20 June 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

20 june 2021 Read and Listen today’s Gyan Murli in Tamil 

June 19, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இன்று அன்புக் கடல் பாப்தாதா தங்களுடைய சினேகி (அன்பான) குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றார்கள். நாம் அனைவரும் தந்தைக்கு சமமாக ஆக வேண்டும், அன்பில் மூழ்க வேண்டும் என்ற இந்த ஒரே ஈடுபாடு, சிரேஷ்ட சங்கல்பம் ஒவ்வொரு சினேகி ஆத்மாவிற்கும் உள்ளது. அன்பில் மூழ்குவது என்றால் தந்தைக்கு சமமாக ஆவது என்பதாகும். நாம் பாப்தாதா மூலமாக அடைந்துள்ள அன்பு, சக்திசாலி பாலனை மற்றும் அளவிட முடியாத, அழிவற்ற பொக்கிˆங்களுக்கான கைமாறு (ரிட்டர்ன்) அவசியம் செய்ய வேண்டும் என்ற இந்த உறுதியான எண்ணம் அனைவரது உள்ளத்தில் உள்ளது. கைமாறாக என்ன கொடுப்பீர்கள்? உள்ளத்தின் அன்பைத் தவிர உங்களிடம் வேறு என்ன உள்ளது? என்னவெல்லாம் உள்ளனவோ, அவை தந்தையால் கொடுக்கப்பட்டவை ஆகும். அவற்றை என்ன கொடுப்பீர்கள்! தந்தைக்கு சமமாக ஆகவேண்டும் - இதுவே கைமாறு ஆகும். மேலும், இதை அனைவரும் செய்ய முடியும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

தற்சமயம் அனைவரது உள்ளத்திலும் விசேˆமாக தந்தை பிரம்மாவின் நினைவு அதிகமாக வருகிறது என்பதை பாப்தாதா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சரீரத்தினுடைய நினைவு இல்லை, ஆனால், சரித்திரங்களுடைய (செயல்கள்) விசேˆத் தன்மைகளுடைய நினைவு உள்ளது. ஏனெனில், அலௌகீக பிராமண வாழ்க்கையானது ஞான சொரூப வாழ்க்கை ஆகும். ஞான சொரூபமாக இருக்கும் காரணத்தினால் தேகத்தினுடைய நினைவு கூட துக்கத்தின் அலையைக் கொண்டு வராது. அஞ்ஞானி வாழ்க்கையில் எவரையாவது நினைவு செய்தால் தேகம் முன்னால் வரும், தேகத்தின் சம்பந்தமாக இருக்கும் காரணத்தினால் துக்கத்தின் உணர்வு ஏற்படும். ஆனால், பிராமண குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் நினைவு வந்ததும், நாமும் தந்தைக்கு சமமாக ஆகியே தீரவேண்டும் என்று சக்தி வந்துவிடுகிறது. அலௌகீக தந்தையின் நினைவு சமர்த்தி அதாவது சக்தியைக் கொடுக்கிறது. சில சில குழந்தைகள் உள்ளத்தின் அன்பை கண்களின் முத்துக்கள் மூலமாகவும் வெளிப்படுத்துகின்றார்கள், ஆனால், அது துக்கத்தின் கண்ணீர் அல்ல, பிரிவின் கண்ணீர் அல்ல, அது அன்பின் முத்து ஆகும். உள்ளத்தினுடைய சந்திப்பே அன்பு ஆகும். பிரிந்திருப்பவர்கள் அல்ல, ஆனால், இராஜயோகிகள் ஆவீர்கள். ஏனெனில், உள்ளத்தின் உண்மை யான அன்பானது சீக்கிரத்திலும் சீக்கிரமாக முதலில் நான் தந்தைக்கு ரிட்டர்ன் கொடுக்க வேண்டும் என்ற சக்தி கொடுக்கிறது. ரிட்டர்ன் கொடுப்பது என்றால் சமமாக ஆகுவதாகும். இந்த விதி மூலமே தன்னுடைய அன்பான பாப்தாதாவுடன் இனிமையான வீட்டிற்கு ரிட்டர்ன் செல்வோம் அதாவது தந்தையுடன் திரும்பிச் செல்வோம். ரிட்டர்ன் கொடுக்கவும் வேண்டும் மற்றும் தந்தையுடன் ரிட்டர்ன் செல்லவும் வேண்டும். ஆகையினால், உங்களுடைய அன்பு மற்றும் நினைவானது உலகத்தில் இருந்து விடுபட்டவராக மற்றும் தந்தைக்கு அன்பானவராக ஆகுவதற்கான அன்பாகும்.

குழந்தைகளுடைய சக்திசாலி ஆகுவதற்கான எண்ணத்தை, சமமாக ஆகுவதற்கான ஊக்கத்தை பாப்தாதா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். தந்தை பிரம்மாவினுடைய விசேˆத்தன்மையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒருவேளை, தந்தை பிரம்மாவின் விசேˆத்தன்மைகளை வர்ணனை செய்தால் எவ்வளவு இருக்கும்? ஒவ்வொரு அடியிலும் விசேˆத்தன்மைகள் இருந்தன. சங்கல்பத்திலும் கூட அனைவரையும் விசேஷமாக ஆக்குவதற்கான ஊக்கம் உற்சாகம் ஒவ்வொரு நேரமும் இருந்தது. தனது விருத்தி மூலம் ஒவ்வொரு ஆத்மாவையும் ஊக்கம் உற்சாகத்தில் கொண்டு வரும் விசேˆத்தன்மை எப்பொழுதுமே வெளிப்படையான ரூபத்தில் தென்பட்டது. பேச்சு மூலம் தைரியம் கொடுக்கக் கூடியவராக, நம்பிக்கையற்றவரை நம்பிக்கை உடையவராக ஆக்கக் கூடியவராக, பலமற்ற ஆத்மாவை பறக்கும் கலையின் விதி மூலம் பறக்க வைக்கக்கூடியவராக, சேவைக்குத் தகுதியானவராக ஆக்கக்கூடியவராக இருந்தார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிப்பற்றதாக, இனிமையானதாக, யுக்தி நிறைந்ததாக இருந்தது. அதுபோன்றே கர்மத்தில் குழந்தைகளுடன் இணைந்து ஒவ்வொரு கர்மத்திலும் துணைவனாக ஆகி, கர்மயோகி ஆக்கினார். சாட்சியாகிப் பார்ப்பவராக மட்டும் அல்ல, ஆனால், ஸ்தூல கர்மத்தின் மகத்துவத்தை அனுபவம் செய்விப் பதற்காக கர்மத்திலும் கூட துணைவனாக ஆனார். நான் என்ன கர்மம் செய்வேனோ, என்னைப் பார்த்து குழந்தைகள் தானாகவே செய்வார்கள் என்ற இந்த பாடத்தை சதா கர்மம் செய்து கற்பித்தார். சம்பந்தம், தொடர்பில் – சிறிய குழந்தை களின் சம்பந்தத்தில் வரும்பொழுது குழந்தை களுக்கு சமமாகி மகிழ்வித்தார். வானபிரஸ்த நிலையில் (வயோதிக நிலை) இருப்பவர்களிடமும் வானபிரஸ்த ரூபத்தில் அனுபவியாகி தனது சம்பந்தம், தொடர்பால் சதா ஊக்கம் உற்சாகத்தில் கொண்டு வந்தார். குழந்தைகளிடம் குழந்தையாக, இளைஞர்களிடம் இளைஞராக மற்றும் முதியவர் களிடம் முதியவராக ஆகி சதா முன்னேற்றினார். தன்னுடைய சம்பந்தம், தொடர்பினால் ஒவ்வொருவருக்கும் தன்னுடையவர் என்ற அனுபவத்தை சதா செய்வித்தார். பாபா என் மீது எவ்வளவு அன்பு செலுத்துகின்றாரோ, அவ்வளவு வேறு யார் மீதும் செலுத்துவதில்லை என்று சிறிய குழந்தை கூட சொல்லும். பாபா என்னுடையவர் என்று ஒவ்வொருவரும் நினைக்கும் அளவிற்கு ஒவ்வொருவருக்கும் அவ்வளவு அன்பு கொடுத்தார். இது தான் சம்பந்தம், தொடர்பின் விசேˆத்தன்மை ஆகும். பார்ப்பதில் – ஒவ்வொரு ஆத்மாவின் விசேஷத்தன்மை மற்றும் குணத்தைப் பார்த்தார். சிந்திப்பதில் பாருங்கள், இவர் கடைசி நம்பர் மணி ஆவார் என்பதை அறிந்திருந்தார், ஆனாலும் அப்பேற்பட்ட ஆத்மாவிற்காகவும் சதா இவர்கள் முன்னேற வேண்டும் என்று சதா சிந்தித்தார். இவ்வாறு ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் சுபசிந்தனையாளராக இருந்தார். இத்தகைய விசேˆத்தன்மைகளை அனைத்து குழந்தைகளும் அனுபவம் செய்தார்கள். இந்த அனைத்து விசயங்களிலும் சமமாக ஆகுவது தான் தந்தையைப் பின்பற்றுவது ஆகும். இவற்றைப் பின்பற்று வது கடினமா என்ன? இதையே அன்பு என்றும், இதையே அன்பிற்கான கைமாறு என்றும் கூறப்படு கிறது. ஒவ்வொரு குழந்தையும் இப்பொழுது வரை எந்தளவு கைமாறு செய்திருக்கிறது என்று பாப்தாதா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இலட்சியமோ அனைவருக்கும் உள்ளது, ஆனால், பிரத்யட்ச வாழ்க்கையில் தான் நம்பர் வந்துவிடுகிறது. அனைவரும் நம்பர் ஒன் ஆகவேண்டும் என்று விரும்புகின்றார்கள். இரண்டாம், மூன்றாம் எண்ணில் வருவதை எவரும் விரும்ப மாட்டார்கள். இந்த இலட்சியம் சக்திசாலியானது, நல்லது. ஆனால், இலட்சியம் மற்றும் இலட்சணம் சமமாக இருக்க வேண்டும், இதுவே சமமாக ஆகுவதாகும். இதற்காக தந்தை பிரம்மா எடுத்து வைத்த தைரியமான முதல் அடி எது? அந்த அடி மூலமே பத்மாபதம் பாக்கியவானாக அனுபவம் செய்தார், அது எது? அனைத்து விசயங்களிலும் சமர்ப்பண நிலை என்பதே தைரியத்தின் முதல் அடியாகும். அனைத்தையும் சமர்ப்பணம் செய்தார். என்னவாகும், எவ்வாறு நடக்கும் என்று எதையும் யோசிக்கவில்லை. ஒரு நொடியில் தந்தையினுடைய சிரேஷ்ட வழிப்படி நடந்தார். தந்தை சமிக்ஞை கொடுத்தார், தந்தையினுடைய சமிக்ஞை மற்றும் பிரம்மாவினுடைய கர்மம் மற்றும் அடி என்பதாக இருந்தது. இதை தைரியத்தின் முதல் அடி என்று சொல்லப்படுகின்றது. உடலையும் சமர்ப்பணம் செய்தார். மனதையும் சதா மன்மனாபவ என்ற விதி மூலம் வெற்றி சொரூபம் ஆக்கினார். ஆகையினால், மனம் அதாவது ஒவ்வொரு எண்ணமும் சித்தி அதாவது வெற்றி சொரூபமாக ஆனது. எதிர்காலத்தைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் கவலை யற்றவராகி செல்வத்தை சமர்ப்பணம் செய்தார். ஏனெனில், கொடுப்பது என்பது கொடுப்ப தல்ல, ஆனால், பலகோடி மடங்கு பெறுவ தாகும் என்ற நம்பிக்கை இருந்தது. இவ்வாறு சம்பந்தத்தையும் சமர்ப்பணம் செய்தார், அதாவது லௌகீகத்தை அலௌகீக சம்பந்தமாக மாற்றினார். அவர்களை விட்டுவிடவில்லை, அவர்களுக்கு நன்மை செய்தார், அவர்களை மாற்றினார். நான் என்ற புத்தியை, அபிமானத்தின் புத்தியை சமர்ப்பணம் செய்தார். ஆகையினால், உடல், மனம், புத்தியால் நிர்மல மானவராக (களங்கமற்றவராக, புனிதமானவராக) சீத்தளமாக (குளிர்ந்த தன்மை), சுகம் நிறைந்த வராக ஆனார். லௌகீக குடும்பத்திலிருந்து மற்றும் உலகத்தினுடைய அறியாத ஆத்மாக்களிட மிருந்து அப்பேற்பட்ட பிரச்சனை வந்தபோதிலும் எண்ணத்தில் கூட, கனவில் கூட சந்தேகத்தின் சூட்சும சொரூபமானது ஒருபொழுதும் சங்கல்பத்திலும் கூட கலக்கத்தை ஏற்படுத்தவில்லை.

உங்கள் அனைவரின் முன்னால் சாகார ரூபத்தில் தந்தை பிரம்மா உதாரணமாக இருந்தார், ஆனால், பிரம்மாவிற்கு முன் சாகாரத்தில் எவரும் உதாரணமாக இல்லை. விசேˆமாக பிரம்மா வின் இந்த விசயம் அதிசயமானதாக இருந்தது. உறுதியான நம்பிக்கை மற்றும் தந்தையினுடைய ஸ்ரீமத் மட்டும் ஆதாரமாக இருந்தது. உங்களுக்கோ இது மிக சகஜமானதாகும். மேலும், யார் எந்தளவிற்கு பின்னால் வந்திருக்கின்றார்களோ, அவர்களுக்கு இன்னும் சகஜமாகும். ஏனெனில், அனேக ஆத்மாக்களுடைய மாற்றமடைந்த சிரேஷ்டமான வாழ்க்கை உங்களுக்கு முன்னால் உதாரணமாக உள்ளது. இதைச் செய்ய வேண்டும், இவ்வாறு ஆகவேண்டும் என்பது தெளிவாக உள்ளது. ஆகையினால், உங்களுக்கு ஏன், என்ன என்ற கேள்வி எழுவதற்கான வாய்ப்பே இல்லை. அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால், பிரம்மாவிற்கு முன்னால் கேள்வி எழுவதற்கான வாய்ப்பு இருந்தது. என்ன செய்ய வேண்டும், அடுத்து என்னவாக ஆகவேண்டும், சரியானதை செய்து கொண்டிருக்கின்றேனா அல்லது தவறானதை செய்து கொண்டிருக் கின்றேனா என்ற இந்த சங்கல்பம் எழுவதற்கான வாய்ப்பு (சம்பவம்) இருந்தது, ஆனால், சம்பவத்தை அசம்பவமாக ஆக்கினார். ஒரே பலம், ஒரே நம்பிக்கை என்ற இந்த ஆதாரத்தில் நிச்சயபுத்தி உடையவராக நம்பர் ஒன் வெற்றியாளராக ஆனார். இந்த சமர்ப்பண தன்மையின் காரணத்தினால் புத்தி சதா இலகுவாக இருந்தது, புத்தி சுமை இல்லாமல் இருந்தது. மனம் கவலையற்று இருந்தது. முகத்தில் எப்பொழுதுமே கவலையற்ற மகாராஜா என்பதன் அடையாளம் தெளிவாகத் தென்பட்டது. 350 குழந்தைகள் இருந்தார்கள் மற்றும் உணவு சமைப்பதற்கு மாவு இல்லை, ஆனால், சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள், இப்பேற் பட்ட நிலைமையில் எவராவது கவலையற்றவராக இருக்க முடியுமா? ஒரு மணிக்கு மணி அடிக்க வேண்டும். ஆனால், 11.00 மணி வரை மாவு இல்லை, எவராவது கவலையற்றவராக இருக்க முடியுமா? அப்பேற்பட்ட நிலையில் கூட மகிழ்ச்சியாக, அசையாத மனோநிலையுடன் இருந்தார். இது தந்தையின் பொறுப்பாகும், என்னுடையது அல்ல, நான் தந்தையினுடையவன் மற்றும் குழந்தைகளும் தந்தையினுடையவர்கள், நான் நிமித்தமாக இருக்கின்றேன் – இவ்வாறு உறுதி யுடன், கவலையற்றவராக யாரால் இருக்க முடியும்? மனம் மற்றும் புத்தியால் சமர்ப்பணமான ஆத்மாவால் முடியும். ஒருவேளை, என்ன ஆகுமோ தெரியவில்லை! அனைவரும் பசியுடன் இருந்துவிடுவார்களே, இது நடக்காது, அது நடக்காது! என்று தன்னுடைய புத்தியை பயன்படுத்த வில்லை. இதுபோன்ற வீண் எண்ணம் மற்றும் சந்தேகம் வருவதற்கான வாய்ப்பு இருந்த போதிலும் கூட, சதா பாதுகாவலர் தந்தை இருக்கின்றார், நன்மை செய்பவர் இருக்கின்றார் என்ற சக்திசாலியான எண்ணம் வந்தது. இதுவே சமர்ப்பண நிலையின் விசேˆ நிலையாகும். எவ்வாறு தந்தை பிரம்மா சமர்ப்பணம் ஆனதால் தைரியம் என்ற முதல் அடி எடுத்து வைத்தாரோ, அவ்வாறு தந்தையைப் பின்பற்றுங்கள். நம்பிக்கை உள்ளது என்றால் அவசியம் வெற்றி கிடைக்கும். எனவே, தக்கசமயத்தில் மாவும் வந்துவிட்டது மணியும் அடிக்கப்பட்டது மற்றும் தேர்ச்சி பெற்றுவிட்டார். இதைத் தான் கேள்விக்குறி அதாவது வளைந்த பாதையில் செல்லாமல் சதா நன்மை என்ற புள்ளி வைப்பது என்று கூறுகின்றார்கள். முற்றுப்புள்ளி. இந்த விதி மூலமே சுலபமாகவும் இருக்கும் மற்றும் வெற்றியும் கிடைக்கும். எனவே, இது தான் பிரம்மாவின் அற்புதம் ஆகும். இன்று முதலாவது அடியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது, கவலையினுடைய சுமையிலிருந்து கூட கவலையற்றவர் ஆகிவிடுங்கள். இதையே அன்பிற்கான ரிட்டர்ன் செய்வது என்று கூறப்படுகிறது. நல்லது.

சதா ஒவ்வொரு அடியிலும் தந்தையைப் பின்பற்றக்கூடிய, ஒவ்வொரு அடியிலும் அன்பிற்கான ரிட்டர்ன் கொடுக்கக்கூடிய, சதா நிச்சயபுத்தி உடையவராகி கவலையற்ற மகாராஜாவாக இருக்கக் கூடிய, எண்ணம், சொல், செயல், சம்பந்தத்தில் தந்தைக்கு சமமாக ஆகக்கூடிய, சதா சுபசிந்தனை யாளர், சதா ஒவ்வொருவருடைய விசேˆத்தன்மையைப் பார்க்கக்கூடிய, ஒவ்வொரு ஆத்மாவையும் சதா முன்னேற்றக்கூடிய, அப்பேற்பட்ட தந்தைக்கு சமமான குழந்தைகளுக்கு சினேகி தந்தையின் சினேகம் நிறைந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

பார்ட்டிகளுடன் சந்திப்பு:

1. தங்களை உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையினுடைய உயர்ந்ததிலும் உயர்ந்த பிராமண ஆத்மாக்கள் என்று புரிந்திருக்கின்றீர்களா? பிராமணர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்று மகிமை பாடப்படுகின்றார்கள். உயர்ந்தவர் கள் என்பதன் அடையாளமாக சதா பிராமணர் களுக்கு குடுமி காண்பிக்கின்றார்கள். உலகத்தினர் பெயரளவில் பிராமணர் களாக இருப்பவர் களின் அடையாளமாக குடுமி காண்பித்துள்ளார்கள். எனவே, நீங்கள் குடுமி வைப்பவர்கள் அல்ல, ஆனால், உயர்ந்த ஸ்திதியில் இருப்பவர்கள் ஆவீர்கள். அவர்கள் ஸ்தூல அடையாளத்தைக் காண்பித்திருக் கின்றார்கள், உண்மையில் பிராமணர்கள் உயர்ந்த ஸ்திதியில் இருப்பவர்கள் ஆவார்கள். பிராமணர்களைத் தான் புருúˆôத்தமர்கள் என்று சொல்லப்படுகின்றது. புருúˆôத்தமர்கள் என்றால் புருˆர்களில் உத்தமமானவர்கள், சாதாரண மனித ஆத்மாக்களை விட உத்தமமானவர்கள் என்று அர்த்தம். அத்தகைய புருúˆôத்தமர்கள் ஆவீர்கள் அல்லவா. புருஷ் என்று ஆத்மாவையும் சொல் கின்றார்கள். சிரேஷ்ட ஆத்மா ஆகுபவர்கள் என்றால் புருˆர்களில் உத்தம புருˆர் ஆகுவது என்று அர்த்தம். தேவதைகளையும் கூட புருஷோத்தமர்கள் என்று கூறுகின்றார்கள். ஏனெனில், தேவ ஆத்மாக்களாக இருக்கின்றார்கள். நீங்கள் தேவ ஆத்மாக்களையும் விட உயர்ந்த பிராமணர்கள் ஆவீர்கள். இந்த போதை சதா இருக்க வேண்டும். மற்ற போதைகளை குறைக்க வேண்டும் என்று கூறுவார்கள், ஆன்மீக போதையை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஏனெனில், இந்த போதை நஷ்டம் ஏற்படுத்தக் கூடியது அல்ல, மற்ற அனைத்து போதை களும் நஷ்டம் தரக்கூடியவை ஆகும். இது மேலே ஏற்றக் கூடியது, அது விழவைக்கக் கூடியது. ஒருவேளை, ஆன்மீக போதை இறங்கிவிட்டால், பழைய உலகத்தின் நினைவு வந்து விடும். போதை ஏறியிருக்கிறது என்றால், புது உலகத்தின் நினைவு இருக்கும். இந்த பிராமண உலகம் கூட புதிய உலகம் ஆகும். சத்யுகத்தை விடவும் இந்த உலகம் மிகவும் சிரேஷ்டமானது ஆகும். ஆகையினால், சதா இந்த நினைவின் மூலம் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.

2. சதா தன்னை விஷ்வத்தின் படைப்பாளரான தந்தையினுடைய சிரேஷ்டமான படைப்பாக அனுபவம் செய்கின்றீர்களா? பிராமண வாழ்க்கை என்றால் விஷ்வ படைப்பாளரின் சிரேஷ்டமான படைப்பு என்று அர்த்தம். ஒவ்வொருவரும் தந்தையினுடைய நேரடியான படைப்பு ஆவீர்கள் – இந்த போதை உள்ளதா? உலகத்தினரோ நம்மை பகவான் படைத்தார் என்று அறியாமையில் சொல்கின்றார்கள். நீங்கள் அனைவரும் கூட முன்னர் அறியாமையில் கூறினீர்கள், ஆனால், இப்பொழுது நாம் சிவவம்ச பிரம்மாகுமார்/குமாரி ஆவோம் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். எனவே, இப்பொழுது ஞானத்தின் ஆதாரத்தில், புரிதலுடன் நம்மை பகவான் படைத்திருக்கின்றார், நாம் வாய்வழி வம்சத்தினர் என்று கூறுகின்றீர்கள். தந்தை நேரடியாக பிரம்மா மூலம் படைத் திருக்கின்றார். எனவே, பாப்தாதா அல்லது தாய் தந்தையின் படைப்பு ஆவீர்கள். பகவானின் நேரடி படைப்பு – இதை இப்பொழுது அனுபவப்பூர்வமாக உங்களால் சொல்லமுடிகிறது. பகவானுடைய படைப்பு எவ்வளவு சிரேஷ்டமானதாக இருக்கும்! படைப்பாளர் எப்படியோ, படைப்பு அப்படி இருக்கும் அல்லவா. இந்த போதை மற்றும் குஷி சதா இருக்கிறதா? தன்னை சாதாரணமானவர் என்று புரிந்துகொள்ளவில்லை தானே? இந்த இரகசியம் எப்பொழுது புத்தியில் வந்துவிடுகிறதோ, அப்பொழுது சதா ஆன்மீக போதை மற்றும் குஷி முகத்தில் மற்றும் நடத்தையில் தானாகவே வந்துவிடுகிறது. உங்களுடைய முகத்தைப் பார்த்து உண்மையிலேயே இவர்கள் சிரேஷ்டமான படைப்பாளரின் படைப்பு என்று பிறருக்கு அனுபவம் ஆகவேண்டும். எவ்வாறு ஒரு இராஜாவின் இராஜகுமாரி இருக்கிறார் என்றால், இவர் இராயலான வீட்டைச் சேர்ந்தவர் என்று அவருடைய நடத்தையின் மூலம் தெரிந்துவிடும். இவர்கள் பணக்கார வீட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது இவர்கள் சாதாரண வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பது நடத்தையின் மூலம் தெரிந்துவிடும். இவ்வாறு உங்களுடைய நடத்தையின் மூலம், முகத்தின் மூலம் இவர்கள் உயர்ந்த படைப்பு ஆவார்கள், உயர்ந்த தந்தையின் குழந்தைகள் ஆவார்கள் என்ற அனுபவம் பிறருக்கு எற்பட வேண்டும்.

குமாரிகளுடன்: கன்னிகைகள் 100 பிராமணர்களை விட உத்தமமானவர்கள் என்ற மகிமை பாடப் பட்டுள்ளது. இந்த மகிமை ஏன் பாடப்பட்டுள்ளது? ஏனெனில், எந்தளவு சுயம் சிரேஷ்டமாக இருப்பீர்களோ, அந்தளவே பிறரையும் சிரேஷ்டமாக ஆக்கமுடியும். நான் சிரேஷ்ட ஆத்மா என்ற இந்த குஷி உள்ளதா? குமாரிகள் சேவாதாரி ஆகி சேவையில் முன்னேறிக் கொண்டே செல்லுங் கள். ஏனெனில், இந்த சங்கமயுகமே கொஞ்ச காலத்திற்கான யுகம் ஆகும். இதில் எதை, எந்தளவு செய்ய விரும்புகின்றீர்களோ, அந்தளவு செய்ய முடியும். எனவே, சிரேஷ்ட இலட்சியம் மற்றும் இலட்சணம் உடையவர்கள் ஆவீர்கள் அல்லவா? எங்கு இலட்சியம் மற்றும் இலட்சணம் சிரேஷ்டமாக உள்ளதோ, அங்கு பிராப்தியும் சதா சிரேஷ்டமாக அனுபவம் ஆகிறது. எனவே, சதா இந்த ஈஸ்வரிய வாழ்க்கையின் பலனான குஷி மற்றும் சக்தி ஆகிய இரண்டையும் அனுபவம் செய்கின்றீர்களா? உலகத்தில் குஷிக்காக செலவு செய்கின்றார்கள், ஆனாலும் கிடைப்பதில்லை. ஒருவேளை, கிடைத்தாலும் அது அல்பகாலத்திற்கே உள்ளது மற்றும் குஷியின் கூடவே துக்கமும் இருக்கும். ஆனால், உங்களுடைய வாழ்க்கை சதா குஷி நிறைந்ததாக ஆகிவிட்டது. உலகத்தினர் குஷிக்காக துடிக்கின்றார்கள் மற்றும் உங்களுக்கு குஷி பிரத்யட்ச பலனாக கிடைத்துக்கொண்டு இருக்கின்றது. குஷி தான் உங்களுடைய வாழ்க்கையின் விசேஷத்தன்மை ஆகும். ஒருவேளை, குஷி இல்லை எனில் வாழ்க்கை இல்லை. எனவே, சதா தன்னை முன்னேற்றிக் கொண்டே, முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா? குமாரிகள் தக்க சமயத்தில் தப்பித்து விட்டார்கள் என்று பாப்தாதா குஷி அடைகின்றார்கள். இல்லையெனில், தலை கீழான ஏணியில் ஏறி பிறகு இறங்க வேண்டியிருக்கும். ஏறுவது மற்றும் இறங்குவது – இதில் அதிக உழைப்பு உள்ளது அல்லவா. பாருங்கள், இல்லறத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் பிரம்மாகுமார்/பிரம்மாகுமாரி என்று அழைக்கப்படுகின்றார்கள், பிரம்மா அதர்குமாரர் என்று சொல்வதில்லை. பிறகும், குமாரர்/குமாரி ஆகியிருக்கிறார்கள் அல்லவா. அவர்கள் ஏணிப்படியில் இறங்கிவிட்டார்கள் மற்றும் நீங்கள் இறங்க வேண்டியதில்லை, மிகவும் பாக்கியசாலிகள் ஆவீர்கள், தக்க சமயத்தில் தந்தை கிடைத்துவிட்டார். குமாரிதான் பூஜிக்கப்படுகின்றார். எப்பொழுது குமாரி கிரஹஸ்தி ஆகிவிடுகின்றாரோ, அப்பொழுது வெள்ளாடு போல் ஆகி அனைவரின் முன்பும் தலை வணங்கியே நிற்கின்றார். நீங்கள் தப்பித்துவிட்டீர்கள் அல்லவா. எனவே, சதா தன்னை அப்பேற் பட்ட பாக்கியவான் எனப் புரிந்து முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். நல்லது.

தாய்மார்களுடன்: அனைவரும் சக்திசாலியான தாய்மார்கள் ஆவீர்கள் அல்லவா. பலவீன மானவர்கள் இல்லையே? பாப்தாதா தாய்மார்களிடம் என்ன விரும்புகின்றார்கள்? ஒவ்வொரு மாதாவும் ஜெகத்மாதா ஆகி விஷ்வத்திற்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால், தாய்மார்கள் சாதுர்யத்துடன் வேலை செய்கின்றார்கள். எப்பொழுது லௌகீக வேலை வருகிறதோ, அப்பொழுது யாரையாவது நிமித்தமாக்கி வெளிவந்து விடுகின்றார்கள் மற்றும் எப்பொழுது ஈஸ்வரிய காரியம் வருகிறதோ, அப்பொழுது குழந்தைகள் இருக்கின்றார்கள், அவர்களை யார் பராமரிப்பார்கள்? என்று கூறுவார்கள். பாண்டவர்களுக்கோ பாப்தாதா கூறுகின்றார்கள் – பரிபாலனை செய்ய வேண்டும், ஏனெனில், அவர்கள் படைப்பு ஆவார்கள், ஆனால், பாண்டவர்கள் சக்திகளுக்கு (விடுவித்தல்) ஒய்வு தர வேண்டும். நாடக அனுசாரமாக நிகழ்காலத்தில் தாய்மார்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகையினால், தாய்மார்களை முன்னால் வைக்க வேண்டும். இப்பொழுது மிகுந்த சேவை செய்ய வேண்டும். முழு விஷ்வத்தையும் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் சேவையை எவ்வாறு பூர்த்தி செய்வீர்கள்? தீவிர வேகம் தேவை அல்லவா. எனவே, பாண்டவர்கள் சக்திகளுக்கு ஒய்வு கொடுத்தால் சேவைக் கேந்திரங்கள் திறக்க முடியும் மற்றும் உரக்க ஒலி எழுப்ப முடியும். நல்லது.

வரதானம்:-

யார் மீது அதிக அன்பு உள்ளதோ, அந்த அன்பிற்காக அனைவரையும் ஒதுக்கிவிட்டு அனைத்தையும் அவர்களுக்கு முன்னால் அர்ப்பணம் செய்துவிடுகின்றார்கள். தந்தைக்கு குழந்தை கள் மீது அன்பு உள்ளது, ஆகையினால், அன்பான குழந்தைகளுக்கு சதாகாலத்திற்கான சுகங்களின் பிராப்தியைக் கொடுக்கின்றார், மற்ற அனைவரையும் முக்தி தாமத்தில் இருக்க வைத்து விடுகின்றார், அதுபோன்று குழந்தைகள் அன்பினுடைய நிரூபணமாக அனைத்து ரூபங்கள் மற்றும் அனைத்து சம்பந்தங்களால், தன்னுடைய அனைத்தையும் தந்தைக்கு முன் அர்ப்பணம் செய்ய வேண்டும். எங்கு அன்பு உள்ளதோ, அங்கு யோகம் உள்ளது மற்றும் யோகம் உள்ளது என்றால் சகயோகம் உள்ளது. ஒரு பொக்கிˆத்தைக் கூட மன வழிப்படி வீணாக இழக்க முடியாது.

சுலோகன்:-

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச யோகதினம் ஆகும். பாபாவினுடைய அனைத்து குழந்தைகளும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை விசேˆமாக தன்னுடைய இஷ்டதேவன், இஷ்டதேவி (பூஜ்ய சொரூபம்) சொரூபத்தில் நிலைத்திருந்து பக்த ஆத்மாக்களின் கூக்குரலைக் கேட்க வேண்டும், உபகாரம் செய்ய வேண்டும். கருணை உள்ளம் உடைய வள்ளல் சொரூபத்தில் நிலைத்திருந்து அவர்களுக்கு சுகம், சாந்தியைக் கொடுக்கும் சேவை செய்ய வேண்டும்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top