19 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
18 October 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே ! குழந்தைகளாகிய உங்களை தன் கூடவே அழைத்து செல்வதற்காக எல்லைக்கப்பபாற்பட்ட தந்தை வந்திருக்கிறார். ஆகையால் இப்போது பாபாவினுடையவராகி அவரின் ஸ்ரீமத் படி நடக்கவும்.
கேள்வி: -
தந்தை தன்னுடைய குழந்தைகளின் அதிர்ஷ்டத்தை உயர்ந்ததாக மாற்றுவதற்காக எந்த ஒரு உயர்ந்த வழியைத் தருகிறார்?
பதில்:-
இனிமையான குழந்தைகளே ! மரணத்திற்கு முன்பாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதில் தான் உங்களுடைய வருமானம் இருக்கிறது. என்னுடைய குழந்தை களாகிய பின் ஒரு போதும் மறந்தும் கூட எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது. மாயாவின் புயல் எவ்வளவு வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் பதீதர்களாக ஒரு போதும் ஆகக் கூடாது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
ஓம் சாந்தி. சிவபகவான் வாக்கு. குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபா நமக்கு புரிய வைக்கின்றார் என புரிந்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் தான் சங்கமயுகத்தினர். சிவபாபாவிற்கு முன்பு அமர்ந்திருக் கிறீர்கள். அந்த கலியுக மனிதர்கள் சிவபாபாவின் ஜட கோவில்களுக்குச் செல்கிறார்கள். வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்கிறீர்கள் அல்லவா. புத்தியின் பூட்டு சிறிது திறக்கட்டும். நாம் சைத்தன்ய சிவபாபாவிடம் அமர்ந்திருக்கிறோம் என புரிந்திருக்கிறீர்கள். பாபா நம் முன்பாக உரையாடிக் கொண்டிருக்கிறார். சிவபாபா பிரம்மா மூலமாக இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் பாருங்கள். மனிதர்கள் சிவபாபாவை பூஜை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அமர்நாத், காசி போன்ற இடங்களுக்கு தேடிச் செல்கின்றனர். பிறகு நாம் சிவபாபாவிடம் அமர்ந்திருக்கிறோம். அவரே பரம்பிதா பரமாத்மா என அழைக்கப்படுகிறார் என்பதை அடிக்கடி ஏன் மறந்து விடுகிறீர்கள். அவருக்கு எவ்வளவு மகிமை இருக்கிறது. அவரை நீங்கள் பாபா என்கிறீர்கள். நாம் சிவபாபாவின் வழிப்படி நடந்து உலகத்திற்கே அதிபதியாவதற்காக ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கிறோம் என அறிகிறீர்கள். அவர்கள் கோவில்கள், யாத்திரைகள் சென்று அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கின்றீர்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள். உங்களை ஒப்பிடும் போது அவர்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள். நான் உங்களுடைய கீழ் படிந்த வேலைக்காரன் என சிவபாபா கூறுகின்றார். நான் உங்களுக்கு சொத்தை (ஆஸ்தி) அளிப்பதற்காக வந்திருக்கிறேன். அவர்கள் இறை தந்தையை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கேயோ நீங்கள் இறை தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக் கிறீர்கள். இங்கே அமரும் போது புத்தியில் இருக்கிறது. பிறகு வீட்டிற்குச் சென்றதும் ஏன் மறந்து விடுகிறீர்கள். இங்கே உங்களுக்காக பகல் இருக்கிறது. அங்கே அவர்களுக்கு இரவாகும். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறார் கள். நீங்கள் எதிரில் அமர்ந்துக் கொண்டு உங்களுடன் தான் அமர்வேன், நீங்கள் கூறுவதையே கேட்பேன் என கூறுகிறீர்கள். ஆனால் வீட்டிற்குச் சென்றதும் மறந்து போகிறீர்கள். மாயா மிகவும் பலவானாக இருக்கிறது. சிவபாபாவின் குழந்தையாகி பூஜாரியிடமிருந்து பூஜைக்குரிவராக ஆவதற்கான முயற்சியும் செய்கிறீர்கள். பிறகு வெளியே சென்று பூஜாரி ஆகிவிடு கின்றனர். சிவபாபாவின் ஜட கோவில்களுக்கு சென்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
குழந்தைகளே! ஸ்ரீமத்படி நடந்தால் தான் நீங்கள் சிரேஷ்டமாக மாறுவீர்கள் என பாபா புரிய வைக்கின்றார். முக்கியமானது தூய்மையாகும். அங்கே ஜட சிலைகளுக்கு முன்பு சென்று காசியில் உயிர் துறக்கிறார்கள். இங்கேயோ சைத்தன்யத்தில் அமர்ந்திருக்கிறார். இங்கே உயிரை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உயிருடன் இறப்பதாகும். ஸ்ரீமத் படி செல்லுங்கள் என்று பாபா கூறுகின்றார். இங்கிருந்து வெளியில் சென்றதும் பாபாவை மறந்து போகிறார்கள். ஒரு போதும் கடிதம் போன்றவைகளை எழுதுவதில்லை. சிலர் ஒரு போதும் பார்த்ததே இல்லை. இப்படியும் சிலர் இருப்பார்கள். அவர்கள் துடி துடித்து கடிதங்களை எழுதிக் கொண்டே இருப்பார்கள். நேரில் சந்தித்து விட்டுப் போனார்கள். ஒரேயடியாக மறந்தும் போகிறார்கள். நீங்கள் சிவபாபாவிடம் அர்ப்பணம் ஆக வேண்டும் அல்லவா? பக்தி மார்க்கத்தில் சிவபாபாவை சந்திப்பதற்காக காசியில் சென்று கிணற்றில் (காசி கல்வெட்டில்) குதித்து இறந்தனர். ஆனால் அவரை அடைய முடியாது. இப்போது பாபா சைத்தன்யத்தில் வந்து குழந்தைகளே ! என்னுடையவராகுங்கள் என்று கூறுகின்றார். நான் அழைத்துச் செல்வதற் காக வந்திருக்கிறேன். தூய்மையாகாமல் செல்ல முடியாது. தூய்மையாக மாற்றுவதற்கு நான் வர வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் பாபா உங்களிடம் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். இதை கீதையின் பகவான் தான் கற்பித்தார். அவர்கள் கிருஷ்ணரை பகவான் என்று கூறி விட்டனர். கீதையின் பகவான் சிவபாபா என நீங்கள் அறிகிறீர்கள். சிவபாபா ஸ்ரீ/ர் பிரம்மா என நீங்கள் கடிதத்தில் கூட எழுதுகிறீர்கள். நேர் எதிரில் அமர்ந்து பாபா உங்களுக்குப் புரிய வைக்கிறார். இருப்பினும் போதை ஏறவில்லை. ஓஹோ ! சிவபாபா நம்மை மடியில் எடுத்து இருக்கிறார். தர்மத்தின் குழந்தையாக்கி இருக்கிறார். ஆனால் அனைவரையும் இங்கேயே வைத்திருக்க முடியாது அல்லவா? ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரையும் இங்கேயே எப்படி வைத்திருப்பார்? இவ்வளவு இடம் எங்கே இருக்கிறது? நீங்கள் உங்களுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும் என பாபா கூறுகின்றார் பாபாவை நினைக்க வேண்டும். எல்லோரையும் விட இனிமையான எல்லையற்ற தந்தை அவருடைய குழந்தைகள் நீங்கள் !
குழந்தைகளே, நீங்கள் காமச்சிதையில் அமர்ந்து எரிந்து விட்டீர்கள் என பாபா புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் ஞான சிதையில் அமர்ந்து தேவதை ஆகிறீர்கள். தேவதைகளை பூஜை கூட செய்கிறீர்கள். ஆனால் எதையும் புரிந்துக் கொள்ள வில்லை. இதுவும் நாடகத்தின் விதி என்பார்கள். இப்போது நீங்கள் சைத்தன்ய சிவபாபாவிடம் அமர்ந்திருக்கிறீர்கள். சிவபாபா பிரம்மா மூலமாக விஷ்ணுபுரியை ஸ்தாபனை செய்கிறார் என பாடப்பட்டிருக்கிறது. குழந்தைகளே ! எந்த ஒரு பாவ கர்மமும் செய்யாதீர்கள் என புரிய வைக்கிறார். தேக உணர்வில் வராதீர்கள். நீங்கள் போகும் போதும், வரும் போதும் மணவாளனை நினைவு செய்ய வேண்டும். அவரைத் தான் நீங்கள் அரைக் கல்பம் நினைவு செய்தீர்கள். அவர் உங்கள் சேவையில் ஈடுபட்டிருக் கிறார். ஆன்மீக சமூக சேவகர் உங்களுக்கு ஆன்மீக சேவையைக் கற்பிக்கின்றார். சமூக சேவைகளுக்கு தலைவர்கள் கூட இருக் கிறார்கள் அல்லவா? இது ஆன்மீகமாகும். அவர்கள் மனித சமுதாயத்தின் உலகியல் சேவையை செய்யக் கூடியவர்கள். இப்போது பாருங்கள் அவர்கள் பசுவதை செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறார்கள். ஒருவருக்கொருவர் விகாரத்தில் விழுவது கூட வதைப்பதாகும். முதலில் இதை நிறுத்துங்கள் என்று நீங்கள் எழுதலாம். இதற்குத் தான் காமம் மிகப் பெரிய எதிரி, முதல், இடை, இறுதி துக்கம் அளிக்கிறது என பகவான் கூறுகிறார். நீங்கள் கீதையின் பகவானை மறந்து விட்டீர்கள். பாபாவிற்கு அதிசயமாக இருக்கிறது. ஒன்று அமர்நாத், மலைகள் மீது சென்று ஏமாற்றம் அடைந்துக் கொண்டே இருக்கின்றார்கள். அங்கே பார்வதிக்கு அமர கதை கூறியதாக எழுதுகிறார்கள். ஒரு பார்வதிக்கு சொல்வதால் என்ன நடக்கும்? அவர்கள் அனைவரும் பார்வதிகள் என புரிய வைக்கிறார். அனைவருக்கும் அமர கதையை கூறிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளே 84 பிறவிகளை எடுத்து எடுத்து இப்போது மரண உலகத்திற்குச் சென்று அடைந்திருக்கிறீர்கள் என பாபா கூறு கின்றார். சரி, லஷ்மி நாராயணன் எங்கே சென்றனர். என்ன திரும்பிச் சென்று விட்டனரா? ஜோதியோடு ஜோதியாகக் கலந்து விட்டனரா? சூரிய வம்சத்தின் ராஜா ராணி, பிரஜைகள் அவர்கள் அனைவரும் எங்கே சென்றனர். நிச்சயமாக சதோபிரதானத்திலிருந்து 84 பிறவிகள் எடுத்து எடுத்து தமோபிரதானம் ஆகி விட்டனர். புரிந்துக் கொள்கின்றீர்கள் அல்லவா? இந்த பிரம்மா மூலமாக சிவபாபா வந்து புரிய வைக்கின்றார். குழந்தைகளே, இப்போது நான் உங்களுடைய அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக வந்திருக்கிறேன். பிறகு நீங்கள் அதிர்ஷ்டத்தில் கோடு ஏன் போடுகிறீர்கள்? ஏதாவது புரிந்துக் கொள்ளுங்கள். நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக்குவதற்காக வந்திருக்கிறேன். நீங்கள் என் வழிப்படி நடக்க மாட்டீர்களா? வீட்டிற்குச் சென்றதும் ஏன் நினைவை மறந்து விடுகிறீர்கள். குழந்தைகளே இப்போது நீங்கள் சங்கமயுகத்தினர் என பாபா அடிக்கடி புரிய வைத்திருக்கிறார். அவர்கள் கலியுகத்தினர். நீங்கள் பூஜைக்குரியவர். அவர்கள் பூஜாரிகள். நீங்கள் அலைவது இப்போது முடிந்து விட்டது. ஒரு வேளை அவர்கள் உங்களை நாத்திகர் என நினைக்கலாம். நீங்கள் அவர்களை நாத்திகன் என்கிறீர்கள். நீங்கள் பக்தி செய்வதில்லை ஆகவே நாஸ்திகர் என அவர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் பாபாவை அறியவில்லை. ஆகவே நீங்கள் நாஸ்திகர் என நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் ஆஸ்திகர்கள் என நீங்கள் கூறு கிறீர்கள். பாபாவை அறிந்து ஆஸ்தி அடைகின்றோம். நீங்கள் அறியவில்லை என்றால் ஏமாற்றம் அடைந்துக் கொண்டே அலைந்துக் கொண்டிருப்பீர்கள். கும்பமேளாவில் கூட எவ்வளவு பேர் போகிறார்கள். தான புண்ணியம் செய் கிறார்கள். அப்போது அனைத்து விசயங்களையும் விடுங்கள் என பாபா கூறுகிறார். உங்களுக்கு ஞானக் கடல் கிடைத்திருக்கிறார். பிறகு எங்கே செல்வீர்கள். இது ஞான நதியாகும். ஞானக் கடலிடம் ஞான ஸ்தானம் செய்வதற்காக உங்களை அழைத்து வருகிறார்கள். எவ்வளவு நல்ல நல்ல குழந்தை கள் பாபாவிடம் வந்து பிறகு அழுக்காகி விடுகிறார்கள். சிலர் பாபாவின் வழிப்படி செல்கிறார்கள். பாபா அழியக் கூடிய செல்வத்தை எப்படி அர்ப்பணம் ஆக்குவது என கேட்கிறார்கள். மூழ்குகின்ற படகிலிருந்து எவ்வளவு தான் எடுத்தாலும் அது நல்லது தானே என்று அவர்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. பாரதத்தின் சேவைக்காக பயன்படுத்து, அதை அர்ப்பணம் ஆக்குங்கள், ஏதாவது சென்டர் திறங்கள். இந்த சித்திரங்கள் கூட எவ்வளவு உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். பாபாவிடம் இப்படிப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள்-எப்போது அவசியம் ஏற்படு கிறதோ அப்போது எங்களை நினையுங்கள், பாபா நாங்கள் உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். யக்ஞத்தின் நல்ல நல்ல வேலைகளுக்கு அவசியம் ஏற்பட்டால் என்னை நினையுங்கள் என்கிறார்கள். நான் யாரையும் நினைப்பதில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் என பாபா கூறுகிறார். நானோ வள்ளலாக இருக்கிறேன். நான் பாரதத்தை சொர்க்கமாக்கு வதற்காக வந்திருக்கிறேன். நீங்களும் சொர்க்கத்திற்கு செல்வீர்கள். எவ்வளவு செய்வீர்களோ அவ்வளவு பெறுவீர்கள். ஆனால் பல பிறவிகளின் பாவங்களின் சுமை தலைமீது இருக்கிறது, அதை இறக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு நிறைய தண்டனைகள் இருக்கின்றது. சொர்க்கத்திற்குச் செல்வீர்கள். ஆனால் தண்டனை அடைந்தால் பதவியைப் பெற முடியாது. செல்வந்தர்களின் உண்டி நிறைந்திருக்கும் என பாடப்பட்டிருக்கிறது. இவருக்கு கவலை இல்லை. உண்டி தானாகவே நிறையும் என பாபா கூறுகிறார்.
குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். இதில் நன்மை இருக்கிறது. தீமையை ஒரு போதும் யோசிக்காதீர்கள். டில்லி செல்கின்ற வழியில் கால் உடைந்து விட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அதில் கூட நன்மை இருக்கிறது. ஆத்மா உடைய வில்லை அல்லவா? கால் தான் உடைந்தது. நஷ்டம் ஒன்றும் இல்லை. நான் உங்களுடைய ஆத்மாவுடன் பேசுகின்றேன். இது இராவண இராஜ்யம் அதனால் தான் எரிக்கிறார்கள் என பாபா புரிய வைக்கிறார். நாம் என்னவாக இருந்தோம் பாபா நம்மை எதிலிருந்து எதுவாக மாற்றினார். உலகத்தின் நிலை எப்படி இருக்கிறது பாருங்கள். இப்போது பாபா உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகிறார் என்றால் அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். எந்த ஒரு பாவ வேலையும் செய்யக் கூடாது. இல்லற விவகாரத்தில் இருந்தாலும் தூய்மையாக இருங்கள். அவ்வளவு தான். இந்த சத்திய நாராயணனின் கதையை கேட்டுக் கொண்டிருங்கள். இது எவ்வளவு நீண்டதாக இருக்கிறது. முழு கடலையும் மையாக்கினாலும் முடிவைப் பெற முடியாது. பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும் அல்லவா? நாம் பகவானின் வழிப்படி இராஜ்யத்தை அடைகிறோம், மனிதனிலிருந்து தேவதையாகிறோம் என அறிகிறீர்கள். மரணம் எதிரில் நிற்கிறது. திடீரென்று இதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது. விபத்துக்களில் இறந்து விடுகிறார்கள். இறப்பதற்கு முன்பாக நன்கு முயற்சி செய்யுங்கள் என பாபா கூறுகிறார். பாபாவை நினைவு செய்து செய்து தனது வருமானத்தை சேமித்துக் கொள்ளுங்கள். எல்லையற்ற தந்தையினுடையவராகிய பிறகு பாவம் செய்தால் ஒன்றிற்கு நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். பிறகு மனிதர்கள் என்ன கூறுவார்கள் என வெட்கம் வரும். நான் தர்மராஜிடமிருந்து மிகவும் கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வைக்கிறேன் என சிவபாபா கூறு கின்றார். பிறகு அச்சமயம் என்னுடைய குழந்தை என்று கூற முடியாது. இதில் பல சட்டங்கள் உள்ளன. நீதிபதி யின் பிள்ளை பாவம் செய்து விட்டால் எதுவும் செய்ய முடியாது. தண்டனை அடைந்து தான் ஆக வேண்டும். எனவே பாபா தினந்தோறும் புரிய வைக்கிறார். குழந்தைகளே பாவமான வேலையைச் செய்யாதீர்கள். எல்லா வற்றையும் விட பெரியது விகாரத்தின் பாவம் ஆகும். ஒரு வேளை புயல் நிறைய வரலாம். வெளியில் நிறைய அழுக்கு இருக்கிறது கேட்காதீர்கள். இதுவே வேசியாலயம் ஆகும். யாராவது பெரிய ஆட்களுக்கு நீங்கள் புரிய வைக்கிறீர்கள். அவர்களும் மாணவர்கள் ஆகி விடுகிறார்கள் என்றால், பிரம்மா குமாரிகள் இவர்களுக்கு மந்திரம் போட்டு விட்டனர் என கூறுவார்கள். பெரிய பெரிய மனிதர்கள் வந்து நீங்கள் முற்றிலும் உண்மையைக் கூறுகிறீர்கள் எனவும் எழுதுகிறார்கள். கீதையின் பகவான் சிவன் ஆவார். கிருஷ்ணர் கிடையாது. சரி, பிறகு தங்கள் வீட்டிற்குச் சென்றதும் முடிந்தது. நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது.
இனிமையலும் இனிமையான குழந்தைகளே! மறக்காதீர்கள் என பாபா புரிய வைக்கிறார்கள். மாயை மிகவும் வலிமையானது. பாபாவின் நினைவு பாதரசத்தைப் போன்றது. உடனே மறந்து போகிறது. நல்லது குடும்ப விவகாரத்திலும் இருங்கள், தூய்மையாக மட்டும் ஆகுங்கள் என்று பாபா கூறுகிறார். முயற்சியும் செய்ய வேண்டும் அல்லவா? பாபா ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் அன்போடு புரிய வைக்கின்றார். பிறகு யாரும் எந்த பாவ வேலையும் செய்யக் கூடாது. பாபாவைத் தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா? சிருஷ்டிச் சக்கரத்தின் ரகசியம் புத்தியில் இருக்கிறது. வித்வான். பண்டிதர், ஆச்சாரியர், போன்றோர் தன்னையே சிவம் என்று கூறிக் கொண்டு பூஜை செய்விக்கிறார்கள். பெரும்பாலான சன்னியாசிகள் ஹரிதுவாரில் சென்று வசிக்கிறார்கள். முழு நாளும் சிவகாசி விஷ்வநாத் கங்கா என கூறிக் கொண்டே இருக்கிறார்கள். பாபா எவ்வளவு நன்றாக அமர்ந்து, புரிய வைக்கிறார். அகால மூர்த்தி என பாடுகிறார்கள். சிம்மாசனம் அழிவற்றது கிடையாது. அகால மூர்த்தி பாபாவின் இந்த ரதம் தான் சிம்மாசனம் ஆகும். உங்களுக்கு இந்த ரதம். நான், இந்த ரதத்தை எடுத்திருக்கிறேன் என பாபாவும் கூறுகிறார். புருவ மத்தியில் ஒரு புறம் சீடன், ஒரு புறம் குரு அமர்ந்திருக்கிறார். நிச்சயம் இவருக்கு அருகாமையில் தான் வந்து அமருவேன் அல்லவா? நானும் புள்ளியாக இருக்கிறேன். இவ்வளவு பெரியதாக இல்லை.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! இது உங்களுடைய உண்மையிலும் உண்மையான சைத்தன்ய நினைவின் யாத்திரையாகும். பாப்தாதா இருவரும் இணைந்திருக்கின்றனர். பாப்தாதா வின் பொருளை யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. கடிதத்தில் பாப்தாதா என கையெழுத்திடுகிறார். அட, சிவபாபா உங்களுடைய தந்தையாவார். பிரஜா பிதா பிரம்மா தாதா அல்லவா? எனவே, பாப்தாதா ஆகிவிட்டார் அல்லவா? இவர் மூலமாக உங்களுக்கு ஆஸ்தி கொடுப்பதற்காக இப்போது நான் வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். சிவபாபா உங்களுடையவர் ஆவார். பிரஜா பிதா பிரம்மாவும் அனைவருக்கும் தந்தையாகி விட்டார். சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. எனவே இவ்வாறு தான் கையெழுத்திடுவார் அல்லவா? பாப்தாதா என கூறப்படுகிறது. என்னை மட்டும் நினையுங்கள் என்றால் கூட புத்தியில் பதிவதில்லை என சிவபாபா கூறுகின்றார். படக் கண்காட்சிகளில் ஆயிரக்கணக்கானோர் வருகின்றார்கள். அவர்களிலிருந்து 8-10 பேர் புரிந்துக் கொள்வதற்காக வருகிறார்கள். அவர்களிலும் மெல்ல மெல்ல அனைவரும் சென்று ஓரிருவரே நிற்கின்றனர். கோடியில் ஒரு சிலர் என்று பாடப்பட்டிருக்கிறது. எனவே, கோடியில் ஒரு சிலர் வருவதற்காக எவ்வளவு படக்கண்காட்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. சிலரோ நான்கு 5 வருடங்கள் வந்து விட்டு காணாமல் போகின்றனர். பாபாவை விவாகரத்து செய்து விடுகின்றனர். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. சிவபாபாவிடம் முழுமையாக அர்ப்பணம் ஆக வேண்டும் அதாவது உயிரோடு வாழ்ந்துக் கொண்டே இறக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
2. சிவபாபாவின் குழந்தைகள் ஆகிவிட்டோம் என்றால் எந்த பாவ வேலையும் செய்யக் கூடாது. தூய்மையாகி தனக்குத் தானே நன்மை செய்துக் கொள்ள வேண்டும்.
வரதானம்:-
யாராவதொரு ஆத்மாவிற்கு விருப்பம் இருக்கிறது, ஆனால் தைரியம் இல்லாத காரணத்தால் விருப்பம் இருந்து கூட பிராப்தி பெற முடியாமல் இருக்கிறார் என்றால், அப்பேர்ப்பட்ட ஆத்மாக் களுக்கு விதாதா அதாவது ஞானம் அளிக்கும் வள்ளலாக ஆவதுடன் கூடவே கருணையுள்ளம் கொண்டு (வரதாதா) வரமளிக்கும் வள்ளல் ஆகுங்கள். அவர்களுக்கு தங்களது சுபபாவனை யின் (எக்ஸ்ட்ரா) கூடுதலான பலம் கொடுங்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட வராதானி மூர்த்தியாக நீங்கள் எப்பொழுது ஆக முடியும் என்றால், உங்களுடைய ஒவ்வொரு எண்ணம் கூட தந்தைக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு செயலிலும் சமர்ப்பணம் ஆகிறேன் என்று நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் வக்குறுதியை கடைப் பிடியுங்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!