30 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 29, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

முழு ஞானத்தின் சாரம் - ஸ்மிருதி (நினைவு)

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று சக்திசாலியான தந்தை தனது நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து சக்திசாலி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஒவ்வொரு சக்திசாலி குழந்தையும் தன்னுடைய சக்தியின் அனுசாரம் முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த சக்திசாலி யான வாழ்க்கை அதாவது சுகமயமான, சிரேஷ்டமான, வெற்றி நிறைந்த அலௌகீக வாழ்க்கை யின் ஆதாரம் எது? நினைவு என்ற ஒரு வார்த்தையே ஆதாரம் ஆகும். இந்த முழு நாடகமுமே மறதி மற்றும் நினைவிற்கான விளையாட்டு ஆகும். இந்த நேரம் நினைவினுடைய விளையாட்டு நடந்துகொண்டு இருக்கிறது. பாப்தாதா பிராமண ஆத்மாக்களை எதன் ஆதாரத் தில் மாற்றி இருக்கின்றார்? நீங்கள் ஆத்மா, சரீரம் அல்ல என்ற நினைவை மட்டும் ஏற்படுத்தி இருக்கின்றார். இந்த நினைவு எவ்வளவு அலௌகீக மாற்றத்தை செய்துவிட்டது. அனைத்தும் மாறிவிட்டது அல்லவா. மனித வாழ்க்கையின் விசேஷத்தன்மையே நினைவு என்பதாகும். நினைவு விதை ஆகும், இந்த விதையினால் விருத்தி (உள்ளுணர்வு), திருஷ்டி, கிருத்தி (செயல்), அனைத்து ஸ்திதியும் மாறிவிடுகிறது. ஆகையினால், எப்படி நினைவோ அப்படி ஸ்திதி என்ற மகிமை பாடப்படுகிறது. தந்தை நினைவின் அஸ்திவாரத்தையே மாற்றி இருக்கின்றார். எப்பொழுது அஸ்திவாரம் சிரேஷ்டமாகிவிட்டதோ, அப்பொழுது தானாகவே முழு வாழ்க்கையும் சிரேஷ்டமாகிவிட்டது என்பதாகும். நீங்கள் சரீரம் அல்ல ஆத்மா ஆவீர்கள் என்ற எவ்வளவு சின்ன விசயத்தை மாற்றி இருக்கின்றார். நீங்கள் சரீரம் அல்ல ஆத்மா என்ற இந்த மாற்றம் வந்ததுமே, ஆத்மா மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கும் காரணத்தினால், நினைவு வந்ததுமே சக்திசாலி ஆகிவிட்டீர்கள். இப்பொழுது இந்த சக்திசாலியான வாழ்க்கை எவ்வளவு அன்பான தாக உள்ளது! தானும் நினைவு சொரூபம் ஆகியிருக்கின்றீர்கள் மற்றும் பிறருக்கும் கூட இதே நினைவை ஏற்படுத்தி, எப்படிப்பட்ட நிலையில் இருந்து எப்படி ஆக்கிவிடுகிறீர்கள்! இந்த நினைவினால் உலகமே மாறிவிட்டது. இந்த ஈஸ்வரிய உலகமானது எவ்வளவு அன்பானது! சேவையின் நிமித்தமாக உலகாய ஆத்மாக்களுடன் இருக்கின்றீர்கள், ஆனால், மனம் சதா அலௌகீக உலகத்தில் உள்ளது. இதையே நினைவு சொரூபம் என்று சொல்லப்படுகிறது. என்ன சூழ்நிலை வேண்டுமானாலும் வரட்டும், ஆனால், நினைவு சொரூபமான ஆத்மா, சக்தி சாலியாக இருக்கும் காரணத்தினால், அந்த சூழ்நிலையை எப்படி புரிந்து கொள்வார்கள்? இது ஒரு விளையாட்டு என்று புரிந்து கொள்வார்கள். ஒருபொழுதும் பயப்படமாட்டார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால், சக்திசாலியான ஆத்மாவிற்கு இலக்கை சென்றடைவதற்காக, இவை அனைத்தும் வழியில் தென்படும் சாலையோரக் காட்சிகள் (சைடு சீன்) ஆகும். சாலையோரக் காட்சி நன்றாக உள்ளது அல்லவா! செலவு செய்து கூட சுற்றிப் பார்ப்பதற்குச் செல்கின்றார்கள். இங்கே கூட தற்காலத்தில் அபு மலையை சுற்றிப் பார்க்கச் செல்கின்றீர்கள் அல்லவா! ஒருவேளை, வழியில் சாலையோரக் காட்சி இல்லையென்றால், அந்த வழி நன்றாக இருக்குமா? சலிப்பு (போர்) ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட நினைவு சொரூப, சக்தி சொரூப ஆத்மாவிற்கு – என்ன சூழ்நிலையானாலும், பரிட்சையானாலும், தடையானாலும், பிரச்சனையானாலும் சரி, இவை அனைத்தும் சாலை யோரக் காட்சிகள் ஆகும். இந்த இலக்கின் பாதையில் உள்ள சாலையோரக் காட்சிகளை எண்ணிலடங்காத முறை கடந்திருக்கிறோம் என்பது நினைவில் உள்ளது. எதுவும் புதிதல்ல என்பதன் அஸ்திவாரம் கூட எது? நினைவு. ஒருவேளை, இந்த நினைவு மறந்துவிடுகிறது அதாவது அஸ்திவாரம் அசைந்துவிட்டது என்றால் வாழ்க்கை என்ற முழு கட்டிடம் அசைய ஆரம்பித்துவிடுகிறது. நீங்களோ அசையாதவர்கள் ஆவீர்கள் அல்லவா.

முழு படிப்பினுடைய நான்கு பாடங்களினுடைய ஆதாரம் கூட நினைவே ஆகும். அனைத் தையும் விட முக்கியமான பாடம் நினைவு ஆகும். நினைவு என்றால் நான் யார், தந்தை யார் என்ற நினைவு. இரண்டாவது பாடம் ஞானம் ஆகும். படைப்பாளர் மற்றும் படைப்பினுடைய ஞானம் கிடைத்துள்ளது. அனாதியில் என்னவாக இருந்தீர்கள், ஆதியில் என்னவாக இருந்தீர் கள் மற்றும் நிகழ்கால சமயத்தில் என்னவாக இருக்கின்றீர்கள் என்ற ஞானத்தின் அஸ்திவாரம் கூட நினைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிராமணரிலிருந்து ஃபரிஷ்தா, ஃபரிஷ்தாவிலிருந்து தேவதா மற்றும் எத்தனை நினைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது ஞானத்தின் நினைவு ஆகிவிட்டது அல்லவா. மூன்றாவது பாடம் தெய்வீக குணங்கள் ஆகும். பிராமணர்களாகிய உங்களுடைய குணம் இது இது ஆகும் என்று தெய்வீக குணங்களின் நினைவு கூட ஏற்படுத்தப் பட்டுள்ளது. குணங்களின் பட்டியலும் நினைவில் உள்ளது, ஆகையால், சமயத்தின் அனுசாரம் அந்த குணத்தை காரியத்தில், கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்கள். ஏதாவது நேரத்தில் நினைவு குறைந்து விடுவதன் ரிசல்ட் என்ன ஆகிறது? தக்க சமயத்தில் குணத்தை பயன்படுத்த முடிவ தில்லை. சமயம் கடந்த பிறகு இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் நடந்துவிட்டது, இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என்பது நினைவில் வருகிறது. எனவே, தெய்வீக குணங்களையும் கூட கர்மத்தில் கொண்டு வருவதற்காக தக்க சமயத்தில் நினைவு தேவை. அவ்வப்போது தன்னைப் பார்த்தும் சிரிக்கின்றீர்கள். ஏதாவது ஒரு விசயம் அல்லது ஏதாவது ஒரு பொருள் தக்க சமயத்தில் மறந்துவிடுகிறது என்றால் அந்த சமயம் நிலைமை என்ன ஆகிறது? பொருளோ உள்ளது ஆனால், தக்க சமயத்தில் நினைவு வராததால் பயப்படுகிறீர்கள் அல்லவா. அதைப் போன்றே இது கூட தக்க சமயத்தில் நினைவு வராத காரணத்தினால் அவ்வப்போது பயப்படுகிறீர்கள். எனவே, தெய்வீக குணங்களின் ஆதாரம் என்ன? சதா நினைவு சொரூபம். நிரந்தரமாக மற்றும் இயற்கையாக தெய்வீக குணங்கள் சகஜமாக ஒவ்வொரு கர்மத்தில், காரியத்தில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். நான்காவது பாடம் சேவை ஆகும். இதில் கூட ஒருவேளை, நான் விஷ்வ கல்யாணகாரி ஆத்மா நிமித்தமாக இருக்கின்றேன் என்பதன் நினைவு சொரூபம் ஆகவில்லை என்றால் சேவையில் வெற்றி பெற முடியாது. சேவை மூலம் எந்த ஆத்மாவையும் நினைவு சொரூபம் ஆக்க முடியாது. கூடவே சேவை என்பதே தன்னுடைய மற்றும் தந்தையினுடைய நினைவை ஏற்படுத்துவதே ஆகும்.

நான்கு பாடங்களின் அஸ்திவாரம் நினைவு தான் அல்லவா. முழு ஞானத்தின் சாரமும் ஒரு வார்த்தை ஆகும் – நினைவு, ஆகையினால் பாப்தாதா இறுதித் தேர்வின் கேள்வி என்ன வரப் போகிறது என்பதைக் கூட முதலிலேயே கூறிவிட்டார். மிக நீளமான தேர்வாக இருக்காது. ஒரே ஒரு கேள்விக்கான தேர்வாக இருக்கும், மேலும், ஒரு வினாடிக்கான தேர்வாக இருக்கும். கேள்வி என்னவாக இருக்கும்? நஷ்டமோஹா நினைவு சொரூபம் ((மோகத்தை வென்ற நினைவு சொரூப நிலை). கேள்வியையும் முன்னதாகவே கேட்டுவிட்டீர்கள் இல்லையா, பிறகோ அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். அனைவரும் முதல் எண்ணில் தேர்ச்சி பெறுவீர்களா அல்லது வரிசைக்கிரமமாக தேர்ச்சி பெறுவீர்களா?

இரட்டை அயல்நாட்டினர் எந்த எண்ணில் தேர்ச்சி பெறுவீர்கள்? (முதல் எண்) மாலையை முடித்துவிடலாமா? அல்லது வேறு மாலையை உருவாக்கட்டுமா? உற்சாகம் மிகவும் நன்றாக உள்ளது. இரட்டை அயல்நாட்டினருக்கு தாமதாக வந்தாலும் வேகமாகச் செல்வதற்கான விசேஷ வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பு இருக்கிறது. தனியாக மாலை உருவாக்கினால் சுற்றுலா செல்வதற்கான இடம் என்ன உருவாகுமோ, அங்கு செல்ல வேண்டியதாகிவிடும். இது விருப்பம் என்றால் தனி மாலை உருவாக்கட்டுமா? உங்களுக்காக மாலையில் வருவதற்கான வாய்ப்பு வைக்கப்பட்டுள்ளது, வந்துவிடுவீர்கள்.

அனைத்து டீச்சர்களும் நினைவு சொரூபமானவர்கள் அல்லவா. நான்கு பாடங்களிலும் நினைவு சொரூபம். கடினமான வேலை இல்லை தானே? டீச்சர்கள் என்றாலே தன்னுடைய நினைவு சொரூப தோற்றத்தினால் பிறரையும் கூட நினைவு சொரூபம் ஆக்குபவர்கள் என்று அர்த்தம். உங்களுடைய தோற்றமே பிறருக்கு நான் ஆத்மா என்பதை நினைவூட்ட வேண்டும். நெற்றியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஆத்மா அல்லது ஜொலித்துக் கொண்டி ருக்கும் மணியைத் தான் பார்க்க வேண்டும். எவ்வாறு நாகத்தின் மணியைப் பார்க்கும்பொழுது ஒருவருடைய கவனம் நாகத்தின் பக்கம் செல்லாது, மணியின் பக்கம் செல்லும். அதுபோல் அழிவற்ற ஜொலிக்கக்கூடிய மணியைப் பார்த்து தேக உணர்வு நினைவில் வரக்கூடாது, கவனம் தானாகவே ஆத்மாவின் பக்கம் செல்ல வேண்டும். டீச்சர்கள் இந்த சேவைக்கே நிமித்த மானவர்கள் ஆவீர்கள். மறந்திருப்பவர்களுக்கு நினைவை ஏற்படுத்த வேண்டும் – இதுவே சேவை. சக்திசாலியானவர்களா அல்லது அவ்வப்போது பயப்படுகிறீர்களா? ஒருவேளை, டீச்சர்கள் பயந்துவிட்டால் பிறகு மாணவர்கள் என்ன ஆகுவார்கள்? டீச்சர்கள் என்றால் சதா இயற்கையாக, நிரந்தரமாக நினைவு சொரூபம், சக்தி சொரூபமாக இருப்பவர்கள். எவ்வாறு தந்தை பிரம்மா, முன்னால் இருந்தாரோ, அதுபோன்று டீச்சர்களும் முன்னால் இருக்கின்றீர்கள் அல்லவா. நிமித்தம் என்றாலே முன்னால் இருப்பது. எவ்வாறு சேவைக்காக சமர்ப்பணம் ஆகுவதற்கு தைரியம் வைத்தீர்கள், சக்திவாய்ந்தவர்கள் ஆனீர்கள். எனவே, இந்த நினைவு என்பது என்ன, இது தியாகத்திற்கான பாக்கியம் ஆகும். தியாகம் செய்துவிட்டீர்கள். இப்பொழுது பாக்கியம் என்ன பெரிய விசயம்! தியாகம் செய்துவிட்டீர்கள், ஆனால், அந்தத் தியாகம், தியாகம் அல்ல, ஏனெனில், பிராப்தி மிக அதிகமாக உள்ளது. தியாகம் என்ன செய்தீர்கள்? வெண்ணிற சேலை மட்டும் அணிந்தீர்கள், அதனால் மேலும் அழகாகி விட்டீர்கள், ஃபரிஷ்தாக்களாக, தேவதைகளாக (பரிகளாக) ஆகிவிட்டீர்கள், வேறு என்ன வேண்டும்? மற்றபடி உணவு பழக்கவழக்கத்தை விட்டீர்கள், அதையோ தற்கால மருத்துவர்கள் கூட, அதிகமாக சாப்பிடாதீர்கள், குறைவாக சாப்பிடுங்கள், சாதாரணமானவற்றை சாப்பிடுங்கள் என்று கூறுகின்றார்கள். தற்காலத்தில் மருத்துவர்கள் கூட சாப்பிடுவதில்லை. வேறு என்ன விட்டீர்கள்? ஆபரணங்கள் அணிவதை விட்டீர்கள் தற்சமயத்தில் நகைகளுக்குப் பின்னால் திருடர்கள் செல்கின்றனர். விட்டுவிட்டீர்கள் என்றால் நல்லது செய்துவிட்டீர்கள், புத்திசாலித் தனமான வேலை செய்துவிட்டீர்கள். ஆகையினால், தியாகத்திற்கான கோடி மடங்கு பாக்கியம் கிடைத்துவிட்டது. நல்லது.

இத்தருணம் பாப்தாதாவிற்கு ஏத்தென்ஸில் இருப்பவர்கள் நினைவு வருகின்றார்கள் (ஏத்தென்ஸில் சேவைக்கான பெரிய நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது). அவர்களும் மிகவும் நினைவு செய்து கொண்டு இருக்கின்றார்கள். எப்பொழுதும் ஏதாவது விசாலமான காரியம் நடக்கிறது என்றால் எல்லையற்ற காரியத்தில் எல்லையற்ற தந்தை மற்றும் எல்லையற்ற பரிவாரம் அவசியம் நினைவு வரும். எந்தக் குழந்தைகள் சென்று இருக் கின்றார்களோ, அவர்கள் தைரியமான குழந்தைகள். யார் நிமித்தமாகி இருக்கின்றார்களோ, அவர்களுடைய தைரியம் காரியத்தை சிரேஷ்டமானதாக மற்றும் உறுதியானதாக ஆக்கிவிடு கிறது. தந்தையினுடைய அன்பு மற்றும் விசேஷ ஆத்மாக்களின் சுபபாவனை, சுபவிருப்பம் குழந்தைகளுடன் இருக்கிறது. புத்திவானுக்கெல்லாம் புத்திவான் எவரை வேண்டுமானாலும் நிமித்தமாக்கி தன்னுடைய காரியத்தை செய்வித்துவிடுகின்றார். ஆகையினால், கவலையற்ற சக்கரவர்த்தி ஆகி லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகி சுபபாவனை, சுபவிருப்பத்தின் அதிர்வலைகளைப் பரப்பிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு சேவாதாரி குழந்தைக்கும் பாப்தாதா பெயர் மற்றும் விசேஷத்தன்மை சகிதமாக அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நல்லது.

சதா நிரந்தர நினைவு சொரூபமான சக்திசாலி ஆத்மாக்களுக்கு, சதா நினைவு சொரூபமாகி ஒவ்வொரு சூழ்நிலையையும் சாலையோரக் காட்சியாக அனுபவம் செய்யக்கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா தந்தைக்கு சமமாக நாலாபுறங்களிலும் நினைவின் அலையைப் பரப்பக்கூடிய மகாவீர் குழந்தைகளுக்கு, சதா தீவிர வேகத்தோடு மதிப்புடன் தேர்ச்சி பெறக்கூடிய மகாரதி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

டில்லி குழுவினருடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு :- சதா தன்னுடைய பாக்கியத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றீர்களா? சதா ஆஹா, ஆஹா என்ற பாடல் பாடுகின்றீர்களா? அய்யோ, அய்யோ என்ற பாடல் முடிவடைந்து விட்டதா அல்லது எப்பொழுதாவது துக்கத்தின் அலை வந்துவிடுகிறதா? துக்கம் நிறைந்த உலகத்தில் இருந்து விடுபட்டுவிட்டீர்கள் மற்றும் தந்தையினுடைய அன்பிற்குரியவர் ஆகிவிட்டீர்கள். ஆகையினால், துக்கத்தின் அலை உங்களை தீண்டமுடியாது. நீங்கள் சேவைக்காக இருக்கின்றீர்கள், ஆனால், தாமரை மலருக்கு சமமாக இருக்கின்றீர்கள். தாமரை மலர் சேற்றிலிருந்து வெளியே வராது, சேற்றில் தான் இருக்கிறது, தண்ணீரில் தான் இருக்கிறது, ஆனால், விடுபட்டு தனித்து இருக்கிறது. அதுபோல் விடுபட்டவர் ஆகிவிட்டீர்களா? விடுபட்டவர் ஆவதற்கான அடையாளம் என்னவென்றால் எந்தளவு விடுபட்டு இருப்பார்களோ, அந்தளவு தந்தையின் அன்பிற்குரியவர் ஆகுவார்கள், தானாகவே தந்தையின் அன்பு அனுபவம் ஆகும் மேலும், இந்த பரமாத்ம அன்பு குடை நிழல் ஆகிவிடும். யார் மீது குடை நிழல் இருக்கிறதோ, அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள்! யார் மீது பரமாத்ம குடை நிழல் உள்ளதோ, அவர்களை யாரால் என்ன செய்ய முடியும்! ஆகையினால், நான் பரமாத்ம குடை நிழலுக்குள் இருப்பவர் என்ற பெருமையில் இருங்கள். அபிமானம் அல்ல ஆனால், ஆன்மிகப் பெருமை ஆகும். தேக அபிமானம் இருந்தது என்றால் அபிமானம் வரும், ஆத்ம அபிமானியாக இருந்தால் அபிமானம் வராது ஆனால், ஆன்மிகப் பெருமை இருக்கும். மேலும், எங்கு பெருமை இருக்குமோ, அங்கு தடை இருக்க முடியாது. இருந்தால் கவலை இருக்கும் அல்லது பெருமை இருக்கும். இரண்டும் ஒருசேர இருக்காது. பருப்பு, ரொட்டி நல்லதிலும் நல்லதாகக் கொடுப்பதற்கு பாப்தாதா கட்டுப்பட்டு இருக் கின்றார்கள். தினமும் 36 விதமான உணவு கொடுக்கமாட்டார்கள், ஆனால், அன்பு நிறைந்த பருப்பு, ரொட்டி கண்டிப்பாகக் கிடைக்கும். இது உறுதியானது, இதை எவரும் தடுக்க முடியாது. பிறகு, எதைப் பற்றிய கவலை இருக்க முடியும்! நாமும் சாப்பிட வேண்டும், சந்ததியினரும் சாப்பிட வேண்டும் என்ற கவலை உலகத்தினரிடம் உள்ளது. நீங்களும் பசியோடு இருக்கமாட்டீர்கள், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் பசியோடு இருக்கமாட்டார்கள். வேறு என்ன வேண்டும்? டன்லப் தலையணை வேண்டுமா என்ன! ஒருவேளை, டன்லப் தலை யணை அல்லது மெத்தையில் கவலையோடு தூங்கினால் தூக்கம் வருமா? கவலையற்றவராக இருந்தால் தரையில் படுத்தாலும் தூக்கம் வந்துவிடும். கைகளை தன்னுடைய தலையணை ஆக்கிக் கொண்டாலும் தூக்கம் வந்துவிடும். எங்கு அன்பு உள்ளதோ, அங்கு காய்ந்த ரொட்டி கூட 36 வகை உணவாகத் தோன்றும், ஆகையினால், கவலையற்ற சக்கரவர்த்தி ஆவீர்கள். கவலையற்றவராக இருப்பதற்கான இந்த அரசாட்சி அனைத்து அரசாட்சிகளையும் விட சிரேஷ்டமானது. ஒருவேளை, கிரீடம் அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டார்கள் மேலும், கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் அது சிம்மாசனமாக இருக்குமா அல்லது கவலையுடன் கூடிய ஆசனமாக இருக்குமா? எனவே, பாக்கிய விதாதா பகவான் உங்களுடைய நெற்றியில் சிரேஷ்டமான பாக்கிய ரேகையை வரைந்திருக்கின்றார். கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகி விட்டீர்கள். அந்த தொப்பி மற்றும் நாற்காலியின் அரசாட்சி கிடையாது. கவலையற்ற அரசாட்சி. ஏதாவது கவலை உள்ளதா? பேரக் குழந்தைகளின் கவலை உள்ளதா? உங்களுக்கு நன்மை ஏற்பட்டுவிட்டது என்றால் அவர்களுக்கும் கண்டிப்பாக ஏற்படும். எனவே, சதா தன்னுடைய நெற்றியில் ஆஹா! என்னுடைய சிரேஷ்டமான ஈஸ்வரிய பாக்கியம் என்ற சிரேஷ்ட பாக்கியத்தின் ரேகையைப் பார்த்துக் கொண்டே இருங்கள். பணம், செல்வத்தின் பாக்கியம் அல்ல, ஈஸ்வரிய பாக்கியம். இந்த பாக்கியத்திற்கு முன்னால் பணம் ஒன்றுமே கிடையாது, அது பின்னாலேயே வரும். எவ்வாறு நிழல் உள்ளது, அது தானாகப் பின்னால் வருகிறதா அல்லது பின்னால் வா என்று கூறுகின்றீர்களா? ஆக இவை அனைத்தும் நிழல் போன்றதாகும், ஆனால், பாக்கியமோ ஈஸ்வரிய பாக்கியம் ஆகும். ஒருவேளை அடைய வேண்டும் என்றால் சதா காலத்திற்கானதை அடைய வேண்டும் என்ற இந்த போதையிலேயே சதா இருங்கள். தந்தை மற்றும் ஆத்மா அழிவற்றது என்றால் பிராப்தி மட்டும் அழியக் கூடியதாக ஏன் இருக்க வேண்டும்? பிராப்தியும் அழிவற்றதாக இருக்க வேண்டும்.

பிராமண வாழ்க்கையே குஷி நிறைந்த வாழ்க்கை. குஷியோடு சாப்பிட வேண்டும், குஷியோடு வாழ வேண்டும், குஷியோடு பேச வேண்டும், குஷியோடு வேலை செய்ய வேண்டும். எழுந்ததும் கண் திறந்ததும் குஷியின் அனுபவம் ஏற்பட்டது, இரவு கண்களை மூடியவுடன், குஷியோடு ஓய்வு கிடைத்துவிட்டது – இதுவே பிராமண வாழக்கையாகும். நல்லது.

பாப்தாதாவுடன் தனிப்பட்ட சந்திப்பு – கட்டளைப்படி நடப்பவர் ஆவதன் மூலம் பரிவாரத்தின் ஆசீர்வாதங்கள்

(பாப்தாதாவிற்கு முன்பு காயத்ரி மோதி அவர்களுடைய பரிவாரத்தினர் அமர்ந்திருந்தார்கள்)

பாப்தாதா இந்த பரிவாரத்தின் ஒரு விசயத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றார்கள். எந்த விசயம்? கட்டளைப்படி நடக்கும் பரிவாரம் ஆகும். இவ்வளவு தொலைவில் இருந்து வந்து சேர்ந்து விட்டீர்கள் அல்லவா. இதற்கு கூட ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. யார் கட்டளைப்படி நடக்கின்றார்களோ, அது யாருடைய கட்டளையாக இருந்தாலும், ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஏற்றுக்கொள்கிறார் என்றால் குஷி ஏற்படுகிறது. உள்ளத்திலிருந்து ஒருவர் மீது ஒருவருக்கு ஆசீர்வாதங்கள் வெளிப்படுகின்றன. ஒரு நல்ல நண்பன் அல்லது சகோதரன் இருக்கின்றார், இவர் மிகவும் நல்லவர் என்று ஒருவேளை அவர் கூறுகின்றார் என்றால் இது ஆசீர்வாதங்கள் ஆகிவிட்டது அல்லவா. ஒருவருக்கு சரி என்று சொல்வது அல்லது கட்டளையை ஏற்றுக் கொள்வது என்ற இந்த செயலுக்கு மறைமுகமான ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. ஆசீர்வாதங்கள் தக்க சமயத்தில் மிகுந்த உதவி செய்கின்றன. அந்த நேரம் தெரியாது. அந்த நேரம் காரியம் நடந்துவிட்டது என்று சாதாரண விசயமாகத் தோன்றும். ஆனால், இந்த மறைமுகமான ஆசீர்வாதங்கள் ஆத்மாவுக்கு தக்க சமயத்தில் உதவி செய்கின்றன. இது சேமிப்பு ஆகிவிடுகிறது. ஆகையினால், பாப்தாதா பார்த்து குஷி அடை கின்றார்கள். எந்த காரியத்திற்காக வந்திருக்கின்றீர்கள் என்றாலும் வந்திருக்கின்றீர்கள் அல்லவா மற்றும் பரமாத்ம இடத்திற்கு எக்காரணத்திற்காகவும், அது சுற்றிப் பார்க்கும் கணக்குப்படி வந்திருக்கின்றீர்கள் என்றாலும், அறிந்துகொள்ளும் கணக்குப்படி வந்திருக் கின்றீர்கள் என்றாலும் பாதம் வைத்து விட்டீர்கள், அதற்கான பலன் சேமிப்பாகிவிடும் என்பதைக் கூட நினைவில் வைக்க வேண்டும். இது கூட குறைந்த பாக்கியம் கிடையாது. இந்த பாக்கியத்தைக் கூட போகப்போக அனுபவம் செய்வீர்கள். ஏதோ ஒரு காரணத்தினால் நாம் பாதம் பதித்துவிட்டோம் என்று அந்த சமயம் தன்னை பாக்கியவானாகப் புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது தெரியாது. என்னவென்று தெரியவில்லை என்று இப்பொழுது யோசித்திருப்பீர்கள். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ பாக்கியம் சேமிப்பாகிவிட்டது என்பதை தந்தை அறிந்திருக் கின்றார். இது தக்க சமயத்தில் உங்களுக்குத் தெரியவரும் மற்றும் காரியத்தில் பயன்படும். நல்லது.

(ரஷ்யாவின் சகோதர சகோதரிகளுடைய நினைவை சக்கரதாரி சகோதரி அவர்கள் கொடுத்தார்கள்)

நல்லது, குறைவான சமயத்தில் வெற்றி நன்றாக உள்ளது மற்றும் நல்ல நல்ல தாகமான ஆத்மாக்கள் வெளிப்பட்டுள்ளனர். உங்களுடைய அன்பு தந்தையிடம் வந்து சேர்ந்துவிட்டது. அனைவருக்கும் அன்பு நினைவுகள் எழுத வேண்டும் மேலும், பாப்தாதாவின் அன்பு அனைத்துக் குழந்தைகளுக்கும் சகயோகம் கொடுத்து முன்னேற்றிக் கொண்டு இருக்கின்றது என்று கூற வேண்டும். நல்ல சேவை, அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்.

வரதானம்:-

முயற்சியின் சரியான விதி என்னவென்றால் – அனேக எனது என்பதை மாற்றி ஒரு என்னுடைய பாபா என்ற நினைவில் இருப்பது மற்றும் எது வேண்டுமானாலும் மறந்து போகட்டும், ஆனால் என்னுடைய பாபா என்ற விசயம் மறக்கக்கூடாது. என்னுடையதை நினைக்க வேண்டியது இருக்காது, அதனுடைய நினைவு தானாக வருகிறது. என்னுடைய பாபா என்று உள்ளத்தில் இருந்து கூறுகின்றீர்கள் என்றால் யோகா சக்திசாலி ஆகிவிடுகிறது. எனவே, இந்த சகஜ விதிப்படி சதா முன்னேறிக் கொண்டே வெற்றி சொரூபம் ஆகுங்கள்.

சுலோகன்:-

அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.

கர்மத்தில், பேச்சில், தொடர்பு மற்றும் சம்பந்தத்தில் அன்பும் மற்றும் நினைவு அல்லது ஸ்திதியில் லவ்லீனாகவும் இருக்க வேண்டும். யார் எந்தளவு அன்பானவர்களாக இருப்பார்களோ, அந்தளவு லவ்லீனாகி இருக்க முடியும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையினுடைய அன்பில் லவ்லீனாக இருந்து பிறரையும் கூட சுலபமாக தனக்கு சமமாக மற்றும் பாபாவிற்கு சமமாக ஆக்கிவிடுகிறீர்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

2 thoughts on “30 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris”

  1. 💛🇲🇰👑OMM…OMM…OMM…OMM…OMM SHANTI…🕊️🕊️🕊️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌞💗

  2. 🇲🇰💛💛💛 SUPERPOWER SUPERBLISS SUPERAMAZINE VIBRATIONS INNERENERGY HIGH HIGHCLASS THANK BAAPDADA THANK OM SHANTI…….🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕊️🕊️🕊️👑

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top