28 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 27, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இன்று பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள சுவமானத்தில் இருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இருக்கின்றார்கள். சுவமானத்தில் இருக்கும் குழந்தைகளுக்கே முழு கல்பத்திலும் மரியாதை கிடைக்கிறது. ஒரு பிறவியில் சுவமானதாரியாக இருப்பவர்கள் முழு கல்பத்திலும் சம்மானதாரி (மரியாதைக்கு உரியவர்) ஆகின்றார்கள். தன்னுடைய இராஜ்யத்தில் கூட இராஜ்ய அதிகாரி ஆகியிருக்கும் காரணத்தினால் பிரஜை மூலம் மரியாதை கிடைக்கிறது மற்றும் அரை கல்பம் பக்தர்கள் மூலம் மரியாதையைப் பெறுகிறீர்கள். இப்பொழுது தன்னுடைய இறுதி பிறவியில் கூட பக்தர்கள் மூலம் தேவ ஆத்மா அல்லது சக்தி ரூபத்திற்கான மரியாதை கிடைப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் மற்றும் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். எவ்வளவு உள்ளப்பூர்வமாக அன்போடு இப்பொழுது கூட மரியாதை கொடுத்துக் கொண்டு இருக் கின்றார்கள்! இவ்வளவு சிரேஷ்டமான பாக்கியத்தை எவ்வாறு பெற்றீர்கள்? முக்கியமாக ஒரு விசயத்தின் தியாகத்தினால் மட்டுமே இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. என்ன தியாகம் செய்தீர்கள்? தேக அபிமானத்தின் தியாகம் செய்தீர்கள். ஏனெனில், தேக அபிமானத்தின் தியாகம் இல்லாமல் சுவமானத்தில் நிலைத்திருக்கவே முடியாது. இந்த தியாகத்திற்கு பதிலாக பாக்கிய விதாதா பகவான் இந்த பாக்கியத்தை வரதானமாகக் கொடுத்திருக்கின்றார். இரண்டாவது விசயம் – சுயம் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு சுவமான் கொடுத்திருக்கின்றார். தந்தை குழந்தைகளை பாதங்களைப் பணியும் அடியாரிலிருந்து தனது தலையின் கிரீடமாக ஆக்கிவிட்டார். எவ்வளவு பெரிய சுவமானம் கொடுத்துள்ளார்! அத்தகைய சுவமானத்தை அடைந்திருக்கும் குழந்தைகளுக்கு, தந்தையும் மரியாதை கொடுக்கின்றார். தந்தை குழந்தைகளை சதா தன்னை விடவும் முன்னால் வைக்கின்றார். சதா குழந்தைகளுடைய குணங்களின் மகிமை பாடுகின்றார். ஒவ்வொரு நாளும் உள்ளப்பூர்வமாக அன்போடு அன்பு நினைவுகள் கொடுப்பதற்காக பரந்தாமத்தில் இருந்து சாகார வதனத்திற்கு வருகின்றார். அங்கிருந்து அனுப்புவதில்லை, ஆனால், வந்து கொடுக்கின்றார். தினந்தோறும் அன்பு நினைவுகள் கிடைக்கின்றது அல்லவா. இவ்வளவு சிரேஷ்டமான மரியாதை வேறு யாரும் கொடுக்க முடியாது. சுயம் தந்தை மரியாதை கொடுத்திருக்கின்றார். ஆகையினால், அழிவற்ற மரியாதைக்கு அதிகாரி ஆகியிருக்கின்றீர்கள். இத்தகைய சிரேஷ்ட தன்மையின் அனுபவத்தை செய்கின்றீர்களா? சுவமானம் (சுயமரியாதை) மற்றும் சம்மான் (மரியாதை) – இந்த இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது.

சுவமானத்தில் இருப்பவர்கள், தான் பிராப்தியாக அடைந்த சுவமானத்தில் இருந்துகொண்டு, சுவமானத்தினுடைய மரியாதையிலும் இருக்கின்றார்கள் மற்றும் பிறரையும் மரியாதையுடன் பார்க்கின்றார்கள், பேசுகின்றார்கள் மற்றும் தொடர்பில் வருகின்றார்கள். சுயமரியாதை என்பதன் அர்த்தமே சுயத்திற்கு மரியாதை கொடுப்பது என்பதாகும். எவ்வாறு தந்தை விஷ்வத்தின் அனைத்து ஆத்மாக்கள் மூலமாகவும் மரியாதையைப் பெறக்கூடியவராக இருக்கின்றார், ஒவ்வொருவரும் மரியாதை கொடுக்கின்றார்கள். ஆனால், எந்தளவு தந்தைக்கு மரியாதை கிடைக் கின்றதோ, அந்தளவு அனைத்து குழந்தைகளுக்கும் மரியாதை கொடுக்கின்றார். யார் கொடுப் பதில்லையோ அவர்கள் தேவதை ஆவதில்லை. அனேக பிறவிகள் தேவதை ஆகின்றீர்கள் மற்றும் அனேக பிறவிகளுக்கு தேவதை ரூபத்தில் பூஜை நடக்கின்றது. ஒரு பிறவி பிராமணன் ஆகின்றீர்கள், ஆனால், அனேக பிறவிகள் தேவதை ரூபத்தில் இராஜ்யம் செய்கின்றீர்கள் மற்றும் பூஜைக்குரியவர்கள் ஆகின்றீர்கள். தேவதை என்றால் கொடுக்கக்கூடியவர் என்று அர்த்தம். ஒருவேளை, இந்தப் பிறவியில் மரியாதை கொடுக்கவில்லை எனில், தேவதையாக எவ்வாறு ஆவீர்கள், அனேக ஜென்மங்களில் எவ்வாறு மரியாதையைப் பெறுவீர்கள்? தந்தையைப் பின்பற்றுங்கள். சாகார சொரூப பிரம்மா தந்தையைப் பார்த்திருக் கின்றீர்கள் – சதா தன்னை வேர்ல்டு சர்வண்ட் (விஷ்வ சேவாதாரி) என்று சொல்லிக் கொண்டார், குழந்தைகளுடைய சேவகன் என்று சொல்லிக் கொண்டார் மற்றும் குழந்தைகளை எஜமானராக ஆக்கினார். சதா மாலேகம் சலாம் செய்தார். சதா சிறிய குழந்தைகளுக்கும் கூட மரியாதை கலந்த அன்பு கொடுத்தார், எதிர் காலத்தின் விஷ்வ கல்யாணகாரி என்ற ரூபத்தில் பார்த்தார். குமாரிகள் மற்றும் குமாரர்களை, இளைஞர்களை உலகத்தின் புகழ் வாய்ந்த மகான் ஆத்மாக்களுக்கு சவால் விடுபவர்கள், முடியாததை முடித்துக் காட்டுபவர்கள், மகாத்மாக்களை தலை வணங்கச் செய்பவர்கள் – இப்பேற்பட்ட பவித்ர ஆத்மாக்கள் என்ற மரியாதையுடன் பார்த்தார். சதா தன்னை விடவும் அதிசயம் செய்யக்கூடிய மகான் ஆத்மா எனப் புரிந்து மரியாதை கொடுத்தார் அல்லவா! அவ்வாறே வயோதிக ஆத்மாக்களை சதா அனுபவி ஆத்மா, தனக்கு சமமான ஆத்மா என்ற மரியாதையுடன் பார்த்தார். பந்தனத்தில் இருப்பவர்களை, நிரந்தரமாக நினைவு செய்வதில் முதல் எண்ணில் இருப்பவர்கள் என்ற மரியாதையுடன் பார்த்தார். ஆகையினால், நம்பர் ஒன் அழிவற்ற மரியாதைக்கு அதிகாரி ஆனார். இராஜ்யத்தின் மரியாதையிலும் நம்பர் ஒன் – விஷ்வ மகாராஜன் மற்றும் பூஜைக்குரிய ரூபத்திலும் கூட தந்தையினுடைய பூஜைக்குப் பிறகு முதல் பூஜைக்குரிய வர்களாக இலட்சுமி நாராயணரே ஆகின்றார்கள். எனவே, இராஜ்யத்தின் மரியாதை மற்றும் பூஜையின் மரியாதை ஆகிய இரண்டிலும் முதல் எண்ணிற்குரியவர் ஆகிவிட்டார். ஏனெனில், அனைவருக்கும் சுவமானம் மற்றும் சம்மான் (மரியாதை) கொடுத்தார். மரியாதை கொடுத்தால், மரியாதை கொடுப்பேன் என்று நினைக்கவில்லை. யார் மரியாதை கொடுப்பவராக இருப்பாரோ, அவர் நிந்தனை செய்பவர்களையும் கூட தன்னுடைய நண்பனாக நினைப்பார். மரியாதை கொடுப் பவர்களை மட்டும் தன்னுடையவராக நினைக்கமாட்டார், ஆனால், நிந்தனை செய்பவர்களையும் தன்னுடையவராக நினைப்பார், ஏனெனில், முழு உலகமும் நம்முடைய குடும்பம் ஆகும். அனைத்து ஆத்மாக்களின் வேர் பகுதி பிராமணர்களாகிய நீங்கள் ஆவீர்கள். இந்த அனைத்து கிளைகளும் அதாவது வெவ்வேறு தர்மத்தின் ஆத்மாக்களும் அடி மரத்திலிருந்து வெளிப்பட்ட வர்களே ஆவார்கள். எனவே, அனைவரும் நம்முடையவர்கள் ஆகிவிட்டனர் அல்லவா. அத்தகைய சுவமானத்தில் இருக்கக்கூடியவர்கள், சதா தன்னை மாஸ்டர் படைப்பாளர் எனப் புரிந்து அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் வள்ளல் ஆகின்றார்கள். சதா தன்னை ஆதி தேவன் பிரம்மாவினுடைய ஆதி இரத்தினம், ஆதி நடிப்பு நடிக்கும் ஆத்மாக்கள் எனப் புரிந்துள்ளீர்களா? அந்தளவு போதை உள்ளதா? குழந்தைகளுக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன? முதியவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன, இளைஞர்களுக்குக் கொடுப்பது என்றால் என்ன என்பதை அனைவரும் கேட்டீர்களா? ஆதி பிதா பிரம்மா நம்மை அந்தளவு மரியாதையுடன் பார்த்தார். எவ்வளவு போதை இருந்திருக்கும்! எனவே, ஆதி ஆத்மா, எந்த சிரேஷ்டமான பார்வை யுடன் பார்த்தாரோ, அதுபோன்றே சிரேஷ்ட ஸ்திதியினுடைய சிருஷ்டியில் இருப்பேன் என்பதை சதா நினைவில் வைத்திடுங்கள். இவ்வாறு தனக்குத் தானே உறுதிமொழி செய்யுங்கள். உறுதி மொழி செய்துகொண்டே இருக்கின்றீர்கள் அல்லவா. வார்த்தைகளாலும் உறுதிமொழி செய் கின்றீர்கள், மனதாலும் செய்கின்றீர்கள் மற்றும் எழுதிக் கொடுத்தும் செய்கின்றீர்கள், மேலும், பிறகு மறந்தும் விடுகின்றீர்கள். ஆகையினால், உறுதிமொழியின் இலாபத்தைப் பெறமுடிவ தில்லை. நினைவில் வைத்திடுங்கள், பலனையும் பெற்றிடுங்கள். எத்தனை முறை உறுதிமொழி செய்துள்ளேன் மற்றும் எத்தனை முறை கடைபிடித் துள்ளேன்? கடைபிடிக்க வருகிறதா அல்லது உறுதிமொழி மட்டும் செய்ய வருகிறதா? அல்லது அவ்வப்போது உறுதிமொழி செய்யக்கூடியவர், அவ்வப்போது கடைபிடிக்கக் கூடியவர் என்று மாறிக்கொண்டே இருக்கின்றீர்களா என்று அனைவரும் தன்னை சோதனை செய்யுங்கள்

டீச்சர்கள் என்ன நினைக்கின்றீர்கள்? கடைபிடிப்பவர்களின் பட்டியலில் இருக்கின்றீர்கள் அல்லவா. டீச்சர்களை பாப்தாதா சதா துணை ஆசிரியர் என்று சொல்கின்றார்கள். எனவே, துணையாக இருப்பவர்களின் விசேஷத் தன்மை என்ன? துணையாக இருப்பவர்கள் சமமாக இருப்பார்கள். தந்தை எப்பொழுதாவது மாறுகிறாரா என்ன? டீச்சர்கள் கூட உறுதிமொழி மற்றும் பலன் ஆகிய இரண்டினுடைய சமநிலை வைக்கக்கூடியவர்கள். உறுதிமொழி அதிகமாகவும் பலன் குறைவாகவும் உள்ளது என்றால் இது சமநிலை கிடையாது. யார் இரண்டினுடைய சமநிலை வைக் கின்றார்களோ, அவர்களுக்கு வரதாதா தந்தை மூலம் இந்த வரதானம் மற்றும் ஆசீர்வாதம் கிடைக் கின்றது. அவர்கள் சதா திடமான எண்ணத்தினால் கர்மத்தில் வெற்றி மூர்த்தி ஆகின்றார்கள். துணை ஆசிரியருடைய விசேஷ கர்மம் இதுவே ஆகும். சங்கல்பம் மற்றும் கர்மம் சமமாக இருக்க வேண்டும். சங்கல்பம் சிரேஷ்டமாகவும் கர்மம் சாதாரணமாகவும் இருக்கின்றது என்றால் இதை சமநிலை என்று கூறமுடியாது. எனவே, சதா டீச்சர்கள் தங்களை துணை ஆசிரியர் அதாவது தந்தைக்கு சமமான ஆசிரியர் எனப் புரிந்துகொண்டு, இந்த நினைவில் சக்திசாலி ஆகிக்கொண்டே செல்லுங்கள். பாப்தாதாவிற்கு டீச்சர்களின் தைரியத்தைப் பார்த்து குஷி ஏற்படுகின்றது. தைரியம் வைத்து சேவைக்கு நிமித்தமானவர்களாக ஆகிவிட்டீர்கள் அல்லவா. ஆனால், இப்பொழுது தைரியமான டீச்சர், தந்தைக்கு சமமான ஆசிரியர் என்ற இந்த சுலோகனை சதா நினைவில் வைத்திடுங்கள். இதை ஒருபொழுதும் மறக்கக்கூடாது. சமமாக ஆவதற்கான இலட்சியம் இருக்கும்பொழுது பாப்தாதா தானாகவே உங்கள் முன்னால் இருப்பார்கள் அதாவது துணையாக இருப்பார்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள சுவமானத்தில் இருந்து மரியாதை பெறக்கூடிய குழந்தைகளை, பாப்தாதா கண்களுக்கு முன்னால் பார்த்துக்கொண்டே, மரியாதை நிறைந்த திருஷ்டியுடன் அன்பு நினைவுகள் கொடுத்துக்கொண்டு இருக் கின்றார்கள். சதா இராஜ்ய மரியாதை மற்றும் பூஜ்ய மரியாதையில் சமமாகவும், துணையாகவும் இருக்கும் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

பீஹார் குழுவினருடன் : அனைவரும் தங்களை சுயராஜ்ய அதிகாரி என்று புரிந்திருக்கின்றீர்களா? சுயத்தின் இராஜ்யம் கிடைத்துவிட்டதா? அல்லது கிடைக்கப் போகிறதா? சுயராஜ்யம் என்றால் எப்பொழுது விரும்புகின்றீர்களோ, எப்படி விரும்புகின்றீர்களோ, அப்படி கர்மேந்திரியங்கள் மூலம் கர்மம் செய்விக்க முடிய வேண்டும். கர்மேந்திரி யங்களை வென்றவர் என்றால் சுயராஜ்ய அதிகாரி ஆவதாகும். அப்படிப்பட்ட அதிகாரி ஆகியிருக்கின்றீர்களா அல்லது அவ்வப்போது கர்மேந்திரியங் கள் உங்களை இயக்குகின்றனவா? அவ்வப்போது மனம் உங்களை இயக்குகிறதா அல்லது நீங்கள் மனதை இயக்குகின்றீர்களா? அவ்வப்போது மனம் வீண் எண்ணத்தை உருவாக்குகிறதா அல்லது உருவாக்குவதில்லையா? ஒருவேளை, அவ்வப்போது உருவாக்குகிறது என்றால் அந்த சமயத்தில் உங்களை சுயராஜ்ய அதிகாரி என்று சொல்லமுடியுமா? இராஜ்யம் என்பது மிகப் பெரிய சக்தி ஆகும். இராஜ்ய சக்தி விரும்பினால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும், எப்படி நடத்த விரும்புகிறார்களோ அப்படி நடத்த முடியும். இந்த மனம், புத்தி, சமஸ்காரம் ஆத்மாவின் சக்திகள் ஆகும். ஆத்மா இந்த மூன்றினுடைய எஜமானர் ஆகும். ஒருவேளை, எப்பொழுதாவது சமஸ்காரம் தன் பக்கம் இழுக்கிறது என்றால் எஜமானர் என்று சொல்ல முடியுமா? எனவே, சுயராஜ்ய சக்தி என்றால் கர்மேந்திரியங்களை வென்றவர் என்பதாகும். யார் கர்மேந்திரியங்களை வென்றவர் களோ, அவர்களே விஷ்வத்தின் இராஜ்ய சக்தியை அடைய முடியும். சுயராஜ்ய அதிகாரி, விஷ்வ இராஜ்ய அதிகாரி ஆகின்றார். எனவே, சுயராஜ்யம் என்பது பிராமண வாழ்க்கையின் பிறப்பதிகாரம் ஆகும் என்பது பிராமண ஆத்மாக்களாகிய உங்களுடைய சுலோகன் ஆகும். சுயராஜ்ய அதிகாரி யினுடைய ஸ்திதி, சதா மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கும், எந்த ஒரு சக்தியினுடைய குறைபாடும் இருக்காது. சுயராஜ்ய அதிகாரி சதா தர்மம் அதாவது தாரணை மூர்த்தியாகவும் இருப் பார்கள் மற்றும் இராஜ்யம் அதாவது சக்திசாலியாகவும் இருப்பார்கள். இப்பொழுது இராஜ்யத்தில் தடுமாற்றம் ஏன் உள்ளது? ஏனெனில், தர்ம சக்தி தனியாக ஆகிவிட்டது மற்றும் இராஜ்ய சக்தி தனியாக ஆகிவிட்டது. நொண்டி போல் ஊனம் ஆகிவிட்டது. ஒரு சக்தியாக ஆகிவிட்டது அல்லவா, ஆகையினால், தடுமாற்றம் உள்ளது. அவ்வாறு உங்களிடத்திலும் கூட ஒருவேளை தர்மம் மற்றும் இராஜ்யம் ஆகிய இரண்டு சக்திகளும் இல்லை என்றால் தடை வரும், தடுமாற்றத்தில் கொண்டு வரும், யுத்தம் செய்ய வேண்டியிருக்கும். மேலும், இரண்டு சக்திகளும் உள்ளன என்றால் எப்பொழுதுமே கவலையற்ற சக்கர வர்த்தியாக இருப்பீர்கள், எந்தத் தடையும் வரமுடியாது. எனவே, அப்பேற்பட்ட கவலையற்ற சக்கரவர்த்தி ஆகி விட்டீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சம் சரீரத்தினுடைய, சம்பந்தத்தினுடைய கவலை உள்ளதா? பாண்டவர்களுக்கு வருமானத்தைப் பற்றிய கவலை உள்ளதா? குடும்பத்தை நடத்துவதற்கான கவலை உள்ளதா அல்லது கவலை யற்றவர்களாக இருக்கின்றீர்களா? நடத்துவிப்பவர் நடத்திக் கொண்டு இருக் கின்றார், செய்விப்பவர் செய்வித்துக்கொண்டு இருக்கின்றார் – இவ்வாறு நிமித்தமாகி செய்பவர்கள் கவலையற்ற சக்கரவர்த்தி ஆகின்றார்கள். நான் செய்துகொண்டு இருக்கின்றேன் என்ற இந்த உணர்வு வந்துவிட்டால் கவலையற்றவராக இருக்க முடியாது. ஆனால், தந்தை மூலம் நிமித்தமாக ஆக்கப்பட்டு உள்ளேன் என்ற இந்த நினைவு இருக்கிறது என்றால் கவலையற்ற வாழ்க்கையின் அனுபவம் செய்வீர்கள். எந்தக் கவலையும் இருக்காது. நாளை என்னவாகும் என்ற கவலை கூட இருக்காது. நாளை என்ன ஆகுமோ, எப்படி ஆகுமோ என்ற இந்தச் சின்னக் கவலை எப்பொழுதாவது இருக்கிறதா? விநாசம் எப்பொழுது ஆகும், என்ன ஆகும்? என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கு என்ன ஆகுமோ? பேரன், பேத்திகளுக்கு என்ன ஆகுமோ? இந்தக் கவலை உள்ளதா? என்ன நடந்துகொண்டு இருக்கிறதோ, அது நல்லது மற்றும் என்ன நடக்கப் போகிறதோ அது இன்னும் நல்லதாக நடக்கும் என்ற இந்த நம்பிக்கை கவலையற்ற சக்கரவர்த்திகளுக்கு எப்பொழுதுமே இருக்கும். ஏனெனில், செய்விக்கக் கூடியவர் நல்லவரிலும் நல்லவர் ஆவார் அல்லவா. இவர்களையே நிச்சயபுத்தி உடைய வெற்றியாளர்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு ஆகிவிட்டீர்களா அல்லது யோசித்துக் கொண்டு இருக்கின்றீர்களா? ஆகியே தீர வேண்டும் அல்லவா. இவ்வளவு பெரிய இராஜ்யம் கிடைக்கிறது என்றால் யோசிப்பதற்கு என்ன விசயம் உள்ளது? தன்னுடைய அதிகாரத்தை யாராவது விடுவார்களா? குடிசையில் வசிப்பவர் களாகக் கூட இருக்கலாம், சிறிதளவு தான் சொத்து இருக்கும், அப்பொழுது கூட விடமாட்டார்கள். இதுவோ எவ்வளவு பெரிய பிராப்தி! எனது அதிகாரம் ஆகும் என்ற இந்த நினைவினால் சதா அதிகாரி ஆகி பறந்துகொண்டே இருங்கள். சுயராஜ்யம் நம்முடைய பிறப்பதிகாரம் ஆகும் என்ற இந்த வரதானத்தை நினைவில் வைக்க வேண்டும். உழைத்து அடைபவர்கள் அல்ல, அதிகாரம் உள்ளது. நல்லது. பீஹார் என்றால் சதா பஹாரில் (வசந்தகாலத்தில்) இருப்பவர்கள் ஆவார்கள். இலையுதிர் காலத்தில் செல்லக்கூடாது. ஒருபொழுதும் சுழல் காற்று, புயல் வரக்கூடாது. சதா வசந்தகாலம். நல்லது.

தன்னை ஆன்மிக திருஷ்டியின் மூலம் சிருஷ்டியை மாற்றக்கூடியவர் என்று அனுபவம் செய்கின்றீர்களா? திருஷ்டி மூலம் சிருஷ்டி மாறிவிடுகிறது என்று கேட்டிருக்கிறீர்கள், ஆனால், இப்பொழுது அனுபவி ஆகிவிட்டீர்கள். ஆன்மிக திருஷ்டி மூலம் சிருஷ்டி மாறிவிட்டது அல்லவா. இப்பொழுது உங்களுக்கு தந்தை உலகமாக இருக்கின்றார், எனவே, சிருஷ்டி மாறிவிட்டது. முன்பிருந்த சிருஷ்டி அதாவது உலகம் மற்றும் இப்போதைய உலகம், இந்த இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா. முன்பிருந்த உலகத்தில் புத்தி அலைந்து திரிந்தது மற்றும் இப்பொழுது தந்தையே உலகம் ஆகிவிட்டார். எனவே, புத்தியின் அலைகழிச்சல் நின்றுவிட்டது, ஒருமுகப்பட்டுவிட்டது. ஏனெனில், முன்பிருந்த வாழ்க்கையில், சில நேரம் தேகத்தின் சம்பந்தம், சில நேரம் தேகத்தின் பொருட்கள் என அனேக விசயங்களில் புத்தி சென்றது. இப்பொழுது இவை அனைத்தும் மாறிவிட்டன. இப்பொழுது தேகம் நினைவில் உள்ளதா அல்லது ஆத்மா நினைவில் உள்ளதா? ஒருவேளை, தேகத்தில் எப்பொழுதாவது புத்தி செல்கிறது என்றால் அது தவறு என்று புரிந்துகொள்கிறீர்கள் அல்லவா. பிறகு மாற்றிவிடுகிறீர்கள், தேகத்திற்கு பதிலாக தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்வதற்கான பயிற்சி செய்கிறீர்கள் எனில், உலகம் மாறிவிட்டது அல்லவா. தானும் மாறிவிட்டீர்கள். தந்தை தான் உலகமாக இருக்கின்றாரா அல்லது இப்பொழுது உலகத்தில் ஏதாவது மீதம் உள்ளதா? அழியக்கூடிய செல்வம் மற்றும் அழியக்கூடிய சம்பந்தத்தின் பக்கம் புத்தி செல்லவில்லை தானே? இப்பொழுது எனது என்பதே இல்லை. என்னிடம் மிகுந்த பணம் உள்ளது என்பது எண்ணம் மற்றும் கனவில் கூட இருக்காது, ஏனென்றால், அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டீர்கள். எனது என்பதை உனது என்று மாற்றிவிட்டீர்கள் அல்லவா. அல்லது எனது என்பதும் என்னுடையது மற்றும் தந்தையினுடையதும் என்னுடையது, இவ்வாறு நினைப் பதில்லை தானே? இந்த அழியக்கூடிய உடல், பணம், பழைய மனம், என்னுடையது அல்ல, தந்தைக்குக் கொடுத்துவிட்டீர்கள். அனைத்தும் உன்னுடையது என்ற எண்ணத்தையே, முதன் முதலில் மாற்றம் அடைவதற்கான எண்ணமாகக் கொண்டு வந்தீர்கள் மற்றும் உனது என்று சொல்வதிலேயே பலன் உள்ளது. இதில் தந்தைக்கு பலன் இல்லை, உங்களுக்கு பலன் உள்ளது. ஏனெனில், எனது என்று சொல்வதனால் மாட்டிக்கொள்கிறீர்கள், உனது என்று சொல்வதனால் விடுபட்டுவிடுகிறீர்கள். எனது என்று சொல்வதனால் சுமை உடையவர்கள் ஆகிவிடுகிறீர்கள் மற்றும் உனது என்று சொல்வதனால் டபுள் லைட்டாக, டிரஸ்டியாக ஆகிவிடுகிறீர்கள். எனவே, எது நன்றாக உள்ளது? இலகுவாக ஆகுவது நன்றாக உள்ளதா அல்லது பாரமானவராக ஆகுவது நன்றாக உள்ளதா? தற்காலத்தில் சரீரத்தளவில் கூட ஒருவர் பருமனாக இருக்கிறார் என்றால் அது நன்றாக இருப்பதில்லை. அனைவரும் தன்னை மெலிய வைப்பதற்கான முயற்சி செய்கிறார்கள். ஏனெனில், பருமனாக ஆகுவது என்றால் நஷ்டம் மற்றும் இலகுவாக ஆவதனால் இலாபம் உள்ளது. இவ்வாறே எனது, எனது என்று சொல்வதனால் புத்தியில் சுமை ஏறிவிடுகிறது, உனது, உனது என்று சொல்வதனால் புத்தி இலகுவாக ஆகிவிடுகிறது. எதுவரை இலகுவானவர்களாக ஆகவில்லையோ, அதுவரை உயர்ந்த ஸ்திதியை சென்றடைய முடியாது. பறக்கும் கலையே ஆனந்தத்தின் அனுபவத்தை செய்விக்கவல்லது. இலகுவாக இருப்பதிலேயே மஜா (மகிழ்ச்சி) உள்ளது. நல்லது.

தந்தை கிடைத்துவிட்டார் என்றால் அவருக்கு முன்னால் மாயை என்ன பெரிய விசயம்? மாயை அழ வைக்கக் கூடியது மற்றும் தந்தை ஆஸ்தி கொடுக்கக்கூடியவர், பிராப்தி அடையச் செய்பவர். முழு கல்பத்தில் அத்தகைய பிராப்தியை அடையச் செய்யும் தந்தை கிடைக்க முடியாது. சொர்க்கத்திலும் கிடைக்கமாட்டார். எனவே, ஒரு விநாடி கூட மறக்கக்கூடாது. எல்லைக்குட்பட்ட பிராப்தியை அடையச் செய்பவரைக் கூட மறப்பதில்லை எனில், எல்லையற்ற பிராப்தியை அடையச் செய்யக்கூடியவரை எவ்வாறு மறக்க முடியும்!. எனவே, டிரஸ்டி (தர்மகர்த்தா) என்பதை சதா நினைவில் வைக்க வேண்டும். ஒருபொழுதும் தன் மீது சுமையை வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு இருப்பதனால் சதா சிரித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், பறந்துகொண்டும் இருப்பீர் கள். வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்! சிரிப்பது, பாடுவது மற்றும் பறப்பது. எப்பொழுது பிராப்தி கிடைக்குமோ, அப்பொழுது சிரிப்பார்கள் அல்லவா. இல்லையெனில் அழுவார்கள். எனவே, நான் சிரித்துக்கொண்டும், பாடிக்கொண்டும், பறந்து கொண்டும் இருப்பவர், எப்பொழுதும் தந்தையின் உலகத்தில் இருப்பவர் என்ற இந்த வரதானத்தை நினைவில் வைக்க வேண்டும். புத்தி செல்வதற்கான இடம் வேறு எதுவுமே இல்லை. கனவில் கூட அழக்கூடாது. மாயை அழ வைத்தாலும் கூட அழக்கூடாது. மனதின் அழுகை என்பதும் உள்ளது. கண்களால் மட்டும் அழுவது என்பது கிடையாது. மாயை அழ வைக்கிறது, தந்தை சிரிக்க வைக்கின்றார். பீஹார் என்றால் சதா குஷியாக இருக்கக்கூடியவர்கள், வசந்தகாலம் போன்றவர்கள். மேலும், வங்காளம் என்றால் சதா இனிமையாக இருப்பவர்கள். வங்காளத்தில் மிட்டாய்கள் நன்றாக உள்ளன அல்லவா, பல்வேறு ரகங்கள் உள்ளன. எனவே, எங்கே இனிமைத்தன்மை உள்ளதோ, அங்கேயே தூய்மை உள்ளது. தூய்மை இல்லாமல் இனிமைத்தன்மை வரமுடியாது. எனவே, சதா இனிமையாக இருப்பவர்கள் மற்றும் சதா மகிழ்ச்சியாக இருப்பவர்கள். நல்லது. டீச்சர்களும் மகிழ்ச்சியானவர்களைப் பார்த்து வசந்தகாலத்திலேயே இருக்கிறீர்கள் அல்லவா. நல்லது.

வரதானம்:-

ஒருவேளை, தந்தைக்கு அருகாமையில் இருப்பது விருப்பமாக உள்ளது என்றால் எப்பொழுதும் எந்தவொரு தீய சகவாசத்தில் இருந்தும் தூரமாக இருக்க வேண்டும். சிலவிதமான கவர்ச்சி தேர்வு ரூபத்தில் வரும், ஆனால், கவர்ச்சிக்கப்படக் கூடாது. தீய சகவாசம் அனேகவிதமாக உள்ளன, வீண் எண்ணங்கள் அல்லது மாயையினுடைய கவர்ச்சிகரமான எண்ணங்களின் தொடர்பு (சங்க்), உறவினர்களின் தொடர்பு, பேச்சின் தொடர்பு, அன்ன தோஷத்தின் தொடர்பு, கர்மத்தின் தொடர்பு இந்த அனைத்து தீய சகவாசங்களில் இருந்தும் தன்னை பாதுகாக்கக் கூடியவர்களே மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர்கள் ஆகின்றார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top