17 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

17 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

16 September 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! இந்த தேக உணர்விலிருந்து இறந்து விடுங்கள். அதாவது இந்த பழைய பதீத தேகத்தின் மீதுள்ள அன்பைத் துண்டித்து, ஒரு தந்தையுடன் உண்மையான அன்பை இணையுங்கள்.

கேள்வி: -

சங்கமத்தில் குழந்தைகளாகிய உங்களுடைய இயற்கையான அழகு என்ன?

பதில்:-

ஞானத்தின் அணிகலன்களால் எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்டு இருப்பது – இதுவே உங்களுடைய இயற்கையான அழகாகும். யார் ஞானத்தின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுடைய முகம் குஷியில் மலர் போன்று மலர்ந்து இருக்கும். ஒரு வேளை குஷி இல்லையென்றால் அவசியம் ஏதோ தேக அபிமானத்தின் பழக்கம் உள்ளது. அதிலிருந்து தான் எல்லா விகாரங்களும் உருவாகின்றன.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அவையில் ஒளி விளக்கு பிரகாசமாய் எழுந்தது..

ஓம் சாந்தி. இந்த பாடலினுடைய பொருள் எவ்வளவு விசித்திரமானது! அன்பு எதற்காக உள்ளது? (இறப்பதற்காக) யாரிடம் அன்பு உள்ளது? பகவானிடம்! ஏனென்றால், இந்த உலகத்திலிருந்து இறந்து அவரிடம் போக வேண்டும். இறந்து போய் விடுவோம் என்ற எண்ணம் வரும் வகையில் இது போல எப்பொழுதாவது யாரிடமாவது அன்பு ஏற்பட்டுள்ளதா என்ன? பிறகு யாராவது அன்பு வைப்பார்களா என்ன? பாடலின் பொருள் எவ்வளவு அதிசயமானது. ஒளி மீது விட்டில் பூச்சி அன்பு கொண்டு சுற்றி வந்து எரிந்து இறக்கிறது. நீங்களும் தந்தையிடம் வந்து வந்து இந்த சரீரத்தை விட வேண்டும். அதாவது தந்தையை நினைவு செய்து செய்து சரீரத்தை விட வேண்டும். இதுவோ ஒரு பெரிய எதிரி போல ஆகி விட்டது. யாரிடம் நாம் அன்பு வைக்கிறோமோ, அவரிடம் வந்து நாம் இறந்து விடுவோம். எனவே மனிதர்கள் பயப்படுகிறார்கள். பகவானிடம் செல்வதற்காக தானம், புண்ணியம், தீர்த்த யாத்திரை ஆகியவை மேற்கொள்கிறார்கள். சரீரத்தை விடும் பொழுது பகவானை நினைவு செய்யுங்கள் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். பகவான் எவ்வளவு பிரசித்த மானவர் ஆவார். அவர் வரும் பொழுது முழு பழைய உலகத்தை அழித்து விடுகிறார். நாம் இந்த பல்கலைக் கழகத்திற்கு வருவதே பழைய உலகத்திலிருந்து புது உலகத்திற்குச் செல்வதற்காக என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பழைய உலகத்திற்கு பதீத உலகம், நரகம் என்று கூறப்படுகிறது. நான் ஹெவென்லி காட்ஃபாதர் ஆவேன், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று தந்தை புது உலகத்திற்குச் செல்வதற்கான வழியைக் கூறுகிறார். அந்த தந்தையிடமிருந்து உங்களுக்கு பணம், சொத்து, வீடு ஆகியவை கிடைக்கும். பெண் குழந்தை களுக்கு ஆஸ்தி கிடைப்பதில்லை. அவர்களை மற்றொரு வீட்டிற்கு (மணமகன் வீடு) அனுப்பி விடுகிறார்கள். அதாவது அவர்கள் வாரிசாக இருப்ப தில்லை. இதுவோ தந்தை, அனைத்து ஆத்மாக் களின் தந்தை ஆவார். இவரிடம் அனைவருமே வர வேண்டி உள்ளது. இறக்க வேண்டி உள்ளது. ஏதோ ஒரு நேரத்தில் அவசியம் தந்தை வருகிறார். அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். ஏனெனில், புது உலகத்தில் மிகவும் குறைவான மனிதர்கள் இருப்பார்கள். பழைய உலகத்திலோ நிறைய பேர் இருக்கிறார்கள். புது உலகத்தில் மனிதர்களும் குறைவாகவே இருப்பார்கள். எனவே சுகம் அதிகமாக இருக்கும். பழைய உலகத்தில் அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே துக்கமும் அதிகம் உள்ளது. எனவே கூப்பிட்டுக் கொண்டே இருக் கிறார்கள். பாரதத்தின் பிதா என்று கருதப்பட்ட தேசத் தந்தை காந்தியும் ஹே பதீத பாவனரே! வாரும் என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பற்றித் தெரியாமல் இருந்தார். அவ்வளவு தான்! பதீத பாவனர் பரமபிதா பரமாத்மா ஆவார் என்று புரிந்தும் இருக்கிறார்கள். அவரே உலகத்தின் விடுவிப்பவர் ஆவார். இராமர் சீதையையோ முழு உலகம் ஏற்றுக் கொள்ளாது அல்லவா? இது தவறாகும். முழு உலகம் பரமபிதா பரமாத்மாவை லிபரேட்டர் (விடுவிப்பவர்) கைடு (வழிகாட்டி) என்று ஏற்றுக் கொள்கிறார்கள். துக்கங்களிலிருந்து விடுவிக்கிறார். நல்லது. துக்கம் அளிப்பவர் யார்? தந்தையோ துக்கத்தைக் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர் பதீத பாவனர் ஆவார். பாவன உலகமான சுகதாமத்திற்கு அழைத்துச் செல்பவர் ஆவார். நீங்கள் அந்த ஆன்மீக தந்தையின் ஆன்மீக குழந்தைகள் ஆவீர்கள். எப்படி தந்தையோ அப்படியே குழந்தைகள்! லௌகீக தந்தையின் குழந்தைகள் சரீர அடிப்படையில் குழந்தைகள் ஆவார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நாம் ஆத்மா ஆவோம், பரமபிதா பரமாத்மா நமக்கு ஆஸ்தி அளிக்க வந்துள்ளார் என்பதைப் புரிந்திருக்க வேண்டும். நாம் மாணவர்கள் ஆவோம். இதை மறக்கக் கூடாது. சிவபாபா மதுபனில் முரளி (புல்லாங்குழல்) வாசிக்கிறார் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. அந்த மூங்கிலினுடைய புல்லாங்குழலோ இங்கில்லை. கிருஷ்ணர் நடனம் ஆடுவது, புல்லாங் குழல் வாசிப்பது – அது பக்தி மார்க்கத்தினுடையதாகும். நீங்கள் கிருஷ்ணருக் காக முரளியை கூற முடியாது. முரளி சிவபாபா வாசிக்கிறார். உங்களிடம் நல்ல நல்ல பாடல்கள் எழுது பவர்கள் வருவார்கள். பாடல்கள் பெரும்பாலும் ஆண்கள் தான் எழுதுகிறார்கள். நீங்கள் ஒன்றும் பக்தி மார்க்கத்தின் பாடல்களைப் பாட வேண்டியது இல்லை. நீங்கள் ஒரு சிவபாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். அல்ஃப் – தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். சிவனுக்கு பிந்து (புள்ளி) என்று கூறுகிறார்கள். வியாபாரிகள் பூஜ்யம் என்று எழுதும் பொழுது ஷிவ் (சிவன்) என்பார்கள். ஒரு பூஜ்யம் எழுதினால் 10 ஆகி விடும். மீண்டும் பூஜ்யம் எழுதினால் 100. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். எந்த அளவிற்கு சிவனை நினைவு செய்கிறீர்களோ பின் அரை கல்பத்திற்கு மிகவும் செல்வந்தர் ஆகி விடுகிறீர்கள். அங்கு ஏழைகள் இருக்கவே மாட்டார்கள். எல்லோருமே சுகமுடையவர்களாக இருப்பார்கள். துக்கத்தின் பெயரே இருக்காது. தந்தையின் நினைவினால் விகர்மங்கள் விநாசமாகி விடும். நீங்கள் மிகவும் செல்வந்தர் ஆகி விடுவீர்கள். இதற்கு உண்மையான தந்தை மூலமாக உண்மையான சம்பாத்தியம் என்று கூறப்படுகிறது. இது தான் கூட வரும். மனிதர்கள் எல்லோருமே வெறுங்கையுடன் செல்வார்கள். நீங்கள் கை நிரம்பியவர்களாகச் செல்ல வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் தூய்மையாக வேண்டும். தூய்மை இருந்தால் சாந்தி, சுகம் கிடைக்கும் என்று தந்தை புரிய வைத்துள்ளார். ஆத்மாவாகிய நீங்கள் முதலில் தூய்மையாக இருந்தீர்கள். பிறகு தூய்மையற்றவர்களாக ஆகிறீர்கள். சந்நியாசிகளுக்கு கூட (ஸெமி) பாதி தூய்மை என்று கூறுவோம். உங்களுடையது (ஃபுல்) முழு சந்நியாசமாகும். அவர்கள் எவ்வளவு சுகம் பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிறிதளவு சுகம் உள்ளது. பின்னரோ துக்கமே தான். அது எல்லாமே பக்தி மார்க்கமாகும். பக்தி மார்க்கத்தில் அனுமாரின் பூஜை செய்தீர்கள் என்றால், அவரது தரிசனம் ஆகி விடுகிறது. சண்டிகா தேவிக்கு எவ்வளவு மேளா நடக்கிறது. அவரது படமும் இருக்கும். யாரை தியானிக் கிறார்களோ (நினைக்கின்றார்களோ) அவரோ அவசியம் முன்னால் வருவார் தான். ஆனால் அதனால் என்ன கிடைக்கும்? அநேகவிதமான மேளாக்கள் (திருவிழா) நடக்கின்றன. ஏனெனில் வருவாய் கிடைக்கிறதல்லவா? இவை எல்லாம் அவர் களுடைய தொழில் ஆகும். நரனிலிருந்து நாராயணராக ஆக்கும் தொழிலைத் தவிர மற்ற எல்லா தொழில்களும் தூசி தான் என்பார்கள். இந்த தொழிலை யாரோ ஒருவர் தான் செய்கிறார்கள். தந்தை யினுடையவராக ஆகி தேக சகிதம் அனைத்தையும் தந்தைக்குக் கொடுத்து விடுவது. ஏனெனில் நமக்கு புதிய உடல் வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அப்போது தான் நீங்கள் கிருஷ்ணபுரிக்கு போக முடியும் என்று தந்தை கூறுகிறார். ஆத்மா தமோபிரதான நிலை யிலிருந்து சதோபிரதானமாக ஆகும் பொழுது தான். கிருஷ்ணபுரியில் எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்று கூற மாட்டார்கள். இங்கு ஹே லிபரேட்டர்! வாருங்கள் என்று எல்லா மனிதர்களும் முறையிடுகிறார்கள். இந்த பாவ ஆத்மாக்களின் உலகத்திலிருந்து விடுவியுங்கள். இப்பொழுது தந்தை நம்மை தன்னுடன் கூட அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு செல்வது நல்லது தானே! மனிதர்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் அமைதி என்று எதற்குக் கூறப்படுகின்றது என்பது தெரியாது. கர்மம் இன்றியோ யாருமே இருக்க முடியாது. அமைதி சாந்தி தாமத்தில் உள்ளது. பிறகு இந்த உடலை ஆதாரமாக எடுத்து கர்மங்களை செய்ய வேண்டும். சத்யுகத்தில் கர்மங்கள் செய்யும் பொழுதும் சாந்தமாக இருப்பார்கள். அசாந்தியில் மனிதர்களுக்கு துக்கம் ஏற்படுகிறது. எனவே அமைதி எப்படி கிடைக் கும் என்று கூறுகிறார்கள். சாந்திதாமம் நமது வீடாகும் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் சாந்தி சுகம் எல்லாமே இருக்கும். இப்பொழுது அது வேண்டுமா? இல்லை அமைதி மட்டும் வேண்டுமா? இங்கோ துக்கம் நிறைந்திருக்கிறது. எனவே பதீத பாவன தந்தையை இங்கு தான் கூப்பிடுகிறார்கள். பக்தி செய்வதே பகவானை அடைவதற்காக. பக்தி கூட முதலில் கலப்படமற்றதாக ஒரே ஒருவரை வழிபடுவதாக இருக்கும். பிறகு அநேகரை பக்தி செய்தல் ஆகி விடுகிறது. பலரை வணங்கும் பக்தியில் பாருங்கள், என்னென்ன செய்கிறார்கள்? ஏணிப்படியில் பாருங்கள் – எவ்வளவு நன்றாகக் காண்பித்துள்ளார்கள். ஆனால் முதன் முதலில் பகவான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரை அது போல யார் ஆக்கியது? முந்தைய பிறவியில் இவர் யாராக இருந்தார்? புரிய வைப்பதற் காக மிகுந்த யுக்தி வேண்டும். யார் நன்றாக சேவை செய்கிறார்களோ அவர்களுடைய மனமே சாட்சி கூறும். யுனிவர்சிட்டியில் யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ அவர்கள் அவசியம் வேகமாக முன்னேறிச் செல்வார்கள். வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருப்பார் கள். ஒரு சிலர் மந்த புத்தியாகக் கூட இருப்பார்கள். எனது புத்தியின் பூட்டை திறவுங்கள் என்று சிவபாபாவிடம் ஆத்மா கூறுகிறது. புத்தியின் பூட்டை திறப்பதற்காகத் தானே நான் வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். ஆனால் உன்னுடைய கர்மம் அப்பேர்ப்பட்டதாக உள்ளதால் பூட்டு திறப்பதே இல்லை. அதற்கு பாபா என்ன செய்ய முடியும். நிறைய பாவங்கள் செய்திருக்கிறார். இப்பொழுது பாபா அவருக்கு என்ன செய்ய முடியும். நான் குறைவாகப் படிக்கிறேன் என்று ஆசிரியரிடம் கூறினால், ஆசிரியர் என்ன செய்ய முடியும். ஆசிரியரோ கருணை ஒன்றும் காட்ட மாட்டார். வேண்டுமானால் கூடுதலான நேரம் ஒதுக்குவார். அது உங்களுக்கு மறுக்கப்படவில்லை. கண்காட்சி காலியாக இருக்கிறது. உட்கார்ந்து அப்பியாசம் செய்யுங்கள். பக்தி மார்க்கத்திலோ ஒருவர் மாலையை உருட்டுங்கள் என்பார். ஒருவர் இந்த மந்திரத்தை நினைவு செய்யுங்கள் என்பார். இங்கோ தந்தையே தனது அறிமுகத்தை அளிக்கிறார். தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டும். அவரிட மிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. சத்யுகத்தில் பரலோக தந்தையின் ஆஸ்தி கிடைத்து விடுகிறது. பிறகு நினைவு செய்ய வேண்டிய அவசியமே இருப்பதில்லை. 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைத்து விடுகிறது. எனவே தந்தையிடமிருந்து நல்ல முறையில் ஆஸ்தி எடுக்க வேண்டும் அல்லவா? இதிலும் விகாரத்தில் ஒரு பொழுதும் போகாதீர்கள் என்று தந்தை கூறுகிறார். சிறிதளவு கூட விகாரத்தின் ருசி ஏற்பட்டது என்றால், பிறகு விருத்தி ஆகி விடும். சிகரெட் போன்றவைகளை ஒரு முறை ருசி பார்த்து விட்டார்கள் என்றால் சகவாசத் தின் சாயம் உடனே ஏற்பட்டு விடுகிறது. பிறகு அந்த பழக்கத்தை விடுவது கடினமாகி விடுகிறது. சாக்கு போக்கு எவ்வளவு கூறுகிறார்கள். எந்த ஒரு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. சீ – சீ பழக்கங்களை நீக்கி விட வேண்டும். உயிருடனிருந்தே தேக உணர்வை விட்டு விடுங்கள், என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தேவதைகளுக்கு எப்பொழுதும் தூய்மையான படையல் தான் படைக்கப்படுகிறது. எனவே நீங்களும் தூய்மையானவைகளையே உட் கொள்ளுங்கள்.

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மலர் போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு கன்னிகைக்கு கணவன் கிடைத்து விட்டால் (திருமணம் ஆகிவிட்டால்), முகம் மலர்ந்து விடுகிறது அல்லவா? நல்ல நகைகள், துணி மணி அணிந்துக் கொண்டு பிரகாசமாகி விடுகிறாள். இப்பொழுது நீங்கள் ஞானத்தின் அணிகலன் அணிகிறீர்கள். அங்கு சொர்க்கத்தில் இயற்கையான அழகு இருக்கும். கிருஷ்ணரின் பெயரே சுந்தர் (அழகு) என்பதாகும். ராஜா ராணி, இளவரசர் இளவரசி எல்லோருமே அழகாக இருப்பார்கள். அங்கு இயற்கையும் சதோபிரதானமாகி விடுகிறது. இலட்சுமி நாராயணர் போல இயற்கையான அழகை இங்கு யாருமே உருவாக்க முடியாது. அவர்களை யாரும் இந்தக் கண்களால் பார்க்க முடியுமா என்ன? ஆம், சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) ஆகிறது. ஆனால் சாட்சாத்காரத்தினால் யாராவது அப்படியே மிகச் சரியாக சித்திரத்தை அமைக்க முடியுமா என்ன? ஆம், யாராவது ஓவியருக்கு ஒரு வேளை சாட்சாத்காரம் ஆகி அவர் அதே நேரத்தில் வரைந்தார் என்றால், அவ்வாறு ஆகக் கூடும். ஆனால் அது மிகவும் கஷ்டம். எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த போதை இருக்க வேண்டும். இப்பொழுது பாபா நம்மை கூட்டிச் செல்ல வந்துள்ளார். பாபாவிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. நமது 84 பிறவிகள் இப்பொழுது முடிகிறது. இது போன்ற சிந்தனைகள் புத்தியில் இருந்தால் குஷி இருக்கும். விகாரம் சிறிதளவு கூட எண்ணத்தில் வரக் கூடாது. காமம் மகா எதிரி ஆகும் என்று தந்தை கூறுகிறார். திரௌபதி கூட இதற்காக முறையிட்டார் அல்லவா?

நீங்கள் என் ஒருவனிடம் மட்டுமே கேளுங்கள். மேலும் இதே ஸ்ரீமத்தை மற்றவர் களுக்குக் கூறுங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை மகனை வெளிப்படுத்துகிறார். மகன் தந்தையை வெளிப்படுத்துகிறார். எந்த தந்தை? சிவ தந்தை! சிவன் மற்றும் சாலி கிராமத்தின் பாடல் உள்ளது. சிவபாபா என்ன புரிய வைக்கிறாரோ அதைப் பின்பற்றுங்கள். ஃபாலோ ஃபாதர்! தந்தையைப் பின்பற்றுங்கள் – இந்த பாடல் அவருடையது. இனிமையான குழந்தைகளே அவரைப் பின்பற்றி தூய்மை ஆகுங்கள். பின்பற்றி வந்தால் நீங்கள் சொர்க்கத் தின் அதிபதி ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். லௌகீக தந்தையை பின்பற்றுவதால் 63 பிறவிகள் நீங்கள் ஏணிப் படியில் இருந்து கீழே இறங்குகிறீர்கள். இப்பொழுது பரலோக தந்தையைப் பின் பற்றி மேலே ஏற வேண்டும். தந்தையுடன் கூடவே செல்ல வேண்டும். ஒவ்வொரு இரத்தினமும் இலட்ச ரூபாய்கள் மதிப்பு வாய்ந்தது என்று தந்தை கூறுகிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! முதன் முதலில் அனைவருக்கும் இரண்டு தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும் என்று தந்தை தினமும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். லௌகீக தந்தை பதீதமாக ஆவதற்கான ஆஸ்தி கொடுக்கிறார். பரலோக தந்தை பாவனமாக ஆவதற்கான ஆஸ்தியை வழங்குகிறார். எவ்வளவு வித்தியாசம் உள்ளது. பாவனம் ஆகுங்கள் என்று இப்பொழுது பரலோகத் தந்தை கூறுகிறார். விகாரத்தில் செல்பவர்கள் பதீதமானவர்கள் என்று கூறப்படுகிறது. பதீதர்களை பாவனமாக ஆக்குவதற் கான வழியைக் கூறக் கூடிய தொண்டு சபை (மிஷன்) உங்களுடையதாகும். பரலௌகீக தந்தை கூறுகிறார் – பாவனம் ஆகுங்கள். ஏனெனில், இப்பொழுது விநாசம் எதிரிலேயே உள்ளது. எனவே என்ன செய்ய வேண்டும். அவசியம் பரலோகத் தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும் அல்லவா? கண்காட்சியில் இவ்வாறு வாக்குறுதி எழுதுமாறு செய்ய வேண்டும். பரலோக தந்தையைப் பின்பற்றுவீர்களா? பதீதமாக ஆவதை விடுவீர்களா? எழுதுங்கள். தந்தை உத்தரவாதம் வாங்குகிறார். நீங்களும் உத்தரவாதம் பெறலாம். நீங்கள் ஹே பதீத பாவனரே வாருங்கள் என்று கூப்பிடும் வகையில் ஏன் தான் பதீதமாக ஆகிறீர் களோ! எல்லா விˆயங்களுமே தூய்மையைப் பொருத்துள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு நாளுக்கு நாள் குஷி அதிகரிக்க வேண்டும். நமக்கு தந்தை சொர்க்கத்தின் ஆஸ்தியை அளித்துக் கொண்டிருக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஒரு பொழுதும் அசுத்தமான பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. உயிருடனிருந்தே தேக உணர்வை விட வேண்டும். மலர் போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

2. பரலோகத் தந்தையைப் பின்பற்றி பாவனம் ஆக வேண்டும். அவருடைய ஸ்ரீமத் படி நடப்பதற்கான உறுதி எடுக்க வேண்டும் மற்றும் உறுதி எடுக்குமாறு செய்ய வேண்டும்.

வரதானம்:-

யார் சதா தனது உயர்வான உள்ளுணர்வில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும், வாயுமண்டலத்தில் ஏற்ற இறக்கம் ஆக முடியாது. விருத்தியின் மூலம் தான் சூழ்நிலை உருவாகிறது. ஒருவேளை உங்களது விருத்தி சிரேஷ்டமாக இருந்தால், சூழ்நிலை தூய்மையாக ஆகிவிடும். என் சூழ்நிலை இப்படி இருக்கிறது, சூழ்நிலையின் காரணத்தினால் எனது விருத்தி சஞ்லமாகி விட்டது என்று சிலர் வர்ணிக்கின்றனர். ஆக அந்த நேரத்தில் சக்திசாலி ஆத்மாவிற்குப் பதிலாக பலவீன ஆத்மாவாக ஆகிவிடுகிறீர்கள். ஆனால் விரதத்தின் (உறுதிமொழி) விருத்தியின் மூலம் விருத்தியை சிரேஷ்டமாக ஆக்கிக் கொண்டால் சக்திசாலியாக ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top