29 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 28, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

மூன்று விதமான அன்பு மற்றும் உள்ளத்தின் அன்பான குழந்தைகளுடைய விசேஷத்தன்மைகள்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாப்தாதா தங்களுடைய சினேகி, சகயோகி மற்றும் சக்திசாலி ஆகிய மூன்று விசேஷத் தன்மைகளால் சம்பன்னமான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த மூன்று விசேஷத்தன்மைகளும் யாரிடம் சமமாக உள்ளதோ, அவர்களே விசேஷ ஆத்மாக்களில் நம்பர் ஒன் ஆத்மா ஆவார்கள். சினேகியாகவும் இருக்க வேண்டும் மற்றும் சதா ஒவ்வொரு காரியத்திலும் சகயோகியாகவும் இருக்க வேண்டும், கூடவே சக்திசாலியாகவும் இருக்க வேண்டும். அனைவரும் சினேகிகளே, ஆனால், சினேகத்தில் (அன்பில்) ஒன்று உள்ளப் பூர்வமான அன்பாகும், இரண்டாவது சமயத்தின் அனுசாரம் காட்டும் சுயநலத்துடன் கூடிய அன்பாகும் மற்றும் மூன்றாவது வேறு வழியற்ற நிலையில் வெளிப்படுத்தும் அன்பாகும். யார் உள்ளப்பூர்வமான சினேகிகளோ, அவர்கள் சர்வ சம்பந்தங்கள் மற்றும் சர்வ பிராப்திகளை சதா, சகஜமாக, தானாக அனுபவம் செய்வார்கள் என்பதுவே அவர்களுடைய விசேஷத் தன்மைகளாக இருக்கும். ஒரு சம்பந்தத்தின் அனுபவத்தில் கூட குறை இருக்காது. நேரம் எத்தகையதாக உள்ளதோ, அதற்கேற்றவாறு சம்பந்தத்தின் அன்பை விதவிதமாக அனுபவம் செய்யக்கூடியவர்களாக, சமயத்தை அறிந்திருப்பவர்களாக மற்றும் சமயத்தின் அனுசாரம் சம்பந்தத்தையும் அறிந்திருப்பவர்களாக இருப்பார்கள்.

ஒருவேளை, தந்தை எப்பொழுது ஆசிரியர் என்ற ரூபத்தில் சிரேஷ்டமான படிப்பை கற்பித்துக்கொண்டு இருக்கின்றாரோ, அத்தகைய நேரத்தில் ஆசிரியர் என்ற சம்பந்தத்தின் அனுபவம் செய்யாமல் நண்பன் என்ற ரூபத்தின் அனுபவத்தில், சந்திப்பைக் கொண்டாடுவது மற்றும் ஆன்மிக உரையாடல் செய்வதில் ஈடுபட்டால் படிப்பின் பக்கம் கவனம் இருக்காது. படிப்பின் நேரத்தில் ஒருவேளை, நான் சப்தங்களைக் கடந்த நிலையில் மிகவும் சக்திசாலியாக அனுபவம் செய்துகொண்டு இருக்கின்றேன் என்று யாராவது கூறினால், படிக்கும் நேரத்தில் இது சரியா என்ன? ஏனெனில், எப்பொழுது தந்தை, ஆசிரியர் ரூபத்தில், படிப்பின் மூலம் சிரேஷ்ட பதவியை அடையவைப்பதற்காக வருகின்றாரோ, அந்த நேரம் ஆசிரியருக்கு முன்னால் இறை மாணவ வாழ்க்கையே சரியானது ஆகும். சமயத்தினுடைய ஞானத்தின் அனுசாரம் சம்பந்தத்தை அறிந்திருப்பது மற்றும் சம்பந்தத்தின் அனுசாரம் அன்பின் பிராப்தியை அனுபவம் செய்வது என்று இதையே சொல்லப்படுகிறது. யார் எவ்வாறு விரும்புகின்றீர்களோ, எந்த நேரம் விரும்புகின்றீர் களோ, அத்தகைய சொரூபம் மற்றும் ஸ்திதியில் நிலைக்கமுடிய வேண்டும். இந்த புத்தி யினுடைய எக்சர்சைஸ் (பயிற்சி) செய்யுங்கள்.

எவ்வாறு ஒருவர் பருமனான சரீரம் கொண்டிருக்கின்றார், சுமை உள்ளது என்றால் தன்னுடைய சரீரத்தை சுலபமாக எவ்வாறு விரும்புகின்றார்களோ, அவ்வாறு வளைக்க முடியாது. அதுபோலவே ஒருவேளை, பருமனான புத்தி உள்ளது என்றால் அதாவது ஏதாவது ஏதாவது வீணான சுமை அல்லது வீணான குப்பை புத்தியில் நிறைந்துள்ளது மற்றும் ஏதாவது ஏதாவது அசுத்தம் உள்ளது என்றால் அத்தகைய புத்தி உடையவர்கள் எந்த நேரம் விரும்புகின்றார்களோ, அந்த நேரம் அவர்கள் விரும்பியபடி புத்தியை வளைக்க முடியாது. ஆகையினால், மிகவும் தூய்மையான, கூர்மையான அதாவது மிகவும் சூட்சுமமான புத்தி, தெய்வீக புத்தி, எல்லைக்கப்பாற்பட்ட புத்தி, பரந்த புத்தி இருக்க வேண்டும். அத்தகைய புத்தி உடையவர்களே சர்வ சம்பந்தங்களின் அனுபவத்தை, எந்த சமயத்தில் எந்த சம்பந்தம் உள்ளதோ, அதற்கேற்றார் போல் தன்னுடைய சொரூபத்தை அனுபவம் செய்ய முடியும். எனவே, அனைவருமே சினேகிகள் தான். சர்வ சம்பந்தங்களின் சினேகத்தை, நேரத்தின் அனுசாரம் அனுபவம் செய்யக்கூடியவர்கள், சதா இதே அனுபவத்தில் அவ்வளவு பிஸியாக இருப்பார்கள், ஒவ்வொரு சம்பந்தத்தின் விதவிதமான பிராப்திகளில் அந்தளவு லவ்லீன் ஆகியிருப்பார்கள், மூழ்கியிருப்பார்கள், அவர்களை எந்த விதமான தடையும் தன் பக்கம் தலை வணங்கச் செய்யமுடியாது. ஆகையினால், தானாகவே சகஜயோகி ஸ்திதியின் அனுபவம் செய்வார்கள். இவர்களையே நம்பன் ஒன் யதார்த்த சினேகி ஆத்மா என்று சொல்லப்படுகிறது. அன்பிருக்கும் காரணத்தினால் அத்தகைய ஆத்மாவிற்கு தக்க சமயத்தில் தந்தை மூலம் ஒவ்வொரு காரியத்திலும் தானாகவே சகயோகம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதன் காரணத் தினால் அன்பு துண்டிக்கப்படாததாக, ஸ்திரமானதாக, நிலையானதாக, அழிவற்றதாக அனுபவம் ஆகிறது. புரிந்ததா? இதுவே நம்பன் ஒன் சினேகியின் விசேஷத்தன்மை ஆகும். இரண்டாமவர், மூன்றாமவரைப் பற்றி வர்ணனை செய்வதற்கான அவசியமே இல்லை. ஏனெனில், அவர்களைப் பற்றி நீங்கள் அனைவரும் நல்ல முறையில் அறிவீர்கள். பாப்தாதா அத்தகைய சினேகி குழந்தை களைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை அன்பு ஏக்ரஸ்ஸாக (ஒரே மாதிரியாக) இருக்கிறதா அல்லது சமயத்தின் அனுசாரமாக, பிரச்சனையின் அனுசாரமாக அல்லது பிராமண ஆத்மாக்களின் தொடர்பின் அனுசாரமாக மாறிக்கொண்டே இருக்கிறதா – இதில் கூட வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது அல்லவா.

இன்று அன்பைப் பற்றி சொல்லப்பட்டது, பிறகு, சகயோகம் மற்றும் சக்திசாலி நிலை ஆகிய மூன்று விசேஷத் தன்மைகள் நிறைந்த ஆத்மாவைப் பற்றிய மகத்துவத்தைக் கூறுவார்கள். மூன்றுமே அவசியமானதாகும். நீங்கள் அனைவரும் அத்தகைய சினேகி ஆவீர்கள் அல்லவா? பயிற்சி உள்ளது அல்லவா? எப்பொழுது எங்கு புத்தியை நிலைக்கச் செய்ய விரும்புகிறீர்களோ, நீங்கள் விரும்பியது போல் அவ்வாறு செய்ய முடிகிறது அல்லவா? கட்டுப் படுத்தும் சக்தி உள்ளது அல்லவா? எப்பொழுது கட்டுப்படுத்தும் சக்தி (கண்ட்ரோலிங் பவர்) இருக்குமோ, அப்பொழுதே ஆளும் சக்தி (ரூலிங் பவர்) வரும். மேலும், யார் தன்னையே கட்டுப்படுத்த முடியவில்லையோ, அவர்கள் இராஜ்யத்தை என்ன கட்டுப்படுத்துவார்கள்! ஆகையினால், தன்னை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் சக்தி யினுடைய பயிற்சி இப்பொழு திலிருந்து தேவை, அப்பொழுதே இராஜ்ய அதிகாரி ஆவீர்கள். புரிந்ததா?

இன்று சந்திப்பவர்களுடைய கோட்டாவை (பங்கை) நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. பாருங்கள், சங்கம யுகத்தில் எண்ணிக்கையின் பந்தனத்தில் எவ்வளவு தான் கட்டுப்படுத்தட்டும், ஆனால், கட்டுப்படுத்த முடிகிறதா? எண்ணிக்கையை விட அதிகமாக வந்து விடுகின்றனர். ஆகை யினால், சமயத்தை, எண்ணிக்கையை மற்றும் எந்த சரீரத்தின் ஆதாரம் எடுக்கிறார்களோ அவற்றைப் பார்த்து, அந்த விதிப்படி நடக்க வேண்டியதாக உள்ளது. வதனத்தில் இவை அனைத் தையும் பார்க்க வேண்டியது இல்லை. ஏனெனில், சூட்சும சரீரத்தின் வேகம் ஸ்தூல சரீரத்தை விட மிகவும் தீவிரமானதாகும். ஒருபுறம் சாகார சரீரம் தரித்தவர்கள், மறுபுறம் ஃபரிஷ்தா சொரூபம் – இருவரும் சென்றடைவதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்! ஃபரிஷ்தா எவ்வளவு நேரத்தில் சென்றடைவார்கள் மற்றும் சாகார சரீரம் தரித்தவர்கள் எவ்வளவு நேரத்தில் சென்றடை வார்கள்? மிகுந்த வித்தியாசம் உள்ளது. பிரம்மா பாபா கூட சூட்சும சரீரம் தரித்தவராகி எவ்வளவு தீவிர வேகத்தில் நாலாபுறங்களிலும் சேவை செய்துகொண்டு இருக்கின்றார். அங்கே பிரம்மா சாகார சரீரம் தரித்தவராக இருந்தார் மற்றும் இப்பொழுது சூட்சும சரீரம் தரித்தவராகி எவ்வளவு தீவிர வேகத்தில் முன்னேறிக் கொண்டு மற்றும் முன்னேற்றிக் கொண்டு இருக்கின்றார்! இந்த அனுபவம் செய்துகொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா.

சூட்சும சரீரத்தின் வேகமானது, இந்த உலகத்தில் அனைத்தையும் விட தீவிர வேகத்தில் இயங்கும் சாதனங்களை விட வேகமானது ஆகும். ஒரு நொடியில் ஒரே நேரத்தில் அனேகருக்கு அனுபவம் செய்விக்க முடியும். நான் இந்த சமயம் தந்தையைப் பார்த்தேன் அல்லது தந்தையை சந்தித்தேன் என்று அனைவரும் சொல்வார்கள். நான் உரையாடல் செய்தேன், நான் சந்திப்பைக் கொண்டாடினேன், எனக்கு உதவி கிடைத்தது என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள். ஏனெனில், தீவிர வேகத்தின் காரணத்தினால் ஒரே நேரத்தில் ஒவ்வொருவருக்கும் தான் சந்திப்பு செய்தது போல் அனுபவம் ஏற்படுகிறது. எனவே, ஃபரிஷ்தா வாழ்க்கை பந்தனத்திலிருந்து விடுபட்ட வாழ்க்கையாகும். சேவையின் பந்தனம் உள்ளது, ஆனால், எவ்வளவு தான் வேகமாக செய்தாலும் அவ்வளவு சதா ஃப்ரீயாக இருக்கின்றார். எந்தளவிற்கு அன்பானவராக இருக்கின்றாரோ, அந்தள விற்கு விடுபட்டவராக இருக்கின்றார். அனைவரின் மூலமாகவும் செய்விப்பார் ஆனால், செய்விக் கும் பொழுதும் அசரீரி ஃபரிஷ்தாவாக இருக்கும் காரணத்தினால் சதா சுதந்திரமான நிலையின் அனுபவம் ஏற்படுகிறது, ஏனெனில், சரீரம் மற்றும் கர்மத்திற்கு அடிமையாக இல்லை. உங்களுக்கும் கூட அனுபவம் உள்ளது. எப்பொழுது ஃபரிஷ்தா நிலையில் இருந்து ஏதாவது காரியம் செய்கின்றீர்களோ, அப்பொழுது பந்தனத்திலிருந்து விடுபட்ட நிலை அதாவது இலேசான தன்மையின் அனுபவம் செய்கின்றீர்கள் அல்லவா. மேலும், யார் ஃபரிஷ்தாவாகவே இருக் கின்றாரோ (பிரம்மா பாபா), உலகமும் அது (சூட்சும உலகம்), சரீரமும் அது (சூட்சும சரீரம்), எனில், என்ன அனுபவம் ஏற்பட்டிருக்கும் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும் அல்லவா. நல்லது!

நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து உள்ளப்பூர்வமான சினேகி குழந்தைகளுக்கு, சதா தெய்வீகமான, விசாலமான, எல்லையற்ற புத்தியுடைய குழந்தைகளுக்கு, சதா தந்தை பிரம்மா விற்கு சமமான ஃபரிஷ்தா ஸ்திதியின் அனுபவம் செய்து தீவிர வேகத்துடன் சேவையில், சுய முன்னேற்றத்தில் வெற்றியை அடையக்கூடிய, சதா சகயோகி ஆகி தந்தையின் சகயோகத் தினுடைய அதிகாரத்தை அனுபவம் செய்யக்கூடிய, அத்தகைய விசேஷ ஆத்மாக்களுக்கு, சமமாகக்கூடிய மகான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

அவ்யக்த பாப்தாதாவுடன் தனிப்பட்ட சந்திப்பு:

சதா கவலையற்ற சக்கரவர்த்தி ஆவீர்கள் அல்லவா. தந்தைக்கு பொறுப்பைக் கொடுத்து விட்டீர்கள் என்றால் கவலை எந்த விசயத்தைப் பற்றி வரும்? எப்பொழுது தன் மீது பொறுப்பை வைத்துக் கொள்கின்றீர்களோ, அப்பொழுதே என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுகிறது. மேலும், எப்பொழுது தந்தையிடம் ஒப்படைத்து விட்டீர்களோ, அப்பொழுது கவலை யாருக்கு இருக்க வேண்டும், தந்தைக்கா அல்லது உங்களுக்கா? மேலும், தந்தையோ கடல் ஆவார், அவருக்கு கவலை இருக்கவே இருக்காது. தந்தையும் கவலையற்றவர் மற்றும் குழந்தைகளும் கவலையற்றவர் ஆகிவிட்டீர்கள். எனவே, என்ன கர்மம் செய்தாலும் கர்மம் செய்வதற்கு முன் நான் டிரஸ்டி (தர்மகர்த்தா) என்று நினைத்திடுங்கள். டிரஸ்டியானவர் வேலையை மிகவும் அன்போடு செய்வார், ஆனால், சுமை இருக்காது. அனைத்தும் உங்களுடையது தந்தையே என்பதே டிரஸ்டியின் அர்த்த மாகும். எனவே, உங்களுடையது என்பதில் பிராப்தியும் அதிகம் இருக்கும் மற்றும் இலேசாகவும் இருப்பீர்கள், வேலையும் நன்றாக நடைபெறும், ஏனெனில், நினைவு எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே ஸ்திதி இருக்கும். உங்களுடையது என்று நினைத்தால் தந்தையினுடைய நினைவு உள்ளது என்று அர்த்தம். யாரோ ஒரு வழக்கமான மகான் ஆத்மா கிடையாது, ஆனால், தந்தையாவார்! எனவே, எப்பொழுது உங்களுடையது என்று சொல்லிவிட்டீர்களோ, அப்பொழுது காரியமும் நன்றாக நடக்கும் மற்றும் ஸ்திதியும் கவலையற்றதாக இருக்கும். தந்தை கவலையைக் கொடுத்து விடுங்கள் என்ற சலுகையைக் (ஆஃபர்) கொடுத்துக் கொண்டு இருக் கின்றார், பிறகும் கூட ஒருவேளை, நீங்கள் சலுகையை ஏற்றுக்கொள்வதில்லை என்றால் என்ன சொல்வது? கவலையை விட்டுவிடுங்கள் என்பதே தந்தையினுடைய ஆஃபர் ஆகும். எனவே, சதா கவலையற்றவராக இருக்க வேண்டும் மற்றும் பிறருக்கு தன்னுடைய அனுபவத்தின் ஆதாரத்தில் கவலையற்றவர் ஆகுவதற்கான விதியைச் சொல்ல வேண்டும், அப்பொழுது அதிக ஆசீர்வாதம் கிடைக்கும். யாரிடமிருந்தாவது சுமை அல்லது கவலையைப் பெற்றுக் கொண்டீர்கள் என்றால் உள்ளத்திலிருந்து ஆசீர்வாதம் கொடுப்பார்கள். ஆகையால், தானும் கவலையற்ற சக்கரவர்த்தி யாக இருக்கின்றீர்கள் மற்றும் பிறருடைய சுபபாவனையின் ஆசீர்வாதங்களும் கிடைக்கும். எனவே, நீங்கள் சக்கரவர்த்தி ஆவீர்கள், அழிவற்ற செல்வத்தின் சக்கரவர்த்தி ஆவீர்கள். சக்கர வர்த்திக்கு என்ன கவலை இருக்க முடியும்! அழியக்கூடிய சக்கரவர்த்திகளுக்கோ கவலை உள்ளது ஆனால், இது அழிவற்றது ஆகும். நல்லது.

அழிவற்ற சுகம் மற்றும் அல்பகால சுகம் ஆகிய இரண்டின் அனுபவி ஆவீர்கள் அல்லவா? ஸ்தூல சாதனங்களின் சுகமானது அல்பகாலத்திற்கான சுகமாகும் மற்றும் ஈஸ்வரிய சுகம் அழிவற்ற சுகம் ஆகும். எனவே, அனைத்தையும் விட நல்ல சுகம் எது? ஈஸ்வரிய சுகம் எப்பொழுது கிடைத்துவிடுகிறதோ, அப்பொழுது அழியக்கூடிய சுகம் தானாகவே பின்னால் வரும். எவ்வாறு ஒருவர் வெயிலில் செல்கின்றார் என்றால் அவருக்குப் பின்னால் நிழல் தானாகவே வருகிறது. மேலும், ஒருவேளை, யாராவது நிழலுக்குப் பின்னால் சென்றால் எதுவும் கிடைக்காது. யார் ஈஸ்வரிய சுகத்தின் பக்கம் செல்கின்றார்களோ, அவர்களுக்குப் பின்னால் அல்பகால சுகம் தானாகவே நிழல் போல் வந்துகொண்டே இருக்கும், உழைக்க வேண்டியது இருக்காது. எங்கு தொண்டு (பரமார்த்) இருக்குமோ, அங்கு காரியம் (விவகார்) தானாகவே வெற்றி அடைந்துவிடு கிறது என்று கூறுகின்றார்கள். அதுபோன்று ஈஸ்வரிய சுகம் என்பது பரமார்த்தம் ஆகும் மற்றும் அழியக்கூடிய சுகம் என்பது விவகார் ஆகும். பரமார்த்தத்திற்கு முன்னால் விவகார் தானாகவே வந்துவிடும். எனவே, சதா இந்த அனுபவத்தில் இருக்க வேண்டும். இதன் மூலம் இரண்டும் (ஈஸ்வரிய சுகம், அழியக்கூடிய சுகம்) கிடைத்து விடவேண்டும். இல்லையென்றால், ஒன்று கிடைக்கும் மேலும் அதுவும் அழியக்கூடியதாக இருக்கும். சில நேரம் கிடைக்கும், சில நேரம் கிடைக்காது. ஏனெனில், பொருளே அழியக்கூடிய பொருள், அதன் மூலம் என்ன கிடைக்கும்? எப்பொழுது ஈஸ்வரிய சுகம் கிடைத்து விடுகிறதோ, அப்பொழுது சதா சுகம் நிறைந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள், துக்கத்தினுடைய பெயர் அடையாளம் கூட இருக்காது. ஈஸ்வரிய சுகம் கிடைத்துவிட்டது என்றால் அனைத்தும் கிடைத்துவிட்டது, எந்த அபிராப்தியும் இல்லை என்று அர்த்தம். அழிவற்ற சுகத்தில் இருப்பவர்கள் அழியக்கூடிய பொருட்களை விடுபட்டவராகி பயன் படுத்துவார்கள், மாட்டிக் கொள்ளமாட்டார்கள். நல்லது.

சதா தன்னை கல்பத்திற்கு முந்தைய வெற்றியடைந்த பாண்டவர் என புரிந்திருக் கின்றீர்களா? எப்பொழுதெல்லாம் பாண்டவர்களுடைய நினைவுச்சின்ன சித்திரத்தைப் பார்க்கின்றீர்களோ, அப்பொழுது இது நம்முடைய நினைவுச் சின்னம் என்று தோன்றுகிறதா? பாண்டவர் என்றால் சதா உறுதியாக இருப்பவர்கள். ஆகையினால், பாண்டவர் களுடைய சரீரத்தை உயரமாகக் காண்பிக் கின்றார்கள். ஒருபொழுதும் பலவீனமாகக் காண்பிப்பதில்லை. ஆத்மா துணிச்சலானது, சக்திசாலி யானது, அதற்கு பதிலாக சரீரத்தை சக்திசாலியாகக் காண்பித் துள்ளார்கள். பாண்டவர்களுடைய வெற்றி பிரசித்தமானது. கௌரவர்கள், அக்ரோணி சேனை இருந்தபோதிலும் தோல்லியடைந்து விட்டனர். பாண்டவர்கள் ஐவராக இருந்தபோதிலும் வெற்றி யடைந்துவிட்டனர். ஏன் வெற்றியாளர்கள் ஆனார்கள்? ஏனெனில், பாண்டவர்களுடன் தந்தை இருக்கின்றார், பாண்டவர்கள் சக்திசாலியானவர்கள், ஆன்மிக சக்தி உள்ளது ஆகையினால், அக்ரோணி கௌரவர்களின் சக்தி அவர்களுக்கு முன்னால் எதுவும் இல்லாமல் ஆகிவிட்டது. அப்பேற்பட்டவர்கள் ஆவீர்கள் அல்லவா? யார் வேண்டுமானாலும் முன்னால் வரட்டும், மாயா எந்த ரூபத்திலும் வரட்டும், ஆனால், அது தோல்வியடைந்து சென்று விட வேண்டும், அது வெற்றி அடையமுடியக் கூடாது. இப்பேற்பட்டவர்களை வெற்றியடைந்த பாண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. தாய்மார்கள் கூட பாண்டவ சேனையில் இருக்கின்றீர்கள் அல்லவா. இல்லை, வீட்டில் இருக்கக்கூடியவர்களா? யார் பலவீனமாக இருக்கின்றார்களோ, அவர்கள் வீட்டில் மறைந்து இருப்பார்கள், துணிச்சலானவர்கள் மைதானத்திற்கு வருவார்கள். நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள், மைதானத்திலா அல்லது வீட்டிலா? நாம் பாண்டவ சேனையின் வெற்றியடைந்த பாண்டவர் என்ற இந்த போதையில் சதா முன்னேறிக் கொண்டே இருங்கள்.

தன்னை எல்லையற்ற நிமித்த சேவாதாரி என புரிந்துள்ளீர்களா? எல்லையற்ற சேவாதாரி என்றால் எந்தவிதமான நான் மற்றும் எனது என்ற எல்லைக்குட்பட்டதில் வராதவர்கள் என்று அர்த்தம். எல்லையற்ற நிலை என்பதில் நான் என்பதும் கிடையாது, எனது என்பதும் கிடையாது. அனைத்தும் தந்தையினுடையது, நானும் தந்தையினுடையவர், சேவையும் தந்தையினுடையது. இதையே எல்லையற்ற சேவை என்று கூறுகின்றார்கள். நீங்கள் அத்தகைய எல்லையற்ற சேவாதாரிகளா அல்லது எல்லைக்குட்பட்டதில் வந்துவிடுகின்றீர்களா? எல்லையற்ற சேவாதாரி எல்லையற்ற இராஜ்யத்தை அடைகின்றார்கள். சதா எல்லையற்ற தந்தை, எல்லையற்ற சேவை மற்றும் எல்லை யற்ற இராஜ்ய பாக்கியம் – இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது எல்லையற்ற குஷி இருக்கும். எல்லைக்குட் பட்டதில் குஷி மறைந்துவிடுகிறது, எல்லையற்றதில் சதா குஷி இருக்கும். நல்லது.

விடைபெறும் நேரம்: இப்பொழுது சேவைக்கான திட்டம் மிக நன்றாக உருவாக்கி இருக்கின்றீர்கள். சேவை கூட உண்மையில் முன்னேற்றதிற்கான சாதனம் ஆகும். ஒருவேளை, சேவையை சேவை என்ற ரீதியில் செய்தால் அந்த சேவை முன்னேற்றுவதற்கான லிஃப்ட் கொடுக்கிறது. பிளைன் புத்தி (தெளிவான புத்தி) உடையவராகி மட்டும் திட்டம் தீட்டுங்கள், கொஞ்சம் கூட இங்கு, அங்கு என்பதினுடைய கலப்படம் இருக்கக்கூடாது. ஒரு உயர்ந்த பொருளை தயார் செய்து வைக்கின்றீர் கள் மற்றும் இங்கு, அங்கு உள்ள காற்றினால் அதில் கொஞ்சம் தூசி படிந்துவிடுகிறது என்றால் என்னவாகும்? அதற்காக பாதுகாப்பாக வைக் கின்றீர்கள் அல்லவா. அதுபோல் இங்கு, அங்கு உள்ள எதுவும் கலப்படம் ஆகிவிடக்கூடாது. இவ்வாறு சேவைக்கான திட்டம் நன்றாக உருவாக்கு கின்றீர்கள். சேவையில் உழைப்பு என்பது உழைப்பாகத் தோன்றுவதில்லை, குஷி ஏற்படுகிறது. ஏனெனில், அன்போடு செய் கின்றீர்கள், நல்ல ஊக்க, உற்சாகம் கொண்டிருக்கின்றீர்கள். பாப்தாதா சேவையின் ஊக்கத்தைப் பார்த்து குஷி அடைகின்றார்கள். கலப்படம் மட்டும் கூடாது. அப்பொழுது எவ்வளவு சமயத்தில் சேவை நடந்திருக்கிறதோ, அதைவிட நான்கு மடங்கு அதிகமாக நடைபெற முடியும். பிளைன் புத்தி அதிவேகமான சேவையை பிரத்யட்சமாகக் காண்பிக்கும். இப்பொழுது இதை செய்யவா, இதை செய்ய வேண்டாமா, இது நடக்காது, அது நடக்காது என்று யோசிக்க வேண்டியதாக உள்ளது அல்லவா. ஆனால், யார் செய்தார்களோ, அவர்கள் நன்றாக தான் செய்தார் கள், என்ன செய்தார்களோ அது நல்லதாகத் தான் செய்தார்கள் என்று அனைவருடைய புத்தியும் ஒன்றுபோல் ஆகவேண்டும். இந்தப் பாடம் உறுதியாகிவிட்டது என்றால் அதிவிரைவான சேவை ஆரம்பம் ஆகிவிடும். முதலிலிருந்தே சேவையின் வேகம் தீவிரமாகிக் கொண்டிருக் கிறது, முன்னேறிக்கொண்டு இருக்கிறது, வெற்றியும் கிடைத்துக்கொண்டு இருக்கின்றது. ஆனால், இப்போதைய கணக்குப்படி விஷ்வத்தின் ஆத்மாக்களுக்கு செய்தியைக் கொடுக்கக் கூடிய கணக்குப்படி இப்பொழுது உலகின் மூலை வரை சென்றடைந்து விட்டீர்கள். 750 கோடி ஆத்மாக் கள் எங்கே மற்றும் ஒரு கோடி, இரண்டு கோடி வரை செய்தி சென்றடைந் திருப்பது எங்கே! மீதம் எவ்வளவு பேர் உள்ளனர்? ஆம், இராஜ்யத்திற்கு நெருக்கத்தில் உள்ளவர்கள் வந்தடைந்துவிட்டனர், ஆனால், அனைவருமே தேவை. ஆஸ்தியோ அனைவருக்கும் கொடுக்க வேண்டும், அது முக்தியோ, ஜீவன் முக்தியோ. ஆனால், அனைவருக்கும் கொடுக்க வேண்டும். தந்தையினுடைய ஒரு குழந்தை கூட வஞ்சிக்கப்பட்டவர் ஆகிவிடக்கூடாது. எப்படியாவது தந்தையினுடைய ஆஸ்திக்கு அதிகாரியாக ஆகியே தீரவேண்டும், எப்படிப்பட்ட விதிப்படி செய்தியை கேட்டாலும் சரி, இதற்காக தீவிர வேகம் தேவை. இதற்கான நேரமும் வந்துகொண்டு இருக்கின்றது. வந்துவிடும்.

இப்பொழுது மெது மெதுவாக அனைத்து தர்மத்தினரும் தங்களுடைய விசயங்களில் (கொள்கைகளில்) வளைந்து கொடுத்து மாறிக் கொண்டிருக்கின்றார்கள். முன்பு பிடிவாத குணம் உள்ளவர்களாக இருந்தார்கள், இப்பொழுது வளைந்து கொடுத்து மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். கிருஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ, பாரதத்தின் தத்துவ சாஸ்திரங்களுக்கு உள்ளத்திலிருந்து மரியாதை கொடுக்கின்றார்கள் ஏனெனில், பாரதத்தின் தத்துவ சாஸ்திரத்திங்களில் அனைத்து விதமான இரமணீகரம் உள்ளது. அதுபோல் மற்ற தர்மங்களில் கிடையாது. கதைகளாக, நாடகமாக பாரதத்தின் தத்துவ சாஸ்திரங்களை ஏதாவது ஒரு முறையில் வர்ணனை செய்கின்றார்கள். அதுபோல் மற்ற தர்மங்களில் எங்கேயும் இல்லை. ஆகையினால், யார் முற்றிலும் பிடிவாதம் உடையவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கூட உள்ளத்தில் பாரதத்தின் தத்துவ சாஸ்திரங்கள், அதிலும் ஆதி சனாதன தத்துவ சாஸ்திரம் ஒன்றும் குறைந்தது அல்ல என்று புரிந்திருக்கின்றார் கள். தத்துவ சாஸ்திரம் என்று உள்ளது என்றால் ஆதி சனாதன தர்மத் தினுடையது தான் என்று அனைவரும் சொல்லும் அந்த நாளும் வரும். இந்து என்ற வார்த்தையினால் சினம் கொள்கின்றார்கள் ஆனால், ஆதி சனாதன தர்மத்திற்கு மரியாதை கொடுப்பார்கள். கடவுள் ஒருவர் என்றால் தர்மமும் ஒன்று தான், நம் அனைவருடைய தர்மமும் ஒன்று தான். இவ்வாறு மெது மெதுவாக ஆத்மாவின் தர்மத்தின் பக்கம் கவர்ச்சிக் கப்பட்டுக்கொண்டே செல்வார்கள். நல்லது.

வரதானம்:-

ஆத்மாவில் வீணானவற்றின் வெயிட் உள்ளது. வீணான எண்ணம், வீணான பேச்சு, வீணான கர்மம் ஆகியவற்றால் ஆத்மா சுமை உடையதாகிவிடுகிறது. இப்பொழுது இந்த வெயிட்டை அழித்துவிடுங்கள். இந்த வெயிட்டை சமாப்தி செய்வதற்காக சதா சேவையில் பிஸியாக இருங்கள், மனன (சிந்தனை) சக்தியை அதிகரித்திடுங்கள். மனன சக்தியினால் ஆத்மா சக்திசாலி ஆகிவிடும். எவ்வாறு உணவு ஜீரணம் ஆகுவதால் இரத்தம் ஆகிறதோ பிறகு, அது சக்தியாக செயல் புரிகிறதோ, அதுபோல் மனனம் செய்வதால் ஆத்மாவின் சக்தி அதிகரிக்கிறது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top