29 May 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

May 28, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

எண்ணம் மற்றும் செயலில் சமத்துவம் கொண்டு வருவது தான் பரமாத்மா அன்பை பெறுவதாகும்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாப்தாதா தனது அனைத்து சுயராஜ்ய அதிகாரியான குழந்தைகளை பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறார், ஏனெனில் சுயராஜ்ய அதிகாரிகளாக இருப்பவர்கள் தான் பல பிறவிகளுக்கு உலக இராஜ்ய அதிகாரியாக ஆகிறார்கள். எனவே இரட்டை அயல் நாட்டு குழந்தைகளிடம் பாப்தாதா சுயராஜ்யத்தை பற்றிய விஷயங்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு இராஜ்ய அதிகாரத்தின் இராஜ்யம் நல்ல முறையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறதா? உங்களுடைய இராஜ்யத்திற்கு உதவக்கூடிய சகபணியாளர்கள், எப்பொழுதும் தக்க நேரத்தில் உதவி செய்துக் கொண்டிருக்கிறார்களா? அவ்வபொழுது இடை இடையில் தோல்வியை அடையவும் செய்கிறார்களா? உதவி செய்யும் எத்தனை கர்மேந்திரியங்களான ஸ்தூலமாக இருக்கலாம், சூட்சமமாக இருக்கலாம், அனைவரும் உங்களுடைய கட்டளையை ஏற்கிறார்களா? யாருக்கு எந்த நேரத்தில் கட்டளையை பிறப்பிகி றீர்களோ, அந்த நேரத்தில் அந்த விதிப்படி உங்களுக்கு உதவியாளர்களாக இருக்கிறார்களா? தினந்தோறும் உங்களுடைய இராஜ்ய சபையை அமைக்கிறீர்களா? இராஜ்யத்திலிருக்கும் பணியாளர்கள் அனைவரும் 100% கட்டளைக்கு கீழ்படிந்தவர் களாக, நேர்மையானவர்களாக, எவரெடியாக இருக்கிறார்களா? நிலவரம் எப்படி இருக்கிறது? நன்றாக இருக்கிறதா, அல்லது மிகவும் நன்றாக இருக்கிறதா, அல்லது மிக, மிக, மிக நன்றாக இருக்கிறதா? இராஜ்ய சபை நல்ல முறையில் எப்பொழுதும் வெற்றி பூர்வமாக நடைபெறுகிறதா அல்லது அவ்வபொழுது ஏதாவதொரு உதவி செய்யும் பணியாட்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதில்லையே? இந்த பழைய உலககத்தின் இராஜ்ய சபையின் நிலவரத்தை நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள் அல்லவா – சட்டமும் இல்லை, ஒழுக்கமும் இல்லை. ஆனால் உங்களுடைய இராஜ்ய தர்பார் சட்டபூர்வமாகவும் இருக்கும், மேலும் எப்பொழுதும் சரி ஐயா, வந்து விட்டேன் – இந்த சட்டதிட்டபடி நடைபெறும். எந்தளவு இராஜ்ய அதிகாரி சக்திசாலியாக இருக்கிறார்களோ, அந்தளவு இராஜ்யத்திற்கு உதவி செய்யும் பணியாளர்களும் கூட தானாகவே சதா குறிப்பறிந்து (சைகை மூலம்) நடந்து, இதை செய்ய கூடாது, இதை பேச கூடாது, இதை கேட்க கூடாது என்று இராஜ்ய அதிகாரி கட்டளை பிறப்பித்திருக்கிறார், அதனால் நொடியில் சைகையின் மூலம் காரியம் செய்வார்கள். நீங்கள் பார்க்கக் கூடாது என்று கட்டளை (மனதிற்கு) கொடுக் கிறீர்கள், ஆனால் அது பார்த்துவிட்டு, நான் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்பது என்பது அல்ல. செய்த பிறகு சிந்தனை செய்கிறீர்கள் என்றால் அவர்களை புத்திசாலி என்று சொல்ல முடியுமா என்ன? வீணானதை யோசிக்காதீர்கள், நொடியில் முற்றுப்புள்ளி, இரண்டு நொடி எடுத்துக் கொள்ளக்கூடாது. யுக்த் யுக்த் (தந்திரமான) இராஜ்ய சபை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட இராஜ்ய அதிகாரியாக ஆகிவிட்டீர்களா? தினந்தோறும் இராஜ்ய சபையை அமைக்கிறீர்களா அல்லது எப்பொழுது நினைவு வரும் பொழுது கட்டளையை கொடுக்கி றீர்களா? தினமும் அந்த நாள் முடியும் பொழுது தனது உதவி செய்யும் பணியாளர்களை சோதனை செய்யுங்கள். ஒருவேளை ஏதாவதொரு கர்மேந்திரியங்களினால் அல்லது செயல் களினால் அடிக்கடி தவறு ஏற்படுகிறதென்றால் தவறான காரியம் செய்ய செய்ய சம்ஸ்காரம் உறுதியாகிவிடுகிறது. பிறகு அதை மாற்றுவதற்கு நேரமும் முயற்சியும் தேவைப் படுகிறது. அந்த நேரத்தில் சோதனை செய்கிறீர்கள் மற்றும் மாற்றிக் கொள்வதற்கான சக்தியை கொடுக்கிறீர்கள் என்றால் எப்பொழுதும் சரியாகவே செயல்படும். இது சரி, இது தவறு என்று அடிக்கடி சோதனை செய்துக்கொண்டே இருக்கிறீர்கள், மேலும் அதை மாற்றிக் கொள்வதற்கான யுக்தியோ, ஞானத்தின் சக்தியோ கொடுக்க வில்லையென்றால் சோதனை செய்வதினால் மட்டும் மாற்றம் ஏற்படாது. ஆகையால் முதலில் அனைத்து கர்மேந்திரியங் களுக்கும் ஞானத்தின் சக்தியினால் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். இது தவறு என்று மட்டும் யோசிக் காதீர்கள். ஆனால் சரியானது என்ன மற்றும் சரியானப்படி செல்வதற்கான விதியையும் தெளிவாக இருக்க வேண்டும். ஒருவேளை யாருக்காவது சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள் என்றால் சொல்வதினால் மாற்றம் ஏற்படாது, ஆனால் சொல்வதன் கூடவே விதியையும் தெளிவுப்படுத்தி விட்டீர்கள் என்றால் வெற்றி வந்துவிடும். யார் சுயத்தை இராஜ்யம் செய்வதில் வெற்றியடைந்து விட்டீர்கள் என்றால் வெற்றிகரமான இராஜ்ய அதிகாரியின் அடையாளம் அவர்கள் சதா தனது முயற்சியினாலும் கூடவே யாரெல்லாம் தொடர்பில் வரக்கூடிய ஆத்மாக் களாக இருக்கிறார்களோ, அவர்களும் சதா அந்த் வெற்றிப்பெற்ற ஆத்மாவோடு திருப்தியாக இருப்பார்கள், மேலும் எப்பொழுதும் அந்த ஆத்மாவிற்காக மனதார நன்றியுணர்வு வெளிப் பட்டுக் கொண்டேயிருக்கும். அனைவருக்கும் மனதார, இதயபூர்வமாக ஆஹா-ஆஹா என்ற பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கும், அவர்களுடைய காதுகளில் அனைவரின் மூலம் ஆஹா-ஆஹா என்ற நன்றியின் பாடல் கேட்டுக் கொண்டேயிருக்கும். இந்த பாடல் தானாகவே ஒலிக்கும். இதற்காக ஒலி பதிவு பெட்டி (டேப் ரிக்கார்ட்) ஒலிக்க தேவையில்லை. இதற்கு எந்த சாதனமும் தேவையில்லை. இது வரம்பற்ற (எல்லையற்ற) பாடலாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்ட இராஜ்ய அதிகாரி ஆகிவிட்டீர்களா? ஏனெனில் இப்பொழுது வெற்றி கரமான இராஜ்ய அதிகாரி எதிர்காலத்தில் வெற்றியின் பலன் விஷ்வத்தின் இராஜ்யம் அடைகிறோம். ஒருவேளை முழுமையாக வெற்றி பெறவில்லை என்றால், சிலசமயமும் வெற்றியும், அவ்வபொழுது 100% வெற்றியும், சில நேரங்களில் வெற்றி மட்டுமே கிடைத்தது, 100% வெற்றி கிடைக்க வில்லையென்றால், அப்படிப்பட்ட இராஜ்ய அதிகாரி ஆத்மாவிற்கு உலகத்திற்கான, இராஜ்ய சிம்மாசனம், கீரிடம் கிடைக்காது, ஆனால் இராயல் குடும்பத்தில் வந்துவிடுவீர்கள். முதலாவது சிம்மாசனம் மற்றும் மற்றொன்று சிம்மாசனத்தின் இராயல் குடும்பமாகும். சிம்மாசனம் என்றால் தற்சமயமும் சதா இரட்டை சிம்மாசனதாரியாக இருப்பது. இரட்டை சிம்மாசனம் என்னவாக இருக்கிறது? முதலாவது அகால தக்த் (அழிவற்ற சிம்மாசனம்) மற்றொன்று பாபாவின் இதய சிம்மாசனமாகும். எனவே யார் இப்பொழுது சதா இரட்டை சிம்மாசனதாரியாக இருக்கிறார்களோ, அவ்வபொழுது அல்ல, எப்பொழுதும் இதய சிம்மாசன தாரியாக இருப்பதன் கூடவே உலகத்தின் சிம்மாசனமாக இருக்கிறது. எனவே சோதனை செய்யுங்கள் – முழு நாளிலும் இரட்டை சிம்மாசனதாரியாக இருக்கிறீர்கள்? ஒருவேளை சிம்மாசனம் இல்லையென்றால், உங்களுடைய உதவி செய்யும் பணியாளர்களும், கர்மேந்திரி யங்களும் கூட உங்களுடைய கட்டளையை பின்பற்றாது. இராஜாவின் கட்டளையை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இராஜ்யத்தில் (சிம்மாசனம்) அமராமல், கட்டளை இட்டால் ஏற்றுக் கொள்வ தில்லை. இன்றைய காலத்தில் சிம்மாசனத்திற்கு பதிலாக நாற்காலியாக ஆகிவிட்டது. சிம்மாசனத்தில் அமருவதற் கான காலம் முடிவடைந்து விட்டது. தகுதியில்லையென்றால் சிம்மாசனமும் (அரியணை) ஏறவும் முடியாது. நாற்காலியில் அமர்ந்தால் அனைவரும் (கட்டளையை) ஏற்றுக்கொள்வார்கள். ஒருவேளை நாற்காலியில் அமரவில்லை யென்றாலும் (கட்டளையை) ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் நீங்கள் நாற்காலியில் அமரும் தலைவர்கள் அல்ல சுயராஜ்ய அதிகாரி இராஜாவாக இருக்கிறீர்கள். அனைவரும் இராஜாவாக இருக்கிறீர்களா அல்லது ஒரு சிலர் பிரஜைகளாகவும் இருக்கிறீர்களா? இராஜயோகி என்றால் இராஜா. பாருங்கள் – கோடான கோடி மடங்கு பாக்கியசாலிகளாக இருக்கிறீர்கள். உலகத்தில், அதிலும் முக்கியமாக வெளிநாடு மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள், அவர்கள் போர் மற்றும் தோல்வி போன்ற இரண்டாக (தடுமாற்றமாக) இருக்கிறர்கள். சிலர் தோல்வியடைந்து இருக் கிறார்கள், சிலர் போர் செய்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் ஒரு சிலர் பலவித செய்திகளை கேட்டு அதனால் குழப்பத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் தோல்வி மற்றும் போரின் குழப்பத்தில் இருக்கிறார்கள், மேலும் நீங்கள் பாப்தாதாவின் அன்பில் இருக்கிறீர்கள். பரமாத்மா அன்பு வெகுத்துரத்தில் இருப்பவர்களையும் கவர்ந்திழுக்கப்பட்டது. எப்படிப்பட்ட சூழ்நிலைகளாக இருக்கலாம், ஆனால் பரமாத்மா அன்பிற்கு முன்னால் சூழ்நிலைகள் (பிரச்சனைகள்) ஒன்றுமே இல்லை. பரமாத்மாவின் அன்பு புத்திசாலிகளு கெல்லாம் புத்திசாலி ஆகி சூழ்நிலைகளை உயர்ந்த ஸ்திதியில் (மன நிலையில்) மாற்றிவிடுகிறது. இரட்டை அயல்நாட்டவர்களையும் கூட பாருங்கள், அதிலும் போலந்த் நாட்டை சேர்ந்தவர்கள் எவ்வளவு முயற்சி செய்திருக்கிறார்கள், அசம்பவமாக (முடியாததாக) இருந்தது, மேலும் இப்பொழுது என்ன தோன்றுகிறது? இரசியாவை சேர்ந்தவர்களும் கூட அசம்பவம் என்று புரிந்திருந்தார்கள், 24 மணி நேரம் கூட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது, வந்து சேர்ந்து விட்டீர்கள் அல்லவா. கடினமானதாக இருந்தது எளிமையாகி விட்டது. எனவே நன்றி சொல்வீர்கள் அல்லவா. அதுபோல எப்பொழுதும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கடைசியில் விமான சேவைகள் அனைத்தும் நின்றுவிடும், அதன்பிறகு நாங்கள் எப்படி செல்வோம் என்று பலர் யோசிக்கிறார்கள். பரமாத்மாவின் அன்பில் அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது, அது ஒருவரின் கண்களில் அத்தகைய மந்திரத்தை வீசிவிடும், அவர்கள் உங்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் அன்பிற்குரியவர் மட்டுமல்ல, ஆனால் அன்பை கொடுக்கக் கூடியவர் (சொரூபமானவர்) இருப்பார்கள். அன்பை கொடுக்கக் கூடிய ஆத்மாக்களிடம் பாபாவும் கூட உறுதிமொழி செய்கிறார் – கடைசி வரை ஒவ்வொரு சூழ்நிலைகளையும் சமாளிப்பதில் அன்பை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வபொழுது அன்பை கொடுப்பவர்கள் அல்ல, எப்பொழுதும் அன்பை பகிர்ந்துக் கொள்பவர்கள். அன்பை பெறுவதற்கு அனைவருக்கும் வருகிறது, ஆனால் அன்பை கொடுப்பதற்கு சிலருக்கு தான் வருகிறது, அதனால் தான் நீங்கள் கோடியில் சிலராக இருக்கிறீர்கள்.

பாப்தாதாவிற்கு இரட்டை அயல்நாட்டை சேர்ந்த குழந்தைகளை பார்த்து குஷி ஏற்படு கிறது, ஏனெனில் தைரியத்தின் மூலம் பாபாவின் உதவிக்கு தகுதியுடையவர் ஆகி பலவிதமான மாயாவின் அடிமைத்தன்மை மற்றும் பலவிதமான பழக்கவழக்கங்கள், சடங்குகளின் எல்லை களை கடந்து வந்து சேர்ந்துள்ளனர். இந்த தைரியம் ஒன்றும் குறைந்து கிடையாது. அனைவருமே நன்றாக தைரியத்தை வைக்கிறீர்கள், புதியவர்களாக இருந்தாலும், பழையவர் களாக இருந்தாலும், இருவருமே அமர்ந்துள்ளீர்கள். மிகவும் பழமையிலும் பழமையானவர் களாகவும் இருக்கிறீர்கள், இந்த கல்பத்தில் புதியவர்களும் இருக்கிறீர்கள். இருவருமே நன்றாக தைரியத்தை வைத்துள்ளீர்கள். இந்த தைரியத்தில் அனைவருமே நம்பர் ஒன்னாக தான் இருக்கிறீர்கள். ஆனால் பிறகு நம்பர் எந்த விஷயத்தில் ஏற்படுகிறது? இரட்டை அயல்நாட்டவர் விசேஷமாக முயற்சி செய்கிறார்கள். மேலும் ஆன்மீக உரையாடலிலும் சொல்கிறார்கள் – 108 மணி மாலையில் அவசியம் வருவோம். சிலர் வரமுடியுமா என்றும் கேள்வி கேட்கிறார்கள்? அவசியம் வர வேண்டும். இரட்டை அயல்நாட்டினருக்காகவும் மாலையில் இருக்கை ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் யார் மற்றும் எந்த இடம் என்பதை பிறகு சொல்வார். எனவே நம்பர் ஏன் உருவாகிறது? ஒவ்வொருவரும் தனது உரிமையோடு சொல்கிறார்கள் – மேரா (என்னுடைய) பாபா. அதனால் உரிமையும் கூட முழுமையாக இருக்கிறது, ஆனாலும் ஏன் நம்பர் உருவாகிறது? ஒருவர் நம்பர் ஒன்னாக இருப்பார்கள், மற்றொருவர் நம்பர் 8-ஆக இருப்பார்கள். இருவருக் குள்ளும் ஏதாவது வித்தியாசம் இருக்கும் அல்லவா. இந்தளவு ஏன் வித்தியாசம் ஏற்படுகிறது? 16 ஆயிரம் மணிமாலையை விடுங்கள், 108 மணி மாலையை பாருங்கள் – 1-ம் எண் எங்குள்ளது, 108-வது மணிமாலை எங்கு இருக்கிறது. எனவே என்ன வித்தியாசம் இருக்கிறது. தைரியத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் தைரியத்திற்கு கைமாறாக பாபா மற்றும் பிராமண குடும்பத்தின் மூலம் உதவி கிடைக்கிறதே, அந்த உதவியை அடைந்து காரியத்தில் பயன்படுத்த வேண்டும், மேலும் சமயத்திற்கு ஏற்றவாறு உதவியை பயன்படுத்த வேண்டும், எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டுமோ அதாவது சக்தி வேண்டுமோ, அந்த சக்தியின் மூலம் சரியான நேரத்தில் வேலை நடைபெறும், இந்த (நிர்ணயம்) முடிவு எடுக்கும் சக்தி மற்றும் நடைமுறையில் செயலில் பயன்படுத்தும் சக்தியில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. சர்வ சக்திவான் பாபாவின் மூலம் அனைத்து சக்திகள் என்ற ஆஸ்தி அனைவருக்கும் கிடைக் கிறது. சிலருக்கு 8 சக்திகளும், சிலருக்கு 8 சக்திகள் கிடைக்காமல் இருக்கிறது. அனைத்து சக்திகளும் கொடுக்கப்படுகின்றன. விதிப்படி தான் வெற்றி கிடைக்கிறது என்பதை முதலிலேயே சொல்லியிருக்கின்றோம். செயல்கள் சக்திபெறுவதற்கான விதி – முதலாவது பாபா வினுடையவராக மாற்றிக் கொள்வதற்கான விதி, மற்றொன்று பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைவதற்கான விதி, மூன்றாவது அடைந்துள்ள ஆஸ்தியை காரியத்தில் ஈடுபடுத்துவதற்கான விதி. காரியத்தில் ஈடுபடுத்தும் விதியில் வித்தியாசம் ஏற்படுகிறது. அனைவரிடமும் ஞான கருத்துகள் இருக்கிறது. ஏதாவதொரு (டாப்பிக் வொர்க் ஷாப்) தலைப்பில் கலந்துரையாடல் செய்கிறீர்கள் என்றால் பலவிதமான கருத்துகளை சேகரிக்கிறோம். எனவே ஒரு பாயிண்டை (புள்ளியை) புத்தியில் வைக்க வேண்டும், இது தான் ஒருவிதியாக இருக்கிறது, மற்றொன்று புள்ளியாகி புள்ளியை காரியத்தில் பயன்படுத்த வேண்டும். புள்ளியாகவும் இருக்கிறீர்கள், ஞான கருத்துக்களூம் இருக்கிறது. இரண்டியிலும் சமநிலையில் இருக்க வேண்டும். இது தான் நம்பர் ஓன் விதியாக இருக்கிறது, இதன் மூலம் தான் நம்பர் ஒன் வெற்றியும் கிடைக்கிறது. சிலசமயம் பாயிண்ட்டின் (கருத்துகளின்) விரிவாக்கத்தில் சென்றுவிடுகிறோம், சிலசமயம் பாயிண்ட் ரூபத்தில் (புள்ளியாக) நிலைத்து விடுகிறார்கள். புள்ளி ரூபத்தின் கூடவே ஞான கருத்துகளும் தேவைப்படுகிறது. காரியத்தில் ஈடுபடுத்து வதற்கான சக்தியை பயன்படுத்துங்கள். புரிந்ததா. நம்பர் ஒன்னில் வரவேண்டுமென்றால் இதை செய்ய வேண்டியிருக்கிறது.

தற்சமயத்தின் விஞ்ஞான சக்தி, விஞ்ஞான சாதனங்களின் மூலம் செயல்கள் எவ்வளவு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிருள்ள மனிதனால் என்ன செயல் செய்ய முடிகிறதோ, எவ்வளவு நேரம் மற்றும் எவ்வளவு உயிருள்ள மனிதனால் செய்ய முடியுமோ, அந்தளவு விஞ்ஞானத்தின் சாதனமான கம்ப்யூட்டர் (கணினி) மிகவும் வேகமாக செய்கிறது. உயிருள்ள மனிதனையும் கூட திருத்துகிறது (உதவி செய்கிறது). எனவே விஞ்ஞானத்தின் சாதனங்கள் செயல்களை மிக வேகமாக செயல்படுத்துகிறது. இதுபோன்ற பல கண்டு பிடிப்புகள் வெளிவருகின்றன, மேலும் வெளிவரவும் செய்கிறது, எனவே பிராமண ஆத்மாக் களின் அமைதியின் சக்தி மிக வேகமாக சரியாக வெற்றி அடைய வைக்க முடியும். நொடியில் முடிவெடுக்கும் திறன், நொடியில் செயலை நடைமுறையில் பயன்படுத்துங்கள். சிந்திப்பது மற்றும் செய்வது – இதற்கான சமநிலை (பேலன்ஸ்) வேண்டும். பல பிராமண ஆத்மாக்கள் மிகவும் யோசிக்கிறார்கள், ஆனால் செய்ய வேண்டுமென்று நினைக்கும் நேரத்தில் சிந்தனை செய்வதை போன்று, செய்யும் நேரத்தில் சிந்தனை செய்வதில்லை, மேலும் சிலர் செய்யவும் செய்கிறார்கள் – சரியாக செய்கிறோமோ அல்லது தவறா எனபதை பின்பு தான் சிந்தனை செய்கிறார்கள். இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? எனவே சிந்திப்பது மற்றும் செய்வது – இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என்னாகும்? இதை செய்ய வேண்டுமென்று யோசிக்கிறோம், ஆனால் யோசித்து செய்கிறார்கள், மேலும் சிந்தனை செய்து செய்து செயல்படும் நேரம் மற்றும் சூழ்நிலைகள் மாறிவிடுகிறது. பிறகு சொல்கிறோம் செய்யத் தான் வேண்டும், ஆனால் சிந்தனை செய்து தான் செய்ய வேண்டும்…. விஞ்ஞானத்தின் சாதனம் மிக வேகமாக வளர்ந்துக் கொண்டிருகிறது, ஒரு நொடியில் என்னத் தான் செய்ய முடியாது. விநாசத்தின் சாதனங்கள் மிக வேகமாக சென்றுக் கொண்டிருக்கின்றன, அதனால் ஸ்தாபனைக்கான அமைதியின் சக்திசாலியான சாதனம் என்னத்தான் செய்ய முடியாது. இப்பொழுது இயற்கையின் எஜமானர்களாகிய உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் அவற்றை வழிநடத்தவில்லையென்றால் இயற்கை மிகவும் வேடிக்கை காட்டுகிறது. எஜமானர்கள் தயாராகிவிட்டால் இயற்கை உங்களை வரவேற்கும், அதுபோன்று தயாராகி விட்டீர்களா? இல்லை தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? பூரண தயாரிப்பிற்கான மகிமையை பற்றி இப்பொழுது வரை பக்தர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள் தனது மகிமையை தெரிந்திருக்கிறீர்களா? இவை அனைத்திலும் சர்வகுணங்கள் நிறைந்தவனாக இருக்கிறேனா, முழுமையாக விகாரங்கள் அற்றவனாக இருக்கிறேனா, முழுமையாக அஹிம்சைவாதியாக இருக்கிறேனா, மேலும் மரியாதைக்கு தகுதியுடைவனாக இருக்கிறேனா, 16 கலைகளில் முழுமையானவராக இருக்கின்றேனா? என்பதை இப்பொழுது சோதனை செய்யுங்கள். அனைத்து விஷயங்களிலும் முழுமையாக இருந்தால் எஜமானர் தயாராகி விட்டார் என்று புரிந்துக் கொள்ளலாம், இல்லையென்றால் எஜமானர் தயாராகவில்லை. குழந்தையாக இருக்கிறீர்கள், ஆனால் எஜமானர் ஆகவில்லை. எனவே இயற்கை எஜமானர் களாகிய உங்களை வரவேற்கிறது. பாபாவின் குழந்தையாக இருக்கிறீர்கள். அது முற்றிலும் சரி தான். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள். ஆனால் இந்த ஐந்து விஷயங்களில் (5 டிகிரி) முழுமை யாக ஆக வேண்டும் அதாவது எஜமானர் ஆக வேண்டும். இயற்கைக்கு ஆர்டர் (வழிநடத்த) கொடுக்க வேண்டும். நல்லது. தபஸ்யா வருடத்தில் தயாராகி விடுவீர்கள் அல்லவா? அதன் பிறகு கட்டளை பிறப்பீர்கள் (வழி நடத்துவீர்கள்) அல்லவா. இந்த தபஸ்யா வருடம் கடைசி வாய்ப்பாக இருக்குமா அல்லது மீண்டும் சிறிது வாய்ப்பு (கால அவகாசம்) கொடுங்கள் என்று இதன் பிறகு சொல்லமாட்டீர்கள் அல்லவா. நல்லது.

நாலா பக்கத்திலுமுள்ள அனைத்து இராஜ்ய அதிகாரி ஆத்மாக்களுக்கு, சதா இரட்டை சிம்மாசனதாரி ஆத்மாக் களுக்கு, சதா யோசிப்பது மற்றும் செய்வது என்ற இரண்டு விதமான சக்திகளிலும் சமமாக இருக்கக்கூடிய வரதானங்கள் அளிக்கும் ஆத்மாக்களுக்கு, சதா பரமாத்மா வின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய உண்மையான மனமுடைய குழந்தைகளுக்கு, மனதை கவர்ந்த பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு: மகாராஷ்ட்ராவில் இருந்துக் கொண்டே உண்மையான சொரூபத்தில் மகானாக ஆகி வீட்டீர்கள் என்ற குஷி இருக்கிற தல்லவா? அவர்கள் (உலகத்தினர்) பெயரளவிற்கு மகானாக இருக்கிறார்கள், மகாத்மாவாக இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் நடைமுறை சொரூபத்தினால் மகானாக இருக்கிறீர்கள். இந்த குஷி இருக்கிறதல்லவா? எனவே மகான் ஆத்மாக்கள் எப்பொழுதும் உயர்ந்த மனநிலையில் இருப்பவர்கள். உலகத்தினரோ உயர்ந்த இருக்கையில் அமர்ந்துக் கொள்கிறார்கள், சிஷ்யர்களை ஆசனத்திற்கும் கீழான பகுதியில் அமர வைத்துவிடுகிறார்கள். தான் மட்டும் உயர்வாக அமர்ந்து கொள்கிறார்கள், ஆனால் நீங்கள் எங்கு அமர்ந்துள்ளீர்கள்? உயர்ந்த மனநிலை என்ற ஆசனத்தில். உயர்ந்த மனநிலை தான் உயர்ந்த ஆசனமாக இருக்கிறது. உயர்ந்த மனநிலை என்ற ஆசனத்தில் இருந்தீர்கள் என்றால் மாயா வரவே முடியாது., அவர்களும் உங்களை மகான் என்று புரிந்துக்கொண்டு உங்களுக்கு முன்னால் தலை வணங்குவார்கள். போர் புரிய மாட்டார்கள், தோல்வியை ஏற்றுக் கொள்வார்கள். உயர்ந்த ஆசனத்திலிருந்து கீழே வரும் பொழுது மாயா யுத்தம் செய்கிறது. ஒருவேளை எப்பொழுதும் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந் தீர்கள் என்றால் மாயா வருவதற்கான சக்தி இருக்காது. மாயாவால் உயர வர முடியாது. எனவே மிக எளிமையாக ஆசனம் கிடைத்துவிட்டது. பாக்கியத்திற்கு முன்னால் தியாகம் ஒன்றுமே இல்லை. எதை தியாகம் செய்தோம்? அணிகலன்கள் கிடைக்கின்றன, துணிமணிகள் இருக்கின்றன, வீட்டில் இருக்கிறோம். ஒருவேளை துறந்தோம் என்றாலும் குப்பை கூளங் களைத் தான் விட்டோம். எனவே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்ககூடிய மகான் ஆத்மாக் களாக இருக்கிறீர்கள். நினைத்து பார்க்காத அளவிற்கும் அதிகமாக மிக உயர்ந்த பிராப்தியின் அதிகாரி ஆகிவிட்டோம். இந்த பாக்கியத்தின் குஷி இருக்கிறதல்லவா. உலகத்தில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. கருப்பு பணம் இருக்கிறது, ஆனால் மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சி என்ற பொக்கிஷத்தில் அனைவருமே ஏழைகளாகத் தான் இருக்கிறார்கள். யாசிப்பவர்களாக இருக் கிறார்கள். நீங்கள் குஷியின் பொக்கிஷத்தினால் நிறைந்து இருக்கிறீர்கள். இந்த குஷி எத்தனை காலத்திற்கு உடன் வருகிறது? முழு கல்பத்திற்கும் கூடவே இருக்கிறது. உங்களுடைய ஜட சித்திரங்களிலும் (சிலை) கூட குஷியை பெற்றுக் கொள்கிறார்கள். எனவே இந்தளவு குஷியை சேமித்துள்ளேனா என்பதை சோதனை செய்யுங்கள்? ஒர்ரிரு பிறவிகளுக்கு வரும், பிறகு முடிவடைந்து விடும் என்று அல்ல. பல பிறவிகளுக்கு கூடவே வருமளவிற்கு சேமிப்பு கிடங்கை சேகரியுங்கள். யாரிடம் எந்தளவு சேமிப்பு இருக்கிறதோ, அந்தளவிற்கு அவர்களின் முகத்தில் குஷி மற்றும் நஷா தென்படும். நீங்கள் சொன்னாலும், சொல்லா விட்டாலும் சரி, உங்களுடைய முகம் சொல்லும். இவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை, பிரம்மா குமாரிகள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல் கிறார்கள் அல்லவா. துக்கத்திலும் கூட குஷியாக இருக்கிறார்கள். நீங்கள் பேசினாலும், பேசா விட்டாலும் உங்களுடைய முகம், உங்களுடைய செயல், உரையாடும். பிரம்மாகுமார் – பிரம்மா குமாரிகளின் அடையாளம் – ஆனந்தமாக இருப்பது. துக்கமான நாட்கள் முடிவடைந்து விட்டன. அந்தளவு பொக்கிஷம் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு துக்கம் எங்கிருந்து வரும்? நல்லது.

வரதானம்:-

உலகத்தை மாற்றம் செய்யக்கூடிய ஆத்மாக்களாகிய நீங்கள் குழுவாக சம்பன்ன (நிறைந்த), சம்பூரண (முழுமையாக) மனநிலையின் மூலம் உலக மாற்றத்திற்கான எண்ணத்தை உருவாக்கும் பொழுது இந்த இயற்கையும் முழுமையாக குழப்பத்தின் நடனத்தை ஆரம்பம் செய்யும். காற்று, நிலம், கடல், நீர்…. போன்ற இவர்கள் குழப்பம் (அசைவு) தான் தூய்மைப்படு த்தும். ஆனால் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் கர்மேந்திரியங்கள், மனம், புத்தி, சம்ஸ்காரம் உங்களின் கட்டளை ஏற்றுக்கொள்ளும் பொழுது தான் இந்த இயற்கையும் உங்களின் கட்டளை ஏற்றுக் கொள்ளும். அதன் கூடவே சக்திவாய்ந்த தபஸ்யாவின் உயர்ந்த நிலை இருக்கிறது, அது உங்கள் அனைவரின் ஒன்று சேர எண்ணங்கள் இருக்க வேண்டும் மாற்றம், பிறகு இயற்கையும் உங்களுக்கு சரி ஐயா என்று வந்து விடும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top