30 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris

May 29, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சிந்தனை செய்வதற்கான விதி மற்றும் சிந்தனை அதிகரிப்பதற்கான யுக்திகள் (குறிப்புகள்)

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று இரத்தினங்களை வியாபாரம் செய்யும் தந்தை தனது ஒவ்வொரு உயர்ந்த ஆத்மா எந்தளவு ஞானம் – இரத்தினங்களை சேமிப்பு செய்திருக்கிறார்கள் அதாவது வாழ்க்கையில் தாரணை செய்திருக்கிறார்கள்? என்பதை பார்க்க வந்திருக்கிறார். முதலாவது – ஒரே ஒரு ஞான இரத்தினம் பல கோடி மடங்கை விட மதிப்பு வாய்ந்தது.! எனவே சிந்தியுங்கள், ஆரம்பத்திலிருந்து இதுவரை எவ்வளவு ஞான இரத்தினங்கள் கிடைத்திருக்கின்றன. இரத்தினங்களை வியாபாரம் செய்யக்கூடிய பாபாவின் ஒவ்வொரு குழந்தைகளின் புத்தி என்ற பையில் பற்பல இரத்தினங்கள் நிறைந்திருக் கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் தான் ஞான இரத்தினங்களை தருகிறார். ஆனால் இந்த ஞான இரத்தினங்கள் எந்தளவு சுயத்திற்காக மற்றும் மற்ற ஆத்மாக் களுக்காக காரியத்தில் ஈடுபடுத்துகிறார்களோ, அந்தளவு இந்த இரத்தினங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். பாப்தாதா பார்த்துக் கொண்டேயிருக்கிறார் – பாபா அனைவருக்குமே சமமாக தான் கொடுக்கிறார், ஆனால் சில குழந்தைகள் இரத்தினங்களை அதிகரிக்கிறார்கள், மேலும் சில குழந்தைகள் இரத்தினங்களை அதிகரிப்பதில்லை. சிலர் நிறைந்திருக்கிறார்கள், சிலர் துண்டிக்கப் படாத செல்வந்தர்களாக இருக்கிறார்கள். சிலர் நேரத்திற்கு தகுந்தாற் போல் காரியத்தில் பயன்படுத்துகிறார்கள். சிலர் எப்பொழுதும் காரியத்தில் பயன்படுத்தி ஒன்றுக்கு பலமடங்கு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சிலர் எந்தளவு காரியத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்தளவு கூட பயன்படுத்த முடியவதில்லை. ஆகையால் இரத்தினங்களின் மதிப்பை எந்தளவு புரிந்துக் கொள்ள வேண்டுமோ, அந்தளவு புரிந்துக் கொள்ளவில்லை. எந்தளவு கிடைத்திருக் கிறதோ அதை புத்தியில் தாரணை செய்கிறீர்கள், ஆனால் செயலில் கொண்டு வருவதனால் தான் சுகம், குஷி, சக்தி, சாந்தி மற்றும் நிர்விக்ன (தடையற்ற) மனநிலையை அடைவதற்கான அனுபவம் ஏற்பட வேண்டும், அது ஏற்படுவதில்லை. இதற்கான காரணம் சிந்தைனை செய்யும் சக்தியின் குறைபாடு ஆகும். ஏனெனில் சிந்தனை செய்வது என்றாலே வாழ்க்கையில் கொண்டுவருவது, நடைமுறைப்படுத்துவதாகும். சிந்தனை செய்யவில்லை அதாவது புத்தியில் மட்டும் தான் இருக்கிறது. அதை வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் கொண்டு வருவது – தனக்காகவும், மற்ற ஆத்மாக்களுக்காக மேலும் மற்றவர்களுக்கு கூட புத்தியில் மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்கிறார்கள் அதாவது புத்தியில் கொண்டு வருகிறார்கள்.

எப்படி யாராவது ஸ்தூலமான பொக்கிஷத்தை (செல்வத்தை) பெட்டகத்தில் அல்லது லாக்கரில் மட்டும் வைத்துக்கொண்டு, நேரத்திற்கு தகுந்தவாறு அல்லது சதா செயலில் பயன்படுத்த வில்லையென்றால் குஷியின் அனுபவம் ஏற்படாது, நம்மிடம் இருக்கிறது என்று மனதிற்கு மட்டும் ஆறுதலாக இருக்கும். அதிகரிக்கவும் செய்யாது, அனுபவமும் ஏற்படாது. அதுபோல, ஞான இரத்தினங்களையும் கூட ஒருவேளை புத்தி வரை மட்டும் தாரணை செய்கிறீர்கள், ஞாபகத்தில் இருக்கிறது, வார்த்தைகளின் மூலம் வர்ணணை செய்கிறீர்கள் – பாயிண்ட் மிக நன்றாக இருக்கிறது, இதனால் சிறிது நேரத்திற்காக மட்டும் நன்றாக குஷி ஏற்படுகிறது, ஆனால் வாழ்க்கை யில், ஒவ்வொரு செயலிலும் அந்த ஞான இரத்தினங்களை கொண்டு வரவேண்டும். ஏனெனில் ஞானம் என்பது இரத்தினங்களாகவும் இருக்கிறது, ஞானம் வெளிச்சம் (தெளிவு) கொடுக்கிறது, ஞானம் சக்தியாகவும் கூட இருக்கிறது, ஆகையால் ஒருவேளை செயலில் கொண்டு வரவில்லை யென்றால் அதிகரிக்கவும் செய்யாது, அனுபவமும் ஏற்படாது. ஞானம் என்பது படிப்பாகவும் இருக்கிறது, ஞானம் என்பது போர்களத்தின் உயர்ந்த ஆயுதமாகவும் கூட இருக்கும். இது தான் ஞானத்தின் மதிப்பாக இருக்கிறது. மதிப்பை தெரிந்துக் கொள்வது என்றாலே செயலில் கொண்டு வருவது மற்றும் எந்தளவு செயலில் கொண்டு வருகிறார்களோ, அந்தளவு சக்தியின் அனுபவம் செய்ய முடியும். எவ்வாறு ஆயுதத்தை நேரத்திற்கு தகுந்தவாறு பயன்படுத்தவில்லையென்றால் அந்த ஆயுதம் பயனற்றதாகிவிடுகிறது, அதாவது அதற்கு (ஞானத்திற்கு) என்ன மதிப்பு இருக்கிறதோ, அது அந்தளவு இருக்காது. ஞானம் என்பது ஆயுதமாக தான் இருக்கிறது, ஒருவேளை மாயாவின் மீது வெற்றி அடையும் நேரத்தில் ஆயுதத்தை பயன்படுத்தவில்லையென்றால், என்ன மதிப்பு இருக்க வேண்டுமோ, அதை குறைத்து விடுவதால் லாபத்தை பெறமுடிவதில்லை. லாபத்தை பெறுவது என்றாலே மதிப்பு வைப்பது. ஞான இரத்தினங்கள் அனைவரிடமும் இருக்கிறது, ஏனெனில் உரிமையாளராக இருக்கிறீர்கள். ஆனால் நிறைந்தவர் ஆவதில் நம்பர் வாராக (வரிசைப்படி) இருக்கிறீர்கள். முக்கிய காரணத்தை கேட்டீர்கள் – சிந்தனை சக்தியின் குறைபாடு தான்.

சிந்தனை சக்தி பாபாவின் பொக்கிஷத்தை தனது பொக்கிஷமாக அனுபவம் செய்ய வைக்க ஆதாரமாக இருக்கிறது. ஸ்துலமான உணவை ஜீரணம் ஆவதின் மூலம் தான் இரத்தம் உருவாகிறது. ஏனெனில் உணவு என்பது தனிப்பட்டது, அதை ஜீரணம் செய்யும் பொழுது தான் அது இரத்தமாக மாறி தனதாக மாறிவிடுகிறது. அதுபோல சிந்தனை சக்தியின் மூலம் பாபாவின் பொக்கிஷங்கள் அனைத்தும் என்னுடைய பொக்கிஷம் – இது தனது உரிமையாக, தனது பொக்கிஷமாக அனுபவ மாகிறது. பாப்தாதா முன்பு கூட சொல்லி இருந்தார் – தனது குஷியின் போதை ஏற்பட வேண்டும், அதாவது பாபாவின் பொக்கிஷத்தை சிந்தனை சக்தியின் மூலம் செயலில் பயன்படுத்தி பிராப்தி களை அனுபவம் செய்தீர்கள் என்றால் நஷô ஏறும். கேட்கும் சமயத்தில் நஷô இருக்கிறது, ஆனால் எப்பொழுதும் ஏன் இருப்பதில்லை? இதற்கான காரணம் எப்பொழுதும் சிந்தனை சக்தியினால் தனதாக மாற்றிக்கொள்ளவில்லை. சிந்தனை சக்தி என்றால் கடலுக்கு அடியில் சென்று அந்தர்முகி ஆகி ஒவ்வொரு ஞானம் இரத்தினத்தின் ஆழத்தில் செல்வது. திரும்ப திரும்ப மட்டும் சொல்ல வேண்டாம், ஆனால் ஒவ்வொரு ஞான கருத்துக்களின் இரகசியம் என்ன மேலும் ஒவ்வொரு பாயிண்டையும் 1. எந்த சமயம், 2. எந்த முறையில் செயலில் பயன்படுத்த வேண்டும் மேலும் 3. ஒவ்வொரு பாயிண்டையும் மற்ற ஆத்மாக்களுக்காக சேவையில் 4. எந்த முறையோடு காரியத் தில் பயன்படுத்த வேண்டும் – இந்த நான்கு விதமான விஷயங்களில் ஒவ்வொரு ஞான கருத்துக்களையும் கேட்டு சிந்தனை செய்யுங்கள். சிந்தனை செய்வதன் கூடவே நடைமுறையில் அந்த இரகசியத்தின் சாராம்சத்தில் செல்லுங்கள், குஷியின் அனுபவத்தில் செல்லுங்கள். மாயாவின் விதவிதமான தடைகளை நேரம் மற்றும் இயற்கையின் பலவிதமான சூழ்நிலைகளை நேரத்திற்கு தகுந்தவாறு செயலில் பயன்படுத்தி பாருங்கள் – சூழ்நிலைகளுக்கு தகுந்தப்படி மற்றும் தடைக்களுக்கு தகுந்தாற்போல் இந்த ஞான இரத்தினங்கள் மூலம் மாயாஜீத் ஆக்க முடிகிறதா அல்லது மாற்றக்கூடியதாக இருக்க முடியும் என்று நான் சிந்தனை செய்தேனா? நான் நடைமுறையில் கொண்டு வந்தேனா அதாவது மாயாஜீத் ஆனேனா? அல்லது மாயாஜீத் ஆகவேண்டுமென்று நான் சிந்தனை செய்தேன் (நினைத்தேன்), ஆனால் முயற்சி செய்யவேண்டி யிருக்கிறது அல்லது நேரம் வீணாகிவிட்டது? இதன் மூலம் விதி (முறைப்படி) சரியாக இல்லாமல் இருக்கும் பொழுது வெற்றி கிடைக்காது என்பது நிரூபணமாகிறது. பயன் படுத்துவதற்கான வழிக் கூட வேண்டும், பயிற்சியும் வேண்டும். விஞ்ஞானிகளும் கூட மிகவும் சக்திசாலியான குண்டுகளை (பாம்ஸ்) கொண்டு வருகின்றனர். புரிந்துக் கொள்கிறார்கள் – இது போதும் இதன் மூலம் இப்பொழுதும் வெற்றியடைந்து விடலாம். ஆனால் பயன்படுத்தக் கூடிய உரிமையுள்ளவர் களுக்கு பயன்படுத்த தெரியாததால், சக்திசாலியான குண்டு (பாம்ஸ்) இங்கு இருக்கிறது, ஆனால் அந்தமாதிரி இடங்களுக்கு சென்று பயன்படுத்தி விடுகிறார்கள், அது வீணாகிவிடுகிறது. காரணம் என்னவாக இருக்கும்? பயன்படுத்தும் வழிமுறை சரியில்லை. அதுபோல ஒவ்வொரு ஞான இரத்தினங்களும் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஞான இரத்தினங்கள் மற்றும் ஞானத்தின் சக்தியான நிலைக்கு முன்னால் சூழ்நிலைகளோ அல்லது தடைகளோ நிலைத்திருக்க முடியாது. ஆனால் ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால் பயன்படுத்தும் வழி தெரியவில்லை என்று புரிந்துக் கொள்ள வேண்டும். மற்றொரு விஷயம் – சிந்தனை செய்வதற்கான பயிற்சி சதா செய்யாமல் இருக்கும் காரணத்தினால் சமயத்தில் பயிற்சியில்லாமல் திடீரென்று செயலில் ஈடுபடுவதற்கான முயற்சி செய்கிறார்கள், அதனால் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள். ஞானம் புத்தியில் இருக்கிறது, அது சமயத்தில் செயலில் பயன்படுத்திவிடலாம் என்று அலட்சியமும் வந்துவிடுகிறது. எனவே நெடுங்காலத்திற்கான பயிற்சி வேண்டும். இல்லை யென்றால் அந்த நேரத்தில் சிந்தனை செய்யக் கூடியவர்களுக்கு என்ன பட்டப்பெயர் கொடுக்கலாம்? கும்பகர்ணன். அவருக்கு (கும்பகர்ணனுக்கு) என்ன அலட்சியம் இருந்தது? வரட்டும், வந்தால் வெற்றி அடைந்து விடலாம் என்று யோசித்தார். நேரத்தில் நடந்துவிடும் என்று யோசிப்பது, இந்த அலட்சிய போக்கு தான் ஏமாற்றத்தை தருகிறது. ஆகையால் ஒவ்வொரு நாளும் சிந்தனை சக்தியை அதிகரித்துக் கொண்டே இருங்கள்.

ரிவைஸ் கோர்ஸ் (மீண்டும் எடுக்கப்படும் பாடத்தில்), அல்லது அவ்யக்த முரளியில், எதை தினந்தோறும் கேட்கிறோமோ, எனவே சிந்தனை சக்தியை அதிகரிப்பதற்காக தினந்தோறும் ஏதாவதொரு விசேஷமான பாயிண்டை (ஞான கருத்துகள்) புத்தியில் தாரணை செய்யுங்கள், மேலும் நான்கு விஷயங்களை கேட்டீர்கள், அதை முறைபடி பயிற்சி செய்யுங்கள். நடந்தாலும், சுற்றினாலும், எந்த காரியம் செய்தாலும் – சேவை செய்துக் கொண்டிருந்தாலும் முழு நாளும் சிந்தனை செய்துக் கொண்டேயிருங்கள். வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாலும், அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தாலும், சேவை நிலையத்தில் சேவை செய்துக் கொண்டிருந்தாலும், எப்பொழுது புத்திக்கு நேரம் கிடைக்கிறதோ, தனது சிந்தனை சக்தியை அடிக்கடி பயிற்சி செய்ய வையுங்கள். ஒரு சில வேலைகள் செய்துக் கொண்டிருந்தாலும் கூட, அதனுடன் சேர்ந்து சிந்தனையும் செய்ய முடியும். ஒரு சில காரியத்தில் புத்தியின் முழு கவனம் செலுத்தி செய்ய வேண்டிய செயலுக்கு சிறிது நேரம் தான் தேவைப்படுகிறது, இல்லையென்றால் புத்தி இரு தரப்பில் (வேலை மற்றும் பிற சிந்தனை) இருந்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அப்படிப்பட்ட நேரத்தில் தனது தினசரி செயலில் குறித்து வைத்துக் கொண்டால் இடை இடையில் அதிகமான நேரம் கிடைக்கும். சிந்தனை சக்தியை வளர்த்துக் கொள்வதற்காக சிறப்பான முறையில் நேரம் ஒதுக்கி பயிற்சி செய்யவேண்டும் என்பதல்ல. நடந்தாலும், சுற்றினாலும் (எந்த காரியம் செய்துக் கொண்டிருந் தாலும்) கூட செய்ய முடியும். ஒருவேளை தனிமையாக நேரம் கிடைக்கிறதென்றால் மிகவும் நல்லது. மேலும் நுட்பமாக சென்று ஒவ்வொரு ஞான கருத்துகளிலும் தெளிவாக செல்லுங்கள், பிறகு விரிவாக புரிந்துக் கொண்டால் மிகவும் மகிழ்ச்சி வரும். ஆனால் முதலாவதாக ஞான கருத்துகளின் மகிழ்ச்சியான மனநிலையில் நிலைத்திருங்கள், பிறகு சலிப்பு ஏற்படாது. இல்லையென்றால் ரிபிட் (மீண்டும் மீண்டும் ஞான கருத்துகளை மட்டும் சொல்லுவார்கள்) செய்வார்கள், பிறகு சொல்வார்கள், இது நடந்துவிட்டது, என்ன செய்வது?

பலர் சுயதரிசன சக்கரத்தை சுற்றுவதில் சிரிக்கிறீர்கள் (நகைக்கிறார்கள்) அல்லவா – என்ன சக்கரத்தை சுற்றுவது, 5 நிமிடத்தில் சக்கரம் முடிந்துவிடுகிறது! ஸ்திதியின் அனுபவம் செய்ய முடிவதில்லை, ரிபீட் (திரும்ப திரும்ப) மட்டும் தான் செய்கிறோம் – சத்யுகம், திரேத்தா யுகம், துவாபர், கலியுகம், இத்தனை பிறவிகள், இவ்வளவு ஆயுள் காலம், இவ்வளவு காலளவு – அவ்வளவு தான், முடிந்துவிட்டது. ஆனால் சுயதர்சன சக்ரதாரி ஆவது என்றால் ஞானம் நிறைந்தவர், சக்தி சாலியான மனநிலையின் அனுபவம் செய்வது. பாயிண்டின் (ஞான கருத்து) மகிழ்ச்சியில் நிலைத்திருப்பது, ஞானத்தின் இரகசியத்தில் மறைந்திருப்பதை தெரிந்துக் கொள்வது, அப்படிப்பட்ட பயிற்சியை ஒவ்வொரு பாயிண்டிலும் செய்யுங்கள். இதை ஒரே ஒரு சுயதர்சன சக்கரத்தின் விஷயத்தை மட்டும் சொன்னேன். அப்படிப்பட்ட ஒவ்வொரு ஞானத்தின் பாயிண்ட்டை சிந்தனை செய்யுங்கள், மேலும் இடை இடையில் பயிற்சி செய்யுங்கள். அரை மணி நேரம் மட்டும் சிந்தனை செய்தேன் என்பது அல்ல. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் புத்தியை சிந்தனை செய்வதற்கான பயிற்சியில் செல்வது. சிந்தனை சக்தி மூலம் புத்தி பிஸியாக (சுறுசுறுப்பாக) இருப்பதால் இயல்பாகவே எளிதாக மாயாஜீத் ஆகிவிடலாம். பிஸியாக இருப்பதை பார்த்து மாயா அதுவாகவே ஒதுங்கி சென்றுவிடும். மாயா வருகிறது யுத்தம் செய்கிறீர்கள், துரத்துகிறீர்கள், பிறகு சில நேரங்களில் தோல்வி, சில நேரங்களில் வெற்றி – இது போன்ற எறும்புகளின் பாதையில் செல்வதற்கான முயற்சியாக இருக்கிறது. இப்பொழுது தீவிர முயற்சி செய்வதற்கான நேரமாக இருக்கிறது, பறந்து செல்வதற்கான சமயமாக இருக்கிறது. ஆகையால் சிந்தனை சக்தி மூலம் புத்தியை பிஸியாக வையுங்கள். இந்த சிந்தனை சக்தி மூலம் நினைவின் சக்தியில் மூழ்கி இருப்பது – இந்த அனுபவம் எளிதாகிவிடும். சிந்தனை – மாயாஜீத் மற்றும் வீணான எண்ணங் களிலிருந்து கூட விடுவித்து விடுகிறது. எங்கு வீணானது இல்லாமல், தடைகள் இல்லாமல் இருந்தால் சக்திசாலியான மனநிலை மற்றும் அன்பில் மூழ்கியிருப்பதற்கான மனநிலை தானாகவே இருந்துவிடுகிறது.

பலர் யோசிக்கிறார்கள் – பீஜ் ரூபம் (விதை சொரூபத்தின்) மற்றும் சக்திசாலியான நினைவின் மனநிலை குறைவாக இருக்கிறது, மற்றும் மிகவும் கவனம் கொடுத்த பிறகு தான் அனுபவம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் லீகேஜ் (கசிவு) தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். புத்தியின் சக்தி வீணாக போய்விடுகிறது. சில சமயம் வீணான எண்ணங்கள், சில நேரங்கள் சாதாரண எண்ணங்கள் வருகிறது. எந்த செயலை செய்துக் கொண்டிருக்கிறோமோ, அதைப் பற்றிய எண்ணங்களில் புத்தி பிஸியாக இருப்பது – இதை சாதாரண எண்ணங்கள் என்று தான் சொல்லப் படுகிறது. நினைவின் சக்தி மற்றும் சிந்தனை சக்தி எப்படி இருக்க வேண்டுமோ, அவ்வாறு இருப்ப தில்லை, மேலும் இன்று எந்த பாவ காரியமும் செய்யவில்லை, வீணாக்கவில்லை, யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லை என்று தன்னை தானே குஷிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் சக்திசாலியான எண்ணம், சக்திசாலியான மனநிலை, சக்திசாலியான நினைவு இருக்கிறதா? ஒரு வேளை அவ்வாறு இல்லையென்றால் இதை சாதாரன என்ணங்கள் என்று தான் சொல்லப் படுகிறது. செயல் செய்தோம், ஆனால் காரியத்துடன் சேர்ந்து யோகம் (நினைவு) இருப்ப தில்லை. காரியம் செய்பவராக இருக்கிறீர்கள், ஆனால் கர்மயோகியாக இல்லை. ஆகையால் காரியம் செய்துக் கொண்டிருந்தாலும் கூட, சிந்தனை சக்தி மற்றும் முழ்கியிருக்கும் நிலை, இரண்டில் ஏதாவதொரு அனுபவம் சதா இருக்க வேண்டும். இந்த இரண்டு விதமான மனநிலை சக்திசாலியான சேவை செய்ய வைப்பதற்கு ஆதாரமாகும். சிந்தனை செய்யக் கூடியவர்களுக்கு, பயிற்சி செய்யும் காரணத்தினால் எந்த நேரம் எந்தவித மனநிலையை உருவாக்க விரும்புகிறார் களோ, அதை உருவாக்க முடியும். இணைப்பு (பாபாவோடு தொடர்பு) இருக்கும் காரணத்தினால் கசிவு நின்று விடுகிறது, மேலும் எந்த சமயம் என்ன அனுபவம் தேவையோ, விதை சொரூபம் நிலை, ஃபரிஸ்தா ரூபத்தின் நிலை, என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதை எளிதாக செய்ய முடியும். ஏனெனில் ஞானத்தின் நினைவு இருப்பதால், ஞானத்தை அளிக்கும் வள்ளலின் நினைவு தானாகவே நினைவில் இருக்கும். எனவே எப்படி சிந்தனை செய்ய வேண்டும்? என்று புரிந்துக் கொண்டீர்களா. எனவே இன்று எப்படி சிந்தனை செய்வதற்கான விதியை சொன்னேன். மாயாவின் தடைகளிடமிருந்து வெற்றியடைவது அல்லது சதா சேவையில் வெற்றியின் அனுபவம் செய்வது, இதற்கான ஆதாரம் சிந்தனை சக்தி ஆகும். புரிந்ததா? நல்லது.

ஞான கடலின் ஞானம் நிறைந்த ஆத்மாவாகிய குழந்தைகள் அனைவருக்கும், சதா சிந்தனை சக்தி மூலம் சகஜ மாயாஜீத் ஆகக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கும், சதா சிந்தனை சக்தியின் பயிற்சியை அதிகரிக்கக் கூடியவர்களுக்கு, சிந்தனை சக்தி மூலம் அன்பில் மூழ்கிய மனநிலையை அனுபவம் செய்யக் கூடியவர்களுக்கு, சதா ஞான இரத்தினங்களின் மதிப்பை தெரிந்திருக்கக் கூடிய, சதா ஒவ்வொரு கர்மத்தின் ஞானத்தின் சக்தியை காரியத்தில் கொண்டு வரக்கூடிய, அப்படிப்பட்ட சதா சிரேஷ்ட மனநிலையில் இருக்கக் கூடிய விசேஷமான மற்றும் விலைமதிப்பிடமுடியாத இரத்தினங்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:- தன்னை தீவிர முயற்சி செய்யும் ஆத்மா வாக உணர்கிறீர்களா? ஏனெனில் நேரம் மிக வேகமாக நகர்ந்துக் (சென்று) கொண்டே யிருக்கிறது? எப்படி நேரம் நகர்ந்துக் கொண்டேயிருக்கிறதோ, அதனால் நேரத்தில் குறிக்கோளை அடையக் கூடியவர்கள் எந்த வேகத்தில் நகர வேண்டியிருக்கிறது? நேரம் குறைவாக இருக்கிறது, மேலும் பிராப்தி அதிகமாக பெற வேண்டும். எனவே ஒருவேளை குறைந்த நேரத்தில் அதிகப் படியான பிராப்தியை அடைய வேண்டுமென்றால், வேகப்படுத்த வேண்டுமல்லவா! நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், மேலும் தனது முயற்சியின் வேகத்தையும் கூட தெரிந்திருக் கிறீர்கள். எனவே நேரம் வேகமாக செல்கிறது, மேலும் தனது வேகம் குறைவாக இருக்கிறது என்றால் நேரம் அதாவது படைப்பவராகிய உங்களை விட படைப்பு வேகமாக இருக்கிறது. படைப்பவரை விட படைப்பு வேகமாக செல்கிறது என்றால் அதை நல்ல விஷயம் என்று சொல்ல முடியுமா? படைப்பை விட படைப்பவராகிய நீங்கள் முன்னால் இருக்க வேண்டும். சதா தீவிர முயற்சி செய்யும் ஆத்மாவாகி முன்னேறும் நேரமாக இருக்கிறது. முன்னேறிக் கொண்டே இருக்கும் பொழுது ஏதாவது சைட் சீனை (வேடிக்கை) பார்த்து நின்றுவிடுகிறீர்கள், வேடிக்கை பார்ப்பவர் களால் குறித்த (சரியான) நேரத்தில் (இலக்கை) சென்றடைய முடியாது. எந்தவொரு மாயாவின் ஈர்ப்பும் சைட் சீன்னாகும். வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கூடியவர்களால் குறிக்கோளை எப்படி சென்றடைய முடியும்? ஆகையால் சதா தீவிர முயற்சியாளராகி முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். நேரத்தில் சென்றடைந்து விடுவோம், இப்பொழுது நேரம் இருக்கிறது என்பல்ல. அவ்வாறு யோசித்துக்கொண்டே ஒருவேளை மெதுவாக (குறைந்த) வேகத்தில் சென்றால் நேரத்தில் ஏமாந்து விடுவோம். நெடுங்கால தீவிர முயற்சியின் சம்ஸ்காரம் கடைசி யில் கூட தீவிர முயற்சியின் அனுபவம் செய்ய வைக்கும். எனவே எப்பொழுதும் தீவிர முயற்சி யாளர்களாக இருங்கள். சில சமயங்களில் தீவிரமாகவும், சில சமயம் பலவீனமாக முயற்சி செய்வது என்பது அல்ல. ஏதாவது நடந்துவிட்டால் பலவீனமாகிவிடுவது என்பது கிடையாது. இவர்களை தீவிர முயற்சியாளர் என்று சொல்ல முடியாது. தீவிர முயற்சியாளராக இருப்பவர்கள் நிற்பது கிடையாது, பறந்துக் கொண்டேயிருப்பார்கள். எனவே பறக்கும் பறவை ஆகி பறக்கும் கலையின் அனுபவம் செய்துக் கொண்டே செல்லுங்கள். தங்களுக்குள் கூட உதவி அளித்து தீவிர முயற்சியாளராக மாற்றிக் கொண்டே செல்லுங்கள். எந்தளவு மற்றவர்களுக்கு சேவை செய்கிறீர்களோ, அந்தளவு தன்னுடைய ஊக்கம் – உற்சாகமும் அதிகரிக்கும்.

விடைப்பெறும் நேரத்தில்:- (தாதி ஜானகி அவர்களின் வெளிநாடு செல்வதற்கான பயணத்திற்கு பாப்தாதாவிடமிருந்து அனுமதி பெற்றுக் கொண்டிருக்கிறார்.) உள்நாடு-வெளிநாடுகளில் சேவையின் ஊக்கம் உற்சாகம் நன்றாக இருக்கிறது. முதலில் தனக்குள் ஊக்க-உற்சாகம் இருக்க வேண்டும், இயக்கத்தின் சக்தியும் இருக்கிறது, இதில் சதா கவனம் வையுங்கள். அன்பின் சக்தி, உதவியின் சக்தி இருந்தால் அதன் அடிப்படையில் வெற்றி கிடைக்கும். இது தான் நிலம் (அன்பு, உதவி). நிலம் நன்றாக இருந்தால் பழமும் கூட அதற்கு தகுந்தவாறு கிடைக்கும். ஒருவேளை தற்காலிகமாக நிலத்தை சரி செய்து (உழுதால்) விதை விதைத்தால் தற்சமயத்திற்கு தான் பழமும் கிடைக்கும். சதா காலத்திற்காக பழம் (பலன்) கிடைக்காது. எனவே வெற்றி என்ற பழத்தை பெறுவதற்கு முன்னால் எப்பொழுதும் நிலத்தை சோதனை செய்யுங்கள். மற்றபடி யார் செய் கிறார்களோ, அதனுடைய சேமிப்பு ஆகிக் கொண்டேயிருக்கும். இப்பொழுதும் குஷி கிடைக்கிறது, எதிர்காலத்திலும் குஷி கிடைக்கிறது. நல்லது.

 

வரதானம்:-

முழு படிப்பு மற்றும் அறிவுரைகளின் சாரம்சமே இந்த மூன்று வார்த்தைகள் தான் – 1. கர்ம பந்தனத்தை உடைப்பது, 2. தனது சம்ஸ்கார – சுபாவத்தை வளைப்பது, மேலும் 3. ஒரு பாபாவோடு அனைத்து சம்மந்தங்களையும் இணைப்பது. – இந்த மூன்று வார்த்தைகள் தான் சம்பூரண வெற்றி யாளர்களாக மாற்றுகிறது. இதற்காக என்னவெல்லாம் இந்த கண்களின் மூலம் பார்க்கிறோமோ, அவை அனைத்தும் அழிந்து விட்டது என்ற நினைவில் இருங்கள். அதை பார்த்தாலும் தனது புது சம்மந்தம், புது உலகத்தை பார்த்தால், ஒருபொழுதும் தோல்வி ஏற்படாது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top