01 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

July 31, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

வரதாதா மூலமாக கிடைத்துள்ள வரதானங்களை அதிகப்படுத்துவதற்கான விதி

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாப்தாதா தன்னுடைய ஆன்மீக சாதகப்பறவை போன்ற குழந்தைகளைப் பார்த்து கொண்டிருக் கின்றார். ஒவ்வொரு குழந்தையும் பாபாவிடமிருந்து கேட்பதற்கும், சந்திப் பதற்கும் மற்றும் அதன் கூடவே பாபாவிற்கு சமமாக ஆவதற்கும் சாதகப்பறவையாக இருக்கின்றார்கள். கேட்பதால் பிறவி பிறவிக்கான தாகம் தனிந்துவிடுகிறது. ஞான அமிர்தம் தாகத்தில் இருக்கும் ஆத்மாக்களை திருப்தி யான ஆத்மாவாக ஆக்கிவிடுகின்றது. ஞானத்தை கேட்டு கேட்டு ஆத்மாக்களும் கூட பாபாவிற்கு சமமாக ஞான சொரூபமாக ஆகிவிடுகின்றனர் மற்றும் ஞான முரளியை கேட்டு கேட்டு தானும் கூட முரளிதரனின் குழந்தையாக ஆகிவிடு கின்றனர் என்றும் கூறலாம். ஆன்மீக சந்திப்பை சந்தித்துக் கொண்டே பாபாவின் அன்பில் மூழ்கி விடுகின்றனர். சந்திப்பை கொண்டாடிக் கொண்டே அன்பில் கலந்தும் (லவ்லின்), மூழ்கிய ஸ்திதியில் இருக்கக்கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர். சந்திப்பை கொண்டாடிக்கொண்டே ஒரு பாபா வேறு யாரும் இல்லை இந்த அனுபவத்தில் மூழ்கிய நிலையில் இருக்கின்றனர், சந்திப்பை கொண்டாடிக்கொண்டே தடையற்றவர்களாக சதா பாபாவின் தொடர்பின் நிறத்தில் செல்லமான குழந்தையாக ஆகிவிடுகின்றனர். இவ்வாறு மூழ்கி இருக்ககூடிய அல்லது அன்பில் லவ்லின் ஆக ஆகிவிடுகின்றனர் என்றால் அவர்களுக்கு என்ன விருப்பம் இருக்கமுடியும்? தந்தைக்கு சமமாக ஆகவேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. பாபாவுடைய ஒவ்வொரு அடி மீதும் அடி எடுத்து வைக்கக்கூடியவர்கள் என்றால் பாபாவிற்கு சமமாக ஆகக்கூடியவர்கள். பாபா எப்பொழுதும் சர்வ சக்திவான் சொரூபத்தில் இருக்கின்றார். அதுபோல குழந்தைகளும் சதா மாஸ்டர் சர்வ சக்திவான் சொரூபத்தில் ஆகிவிடுகின்றனர். பாபாவுடைய சொரூபம் – சதா சக்திசாலியான நிலை, சதா லேசான நிலை இவ்வாறு குழந்தை களும் சமமாக ஆகிவிடுகின்றனர்.

சமமாக ஆவதற்கான விஷேசமான விசயங்களை தெரிந்திருக்கின்றீர்கள் அல்லவா, எந்தெந்த விஷயங்களில் பாப்சமான் ஆக வேண்டும்? ஆகிக்கொண்டிருக்கின்றீர்களா அல்லது ஆகிவிட்டீர்களா? பாபாவுடைய பெயர் எதுவோ அதுதான் குழந்தைகளுடைய பெயரும் ஆகும். விஷ்வ கல்யாணகாரி (உலகிற்கு நன்மை செய்பவர்) உங்கள் அனைவரின் பெயரும் இதுதானே. எது பாபாவுடைய ரூபமோ அதுதான் குழந்தைகளின் ரூபமும் ஆகும். எது பாபாவின் குணங்களோ அதுதான் குழந்தைகளுடைய குணமும்ஆகும். பாபாவின் ஒவ்வொரு குணத்தையும் தாரணை செய்யக்கூடியவர்கள் பாபாவிற்கு சமமாக ஆகிவிடுகின்றனர். பாபாவின் செயல்தான் குழந்தைகளுடைய செயல் ஆகும். அனைத்து விஷயங்களிலும் பாபாவிற்கு சமமாக ஆகவேண்டும். அனைவருடைய லட்சியமும் இதுதான் அல்லவா. முன்னால் இருக்கக்கூடியவர்கள் அல்ல ஆனால் சமமாக ஆகக்கூடியவர்கள் இவர்களைத் தான் ஃபாலோ ஃபாதர்(பாபாவை பின்பற்றக்கூடியவர்கள்) என்று அழைக்கப் படுகின்றார்கள். அதனால் தன்னை சோதனை செய்யுங்கள் – அனைத்து விஷயங்களிலும் எதுவரை பாபாவுக்கு சமமாக ஆகியிருக்கின்றேன். சமமாக ஆவதற்கான வரதானத்தை பாபா ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்கு கொடுத்து விட்டார். முதல் வரதானம் என்னவென்றால் அனைத்து சக்தி களிலும் நிறைந்தவர் ஆகுங்கள். லௌகீக வாழ்க்கையில் தந்தை அல்லது குருமார்கள் ஆசிர்வாதம் கொடுப்பர் செல்வந்தர் ஆகுங்கள், புத்திரவான் ஆகுங்கள், நீண்ட ஆயுள் உடையோர் ஆகுங்கள் மற்றும் சுகமாக இருங்கள் என்று ஆசிர்வதிப்பர். பாப்தாதா என்ன வரதானங்கள் கொடுக்கின்றார்? சதா ஞானசெல்வம் மற்றும் சக்திகளுடைய செல்வத்தில் நிறைந்தவர் ஆகுங்கள். இதுதான் பிராமண வாழ்க்கையின் பொக்கிஷம் ஆகும்.

பிராமண பிறவி எப்பொழுது எடுத்தீர்களோ அப்பொழுதில் இருந்தே சங்கமயுகத்தில் ஸ்தாபனையின் காரியத்தில் கடைசி வரை வாழவேண்டும் அதாவது நீண்ட ஆயுள் உடையவராக ஆகுங்கள். ஒருவேளை இடையில் பிராமண வாழ்க்கையில் இருந்து வெளியேறி பழைய சன்ஸ்காரங்கள் அல்லது பழைய உலகத்திற்கு சென்று விடுகின்றனர் என்றால் பிறவி எடுக்கின்றனர் ஆனால் குறைந்த ஆயுளை உடையவர்கள் என்று கூறப்படுகின்றனர். ஏனென்றால் பிராமண வாழ்க்கையில் இருந்து இறந்துவிடுகின்றனர். சிலர் இப்படி கூட இருக்கின்றனர் அதாவது கோமாவில் சென்றுவிடுகின்றனர், இருந்தாலும் இல்லாதது போல் இருக்கின்றனர் மேலும் அவ்வப்பொழுது எழுந்துவிடுகின்றனர் ஆனால் அவர்கள் வாழ்வது கூட மரணத்திற்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் நீண்ட ஆயுள் உடையவர் ஆகுங்கள் என்றால் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பிராமண வாழ்க்கை அல்லது உயர்வான தெய்வீக வாழ்க்கையில் அனைத்து பிராப்திகளுடன் வாழ்வது ஆகும். நீண்ட ஆயுளின் கூடவே நோயற்றவர்களாக ஆகுங்கள் என்ற வரதானமும் அவசியமானது ஆகும். ஒருவேளை ஆயுள் அதிகமாக இருக்கலாம் ஆனால் மாயையின் வியாதி பலவீனமாக ஆக்கிவிடுகின்றது என்றால் அவர்கள் உயிரோடு இருந்தாலும் கூட வாழவில்லை. எனவே நீண்ட ஆயுள் உடையவர் ஆகுங்கள் என்பதன் கூடவே சதா ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதாவது தடையற்றவராக இருக்க வேண்டும். அடிக்கடி கவலை மற்றும் மனமுடைந்து போகுதல் என்ற ஸ்திதியின் படுக்கையில் சென்று ஓய்வெடுக்காதீர்கள். யாராவது நோய்வாய் படுகின்றார்கள் என்றால் படுக்கையில் சென்று ஓய்வெடுக்கின்றார்கள் அல்லவா. சின்ன சின்ன தொந்தரவுகளை நடக்கும் போதும், சுற்றும் போதும் அழித்து விடுகின்றீர்கள், ஆனால் பெரிய பிரச்சினை வரும் பொழுது தொந்தரவிற்கு உட்படுகின்றீர்கள் மனமுடைந்து போகின்றீர்கள் என்றால் அப்போது மனதினுடைய நிலை என்னவாக இருக்கும்? சரீரம் படுத்த படுக்கை ஆகிவிட்டால் மனதில் எந்த விருப்பமும் இருக்காது, எழுந்திருக்க வேண்டும், நடக்க வேண்டும், சாப்பிட வேண்டும், குடிக்க வேண்டும் என்று மனதில் எந்த ஒரு விருப்பமும் ஏற்படாது. அதுபோல இங்கேயும் யோகாவில் அமர்கின்றனர் என்றாலும் கூட மனம் ஈடுபடுவது இல்லை, ஞானம் கேட்பார்கள் ஆனால் உள்ளப்பூர்வமாக கேட்கமாட்டார் கள். சேவையும் மனதார செய்யமாட்டார்கள் மற்றவரின் பார்வைக்காக, பயத்தினால் அல்லது உலகத்தினருக்காக செய்வார்கள். இதை சதா ஆரோக்கியமான வாழ்க்கை என்று கூறமுடியாது. எனவே நீண்ட ஆயுள் உடையவர் என்றால் நோயற்றவர் என்று கூறமுடியாது.

புத்திவான் ஆகுங்கள் அல்லது குழந்தையுடையவர் ஆகுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருக் கின்றார்களா? இரண்டு, நான்கு குழந்தைகளை பெற்றெடுக்கவில்லையே? புத்திரவான் பவ என்ற வரதானம் கிடைத்துள்ளது அல்லவா! இரண்டு, நான்கு குழந்தைகளுக்காக இந்த வரதானம் கிடைக்கவில்லை ஆனால் பாபாவிற்கு சமமாக மாஸ்டர் படைப்பவர் என்ற மேடையில் இருக்கின்றீகள் என்றால் இவர்கள் அனைவரும் தன்னுடைய படைப்பாக தோன்றும் எல்லையற்ற மாஸ்டர் படைப்பவராக ஆவது, இது தான் எல்லையற்ற குழந்தைகளை பெறுவதாகும். எல்லைக்குட் பட்டவரா அல்ல, இரண்டு, நான்கு மாணவர்களை நான் உருவாக்கினேன் இவர்கள் என்னுடையவர் கள், என்பதல்ல. மாஸ்டர் படைப்பவரின் மேடை எல்லைக்கப்பாற்பட்ட மேடை ஆகும். எந்தவொரு ஆத்மாவையும் மற்றும் இயற்கையின் தத்துவங்களையும் கூட தன்னுடைய படைப்பாக புரிந்து கொண்டு விஷ்வ கல்யாணகாரி என்ற ஸ்திதியிலிருந்து ஒவ்வொருவர் மீதும் நன்மைக்கான சுபபாவனை மற்றும் சுபவிருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும். படைப்பிற்கு படைப்பின் மீது இந்தவொரு பாவனை இருக் கின்றது. எல்லையற்ற மாஸ்டர் படைப்பவராக ஆகிவிடுகின்றீர்கள் என்றால் எந்தவொரு எல்லைக்குட்பட்ட கவர்ச்சியும் கவர்ந்திழ்ழுக்க முடியாது. சதா தங்களை எங்கு நிற்பது போல பார்க்கின்றீர்கள்? மரத்தின் படைப்பவர் விதை, மரம் கடைசி நிலைக்கு வரும் போது அந்த விதை மேலே வந்து விடுகின்றது அல்லவா! அதுபோல எல்லையற்ற மாஸ்டர் படைப்பவர் சதா தன்னை கல்பமரத்தின் மீது நின்றிருப்பது போல அனுபவம் செய்வார்கள், பாபா கூடவே மரத்தின் மீது மாஸ்டர் விதை ரூபமாக ஆகி சக்திகளை, குணங்களை, சுபபாவனை, சுபவிருப் பங்களை அன்பை சகயோகத்தின் ஒளிக்கதிர்களை பரப்புவார்கள். சூரியன் உயர்வான இடத்தில் இருப்பதால் முழு உலகத்திற்கும் தானாகவே ஒளிக்கதிர்களை பரப்புகின்றது அல்லவா! அதுபோல மாஸ்டர் படைப்பவர் அல்லது மாஸ்டர் விதை ரூபமாகி முழு மரத்திற்கும் ஒளியை அல்லது நீரை கொடுக்க முடியும் தானே! எனவே எத்தனை குழந்தைகள் இருக்கின்றார்கள்? முழு உலகமும் உங்களுடைய படைப்பாக ஆகிவிட்டது அல்லவா! அதனால் மாஸ்டர் படைப்பவர் ஆகுங்கள். இதை தான் புத்ரவான் ஆகுங்கள் என்று கூறப்படுகின்றது. உங்களுக்கு எத்தனை வரதானங்கள் இருக்கின்றது. இதை தான் பாபாவிற்கு சமமாக ஆகுவது என்று கூறப்படுகிறது. பிறந்த உடனேயே இந்த அனைத்து வரதானங்களையும் ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் பாபா கொடுத்து விடுகின்றார். வரதானம் கிடைத்து விட்டது தானே அல்லது இப்போது கிடைக்க வேண்டுமா?

எதாவதொரு வரதானம் யாருக்காவது கிடைக்கின்றது என்றால் வரதானத்தின் கூடவே வரதானங் களை காரியத்தில் பயன்படுத்துவதற்கான விதியும் சொல்லப்படுகின்றது. ஒருவேளை அவர்கள் விதியை பயன்படுத்த வில்லை என்றால் வரதானத்தின் லாபத்தை எடுக்க முடியாது. அதனால் வரதானம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஆனால் ஒவ்வொருவரும் வரதானத்தை விதியின் மூலம் விருத்தியை அடைய முடியும். விருத்தியை எப்படி அடைய முடியும், அதற்கான அனைத்தை யும் விட சகஜமான மற்றும் உயர்வான விதி இது தான் – சமயத்தின் அடிப்படியில் வரதானம் நினைவில் வரவேண்டும் மற்றும் நினைவில் கொண்டு வருவதால் சக்திசாலியாக ஆகிவிடுவீர்கள் மற்றும் வெற்றி சொரூபமாக ஆகி விடுவீர்கள். சமயத்தின் அடிப்படையில் எந்தளவு காரியத்தில் பயன்படுத்துவீர்களோ அந்தளவு வரதானம் விருத்தி அடைந்து கொண்டே இருக்கும். அதாவது சதா வரதானங்களின் பலனை அனுபவம் செய்துக் கொண்டே யிருப்பீர்கள். இவ்வளவு உயர்வான சக்திசாலியான வரதானம் கிடைத்துள்ளது – தனக்காக காரியத்தில் பயன்படுத்தி பலனை அடைய முடியும் ஆனால் அதுமட்டும் அல்லாமல் மற்ற ஆத்மாக்களுக்கும் கூட வரதாதா பாபாவிடமிருந்து வரதானங்களை பிராப்தி செய்வதற்காக தகுதியானவர்களாக மாற்ற முடியும். இந்த சங்கமயுகத்தின் வரதானம் 21 பிறவிகள் விதவிதமான ரூபத்தில் கூடவே இருக்கும். இந்த சங்கமயுகத்தின் ரூபம் தனிப்பட்டது மற்றும் 21 பிறவிகள் இந்தவொரு வரதானம் நிறைந்த வாழ்க்கையின் கணக்குப்படி நடந்துக் கொண்டேயிருக்கும். ஆனால் வரதாதா மற்றும் வரதானங்கள் கிடைக்கக்கூடிய சமயம் இது ஆகும். அதனால் சோதனை செய்யுங்கள் அனைத்து வரதானங்களையும் காரியத்தில் பயன்படுத்தி சகஜமாக முன்னேறிக் கொண்டு இருக்கின்றீர்களா?

வரதானத்தின் விஷேசத்தன்மை இதுதான் அதாவது வரதானிகள் ஒருபோதும் முயற்சி செய்ய வேண்டி யிருக்காது. பக்த ஆத்மாக்கள் எப்போது முயற்சி செய்து களைப்படைந்து விடுகின்றார்களோ அப்போது பாபாவிட மிருந்து ஆசிர்வாதங்களை கேட்கின்றனர். உங்களிடம் கூட உலகத்தினர் வருகின்றனர், யோகா செய்வதற்காக முயற்சி செய்ய விரும்பவில்லை என்றால் அப்போது எந்தவிதத்தில் பேசுகின்றார்கள்? எங்களுக்கு ஆசிர்வாதம் மட்டும் கொடுங்கள், தலை மீது கை வையுங்கள் என்று கூறுகின்றனர், பிராமண குழந்தைகள் உங்கள் மீது வரதாதா பாபாவின் கை சதா உள்ளது. உயர்வான வழிதான் கை ஆகும். ஸ்துல மான கைகளை 24மணி நேரமும் வைக்க முடியாது அல்லவா பாபாவின் உயர்ந்த வழி என்ற வரதானத்தின் கை எப்போதும் குழந்தைகளின் மீது உள்ளது. அமிர்தவேளையில் இருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு சுவாசத்திலும் ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு செயலிலும் உயர்வான வழி என்ற கை உள்ளது. இந்த வரதானத்தை விதிப்படி செயல் படுத்துங்கள் அப்போது ஒருபோதும் முயற்சி செய்யவேண்டியிருக்காது.

தேவதைகளுக்கான மகிமை – ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலையில் உள்ளவர்கள் இதுதான் ஃபரிஸ்தா வாழ்க்கையின் விஷேசத்தன்மை ஆகும். தேவதைகள் வாழ்க்கையில் ஆசைகளின் விசயமே இல்லை பிராமண வாழ்க்கையில் இருந்து ஃபரிஸ்தா வாழ்க்கையில் மாறிவிட்டனர் என்றால் கர்மாதீத் நிலையை அடைந்து விட்டனர் எந்த ஒரு சுத்தமான கர்மம் அல்லது வீனான கர்மம் அல்லது முடிந்து போன கர்மம், எதாவது ஒரு கர்மத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டு செய்வது – இதை கர்மாதீத் நிலை என்று கூறமுடியாது. ஒன்று கர்மத்தின் சம்பந்தம், இன்னொன்று பந்தனம் எல்லைக்குட்பட்ட ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலை இவ்வாறு மகிமை பாடப்பட்டுள்ளது. அதுபோல ஃபரிஸ்தா வாழ்க்கை அல்லது பிராமண வாழ்க்கை என்றால் கஷ்டம் என்ற வார்த்தையை அறியாத நிலை, சுமையை அறியாத நிலை, அவை எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில் இருப்பது ஆகும். அதனால் வரதானி ஆத்மா என்றால் கஷ்டம் என்ற வார்த்தையை அறியாத நிலையை அனுபவம் செய்ய கூடியவர்கள். இவர்கள் தான் வரதானி ஆத்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதனால் பாபாவிற்கு சமமாக ஆகுவது என்றால் சதா பாப்தாதாவிடம் இருந்து கிடைத்துள்ள வரதானங்களினால் வளர்வது, சதா கவலையற்ற நிலை, நிச்சயிக்கப்பட்ட வெற்றியை அனுபவம் செய்வதாகும்.

நிறைய குழந்தைகள் புருஷார்தத்தை மிக நன்றாகவே செய்கின்றனர். ஆனால் புருஷார்தத்தில் சுமை அனுபவம் ஆகுவது – இது எதார்த்தமான புருஷாத்தம் இல்லை. அட்டென்ஷன் (கவனம்) வைப்பது பிராமண வாழ்க்கையின் விதி ஆகும். ஆனால் அட்டென்ஷன், டென்ஷன் ஆக மாறிவிடுகிறது. இயற்கையான அட்டென்ஷன் இருப்பதில்லை. இதை எதார்த்தமான அட்டென்ஷன் என்று கூற முடியாது. வாழ்க்கையில் எப்படி ஸ்துலமான ஞானம் இருக்கின்றது அல்லவா அதாவது இந்த பொருள் நன்றாக உள்ளது, இந்த விஷயம் பேச வேண்டும், இதை செய்யக்கூடாது, இதை ஞானத்தின் ஆதாரத்தில் ஞானம் நிறைந்தவர்களாக ஆகின்றனர். அவர்களுடைய அடையாளம் என்னவென்றால் அவர்களிடம் இயற்கையான அட்டென்ஷன் இருக்கும் இதை சாப்பிடலாம், இதை சாப்பிடக் கூடாது, இதை செய்யவேண்டும், இதை செய்யக்கூடாது ஒவ்வொரு அடியிலும் டென்ஷன் இருக்காது, அதாவது இதை செய்யலாமா அல்லது செய்யக்கூடாதா, இதை சாப்பிடலாமா அல்லது வேண்டாமா, அப்படி நடக்கலாமா அல்லது நடக்கக்கூடாதா? அவர்கள் இயற்கை யான ஞானத்தின் சக்தியால் கவனமாக இருப்பார்கள். அதுபோல எதார்த்தமான புருஷார்த்தின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு செயலிலும் அட்டென்ஷன் இருக்கின்றது ஏனென்றால் ஞானத்தின் ஒளி மற்றும் சக்தி தானாகவே எதார்த்தமான ரூபத்தில் எதார்த்தமான விதத்தில் நடக்கின்றது. அதனால் தாராளமாக புருஷார்த்தம் செய்யுங்கள், அட்டென்ஷன் கண்டிப்பாக வையுங்கள் ஆனால் டென்ஷன் என்ற ரூபத்தில் அல்ல. டென்ஷனில் வந்துவிடுகின்றீர்கள் என்றால் அதிக வேலை செய்யவேண்டும் அல்லது முதல் எண்ணில் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்கள் ஆனால் டென்ஷன் இருப்பதால் எவ்வளவு நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்தளவு செய்யவிடாது, என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அவ்வாறு ஆக விடாது மற்றும் டென்ஷன் டென்ஷனைத்தான் உருவாக்கும். ஏனென்றால் என்ன விரும்புகின்றீர் களோ அது நடக்கவில்லை என்றால் இன்னும் டென்ஷன் அதிகமாகின்றது. எனவே புருஷார்த்தம் அனைவரும் செய்கின்றீர்கள் ஆனால் சிலர் அதிகமாக புருஷார்தத்தை சுமையாக்கி விடுகின்றனர் மற்றும் சிலர் முற்றிலும் கவனக்குறைவாக இருக்கின்றனர் – எது நடக்க வேண்டுமோ அது நடந்து விடும், பார்க்கலாம், யார் பார்க்கின்றார், யார் கேட்கின்றார் அதனால் அதுவும் நல்லது கிடையாது இதுவும் நல்லது கிடையாது அதனால் பேலன்ஸ் மூலமாக பாபாவின் பிளசிங்கை(வரதானம்) அனுபவம் செய்யுங்கள் சதா பாபாவின் கை என் மீது உள்ளது இந்த அனுபவத்தை சதா நினைவில் வையுங்கள். பக்த ஆத்மாக்கள் ஸ்தூலமான சித்திரத்தை முன்னால் வைக்கின்றனர் தலைமீது வரதானங்களின் கை உள்ளது என்ற அனுபவம் செய்கின்றனர் அதனால் நீங்களும் கூட நடந்தாலும் சுற்றினாலும் இந்த அனுபவத்தின் சித்திரத்தை சதா நினைவில் வையுங்கள். புரிந்ததா? நிறைய புருஷார்த்தம் செய்துள்ளீர்கள், இப்போது வரதானங்களினால் வளர்ந்து, பறந்து செல்லுங்கள். பாபாவை ஞான வள்ளலாகவும் விதாதாவாகவும்(விதிகளை வழங்குபவர்) அனுபவம் செய்தீர்கள், இப்போது வரதானங்களை அனுபவம் செய்யுங்கள். நல்லது

சதா ஒவ்வொரு அடியிலும் பாபாவை பின்பற்றக்கூடிய, சதா தன்னை வரதாதா பாபாவின் வரதானி உயர்வான ஆத்மா என்று அனுபவம் செய்யக்கூடிய, சதா ஒவ்வொரு அடியையும் சகஜமாக கடந்து செல்லக்கூடிய, சதா அனைத்து வரதானங்களையும் காரியத்தில் பயன்படுத்தக்கூடிய, பாப்சமான் ஆகக்கூடிய உயர்வான ஆத்மாக் களுக்கு பாப்தாதாவின் வரதாதாவின் ரூபத்தில் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

முக்கியமான மகாரதி சகோதரர்களிடம் சந்திப்பு:- பிறந்ததிலிருந்து எத்தனை வரதானங்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கென்று வரதானம் கிடைத்துள்ளது. பிறவியே வரதானங்களினால் ஏற்படுகிறது. இல்லையென்றால், இன்று இந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்க முடியாது. வரதானங்களினால் பிறவி எடுத்துள்ளீர்கள். அதனால் முன்னேறி இருக்கின்றீர்கள். பாண்டவர்களின் மகிமை சாதாரணமானது அல்ல, ஒவ்வொருவரின் விஷேசத் தன்மையை வர்ணனை செய்தால் எவ்வளவு இருக்கும். இங்கு எந்தவொரு பாகவதம் உருவாக்கப் பட்டுள்ளதோ அதுபோல ஆகிவிடவேண்டும். பாபாவின் பார்வையில் ஒவ்வொருவரின் விஷேசத் தன்மை இருக்கின்றது. மற்ற எதை பார்த்தாலும் பார்ப்பதில்லை அறிந்திருந்தாலும் அறிந்திருக்க வில்லை. அதனால் விஷேசத்தன்மை சதா முன்னேற்றிக்கொண்டே இருக்கின்றது மற்றும் முன்னேற்றிக்கொண்டே இருக்கும். யார் பிறந்ததிலிருந்தே வரதானி ஆத்மாக்களாக இருக்கின்றார் களோ, அவர்கள் ஒருபோதும் பின்தங்கி இருக்கமுடியாது. சதா பறக்கக் கூடிய வரதானி ஆத்மாக்கள் தான் அல்லவா. வரதாதா பாபா வின் வரதானம் முன்னேற்றிக் கொண்டிருக்கின்றது. பாண்டவர்கள் குப்தமாக இருக்கின்றனர் ஆனால் பாப்தாதாவின் மனதில் சதா பிரத்யட்சமாக இருக்கின்றனர் பாண்டவர்கள் தான் நல்ல நல்ல திட்டங்களை உருவாக்குகின்றனர். சக்திகள் வேட்டையாடுகின்றனர் ஆனால் அதிசயம் அழைத்து வருபவர்களுடையது தான் ஆகும். அழைத்து வருபவர்கள் வரவில்லை என்றால் யாரை வேட்டையாடுவர்? அதனால் பாண்டவர்களுக்கு விஷேசமாக தனக்கென்று வரதானம் உள்ளது. நினைவு மற்றும் சேவையின் பலம் விஷேசமாக கிடைத்துள்ளது. நினைவின் பலமும் விஷேசமாக கிடைத்துள்ளது, சேவையின் பலமும் விஷேசமாக கிடைக் கின்றது ஏன்? அதற்கும் காரணம் உண்டு. ஏனென்றால் தேவையான நேரத்தில் எந்தளவு காரியத்தில் வருகின்றார் களோ அதற்கான விஷேசமான வரதானம் கிடைக்கின்றது. ஆரம்பத்தில் ஸ்தாபனை காரியத்தில் பாண்டவர்கள் நீங்கள் மறைந்திருந்தீர்கள் வெளிப்படவில்லை. சக்திகள் உதாரணமாக ஆகினர் மற்றும் அவர்களை உதாரணமாக பார்த்து மற்றவர்கள் முன்னேறினார்கள். எனவே எந்தளவிற்கு யார் தேவையான நேரத்தில் சகயோகியாக ஆகின்றார்களோ, வாழ்க்கையில் அல்லது சேவையில், அவர்களுக்கு நாடகப்படி விஷேசமான பலம் கிடைக் கின்றது. தன்னுடைய புருஷார்த்தமும் உள்ளது ஆனால் எக்ஸ்ட்ரா (அதிக) பலம் கிடைக்கின்றது. நல்லது

சேவை செய்வதால் அனைத்து ஆத்மாக்களும் குஷி அடைகின்றனர் அதற்கு கூட அதிக பலம் கிடைக் கின்றது. யார் அனுபவி ஆத்மாக்களாக இருக்கின்றார்களோ அவர் களுடைய சேவை தேவைப் படுகின்றது ஏனென்றால் சாகாரத்தில் பாலனையை எடுத்துள்ளனர். அவர்களை பார்க்கும் பொழுது சதா பாபாவின் நினைவு வருகின்றது. எப்பொழுதாவது நீங்கள் (தாதிகள்) எங்கேயாவது செல்கின்றீர் கள் என்றால் விஷேசமாக என்ன கேட்கின்றார்கள்? சரித்திரத்தை கூறுங்கள், பாபாவின் ஏதாவதொரு விசயத்தை கூறுங்கள். அதனால் விஷேசத்தன்மை உள்ளது அல்லவா. எனவே சேவையில் விஷேசத்தன்மையின் வரதானம் கிடைத்துள்ளது. நீங்கள் மேடை மீது நின்றுகொண்டு சொற்பொழிவு செய்யாமல் இருக்கலாம் ஆனால் இதுதான் அனைத்தையும் விட பெரிய சொற்பொழிவு ஆகும். சரித்திரத்தை கூறி சரித்திரவானாக ஆகக்கூடிய பிரேரணை கொடுப்பது, இது தான் அனைத்தையும் விட மிகப்பெரிய சேவையாகும். அதனால் சேவைக்கு செல்ல வேண்டும் மற்றும் சேவைக்கு நிமித்தமாகவும் ஆக வேண்டும். நல்லது.

வரதானம்:-

பற்றிலிருந்து வெற்றியடைவதற்காக தன்னுடைய நினைவு சொரூபத்தை பரிவர்த்தனை செய்யுங் கள். நான் குடும்பஸ்தர், என்னுடைய வீடு, என்னுடைய சம்பந்தம் என்ற நினைவு இருக்கும் போது தான் பற்றுதல் ஏற்படுகின்றது. இப்போது இந்த எல்லைக்குட்பட்ட பொறுப்பை எல்லையற்ற பொறுப் பாக பரிவர்த்தனை செய்யுங்கள். எல்லையற்ற பொறுப்பை நிர்வாகிக்கும் போது எல்லைக்குட் பட்டவைகள் தானாகவே முடிந்து விடும். ஆனால் எல்லை யற்ற பொறுப்பை மறந்து எல்லைக்குட் பட்ட பொறுப்பை நிர்வகிக்கின்றீர்கள் என்றால் அந்த கடமை, பற்றில் கலந்துவிடுகின்றது. அதனால் தன்னுடைய நினைவு சொரூபத்தை மாற்றம் செய்து பற்றிலிருந்து விடுபட்டவராக ஆகுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top