26 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

26 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

25 September 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

அனைத்திலும் உயர்ந்த நட்சத்திரம் - வெற்றி நட்சத்திரம்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று ஞான சூரியன் (சிவபாபா), ஞான சந்திரன் (பிரம்மா பாபா) தனது அலௌகீக விண்மீன் கூட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். இது அலௌகீக விசித்திரமான வீண்மீன் கூட்டமாக இருக்கிறது, இதனுடைய விசேஷத்தன்மை பாபா மற்றும் பிராமண குழந்தைகள் மட்டும் தான் தெரிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் தனது ஜொலிப் பின் மூலம் இந்த உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா ஒவ்வொரு நட்சத்திரத்தின் விசேஷத் தன்மைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். சிலர் பாபாவின் நெருக்கத்திலுள்ள நட்சத்திரங்களாக இருக்கிறீர்கள். சிலர் பாபாவிடமிருந்து தொலைவிலுள்ள நட்சத்திரங்களாக இருக்கிறீர்கள். அனைவருமே நட்சத்திரங்கள் தான், ஆனால் விதவிதமான விசேஷத்தன்மைகள் இருக்கும் காரணத்தினால் சேவையில் மற்றும் தன்னிடத்தில் வெவ்வேறு பலன்களை அடையும் அனுபவம் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சிலர் எப்பொழுதுமே எளிதாக முயற்சி செய்யும் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள், ஆகையால் எளிதாக பிராப்தியின் பலனை அனுபவம் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் சிலர் கடின உழைப்பு (முயற்சி) செய்யக் கூடிய நட்சத் திரங்களாக இருக்கிறார்கள். சிறிதளவு முயற்சி செய்தாலும், அதிகமாக முயற்சி செய்தாலும், அதிகளவில் முயற்சியின் அனுபவத்திற்கு பிறகு பலனின் பிராப்தியை அனுபவம் செய்கிறார்கள். சிலர் வெற்றி எனது பிறப்புரிமை என்ற அதிகாரத்தை செயல் செய்வதற்கு முன்னதாகவே எப்பொழுதுமே அனுபவம் செய்கிறார்கள். ஆகையால் நம்பிக்கை மற்றும் குஷியோடு செயல் புரியும் காரணத்தினால் செயலில் வெற்றியின் அனுபவம் எளிதாக அனுபவம் செய்கிறார்கள். இவர்களை தான் வெற்றி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது.

அனைத்தையும் விட உயர்ந்தது வெற்றி நட்சத்திரமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் எப்பொழுதுமே ஞான சூரியன், ஞான சந்திரனுக்கு அருகாமையில் இருக்கிறார்கள். ஆகையால் சக்திசாலியாகவும் இருக்கிறார்கள். மேலும் வெற்றியின் அதிகாரியாகவும் இருக் கிறார்கள். சிலர் சக்திசாலியாக இருக்கிறார்கள், ஆனால் சிலர் சக்திசாலியாக இருப்பதில்லை. அதனால் எப்பொழுதும் ஒன்று போல ஜொலிப்பதில்லை. விதவிதமான நட்சத்திரங்களின் சாரல் மிகவும் அன்பானதாக இருக்கிறது. சேவை அனைத்து நட்சத்திரங்களும் செய்கின்றன, ஆனால் நெருங்கிய நட்சத்திரங்கள் மற்றவர்களையும் கூட சூரியன் (சிவபாபா), சந்திரன் (பிரம்மா பாபா), அருகாமை யில் கொண்டு வருவதற்கான சேவாதாரியாகவும் இருக்கிறார்கள். எனவே ஒவ்வொருவரும் நான் எப்படிப்பட்ட நட்சத்திரம் என்று தன்னை தானே கேட்டுக் கொள்ள வேண்டும், அன்பான நட்சத்திரமாக இருக்கிறேனா, அதிர்ஷ்ட நட்சத்திரமாக இருக்கிறேனா, சதா சக்திசாலியாக இருக் கிறேனா, கடினத்தன்மையை அனுபவம் செய்யக் கூடியவனாக இருக்கிறேனா, அல்லது சதா சகஜமாக வெற்றியடையும் நட்சத்திரமாக இருக்கிறேனா? ஞான சூரியன் பாபா அனைத்து நட்சத்திரங்களுக்கும் எல்லைக்கு அப்பாற் பட்ட ஒளி மற்றும் சக்தியை கொடுக்கிறார், ஆனால் அருகாமை மற்றும் இடைவெளி இருக்கும் காரணத்தினால் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. எந்தளவு நெருங்கிய தொடர்பில் இருக்கிறோமோ, அந்தளவு ஒளி மற்றும் சக்தி சிறப்பானதாக இருக்கிறது. ஏனெனில் நெருங்கிய நட்சத்திரங்களின் இலட்சியமே – (பாபாவிற்கு) சமமாக இருப்பதாகும்.

அதனால் பாப்தாதா அனைத்து நட்சத்திரங்களுக்கும் இந்த குறிப்பை தருக்கிறார், அதிர்ஷ்டசாலி யாகவும் அன்பானவராகவும் ஆகிறார்கள், ஆனால் இப்பொழுது மேலும் தன்னை சதா அருகாமையில் இருக்கக் கூடியவராகவும், எளிதாக வெற்றியை அனுபவம் செய்யக் கூடிய வெற்றி நட்சத்திரங்களாக எதுவரை ஆகியுள்ளீர்கள்? என்பதை பாருங்கள். இப்பொழுது கீழே விழக்கூடிய நட்சத்திரங்களாகவோ, அல்லது வால் நட்சத்திரமாகவோ இல்லை. யார் அடிக்கடி தன்னிடமோ அல்லது பாபாவிடமோ அல்லது நிமித்தமாக உள்ள ஆத்மாக்களிடமோ – இது ஏன், இது என்ன, இது எப்படி போன்ற கேள்விகளை கேட்கக் கூடியவர்கள் தான் வால் நட்சத்திரங்களாக இருக்கிறார் கள். திரும்ப திரும்ப கேட்கக் கூடியவர்கள் தான் வால் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவ்வாறு இல்லை தானே? வெற்றி நட்சத்திரங்களாக இருக்கக்கூடியவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெற்றி அடங்கியிருக்கும் – அப்படிப்பட்ட நட்சத்திரங்கள் எப்பொழுதும் பாபாவின் நெருக்கத்தில் அதாவது அருகாமை யில் இருப்பார்கள். விசேஷத்தன்மைகளை கேட்டீர்களா, இப்பொழுது இந்த விசேஷத் தன்மைகளை தனக்குள் தாரணை செய்து எப்பொழுதும் வெற்றி நட்சத்திரம் ஆகுங்கள். புரிந்ததா, என்ன ஆக வேண்டும்? அதிர்ஷ்டமானவராகவும், அன்பான வராகவும் இருப்பதன் கூடவே வெற்றியடைந்தவராகவும் இருப்பது – இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை எப்பொழுதும் அனுபவம் செய்துக் கொண்டேயிருங்கள். நல்லது.

இன்று அனைவரையும் சந்திக்க வேண்டும். பாப்தாதா இன்று விசேஷமாக சந்திப்பதற் காக வந்திருக்கிறார். அனைவருக்கும் (பாபாவை) சந்திக்க வேண்டுமென்ற இலட்சியம் தான் இருக் கிறது. ஆனால் குழந்தைகளின் அலையை பார்த்து பாபாவிற்கு அனைத்து குழந்தைகளையும் குஷி செய்ய வேண்டியிருக்கிறது, ஏனெனில் குழந்தைகளின் குஷியில் பாபாவின் குஷியும் அடங்கி யிருக்கிறது. தற்சமயத்தில் தனியாக சந்திப்பதில் தான் நடப்பு வழக்காக இருக்கிறது. எனவே கடலுக்கும் (பாபாவிற்கும்) கூட அதே நடப்பு வழக்கிற்கு வரவேண்டியிருக்கிறது. இது தான் இந்த சீசனின் அலையாக இருக்கிறது. ஆகையால் இரதத்திற்கும் கூட விசேஷமான சகாஷ் கொடுத்து நடத்த வேண்டியிருக்கிறது.

நல்லது ! நாலாபக்கத்திலுமுள்ளவீண்மீன் கூட்டங்களின் அலௌகீக நட்சத்திரங் களுக்கு, சதா உலகிற்கு ஓளியை கொடுத்து இருளை நீக்கக் கூடிய ஜொலித்துக் கொண்டி ருக்கும் நட்சத்திரங்களுக்கு, எப்பொழுதும் பாபாவிற்கு அருகாமையில் இருக்கக் கூடிய சிரேஷ்ட வெற்றி நட்சத்திரங்களுக்கு, அநேக ஆத்மாக்களின் பாக்கியத்தின் ரேகையை மாற்றம் செய்யக் கூடிய பாக்கியசாலி நட்சத்திரங்களுக்கு ஞான சூரியன், ஞான சந்திரனின் பாப்தாதாவின் விசேஷமான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தனிப்பட்ட முறையில் சந்திக்கும் சமயத்தில் வரதானங்களின் ரூபத்தில் சொல்லப்பட்ட விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள்

1. சதா ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சுகத்தை தரக்கூடிய சுகத்தை அளிக்கும் பாபாவின் குழந்தைகளாக இருக்கிறீர்கள் – அப்படி அனுபவம் செய்கிறீர்களா? அனைவருக்கும் சுகம் அளிப் பதற்கான விசேஷத்தன்மை இருக்கிறதல்லவா. இது கூட நாடகத்திட்டப்படி விசேஷத்தன்மை இருக்கிறது. ஆனால் இந்த விசேஷத்தன்மை இருப்பதில்லை. யார் அனைவருக்கும் சுகத்தை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு அனைவருடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது. ஆகையால் தன்னையும் கூட சதா சுகத்தில் அனுபவம் செய்கிறார்கள். இந்த விசேஷத்தன்மை மூலம் தற்சமயமும் நன்றாக இருக்கும், மேலும் எதிர்காலமும் நன்றாகி விடும். யார் அனைவருடைய அன்பும், ஆசீர்வாதமும் பெறுவதற்கான அற்புதமான நடிப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு ஒன்றுக்கு கொடுத்து ஆயிரத்தை பெறுவதாகும். எனவே சேவையின் மூலம் சுகத்தை கொடுக்கிறீர்கள், இதனால் அனைவருடைய அன்பும் கிடைக்கிறது. இந்த விஷேசத்தன்மையை சதா காலத்திற்கும் நிரந்தரமாக வைக்க வேண்டும்.

2. சதா தன்னை சர்வசக்திவான் பாபாவினுடைய சக்திசாலியான ஆத்மாவாக இருக்கிறேன்? அப்படி அனுபவம் செய்கிறீர்களா? சக்திசாலியான ஆத்மா சதா தன்னிடமும் திருப்தியாக இருப்பார்கள், மேலும் மற்றவர்களையும் திருப்திப்படுத்துவார்கள். அவ்வாறு சக்திசாலியாக இருக்கிறீர்களா? திருப்தி தன்மை தான் மகான் தன்மையாக இருக்கிறது. சக்திசாலியான ஆத்மா என்றாலே திருப்தி யின் பொக்கிஷத்தினால் நிரம்பிய ஆத்மாவாக இருப்பார்கள். இந்த நினைவின் மூலம் சதா முன்னேறிக் கொண்டேயிருங்கள். இந்த பொக்கிஷத்தை அனைவருக்கும் நிரப்பக்கூடியவர்களாக இருப்பார்கள்.

3. பாபா முழு உலகத்திலிருந்து நம்மை தேடிக் கண்டுபிடித்து தன்னுடையவராக ஆக்கியிருக்கிறார் – இந்த குஷி இருக்கிறதல்லவா. இத்தனை கோடி ஆத்மாவிலிருந்து ஆத்மாவாகிய என்னை பாபா தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் – இந்த நினைவு எவ்வளவு குஷியை கொடுக்கிறது. எனவே சதா இந்த குஷியோடு முன்னேறிக் கொண்டே செல்லுங் கள். பாபா என்னை தன்னுடையவராக மாற்றியிருக்கிறார், ஏனெனில் நான் தான் சென்ற கல்பத்த்தில் பாக்கியசாலி ஆத்மாவாக இருந்தேன். இப்பொழுதும் இருக்கிறேன், பிறகும் கூட ஆவேன். – அப்படிப்பட்ட பாக்கியசாலி ஆத்மாவாக இருக்கிறேன். இந்த நினைவு மூலம் சதா முன்னேறிக் கொண்டேயிருங்கள்.

4. சதா கவலையற்றவராகி சேவை செய்வதற்கான சக்தியின் மூலம் முன்னேறிக் கொண்டேயிருங்கள். இவர்கள் செய்தார்கள் நானும் செய்தேன் -இப்படிப்பட்ட எண்ணங் களிலிருந்து விடுப்பட்டு கவலையற்றவராக இருக்கக் கூடிய அமைதியாக சேவை நடை பெறுகிறது, மேலும் அதற்கான பலனும் எப்பொழுதும் முன்னேற வைக்கிறது. எனவே கவலை யற்ற (அமைதியான) சேவாதாரியாக இருக்கிறீர்கள் அல்லவா? கணக்கு பார்த்து சேவை செய்யக் கூடியவர் இல்லை தானே. இவர்களை தான் கவலையற்ற சேவாதாரி என்று சொல்லப்படுகிறது. எனவே யார் கவலையின்றி சேவை சேவை செய்கிறார்களோ, அவர்கள் கவலையின்றி (அமைதியாக) முன்னேறுவது எளிதாக இருக்கும். இந்த விசேஷத் தன்மை ஆசீர்வாத ரூபத்தில் முன்னேற வைக்கிறது.

5. சேவையும் கூட பல ஆத்மாக்களை பாபாவிற்கு அன்பிற்குரியவராக மாற்று வதற்கான சாதனமாக மாற்றிவிடுகிறது. பார்ப்பதற்கு கர்மனா (செயல்களினால் செய்தல்) சேவையாக இருக் கிறது, ஆனால் கர்மனா சேவை வார்த்தைகள் மூலம் செய்யும் சேவையை விட அதிகமான பலன் தருகிறது. கர்மனா (செயல்களினால் செய்யும் சேவை) மூலம் மற்றவர்களின் மனதை மாற்றம் செய்யக் கூடிய சேவையாக இருக்கிறது எனவே அந்த சேவையின் பலன் விசேஷமான குஷியை அடைகிறோம். கர்மனா சேவை பார்ப்பதற்கு ஸ்தூலமாக வந்துவிடுகிறது,. ஆனால் சூட்சம உள்ளுணர்வை மாற்றம் செய்யக் கூடியதாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்ட சேவைக்கு நாம் நிமித்தமாக (கருவியாக) இருக்கிறோம் – இந்த குஷியினால் முன்னேறிக்கொண்டே செல்லுங்கள். சொற்பொழிவு செய்பவர்கள் வார்த்தைகளினால் சேவை செய்கிறார்கள், ஆனால் கர்மனா சேவையும் கூட சொற்பொழிவு செய்யக் கூடியவர்களின் சேவையை விடவும் பெரியது. ஏனெனில் இதற்கான உடனடி பலன் அனுபவம் ஆகிறது.

6. சதா புண்ணியத்தின் சேமிப்பு கணக்கு செய்யக்கூடிய சிரேஷ்ட ஆத்மாவாக இருக்கிறேன் – அப்படி அனுபவம் ஆகிறதா? இந்த சேவை – பெயர் தான் சேவையாக இருக்கிறது, ஆனால் புண்ணிய கணக்கு சேமிப்பு செய்வதற்கான சாதனமாக இருக்கிறது. எனவே புண்ணிய கணக்கு சதா நிரம்பியிருக்கிறது, மேலும் வரும் காலங்களிலும் கூட நிரம்பியிருக்கும். எந்தளவு சேவை செய்கிறீர்களோ, அந்தளவு புண்ணியத்தின் கணக்கு அதிகரித்துக் கொண்டேயிருக்கும். எனவே புண்ணிய கணக்கு அழிவற்றதாகிவிடுகிறது. இந்த புண்ணியம் பல பிறவிகள் நிறைவாக மாற்றக் கூடியதாக இருக்கிறது. அதனால் புண்ணிய ஆத்மாவாக இருக்கிறீர்கள், மேலும் சதா காலத்திற்கு புண்ணிய ஆத்மாவாகி மற்றவர்களுக்கும் கூட புண்ணியத்திற்கான வழியை சொல்லக் கூடியவர்களாக இருக் கிறீர்கள். இந்த புண்ணியத்தின் கணக்கு பல பிறவிகளுக்கு கூடவே இருக்கும். பல பிறவி கள் செல்வந்தர்களாக இருப்பீர்கள் – இந்த குஷியில் சதா முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.

7. சதா ஒரே ஒரு பாபாவின் நினைவில் இருக்கக் கூடிய, ஒரு இரசனை என்ற மன நிலையை அனுபவம் செய்யக் கூடிய சிரேஷ்ட ஆத்மாவாக இருக்கிறேன் – அவ்வாறு அனுபவம் செய்கிறீர் களா? ஒரே ஒரு பாபாவின் நினைவு இருக்குமிடத்தில், ஒரே இரசனை மனநிலை இயல்பாகவே அனுபவம் ஆகும். எனவே ஒரே இரசனை என்ற மனநிலை தான் உயர்ந்த மனநிலையாக இருக்கிறது. ஒரே இரசனை என்ற மனநிலையை அனுபவம் செய்யக்கூடிய சிரேஷ்ட ஆத்மாவாக இருக்கிறேன் – இந்த நினைவு சதா காலத்திற்கு முன்னேறிக் கொண்டேயிருக்கும். இந்த மனநிலை மூலம் பல சக்திகள் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.

8. பாப்தாதாவின் விசேஷமான அலங்காரமாக இருக்கிறீர்கள் அல்லவா. நெற்றியின் மணி தான் அனைத்தையும் விட உயர்ந்த அலங்காரமாகும். மாணிக்கம் எப்பொழுதுமே நெற்றியில் ஜொலித்துக் கொண்டிருக்கும். எனவே அந்தமாதிரி நெற்றியின் மாணிக்கம் ஆகி சதா பாபாவின் கீரிடத்தில் ஜொலித்தீர்கள் என்றால் மிக அழகாக இருக்கும். மாணிக்கம் (ஆத்மா) தனது ஜொலிப்பினால் பாபாவிற்கு அலங்காரமாக இருக்கிறார்கள், மேலும் மற்றவர்களுக்கும் கூட வெளிச்சத்தை கொடுக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட நெற்றியின் மணி ஆகி மற்றவர்களையும் கூட அதுபோல ஆக்கக்கூடியவர்களாக இருக்கிறீர்களா – இந்த இலட்சியம் சதா இருக்கிறதா? சதா சுபபாவனையின் மூலம் மற்றவர்களின் பாவனை யையும் கூட மாற்றம் செய்யக்கூடியதாக இருக்கிறது.

9. எப்பொழுதும் பாபாவை பின்பற்றுவதில் உடனடி தானம் மிகப்பெரிய புண்ணியம் என்ற விதியின் மூலம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறீர்கள் அல்லவா. இந்த விதியை சதா ஒவ்வொரு காரியத்திலும் பயன்படுத்துவதினால் எப்பொழுதுமே பாபாவை போன்று ஸ்திதி (மனநிலை) தானாகவே உணரமுடியும். அதனால் ஒவ்வொரு காரியத்திலும் (பாபாவை) பின்பற்றுவதில் ஆரம்பத்திலிருந்தே அனுபவசாலிகளாக இருக்கிறீர்கள். ஆகையால் இப்பொழுதும் இந்த விதிக்கு தகுந்தவாறு (பாபாவிற்கு) சமமாக மிகவும் எளிதாக இருக்கிறது. ஏனெனில் உள்ளுக்குள் இருக்கும் விசேஷத்தன்மைகளை காரியத்தில் பயன்படுத்த வேண்டும். பாபாவை போன்று ஆவதற்கான விசேஷமான அலௌகீக அனுபவங்கள் செய்துக் கொண்டேயிருங்கள், மேலும் மற்றவர்களையும் கூட செய்ய வைத்துக் கொண்டேயிருங்கள். இந்த விசேஷத்தன்மைகள் என்ற ஆசீர்வாதங்கள் தானாகவே கிடைக்கிறது. எனவே இந்த வரதானங்களை சதா காரியத்தில் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.

10. சதா மாற்றம் செய்யும் சக்தியை சரியான முறையில் காரியத்தில் பயன்படுத்தக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களாக இருக்கிறீர்கள் அல்லவா. இந்த மாற்றம் செய்யும் சக்தியினால் அனைவருடைய ஆசீர்வாதங்களுக்கு தகுதியுடையவர் ஆகிவிடுகிறீர்கள். காரிருள் சூழ்ந் திருக்கும் நேரத்தில் யாராவது வெளிச்சத்தை காட்டுகிறார்கள் என்றால் இருளிலிருந்தவர்களின் மனதி லிருந்து ஆசீர்வாதங்கள் வெளிவருகிறதல்லவா. அதுபோன்று யார் சரியான மாற்றம் செய்யும் சக்தியை காரியத்தில் பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு பல ஆத்மாக்களின் மூலம் ஆசீர்வாதங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கும். மேலும் அனைவருடைய ஆசீர் வாதங்களினால் ஆத்மா எளிதாகவே முன்னேற்றிவிடுகிறது. அவ்வாறு, ஆசீர்வாதங்களை பெறக்கூடிய செயல்களை செய்யக் கூடிய ஆத்மாவாக இருக்கிறேனா – என்னவெல்லாம் செயல் புரிகிறேனோ, அது ஆசீர்வாதங்கள் பெறக்கூடியதாக செய்ய வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும். உயர்ந்த செயல்களினால் தான் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. அதனால் அனைவரிடமிருந்து ஆசீர்வாதங்கள் பெறக்கூடிய ஆத்மாவாக இருக்கிறேன் என்று சதா நினை வில் வையுங்கள். இந்தவொரு நினைவு தான் உயர்ந்தவர் களாக ஆவதற்கான சாதனமாக இருக் கிறது. இந்த நினைவு பலருக்கு நன்மை செய்வதற் கான நிமித்தமாக்கி விடுகிறது. எனவே மாற்றத் தின் சக்தி மூலம் அனைவருடைய ஆசீர்வாதங் கள் பெறக்கூடிய ஆத்மாவாக இருக்கிறேன் என்ற நினைவு சதா வைக்க வேண்டும். நல்லது.

குளோபல் (ஹாஸ்பிடல்) – ஆப்ரேஷன் திட்டத்திற்கான மீட்டிங் செய்தியை பாப்தாதாவிற்கு விரிவாக சொல்கிறார்.

பாப்தாதா குஷியாக இருக்கிறார் – இத்தனை பேர் சந்தித்து திட்டங்களை உருவாக்கி இருக்கிறீர் கள், அதை நடைமுறையில் கொண்டு வருகிறீர்கள், மேலும் கொண்டும் வருவீர்கள். பாப்தாதா விற்கு வேறு என்ன வேண்டும். ஆகையால் பாப்தாதாவிற்கு மிகவும் பிடித்திருக்கிறது. மற்றப்படி ஏதாவது கடினமாக இருக்கிறது என்றால் பாப்தாதா எளிதாக்கி விடுகிறார். இந்த புத்திப்படி நடப்பது கூட ஒரு வரதானமாகும். சமநிலையில் இருந்துக் கொண்டு மட்டும் செல்லுங்கள். மேலும் 4 மணி நேரம் செய்யும் கருத்து பரிமாற்றத்திற்கு 1 மணி நேரம் கூட தேவைப்படாது. எப்பொழுது புத்தி சமநிலையில் இருக்கும் பொழுது தீர்மானம் மிக விரைவாக செய்யலாம். ஒன்று போல சிந்தனையும் (கருத்துக்கள்) வெளிப்படும். ஆனால் இதுவும் கூட நல்லது தான், விளையாடு கிறீர்கள், ஏதாவது செய்கிறீர்கள், சிறிது ஏதாவது ஆகிறது ….. இதில் கூட மகிழ்ச்சி ஏற்படுகிறது. திட்டங்கள் உருவாக்குங்கள். பிறகு அதை தெளிவாக்குங்கள். பிஸியாகவும் இருக்கிறீர்கள். சுமையாக மட்டும் அனுபவம் செய்யாதீர்கள். விளையாடுங்கள். நேரம் குறைவாக இருக்கிறது, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு செய்யுங்கள். சமையலறை (பண்டாரா) மூடிவிட முடியாது. இந்த சேவையும் கூட நடைப்பெற்றுக் கொண்டேயிருக்கும். இதுவும் கூட பண்டாரா, அழிவற்றதாக நடந்துக் கொண்டேயிருக்கும். ஒருவேளை தாமதமாகிவிடுகிறது என்றால், மேலும் கூட நன்றாக நடைபெறும். அதனால் தான் தாமதமாகிறது. மற்றபடி முயற்சி செய்துக் கொண்டேயிருக்கிறீர்கள். அலட்சியம் காட்டாதீர்கள். ஆகையால் பாப்தாதா ஒன்றும் சொல்வதில்லை. நல்லது

வரதானம்:-

பல குழந்தைகளின் மனநிலை மிகவும் மாறிக்கொண்டேயிருப்பதை பாப்தாதா வதனத்திலிருந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறார். சில சமயம் ஆச்சிரியம் நிறைந்த மனநிலை, சில சமயம் கேள்விகள் நிறைந்த மனநிலை, சில நேரங்களில் குழப்பமான மனநிலை, சில சமயம் டென்சன் (இறுக்கமான) மனநிலை, சில நேரங்களில் கவனம் என்ற ஊஞ்சல் …. ஆனால் சங்கமயுகம் பலனை அனுபவம் செய்யும் யுகம், கடினமாக உழைப்பதற்கான யுகம் அல்ல, ஆகையால் பாபாவின் குணங்கள் தான் குழந்தைகளின் குணமாகும், பாபாவின் ஸ்டேஜ் (மனநிலை) தான் குழந்தைகளின் ஸ்டேஜ் ஆகும் – இது சங்கமயுகத்தின் பலனை அனுபவம் செய்யும் சொரூபம். எனவே சதா ஒரே இரசனை ஒரே முழுமையான மன நிலையில் இருக்கும் பொழுது பாபாவிற்கு சமமான அதாவது பலனை அனுபவம் செய்யும் சொரூபம் என்று சொல்லப்படுகிறது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top