்ணவர் என்றும் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த தேவி தேவதைகள் நிர்விகாரியாக இருந்தார்கள் என்பதை பாரதவாசிகள் நல்ல முறையில் அறிந்துள்ளார்கள். சொர்க்கத்தில் இவர்களுடைய தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது. நீங்கள் சம்பூர்ண நிர்விகாரிகள். நாங்கள் விகாரி என்று பாடவும் செய்கிறார்கள். சத்யுகத்தில் சம்பூர்ண நிர்விகாரியாக இருப்பார்கள். கலியுகத்தில் சம்பூர்ண விகாரி ஆவார்கள். எனவே முதன் முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை பாரதத்தில் வரும் பொழுது இந்த மகாபாரத போர் அவசியம் நிகழ்கிறது. ஏனெனில், பரமாத்மா வந்து தூய்மையற்ற உலகத்திலிருந்து தூய்மையான உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சரீரங்கள் அழியப் போகிறது. நமக்கு தந்தை படிப்பிக்கிறார் என்ற இந்த நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி என்றால் எந்த அளவிற்கு ஒழுங்காக இருக்க வேண்டும்! இங்கு தங்கும் விடுதிகள் (ஹாஸ்டல்கள்) கிடையாது. விடுதிகள் அமைக்கப்படுகிறது என்றால், பின் நிறைய கட்டிடங்கள் வேண்டும். 7 நாட்கள், 4 நாட்களுக்காக கூட வருகிறார்கள் என்றாலும் கூட நிறைய கட்டிடங்கள் வேண்டும். இல்லற விவகாரங்களில் இருந்தபடியே பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். அவ்வளவே ! பாபா தான் பதீதபாவனர் ஆவார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய எல்லா பாவங்களும் சாம்பலாகி விடும் என்று நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். முதலில் உண்மையில் நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் பின் உலகத்தின் அதிபதி தன்மைக்கு உரிமையாளர் ஆகி விடுகிறோம் என்பதை எழுதுமாறு செய்விக்க வேண்டும். இராஜா இராணி பிரஜைகள் எல்லோருமே உலகத்தின் அதிபதி ஆவார்கள். மேளா, கண்காட்சிகளில் யாரெல்லாம் புரிய வைக்கக் கூடியவர்கள் இருக்கிறார் களோ அவர்களுக்கு பாபா அளிக்கும் உத்தரவு யாதெனில் – உயர்ந்திலும் உயர்ந்த பகவான் ஒரே ஒருவர் ஆவார் என்ற அடிப்படை விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும். அவர் ஞானக் கடல், பதீதபாவனர் ஆவார். ஞானத்தின் கடல் ஆவார். எனவே அவசியம் உத்தரவு (டைரக்ஷன்) அவர் தான் கொடுப்பார். கிருஷ்ணர் கொடுக்க முடியாது. சிவபாபாவைத் தவிர வேறு யாருமே பகவான் கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரன் கூட தேவதைகள் ஆவார்கள். சொர்க்கத்தில் இருப்பவர்கள் தெய்வீக குணங்கள் உடைய மனிதர்கள். இங்கு கலியுகத்தில் இருப்பவர்கள் அசுர குணமுடைய மனிதர்கள். இதை பின்னால் புரிய வைக்க வேண்டும். முதன் முதலில் தந்தையின் அறிமுகம் அளித்து கையொப்பம் இடுமாறு செய்விக்க வேண்டும். ஞான மனனம் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் எடுத்து வர வேண்டும். பின் பாபாவிடம் கூற வேண்டும். பாபா இந்த விதமான கேள்விகள் கேட்கிறார்கள், இந்த விதமாக நாங்கள் புரிய வைத்தோம். பிறகு பாபா அவர்களுக்குத் தாக்கம் ஏற்படும் வகையில் அப்பேர்ப்பட்ட பாயிண்ட்டை கூறுவார். பாபாவை சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறுவது அல்லது ஆமை, மீன் அவதாரம் எடுக்கிறார் என்று கூறுவது நிந்தனை ஆகும். எனவே பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பாபா தான் உலகிற்கு அதிபதி ஆக்குகிறார். இந்த இலட்சுமி நாராயணர் உலகிற்கு அதிபதியாக சதோபிரதானமாக இருந்தார்கள். பிறகு மறுபிறவி எடுத்து எடுத்து தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். மீண்டும் தந்தை கூறுகிறார் – என்னை நினைவு செய்தீர்கள் என்றால் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். எந்த தர்மத்தினராக இருந்தாலும் சரி தந்தையின் செய்தி எல்லோருக்காக இருக்கிறது. அவருக்கு காட்ஃபாதர், லிபரேட்டர் என்று கூறுகிறார்கள். லிபரேட் செய்வதற்காக (விடுவிப்பதற்காக) அவசியம் பதீதமான (தூய்மையற்ற) உலகத்தில் வருவார். கலியுகக் கடைசியில் முழு உலகமே தமோபிரதானமாக உள்ளது. சதோபிரதானமாக ஆகும் பொழுது தான் புதிய உலகத்திற்குச் செல்ல முடியும். மற்றபடி யார் அங்கு வருவதில்லையோ அவர்கள் சாந்தி தாமத்தில் இருப்பார்கள். இதை புத்தியில் பதிய வைக்க வேண்டும். அப்பொழுது நாங்கள் அந்த தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. தந்தை இருப்பதே விதேஹி, விசித்திரமானவர் (சரீரமற்றவர்) மற்ற எல்லோருடைய சித்திரங்களும் (உடல்) வெவ்வேறு ஆகும். எவரொருவருக்கும் புரிய வைப்பதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். கண்காட்சியில் நிறைய பேர் வருகிறார்கள். சென்டருக்கு அத்தனை பேர் வருவ தில்லை. சேவையில் இருப்பதால் குழந்தைகளுக்கு நிறைய உற்சாகம் ஏற்படும். இங்கு தந்தையை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். சேவையில் இருந்தீர்கள் என்றால், நினைவு யாத்திரையை மறக்க மாட்டீர்கள். முதலில் தாங்கள் நினைவில் இருந்தார்கள் என்றால், மற்றவர்களுக்கும் நினைவூட்டு வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் படித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நாம் அவசியம் இராஜ்யத்தைப் பெறுவோம் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. இது நினைவில் இருந்தால் கூட குஷி இருக்கும். மறந்து விடுவதால் அச்சம் ஏற்படுகிறது. பாபா நாங்கள் அதிந்திரிய சுகத்தில் இருக்கிறோம் என்று பாபாவிற்கு எழுத வேண்டும். மீதி கொஞ்சம் நேரம் தான் இருக்கிறது. பிறகு நாம் நமது சுகதாமத்திற்குச் சென்று விடுவோம். 63 பிறவிகள் நாம் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தோம். எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படாததால் புற்று நோய் ஏற்பட்டு விட்டது. யாருடைய மேற்பார்வையும் கிடைக்க முடியவில்லை. அதனால் நோய் உள்ளுக்குள் குடி புகுந்து விட்டது. இந்த நோய் எப்பேர்ப்பட்டது என்றால், அழிவற்ற சர்ஜனைத் தவிர வேறு யார் மூலமாகவும் ஒரு பொழுதும் விடுபடுத்த முடியாது. இப்பொழுது அனைவருக்கும் விடுபடுவதற் கான நேரமாகும். தூய்மையாக ஆகி முக்திதாமத்திற்குச் சென்று விடுவீர்கள். ஒரு சிலர் முக்தியில் இருப்பது நல்லது என்பார்கள். பாகமே இருக்காது. எப்படி நாடகத்தில் யாராவது சிறிதளவு பாகத்தை நடித்து முடித்து விட்டார் என்றால், அவருக்கு ஹீரோ ஹீரோயின் அல்லது உயர்ந்த பாகம் நடிப்பவர் என்றுகூற மாட்டார்கள். கூடுமானவரை தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால், பக்குவமாக ஆகி விடுவீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நினைவு மறக்கக் கூடாது. முக்கியமானவர் ஒரு தந்தை ஆவார். மற்றபடி இவை எல்லாம் புரிய வைப்பதற்கான சிறு சிறு படங்கள் ஆகும். இவற்றின் மூலம் சிவனும் சங்கரனும் ஒன்று கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும். மற்றபடி சூட்சும வதனத்தின் விஷயம் எதுவும் கிடையாது. இவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஞானம் அளிப்பவர் ஒரு தந்தை ஆவார். அவர் சங்கமத்தில் அளிக்கிறார். இதைப் பக்குவப்படுத்துங்கள். பாரதவாசிகளுக்கு கல்ப கல்பமாக சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. 5 ஆயிரம் வருடங்களின் விஷயமாகும். அவர்கள் பின் இலட்சக் கணக்கான வருடங்கள் என்று கூறி விடுகிறார்கள். அவர்கள் கலியுகம் மட்டுமே இலட்சக் கணக்கான வருடங்களினுடையது என்று கூறுகிறார்கள். மேலும் நாம் இந்த முழு சக்கரமே 5 ஆயிரம் வருடங்களினுடையது என்று கூறுகிறோம். எவ்வளவு பெரிய பொய் கூறி உள்ளார்கள். ஹே பதீத பாவனரே ! என்று அழைக்கிறார்கள். கிருஷ்ணரை பதீத பாவனர் என்று கூறமாட்டார்கள். எந்த ஒரு தர்மத்தினரும் கிருஷ்ணரை லிபரேட்டர் என்று கூற மாட்டார்கள். ஹே பதீத பாவனரே ! என்று அழைக்கும் பொழுது புத்தி மேலே சென்று விடுகிறது. பிறகும் புரிந்து கொள்வது இல்லை. மாயையினுடைய இருள் எவ்வளவு இருக்கிறது. கவன மின்மையில் இருக்கிறார்கள். சாஸ்திரங்கள் அனாதி. தொன்றுதொட்டு உள்ளன என்கிறார்கள். ஆனால் சத்யுக திரேதாவில் இவை இருப்பதில்லை. இந்த படிப்பு எப்பேர்ப் பட்டது என்றால் வியாதி இருந்தால் கூட வகுப்பில் அமர்ந்து படிக்க முடியும். இங்கு சாக்கு போக்கு நடக்காது. பசுக்கள் மிகவும் நன்றாக இருக்கும். ஒரு சிலரது உதைத்தும் விடும். இங்கு கூட யாரிடமாவது கோபம் இருந்தால் அகங்காரத்தின் வசப்பட்டு எட்டி உதைத்தும் விடுகிறார்கள். டிஸ்-சர்வீஸ் செய்து விடுகிறார்கள். ஆக, எந்த ஒரு அவகுணமும் இருக்கக் கூடாது. ஆனால் கர்ம பந்தனம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது என்றால், உயர்ந்த பதவியை அடைய விடுவதில்லை. தந்தை உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைப்பதற்கான வழி கூறுகிறார். ஆனால் ஒருவர் அமைத்துக் கொள்ள வில்லை என்றால் தந்தை என்ன செய்ய முடியும்? மிகவும் உயர்ந்த சம்பாத்தியம் ஆகும். சம்பாத்தியத்தினுடைய போதை இருக்க வேண்டும். சம்பாதிக்க வில்லை என்றால் விளைவு என்னவாகும்? கல்ப கல்பம் அப்பேர்ப்பட்ட நிலைமை ஆகி விடும். தந்தை அனைவருக்கும் எச்சரிக்கை அளிக்கிறார். அவமதிப்பது இல்லை. குழந்தைகளிடம் எந்த ஒரு சீ – சீ யான பழக்கமும் இருக்கக் கூடாது. பொய் பேசுவது மிகவும் கெடு தலானது. யக்ஞ சேவை குஷியுடன் செய்ய வேண்டும். பாபாவிடம் வருகிறார்கள் என்றால், சேவை செய்யுங்கள் என்று தந்தை சமிக்ஞை செய்கிறார். யார் உங்களுக்கு உணவளிக் கிறார்களோ அவர்களுக்கு அவசியம் சேவை செய்ய வேண்டும். சேவை செய்ய தந்தை கற்பிக்கிறார். பாருங்கள் உயர்ந்ததிலும் உயர்நத தந்தை கூட எவ்வளவு சேவை செய்கிறார். எந்த வேலை அஞ்ஞானத்தில் செய்யவில்லையோ அதையும் செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவிற்கு நிரகங்காரி ஆக வேண்டும். நியமத்திற்குப் புறம்பாக எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாது. கூடுமானவரை மற்றவர்களின் நன்மைக்காக எல்லாமே நம் கைகளாலேயே செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஏதோ செய்வித்தீர்கள் என்றால் அது வேறு விஷயம். தன்னை நிரகங்காரியாக மோகமற்றவராக (நிர் மோஹி) ஆக்க வேண்டும். பாபாவின் நினைவு இல்லாமல் யாருக்குமே நன்மை ஏற்படாது. எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அநத் அளவு தூய்மையாக ஆவீர்கள். நினைவில் தான் தடைகள் ஏற்படுகின்றன. ஞானத்தில் இந்த அளவு தடைகள் ஏற்படுவதில்லை. ஞானத்தில் அநேக பாயிண்ட்ஸ் இருக்கின்றன. தந்தையை நினைவு செய்வதால் நறுமணமுள்ள மலராக ஆகி விடுவீர்கள். குறைவாக நினைவு செய்தீர்கள் என்றால் நறுமணமற்ற மலராக ஆகி விடுவீர்கள். எருக்கம் பூ கூட இருக்கிறது. எனவே தங்களை நறுமணமுள்ள மலராக ஆக்க வேண்டும். எந்த ஒரு துர்நாற்றமும் இருக்கக் கூடாது. ஆத்மாவை நறுமணமுடையதாக ஆக்க வேண்டும். இவ்வளவு சிறிய புள்ளிக்குள் முழு ஞானம் நிரம்பி உள்ளது. ஆச்சரியம் ஆகும். சிருஷ்டி ஒன்றே ஒன்று தான். மேலே அல்லது கீழே சிருஷ்டி கிடையாது. திரி மூர்த்தி என்பதன் பொருளைக் கூட நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர்கள் திரிமூர்த்தி மார்க்கம் என்று பெயர் மட்டும் வைத்து விட்டுள்ளார்கள். ஒரு சிலர் பிரம்மாவை திரிமூர்த்தி என்று கூறி விடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரம் பற்றி எதுவும் தெரியாது. சாஸ்திரங்களில் இருப்பது சிறந்த முறையில் வாழ்ந்த (சிரேஷ்டாச்சாரி) மனிதர்களின் வாழ்க்கைச் சரித்திரம். இலட்சுமி நாராயணர், இராதை கிருஷ்ணர் ஆகிய எல்லோருமே மனிதர்கள் ஆவார்கள். ஆனால் மற்றவர்களுடைய வாழ்க்கை சரித்திரங்களுக்கு சாஸ்திரங்கள் என்று கூறப்படுவதில்லை. தேவதைகளின் வாழ்க்கை சரித்திரங் களே சாஸ்திரங்கள் என்று கூறப்படு கின்றன. மற்றபடி சிவபாபாவின் வாழ்க்கை சரித்திரம் எங்கே? அவர் நிராகாரமானவர் ஆவார். நான் பதீத பாவனன்! என்று சுயம் கூறுகிறார். என்னை எல்லோரும் ஃபாதர் என்று கூறி அழைக்கிறார்கள். நான் வந்து சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறேன். பாரதம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது மீண்டும் ஆகப் போகிறது. எவ்வளவு எளிதான விஷயம். ஆனால் எப்பேர்ப்பட்ட கல் புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள் என்றால், பூட்டே திறப்பதில்லை. ஞானம் மற்றும் யோகத்தின் பூட்டு மூடி உள்ளது.

உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் செய்தி கொடுங்கள் என்று தந்தை கூறுகிறார். முதல் மாடி மூலவதனம், இரண்டாவது மாடி சூட்சும வதனம், மூன்றாவது மாடி இந்த சாகார உலகம் ஆகும். இந்த மாடிகள் குழந்தைகளுக்கு நினைவு இருந்தது என்றால், முதலில் பாபா அவசியம் நினைவிற்கு வருவார். சேவைக்காக ஓட வேண்டும். பாபா சேவைக்கு செல்வதற்கு தடையே விதிப்பதில்லை. தாராளமாக திருமணங்களுக்குச் செல்லுங்கள், தீர்த்தங்களுக்குச் செல்லுங்கள். சேவை செய்துக் கொண்டே செல்லுங் கள். சொற்பொழிவு நிகழ்த்துங்கள். கூறுங்கள் – ஒன்று ஆன்மீக யாத்திரை மற்றொன்று ஸ்தூல யாத்திரை ஆகும். பாயிண்ட்ஸ் நிறைய உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. வானப்பிரஸ்திகளின் கூட்டத்தில் போய் சேவை செய்யுங்கள். அவர்களுடையதையும் கேளுங்கள். அவர்கள் என்ன கூறு கிறார்கள் என்று பாருங்கள். கையில் பிரசுரங்கள் இருக்க வேண்டும். முக்கியமாக 4-5 விஷயங்கள் எழுதப்பட்டு இருக்க வேண்டும். இறைவன் எங்கும் நிறைந்தவர் அல்ல. கீதையின் பகவான் கிருஷ்ணர் அல்ல. இதை தெளிவாக எழுதி விடுங்கள். யாராவது படித்தால் இது உண்மை தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதில் மிகவும் புத்திசாலித்தனம் வேண்டும். பாபா திரிமூர்த்தி பற்றியும் புரிய வைக்கிறார். இதை அடிக்கடி பாக்கெட்டிலிருந்து எடுத்து பார்த்துக் கொண்டே இருங்கள். இவர் பாபா, இது ஆஸ்தி என்பதை யாருக்கு வேண்டுமானாலும் புரிய வையுங்கள். விஷ்ணுவின் படம் கூட நன்றாக உள்ளது. ரயில் வண்டியில் கூட சேவை செய்ய முடியும். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால், உலகிற்கு அதிபதி ஆகி விடுவீர்கள். சேவை நிறைய ஆக முடியும். ஆனால் யாருக்கும் அந்த அறிவு வருவதே இல்லை. நிறைய முயற்சி செய்ய வேண்டும். யுத்த மைதானத்தில் சோம்பலாக இருக்க வேண்டுமா என்ன? மிகுந்த எச்சரிக்கை யுடனிருக்க வேண்டும். கோவில்களில் நிறைய சேவை செய்ய முடியும். பாபா மன்மனாபவ என்று கூறுகிறார். அவ்வளவே! தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதான மானவராக ஆகுங்கள். முக்கியமான விஷயத்தைப் பக்குவமாக உறுதிப்படுத்தி விட வேண்டும். குழந்தைகளுக்கு நிறைய சேவை பற்றிய சிந்தனை வேண்டும். திரிமூர்த்தியின் படத்தில் முழு ஞானம் நிரம்பி உள்ளது. ஏணிப்படி சித்திரம் நன்றாக உள்ளது. ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதில் தங்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள். சிறிய குழந்தைகளுக்கும் வழி முறைகளைக் (யுக்திகளை) கற்பியுங்கள். எல்லோரும் பாராட்டுக்கள் தெரிவிப்பார்கள். எவ்வளவு அற்புதம், இந்த பிரம்மா குமார் குமாரிகளினுடைய சிறிய குழந்தைகள் கூட எந்த ஒரு சந்நியாசி ஆகியோர் கொடுக்க முடியாத அப்பேர்ப்பட்ட ஞானத்தைக் கொடுக்கிறார்கள் என்பார்கள். இலவசமாக பொருள் கிடைக்கிறது என்றால், இதை நமது நன்மைக்காகக் கொடுக்கிறார்கள் என்று புரிந்து கொள்வார்கள். கூறுங்கள், இது இலவசம் ஆகும். நீங்கள் தாராளமாகப் படியுங்கள். இதனால் தங்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சிவபாபா (போலா பண்டாரி) கள்ளம் கடபமற்ற களஞ்சிய மானவர் அல்லவா? ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள். பாபாவிற்கு பைசாவின் அவசியம் என்ன இருக்கிறது? இரயில் வண்டியில் நீங்கள் நிறைய சேவை செய்ய முடியும். மனிதர் நல்லவராக இருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால், சட்டென்று உடனே அவருக்கு புரிய வைத்து படத்தை கொடுத்து விட வேண்டும். நீங்கள் உங்களுக்கும் நன்மை செய்யுங்கள். மேலும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள் என்று கூறுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. எந்த ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயலையும் செய்யக் கூடாது. மிக மிக நிரகங்காரி யாகவும் நிர்மோகியாகவும் (மோகமற்றவராகவும்) இருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு செயலையும் தங்களது கைகளால் செய்ய வேண்டும். யக்ஞத்தின் சேவையை மிகவும் குஷியுடன் செய்ய வேண்டும்.

2. படிப்பில் ஒரு பொழுதும் சாக்குப் போக்கு கூறக் கூடாது. நோய்வாய்ப் பட்டிருக்கும் பொழுதும் அவசியம் படிக்க வேண்டும். உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால், சேவையில் ஆர்வம் கொள்ள வேண்டும்.

வரதானம்:-

பக்தி மார்க்கத்தில் கணேசரை தடைகளை அழிக்கக் கூடியவர் என்று கூறி பூஜிக் கின்றனர். மேலும் அவரை மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் அதாவது வித்யாபதி என்றும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆக எந்தக் குழந்தைகள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தடைகளில் தோல்வி அடைய முடியாது. ஏனெனில் ஞானம் என்றால் ஒளி மற்றும் சக்தி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இலட்சியம் அடைவது எளிதாக ஆகிவிடுகிறது. இவ்வாறு யார் தடைகளை அழிக்கக் கூடியவரோ, தந்தையுடன் சதா இணைந்த ரூபத்தில் இருந்து ஞானச் சிந்தனை செய்கிறார்களோ அவர்கள் ஒருபோதும் தடைகளில் தோல்வி அடைய முடியாது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top