31 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

October 30, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சத்தியமான உள்ளத்தால் இறைவன் திருப்தி அடைகின்றார்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று விஷ்வத்தின் அனைத்து ஆத்மாக்களுக்கும் உபகாரம் செய்யக்கூடிய பாப்தாதா தங்களுடைய சிரேஷ்டமான பரோபகாரி குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். நிகழ்கால சமயத்தில் அனேக ஆத்மாக்கள் உபகாரத்திற்காக ஆசைப்படுகின்றார்கள். சுய உபகாரம் செய்வதற்கான விருப்பம் உள்ளது, ஆனால், தைரியம் மற்றும் சக்தி இல்லை. அப்பேற்பட்ட பலமற்ற ஆத்மாக்களுக்கு உபகாரம் செய்வதற்கு பரோபகாரி குழந்தைகளாகிய நீங்கள் நிமித்தமானவர்கள் ஆவீர்கள். பரோபகாரி குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்மாக்களுடைய கூக்குரல் கேட்கிறதா அல்லது சுய உபகாரத்திலேயே பிஸியாக உள்ளீர்களா? விஷ்வத்தின் இராஜ்ய அதிகாரி சுய உபகாரியாக மட்டும் ஆகுவதில்லை. பரோபகாரி ஆத்மா தான் இராஜ்ய அதிகாரியாக ஆக முடியும். உபகாரம் உண்மையான உள்ளத்துடன் செய்யப்படுகிறது. ஞானம் சொல்வது என்பது (உள்ளம் அல்லாமல்) வாயினால் கூட செய்ய முடியும். ஞானம் சொல்வது – இது விசாலமான புத்தியின் விசயம் மற்றும் வர்ணனை செய்யும் பயிற்சியின் விசயம் ஆகும். எனவே, உள்ளம் மற்றும் புத்தி ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஒருவர் எவரிடமாவது அன்பை வேண்டுகின்றார்கள் என்றால் அது உள்ளத்தின் அன்பைத் தான் வேண்டுகின்றார்கள். உள்ளமுடையவர், உள்ளத்தைக் கொள்ளை கொள்பவர் என்ற பட்டம் பாப்தாதாவிற்கு உள்ளது. புத்தி என்பது உள்ளத்தை விட ஸ்தூலமானது, உள்ளம் சூட்சுமமானது. பேச்சு வழக்கில் கூட உண்மையான உள்ளத்துடன் சொல்கின்றேன், உண்மையான உள்ளத்தோடு தந்தையை நினைவு செய்யுங்கள் என்று எப்பொழுதும் கூறுகின்றீர்கள். உண்மையான புத்தியோடு நினைவு செய்யுங்கள் என்று சொல்வதில்லை. உண்மை யான உள்ளத்தால் இறைவன் திருப்தி அடைகின்றார் என்று சொல்லப்படுகின்றது. பரந்த புத்தியினால் திருப்தி அடைகின்றார் என்று சொல்லப்படுவதில்லை. பரந்த புத்தி – இதுவும் அவசியம் விசேˆத் தன்மையே ஆகும். இந்த விசேˆத் தன்மையினால் ஞானத்தின் கருத்துக்களை (பாயிண்ட்ஸ்) நல்ல முறையில் தாரணை செய்ய முடியும். ஆனால், உள்ளத்தால் நினைவு செய்யக்கூடியவர்கள் பாயிண்ட் அதாவது புள்ளி ரூபம் ஆக முடியும். அவர்கள் பாயிண்ட்டை திரும்பச் சொல்ல முடியும், ஆனால், பாயிண்ட் ரூபம் ஆகுவதில் இரண்டாம் எண்ணில் இருப்பார்கள், அவ்வப்போது சுலப மாகவும், அவ்வப்போது அதிக முயற்சி செய்து புள்ளி ரூபத்தில் நிலைக்க முடியும். ஆனால், உண்மையான உள்ளம் உடையவர்கள் ஒரு நொடியில் புள்ளியாகி, புள்ளி சொரூப தந்தையை நினைவு செய்ய முடியும். உண்மையான உள்ளம் உடையவர்கள் உண்மையான இறைவனை திருப்திப்படுத்தும் காரணத்தினால், தந்தையின் விசேˆ ஆசீர்வாதங்கள் கிடைக்கும் காரணத்தினால், ஸ்தூல ரூபத்தில் சிலரோடு ஒப்பிடும்பொழுது, புத்தி அந்தளவு பரந்த புத்தியாக இல்லாதிருப்பினும், உண்மையின் சக்தி யினால் சமயத்தின் அனுசாரம் அவர்களுடைய புத்தி யுக்தியுக்தாக, சரியான காரியத்தை தானாகவே செய்யும், ஏனெனில், எது யதார்த்தமான கர்மம், பேச்சு மற்றும் சங்கல்பமோ, அது ஆசீர்வாதங்களின் காரணத்தினால் நாடகத்தின் அனுசாரம் தக்க சமயத்தில் அவர்களுடைய புத்தியில் டச்சிங்காக (தூண்டுதல்) ஏற்படும், ஏனெனில், புத்திவானுக்கெல்லாம் புத்திவானை (தந்தை) திருப்திப்படுத்தி இருக்கின்றார்கள். யார் பகவானை திருப்திப்படுத்தி இருக்கின்றார்களோ, அவர்கள் தானாகவே இரகசியங்களைப் புரிந்தவர்களாக, யுக்தியுக்தாக இருப்பார்கள்.

நான் பரந்த புத்தியின் காரணத்தினால் நினைவு மற்றும் சேவையில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றேனா அல்லது உண்மையான உள்ளம் மற்றும் யதார்த்தமான புத்தியினால் முன்னேறிக் கொண்டு இருக்கின்றேனா என்று சோதனை செய்யுங்கள். புத்தியினால் சேவை செய்யக் கூடியவர்களுடைய அம்பு பிறருடைய புத்தி வரை செல்கிறது, உள்ளம் உடையவர்களின் அம்பு உள்ளம் வரை தைக்கிறது என்று முன்பே சொல்லப்பட்டது. எவ்வாறு ஸ்தாபனையினுடைய, சேவையினுடைய ஆரம்பத்தில் சேவையினுடைய முதல் குழுவைப் பார்த்திருக்கிறீர்கள், அவர்களிடம் என்ன விசேˆத் தன்மை இருந்தது? எந்த ஒரு மொழியும் மற்றும் சொற்பொழிவு செய்யும் விசேˆத்தன்மையும் கிடையாது. தற்காலத்தில் மிகவும் நன்றாக சொற்பொழிவு ஆற்றுகின்றீர்கள், பிறரை விட கதைகள் மிக நன்றாக சொல்கின்றீர்கள். அத்தகைய முதல் குழுவைச் சேர்ந்தவர்களிடம் மொழி (சிறப்பாக) இல்லை, ஆனால், என்ன இருந்தது? உண்மையான உள்ளத்தின் சப்தம் இருந்தது, ஆகையினால், உள்ளத்தின் சப்தம் அனேகரை திலாராமினுடையவராக ஆக்குவதற்கு நிமித்தமாக இருந்தது. மொழி கலப் படமானதாக இருந்தது. ஆனால், கண்களின் பாûˆ ஆன்மிகமானதாக இருந்தது. ஆகையினால், பாûˆ எப்படி இருந்த போதிலும் முட்களிலிருந்து ரோஜா மலர் ஆகிவிட்டனர். அந்த முதல் குழுவினருடைய சேவையின் வெற்றி மற்றும் நிகழ்கால சமயத்தின் வளர்ச்சி ஆகிய இரண்டையும் சோதனை செய்தீர்கள் என்றால் வித்தியாசம் தென்படுகிறது அல்லவா. பெரும்பான்மையானவர்கள் பற்றிய விசயம் பற்றி தான் சொல்லப் படுகிறது. இரண்டாவது, மூன்றாவது குழுவில் கூட சிலர் உள்ளம் உடையவர்கள் இருக்கின்றனர், ஆனால் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஆதி காலத்து புதிர் இப்பொழுது வரை இருந்து கொண்டு இருக்கிறது. அது என்ன புதிர்? நான் யார்? தனக்குத்தானே நான் யார் எனக் கேளுங்கள் என்று இப்பொழுதும் பாப்தாதா கூறுகின்றார்கள். முதல் புதிருக்கு விடை காண தெரிகிறது அல்லவா அல்லது வேறு யாரேனும் பதில் கூறும் பொழுது விடை காண முடிகிறதா – பிறர் கூறினாலும் கூட, இது அப்படி அல்ல, இப்படி என்று சமாளிக்க முயற்சி செய்வார்கள். ஆகவே, தன்னைத் தானே பாருங்கள்.

சில குழந்தைகள் தன்னைத் தானே சோதனை செய்கின்றார்கள், ஆனால், பார்க்கும் விதம் இரண்டு வகையாக இருக்கின்றது. சிலர் வெறுமனே விசால புத்தியின் பார்வையோடு சோதனை செய்கிறார்கள், அவர்கள் சோம்பேறித்தனம் என்ற கண்ணாடியை அணிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு விசயத்திலும் என்ன தெரியும் எனில், தியாகம் செய்தேன், சேவை செய்தேன், பரிவர்த்தனை செய்தேன், நான் செய்த அனைத்தும் அதிகமான வையே. இந்த இந்த ஆத்மாக்களை விட நான் நன்றாகவே இருக்கிறேன். நான் செய்த இவ்வளவு கூட சகஜமானது அல்ல. சிறிய, பெரிய குறைகள் பிரபலமானவரிடத்திலும் இருக்கின்றன. இந்தக் கணக்கு பிரகாரம் நான் சரியாகவே இருக்கின்றேன். இது தான் சோம்பேறித்தனம் என்ற கண்ணாடி ஆகும். இரண்டாவது சுய முன்னேற்றத்தின் யதார்த்தமான கண்ணாடி ஆகும். அவர்கள் சத்திய உள்ளம் உடையவர்கள். அவர்கள் என்ன பார்ப்பார் கள்? தில்வாலா தந்தைக்கு என்ன பிடிக்குமோ அதே சங்கல்பம், பேச்சு, கர்மம் செய்ய வேண்டும். யதார்த்தமான கண்ணாடி அணிந்தவர்கள் தந்தை மற்றும் தன்னை மட்டுமே பார்ப்பார்கள். இரண்டாவது, மூன்றாவது நபர் என்ன செய்கிறார் என்பதை அவர்கள் பார்க்கமாட்டார்கள். நான் தான் மாற வேண்டும் என்ற இந்த ஈடுபாட்டிலேயே சதா இருப்பார்கள். பிறர் மாறினால் நான் மாறுகிறேன் என்று இருக்க மாட்டார்கள். 80 சதவிகிதம் நான் மாறுகிறேன், 20 சதவிகிதம் அவர் மாறட்டும் என்ற இந்த அளவிற்கு கூட அவர்கள் பார்க்கமாட்டார்கள். பிறருக்கு சுலபமாக்குவதற்காக நான் மாற்றமடைந்து உதாரணம் ஆகவேண்டும். ஆகவே தான் முதலில் நான் என்று முந்திக் கொள்பவர் களே அர்ஜூனன் என்ற பழமொழி இருக்கிறது. அர்ஜூனன் என்றால் அலௌகீக மனிதர் என்று அர்த்தம். இதைத் தான் யதார்த்தமான கண்ணாடி மற்றும் யதார்த்தமான பார்வை என்று சொல்லப் படுகிறது. பொதுவாக உலகில், மனித வாழ்க்கையில் உள்ளம் மற்றும் புத்தி என்ற இரண்டு முக்கிய மான விசயங்கள் இருக்கின்றன. இரண்டும் சரியாக இருக்க வேண்டும். அதேபோல், பிராமண வாழ்க்கையிலும், விசாலமான புத்தியும் வேண்டும் மற்றும் உண்மையான உள்ளமும் வேண்டும். சத்தியமான உள்ளம் உடையவர்களுக்கு புத்தியின் லிஃப்ட் கிடைத்துவிடுகிறது. ஆகவே, சத்தியமான உள்ளத்தோடு இறைவனை திருப்திப்படுத்தி இருக்கின்றேனா, இல்லையென்றால், தன்னுடைய மனதை மட்டுமோ அல்லது சில ஆத்மாக்களை மட்டுமோ திருப்திப்படுத்துகின்றேனா என்று சதா சோதனை செய்யுங்கள். சத்தியமான தந்தையை திருப்திப்படுத்தும் போது பல அடையாளங்கள் தென்படும். இதைப் பற்றிய சிந்தனை செய்து ஆன்மிக உரையாடல் செய்ய வேண்டும். பாப்தாதாவும் பிறகு கூறுவார்கள். நல்லது.

இன்று டீச்சர்ஸ் அமர்ந்திருக்கிறீர்கள். டீச்சர்ஸ் கூட ஒப்பந்தக்காரர்கள் (காண்ட்ராக்டர்கள்) ஆவீர்கள். ஒப்பந்தம் எடுத்திருக்கிறீர்கள் தானே. சுயமாற்றத்தின் மூலம் உலக மாற்றம் செய்தே தீரவேண்டும். இப்படி பெரிய, பெரிய ஒப்பந்தங்களை எடுத்திருக்கிறீர்கள் அல்லவா. எவ்வாறு, நீங்கள் இறந்து விட்டால் உலகமே இறந்துவிட்டது, நீங்கள் இறக்கவில்லை எனில் உலகமும் இறக்கவில்லை என்று உலகத்தினர் கூறுகின்றார்களோ, அதேபோல், சுயமாற்றம் தான் உலக மாற்றம் ஆகும். சுயமாற்றம் இல்லாமல் பிற ஆத்மாவிற்காக எவ்வளவு தான் உழைத்தாலும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. தற்சமயத்தில் கேட்பதால் மட்டும் மாறுவதில்லை, பார்ப்பதன் மூலம் தான் மாறுகின்றார்கள். மதுபன் பூமியில் எப்படிப்பட்ட ஆத்மாவும் ஏன் மாறிவிடுகிறார்கள்? சென்டரிலும் கூட நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால், இங்கு வந்த பிறகு தன்னைப் பார்க்கிறார்கள், தன்னைப் பார்க்கும் காரணத்தினால் மாறிவிடு கிறார்கள். சில பந்தனங்களில் இருக்கும் தாய்மார்களுடைய கணவன்மார்கள், அவர் களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்த்து மாறிவிடுகின்றனர். ஞானம் சொல்வதற்கு முயற்சி செய்தால் கேட்கமாட்டார்கள். ஆனால், மாற்றத்தைப் பார்க்கும்பொழுது அதன் பிரபாவம் அவர்களையும் மாற்றிவிடுகிறது. ஆகவே தான் இன்றைய உலகம் பார்க்க விரும்புகிறது என்று கூறினார். எனவே, ஆசிரியர் களுடைய விசேˆமான கடமை இதுவே ஆகும். செய்து காண்பிக்க வேண்டும். அதாவது மாறிக் காண்பிக்க வேண்டும். புரிகிறதா.

சதா அனைத்து ஆத்மாக்களுக்காகவும் பரோபகாரியாக இருக்கக்கூடிய, சதா சத்தியமான உள்ளத்தோடு சத்தியமான இறைவனை திருப்திப்படுத்தக்கூடிய, பரந்த புத்தி மற்றும் உண்மையான உள்ளத்தின் சமநிலை வைக்கக்கூடிய, சதா தன்னை உலக மாற்றத்திற்கு நிமித்தமாக்கக்கூடிய, சுய பரிவர்த்தனை செய்யக்கூடிய சிரேஷ்டமான ஆத்மா, சிரேஷ்டமான சேவாதாரி ஆத்மா எனப் புரிந்து முன்னேறக்கூடிய – இத்தகைய நாலாபுறங்களிலும் இருக்கக்கூடிய விசேˆ குழந்தைகளுக்கு பாப்தாதா வின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

டெல்லி (தில்லி) குழுவினருடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

அனைவருடைய உள்ளத்திலும் தந்தையினுடைய அன்பு நிறைந்திருக்கிறது. அன்பு தான் இங்கு வரை கொண்டு வந்திருக்கிறது. உள்ளத்தின் அன்பு திலாராம் வரை அழைத்து வந்திருக்கிறது. உள்ளத்தில் தந்தையைத் தவிர வேறு யாருமே இருக்கமுடியாது. தந்தை தான் உலகம் என்றால் தந்தையினுடைய உள்ளத்தில் இருக்க வேண்டும் அதாவது தந்தைக்குள் உலகம் அடங்கியிருக்கிறது என்று அர்த்தம். ஆகவே, ஒரே வழி, ஒரே பலம், ஒரே நம்பிக்கை உள்ளது. எங்கு ஒன்று என்ற வார்த்தை இருக்கிறதோ, அங்கு தான் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி அடங்கியிருக்கிறது. எந்தப் பிரச்சனை யையும் கடந்து செல்வது சுலபமாக உள்ளதா அல்லது கடினமாக உள்ளதா? ஒருவேளை, பிறரைப் பார்த்தால், பிறரை நினைவு செய்தால் இரண்டில் (ஒன்று பாபா, இரண்டாவது பிறர்) ஒன்று கூட கிடைக்காது, ஆகையினால் கடினமாகிவிடும். தந்தையினுடைய கட்டளை என் ஒருவரை நினைவு செய்யுங்கள் என்பது. ஒருவேளை, கட்டளையின்படி நடக்கின்றீர்கள் என்றால் அப்படிப்பட்ட கீழ்படி தலுள்ள குழந்தைகளுக்கு தந்தையினுடைய ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன, மேலும், அனைத்தும் சகஜமாகிவிடும். ஒருவேளை, தந்தையினுடைய கட்டளையின்படி நடக்கவில்லை எனில், தந்தையினுடைய உதவி மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்காது, ஆகவே, கடினமாகிவிடுகிறது. நீங்கள் சதா கட்டளைக்குக் கீழ்படிந்தவர்கள் தானே? லௌகீக சம்பந்தத்தில் கூட கட்டளைப்படி நடக்கும் குழந்தைகள் மீது எவ்வளவு அன்பு ஏற்படுகிறது. அது அல்பகால அன்பு மற்றும் இது அழிவற்ற அன்பு. இந்த ஒரு ஜென்ம ஆசீர்வாதங்கள் பல ஜென்மங்களுக்கு உடன் வரும். ஆகவே, அழிவற்ற ஆசீர்வாதங்களுக்குப் பாத்திரமானவர்கள் ஆகிவிட்டீர்கள். தன்னுடைய இந்த வாழ்க்கை இனிமையாக இருக்கிறது தானே. எவ்வளவு சிரேஷ்டமான மற்றும் எவ்வளவு அன்பான வாழ்க்கை! பிராமண வாழ்க்கை அன்பானது, பிராமண வாழ்க்கை இல்லையெனில் நம் வாழ்க்கை அன்பானதாக இருக்காது. ஆனால், குழப்பமான வாழ்க்கையாக இருக்கும். எனவே, அன்பான வாழ்க்கையாக உள்ளதா அல்லது களைத்துவிடுகிறீர்களா? சங்கமயுகம் எதுவரை நடக்கும் என்று யோசிக் கின்றீர்களா? உடல்நலம் சரியில்லை, சேவை செய்ய முடியவில்லை இவற்றால் குழப்பம் அடைய வில்லை தானே? இந்த சங்கமயுக வாழ்க்கை அனைத்து பிறவிகளிலும் சிரேஷ்டமானது ஆகும். இது பிராப்திகள் நிறைந்த வாழ்க்கையாகும். பிறகு வருவதோ பிராப்திகளை அனுபவிக்கும் வாழ்க்கை, பிராப்திகள் குறையும் வாழ்க்கை. இப்பொழுது நிறைப்பதற்கான வாழ்க்கை. 16 கலைகள் சம்பன்னமாக இப்பொழுது ஆகின்றீர்கள். 16 கலைகள் என்றால் முழுமை நிலை. இந்த வாழ்க்கை மிகவும் அன்பானது என அனுபவம் செய்கிறீர்களா அல்லது வாழ்க்கையில் எப்போதாவது துன்பம் அடைகின்றீர்களா? துன்பம் அடைந்து இப்பொழுது சென்றுவிடலாம் என்று யோசிக்கவில்லை தானே? தந்தை ஒருவேளை சேவைக்காக அழைத்துச் செல்கின்றார் என்றால் அது வேறு விசயம், ஆனால், துன்புற்றுச் செல்லக்கூடாது. அட்வான்ஸ் பார்ட்டியில் சேவைக்கான பாகம் உள்ளது, மேலும், நாடக அனுசாரம் செல்கின்றார்கள் என்றால் குழப்பமடைந்து (பரேஷான்) செல்ல மாட்டார்கள், பெருமையுடன் (ஷான்) செல்வார்கள். சேவைக்காக சென்றுகொண்டு இருக்கின்றார்கள். எனவே, குழந்தைகளாலோ அல்லது தனக்குத் தானேயோ துன்புறக் கூடாது. தாய்மார்கள் குழந்தை களால் துன்புறுவதில்லை தானே? தமோகுண தத்துவங்களால் ஜென்மம் எடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் சதோபிரதானமான தன்மையை என்ன காண்பிப்பார்கள்? அவர்கள் தன் வசத்தில் இல்லை. நீங்கள் கூட தந்தையினுடைய கட்டளைகளை அவ்வப்பொழுது மறந்துவிடுகின்றீர்கள் தானே! நீங்களே தவறு செய்கின்றீர்கள் எனில், உங்களது குழந்தைகள் தவறு செய்தால் என்ன? சொல்லும்பொழுதே குழந்தைகள் என்று கூறுகின்றீர்கள், குழந்தைகள் என்றாலே என்ன அர்த்தம்? பெரியவர்களாக இருந்தாலும், தவறு செய்யும் பொழுது குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள், அதாவது புத்தியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். ஆகவே, ஒருபோதும் பிறருடைய குழப்பத்தைப் பார்த்து தான் குழப்பம் அடையக்கூடாது. அவர்கள் எவ்வளவு தான் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் நீங்கள் தன்னுடைய சுயபெருமையில் இருந்து ஏன் இறங்குகின்றீர்கள்? பலவீனம் உங்களுடையதா அல்லது குழந்தைகளுடையதா? உங்களை சுயபெருமையில் இருந்து இறக்கிவிடுகிறார்கள் மற்றும் குழப்பம் அடையச் செய்துவிடுகிறார்கள் என்றால் அவர்கள் துணிச்சலானவர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா. எனவே, ஒருபொழுதும் கனவில் கூட குழப்பம் அடையக்கூடாது, அதாவது சிரேஷ்ட பெருமையில் இருந்து வழுவக்கூடாது. தன்னுடைய கௌரவமான நாற்காலியில் அமரத் தெரியாதா! எனவே, இன்றிலிருந்து வியாதியினாலோ, குழந்தைகளாலோ, தன்னுடைய சமஸ்காரங்களாலோ அல்லது பிறராலோ குழப்பமடையக் கூடாது. பிறராலும் குழப்பம் அடைந்துவிடுகிறீர்கள் அல்லவா. மற்ற அனைத்தும் சரியாக உள்ளது, இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி இருக்கின்றார், அதனால் குழப்பம் அடைந்துவிடுகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். குழப்பம் ஏற்படுத்தக்கூடியவர் துணிச்சலானவர் ஆகக்கூடாது, நீங்கள் துணிச்சலானவர் ஆகுங்கள். ஒருவரோ அல்லது பத்து பேரோ, ஆனால், நான் மாஸ்டர் சர்வசக்திவான், பலவீனமானவர் அல்ல. நான் சதா தன்னுடைய சிரேஷ்டமான பெருமை யில் இருக்கக்கூடியவர், குழப்பம் அடைபவர் அல்ல, பிறருடைய குழப்பத்தையும் அழிக்கக்கூடியவர், சதா கௌரவமான சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர் என்ற இந்த வரதானத்தை சதா நினைவில் வைக்க வேண்டும். பாருங்கள், தற்காலத்திலோ நாற்காலி உள்ளது, உங்களுக்கோ சிம்மாசனம் உள்ளது. அவர்கள் நாற்காலிக்குப் பின்னால் மரணிக்கின்றார்கள், உங்களுக்கோ சிம்மாசனம் கிடைக்கின்றது. எனவே, அழிவற்ற சிம்மாசனத்தில் வீற்றிருக்கக்கூடிய, சிரேஷ்டமான பெருமையில் இருக்கக்கூடிய, தந்தையினுடைய இதய சிம்மாசனதாரி ஆத்மா நான் என்ற இதே பெருமையில் இருக்க வேண்டும். எனவே, சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மற்றும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். தில்லி, சேவையின் அஸ்திவாரம் ஆகும். அஸ்திவாரம் பலவீனமாக உள்ளதென்றால், அனைவரும் பலவீனமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். ஆகையினால், சதா உறுதியானவராக இருக்க வேண்டும். நல்லது.

வாரங்கல் குழு:- தன்னை டபுள் லைட் என்று அனுபவம் செய்கின்றீர்களா? யார் டபுள் லைட்டாக இருக்கின்றார்களோ, அந்த ஆத்மாவிற்குள் மைட் அதாவது தந்தையின் சக்திகள் கூடவே இருக்கும். எனவே, டபுள் லைட்டாகவும் இருக்கின்றீர்கள் மற்றும் மைட்டும் உள்ளது. தக்க சமயத்தில் சக்திகளை பயன்படுத்து கின்றீர்களா அல்லது சமயம் கடந்துவிடுகிறது, பின்னால் நினைவு வருகிறதா? ஏனெனில், தன்னிடம் எத்தனை பொருட்கள் இருந்தாலும், ஒருவேளை, தக்க சமயத்தில் பயன்படுத்தவில்லை என்றால் என்ன சொல்வது? எந்த நேரம் எந்த சக்தியின் அவசியம் உள்ளதோ, அந்த சக்தியை அந்த நேரம் பயன்படுத்த முடியவேண்டும் – இந்த விசயத்தின் பயிற்சி அவசியமானது ஆகும். சில குழந்தைகள், மாயை வந்துவிட்டது என்று கூறு கின்றார்கள். ஏன் வந்தது? கண்டறியக் கூடிய சக்தியை பயன்படுத்தவில்லை, வந்துவிட்டது அல்லவா. ஒருவேளை, தூரத்திலிருந்தே மாயை வந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டறிந்துவிட்டீர்கள் என்றால் தூரத்திலிருந்தே விரட்டிவிடுவீர்கள் அல்லவா. மாயை வந்துவிட்டது – வருவதற்கான வாய்ப்பு கொடுத்தீர்கள், அதனால் வந்தது. தூரத்திலிருந்தே விரட்டிவிட்டீர்கள் என்றால் வராது. ஒருவேளை, அடிக்கடி மாயை வருகிறது பிறகு, யுத்தம் செய்து அதை விரட்டுகிறீர்கள் என்றால் யுத்தம் செய்யும் சமஸ்காரம் வந்துவிடும். ஒருவேளை, நீண்டகாலம் யுத்தத்தின் சமஸ்காரம் இருக்குமானால் சந்திரவம்சத்தினர் ஆகவேண்டியது ஆகிவிடும். சூரிய வம்சத்தினர் என்றால் நீண்டகால வெற்றியாளர் மற்றும் சந்திர வம்சத்தினர் என்றால் யுத்தம் செய்யும்பொழுது சில நேரம் வெற்றியாளர், சில நேரம் யுத்தத்தில் உழைப்பு செய்பவர் என்று அர்த்தம். எனவே, அனைவரும் சூரியவம்சத்தினர் ஆவீர்கள் அல்லவா! சந்திரனுக்குக் கூட வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியது சூரியன் ஆகும். எனவே, சூரியனை நம்பர் ஒன் என்று கூறலாம் அல்லவா. சந்திரவம்சத்தினர் இரண்டு கலைகள் குறைந்தவர்கள் ஆவார்கள். 16 கலைகள் என்றால் முழுமையாகத் தேர்ச்சி பெற்றவர்கள் என்று அர்த்தம். ஒருபொழுதும் எண்ணத்தில், வார்த்தையில் அல்லது சம்பந்தம், தொடர்பில், சமஸ்காரங்களில் தோல்வி அடைபவர் கள் அல்ல, இப்படிப்பட்டவர்களை சூரியவம்சத்தினர் என்று கூறுகின்றோம். நீங்கள் அத்தகைய சூரியவம்சத்தினரா? நல்லது. அனைவரும் தன்னுடைய முயற்சியில் திருப்தியாக உள்ளீர்கள் இல்லையா? அனைத்து பாடங்களிலும் முழுமையாகத் தேர்ச்சி பெறவேண்டும், இதுவே தன்னுடைய முயற்சியில் திருப்தி அடைவதாகும். இந்த விதிப்படி தன்னை சோதனை செய்யுங்கள். நான் பறக்கும் கலையில் செல்லக்கூடிய பறக்கும் பறவை ஆவேன், கீழே மாட்டிக்கொள்பவர் அல்ல என்பதை நினைவில் வைக்க வேண்டும். இதுவே வரதானம் ஆகும். நல்லது.

வரதானம்:-

எந்தக் குழந்தைகள் சங்கமயுகத்தில் அதீந்திரிய சுகத்தின் ஆஸ்தியை சதா காலத்திற்காகவும் பெரு கின்றார்களோ, அதாவது யாருக்கு தந்தையினுடைய ஆஸ்தியின் (வில்) மீது முழுமையான அதிகாரம் உள்ளதோ, அவர்களே மனோதைரியம் (வில் பவர்) உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு வலுவான, நிலையான அதீந்திரிய சுகத்தின் அனுபவம் ஏற்படுகிறது. அத்தகைய வாரிசு அதாவது சம்பூரண ஆஸ்தியின் அதிகாரி தான் எதிர்காலத்தில் நிலையான, துண்டிக்கப்படாத சுயராஜ்யத்தின் அதிகாரத்தை அடைகின்றார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top