15 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 14, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

ஹோலி எப்படிக் கொண்டாடுவது மற்றும் சதா காலத்திற்கான

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

மாற்றம் எப்படி நடைபெறும்?

இன்று அனைவரின் பாக்கியவிதாதா தந்தை தம்முடைய புனித அன்னப் பறவைகளுடன் ஞான ரத்தினங்களின் ஹோலி கொண்டாடுவதற்காக வந்துள்ளார். கொண்டாடுவது என்றால் சந்திப்பது. பாபா மிக அன்பான, சகஜயோகி, சதா பாபாவின் காரியத்தில் சகயோகி, சதா தூய உள்ளுணர்வு மூலம், தூய திருஷ்டி மூலம் சிருஷ்டியை மாற்றக்கூடிய புனிதமான குழந்தைகள் அனைவரையும் பார்த்து சதா மகிழ்ச்சியடைகிறார். தூய்மையாகவோ இன்றைய நாளில் புகழ் பாடப்படும் மகாத்மாக்களும் கூட தூய்மை ஆகின்றனர். ஆனால் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் மிக உயர்ந்த புனிதர்களாக ஆகிறீர்கள். அதாவது சங்கல்பத்தில் கூட, கனவில் கூட அபவித்திரதா என்பது உள்ளுணர்வையோ பார்வையையோ பாவன ஸ்திதியிலிருந்து கீழே கொண்டு வர முடியாது. ஒவ்வொரு சங்கல்பம், அதாவது ஸ்மிருதியும் பாவனமாக இருப்பதால் விருத்தி, திருஷ்டி தானாகவே பாவனமாகி விடும். நீங்கள் மட்டும் பாவனமாவதில்லை, ஆனால் இயற்கையையும் பாவனமாக்கி விடுகிறீர்கள். ஆகவே தூய்மையான இயற்கையின் காரணத் தால் வருங்காலத்தின் அநேக ஜென்மங்கள் சரீரமும் கூட பாவனமானதாகக் கிடைக்கும். அத்தகைய புனித அன்னப்பறவைகளாக அல்லது சதா பாவன சங்கல்பதாரி சிரேஷ்ட ஆத்மாக்களாக ஆகி விடுகிறீர்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்தவராகிய தந்தை ஒவ்வொரு விˆயத் திலும் சிரேஷ்ட வாழ்க்கை வாழ்பவராக ஆக்கி விடுகிறார். பவித்திரதாவும் கூட உயர்ந்ததிலும் உயர்ந்த தூய்மையான, சாதாரணமானதல்ல. சாதாரண பவித்திர ஆத்மாக்கள் மகான் பவித்திர ஆத்மாக்களாகிய உங்கள் முன்னால் மனதால் ஏற்றுக் கொள்வதற்கான நமஸ்காரம் செய்வார்கள் – அதாவது உங்களது பவித்திரதா மிக சிரேஷ்டமானது. இன்றைய இல்லறவாசிகள் தங்களை அபவித்தரமாக உணர்ந்திருக்கும் காரணத்தால் எந்தப் பவித்திர ஆத்மாக்களை மகான் எனப் புரிந்து வணங்குகிறார்களோ, அந்த மகான் ஆத்மா எனச் சொல்லிக் கொள்பவர்கள், சிரேஷ்ட பாவன ஆத்மாக்களாகிய உங்கள் முன்னால், உங்களது பவித்திரதா மற்றும் தங்களது பவித்திரதாவுக் கிடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த ஹோலிப் பண்டிகை பாவன ஆத்மாக்களாகிய நீங்கள் பாவனமாவதற்கான விதியின் நினைவுச் சின்னமாகும். ஏனென்றால் நீங்கள் அனைவரும் நம்பர்வாரியாக பாவன ஆத்மாக்கள் பாபாவின் நினைவு என்ற ஈடுபாட்டின் அக்னி மூலமாக சதா காலத்துக்கும் அபவித்திரதாவை எரித்து விடுகிறீர்கள். அதனால் எரிப்பதற்கான ஹோலி கொண்டாடுகின்றனர். பிறகு நிறங்களின் ஹோலி அல்லது மங்களகரமான சந்திப்பைக் கொண்டாடுகின்றனர். எரிப்பது என்றால் பெயர்-அடையாளத்தை முடித்து விடுவது. அது போல் எதையாவது பெயர் அடை யாளத்தை முடிக்க வேண்டுமானால் என்ன செய்கின்றனர்? எரித்து விடுகின்றனர். ஆகவே இராவணனையும் கொன்ற பிறகு எரித்து விடு கின்றனர். இது ஆத்மாக்களாகிய உங்களது நினைவுச் சின்னம். அபவித்திரதாவை எரித்தாயிற்று என்றால் பாவன ஹோலி ஆகி விட்டோம். பாப்தாதா எப்போதும் அதாவது பிராமணர்கள் ஹோலி கொண்டாடுவது என்றால் ஹோலி (பவித்திரமாக) ஆவது. ஆகவே இதைச் சோதித்துப் பாருங்கள் – அபவித்திரதாவை வெறுமனே கொன்றீர்களா, அல்லது எரித்து விட்டீர்களா? செத்துப் போனவர்கள் பிறகும் உயிர்த்தெழு கின்றனர். எங்காவது சுவாசம் மறைவாக இருந்து விடுகிறது. ஆனால் எரிப்பது என்றால் பெயர்-அடையாளத்தை முடித்து விடுவது. எது வரை சென்று சேர்ந்திருக்கிறோம் என்று தன்னைத்தானே சோதித்துப் பார்க்க வேண்டும். கனவிலும் கூட அபவித்திரதாவின் மறைந்துள்ள சுவாசம் மீண்டும் உயிர்த்தெழுந்து விடக் கூடாது. இதைத் தான் சிரேஷ்ட பாவன ஆத்மா எனச் சொல்வது. சங்கல்பத்தினால் கனவும் கூட மாற்றமடைந்து விடுகிறது.

இன்று வதனத்தில் பாப்தாதா அவ்வப்போது குழந்தைகளின் சங்கல்பங்கள் மூலம் அல்லது எழுத்து மூலம் செய்துள்ள உறுதிமொழியைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்திதியில் மகாரதியாக இருக்கலாம், அல்லது சேவையில் மகாரதியாக இருக்கலாம் — இருவரும் அவ்வப் போது மிக நல்ல-நல்ல உறுதிமாழிகளை எடுத்துக் கொண்டுள்ளனர். மகாரதிகளும் இரண்டு வகையாக உள்ளனர். ஒன்று, தங்களின் வரதானம் அல்லது புருˆôர்த் தத்தின் ஆதாரத்தில் மகாரதி மற்றும் இரண்டாவது, ஏதேனும் சேவையின் விசேˆதாவினுடைய ஆதாரத்தில் மகாரதி. இருவருமே மகாரதி என்று தான் சொல்லப் படுகின்றனர். ஆனால் முதலில் சொல்லப் பட்ட ஸ்திதியின் ஆதாரத்தில் மகாரதி ஆனவர்கள் சதா மனதினால் அதிந்திரிய சுகத்தின், திருப்தியின், அனைவருடைய மனதின் அன்பினுடைய பிராப்தி சொரூபத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்பார்கள். மற்றும் இரண்டாவது நம்பர் சேவையின் விசேˆதாவின் ஆதாரத்தைக் கொண்டவர்கள் உடலால், அதாவது வெளியிலிருந்து சேவையின் விசேˆ தாவின் பலன் சொரூபமாக திருப்தியாகக் காணப் படுவார்கள். சேவையின் விசேˆதாவின் காரணத்தால் சேவையின் ஆதாரத்தில் மனதின் திருப்தி உள்ளது. சேவையின் விசேஷதாவின் காரணத்தால் அனைவரின் அன்பும் கிடைக்கும். ஆனால் மனதால் அல்லது இதயத்தால் சதா இருக்காது. சில நேரம் வெளிப்புறமாக, சில நேரம் இதயபூர்வமாக இருக்கும். ஆனால் சேவையின் விசேˆதா மகாரதி ஆக்கி விடுகிறது. எண்ணிக்கையில் மகாரதிகளின் வரிசையில் வந்து விடுகிறார்.

ஆக, இன்று பாப்தாதா மகாரதி மற்றும் புருˆôர்த்தி – இருவரின் உறுதிமொழிகளைப் பார்த்துக் கொண்டி ருந்தார். அவ்வப்போது சமீபத்தில் தான் உறுதிமொழிகள் நிறைய கொடுத் துள்ளனர். ஆக என்ன பார்த்தார்கள்? உறுதிமொழியால் பலனோ கிடைக்கிறது. ஏனென்றால் உறுதியின் முழு கவனம் உள்ளது. அடிக்கடி உறுதிமொழியின் ஸ்மிருதி சக்தியைக் கொடுக்கிறது. இந்தக் காரணத்தால் கொஞ்சம் மாற்றமும் நிகழ்கிறது. ஆனால் விதை உள்ளே மறைந்துள்ளது. அதனால் எப்போது அந்த மாதிரி சமயம் அல்லது பிரச்சினை வருகிறதோ, அப்போது பிரச்சினை அல்லது காரணத்தின் நீர் கலப்பதால் மறைந்திருந்த விதை மீண்டும் இலைகளை வெளிப் படுத்தத் தொடங்குகிறது. சதா காலத்துக்குமாக அழிந்து போவதில்லை. பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் — எரிப்பதற்கான ஹோலியை யார் கொண்டாடியிருக்கிறார்கள்? விதை எப்போது எரிக்கப் படுகிறதோ, எரிந்து விட்ட விதை ஒரு போதும் பலன் கொடுப்பதில்லை. உறுதிமொழியோ அனைவருமே எடுத்துக் கொண்டுள்ளனர் — அதாவது நடந்து முடிந்ததை முடிந்து போனதாக ஆக்கி, இது வரை என்ன நடந்ததோ, தனக்காக நடந்திருந்தாலும் சரி, மற்றவருக்கு என்றாலும் சரி, அனைத்தையும் முடித்து மாற்றி விடுவோம். இது போல் அனைவரும் அவ்வப்போது உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக் கிறீர்கள் இல்லையா? ஆன்மிக உரையாடலில் அனைவரும் உறுதிமொழி எடுக்கின்றனர் இல்லையா? ஒவ்வொருவரின் பதிவேடும் பாப்தாதாவிடம் உள்ளது. மிக நல்ல ரூபத்தில் உறுதிமொழி எடுக் கின்றனர். சிலர் பாடல்-கவிதை மூலமாக, சிலர் சித்திரங்கள் மூலமாக.

பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார், எவ்வளவு மாற்றம் நடைபெற வேண்டுமோ அந்த அளவு மாற்றம் ஏன் நடைபெறுவதில்லை? காரணம் என்ன? ஏன் சதா காலத்திற்குமாக முடிந்து போவதில்லை? சதா காலத்திற்கும் முடிந்து போகாமல் இருப்பதற்கான காரணம் என்ன? அப்போது என்ன பார்த்தார்? தனக்காக அல்லது மற்றவர்களுக்காக சங்கல்பம் செய்கிறீர்கள் – இந்த பலவீனத்தை மீண்டும் வரவிட மாட்டோம். அல்லது மற்றவர்களுக்காக யோசிக்கிறீர்களா – யாராவது ஆத்மாவோடு கணக்கு-வழக்கு முடிகிற காரணத்தால் சங்கல்பம், பேச்சு, கர்மத்தில் சம்ஸ்கார மோதல் உள்ளது, அதை மாற்றுவோம். ஆனால் சமயத்தில் மீண்டும் ஏன் ரிப்பீட் ஆகிறது? அதன் காரணம்? யோசிக்கிறீர்கள், இனிமேற் கொண்டு இந்த ஆத்மாவின் இந்த சம்ஸ்காரத்தை அறிந்த போதிலும் தன்னைப் பாதுகாப்பாக வைத்து அந்த ஆத்மாவுக்கும் கூட சுப பாவனை, சுப விருப்பம் கொடுப்போம். ஆனால் எப்படி மற்றவர் களின் பலவீனங்களைப் பார்ப்பது, கேட்பது அல்லது கிரகிப்பதற்கான பழக்கம் இயற்கை யானதாக மற்றும் நீண்ட காலத்தினுடையதாக ஆகி விட்டுள்ளதோ, இந்தப் பழக்கத்தை வைத்திருக்க மாட்டோம் – இதுவோ மிக நல்லது. ஆனால் அதன் இடத்தில் எதைப் பார்ப்பீர் கள்? எதை அந்த ஆத்மாவிடமிருந்து கிரகித்துக் கொள்வீர்கள்? இதை அடிக்கடி கவனத்தில் வைப்பதில்லை. இதைச் செய்யக் கூடாது என்பதோ நினைவில் உள்ளது. ஆனால் அத்தகைய ஆத்மாக்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்ன யோசிக்க வேண்டும்? எதைப் பார்க்க வேண்டும்? இந்த விˆயங்கள் இயற்கையான கவனத்தில் இருப்பதில்லை. காலியான இடத்தை நல்லபடியாகப் பயன்படுத்தவில்லை என்றால் காலி இடத்தில் குப்பை அல்லது கொசு முதலியவை தாமாகவே உற்பத்தியாகி விடும். ஏனென்றால் வாயு மண்டலத்தில் மண்-தூசு, கொசு முதலியவை இருக்கவே செய்கின்றன. ஆகவே அவை கொஞ்சம்-கொஞ்சமாக மீண்டும் உருவாகி அதிகரித்து விடும். ஏனென்றால் இடம் நிரப்பப் படவில்லை. ஆகவே எப்போ தெல்லாம் ஆத்மாக்களின் தொடர்பில் வருகிறீர்களோ, முதலில் இயற்கையாக மாற்றம் செய்யப் பட்டுள்ள சிரேஷ்ட சங்கல்பங்களின் சொரூபம் ஸ்மிருதியில் வர வேண்டும். ஏனென்றால் ஞானம் நிறைந்தவராகவே இருக்கிறீர்கள். அனைவரின் குணங்கள், காரியங்கள், சம்ஸ்காரங்கள், சேவை, சுபாவ மாற்றத்தின் சுப சம்ஸ்காரம் அல்லது இடம் சதா நிறைந்திருக்குமானால் அசுத்தத்தைத் தானாகவே முடித்து விடும்.

எப்படி இதற்கு முன்பும் கேட்டிருக்கிறீர்கள் — அநேகக் குழந்தைகள் நினைவில் அமரும் போது அல்லது பிராமண வாழ்க்கையில் நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் நினைவின் அப்பியாசம் செய் கிறார்கள் என்றால் நினைவில் சாந்தியின் அனுபவம் செய்கிறார்கள். ஆனால் குஷியின் அனுபவம் செய்வதில்லை. வெறும் சாந்தியின் அனுபவம் சில நேரம் தலையை பாரமாக்கி விடுகிறது அல்லது தூக்கத்தின் பக்கம் கொண்டு சென்று விடுகிறது. சாந்தியின் ஸ்திதியோடு கூடவே குஷியும் இருப்ப தில்லை. ஆக, எங்கே குஷி இல்லையோ, அங்கே ஊக்கம்-உற்சாகம் இருப்பதில்லை. மேலும் யோகத்தில் அமர்ந்தாலும் தனக்குத் தானே திருப்தி இருப்பதில்லை. களைத்துப் போனவராக இருக் கிறார்கள். சதா யோசிக்கும் மனநிலையில் இருக்கிறார்கள், யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். குஷி ஏன் வருவதில்லை? இதற்கும் காரணம் உள்ளது. ஏனென்றால் இதை மட்டும் யோசிக்கிறீர்கள் — நான் ஆத்மா, பிந்துவாக இருக்கிறேன், ஜோதி சொரூபமாக இருக்கிறேன், பாபாவும் இது போலவே இருக்கிறார். ஆனால் நான் எத்தகைய ஆத்மாவாக இருக்கிறேன்? ஆத்மாவாகிய எனது விசேஷத் தன்மை என்ன? எப்படி நான் பத்மாபதம் பாக்கியவான் ஆத்மாவாக இருக்கிறேன்? நான் ஆதியில் (முதலில்) படைக்கப்பட்ட ஆத்மா, நான் பாபாவின் மன சிம்மாசனதாரி ஆத்மா. குஷியைத் தரும் இந்த விசேஷதாக்களை நீங்கள் யோசிப்பதில்லை. வெறுமனே பிந்தியாக இருக்கிறேன், ஜோதியாக இருக்கிறேன், சாந்த சொரூபமாக இருக்கிறேன் என்றால் ஒன்றுமில்லாத நிலைக்குச் சென்று விடுகிறீர்கள். அதனால் தலை பாரமாகி விடுகிறது. அது போலவே தனக்காக அல்லது மற்ற ஆத்மாக் களுக்காக மாற்றத்திற்கான திட சங்கல்பம் செய்கிறீர்கள் என்றால் தனக்காக, மற்ற ஆத்மாக்களுக்காக சுப, சிரேஷ்ட சங்கல்பங்கள் மற்றும் விசேஷதாவின் சொரூபத்தை சதா இமர்ஜ் ரூபத்தில் வைத்திருப் பீர்களானால் மாற்றம் நிகழ்ந்து விடும்.

எப்படி இந்த சங்கல்பம் வருகிறது — அதாவது இவர் இப்படித் தான், இது இந்த மாதிரி தான் நடக்கும், இவர் இப்படித் தான் செய்வார். இதற்கு பதிலாக இப்படி யோசியுங்கள் — இந்த விசேஷத் தன்மையின் படி இவர் விசேஷமானவர். எப்படி பலவீனமானவருக்கு இப்படி மற்றும் அப்படி என்று வருகிறதோ, அது போல் சிரேஷ்டதாவின் விசேஷத் தன்மை யின் இப்படி, அப்படி என்பதை முன்னால் கொண்டு வாருங்கள். ஸ்மிருதியை, சொரூபத்தை, உள்ளுணர்வை, திருஷ்டியை மாற்றத்தில் கொண்டு வாருங்கள். இந்த ரூபத்தில் தன்னையும் பாருங்கள், மற்றும் மற்றவர்களையும் பாருங்கள். இதைத் தான் இடத்தை நிரப்பி விட்டீர்கள், காலியாக விடவில்லை எனச் சொல்வது. இந்த விதியின் மூலம் எரிப்பதற்கான ஹோலி கொண்டாடுங்கள். தனக்காக அல்லது மற்றவர் களுக்காக ஒரு போதும் இது போல் யோசிக் காதீர்கள் – அதாவது, பாருங்கள், நான் சொல்லியிருந்தேன் இல்லையா, இவர் மாறவே மாட்டார் என்று? ஆனால் அந்தச் சமயம் தன்னைத் தான் கேளுங்கள், நான் மாறி இருக்கிறேனா? சுய மாற்றம் தான் மற்றவர்களின் மாற்றத்தையும் முன்னால் கொண்டு வரும். ஒவ்வொருவரும் இதை யோசியுங்கள் – முதலில் நான் மாறுவதற்கான உதாரணமாக ஆவேன். இதைத் தான் ஹோலி எரிப்பது எனச் சொல்வது. எரிக்காமல் கொண்டாட்டம் என்பது கிடையாது. முதலில் எரிப்பது தான் நடை பெறும். ஏனென்றால் எப்போது எரித்து விட்டீர்களோ, அதாவது தூய்மையாகி விட்டீர்களோ, சிரேஷ்ட பவித்திரமாக ஆகி விட்டீர்கள். ஆக, அத்தகைய ஆத்மா பாபாவுடன் அல்லது சர்வ ஆத்மாக்களுடன் மங்களகரமான சந்திப்பை, அதாவது கல்யாண்காரி சிரேஷ்ட சுப சந்திப்பைக் கொண்டாடிக் கொண்டே இருப்பார். புரிந்ததா?

அந்த மாதிரி ஹோலி கொண்டாட வேண்டும் இல்லையா? எங்கே ஊக்கம்-உற்சாகம் உள்ளதோ, அங்கே ஒவ்வொரு கணமும் உத்சவம் (பண்டிகை) இருக்கவே செய்கிறது. ஆகவே குஷியுடன் நன்றாகக் கொண்டாடுங்கள், விளையாடுங்கள் – உண்ணுங்கள், மகிழ்ந்திருங்கள். ஆனால் சதா ஹோலி (புனிதர்) ஆகி சந்திப்பைக் கொண்டாடிக் கொண்டே இருங்கள். நல்லது.

சதா ஒவ்வொரு நொடியும் பாபாவிடமிருந்து வரதானங்களின் வாழ்த்துகளைப் பெறக்கூடிய, சதா ஒவ்வொரு பிராமண ஆத்மா மூலமாகவும் சுப பாவனையின் வாழ்த்துகளைப் பெறக்கூடிய, சதா மிக சிரேஷ்டமான பாவன ஆத்மாக்களுக்கு, சதா சேர்க்கையின் வண்ணங்களால் வண்ணமயமாக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு, சதா பாபாவுடன் சந்திப்பைக் கொண்டாடக் கூடிய ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே!

தனிப்பட்ட சந்திப்பின் சமயத்தில் வரதான ரூபத்தில் சொல்லப்பட்ட மகாவாக்கியங்கள்

1..சதா தன்னை பாபா நினைவு என்ற குடைநிழலில் இருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மா என அனுபவம் செய்கிறீர்களா? குடைநிழல் தான் பாதுகாப்பிற்கான சாதனம். இந்தக் குடைநிழலில் இருந்து சங்கல்பத் தில் கூட காலை வெளியே வைத்து விட்டீர்களானால் என்ன நடக்கும்? இராவணன் தூக்கிச் சென்று விடுவான் மற்றும் சோகவனத்தில் அமர்த்தி விடுவான். ஆக, அங்கேயோ செல்லக் கூடாது. சதா பாபாவின் குடைநிழலில் இருக்கக் கூடிய, பாபாவின் சிநேகி ஆத்மா நான் — இதே அனுபவத்தில் இருங்கள்.

2. சதா தன்னை பாப்தாதாவின் கண்களில் நிறைந்துள்ள ஆத்மா என அனுபவம் செய்கிறீர்களா? கண்களில் நிறைந்துள்ள ஆத்மாவின் சொரூபம் என்னவாக இருக்கும்? கண்களில் என்ன உள்ளது? பிந்தி. பார்ப்பதற்கான முழு சக்தியும் அந்த பிந்தியில் உள்ளது இல்லையா? ஆக, கண்களில் நிறைந்திருப்பவர் என்றால் சதா பிந்தி சொரூபத்தில் நிலைத் திருப்பவர் – அந்த மாதிரி அனுபவம் ஆகிறது இல்லையா? இதைத் தான் கண்ணின் மணி எனச் சொல்வது. ஆக, தன்னை சதா இந்த ஸ்மிருதி மூலம் முன்னேற வைத்துக் கொண்டே இருங்கள். சதா இதே நˆôவில் இருங்கள் – அதாவது நான் பாபாவின் கண்ணின் மணியாகிய ஆத்மா.

வரதானம்:-

கவரக்கூடிய பொருள் அக்கம் பக்கம் உள்ளவர்களை எப்படி தன் பக்கமாகக் கவர்ந் திழுக்கிறது, அனைவரின் கவனம் அங்கே செல்கிறது. அது போல் எப்போது உங்களது உள்ளுணர்வு அலௌகிக மானதாக, ஆன்மிகமானதாக உள்ளதோ, அப்போது உங்கள் பிரபாவம் அநேக ஆத்மாக்கள் மீது தானாகவே படும். அலௌகிக உள்ளுணர்வு என்றால் விலகிய மற்றும் அன்பான தன்மையின் ஸ்திதி தானாகவே அநேக ஆத்மாக்களைக் கவர்ந்திழுக்கும். அத்தகைய அலௌகிக சக்திசாலி ஆத்மாக்கள் மாஸ்டர் ஞான சூரியன் ஆகி தங்களது பிரகாசத்தை நாலாபுறமும் பரவச் செய்வார்கள்.

சுலோகன்:-

சர்வ சக்திகள் உங்கள் கட்டளையை ஏற்று அதன்படி நடந்து கொண்டே இருக்கும்.

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிறு சர்வதேச யோக தினம். பாபாவின் குழந்தைகள் அனைவரும் மாலை மணி 6.30 முதல் 7.30 வரை விசேˆமாக மாஸ்டர் முக்தியளிக்கும் வள்ளல் ஆகி, பழைய தேகம் மற்றும் உலகத்தின் பந்தனங்களில் இருந்து, பழைய சுபாவ-சம்ஸ்காரங்களில் இருந்து விடுபட்டு முக்தி ஜீவன்முக்தியின் வரதானம் கொடுப்பதற்கான சேவை செய்ய வேண்டும்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top