29 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

29 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

28 November 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! உலகத்தில் வேறு யாரிடமும் பயப்படாதீர்கள். ஆனால் இந்த தந்தையிடம் நிச்சயம் பயப்படுங்கள், பயப்படுதல் என்றால் பாவ கர்மங்களில் இருந்து (விலகி) பாதுகாப்பாக இருத்தல் ஆகும்.

கேள்வி: -

பாபா ஒவ்வொரு குழந்தையையும் தன்னை சோதித்துக் கொள்வதற்கான (சார்ட் வைத்தல்) ஸ்ரீமத் ஏன் அளிக்கிறார்?

பதில்:-

ஏனென்றால் ஈஸ்வரிய சட்டம் மிகவும் கடுமையானதாகும். ஒரு வேளை பிராமணனாகி சிறிய பெரிய தவறுகள் நடக்கிறது என்றால் மிகவும் கடுமையான தண்டனைகளை அடைய வேண்டியிருக்கும். ஆகவே, தன்னை சோதித்துக் கொள்ளுங்கள் என பாபா கூறுகிறார். ஒரு வேளை ஏதாவது பழைய கணக்கு வழக்கு இருந்தால் அவமரியாதையுடன் தண்டனையும் அடைய வேண்டி யிருக்கும். இப்போது மரணத்தின் தருணம் மிகவும் அருகில் இருக்கிறது. ஆகவே தன்னுடைய அனைத்து கணக்கு வழக்குகளையும் யோக பலத்தினால் முடியுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. பாபாவின் நினைவில் குழந்தைகள் தானாகவே இருக்கிறார்கள். அடிக்கடி கூற வேண்டிய அவசியம் இல்லை. போகும் போதும், வரும் போதும்., உட்காரும் போதும், எழும் போதும் பாபாவின் நினைவி லிருந்தால் உங்களை பதீதமாக மாற்றிய இராவணனை வெற்றி அடைவீர்கள் என பாபா டைரக்ஷன் கொடுக்கிறார். உங்களுக்கு எந்த ஆயுதமும் அளிக்கப்பட வில்லை. யோக பலத்தினால் மட்டும் நீங்கள் இராவணனை வெற்றி அடைகிறீர்கள். நிச்சயமாக வெற்றி அடைய வேண்டும். மேலும் சங்கமத்தில் தான் அடைகிறீர்கள். அப்போது தான் இராவண இராஜ்யம் முடிந்து இராம இராஜ்யம் உருவாகிறது பாபா ஒரு போதும் யாருக்கும் இம்சையைக் கற்றுக் கொடுப்பதில்லை. தேவதைகளுடையதோ அகிம்சா பரமோ தர்மம் ! அங்கே காம விகாரத்தின் இம்சை கிடையாது என்பது உலகத்திற்குத் தெரியவில்லை. யார் போன கல்பத்தில் நிர்விகாரி ஆனார்களோ அவர்களே உங்களின் விˆயங்களைக் கேட்பார்கள். இப்போது நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கின்றீர்கள். சிவ சக்தி சேனை என்று பாடப்பட்டிருக்கிறது. நீங்கள் குப்தமான போர் வீரர்கள். ஒவ்வொருவரும் தனக்காக செய்து கொண்டிருக்கிறீர்கள். மாயாயை வென்றவர், உலகத்தை வென்றவர் ஆக வேண்டும். நீங்கள் உங்களுக்காக செய்கிறீர்கள் என்றாலே தங்களுடைய பாரத தேசத்திற்காக செய்கிறீர்கள். இதில் யார் நன்கு முயற்சி செய்கிறீர்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். யார் 5 விகாரங்களை வெற்றி அடைகிறார்களோ அவர்களே உலகை வென்றவர் ஆகிறார்கள். வேறு எந்த பொருளின் மீதும் வெற்றி அடைவது கிடையாது. உங்களுடையது இராவண இராஜ்யத்தை வெற்றி அடைதல் ஆகும். அதாவது, தெய்வீக குணங்களைக் கடைப்பிடித்தல் ஆகும். தெய்வீக குணங்களைக் கடைப்பிடிக்காமல் சத்யுகத்திற்குப் போக முடியாது. நாம் எவ்வளவு தெய்வீக குணங்களை கடைபிடித்தோம் என தன்னைத்தானே கேளுங்கள். தெய்வீக குணங்களைக் கடைபிடித்தல் என்றால் இராவணனை வெற்றி அடைதல் ஆகும். இராம இராஜ்யம் இருந்தது என்று கூறுகிறார்கள் என்றால் ஒரு இராமர் மட்டும் இராஜ்யம் செய்திருக்க முடியாது. பிரஜைகளும் இருந்திருப்பார்கள். இங்கே இராஜா இராணி பிரஜைகள் அனைவரும் இராவணன் மீது வெற்றி அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்து கொண்டிக்கிறார்கள். தெய்வீக குணங்களில் உணவு, பேசுதல், செய்தல் அனைத்தும் சுத்தமாக தூய்மையாக மாறுகிறது. ஒவ்வொரு விˆயத்திலும் உண்மையைக் கூற வேண்டும். பாபா தான் சத்தியமானவர். இப்படிப்பட்ட பாபாவுடன் அந்தளவு உண்மையாக இருக்க வேண்டும். ஒருவேளை உண்மையாக இல்லை என்றால், எவ்வளவு கெட்ட நிலை ஏற்படும். உயர்ந்த நிலையை அடைய வேண்டும். நரனிலிருந்து நாராயணனாக, நாரி (பெண்) லஷ்மியாக மாற வேண்டும் ! உங்களின் வழி மற்றும் விளைவை நீங்களே அறிகிறீர்கள் என கூறப்படுகிறது. பாபா காட்டும் வழியினால் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவராக மாறுவீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை, உயர்ந்ததிலும் நிலையை அடைய வைக்கின்றார். எனவே இப்போது ஸ்ரீமத் படி நடந்து தெய்வீக குணங்களைக் கûப்டபிடிக்க வேண்டும். பல பிறவிகளின் பாவம் யோக பலம் இல்லாமல் நீங்காது. ஆகவே, நினைவு யாத்திரை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். அமிர்த வேளையில் நினைவு நன்றாக இருக்கும். அச்சமயம் வாயு மண்டலமும் நன்றாக இருக்கிறது. பகலில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமருங்கள். ஆனால் அமிர்த வேளையைப் போன்ற நேரம் இருப்ப தில்லை. நம்முடைய விˆயங்கள் குப்தமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் நாங்கள் போரில் இருக் கிறோம் என கூறுவார்கள். நம்முடைய யுத்தம் இராவணனுடனாகும். இவன் நம்பர் ஒன் எதிரியாவான். இராம சம்பிரதாயத்தினர் ஸ்ரீமத் படி இராவண சம்பிரதாயத்தினரை வெற்றி அடைந்திருக்கின்றனர். பாபா சர்வ சக்திவான் அல்லவா ? உலகம் இச்சமயம் காரிருளில் இருக்கிறது. நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை மாயையிடம் தோற்றால் தோல்வி. மாயை என்று எதற்குக் கூறப்படுகிறது. இதையும் யாரும் அறியவில்லை. முழு இலங்கையிலும் இராவணின் இராஜ்யம் இருந்தது. சாஸ்திரங்களில் பக்தி மார்க்கத்தின் கட்டுக் கதைகள் எவ்வளவு எழுதி இருக்கின்றனர். அதை பல பிறவிகளாக படித்திருக்கிறீர்கள். இப்போதும் நிச்சயமாக சாஸ்திரங்களைப் படிக்க வேண்டும் என கூறுகிறார்கள். யார் படிக்க வில்லையோ அவர்கள் நாத்திகன் எனப்படுகிறார்கள். சாஸ்திரங்களை படித்து படித்து அனைவரும் நாஸ்திகர் ஆகி விட்டனர் என பாபா கூறுகின்றார். இந்த விˆயங்களை குழந்தைகளுக்கு நன்கு புரிய வைக்க வேண்டும். பாரதம் தூய்மையாக இருந்தபோது அதற்கு சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. அதே பாரத வாசிகள் 84 பிறவிகளை எடுத்து எடுத்து இப்போது பதீதமாக தமோபிரதானமாகி இருக்கிறார்கள். இப்போது மீண்டும் தூய்மையாக எப்படி மாறுவது? என்னை நினைவு செய்தால் சதோபிரதானமாக பாவனமாக மாறுவீர்கள். வேறு எந்த தேகதாரி யையும் நினைக்காதீர்கள் என பாபா கூறுகின்றார். யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். குரு இல்லை என்றால், காரிருள் என்று கூறப்படுகிறது. கணக்கற்ற குருக்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் இருளில் அழைத்துச் செல்லக் கூடியவர்கள் ஞான சூரியன் வரும் போது தான் காரிருள் விலகுகிறது. சன்னியாசிகள் தூய்மையாக இருக்கலாம். ஆனால் பிறவியோ விகாரத்தினால் எடுக்கிறார்கள் அல்லவா? இங்கு அனைவருடைய உடலும் துற்நாற்றம் அடைகிறது, அப்படிப்பட்ட துற்நாற்றம் வீசக்கூடிய உடலை தந்தை சுத்தம் செய்கின்றார். ஆத்மா தூய்மையாக மாறினால் உடலும் நல்லதாக கிடைக்கும். அதற்காக முயற்சி செய்ய வேண்டும். தன் மூலமாக எந்த கெட்ட வேலையும் நடக்கவில்லையா என சோதிக்க வேண்டும். ஈஸ்வரிய நியமங்கள் கூட கடுமையாக இருக்கிறது. யாராவது கெட்ட வேலை செய்தால் அவர்ககளின் தண்டனை மிகவும் கடுமையானதாக கிடைக்கும், இது மரணத்தின் நேரம் ஆகும். யோக பலத்தினால் கணக்கு வழக்கை முடிக்க வேண்டும். ஒரு வேளை முடிக்க வில்லை என்றால், தண்டனை அடைய வேண்டியிருக்கும். பிறகு தண்டனையும் ரொட்டி துண்டும் தான் என்று கூறப்படுகிறது. ரொட்டி அனைவருக்கும் கிடைக்கிறது. முக்தி மற்றும் ஜீவன் முக்தியின் ரொட்டி அனைவருக்கும் கொடுப்பார்கள். சிலர் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைகிறார்கள். சிலருக்கு தண்டனை கிடைக்கும். பிறகு சிறிது ரொட்டி அவ மரியாதையோடு கிடைக்கும். அவர்கள் சிம்மாசனத்தில் அமர முடியாது. ஏதாவது தவறான வேலை செய்தால் அவமரியாதை உண்டாகும். அதுவும் தந்தையின் முன்பு. சிவபாபா அமர்ந்திருக்கிறார் அல்லவா? உங்களுக்கு நான் இவருக்குள் இருப்பேன், எவ்வளவு புரிய வைத்தேன் என்றெல்லாம் காட்சிகள் காண்பிப்பார். இப்போது நாம் சம்பூரணமானவருக்குள்(பிரம்மா) வருகிறேன். குழந்தைகளாகிய நீங்கள் சம்பூரண பாôபவிடம் செல்கிறீர்கள். அவர் மூலமாக சிவபாபா டைரக்ˆன் அளிக்கிறார்! இவருக்குள் அமர்ந்து உங்களை எவ்வளவு படிக்க வைத்தேன், தெய்வீக குணங்களைக் கடைப்பிடியுங்கள், சேவை செய்யுங்கள் என புரிய வைத்தேன் என பாபா காட்சிகள் காண்பிப்பார். யாரையும் நிந்திக்காதீர்கள். இருப்பினும் நீங்கள் இந்த வேலையைச் செய்தீர்கள், இப்போது தண்டனை அடையுங்கள். எவ்வளவுக் கெவ்வளவு பாவம் செய்திருக்கிறோமோ அவ்வளவு தண்டனை அடைய வேண்டியிருக்கும். சிலர் நிறைய தண்டனைகளை அடைகிறார்கள். சிலர் குறைவாக அதிலும் வரிசைக் கிரமம் இருக்கிறது. எவ்வளவு முடியுமோ யோக பலத்தினால் விகர்மங்களை நீக்கிக் கொண்டே இருங்கள். நாம் சம்பூரணமாக, பக்கா சொக்கத் தங்கமாக எப்படி மாறுவோம் என்ற மிகப் பெரிய கவலை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். உட்காரும் போதும், எழும் போதும் இது புத்தியில் இருக்கட்டும். எவ்வளவு நினைக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும். மாயையின் புயலைப் பொருட்படுத்தாதீர்கள். எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ பாபாவை நினையுங்கள். நான் தமோபிர தானத்திலிருந்து சதோபிரதானமாக வேண்டும். பாபாவை நினைவு செய்தால் பாவங்கள் நீங்கும். எந்த பாவமும் செய்யக் கூடாது. இல்லை என்றால் 100 மடங்காகி விடும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் விருத்தி அடைந்து அடைந்து சத்தியநாசம் ஆகிவிடும். பாவத்திற்கு மேல் பாவம் மாயை செய்ய வைத்துக் கொண்டே இருக்கும். எல்லையற்ற தந்தையை அவமரியாதை அடையச் செய்கிறது. இதுவும் பலருக்குத் தெரிவதில்லை. சிவபாபா முரளி கூறுகிறார் என நினையுங்கள் என்று பாபா எப்போதும் புரிய வைக்கிறார். சிவபாபா டைரக்ˆன் அளிக்கிறார் என்றால், நினைவும் இருக்கும், பயமும் இருக்கும். நிறைய பாவம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். பாபா எங்கள் மூலமாக இந்த தவறு நடந்து விட்டது என்று தெளிவாகக் கூற வேண்டும். பாவங்களின் சுமை தலைமீது நிறைய இருக்கிறது என பாபா புரிய வைக்கிறார். என்ன செய்தீர்களோ அதைக் கூறுங்கள். உண்மையைக் கூறுவதால் பாதி தண்டனை குறைந்து விடும்.

யார் நம்பர் ஒன் புண்ணிய ஆத்மாவாக மாறுகிறார்களோ அவர்களே நம்பர் ஒன் பாவ ஆத்மாவாக மாறுகிறார்கள் என பாபா புரிய வைக்கின்றார். உங்களுடைய பல பிறவிகளின் கடைசி பிறவி இது என பாபாவே கூறுகின்றார். நீங்கள் புண்ணிய ஆத்மாவாக இருந்தீர்கள். இப்போது பாவ ஆத்மாவாக மாறியிருக்கிறீர்கள். மீண்டும் புண்ணிய ஆத்மாவாக மாற வேண்டும். தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். இங்கே நீங்கள் தலை வணங்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். இவரும் கூட வயதானவர் நமஸ்காரம் செய்கிறார். குழந்தைகள் அடிக்கடி வீட்டில் நமஸ்காரம் செய்ய மாட்டார்கள். ஒரு முறை நமஸ்காரம் செய்தால் அதற்குப் பதிலாக செய்யப்படுகிறது. நீங்கள் என்னை பெரியவன் என நினத்து நமஸ்காரம் செய்கிறீர்கள். பிறகு நான் உங்களை உலகத்திற்கே அதிபதி என புரிந்துக் கொண்டு நமஸ்காரம் செய்கிறேன் என பாபா கூறுகிறார். இதில் அர்த்தம் இருக்கிறது அல்லவா? மனிதர்கள் ராம ராம் என கூறுகிறார்கள். ஆனால் பொருளைப் புரிந்துக் கொள்ளவில்லை. உண்மையில் ராம் என்றால் சிவபாபா. அந்த ரகுபதி ராமன் கிடையாது. இந்த ராமர் நிராகாரர் ஆவார். அவருடைய பெயர் சிவ தந்தை ஆகும். சிவன் முன்பு சென்று நான் இராமரின் பூஜை செய்கிறேன் என யாரும் கூற மாட்டார்கள். நீங்கள் கோவில்களுக்குச் சென்று இவர்களும் மனிதர்களாக இருந்தனர் என புரிய வையுங்கள் என பாபா இப்போது கூறுகிறார். நீங்கள் இவர்களிடம் சென்று தாங்கள் நிர்விகாரி, சர்வ குணங்களும் நிறைந்தவர், நாங்கள் பாவி, கீழானவர்கள் என்றெல்லாம் மகிமை பாடுகிறீர்கள். இந்த உடலும் மனிதனுடையது, அந்த உடலும் மனிதனுடையது. ஆனால் அதில் தெய்வீக குணங்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே தேவதை ஆவார். எங்களுக்குள் அசுர குணம் இருக்கிறது. ஆகவே குரங்காகவே இருக்கிறோம் என நீங்களே கூறுகிறீர்கள். இருவரின் முகமும் ஒன்றாக இருக்கிறது. நடத்தை வித்தியாசமாக இருக்கிறது. பாரத வாசிகள் தான் கிரீடம் உடையவராக இருந்தனர். இப்போது கிரீடம் இல்லை. பாரதவாசிகளே ஏழைகளாகவும் ஆகின்றனர். பாபாவும் பாரதத்தில் தான் வருகிறார். எங்கே சொர்க்கமாக மாற்ற வேண்டுமோ அங்கே வருவார் அல்லவா? களங்கி அவதாரம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு களங்கப் படுத்துகின்றனர். மற்ற தர்மத்தினரும் ஏதாவது கூறுகின்றனர் என்றால், அவர்களும் பாரத வாசிகளைப் பின்பற்றுகின்றனர். கல் புத்தியாக இருக்கின்ற காரணத்தால் என்னை கல்லிலும் முள்ளிலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பாபாவைப் பற்றித் தெரியவில்லை. பாபா இவருக்குள் பிரவேசமாகி பாரதத்தை எந்தளவு கிரீடம் உடையதாக மாற்றுகிறார். பாரதத்திற்கு எவ்வளவு சேவை செய்கிறார். என்னை நீங்கள் நிந்தித்து விட்டீர்கள் என பாபா கூறுகிறார். நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகிறேன். நீங்கள் எவ்வளவு அபகாரம் செய்கிறீர்கள். இராவணனன் உங்களின் வழியில் தடையை ஏற்படுத்துகிறான். கீழான நிலை ஆகிவிட்டது. பதீத பாவனா ! வாருங்கள், என்று அழைக்கிறார்கள். எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கப் படுகிறது. இருப்பினும் சில குழந்தைகள் மறந்து போகிறார்கள். யோகா (நினைவு) செய்ய வில்லை என்றால் தாரணையும் நடக்காது. ஆகவே தான் பந்தனத்தில் இருப்பவர்கள், பிறரை விட அதிகமாக நினைக்கிறார்கள் என பாபா கூறுகிறார். சிவபாபாவின் நினைவில் பொறுத்துக் கொள்ளுகிறார்கள். பாரதவாசிகளிலும் யார் தேவி தேவதைகளாக மாறுவார்களோ அவர்களே இங்கே வருவார்கள். ஆரிய சமாஜத்தினர் தேவதைகளின் சிலைகளை ஏற்றுக் கொள்வதில்லை. மரத்தின் கடைசியில் வருகின்றனர் எனில் இரண்டு மூன்று பிறவிகள் கூட கஷ்டபட்டு எடுப்பர்.

விகாரம் இல்லாமல் உலகம் எப்படி நடக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். அட, தேவதைகள் சம்பூரண நிர்விகாரி என அழைக்கப்படுகின்றனர் அல்லவா? அங்கே விகாரம் இல்லை என்பது யாருக்கும் தெரியாது. போன கல்பத்தினர் உடனே புரிந்துக் கொள்கிறார்கள். பகவான் வாக்கு- காமம் மிகப் பெரிய எதிரி என்று பாடப் பட்டிருக்கிறது. ஆனால் பகவான் எப்போது கூறினார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இப்போது குழந்தை களாகிய நீங்கள் உலகத்தை வென்றவர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போது உயர்ந்த பதவி அடைவதற்காக உழைக்க வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் புத்தியின் தொடர்பை என்னிடம் வையுங்கள் என பாபா கூறுகிறார். பாபாவினுடையவர் ஆகிவிட்டீர்கள் என்றால் பாபாவிடம் அன்பு இருக்க வேண்டும். மற்றபடி மற்றவர்களுடன் வேலை செய்வதற்காக அன்பு வைக்க வேண்டும். புத்தியில் பாவம் இவர்களை எப்படி சொர்க்கவாசியாக மாற்றுவது என்ற எண்ணம் வைக்க வேண்டும். உண்மையான யாத்திரைக்குச் செல்வதற்கான யுக்தியைத் தெரிவியுங்கள். அது உலகியல் யாத்திரையாகும். பல பிறவிகளாக அதை செய்து வந்தீர்கள். இது ஒன்றே நினைவு யாத்திரையாகும். இப்போது நம்முடைய 84 பிறவிகள் முடிவடைந்து சத்யுகத்தின் வரலாறு புவியியல் திரும்ப வரும். அழுக்கானவர்கள் வீட்டிற்குப் போக முடியாது. தூய்மையாக்குவதற்கு பதீத பாவனர் பாபா வேண்டும். நல்லது சன்னியாசிகள் தூய்மையாகிறார்கள். ஆனால் திரும்பப் போக முடியாது. அனைவரையும் அழைத்து செல்பவர் தந்தை தான். தந்தை வந்து அனைவரையும் இராவணனிடமிருந்து விடுவித்து முக்தி அடையச் செய்கிறார். சத்யுகத்தில் துக்கம் கொடுக்கக் கூடிய பொருள் எதுவும் இல்லை. பெயரே சுகதாமம் ஆகும். இது துக்க தாமம் ஆகும். அது பாற்கடல், இது விˆக்கடல் ஆகும்.

சொர்க்கத்தில் எவ்வளவு சுகத்தோடு ஓய்வோடு வசிக்கிறார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். பாற்கடலில் இருந்து வெளியேறி விˆக்கடலுக்கு எப்படி வருகிறார்கள் என்பதை யாரும் அறியவில்லை. ஸ்ரீமத் படி நடக்க வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். பிறகு அவர் பொறுப்பாவார். ஆம் சேவைக்கு செல்லுங்கள், குழந்தை களையும் பார்த்துக் (பராமரித்துக்) கொள்ளுங்கள் என ஸ்ரீமத் கூறுகிறது. அவர்களுக்கு பூம் பூம் என்று செய்துக் கொண்டே இருந்தால் சிறிதாவது நன்மை நடக்கும். சொர்க்கத்திற்கு வருவார்கள். தந்தை வந்து நரக வாசியிலிருந்து சொர்க்கவாசியாக 21 பிறவிகளுக்கு மாற்றுகிறார். இதுவும் உங்களுடைய புத்தியில் இருக்கிறது. மனிதர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இதுவும் முதலில் தெரியாது. இவருடைய 84 பிறவிகளின் கதை இருக்கிறது. அப்படியே ஆகட்டும். இவரும் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். நீங்கள் ராஜரிஷி. அவர்கள் ஹடயோக ரிஷிகள். நீங்கள் இல்லறத்தில் இருந்துக் கொண்டு ராஜ்ய பதவியை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சரணடைவதற்காக வந்திருக்கிறீர்கள் அல்லவா? நாம் சொர்க்கத்தில் அமர்ந்திருக்கிறோம் என நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். உலகத்தில் மாயாவின் வெளிப்பகட்டு இருக்கிறது. எதுவரை நரகம் அழியவில்லையோ அது வரை எப்படி சொர்க்கம் வர முடியும்? மாயா வசமான மனிதர்கள் இதையே சொர்க்கம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். புது உலகத்தை உருவாக்குவதில் பாபா எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. முழுமையாக நரகவாசியாக இருக்கின்றனர். சொர்க்கவாசியாக மாறவில்லை. பாபா எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இராவணனை வெற்றி அடைவதால் தான் நீங்கள் உலகை வென்றவர் ஆவீர்கள். அதற்காக முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். நல்லது. இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. அவமரியாதை ஏற்படும் படி, தண்டனைகள் அடைய நேரிடும் படி எந்த ஒரு வேலையும் செய்யக் கூடாது. மாயாவின் புயலைப் பொருட்படுத்தாமல் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ பாபாவை நினைக்க வேண்டும். ஒரு பாபாவிடம் உண்மையிலும் உண்மையான அன்பு வைக்க வேண்டும்.

2. தன்னுடைய உயர்ந்த நிலையை உருவாக்கிக் கொள்ள உண்மையான பாபாவிடம் உண்மையாக இருக்க வேண்டும். எந்த விˆயத்தையும் மறைக்கக் கூடாது.

வரதானம்:-

குழந்தைகளாகிய நீங்கள் ஆல்மைட்டி (சர்வசக்திகள் நிறைந்த) அராசாங்கத்தின் தூதுவர்களாக இருக்கிறீர்கள், எனவே எவரிடமும் விவாதம் செய்வதில் தனது மனதை தொந்தரவு செய்ய வேண்டாம். நினைவினுடைய மந்திரத்தை பயன்படுத்துங்கள். யாராவது சொல்வதை கேட்ப தில்லை அல்லது வேறு எதற்கும் அடிபணிவதில்லை என்றால் மாயஜாலம் செய்கிறார்கள், ஆனால் உங்களிடம் ஆத்மீக பார்வை என்ற பார்வை மற்றும் மன்மனாபவ என்ற மந்திரம் இருக்கிறது. இதன் மூலம் தனது எண்ணங்களை நிரூபணம் செய்து வெற்றி சொரூபம் ஆக முடியும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top