11 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

11 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

10 October 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! யோக அக்னியின் மூலம் பாவங்களை எரித்து சம்பூரண சதோபிரதானம் ஆகவேண்டும். எந்த ஒரு பாவச்செயலையும் செய்யக்கூடாது.

கேள்வி: -

சத்யுகத்தில் எந்த ஆதாரத்தில் உயர்ந்த பதவி கிடைக்கின்றது? இங்குள்ள எந்த நியமத்தை அனைவருக்கும் சொல்ல வேண்டும்?

பதில்:-

சத்யுகத்தில் துôய்மையின் ஆதாரத்தில் உயர்ந்த பதவி கிடைக்கின்றது. யார் துôய்மையை குறைவாக தாரணை செய்கின்றார்களோ அவர்கள் சத்யுகத்தில் காலம் தாழ்ந்து வருவாôர்கள். மேலும், குறைந்த பதவியே அடைவார்கள். தானம் கொடுத்தீர்கள் என்றால் கிரகணம் நீங்கிவிடும். 5 விகாரங்களை தானம் கொடுத்துவிட்டால் நீங்கள் 16 கலைகள் சம்பூரணமானவர்கள் ஆகிவிடு வீர்கள் என்ற இந்த நியமத்தை இங்கு வருபவர்களுக்குச் சொல்லுங்கள். எனக்குள் எந்த விகாரமும் இல்லைதானே? என்று குழந்தைகளாகிய நீங்களும் கூட தன்னுடைய உள்ளத்தில் கேளுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்.. ..

ஓம்சாந்தி. இப்பொழுது சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக்கொண்டு இருக்கிறது என்பதை மனிதர் களுக்கு எவ்வாறு புரிய வைக்க வேண்டும் என்று ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பும் பாரதத்தில் சொர்க்கம் இருந்தது. இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் நடந்தது. அந்த சமயம் எத்தனை மனிதர்கள் இருந்தார்கள் என்று சிந்தனை செய்ய வேண்டும். சத்யுகத்தின் துவக்கத்தில் 9-10 லட்சம் பேர் இருப்பார்கள். துவக்கத்தில் மரம் சிறியதாகத் தான் இருக்கும். கலியுகத்தின் இறுதியான இந்த சமயத்தில் எவ்வளவு பெரிய மரமாகிவிட்டது! இது இப்பொழுது அவசியம் வினாசம் ஆக வேண்டும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதைக் குழந்தைகள் புரிந்திருக்கின்றனர். இந்த சமயத்தில் தான் கீதையின் பகவான் இராஜயோகத்தைக் கற்பித்தார். மேலும், தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடந்தது. சங்கமயுகத்தில் தான் அனேக தர்மங்களின் வினாசம் மற்றும் ஒரு தர்மத்தின் ஸ்தாபனை நடந்திருந்தது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது மற்றும் வேறு எந்த தர்மமும் கிடையாது என்பதையும் குழந்தைகள் அறிந்து இருக் கின்றீர்கள். அத்தகைய புதிய உலகை படைப்பதற்காக தந்தை சங்கமயுகத்தில் வருகின்றார். அது இப்பொழுது ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது. பழைய உலகம் வினாசம் ஆகிவிடும். சத்யுகத்தில் ஒரு பாரத கண்டம் தான் இருந்தது. வேறு எந்த கண்டமும் கிடையாது. இப்பொழுதோ எத்தனை கண்டங்கள் உள்ளன. பாரத கண்டமும் உள்ளது, ஆனால், இதில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இல்லை. அது மறைந்துவிட்டது. பின்னர், இப்பொழுது, பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார். மற்ற அனைத்து தர்மங்களும் வினாசம் ஆகிவிடுகின்றன. சத்யுகம், திரேதாயுகத்தில் வேறு எந்த இராஜ்யமும் கிடையாது; மற்ற அனைத்து தர்மங்களும் இப்பொழுது வந்திருக்கின்றன என்பதை நினைவில் வைக்க வேண்டும். எவ்வளவு துக்கம், அசாந்தி சச்சரவு உள்ளது. இது, அதே மிகப்பெரிய மகாபாரத யுத்தம் ஆகும். ஒருபக்கம் ஐரோப்பிய யாதவர்களும் இருக்கின்றனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கூட இவர்கள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்து இருந்தனர். கௌரவர்கள், பாண்டவர் களும் கூட இருந்தனர். பாண்டவர்களின் பக்கம் சுயம் பரமபிதா பரமாத்மா உதவியாளராக இருந்தார். இல்லறத்தில் இருந்துகொண்டே என்னை நினைவு செய்வதால் பாவங்கள் அதிகரிக்காது மற்றும் முந்தைய விகர்மங்கள் வினாசம் ஆகிவிடும் என்பதையே அனைவருக்கும் கூறினார். இப்பொழுதும் தந்தை புரிய வைக்கின்றார். சத்யுகத்தில் பாரதவாசிகளாகிய நீங்கள் தான் சதோபிரதானமாக இருந்தீர்கள். 84 பிறவிகள் எடுத்து எடுத்து இந்த சமயம் உங்களுடைய ஆத்மா தமோபிரதானம் ஆகிவிட்டது. இப்பொழுது சதோபிரதானமாக எப்படி ஆவது? பதீத பாவனர் தந்தையாகிய என்னை எப்பொழுது நினைவு செய்வீர்களோ அப்பொழுதே சதோபிரதானம் ஆவீர்கள். இந்த யோக அக்னி மூலம் தான் பாவம் எரிந்து போகும், மற்றும் ஆத்மா சதோபிர தானம் ஆகி விடும். மேலும், சொர்க்கத்தில் 21 பிறவிகளுக்காக ஆஸ்தியைப் பெறுவீர்கள். மற்றபடி இந்த பழைய உலகத்தின் வினாசம் நடந்தே ஆகவேண்டும். பாரதம் சத்யுகத்தில் சிரேஷ்டமானதாக இருந்தது. மேலும், சிருஷ்டியின் ஆதியில் மிகவும் குறைந்த மனிதர்களே இருந்தனர். பாரதம் சொர்க்கமாக இருந்தது. வேறு எந்தக் கண்டமும் கிடையாது. இப்பொழுது மற்ற தர்மங்கள் அதிகரித்து அதிகரித்து மரம் எவ்வளவு பெரியதாக ஆகிவிட்டது, மேலும், தமோபிரதானமாகி இற்றுப்போய்விட்டது. இப்பொழுது இந்த தமோபிரதான மரத்தின் வினாசம் மற்றும் புதிய தேவி தேவதா தர்மத்தினுடைய மரத்தின் ஸ்தாபனை அவசியம் நடைபெற வேண்டும். சங்கமயுகத்தில் தான் நடக்கும். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீôகள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. பதீத மனிதர்களை தந்தை பாவனம் ஆக்கிக் கொண்டிருக்கின்றார். அவர்கள் பின்னர் தேவதை ஆவார்கள். யார் முதல் நம்பரில் இருந்தார்களோ, 84 பிறவி கள் எடுத்து இருந்தார்களோ, அவர்களே பின்னர் முதல் நம்பரில் வருவார்கள். அனைவரையும் விட முதன் முதலில் தேவி தேவதைகளுடைய நடிப்பு இருந்தது. அவர்களே முதலில் பிரிந்து சென்றனர். பிறகு அவர்களுடைய நடிப்பு தான் இருக்க வேண்டும் அல்லவா? சத்யுகத்தில் தான் சர்வகுண சம்பன்ன உலகம். இப்பொழுது விகாரி உலகமாக உள்ளது, இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. இப்பொழுது விகாரி உலகை விகாரமற்ற உலகமாக யார் மாற்றுவது? ஹே! பாவனம் ஆக்குபவரே வாருங்கள் என்றும் அழைக்கின்றனர். இப்பொழுது அவர் வந்திருக்கின்றார். நான் உங்களை விகாரமற்றவர்களாக ஆக்கிக்கொண்டிருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இந்த விகார உலகத்தின் வினாசத்திற்காக யுத்தம் நடக்க வேண்டும். இப்போது ஒரே கொள்கை எவ்வாறு ஏற்படும்? ஏனெனில், இப்போது அனேக கொள்கைகள் உள்ளன அல்லவா என்று அவர்கள் கூறு கின்றார்கள். இத்தனை அனேக வழிகளுக்கு (கொள்கைகள்) மத்தியில் ஒரு தார்மிக வழியை யார் ஸ்தாபனை செய்வது? இப்பொழுது ஒரு கொள்கையினுடைய ஸ்தாபனை நடந்துகொண்டிருக்கிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். மற்ற அனைத்தும் வினாசம் ஆகிவிடும். ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்த பாவனமானவர்களே, பின்னர் 84 பிறவிகள் அனுபவித்து இப்போது பதீதம் ஆகிவிட்டனர். பிறகு, தந்தை வந்து பாரதவாசிகளுக்கு மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் அதாவது அசுரனிலிருந்து தேவதையாக ஆக்கிக்கொண்டிருக் கின்றார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால், நீங்கள் பதீதத்திலிருந்து பாவனம் ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார் என்பதை நீங்கள் எவருக்கும் புரிய வைக்க இயலும். இப்போது நீங்கள் ஞானச்சிதையில் அமருங்கள். சிதையில் அமர்வதால் நீங்கள் பாவனம் ஆகிவிடுகிறீர்கள். பிறகு, துவாபரயுகத்தில் இராவண இராஜ்யத்தின் காரணத்தால் காமச்சிதையில் அமர்ந்து அமர்ந்து கீழான (பிரஷ்டாச்சாரி) உலகம் ஆகிவிட்டது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேவி தேவதைகள் இருந்தனர். குறைவான மனிதர்களே இருந்தனர். இப்பொழுதோ எவ்வளவு அசுரத் தன்மை உடையவர் ஆகி விட்டனர். மற்ற தர்மங்களும் சேர்ந்து மரம் பெரியதாகிவிட்டது. மரம் இற்றுப் போய்விட்டது என்று தந்தை புரிய வைக்கின்றார். பிறகு, இப்பொழுது நான் ஒரு வழி முறையின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும். ஒரு தர்மத்தில் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று பாரதவாசிகள் கூறுகின்றனர். சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருந்தது என்பதை பாரதவாசிகள் மறந்துவிட்டனர். இங்கோ அனேக தர்மங்கள் உள்ளன. இப்போது தந்தை வந்து மீண்டும் ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இராஜயோகத்தைக் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். அவசியம் பகவான் தான் இராஜயோகத்தைக் கற்பிப்பார். இது எவருக்கும் தெரியாது. படவிளக்கக் கண்காட்சியைத் துவக்கி வைக்க வருபவர் களிடம், நீங்கள் எதனுடைய துவக்கவிழா செய்கின்றீர்கள் என்பதையும் புரிய வைக்க வேண்டும். தந்தை இந்த பாரதத்தை சொர்க்கம் ஆக்கிக்கொண்டு இருக்கின்றார். மற்ற நரகவாசிகள் அனைவரும் வினாசம் ஆகிவிடுவார்கள். வினாசத்திற்கு முன்பே தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பவர்கள் வந்து புரிந்து கொள்ளுங்கள். இந்த பி.கு. ஆசிரமமானது ஒருவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைபடுத்தி வைக்கும் வகுப்பு ஆகும். இங்கு 7 தினங்கள் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் 5 விகாரங்கள் நீங்கிவிடும். தேவதைகளிடம் இந்த 5 விகாரங்கள் கிடையாது. இப்பொழுது இங்கு 5 விகாரங்களை தானமாகக் கொடுக்க வேண்டும். அப்போதே கிரஹணம் நீங்கும். தானம் கொடுத்தீர்கள் என்றால் கிரஹணம் விலகி விடும். பிறகு நீங்கள் 16 கலைகள் நிரம்பிய சம்பூரணமாக ஆகிவிடுவீர்கள். பாரதம் சத்யுகத்தில் 16 கலைகள் சம்பூரணமாக இருந்தது. இப்பொழுதோ எந்தக் கலையும் இல்லை. அனைவரும் மிக ஏழ்மை அடைந்துவிட்டனர். திறப்பு விழா செய்ய வருபவர்களிடம், 5 விகாரங்களினுடைய தானம் கொடுத்து விட்டால் கிரஹணம் விலகிவிடும். நீங்கள் 16 கலைகள் சம்பூரண தேவதை ஆகிவிடுவீர்கள். துôய்மையின் அனுசாரம் பதவியை அடைவீர்கள் என்று கூறுங்கள். மற்றபடி, ஒருவேளை ஏதாவது, ஏதாவது கலை குறைவாக இருந்தால், பிறவி தாமதமாகக் கிடைக்கும். விகாரங் களை தானம் கொடுத்துவிடுவது நல்லது அல்லவா, என்று தந்தை கூறுகின்றார். இது இங்குள்ள நியமம் ஆகும். என்று சொல்லுங்கள். முன்னர், சந்திர கிரஹணம் ஏற்படும்போது, பிராமணர்கள் தானம் பெறுவார்கள். இப்பொழுதோ பிராமணர்கள் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டனர். ஏழைகள், பாவம், பிச்சை கேட்கின்றார்கள், பழைய ஆடைகள் முதலியவற்றைப் பெறுகின்றார்கள். உண்மையில், பிராமணர்கள் பழைய ஆடைகளைப் பெறமாட்டார்கள். அவர்களுக்குப் புதியதாகக் கொடுக்கப்படுகிறது. எனவே, பாரதம் 16 கலைகள் சம்பூரணமாக இருந்தது. இப்பொழுது இரும்பு யுகம் ஆகி விட்டது. 5 விகாரங்களின் கிரஹணம் பிடித்துவிட்டது என்று இப்போது நீங்கள் புரிய வைக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் 5 விகாரங்களினுடைய தானம் கொடுத்து, இந்தக் கடைசி பிறவியில் துôய்மையாக இருந்தீர்கள் என்றால், புது உலகத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள். சொர்க்கத்தில் மிகவும் கொஞ்சம் பேரே இருந்தனர். பின்னரே எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.. இப்போதோ வினாசம் கூட எதிரில் நிற்கிறது. தந்தை கூறுகின்றார், 5 விகாரங்களை தானமாகக் கொடுத்தீர்கள் என்றால் கிரஹணம் விலகிவிடும். இப்போது நீங்கள் சிரேஷ்டமானவர் ஆகி சொர்க்கத்தின் சூரியவம்ச இராஜ்யத்தைப் பெற வேண்டும். எனவே, இழிவான செயலை விடவேண்டும். 5 விகாரங்களை தானம் கொடுங்கள். நான் சர்வகுணங்களிலும் நிறைந்தவராக, சம்பூரண நிர்விகாரியாக ஆகிவிட்டேனா? என்று தன்னுடைய உள்ளத்தில் கேளுங்கள். நாரதருடைய உதாரணம் உள்ளது அல்லவா? ஒரு விகாரம் இருந்தால் கூட லெட்சுமியை எவ்வாறு மணக்க இயலும்? முயற்சி செய்துகொண்டே இருங்கள். குப்பையை எரித்துக் கொண்டே இருங்கள். தங்கத்தை உருக்கும்போது ஒருவேளை நெருப்பு குளிர்ந்துவிட்டால் கலப்பட உலோகம் (கறை) வெளிவராது. ஆகையால், இறுதி வரை நெருப்பில் உருக்குவார்கள்.

உலோகம் தனியாகிவிட்டதைக் கண்ட பின்னரே அச்சில் வார்ப்பார்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார், எந்த ஒரு விகாரத்திற்கும் வசமாகாதீர்கள். தீவிர வேகத்தில் முயற்சி செய்யுங்கள். முதலில் துôய்மையாக இருப் பதற்கான உறுதிமொழி செய்யுங்கள். பாபா நீங்கள் பாவனம் ஆக்குவதற்காக வந்திருக்கின்றீர்கள், நாங்கள் ஒரு போதும் விகாரத்தில் செல்லமாட்டோம். ஆத்ம அபிமானி ஆகவேண்டும், ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை புரிய வைக்கின்றார். அவர் பரம ஆத்மா ஆவார். நாம் பதீதமாக இருக்கிறோம் என்று நீங்கள் அறிந்து இருக் கின்றீர்கள். ஆத்மாவில் தான் சமஸ்காரங்கள் உள்ளன. உங்களுடைய தந்தையாகிய நான், ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றேன். நான் உங்களுடைய தந்தை பரமாத்மா ஆவேன்; நான் பாவனம் ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன் என்று வேறு எவரும் கூற இயலாது. நீங்கள் முதலில் சதோபிரதானமாக இருந்தீர்கள் பிறகு, சதோ, ரஜோ, தமோவில் வந்து தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள். இந்த சமயம் 5 தத்துவங்களும் கூட தமோபிரதானமாக உள்ளன. ஆகையால், துக்கம் தருகின்றன. ஒவ்வொரு பொருளும் துக்கம் தருகிறது. இதே தத்துவங்கள் சதோபிரதானமாக இருக்கும்பொழுது சுகம் கொடுக்கின்றன. அதனுடைய பெயரே சுகதாமம் ஆகும். இது துக்கதாமம் ஆகும். சுகதாமம் என்பது எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி ஆகும். துக்கதாமம், இராவணனுடைய ஆஸ்தி ஆகும். இப்போது எந்தளவு ஸ்ரீமத்படி நடப்பீர்களோ, அந்தளவு உயர்ந்தவர்கள் ஆவீர்கள். பின்னர், கல்ப கல்பமாக இவர்கள் அத்தகைய முயற்சி செய்யக்கூடியவர்கள் என்று பிரசித்தம் புகழப்படுவீர்கள். இது கல்ப கல்பத்தின் பந்தயம் ஆகும். யார் அதிக முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்களோ, அவர்கள் தனது இராஜ்ய பாக்கியத்தை அடைந்து கொண்டு இருக்கின்றார்கள். சரியான முயற்சி செய்ய வில்லை என்றால் மூன்றாம் தரத்திற்குச் சென்றுவிடுவார்கள். பிரஜையிலும் கூட என்ன நிலை அடைவார்கள் எனத் தெரியாது. நீ எங்களுடைய பெயரைக் கெடுத்துவிட்டாய், வீட்டை விட்டு வெளியேறு என்று லௌகீக தந்தையும் கூறுகின்றார். சூரியவம்சம், சந்திரவம்சத்தில் வரவே முடியாதபடி உங்களுக்கு மாயா அடி கொடுக்கும் என்று எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார். தனக்குத் தானே அடி கொடுத்துக் கொள்வார்கள். தந்தையோ வாரிசு ஆகுங்கள் என்று கூறு கின்றார். இராஜ திலகத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்றால் என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் பிறருக்கும் நினைவை ஏற்படுத்துங்கள். அப்பொழுதே நீங்கள் இராஜா ஆவீர்கள். வரிசைக்கிரமம் உள்ளது அல்லவா? சில வக்கீல்கள் ஒவ்வொரு வழக்கிற்கும் பல லட்சங்களை சம்பாதிக்கின்றனர். மேலும், சிலரைப் பார்த்தால், உடுத்துவதற்கு கோட் கூட இருக்காது. முயற்சியே ஆதாரமாக உள்ளது அல்லவா. நீங்களும் முயற்சி செய்தால் உயர்ந்த பதவி அடைவீர்கள். மனிதனிலிருந்து தேவதை ஆகவேண்டும். எஜமானர் ஆக விரும்பினாலும் ஆகுங்கள், பிரஜை ஆக விரும்பினாலும் ஆகுங்கள். பிரஜையிலும் கூட வேலைக்காரன் ஆவார்கள். மாணவருடைய நடத்தை மூலம் ஆசிரியர் புரிந்து கொள்கிறார். அதிசயம் என்னவென்றால், முதலில் வந்தவர்களைவிட பின்னால் வந்தவர்கள் தீவிரமாகச் சென்றுவிடுகின்றனர். ஏனெனில், இப்பொழுது நாளுக்கு நாள் நயமான பாய்ண்ட்ஸ் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. நாற்று நடப்படுகின்றது. முதலில் வந்தவர்களிலோ சிலர் ஓடிவிட்டனர். புதியவர்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றனர். புதுப்புது பாய்ண்ட்ஸ் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. மிகவும் யுக்தியுடன் புரிய வைக்கப்படுகிறது. மிகவும் ஆழத்திலும் ஆழமான ரமணீகரமான விஷயங்களைச் சொல்கின்றோம், இதன் மூலம் நீங்கள் உடனடியாக நிச்சயபுத்தி உடையவர் ஆகிவிடுங்கள் என்று பாபா கூறுகின்றார். எதுவரை எனது நடிப்பு உள்ளதோ, அதுவரை உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பேன். இதுவும் நாடகத்தில் பதிவாகி உள்ளது. எப்பொழுது கர்மாதீத நிலையை அடைவீர்களோ அப்பொழுது படிப்பு நிறைவடையும். குழந்தைகளும் புரிந்து கொள்வீர்கள். இறுதியில் தேர்வின் முடிவு தெரிந்துவிடும் அல்லவா? இந்தப் படிப்பில் முதல் நம்பர் பாடம் – துôய்மை ஆகும். எதுவரை பாபாவின் நினைவு வரவில்லையோ, தந்தையின் சேவை செய்ய வில்லையோ, அதுவரை துôக்கம் வரக்கூடாது. உங்களுடைய யுத்தமே மாயாவுடன் தான். இராவணனை எரிக்கின்றார்கள். ஆனால், அவன் யார் என்று அறியாமல் இருக்கிறார் கள். தசரா நன்றாகக் கொண்டாடுகின்றனர். இராமர் பகவானுடைய பகவதி சீதை கடத்தப்பட்டார். பிறகு, குரங்குகளின் சேனை ஈடுபடுத்தப்பட்டது. இப்படி எப்போதாவது நடக்க இயலுமா என்ன? இது இப்பொழுது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்கள் ஒன்றுமே புரிந்திருக்கவில்லை. பட விளக்கக் கண்காட்சிக்கு வருபவர்களிடம், பாரதத்தில் இந்த இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் நடந்தது. அப்போது எத்தனை மனிதர்கள் இருந்திருப்பார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கான விஷயம் ஆகும், என்பதை முதலில் சொல்ல வேண்டும். இப்பொழுது கலியுகம் ஆகும். அதே மிகப்பெரிய மகாபாரத யுத்தமும் நடக்க இருக்கிறது. தந்தை வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். வினாசமும் நடைபெறும். இங்கு ஒரு தர்மம், ஒரு வழி அதாவது அமைதி எவ்வாறு ஏற்பட இயலும்? ஒரு வழியை ஏற்படுத்துவதற்காக எவ்வளவு கடுமையான முயற்சி செய்கிறார்களோ அவ்வளவு சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள். இப்போது, நான், அவர்கள் அனைவரையும் தங்களுக்குள் சண்டையிட வைத்து, வெண்ணெயை உங்களுக்கு அளிக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். யார் செய்வார்களோ, அவர்கள் பலன் அடைவார்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். சில சில குழந்தைகள் தந்தையை விடவும் உயர்ந்தவர் ஆக முடியும். நீங்கள் என்னை விட செல்வந்தராக விஷ்வத்தின் எஜமானராக ஆவீர்கள். நான் ஆக மாட்டேன். நான், குழந்தைகளாகிய உங்களுக்கு சுயநலமற்ற சேவை செய்கின்றேன். நான் வள்ளலாக இருக்கின்றேன். நான் சிவபாபாவிற்கு 5 ரூபாய் கொடுக்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஆனால், சிவபாபாவிடமிருந்து 5 கோடி சொர்க்கத்தில் பெறுகிறீர்கள். எனில், நீங்கள் கொடுத்தது கொடுத்ததாகுமா என்ன? ஒருவேளை, நான் கொடுக்கிறேன் என்று நினைத்தால், அது சிவபாபாவிற்குச் செய்யும் பெரிய அவமரியாதையாகும் தந்தை உங்களை எவ்வளவு உயர்ந்தவர் ஆக்குகின்றார். நீங்கள் 5 ரூபாய் சிவபாபாவின் பொக்கிஷத்திற்குக் கொடுக்கிறீர்கள். பாபா உங்களுக்கு 5 கோடி கொடுக்கின்றார். சோழியிலிருந்து வைரம் போல் ஆக்குகின்றார். நான் சிவ பாபாவிற்குக் கொடுத்திருக்கின்றேன் என்ற சந்தேகத்தை ஒருபோதும் எழுப்பக்கூடாது. இவர் எவ்வளவு கள்ளம் கபடமற்றவராக இருக்கின்றார். நான் பாபாவுக்குக் கொடுக்கிறேன் என்று ஒரு போதும் எண்ணத்தில் கூட வரக்கூடாது.. சிவபாபாவிடம் இருந்து நாம் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி பெறுகிறோம். சுத்தமான எண்ணத்துடன் தரவில்லை என்றால், எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்? அனைத்து விஷயங்களின் ஞானத்தை புத்தியில் வைக்க வேண்டும். ஈஸ்வரனுக்காக தானம் செய்கின்றனர். அவர் பசியுடன் இருக்கின்றாரா என்ன? இல்லை. நமக்கு அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று நினைக்கின்றனர். இப்பொழுது தந்தை உங்களுக்கு கர்மம், அகர்மம், விகர்மத்தின் நிலைப் பற்றி புரிய வைக்கின்றார். இங்கு என்ன கர்மம் செய்தாலும் அது விகர்மமாகத்தான் ஆகும். ஏனெனில், இராவண இராஜ்யம் ஆகும். சத்யுகத்தில் கர்மம் அகர்மமாக இருக்கிறது. எங்கு உங்கள் மூலம் விகர்மமே ஏற்படாதோ, அந்த உலகிற்கு, நான் இப்பொழுது உங்களை இடமாற்றம் செய்கின்றேன். அனேகக் குழந்தைகள் ஆகிவிடுவார்கள், பிறகு, உங்களது பணத்தை என்ன செய்வது? பெற்றது பயன்படாவிட்டாலும் திரும்ப நிறைத்துக் கொடுக்கும் அனுபவமில்லாத நகை வியாபாரி நான் அல்ல. நான் அனுபவமிக்க நகை வியாபாரி ஆவேன். அவசியமில்லை என்று கூறிவிடுவேன். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய்,தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தீவிர வேகத்தில் முயற்சி செய்து விகாரங்கள் என்ற உலோகத்தை (கறையை) யோக அக்னியில் உருக்கிவிட வேண்டும். துôய்மையைக் கடைபிடிப்பதற்கான முழுமையான உறுதிமொழி எடுக்க வேண்டும்.

2. கர்மம், அகர்மம், விகர்மத்தின் நிலையை புத்தியில் வைத்து தன்னுடைய அனைத்தையும் புது உலகிற்கு மாற்றல் செய்துவிட வேண்டும்.

வரதானம்:-

ஜோதிடர்களுக்கு ஜோதிடத்தின் ஞானத்தின் மூலம், கிரக அமைப்பின் ஞானத்தின் மூலம் வரக் கூடிய ஆபத்துகளை தெரிந்துக் கொள்வதை போன்று, குழந்தைகளாகிய நீங்களும் முன்னதாகவே மாயாவின் மூலம் வரக்கூடிய பேப்பரை (பிரச்சனைகளை) பகுத்தறிந்து பாஸ் வித் ஆனர் (தகுதியுடன் தேர்ச்சி பெறுதல்) ஆவதற்காக தனது புத்தி என்ற கண்னை தெளிவாக வையுங்கள், மற்றும் கவனமாக இருங்கள். நாளுக்கு நாள் நினைவு மற்றும் அமைதியின் சக்தியை அதிகரித்துக் கொண்டால், ஏதோ நடக்கவிருக்கிறது என்பது முன்னதாகவே புலப்படும். மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகவும் சக்திசாலியானவரகவும் ஆகிவிடுங்கள், அதனால் ஒருபொழுதும் தோல்வி ஏற்படாது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top