24 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
23 October 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
தெய்வீகத்தன்மை - சங்கமயுக பிராமணர்களின் அலங்காரம்
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
இன்று தெய்வீக புத்தியுடைய விதியை உருவாக்கக் கூடியவர், தெய்வீக பார்வையின் வள்ளாகியவர் தனது தெய்வீக பிறவி எடுத்த, தெய்வீக ஆத்மாக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைகளையும் தெய்வீக வாழ்க்கை அதாவது தெய்வீக எண்ணம், தெய்வீக வார்த்தை, தெய்வீக காரியம் செய்யக் கூடிய தெய்வீக மூர்த்தியாக உருவாக்குகிறார். தெய்வீக தன்மை சங்கமயுகத்தை சேர்ந்த குழந்தைகளாகிய உங்களின் உயர்ந்த அலங்காரமாகும். ஒன்று சாதாரணத் தன்மை, இரண்டாவது தெய்வீகத்தன்மை ஆகும். தெய்வீகத்தன்மையின் அடையாளத்தை நீங்கள் அனைவரும் தெரிந்திருக்கிறீர்கள். தெய்வீக பிறவி எடுத்த ஆத்மாக்கள் எந்தவொரு ஆத்மாவையும் தனது தெய்வீக கண்களினால் அதாவது பார்வை மூலம் சாதாரணத் தன்மையிலிருந்து தெய்வீக அனுபவங்களை செய்ய வைப்பார்கள். முன்னால் வந்தவுடனே சாதாரண ஆத்மாக்கள் தனது சாதாரண தன்மையை மறந்து விடுவார்கள். ஏனெனில் இன்றைய காலத்திற்கேற்ப தற்சமயத்தின் சாதாரண வாழ்க்கையில் பல ஆத்மாக்கள் திருப்தியாக இல்லை. வரும் நாட்களில் இந்த வாழ்க்கை வாழ்க்கையே கிடையாது, வாழ்க்கையில் எந்த விதமான புதுமை தன்மையும் இல்லை என்ற சப்தத்தை கேட்பீர்கள். அலௌகீக தன்மை, தெய்வீகத்தன்மை – இது தான் வாழ்க்கையின் விசேஷ மான ஆதாரமாக இருக்கிறது – இந்த அனுபவம் செய்வீர்கள். ஏதாவது வேண்டும், ஏதாவது வேண்டும் – இந்த வேண்டும் என்ற தாகத்தினால் நாலாபக்கமும் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். தண்ணீரின் தாகத்தில் தவிக்கும் மனிதர்கள் நாலாபக்கமும் தண்ணீரின் ஒரு துளிக்காக தேடிக்கொண்டே யிருக்கிறார்கள். அதுபோல தெய்வீக தன்மையின் தாகத்திலிருக்கும் ஆத்மாக்கள் நாலாபக்கமும் அஞ்சலி (அமைதியை) பெறுவதற்காக தவித்துக் கொண்டிருப்பது தென்படுகிறது. தவித்துக் கொண்டிருப்பவர்கள் எங்கு வருவார்கள்? உங்களிடம். அவ்வாறு தெய்வீகத்தன்மையின் பொக்கிஷங் களினால் நிரம்பி இருக்கிறார்களா? ஒவ்வொரு சமயமும் தெய்வீகத்தன்மை அனுபவம் ஏற்படுகிறதா அல்லது சில சமயம் சாதாரணமாகவும், சில சமயம் தெய்வீகத்தன்மையுடன் இருக்கிறீர்களா? பாபா தெய்வீக பார்வை, தெய்வீக புத்தியின் ஆசீர்வாதம் கொடுத்திருக்கும் பொழுது தெய்வீக புத்தியில் சாதாரண விஷயங்களில் வர முடியாது. தெய்வீக பிறவி எடுத்த பிராமணர்களின் உடலின் மூலம் சாதாரண காரியம் செய்ய முடியாது. பார்ப்பதற்கு சாதாரண காரியமாக இருக்கலாம். மற்றவர்களை போன்று நீங்கள் அனைவரும் செயல்படுகிறீர்கள். வியாபாரம் செய்கிறீர்கள் அல்லது அரசாங்கத்தின் வேலை செய்கிறீர்கள், தாய்மார்கள் உணவு (சமையல்) தயாரிக்கிறீர்கள். பார்ப்பதற்கு சாதாரண செயலாக தான் இருக்கிறது, ஆனால் இந்த சாதாரண செயலிலும் கூட நீங்கள் மற்றவர்களையும் விட தனிப்பட்ட அலௌகீக தெய்வீக செயலை செய்கீறீர்கள். ஆகையால் தெய்வீக பிறவி எடுத்து பிராமணர்களின் உடலினால் சாதாரண செயல் செய்வதில்லை, மனதினால் சாதாரண எண்ணங்கள் வராது. செல்வத்தை சாதாரண முறையில் காரியத்தில் பயன்படுத்த முடியாது என்று சொல்லப் படுகிறது.. ஏனெனில் உடல், மனம் மற்றும் பொருள் – இந்த மூன்றிற்கும் தர்மகர்த்தாவாக இருக்கிறீர் கள். ஆகையால் எஜமானராகிய பாபாவின் ஸ்ரீமத் இல்லாமல் செயலில் ஈடுபடுத்தக் கூடாது. ஒவ்வொரு நேரமும் பாபாவின் ஸ்ரீமத் தெய்வீக காரியம் செய்வதற்காக கிடைத்திருக்கிறது. ஆகையால் முழு நாளில் சாதாரண வார்த்தை மற்றும் செயலில் எவ்வளவு நேரம் இருந்தது, மேலும் தெய்வீக அலௌகீகத்தன்மையில் எவ்வளவு நேரம் இருந்தீர்கள்? ஒரு கட்டத்தில் பல குழந்தைகள் மிகவும் அப்பாவிகளாக இருக்கிறார்கள். அப்பாவி போன்று சோதனை செய்கிறார்கள். புரிந்துக் கொள்கிறார்கள் – முழு நாளில் எந்தவிதத்திலும் தனிப்பட்ட முறையில் தவறு செய்யவில்லை, தவறாக யோசிக்கவில்லை, தவறாக பேசவில்லை. ஆனால் தெய்வீகத்தன்மையுடனும் அலௌகீக தன்மையுடனும் செயல் செய்தேனா? என்று சோதித்து பார்ப்பதில்லை. ஏனெனில் சாதாரண வார்த்தைகள் மற்றும் செயல்கள் சேமிப்பு ஆவதில்லை, மங்குவதுமில்லை, செய்வதுமில்லை. தற்சமயத்தில் தெய்வீக எண்ணம் மற்றும் தெய்வீக வார்த்தை மற்றும் செயல் எதிர்காலத்திற்கு சேமிப்பு செய்கிறது. சேமிப்பு கணக்கு அதிகரிப்பதில்லை என்றால் சேமிப்பு செய்வதற்கான கணக்கில் நான் வீணாக்கவில்லை என்ற குஷியாக இருக்கிறார்கள், மிகவும் அப்பாவிகளாக ஆகி விடுகிறார்கள். ஆனால் இதில் மட்டும் குஷியாக இருக்க வேண்டாம். வீணாக்கவில்லை ஆனால் உபயோகமான முறையில் இருந்தேனா? பலமுறை குழந்தைகள் சொல்கிறார்கள் – நான் இன்று யாருக்கும் துக்கம் கொக்கவில்லை. ஆனால் சுகத்தையும் கொடுக்கவில்லை. துக்கம் கொடுக்காமல் இருப்பதால் தற்சமயம் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் சுகம் கொடுப்பதினால் தான் சேமிப்பு ஆகிறது. அதை செய்தீர்களா அல்லது தற்சமயத்தில் மட்டும் குஷியாக இருக்கிறீர்களா? சுகத்தை அளிக்கும் வள்ளலின் குழந்தைகள் சுகத்தின் கணக்கை சேமிப்பார்கள். நான் துக்கம் கொடுக்கவில்லை என்பதை மட்டும் சோதனை செய்யாதீர்கள், ஆனால் சுகம் எவ்வளவு கொடுத்தேன். யாரெல்லாம் தொடர்பில் வருகிறார்களோ மாஸ்டர் சுகத்தின் வள்ளலின் மூலம் ஒவ்வொரு அடியிலும் சுகத்தின் அனுபவம் செய்வது, இதற்கு தான் தெய்வீகத் தன்மை அல்லது அலௌகீகத்தன்மை என்று சொல்லப்படுகிறது. எனவே சோதனை செய்யும் பொழுதும் கூட சாதாரணத்தன்மையிலிருந்து ஆழமாக சோதனை செய்யுங்கள். ஒரே பிறவியில் 21 பிறவிகளுக்கான சேமிப்பை சேமிக்க வேண்டும் என்ற நினைவு ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும். அதனால் அனைத்து கணக்குகளையும் சோதனை செய்யுங்கள் – உடலின் மூலம் எவ்வளவு சேமிப்பு செய்துள்ளேன்? மனதினுடைய தெய்வீக எண்ணத் தினால் எந்தளவு சேமிப்பு செய்துள்ளேன்? மேலும் செல்வத்தை ஸ்ரீமத் படி உயர்ந்த காரியத்தில் ஈடுபடுத்தி எந்தளவு சேமிப்பு செய்தேன்? சேமிப்பு கணக்கின் பக்கம் விசேஷ கவனம் கொடுங்கள். ஏனெனில் விசேஷ ஆத்மாக்களாகிய உங்களின் சேமிப்பு செய்வதற்கான நேரம் இந்த சின்னஞ்சிறிய பிறவியை தவிர முழு கல்பத்தில் எந்த நேரமும் இல்லை. மேலும் ஆத்மாக்களின் கணக்கு தனிப்பட்டதாகும். ஆனால் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களுக்காக இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை. எனவே புரிந்ததா என்ன செய்ய வேண்டும்? இதில் அப்பாவிகளாக இருக்காதீர்கள். பழைய சம்ஸ்காரங்களில் அப்பாவிகளாக (எதுவும் தெரியாதவர்களாக) இருங்கள். பாப்தாதா முடிவுகளை பார்த்தார். எத்தனை விஷயங்களின் முடிவுகளில் சேமிப்பு கணக்கு மிகவும் குறைவாக இருக்கிறது, அதனுடைய விளக்கத்தை பின்பு சொல்கிறேன்.
அனைவரும் அன்பில் அனைத்தையும் மறந்து வந்து சேர்ந்துவிட்டீர்கள். பாப்தாதாவும் கூட குழந்தைகளின் அன்பை பார்த்து ஒரு நிமிடத்தின் அன்பிற்கான கைமாறாக நெடுங்காலத்திற்கு பிராப்தி கொடுப்பது தான் இருக்கிறது. நீங்கள் அனைவரும் இத்தனை பெரிய குழுவில் (மதுபன்) வருவதற்காக என்னவெல்லாம் உறுதி செய்யப்பட்டது. முதலில் தரையில் படுத்து உறங்க வேண்டியிருக்கும். 4 நாட்கள் தான் இருக்க வேண்டியிருக்கிறது. வந்து போக வேண்டியிருக்கிறது. எனவே அனைத்து விஷயங்களையும் கேட்டு கொண்டிருந்தாலும் கூட அன்பில் வந்துள்ளீர்கள். இதை கூட தனது அதிர்ஷ்டம் என்று புரிந்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இந்தளவு கிடைத் திருக்கிறது, இருந்தாலும் ஜட சிலைகளை தர்சனம் செய்வதற்காக நின்றுக் கொண்டே இரவெல்லாம் கழிப்ப தில்லை தானே. மூன்று அடி நிலம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது அல்லவா. இங்கு கூட ஒய்வாக அமர்ந்துள்ளீர்கள். வரும் காலங்களில் வளர்ச்சி ஏற்படும் பொழுது தானாகவே விதிமுறை களும் மாறுபட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் என்னவெல்லாம் கிடைக்கிறதோ, அது நன்றாகவே இருக்கிறது என்பதை எப்பொழுதும் உணருங்கள். ஏனெனில் வளர்ச்சியும் ஏற்பட்டுக் கொண்டே யிருக்கும், மாற்றமும் கூட ஏற்படும். எனவே அனைவரும் ஒய்வாக இருந்து உண்பதற்கு வசதி கிடைத்திருக்கிறதல்லவா. உண்பது மற்றும் உறங்குவது – இரண்டு பொருட்கள் தான் வேண்டும். தாய்மார்களும் மிகவும் குஷி ஏற்படுகிறது, ஏனெனில் இங்கு (மதுபன்) தயாரிக்கப்பட்டு உணவு கிடைக்கிறது. அங்கு (அவரவர்களின் இருப்பிடம்) உணவு சமைத்து, பிரசாதம் படைத்து (போக்) – பிறகு தான் உண்ண வேண்டும். இங்கு தயாரிக்கப்பட்ட, பிரசாதம் படைக்கப்பட்ட உணவு கிடைக்கிறது. ஆகையால் தாய்மார்களுக்கும் நன்றாக ஒய்வு கிடைக்கிறது. குமாரர்களுக்கும் ஒய்வு கிடைக்கிறது. ஏனெனில் அவர்களுக்கும் கூட பெரிய பிரச்சனை உணவு சமைப்பது தான் இருக்கிறது. இங்கு ஒய்வான நிலையில் தயாரிக்கப்பட்ட உணவை உண்கிறீர்கள். எப்பொழுது அதுபோல ஈசி (இலேசாக) இருங்கள். யாருடைய சம்ஸ்காரம் இலேசாக இருக்கிறதோ, அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் இலேசாக உணரும் காரணத்தினால் இலேசாக இருப்பார்கள். சம்ஸ்காரம் இறுக்கமாக இருந்தால் சூழ்நிலையும் கூட இறுக்கம் ஆகிவிடுகிறது. சம்மந்தம்-தொடர்பில் வரக்கூடியவர்களும் இறுக்கமாக தான் நடந்துக் கொள்வார்கள். இறுக்கம் என்றால் சச்சரவில் வரக்கூடியவர்கள். எனவே அனைவரும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து முகமலர்ச்சியுடன் இருப்பவர்களா அல்லது அவ்வப்பொழுது நல்ல-கெட்டதில் எதிலாவது ஈர்ப்பில் வரவில்லை தானே, சதா முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். நல்லது,
சதா ஒவ்வொரு அடியிலும் தெய்வீகத் தன்மை அனுபவம் செய்து மற்றவர்களையும் செய்ய வைக்கக் கூடிய தெய்வீக மூர்த்திகளுக்கு, சதா தனது சேமிப்பு கணக்கை அதிகரிக்கக் கூடிய ஞானம் நிறைந்த ஆத்மாக் களூக்கு, சதா ஒவ்வொரு பிரச்சனைகளையும் இலேசான மனநிலையின் மூலம் எளிதாக கடந்துச் செல்லக்கூடிய – அப்படிப்பட்ட புத்திசாலியான குழந்தைகளுக்கு, பல ஆத்மாக்களின் வாழ்க்கையின் தாகத்தை தணிக்கக்கூடிய மாஸ்டர் ஞான கடலான உயர்ந்த ஆத்மாக்களூக்கு, ஞான கடல் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
பம்பாய் (சாண்டாக்ரூஸ் பார்லா) குழு : பம்பாயை சேர்ந்த குழந்தைகள் அனைத்து பொக்கிஷங் களினால் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள் அல்லவா. எப்பொழுதும் தன்னை நிரம்பிய ஆத்மா என்று அனுபவம் செய் கிறீர்களா? செழிப்புத்தன்மை தான் முழுமைத் தன்மையின் அடையாளமாகும்.. சம்பூரணத்தன்மையின் சோதனை தனது செழுமைத் தன்மையின் மூலம் செய்ய முடியும். ஏனெனில் சம்பூரணத் தன்மை என்றாலே அனைத்து பொக்கிஷங்களில் நிரம்பி இருப்பது. சந்திரன் முழு நிலவாக இருக்கும் பொழுது, அதனுடைய அடையாளம் சம்பூரணத்தன்மையுடன் (முழு நிறைவுடன்) இருக்கிறது. இதற்கும் மேல் வளராது, இது தான் முழுமைத் தன்மையாகும். சிறிதும் குறை இருக்காது, முழு நிறைவுடன் இருக்கும். எனவே நீங்கள் அனைவரும் ஞானம், யோகம், தாரணை, சேவை – அனைத்திலும் முழுமை நிலை – இதற்கு தான் சம்பூரணத் தன்மை என்று சொல்லப்படுகிறது. சம்பூரணத்தன்மைக்கு அருகாமையில் இருக்கிறோமா அல்லது தொலைவில் இருக்கிறோமா என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். முழுமையாக இருக்கிறீர்கள் என்றால் சம்பூரணத்தன்மைக்கு (முழு நிறைவு) அருகாமையில் இருக்கிறீர்கள். அதனால் அனைவரும் அருகாமையில் இருக்கிறீர்களா? எந்தளவு அருகாமையில் இருக்கிறீர்கள்? 8 மணி மாலைக்கு அருகாமையிலா, 100 வது மாலை வரையா, 16000 மணி மாலை வரையா? 8 மணிமாலைக்கு அருகாமையில், அதன் பிறகு 100 மணி மாலைக்கு அருகில், மற்றும் 16000 மணி மாலைக்கு அருகில். எதற்கு நெருக்கத்தில் இருக்கக் கூடியவர்கள் – இதை சோதனை செய்ய வேண்டும். நன்றாக இருக்கிறது. இருப்பினும் உலகிலுள்ள கோடான கோடியில் நீங்கள் மிக மிக பாக்கியசாலிகளாக இருக் கிறீர்கள். அவர்கள் அலைந்து திரியக் கூடியவர்கள், ஆனால் நீங்கள் செழிப்பான ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். பிராப்திகள் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். இந்த குஷி இருக்கிறதல்லவா. என்னை தவிர வேறுயார் குஷியுடன் இருக்க முடியும்? என்று தினந்தோறும் தன்னிடம் பேசுங்கள், அதனால் நெருக்கத்தில் இருக்கிறோம், முழு நிறைவுடன் இருக்கிறோம் என்ற வரதானத்தை நினைவில் வையுங்கள். ஸ்தூலமாக (சாகாரத்தில்) நெருக்கமாக இருப்பது எப்படி நன்றாக இருக்கிறதோ, அதுபோல மனநிலையில் கூட அருகாமையில் அதாவது சதா முழு நிறைவுடன் இருங்கள். நல்லது.
குஜராத் – பூனாவை சேர்ந்த குழு: அனைவரும் பார்வையின் மூலம் சக்திகளின் பிராப்திகளை உணரக்கூடிய அனுபவசாலிகளாக இருக்கிறீர்கள் அல்லவா. வார்த்தைகள் மூலம் சக்திகளின் அனுபவம் செய்கிறீர்கள். முரளி கேட்கிறீர்கள் என்றால் சக்தி கிடைக்கிறது என்று புரிந்திருக்கிறீர்கள் அல்லவா. அதுபோல பார்வை மூலம் சக்தி களின் பிராப்திகளின் அனுபவம் செய்வதற்கான பயிற்சி இருக்கிறதா அல்லது வார்தைகள் மூலம் அனுபவம் இருக்கிறதா, பார்வையில் குறைபாடு இருக்கிறதா? பார்வை மூலம் சக்திகளை உணர முடியுமா? ஏனெனில் உணர்ந்துக் கொள்வதற்கான பயிற்சி இருக்கிறதென்றால் மற்றவர்களையும் கூட தனது தெய்வீக பார்வை மூலம் அனுபவம் செய்ய முடியும். வரும் காலங்களில் வார்த்தைகள் மூலம் அனைவரும் அறிமுகம் (பாபாவின்) கொடுக்கும் நேரமும் இருக்காது, சூழ்நிலையும் இருக்காது என்றால் என்ன செய்வீர்கள்? ஆசீர்வாதம் கொடுக்கும் பார்வையினால், மகாதானி பார்வை மூலம் மகாதானம், வரதானம் கொடுப்பீர்கள். பார்வை மூலம் அமைதியின் சக்தி, அன்பின் சக்தி – சுகம் மற்றும் ஆனந்தத்தின் சக்தி அனைத்தும் கிடைக்கும். ஜட சிலைக்கு முன்னால் போகிறார்கள் என்றால் ஜட மூர்த்தி பேசுவதில்லை அல்லவா. ஆனாலும் பக்த ஆத்மாக்களுக்கு ஏதாவது பிராப்தி ஆகிறது. அதனால் தான் செல்கிறார்கள் அல்லவா. எப்படி பிராப்தி ஆகிறது? அவர்கள் தெய்வீகத் தன்மையின் அதிர்வலைகள் மற்றும் தெய்வீக கண்களின் பார்வையின் மூலம் வைப்ரேஷன் (அதிர்வலைகள்) பெறுகிறார்கள். எந்தவொரு தேவதை அல்லது தெய்வ சிலையில் விசேஷமான கவனம் கண்களின் பக்கம் பார்ப்பார்கள். முகத்தின் பக்கம் கவனம் செல்கிறது, ஏனெனில் இரண்டு புருவங்கள் மூலம் அதிர்வலைகள் கிடைக்கிறது, கண்கள் மூலம் தெய்வீகத் தன்மை அனுபவம் ஆகிறது. அது ஜட மூர்த்திகள், ஆனால் யாருடையது? சைதன்ய மூர்த்திகளாகிய உங்களின் ஜட மூர்த்திகள் ஆகும். நம்முடைய மூர்த்திகள் என்ற நஷா இருக்கிறதா? சைதன்யமாக இப்பொழுது இந்த சேவை செய்கிறீர்கள் எனவே திருஷ்டி மூலம் சக்திகளை பெறுவது மற்றும் திருஷ்டி மூலம் கொடுப்பது, இந்த பயிற்சி செய்யுங்கள். அமைதி சக்தியின் அனுபவம் மிகவும் உயர்ந்தது. தற்சமயத்தில் விஞ்ஞான சக்தி எவ்வளவு செல்வாக்குடன் இருக்கிறது, ஒவ்வொருவரும் அனுபவம் செய்கிறார்கள், ஆனால் விஞ்ஞான சக்தி யாரால் வெளிப்பட்டது? அமைதி சக்தி மூலம் தான் அல்லவா. விஞ்ஞான சக்தி குறுகிய காலத்திற்காக பிராப்தி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் அமைதியின் சக்தி எவ்வளவு அனுபவம் செய்ய வைக்கிறது. எனவே பாபாவின் தெய்வீக பார்வை மூலம் தன்னிடத்தில் சக்தி சேமிப்பு ஆகிறது. அதன் பிறகு சேமிப்பு செய்துள்ளதை சரியான நேரத்தில் கொடுக்க முடியும். தனக்காக சேமிப்பு செய்கிறீர்கள் மற்றும் காரியத்தில் செலவழித்து விடுவது என்றால் சம்பாதிப்பது மற்றும் சாப்பிட்டு விடுவதாகும். என்ன சம்பாதிக்கிறீர்களோ, அதை சாப்பிட்டு தீர்த்து விட்டால் ஒருபொழுதும் சேமிப்பு ஆவதில்லை. மேலும் யார் சேமிப்பு கணக்கு சேமிப்பதில்லையோ அவர்கள் நேரத்தில் ஏமாற்றம் அடைகிறார்கள். ஏமாற்றம் ஏற்பட்டால் துக்கம் அடைகிறோம். மன உளைச்சல் வருகிறது. ஆகையால் இப்பொழுதிலிருந்து பாபாவின் பார்வை (திருஷ்டி) மூலம் பிராப்தியான சக்திகளை அனுபவம் செய்து சேமிப்பு செய்துக் கொண்டேயிருங்கள். எனவே சேமிப்பு செய்ய வருகிறதா? சேமிப்பு செய்வதற்கான அடையாளம் என்ன? குஷி இருக்கும். செல்வந்தர்கள் நடப்பது, அமர்வது, எழுந்திருப்பது அனைத்திலும் குஷி தென்படுகிறதல்லவா. மேலும் எந்தளவு நஷா இருக்குமோ அந்தளவு குஷியும் இருக்கும். ஆனால் இது ஆன்மீக நஷா. இந்த நஷாவில் இருப்பதினால் குஷி தானாகவே இருக்கும். குஷி தான் பிறப்புரிமையாக இருக்கிறது. எப்பொழுதும் குஷியின் ஜொலிப்பினால் மற்றவர்களையும் கூட ஆன்மீக பார்வையுடையவர்கள் ஆக்குங்கள். இந்த வரதானத்தை சதா நினைவில் வைக்க வேண்டும். எது நடந்தாலும் குஷி என்ற வரதானத்தை இழந்து விடக்கூடாது. பிரச்சனை வரும் போகும் ஆனால் குஷி மறையக் கூடாது. ஏனெனில் குஷி நம்முடைய பொருளாக இருக்கிறது, பிரச்சனை என்பது சூழ்நிலையாக இருக்கிறது. அடுத்தவரிடத்திலிருந்து வருகிறது. தன்னுடைய பொருள் என்பதால் எப்பொழுதும் கூடவே வைத்திருக்க வேண்டுமல்லவா. மற்றவர்களின் பொருள் வரும் போகும். சூழ்நிலைகள் மாயாவினுடையது, தன்னுடையது அல்ல. தனது பொருளை தொலைத்து விடக்கூடாது. அதாவது குஷியை இழந்துவிட வேண்டாம். குஷியோடு உடலை விட்டு பிரிந்தால் கூட உயர்ந்ததாக கிடைக்கும். பழையது செல்லும் புதியது கிடைக்கும். எனவே குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர்கள் இந்த மகான் தன்மையில் சதா இருக்க வேண்டும். குஷியில் மகான் ஆவது. நல்லது.
ஆந்திரபிரதேசம் – கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்: இந்த நாடகத்தில் விசேஷமான நடிப்பு நடிக்கக் கூடிய சிறந்த நடிகர்களாக இருக்கிறீர்கள் – அப்படி அனுபவம் செய்கிறீர்களா? தன்னை விசேஷமான ஆத்மா என புரிந்திருக்கிறீர்கள் என்றால் படைப்பாளரான தந்தையின் நினைவு தானாகவே இருக்கும், நினைவு செய்வது எளிதாக இருக்கும். ஏனெனில் நினைவினுடைய ஆதாரம் சம்மந்தம் ஆகும். எங்கு தொடர்பு இருக்கிறதோ, அங்கு நினைவு செய்வது தானாகவே எளிதாக இருக்கும். அனைத்து சம்மந்தங்களும் ஒரு பாபாவிடம் இருந்துவிட்டால் வேறு யாருமே வேண்டாம். ஒரு பாபாவிடம் அனைத்து சம்மந்தங்களை வைத்தல் – இந்த நினைவினால் சகஜயோகி ஆகிவிடலாம். எப்பொழுதா வது கடினமாக இருக்கிறதா? மாயாவின் தாக்குதல் ஏற்படும் பொழுது கடினமாக இருக்கிறதா? மாயாவிற்கு எப்பொழுதும் விடுப்பு கொடுக்கக் கூடியவர்கள் ஆகுங்கள். மாயாவிற்கு விடுப்பு கொடுக்கும் பொழுது தான் பாபாவின் வாழ்த்துக்கள் நம்மை மிகவும் முன்னேற்றமளிக்கும். ஆசீர்வாதம் கொடுங்கள் என்று எத்தனை முறை பக்தி மார்க்கத்தில் யாசித்தீர்கள். ஆனால் இப்பொழுது பாபா விடமிருந்து ஆசீர்வாதம் பெறுவதற்கான எளிதான சாதனம் சொல்லிவிட்டார். எந்தளவு மாயாவிற்கு விடுப்பு கொடுக்கிறீர்களோ, அந்தளவு ஆசீர்வாதம் தானாகவே கிடைக்கும். பரமாத்ம ஆசீர்வாதங்கள் ஒரு பிறவிக்கு மட்டுமல்ல, ஆனால் பல பிறவிகளுக்கு சிரேஷ்டமாக மாற்றுகிறது. நாம் ஒவ்வொரு அடியிலும் பாபாவின், பிராமண குடும்பத்தின் ஆசீர்வாதங்களை பெற்று எளிதாக பறந்துக் கொண்டேயிருக்கலாம் என்ற நினைவு சதா இருக்க வேண்டும். நாடகத்தில் விசேஷமான ஆத்மாக்களாக இருக்கிறீர்கள், சிறப்பான செயல் செய்து பல பிறவிகளுக்காக சிறந்த நடிப்பு நடிக்கக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். சாதாரண செயல் அல்ல, சிறப்பான செயல், விசேஷமான எண்ணம் மற்றும் விசேஷமான வார்த்தைகள் பேசக்கூடியவர்கள். எனவே ஆந்திராவை சேர்ந்தவர்கள் தனது உயர்ந்த கர்மத்தின் மூலம், தனது உயர்ந்த மாற்றத்தினால் பல ஆத்மாக்களை மாற்றம் செய்யுங்கள், இந்த விசேஷமான சேவையை செய்யுங்கள். தன்னை கண்ணாடியாக (தெளிவாக) மாற்றுங்கள், மேலும் உங்களுடைய கண்ணாடியினால் பாபா தென்பட வேண்டும். அப்படிப்பட்ட விசேஷமான சேவை செய்யுங்கள். எனவே நான் தெய்வீக கண்ணாடியாக இருக்கிறேன், கண்ணாடியாகிய என் மூலம் பாபா மட்டும் தான் தென்பட வேண்டும் என்ற நினைவை வைக்க வேண்டும். புரிந்ததா. நல்லது.
வரதானம்:-
அனைத்தையும் விட உயர்ந்த சிம்மாசனம் பாப்தாதாவின் இதய சிம்மாசனமாகும். ஆனால் இந்த சிம்மாசனத்தில் அமருவதற்காக ஆடாத, அசையாத, ஒரே இரசனை என்ற சிம்மாசனம் தேவைப் படுகிறது. ஒருவேளை இந்த மனநிலை என்ற சிம்மாசனத்தின் மீது நிலைத்திருக்கவில்லை என்றால் பாப்தாதாவின் இதயம் என்ற சிம்மாசனத்திலும் அமர முடியாது. இதற்காக தனது இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அகால மூர்த்தி (அழிவற்றவர்) ஆகி நிலைத்திருங்கள், இந்த சிம்மாசனத்திலிருந்து அடிக்கடி மேலும் கீழும் ஆடாமல் இருந்தீர்கள் என்றால் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்க முடியும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!