29 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

September 28, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிய குழந்தைகளே, இந்த இறுதிப் பிறவியில் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, ஒரு தாமரையைப் போன்று தூய்மையாக இருங்கள். ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். இதுவே மறைமுகமான முயற்சி ஆகும்.

கேள்வி: -

நீங்கள் ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்றவுடன், மிகவும் தெளிவாக அனுபவம் செய்கின்ற வேறுபாடு யாது?

பதில்:-

நீங்கள் பக்தி மார்க்கத்தில் வாயில் தோறும் அலைந்து திரிந்ததுடன், கடவுளைத் தேடி அதிகளவு தடுமாறியும் திரிந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அவரைக் கண்டு விட்டீர்கள். நீங்கள் இன்னமும் பாதையைத் தேடி அலைந்து திரிகின்ற அப்பாவி மக்கள் மீது கருணையும் கொள்கிறீர்கள். பாபா உங்களை அலைந்து திரிவதிலிருந்து விடுவித்து விட்டார். நீங்கள் பாபாவுடன் திரும்பிச் செல்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறீர்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இன்றைய மக்கள் இருளில் உள்ளார்கள். 

ஓம் சாந்தி. ஒருபுறம், பக்தர்கள் கடவுளை நினைவுசெய்கிறார்கள், மறுபுறத்தில், ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது கண்ணைப் பெற்று விட்டீர்கள், அதாவது, ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை இனங்கண்டு விட்டீர்கள். தாங்கள் இன்னமும் அலைந்து திரிவதாக அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது அலைந்து திரிவதில்லை. அதிகளவு வேறுபாடு உள்ளது! தந்தை குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குத் தயார் செய்கிறார். மக்கள் தங்கள் குருமார்களுக்குப் பின்னாலும், யாத்திரைத் தலங்கள், சந்தைகள் போன்றவற்றுக்கும் அதிகளவு அலைந்து திரிகிறார்கள். இப்பொழுது நீங்கள் அலைந்து திரிவது முடிவடைந்து விட்டது. அந்த அலைந்து திரிவதிலிருந்து உங்களை விடுவிப்பதற்குத் தந்தை வந்து விட்டார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு முன்னைய கல்பத்திலும் இராஜயோகத்தைக் கற்பித்தார், இப்பொழுதும் அவர் உங்களுக்கு மிகச்சரியாக அதேவழியில் கற்பிக்கிறார். நீங்கள் ஐந்து விகாரங்களையும் வெல்;கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கூறப்பட்டுள்ளது: மாயையை வெல்பவர்கள் உலகை வெல்கிறார்கள். ஐந்து விகாரங்களே இராவணனாகிய, மாயை என அழைக்கப்படுகின்றன. மாயை ஓர் எதிரியாவாள். செல்வமோ அல்லது செழிப்போ மாயை அல்ல. நீங்கள் எழுத வேண்டும்: ஐந்து விகாரங்களே இராவணனாகிய, மாயை ஆவாள். அப்பொழுது மக்களால் அதன் அர்;த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால், அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். மாiயையை வெல்பவர்கள் உலகை வெல்கிறார்கள். இங்கு, யாதவர்களை அல்லது கௌரவர்களை, தேவர்களை அல்லது அசுரர்களைப் பற்றிய கேள்வியே கிடையாது. இது ஒரு பௌதீக யுத்தம் இல்லை. யோகசக்தியின் மூலம் மாயையாகிய இராவணனை வெல்வதனால், நீங்கள் உலகை வெல்பவர்கள் ஆகுகிறீர்கள் என நினைவுகூரப்பட்டுள்ளது. உலகம் ஜெகத் என அழைக்கப்படுகிறது என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உலகை வெல்ல உதவுவதற்கு உலக அதிபதி வருகிறார். அவர் மாத்திரமே சக்திகள் அனைத்தையும் கொண்ட, சர்வசக்திவான் ஆவார். தந்தையை நினைவுசெய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நினைவே பிரதான விடயம். நினைவில் நிலைத்திருப்பதனால், நீங்கள் எப்பாவச் செயலையும் செய்ய மாட்டீர்கள், நீங்கள் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். தூய்மையாக்குபவராகிய தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்து விட்டார். ஆகவே, நாங்கள் ஏன் பாவம் செய்ய வேண்டும்? நீங்கள் உங்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். மனிதர்களுக்குப் புத்தி உள்ளது, இல்லையா? இதில் யுத்தம் போன்றவற்றுக்கான கேள்வியே கிடையாது; ஐந்து விகாரங்களை வெல்வதற்காக, தந்தையை நினைவுசெய்வது மிகவும் இலகுவானது. ஆம், இதற்கு முயற்சியும், நேரமும் தேவை. மாயை மீண்டும் மீண்டும் புயல்களைக் கொண்டு வந்து, உங்கள் சுடரை அணைப்பதற்கு முயற்சி செய்கிறாள். ஆனால் இதில் யுத்தம் செய்வதற்கான கேள்வியே கிடையாது. அது தேவர்களின் இராச்சியம்; அங்கு அசுரர்கள் இருப்பதில்லை. நாங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய, பிராமணர்கள் ஆவோம். பிராமண குலத்துக்கு உரியவர்கள் மாத்திரமே தங்களைப் பிராமணர்களாகக் கருதுகிறார்கள். ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, ஆத்மாக்களாகிய எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். ஒரேயொருவர் மாத்திரமே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், தாங்கள் நிச்சயமாக வைகுந்தத்தை ஸ்தாபிபபார்கள் எனக் கூறுகின்ற, சிந்தியிலிருந்து வந்த, அதே பிரம்மாகுமார்களும், குமாரிகளும் இவர்களே என வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்வார்கள். ஆத்மா இதனைச் சரீரத்தினூடாகக் கூறுகிறார். ஆத்மா இதனைக் கேட்டு, வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, உங்களுக்கு இவ்வழிமுறையைக் காட்டுகிறார். தந்தை மறைமுகமானவர். இதனை எவரும் அறியார். இது மனிதர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், அப்படியிருந்தும், பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் சகலதுறைப் பாகங்களையும் கொண்டுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மாத்திரமே ஓர் இராச்சியத்தைக் கோருகிறீர்கள் என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்;; இப்பொழுது உங்களை இந்துக்கள் என அழைக்கின்ற, பாரத மக்களாகிய உங்களைத் தவிர, எவராலும் அதனைக் கோர முடியாது. நாங்கள் எங்களுக்கு என்ன பெயரைக் கொடுத்தாலும், அவர்கள் குடிசன மதிப்பீட்டில் எங்களை இந்துக்கள் என்றே இன்னமும் எழுதுகிறார்கள். உண்மையில், நாங்கள் ஆதியில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தோம். அவர்கள் தங்களுடைய தெய்வீகத் தர்மத்திலும், செயலிலும் கீழிறங்கி வந்து சீரழிந்தவர்களாகும்பொழுது, அவர்கள் தங்களை இந்துக்கள் என அழைக்க ஆரம்பிக்கின்றார்;கள். ஏன் ‘இந்துக்கள்’ என்னும் பெயர் கொடுக்கப்பட்டது? இதனையும் எவரும் அறியார். நீங்கள் அவர்களை வினவ வேண்டும்: உங்கள் இந்து சமயத்தை ஸ்தாபித்தவர் யார் என எங்களுக்குக் கூறுங்கள். இந்துஸ்தான் என்பது தேசத்தின் பெயராகும். எவராலும் உங்களுக்கு எதனையும் கூற இயலாதிருக்கும். இப்பொழுது பிராமண, தேவ, சத்திரிய தர்மங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: தேவர்களாகப் போகின்ற, பிராமணர்களுக்கு வந்தனங்கள். பிராமணர்களே அதிமேன்மையான முதல் இலக்கத்தினர். உண்மையில், சத்தியயுகமே சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. இராமச்சந்திரரின் இராச்சியம் கூட சுவர்க்கம் என அழைக்கப்படுவதில்லை. அரைக் கல்பத்துக்கு அது இராம இராச்சியமாகவும், அரைக் கல்பத்துக்கு அது அசுர இராச்சியமாகவும் உள்ளது. இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் இதயத்தினால் கிரகித்துக் கொள்ளப்பட வேண்டும். சுவர்க்கத்துக்குச் செல்வதற்கு நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. அதனை வென்று தூய்மையாக இருங்கள். இதனாலேயே தாமரை மலரின் சின்னம் காட்டப்பட்டுள்ளது. வீட்டில் வாழும்பொழுது, ஒரு தாமரை மலரைப் போன்று தூய்மையாகுங்கள். இந்த உதாரணம் உங்களுக்குரியது. ஹத்தயோகிகளால் வீட்டில் வாழும்பொழுது, ஒரு தாமரையைப் போன்று தூய்மையாக இருக்க முடியாது. அவர்கள் துறவறப் பாதையில் தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள்; அவர்களால் ஓர் இல்லறத்தில் வாழ முடியாது. இதனாலேயே அவர்கள் தங்களுடைய வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து சென்று விடுகிறார்கள். நீங்கள் இருவகையான துறவறத்தையும் ஒப்பிட முடியும். ஓர் இல்லறத்தில் வாழ்பவர்களின் ஞாபகார்த்தமும் உள்ளது. தந்தை கூறுகிறார்: உங்கள் இல்லறங்களில் வாழும்பொழுதும், தைரியத்தைக் கொண்டிருந்து, இந்த இறுதிப் பிறவியில் ஒரு தாமரை மலரைப் போன்று தூய்மையாக வாழுங்கள். அச்சந்நியாசிகள் தங்களுடைய வீடுகளையும், குடும்பங்களையும் துறந்தாலும், நீங்கள் உங்கள் இல்லறத்தில் வாழலாம். பல சந்நியாசிகள் உள்ளார்கள்; அவர்களுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். முதலில், அவர்களும் சதோபிரதானாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டார்கள். இது நாடகத்தில் அவர்களின் பாகங்களாகும். அதேவிடயமே மீண்டும் நடைபெறும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இத்தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. அவர்கள் அற்ப விடயங்களுக்காகத் தொடர்ந்தும் ஒருவரையொருவர் அச்சுறுத்துகிறார்கள்: “இது செய்யப்படாது விட்டால், அப்பொழுது ஒரு பெரிய யுத்தம் ஆரம்பமாகும்!” முன்னைய கல்பத்திலும் அதேவிடயமே நடைபெற்றது என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர்களின் வயிற்றிலிருந்து ஏவுகணைகள் வெளிப்பட்டன எனவும், இது நடைபெற்றது, அது நடைபெற்றது எனவும் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் இன்னமும் ஹோலியின்பொழுது, வேடிக்கையான முகமூடிகளைத் தயாரி;க்கிறார்கள். உண்மையில், அந்த ஏவுகணைகளே விநாசத்தைக் கொண்டு வருகின்றன. கடந்த காலத்தில் நடைபெற்றது அனைத்தும் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும் என்பதைக் குழந்தைகளான நீங்களும் அறிவீர்கள். முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது அனைத்;தும் மீண்டும் நடைபெறுகிறது. உங்கள் புத்தியில் இதன் முழு அர்த்தமும் உள்ளது. இது வெறுமனே எதனையும் கூறுவதற்கான விடயமல்ல. நீங்கள் எவரையும் குற்றம் சுமத்த முடியாது. நாடகத்தின் பாகம் அத்தகையது. நீங்கள் தந்தையின் செய்தியைக் கொடுக்க வேண்டும். இந்நாடகம் அநாதியானதும், அழிவற்றதுமாகும். நியதி என்ன என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். கலியுகத்தின் இறுதியினதும், சத்தியயுகத்தின் ஆரம்பத்தினதும் சங்கமம் மிகவும் பிரபல்யமானது. இதுவே அதிமங்களகரமான யுகம் என அழைக்கப்படுகிறது. இந்நாட்களில், பாபா அதிமங்களகரமான சங்கமயுகத்தைப் பற்றிக் குழந்தைகளான உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். இதுவே அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்கான யுகமாகும். நீங்கள் அனைவரும் சதோபிரதானாகவும், மேன்மையானவர்களாகவும் ஆகுவீர்கள். அவர்கள் இப்பொழுது தமோபிரதானாகவும், சீரழிந்தவர்களாகவும் உள்ளார்கள். நீங்கள் இவ்வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறீர்கள். கலியுகம் ஒரு முடிவுக்கு வந்து, சத்தியயுகம் வரும், அப்பொழுது வெற்றிக் கூக்குரல்கள் இருக்கும். அதனைப் பற்றிக் கூறிய கதையொன்று உள்ளது. இதுவே அனைத்திலும் இலகுவானது. பல பொய்யான கதைகள் உள்ளன. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அவருடைய புகழைப் பாடி வந்தீர்கள் எனத் தந்தையே இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது நான் உங்களுக்கு நடைமுறைரீதியில் சந்தோஷ தாமத்துக்கும், அமைதி தாமத்துக்குமான பாதையைக் காட்டுகிறேன். சற்கதி சந்தோஷத்தின் நிலையும், சீரழிவு துன்பத்தின் நிலையும் ஆகும். கலியுகத்தில் துன்பமும், சத்தியயுகத்தில் சந்தோஷமும் உள்ளன. நீங்கள் இதனை விளங்கப்படுத்தும்பொழுது, அவர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், அவர்கள் தொடர்ந்தும் இதனைப் புரிந்துகொள்வார்கள். மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளது, இலக்கு மிகவும் உயர்ந்தது. நீங்கள் கல்லூரிகளுக்குச் சென்று இந்த ஞானத்தை விளங்கப்படுத்தும்பொழுது, அவர்கள் அதனை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். உண்மையில், இந்நாடகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது; இன்னுமோர் உலகம் இருக்கிறது என்றில்லை. மேலே இன்னுமோர் உலகம் உள்ளது என அவர்கள் எண்ணுகிறார்கள். இதனாலேயே அவர்கள் மேலே நட்சத்திரங்கள் போன்றவற்றுக்குச் செல்கிறார்கள். உண்மையில் மேலே எதுவுமில்லை. கடவுள் ஒருவரே, படைப்பும் ஒன்றே. இதுவே ஒரேயொரு மனித உலகமாகும். மனிதர்கள் மனிதர்களே, ஆனால் சரீரத்துக்கான எண்ணற்ற சமயங்கள் உள்ளன. பல்வேறு வகைகள் உள்ளன. சத்தியயுகத்தில், ஒரு தர்மமே இருந்தது, அது சந்தோஷ தாமம் என அழைக்கப்பட்டது. கலியுகமே துன்ப தாமம் ஆகும். இது சந்தோஷத்தையும், துன்பத்தையும் பற்றிய ஒரு நாடகமாகும். (பரம) தந்தையால் எப்பொழுதாவது தனது குழந்தைகளுக்குத் துன்பத்தை விளைவிக்க முடியுமா? அவர் வந்து உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கிறார். எவ்வாறு துன்பத்தை அகற்றுபவரால் எவருக்காவது துன்பத்தை விளைவிக்க முடியும்? இது இப்பொழுது இராவண இராச்சியமாகும். மனிதர்களில் ஐந்து விகாரங்கள் உள்ளன, இதனாலேயே இது இராவண இராச்சியம் என அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உலக வரலாற்றினதும், புவியியலினதும் இரகசியங்கள் உள்ளன. நீங்கள் இதனை ஒவ்வொரு நாளும் கேட்கிறீர்கள். இது மிகவும் முக்கியமானதொரு கல்வியாகும். ஆகவே தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது மிகக்குறுகிய காலமே எஞ்சியுள்ளது. அந்த நேரத்திற்குள் நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய முழு ஆஸ்தியையும் கோர வேண்டும். நீங்களே கடவுளுக்கான பாதையைக் காட்டுபவர்கள் என மக்கள் படிப்படியாகப் புரிந்துகொள்வார்கள். உலகில் வேறு எவராலும் உங்களுக்குக் கடவுளை அடைவதற்கான பாதையைக் காட்ட முடியாது. கடவுளால் மாத்திரமே உங்களுக்கு அவருக்கான பாதையைக் காட்ட முடியும். நீங்களே செய்தியைக் கொடுக்கின்ற, அவருடைய குழந்தைகள் ஆவீர்கள். முன்னைய கல்பத்தில் கருவிகளாக ஆகியவர்களே மீண்டும் அதேபோன்று ஆகி, தொடர்ந்தும் ஏனையோரையும் அவ்வாறு ஆக்குவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஞானக்கடலைக் கடைந்து, ஆலோசனை கொடுக்க வேண்டும்: பாபா, அங்கு இந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அவற்றிலிருந்து மக்களால் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பாபா உங்களுக்குக் குறைந்தளவான படங்களையே உருவாக்கும்படி கூறுகிறார், ஏனெனில் சில நிலையங்கள் மிகவும் சிறியவை; அவர்கள் அரிதாக ஐந்து தொடக்கம் ஏழு படங்களையே வைத்திருக்க முடியும். பாபா கூறுகிறார்: ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கீதா பாடசாலை இருக்க வேண்டும். ஓர் அறையிலேயே அனைத்தையும் நடாத்துக்கின்ற பலர் உள்ளார்கள். நீங்கள் அங்கு பிரதான படங்களை வைக்கும்பொழுது, இறுதியில் யார் கடவுள் என்பதையும், நீங்கள் அவரிடமிருந்து எதனைப் பெற முடியும் என்பதையும் பற்றிய புரிந்துணர்வை மக்களால் பெற முடியும். கடவுள், ‘பாபா’ என அழைக்கப்படுகிறார். நீங்கள் “பாபுல்நாத் பாபா!” எனக் கூற மாட்டீர்கள். நீங்கள் “உருத்திர பாபா” எனக் கூட கூற மாட்டீர்கள். “சிவபாபா” என்னும் வார்த்தை மிகவும் பிரபல்யமானது. பாபா கூறுகிறார்: இதுவே முன்னைய கல்பத்தின் அதே ஞான யாகமாகும். எல்லையற்ற தந்தை சிவனே யாகத்தை உருவாக்கியுள்ளார். அவர் பிரம்மாவினூடாக, பிராமணர்கள் எனும் படைப்பைப் படைத்து விட்டார். அவர் பிரம்மாவில் பிரவேசித்து, ஸ்தாபனையை மேற்கொள்கிறார். இதுவே இராஜயோக ஞானமாகும். இது பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்படவுள்ள யாகமும் ஆகும். அதே அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும், ஞானக்கடலும் ஆவார். அவரைப் போன்று வேறு எவரும் இருக்க கிடையாது. இந்நாட்களில், அவர்கள் ஒரு யாகம் வளர்க்கும்பொழுது, நான்கு புறங்களிலும் சமயநூல்களை வைக்கிறார்கள். யாக ஆகுதிகளைப் போடுவதற்காக அவர்கள் ஒரு குண்டத்தையும் வைக்கிறார்கள். உண்மையில், இதுவே ஞான யாகமாகும், அவர்கள் இதனைப் பிரதி செய்துள்ளனர். இங்கு, நீங்கள் பௌதீகமான எதனையும் கொண்டிருப்பதில்லை. இப்பொழுது குழந்தைகளான நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டு, எல்லையற்ற ஞானத்தைப் பெற்று விட்டீர்கள். இதனை வேறு எவரும் அறியார். இத்தீயினுள் எல்லையற்ற அர்ப்பணிப்பு செய்யப்படவுள்ளது என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். பழைய உலகம் அழிக்கப்படும். இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது, அது மிகவும் சிறந்தது என்ற சந்தோஷத்தை நீங்கள் தொடர்ந்தும் அனுபவம் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், எதனையாவது ஸ்தாபிப்பவர் அதனைத் தனக்காகவே செய்வார். அவர் தனக்காகவே முயற்சிகள் அனைத்தையும் செய்வார். இந்த யாகத்திலிருந்தே இந்த மகாபாரத யுத்தமும் ஆரம்பித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு, அந்த எல்லைக்குட்பட்ட விடயங்களுக்கும், இந்த எல்லையற்ற விடயங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. நீங்கள் உங்களுக்காகவே முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் தந்தையை அறியும்வரையில், உங்களால் ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தை மாத்திரமே வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களுடைய அனைத்தும் மறைமுகமானது. வன்முறையாளர்களாகி விட்ட ஆத்மாக்கள் அகிம்சாவாதிகளாக வேண்டும். நீங்கள் எவருடனும் கோபப்படக்கூடாது. ஐந்து விகாரங்கள் தானம் செய்யப்படும்பொழுதே, கிரகணம் அகற்றப்பட முடியும். அவற்றினூடாகவே நீங்கள் அவலட்சணம் ஆகினீர்கள். இப்பொழுது எவ்வாறு நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆகமுடியும்? தந்தை இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இலக்ஷ்மியையும், நாராயணனையும் அவ்வாறு ஆக்கியவர் யார்? அவர்கள் யாராவது குருமார்களைக் கண்டடைந்தார்களா? அவர்கள் உலக அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் நிச்சயமாகத் தங்களுடைய முன்னைய பிறவியில் சிறந்த செயல்களைச் செய்திருக்க வேண்டும், இதனாலேயே அவர்கள் ஒரு சிறந்த பிறவியைப் பெற்றார்கள். சிறந்த செயல்களைச் செய்வதனாலேயே ஒரு சிறந்த பிறவி பெறப்படுகிறது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் நிச்சயமாக ஒரு தொடர்பு இருக்க வேண்டும். பிரம்மா ஒரு விநாடியில் விஷ்ணு ஆகுகிறார். மனிதர்கள் தேவர்களாக மாறுகிறார்கள், இதுவே ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என அறியப்பட்டுள்ளது. நீங்கள் தந்தைக்கு உரியவராகியவுடன், ஜீவன்முக்திக்கான ஆஸ்தியைக் கோருகிறீர்கள். அரசர்கள், பிரஜைகள் அனைவருமே ஜீவன்முக்தி அடைந்தவர்களாக உள்ளார்கள். அங்கு செல்லவுள்ள எவரும் ஜீவன்முக்தி அடைந்தவர்களாக வேண்டும். தந்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார், அப்பொழுது அது ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கு முயற்சி செய்வதற்கான ஒரு விடயமாகுகிறது. அனைத்தும் உங்கள் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. நாங்கள் ஏன் தொடர்ந்தும் முயற்சி, செய்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரக்கூடாது? தந்தையைப் பெருமளவுக்கு நினைவுசெய்வதனால், உங்களால் அவருடைய இதயத்தில், அதாவது, சிம்மாசனத்தில் அமர இயலும். தந்தை உங்களுக்குப் பெருமளவுக்குக் கடினமான வேலையைக் கொடுப்பதில்லை. அவர் அப்பாவித் தாய்மார்களை வேறு என்ன முயற்சியைச் செய்ய வைப்பார்? தந்தையின் நினைவு மறைமுகமானது. ஞானம் வெளிப்படுத்தப்படுகிறது. கூறப்பட்டுள்ளது: இவர் நன்கு சொற்பொழிவு ஆற்றுகின்றார், எவ்வாறாயினும், அவர் எந்தளவுக்கு யோகத்தில் நிலைத்திருக்கிறார்? அவர் தந்தையை நினைவுசெய்கிறாரா? அவர் எவ்வளவு நேரத்துக்குத் தந்தையை நினைவுசெய்கிறார்? நினைவினூடாக மாத்திரமே உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே ஆன்மீகத் தந்தையாகிய சிவன் மாத்திரமே வந்து, ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கொடுக்கின்ற ஆன்மீக ஞானம். வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

  1. உங்கள் புத்தியில் அழிவற்ற நாடகத்தின் இரகசியங்களை வைத்திருப்பதுடன், எவரையும் குற்றஞ் சுமத்தாதீர்கள். அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். இக்குறுகிய காலத்தில் தந்தையிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோருங்கள்.
  2. இரட்டை அகிம்சாவாதிகள் ஆகுவதற்கு, ஒருபொழுதும் எவருடனும் கோபப்படாதீர்கள். விகாரங்களைத் தானம் செய்வதுடன், தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகுவதற்கும் முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் எதனையாவது தயாரிக்கும்பொழுது, அதில் அதனுடைய சேர்வைகளை இட வேண்டும். உப்பு அல்லது சீனி போன்ற சாதாரணமான எதுவும் குறைவாக இருந்தாலும், சுவையானதொன்று உண்பதற்குத் தகுதியாக இருக்க மாட்டாது. அதேபோன்று, உலக மாற்றம் எனும் இம்மேன்மையான பணிக்கு, ஒவ்வோர் இரத்தினமும் தேவைப்படுகின்றார்: ஒவ்வொரு விரலும் தேவைப்படுகின்றது. ஒவ்வொருவரும் நிச்சயமாக, தங்கள் சொந்த வழியில் தேவைப்படுகின்ற, ஒரு மேன்மையான மகாராத்தி ஆவார். இதனாலேயே நீங்கள் உங்களுடைய உயர்வான உதாரண குணத்தின் பெறுமதியைப் புரிந்துகொள்ள வேண்டும்: நீங்கள் அனைவரும் மகாத்மாக்கள். எவ்வாறாயினும், நீங்கள் மகத்தானவர்களாக இருக்கும் அதே அளவிற்குப் பணிவானவராகவும் இருக்க வேண்டும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top