01 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

01 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

31 October 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிய குழந்தைகளே, உங்கள் நடத்தை மிகவும் இனிமையாகவும், இராஜரீகமாகவும் இருக்க வேண்டும். கோபம் என்ற தீய ஆவி முற்றிலும் இருக்கக்கூடாது.

கேள்வி: -

21 பிறவிகளுக்கான வெகுமதியைப் பெறுவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக எதில் கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:-

இவ்வுலகில் வாழ்ந்து, அனைத்தையும் செய்யும்பொழுதும், உங்கள் புத்தியின் யோகம் உண்மையான அதி அன்பிற்கினியவருடன் இணைந்திருக்க வேண்டும். தந்தையின் கௌரவம் இழக்கப்படும்வகையில், எந்தத் தீய பழக்கங்களையும் கொண்டிராதீர்கள். வீட்டில் வசிக்கும்பொழுது, உங்களிடம் மிக நல்ல தெய்வீகக் குணங்கள் இருப்பதைப் பிறர் காணும்வகையில், ஒருவரோடு ஒருவர் அதிகளவு அன்புடன் ஒன்றாக வாழுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

விழித்தெழுங்கள், ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய யுகம் வரவுள்ளது.

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகளான நீங்கள் அதன் அர்த்தத்தையும் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள். தந்தை வந்து உங்களுக்குப் புதிய விடயங்களைக் கூறுகிறார். குழந்தைகளான நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் புதிய உலகிற்கான புது யுகத்தின் இவ்விடயங்களைப் பற்றிச் செவிமடுத்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவற்றைச் செவிமடுக்கிறீர்கள். இடையில், நீங்கள் பக்தி மார்க்கத்திற்குரிய விடயங்களைச் செவிமடுத்தீர்கள். இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அங்கு, ஞானப் பாதையின் வெகுமதியை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்கான ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். ஞானம் வருமானத்திற்கான மூலாதாரம் எனக் கூறப்படுகிறது; கற்பதனால் சிலர் சட்டத்தரணிகளாகவோ அல்லது பொறியியலாளர்களாகவோ ஆகுகின்றார்கள். அதுவும் வருமானத்தைக் கொண்டு வருகிறது. நீங்கள் இந்தக் கல்வியினூடாக அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுகின்றீர்கள். இது அத்தகையதொரு மகத்தான வருமானம் ஆகும். குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்பொழுது, அது நம்பிக்கையாக மாறும். ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி’ என்பது நினைவுகூரப்படுகிறது. நீங்கள் பாபாவிற்கு உரியவர்கள், நீங்கள் ஆஸ்திக்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சுவர்க்கத்தைப் படைப்பவரான, தந்தை, உங்களை அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார். குழந்தைகளான உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுக்கு இரு தந்தையர் இருப்பதை நீங்களும் அறிவீர்கள். ஒருவர் பௌதீகத் தந்தையும், மற்றவர் பரமாத்மாவாகிய பரமதந்தை என நீங்கள் அழைக்கும் ஆன்மீகத் தந்தையும் ஆவார்: “ஓ தந்தையாகிய கடவுளே”. பௌதீகத் தந்தையை ஒருபொழுதும் பரமதந்தை என்று அழைக்க முடியாது. ஒரேயொரு அப்பாலுள்ள தந்தை மட்டுமே அனைவருக்கும் அமைதியையும், சந்தோஷத்தையும் அருள்பவர். சத்தியயுகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். எஞ்சிய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் வசிக்கின்றார்கள். சத்தியயுகத்தில், உங்களுக்கு அமைதி, சந்தோஷம், செல்வம், நோயிலிருந்து விடுபட்ட சரீரங்கள் போன்றன உள்ளன, நீங்கள் அனைத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். எனவே, அனைவரும் அதி அன்பிற்கினிய தந்தையைக் கூவியழைக்கிறார்கள். சாதுக்களும், சந்நியாசிகளும் ஆழ்ந்த பக்தி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் யாருக்காக அந்த ஆன்மீக முயற்சியைச் செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தில் கலப்பதற்காக ஆன்மீக முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களால் அதனுடன் கலக்க முடியாது. பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்வதனால் பாவங்களை அழிக்க முடியாது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். நான் சர்வசக்திவானா அல்லது வசிப்பிடமான பிரம்ம தத்துவம் சர்வசக்திவானா? பிரம்ம தத்துவம் ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கும் இடமான மகா தத்துவம் ஆகும். ஆகவே, அவர்கள் பிரம்ம தத்துவத்தைக் கடவுளாகக் கருதியுள்ளார்கள். எவ்வாறு பாரத மக்கள் இந்துஸ்தானில் வசிப்பதனால் இந்து சமயத்தைத் தங்கள் சமயமாகக் கருதியுள்ளார்;களோ, அதேபோன்று, அவர்கள் வசிப்பிடமான பிரம்ம தத்துவத்தைக் கடவுளாகக் கருதி விட்டார்கள். அது ஆத்மாக்கள் நீள்கோள வடிவில் ஒளிப்புள்ளிகளாக வசிக்கும் பிரம்மாண்டமாகும், இதனாலேயே அந்த இடம் பிரம்மாண்டம் என அழைக்கப்படுகிறது. இது மனித உலகம் ஆகும். பிரம்மாண்டம் மனித உலகிலிருந்து வேறுபட்;டது. ஆத்மா என்றால் என்னவென்று எவரும் அறியார். ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின்; மத்தியில் பிரகாசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். பின்னர் ஆத்மாக்கள் பெருவிரல் போன்ற வடிவம் கொண்டவர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: ஆத்மா அதி சூட்சுமமான புள்ளியும், இந்தக் கண்களால் பார்க்க முடியாததும் ஆகும். மக்கள் அதனைப் பார்ப்பதற்கும், பிடித்துக் கொள்வதற்கும் பெருமளவில் முயற்சி செய்கிறார்கள், ஆனால் எவருக்கும் அதனைப் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் இப்பொழுது பாரதத்தைச் சுவர்க்கமாக்குவதில் தந்தையின் உதவியாளர்கள் ஆகவேண்டும் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். தந்தை பாரதத்தில் மட்டும் வருகிறார். பாரதத்தில் மட்டுமே மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்து வந்து சென்றதனால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்து எப்பொழுது வந்தார் என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆனால் பாரத மக்களுக்கோ தந்தை எப்பொழுது வந்தார் என்றோ அல்லது கிருஷ்ணர் எப்பொழுது வந்தார் என்றோ தெரியாது. அவர்களுக்கு எதைப் பற்றியும் எதுவும் தெரியாது. பாடப்பட்டுள்ள புகழ் அனைத்தும் கிருஷ்ணருடையது. அவர்கள் அவரின் உருவத்தைத் தொட்டிலில் இட்டு ஆட்டி, பெருமளவில் அன்பு செலுத்துகிறார்கள். ஆனால் அவர் எப்பொழுது பிறந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர் துவாபர யுகத்தில் கீதையைக் கூறினார் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கிருஷ்ணர் துவாபர யுகத்தில் இருக்கவில்லை. தெய்வீகச் செயல்கள் ஒரேயொரு தந்தையினுடையவை மட்டுமே ஆகும். இதனாலேயே, அவர்கள் அவரைப் பற்றிக் கூறுகிறார்கள்: நீங்கள் மட்டுமே உங்களுடைய வழிமுறைகளை அறிவீர்கள். கிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசர். அவருடைய அன்னை யோக சக்தியினூடாகத் தான் குழந்தை ஒன்றைப் பெறப் போகும் காட்சியை முற்கூட்டியே கண்டார். அங்கு, அவர்கள் அதே முறையில் தமது சரீரங்களையும் நீக்குகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தை விடுத்து, வேறொன்றை எடுக்கிறார். பாம்பின் உதாரணமும் உள்ளது. உண்மையில், சந்நியாசிகளால் அந்த உதாரணத்தைக் கொடுக்;க முடியாது. விகாரத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் அமர்ந்திருந்து இந்த ஞானத்தை ரீங்காரம் செய்து, அவர்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்குகின்றீர்கள். இந்த ஞானத்தை ரீங்காரம் செய்து, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவது உங்கள் வியாபாரமாகும். ஆமையின் உதாரணமும் இந்த நேரத்திற்குரியது. செயல்களைச் செய்த பின்னர், உங்களுக்கு நேரம் இருக்கும்பொழுதெல்லாம் தந்தையை நினைவுசெய்யுங்கள். இது உங்கள் இறுதிப் பிறவி என்பதை நீங்கள் அறிவீர்கள். நாடகம் இப்பொழுது முடிவடைய வேண்டும். சரீரங்களும் இப்பொழுது பழையதாகி விட்டன. சரீரத்தின் கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் சதோபிரதானாகும்பொழுது, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். அப்பொழுது உங்களால் உங்களுடைய தற்போதைய சரீரத்தில் தங்கியிருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடைந்ததும், உங்களுடைய சரீரங்களை நீக்குவதுடன், யுத்தமும் ஆரம்பமாகும். சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதுடன், ஆத்மாக்கள் அனைவரும் நுளம்புக் கூட்டத்தைப் போல் வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். எவராலும் தூய்மையாகாமல் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. இது இராவணனால் ஸ்தாபிக்கப்பட்ட துன்ப பூமி, ஆனால் சிவாலயமோ இராமரால் (கடவுள்) ஸ்தாபிக்கப்பட்டது. உண்மையில், பரமாத்மாவின் பெயர் சிவனே அன்றி, இராமரல்ல. தேவர்கள் அனைவரும் சிவாலயமான, சத்தியயுகத்தில் இருக்கிறார்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில், அவர்கள் சிவனின் விக்கிரகங்களை வைப்பதற்கு, சிவனுக்கு ஆலயங்களைக் கட்டுகிறார்கள். இதுவே சிவபாபாவின் சிம்மாசனம் ஆகும். ஆத்மா இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். தந்தையும் வந்து, இவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் இங்கு எல்லா நேரமும் தங்கியிருப்பதில்லை. நீங்கள் அவரை நினைவுசெய்யும்பொழுது, அவர் வருகிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுடைய எல்லையற்ற தந்தை. நீங்கள் என்னிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறவுள்ளீர்கள். பிரம்மா எல்லையற்ற தந்தை அல்ல. எனவே, நீங்கள் என்னை நினைவுசெய்ய வேண்டும். பாபாவே ஞானக்கடலும், அன்புக்கடலும் என்பதை இனிய குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். எனவே, குழந்தைகளான நீங்களும் அன்புக்கடல்கள் ஆகவேண்டும். கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பினைக் கொண்டிருப்பதில்லை; அவர்கள் காம விகாரத்தையே அன்பு எனக் கருதுகிறார்கள். எவ்வாறாயினும், பாபா கூறியுள்ளார்: காமமே கொடிய எதிரி. அதன் ஆரம்பத்திலிருந்து, மத்தியினூடாக இறுதிவரை அது துன்பத்தையே விளைவிக்கிறது. தேவர்கள் விகாரமற்றவர்கள், இதனாலேயே அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: எனக்குக் கிருஷ்ணரைப் போன்ற குழந்தை வேண்டும். எனக்குக் கிருஷ்ணரைப் போன்ற கணவன் வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் பூமியை நினைவுசெய்கிறார்கள். தந்தை இப்பொழுது கிருஷ்ணரின் பூமியை ஸ்தாபிக்கிறார். நீங்களே ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்று அல்லது மோகனைப் (அனைவரையும் ஈர்ப்பவர்) போன்று ஆகமுடியும். ஏனைய இளவரசர்களும், இளவரசிகளும் இருப்பார்கள். நீங்கள் இங்கு அவ்வாறு ஆகுகின்றீர்கள். அவர்களின் பட்டியலும் உள்ளது. எட்டு மணி மாலையும், 108 மணி மாலையும் உள்ளன. மக்கள் ஒன்பது இரத்தினங்களைக் கொண்ட மோதிரத்தை அணிகிறார்கள். அந்த எட்டுப் பேரும் யார்? மத்தியில் இருப்பவர் யார்? அனைவரிலும் இனிமையிலும் இனிமையான தந்தையினூடாக நாங்கள் இரத்தினங்கள் ஆகுகிறோம் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, ஒருவரோடு ஒருவர் பெருமளவு அன்புடன் பழகுங்கள். இல்லாவிடின், நீங்கள் தந்தையின் பெயரை அவதூறு செய்வீர்கள். சற்குருவை அவதூறு செய்துள்ளவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியாது. அனைவருக்கும் இந்த மந்திரத்தை வழங்குங்கள்: ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள், கலப்படம் அகன்று விடும். உங்களுக்குள் எந்தவொரு கோபமும் கிடையாது, ஆனால் நீங்கள் பெருமளவு அன்பைக் கொண்டுள்ளீர்கள் என மற்றவர்கள் நம்புமளவிற்கு நீங்கள் வீட்டிலுள்ள அனைவருடனும் அதிகளவு அன்புடன் பழக வேண்டும். மது அருந்துதல், சிகரெட்டுக்களைப் பிடித்தல் என்பன தீய பழக்கங்கள், இத்தகைய தீய பழக்கங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். இங்கேயே தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சி தேவைப்படுகிறது. ஏனைய மதத்தவர்கள் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. அவர்கள் இறுதிவரைக்கும் மேலிருந்து தொடர்ந்தும் கீழே வந்து கொண்டிருப்பார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் வெகுமதியை உருவாக்குகிறீர்கள், மாயையின் பல புயல்கள் ஏற்படும். எவ்வாறாயினும், நீங்கள் முயற்சி செய்வதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் கோபத்துடன் பேசினால், உங்களுக்குள் தீய ஆவி இருப்பதாக மக்கள் கூறுவார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையின் கௌரவத்தை இழக்கச் செய்து விட்டீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அப்பொழுது எவ்வாறு உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்? மிகவும் இனிமையானவர்களாகி, தூண்டுதலில் இருந்தும் விடுபட்டிருங்கள். இங்கு வாழ்ந்து அனைத்தையும் செய்யும்பொழுதும், உங்கள் யோகம் அன்பிற்கினியவருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பாபா கூறியுள்ளார்: என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது யோக அக்கினி எனப்படுகிறது. இங்கு ஹத்தயோகத்திற்கான அவசியமில்லை. உங்களுடைய சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருங்கள், ஏனெனில் அது உங்களுடைய மிகவும் பெறுமதிவாய்ந்த சரீரமாகும். அத்துடன் தூய உணவையும் உண்ணுங்கள். தேவர்களுக்குப் படைக்கப்படும் போக்கினைப் பாருங்கள். ஸ்ரீநாத் துவாராவைச் சென்று பாருங்கள். வங்காள மக்கள் காளிக்கு ஆடொன்றைப் போக்காகப் பலியிடுகின்றார்;கள். பிரிந்து சென்ற ஆத்மாக்களுக்கு மீன் போன்றவற்றையும் அவர்கள் படைக்கின்றார்கள். இல்லாவிட்டால் பிரிந்து சென்ற ஆத்மாக்கள் குழப்பமடைவார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். யாரோ ஒருவர் ஒரு வழக்கத்தை உருவாக்கினார், அது தொடர்ந்து வருகின்றது. தேவர்களின் இராச்சியத்தில் எந்தவொரு பாவமும் செய்யப்படுவதில்லை. அது இராம இராச்சியமாகும். இங்கு, செயல்கள் பாவச் செயல்கள் ஆகுகின்றன. அங்கு, செயல்கள் நடுநிலையானவை. பக்தர்கள் ஹரித்துவாரிற்குச் செல்கிறார்கள். கிருஷ்ணர் ஹரி என்று குறிப்பிடப்படுகின்றார், ஆனால் கிருஷ்ணர் சத்தியயுகத்திலேயே இருக்கிறார். உண்மையில், ஹரி என்பது துன்பத்தை நீக்குபவரான, சிவனின் பெயராகும். ஆனால் அவர்கள் கிருஷ்ணரை ஹரி எனக் கருதி, கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். உண்மையில், சிவபாபாவே அனைவரினதும் துன்பத்தை நீக்குபவர். சத்தியயுகமே ஹரியின் வாயில் (ஹரித்துவார்) ஆகும். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் தங்கள் மனங்களில் தோன்றுகின்ற அனைத்தையும் தொடர்ந்தும் கூறுவார்கள். தந்தை கூறுகிறார்: நான் பழைய உலகைப் புதியதாக்குவதற்குச் சங்கமயுகத்தில் வருகிறேன். இராவணன் உங்களுடைய பழைய எதிரி. மக்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள், அதற்கு அவர்கள் அதிகளவு பணத்தையும் செலவழிக்கிறார்கள். அவை அனைத்தும் நேர விரயமும், பண விரயமும் ஆகும். வங்களாத்தில் அவர்கள் பல இறைவிகளின் உருவங்களைச் செய்கிறார்கள். அவர்கள் அவற்றிற்கு உணவூட்டி, அவற்றை வழிபட்டுப் பின்னர் அவற்றை நீரில் மூழ்கடிக்கிறார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டதொரு பாடலும் உள்ளது. குழந்தைகளான நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகவேண்டும். ஒருபொழுதும் கோபத்தில் பேசாதீர்கள். ஒருபொழுதும் தந்தையுடன் முகங்கோணாதீர்கள். நீங்கள் முகங்கோணிக் கற்பதை நிறுத்தினால், உங்களுடைய கால்களையே நீங்கள் வெட்டிக் கொள்வதைப் போன்றதாகும். நீங்கள் இங்கு உலக அதிபதிகள் ஆகுவதற்கு வந்துள்ளீர்கள். ஸ்ரீ நாராயணன் சக்கரவர்த்தியும், ஸ்ரீ இலக்ஷ்மி சக்கரவர்த்தினியும் ஆவார்கள். எவ்வாறாயினும், ஸ்ரீ ஸ்ரீ என்பது சிவபாபாவின் பட்டமாகும். தேவர்கள் ஸ்ரீ எனக் குறிப்பிடப்படுகிறார்கள். ஸ்ரீ என்றால் மேன்மையானது என்று அர்த்தமாகும். நீங்கள் எவ்வாறிருந்தீர்கள் என்பதை பற்றிச் சிந்தியுங்கள்! எவ்வாறு மாயை உங்களைச் சிரைத்து, என்னவாக ஆக்கியுள்ளாள் என்று பாருங்கள். பாரதம் மிகவும் செல்வம் மிக்கதாக இருந்தது! பின்னர், அது எவ்வாறு ஏழையானது? என்ன நிகழ்ந்தது? அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் தேவர்களாக இருந்து, பின்னர் சத்திரியர்கள் ஆகினீர்கள் என்பதை இபபொழுது அறிவீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என அவர்கள் கூறுகிறார்கள். இல்லாவிடின், ‘ஹம்ஸோ’ என்பதன் அர்த்தம் மிகவும் இலகுவானது. ஒவ்வொருவருக்கும் ஒரேயொரு மனிதப் பிறவியே இருப்பதாக அம்மக்கள் கூறுகிறார்கள். ஆனால் மனிதர்களாகிய நீங்கள் 84 பிறவிகளை எடுப்பதாகத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அந்த 84 பிறவிகளில், சங்கமயுகத்திற்குரிய இந்தப் பிறவியே பெறுமதி மிக்கதாகும். எல்லையற்ற தந்தையிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியை நீங்கள் பெறுகின்ற நேரம் இதுவாகும். நீங்கள் மிகவும் இராஜரீகமான தந்தையின் குழந்தைகள்;, எனவே, உங்களுக்குள் அதிகளவு இராஜரீகம் இருக்க வேண்டும். இராஜரீகமான மக்கள் ஒருபொழுதும் உரத்துப் பேசுவதில்லை. உலகில், ஒவ்வொரு வீட்டிலும் அதிகளவு குழப்பம் நிலவுகிறது. சுவர்க்கத்தில் அவ்வாறான எதுவும் கிடையாது. இந்த பாபா வல்லபாச்சாரி குலத்தைச் சார்ந்தவர். சத்தியயுகத்துத் தேவர்களுக்கும், இன்றைய தூய்மையற்ற வைஷ்ணவர்களுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. வைஷ்ணவர்கள் விகாரத்தில் ஈடுபடுவதில்லை என்றில்லை. இராவண இராச்சியத்திலுள்ள அனைவரும் விகாரத்தினூடாகவே பிறந்துள்ளார்கள். சத்தியயுகத்தில், அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். நீங்கள் இப்பொழுது முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆகுவதுடன், யோக சக்தியால் உலக அதிபதிகளும் ஆகுகின்றீர்கள். உங்கள் நடத்தை மிகவும் இனிமையாகவும், இராஜரீகமானதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் சமயநூல்களைப் பற்றி விவாதிக்கவோ அல்லது வாதம் செய்யவோ கூடாது. அம்மக்கள் சமயநூல்களை விவாதிக்கும்பொழுது, ஒருவரையொருவர் தடியாலும் அடித்துக் கொள்கின்றார்கள். அந்த அப்பாவி மக்களைக் குறைகூற முடியாது; அவர்களுக்கு இந்த ஞானமே கிடையாது. இது ஆன்மீகத் தந்தையிடமிருந்து நீங்கள் பெறும் ஆன்மீக ஞானமாகும். அவர் ஞானக்கடல். அவருக்கெனச் சரீரப் பெயர் கிடையாது, ஏனெனில் அவர் சூட்சுமமான ரூபத்தை உடையவர். அவர் கூறுகிறார்: எனது பெயர் சிவன். நான் பௌதீகச் சரீரத்தையோ அல்லது சூட்சுமச் சரீரத்தையோ எடுப்பதில்லை. நான் ஞானக்கடல் என்றும், பேரானந்தக் கடல் என்றும் அழைக்கப்படுகிறேன். அனுமான் வாயுவின் புதல்வன் என்று அவர்கள் சமயநூல்களில் எழுதியிருப்பதைப் பாருங்கள். எவ்வாறு வாயுவிலிருந்து ஒரு குழந்தை பிறக்க முடியும்? கடவுள் முதலையிலும்;, மீனிலும் அவதாரம் எடுப்பதாக அவர்கள் கடவுளைப் பற்றிக் கூறுகிறார்கள். அவர்கள் அவரை மிகவும் அவமதித்து விட்டார்கள்! பாபா வந்து முறையிடுகிறார்: அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதனால், நீங்கள் என்னை அதிகளவு அவமதித்து விட்டீர்கள். நீங்கள் 24 அவதாரங்களைப் பற்றிப் பேசுவதனால் திருப்தி அடையவில்லை, எனவே நீங்கள் என்னை ஒவ்வொரு கூழாங்கல்லிலும், ஒவ்வொரு துணிக்கையிலும் இட்டு விட்டீர்கள். சமயநூல்கள் அனைத்தும் துவாபர யுகத்திலிருந்தே எழுதப்பட்டன. முதலில், சிவ வழிபாடு மட்டுமே இருந்தது. கீதையும் பின்னரே எழுதப்பட்டது. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இவை அனைத்தும் ஓர் அநாதியான நாடகம். நான் இப்பொழுது உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். எனவே, நீங்கள் முழுமையாகத் தந்தையைப் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு மிகவும் நல்ல குணாதிசயங்கள் இருக்க வேண்டும். கலியுக இறுதியில் என்ன இருக்கின்றது என்பதைப் பார்ப்பதும், சத்தியயுகத்தில் நீங்கள் எதனைப் பார்ப்பீர்கள் என்பதும் அற்புதமே ஆகும். கலியுகத்தில் பாரதம் கடனாளியாக உள்ளது, அது சத்தியயுகத்தில் செழிப்பானதாக ஆகுகின்றது. அவ்வேளையில் வேறெந்தத் தேசங்களும் இருக்காது. கீதையின் அத்தியாயம் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

  1. நாங்கள் இராஜரீகத் தந்தையின் குழந்தைகள். எனவே, எமது நடத்தை மிகவும் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். உரத்துப் பேசாதீர்கள். மிகவும் இனிமையானவர் ஆகுங்கள்.
  2. தந்தையுடன் அல்லது ஒருவரோடு ஒருவர் என்றும் முகங்கோணாதீர்கள். ஒருபொழுதும் முகங்கோணிக் கற்பதை நிறுத்தாதீர்கள். உங்கள் தீய பழக்கங்கள் அனைத்தையும் துறந்து விடுங்கள்.

வரதானம்:-

கடவுளிடம் அன்பாக இருக்கின்ற குழந்தைகள் தாங்கள் நேசிக்கின்ற ஒரேயொருவரை எப்பொழுதும் தங்களுடன் வைத்திருக்கின்றார்கள், இதனாலேயே அவர்களின் முன்னிலையில் எந்தப் பிரச்சனைகளும் வருவதில்லை. தங்களுடன் சர்வசக்திவான் தந்தையை வைத்திருப்பவர்களின் முன்னால் பிரச்சனைகள் இருக்க முடியாது. பிரச்சனைகள் எழும்பொழுது, அவற்றை அவ்வப்பொழுது முடித்து விடுங்கள், அவை அதிகரிக்க மாட்டாது. இப்பொழுது, பிரச்சனைகள் வராதிருப்பதற்கான ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டிருங்கள். நீங்கள் முழுமையை அண்மையில் கொண்டு வர வேண்டும் என்பதால், தொலைவிலிருந்தே பிரச்சனைகளை விரட்ட வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவுசெய்யுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top