27 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 26, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! ஞானச் செல்வத்தை தானம் செய்ய வேண்டுமென்றால், சிந்தனைக் கடலைக் கடையுங்கள். தானம் செய்வதற்கான ஆர்வம் கொள்ளுங்கள். அப்பொழுது மனனம் நடந்து கொண்டே இருக்கும்.

கேள்வி: -

ஞான மார்க்கத்தில் எப்பொழுதும் தங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சாதனம் என்ன?

பதில்:-

எப்பொழுதும் தங்களை தாங்களே ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக பாபா மூலமாக கிடைக்கும் ஞானப் புல்லை (முரளி) சாப்பிட்டு பின் அதை அசை போட வேண்டும். அதாவது மனனம் செய்ய வேண்டும். எந்த குழந்தைகளுக்கு மனனம் செய்யும் அதாவது ஜீரணம் செய்வதற் கான பழக்கம் இருக்கிறதோ அவர்கள் நோய்வாய்ப்பட முடியாது. யாரிடம் விகாரங்களின் நோய் இல்லையோ அவர்களே எப்பொழுதும் ஆரோக்கிய மானவர்கள் ஆவார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

நீங்கள் அன்பின் கடல் ஆவீர்கள்.. ..

ஓம் சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். மனிதர்கள் பாடல் ஆகியவை தயாரிக்கிறார்கள். சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கூறுகிறார்கள். ஆனால் எதையும் புரிந்து கொள்வது இல்லை. எதெல்லாம் படித்துக் கொண்டே வந்துள்ளார்களோ அவற்றால் யாருக்குமே நன்மை ஆகவில்லை. இன்னுமே தீமை ஆகிக் கொண்டே வந்துள்ளது. அனைவருக்கும் நன்மை செய்பவர் ஒரே ஒரு இறைவன் ஆவார். நமக்கு நன்மை செய்பவர் வந்து விட்டுள்ளார் என்று நீங்கள் புரிந்துள்ளீர்கள். நன்மையின் வழிக் கூறிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பாரதவாசிகளுக்கு பொதுவாக முழு உலகிற்கும் நன்மை செய்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். சத்யுகத்தில் அனைவருக்கும் நன்மை இருந்தது. நீங்கள் எல்லோரும் சுகதாமத்தில் இருந்தீர்கள் மற்ற எல்லோரும் சாந்திதாமத்தில் இருந்தார்கள். இது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. ஆனால் பாயிண்ட் நழுவிப் போகிறது. முழுமையாக தாரணை செய்வதில்லை. ஒரு பாயிண்ட்டின் மீது ஞான சிந்தனை செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அவ்வாறு ஆகாது. மிருகங்களிடம் இருக்கும் அறிவு அளவிற்கு கூட இன்றைய மனிதர்களிடம் இல்லை. மிருகங்கள் (பசுக்கள்) புல் சாப்பிடுகிறது என்றால் அசை போட்டுக் கொண்டே இருக்கும். உங்களுக்குக் கூட உணவு கிடைக்கிறது. ஆனால் நீங்கள் நாள் முழுவதும் அசை போடுவதில்லை. அவைகள் நாள் முழுவதும் அசை போட்டுக் கொண்டே இருக்கின்றன. இங்கே உங்களுக்கு ஞானப்புல் கிடைக்கிறது. யோகம் மற்றும் ஞானம் இதன் மீது நாள் முழுவதும் விசார் சாகர் மந்தன் (சிந்தனைக் கடலை கடைதல்) செய்து கொண்டே இருக்க வேண்டும். யாருக்கு சேவையில் ஆர்வம் இல்லையோ அவர்கள் விசார் சாகர் மந்தன் செய்து என்ன செய்வார்கள்? ஆர்வம் இல்லையென்றால் செய்யவே மாட்டார்கள். ஒரு சிலருக்கு ஞானச் செல்வம் அளிப்பதற்கான ஆர்வம் இருக்கும். மாட்டு கொட்டகைகளுக்குச் சென்று மனிதர்கள் பசுக்களுக்கு புல் ஆகியவை கொடுக்கிறார்கள். அதைக் கூட புண்ணியம் என்று கருது கிறார்கள். தந்தை உங்களுக்கு இந்த ஞானப் புல்லை உணவாக ஊட்டுகிறார். இதன் மீது விசார் சாகர் மந்தன் செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால், குஷியாக இருப்பீர்கள். மேலும் சேவையில் ஆர்வமும் இருக்கும். ஒரு சிலர் லோட்டா முழுவதுமாக நிரப்பிக் கொள்கிறார்கள் அல்லது ஒரு துளி எடுக்கிறார்கள். பிறகும் சொர்க்கத்தில் வருவார்கள். மற்றபடி எந்த அளவிற்கு தாரணை செய்வார்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவார்கள். மற்றபடி சொர்க்கத்தில் ஒரு துளி மூலமாகக் கூட சென்று விடுவார்கள். மனிதர்கள் இறக்கும் பொழுது அவர்களுக்கு கங்கை ஜலத்தின் ஒரு துளி கொடுக்கிறார்கள். ஒரு சிலர் வீட்டில் எப்பொழுதும் கங்கா ஜலத்தைத் தான் குடிக்கிறார்கள். எவ்வளவு குடித்துக் கொண்டு இருக்கக் கூடும். கங்கை பாய்ந்து கொண்டே இருக்கிறது. அதை யார் விழுங்கி விட முடியும். உங்களுக்காக கடலை விழுங்கி விட்டார்கள் என்று பாடப்பட்டுள்ளது. யார் ஞான கடலுக்கு நெருங்கி வந்து விடுகிறார்களோ, அதிகமாக சேவை செய்கிறார்களோ அவர்களே ருத்ர மாலையில் கோர்க்கப்படுகிறார்கள். எந்த அளவிற்கு யார் விழுங்கி கொள்கிறார்களோ மற்றவர்களுக்கு நன்மை செய்கிறார்களோ அவர்கள் பதவியும் அடைகிறார்கள். எந்த அளவிற்கு தாரணை செய்வீர்களோ அந்த அளவு குஷியும் இருக்கும். செல்வந்தர்களுக்கு குஷி இருக்கும் அல்லவா? யாரிடம் நிறைய ஏராளமான செல்வம் இருக் கிறதோ, தானம் செய்கிறார்களோ, கல்லூரி, சத்திரம், கோவில் ஆகியவை கட்டிக் கொடுக்கிறார் களோ அவர்களுக்கு அந்த அளவிற்கு குஷியும் இருக்கும். இங்கு உங்களுக்கு 21 பிறவிகளுக்கு அழியாத ஞான ரத்தினங்களான அழியாத பொக்கிஷம் கிடைக்கிறது. யார் நல்ல முறையில் தாரணை செய்து பிறகு தானமும் செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கிறது. ஒரு சில குழந்தைகள் எழுதுகிறார்கள் லி பாபா நாங்கள் வேலை செய்வதை விட்டு விட்டு இந்த ஆன்மீக சேவையில் ஈடுபட வேண்டும் என்று மனம் விரும்புகிறது. புரொஜெக்டர் கண்காட்சி ஆகியவை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டே இருக்கலாம். ஒரு துளி கூட யாருக்காவது கிடைத்தது என்றால் நன்மை ஆகி விடும். சேவையில் நிறைய ஆர்வம் உள்ளது. மற்றபடி ஒவ்வொரு வருடைய மனநிலையை பாபா அறிந்திருக்கிறார். சேவையுடன் கூடவே பிறகு குணங்களும் வேண்டும். கோபம் வரக் கூடாது. தப்பும் தவறுமான எண்ணங்கள் வரக் கூடாது. விகாரங்களின் எந்த நோயும் இருக்கக் கூடாது. நல்ல ஆரோக்கியம் தேவை. யாருக்குள் விகாரங்கள் குறைவாக உள்ளதோ அவர்களே ஆரோக்கியமானவர்கள் என்று பாபா கூறுவார். பாபா மகிமை செய்வார் அல்லவா? யார் யார் நல்ல நல்ல மகாரதிகளாக ஆவார்கள் என்பதும் பாடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அசுரர்கள் மற்றும் தேவதைகளின் யுத்தத்தைக் காண்பித்துள்ளார்கள். தேவதைகளுக்கு வெற்றி கிடைத்தது. இப்பொழுது நம்முடைய யுத்தம் 5 விகாரங்கள் என்ற அசுரர்களுடனாகும். வேறு எந்தவிதமான மனிதர்களும் அசுரர்களாக இருப்பதில்லை. யாரிடம் அசுர சுபாவம் இருக்கிறதோ அவர்களுக்குத் தான் அசுரர்கள் என்று கூறப்படுகிறது. முதல் நம்பர் அசுர சுபாவம் காமம் ஆகும். எனவே சந்நியாசிகள் அதை விட்டு விட்டு ஓடுகிறார்கள். இந்த அசுர குணங்களை விடுவதில் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. இல்லறத்தில் தான் இருக்க வேண்டும். ஆனால் அசுர சுபாவத்தை விட வேண்டும். தூய்மையாக ஆகி விடும் பொழுது முக்தி, ஜீவன் முக்தி கிடைக்கிறது. எவ்வளவு உயர்ந்த பிராப்தி ஆகும். அவர்கள் வீடு வாசலை விட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். பிராப்தி ஒன்றுமே இல்லை. இந்த படங்களில் புரிந்து கொள்ள வேண்டிய எவ்வளவு நல்ல நல்ல விஷயங்கள் உள்ளன. அந்த ஜனங்களோ படங்களின் வெளிப்பகட்டு மட்டுமே செய்கிறார்கள். சித்திரங்களைப் பார்ப்பதற்காக மட்டுமே எவ்வளவு பேர் செல்கிறார்கள். நன்மை எதுவும் இல்லை. இங்கு இந்த சித்திரங்களில் எவ்வளவு ஞானம் உள்ளது. இதனால் நிறைய நன்மை ஏற்படுகிறது. இதில் கலைகள் ஆகிய எந்த விஷயமும் கிடையாது. தயாரிப்பவர்களுடைய புத்திசாலித்தனம் கூட எதுவும் கிடையாது. அவர்களுடையதோ ஓவியர்கள் பெயர் படங்களில் எழுதப்பட்டிருக்கும். ஓவியர்களுக்குக் பரிசு கிடைக்கிறது. ஆம் தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும் என்று அந்த அளவிற்கு ஒரு சிலர் புரிந்திருப்பார்கள். இவ்வளவு கூறி விட்டார்கள் என்றாலும் கூட பிரஜைகள் ஆகி விடுவார்கள். பிரஜைகள் ஏராளமாக ஆக வேண்டி உள்ளது. நான் ஞானக் கடல் ஆவேன். ஒரு துளி கூட எவருக்காவது கிடைத்து விட்டது என்றால், சொர்க்கத்தில் வந்தே விடுவார்கள்.

கண்காட்சி, மேளாவினால் நிறைய பேருக்கு நன்மை ஆகிறது என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இறைவன் நன்மை செய்பவர் அல்லவா? உங்களுக்கு நன்மை ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பின்னர் தங்களுடைய ஞான மனனம் செய்து கொண்டே இருக்க வேண்டும். நினைவில் கொண்டு வந்துக் கொண்டே இருந்தால் நிறைய நன்மை உண்டாகும். தப்பும் தவறுமான விஷயங்களை ஒரு காதால் கேட்டு மறு காதால் நீக்கி விட வேண்டும். நான் உங்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை கூறுகிறேன் என்று தந்தை கூறுகிறார். எவரொருவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுப்பது இது தான் முதல் நம்பர் முக்கியமான விஷயமாகும். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள் அவரே எல்லாமாக இருக்கிறார். அவ்வளவே. பக்தி மார்க்கத்தில் நிறைய பேர் இவ்வாறு இருக்கிறார்கள். நீங்கள் இது மிகவும் நன்றாக செய்கிறீர்கள் என்று கூறுங்கள். விரலால் சமிக்ஞை செய்கிறார்கள். எல்லாமே பரமாத்மா செய்விக்கிறார். அவர் அனைவருக்கும் நன்மை செய்பவர். மேலே இருக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கு தான் இருக்கிறீர்கள். இந்த முழு ஞான விஷயங்களையும் நீங்கள் இப்பொழுது தான் புரிந்துள்ளீர்கள். குழந்தைகளே! இப்பொழுது உங்களுடைய இந்த சரீரம் என்ற ஆடை நைந்து போய் விட்டுள்ளது என்று தந்தை கூறுகிறார். சத்யுக திரேதாவில் எவ்வளவு நல்ல ஆடை இருந்தது. இப்பொழுது நைந்து போய் விட்டிருக்கும் ஆடையை எதுவரை அணிவீர்கள். ஆனால் இதை யாரும் புரிந்து கொள்வது இல்லை. தந்தை வந்துபுரிய வைக்கும் பொழுது தான் புரிந்து கொள்ள முடியும். ஞானம் அளிப்பவர் ஒரே ஒரு தந்தை தான் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். அவர் கடல் ஆவார். யார் கடலை விழுங்கி கொண்டு விடுகிறார்களோ அவர்களே வெற்றி மாலையின் மணிகள் ஆகி விடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் சேவையிலேயே மும்முரமாக இருப்பார்கள். ருத்ர மாலையை அமைக்கவே பாபா வந்துள்ளார். பிறகு திரும்பிச் செல்ல வேண்டும். எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே பிறகு வரிசைக்கிரமமாக செல்வீர்கள். முன்னால் பின்னால் போக முடியாது. நாடகத்தில் நடிகர்களினுடைய நடிப்பு தக்க நேரத்தில் நடக்கிறது அல்லவா? இதில் கூட யாரெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்களோ அவர்கள் வரிசைக் கிரமமாக அவரவர் நேரத்தில் வந்துக் கொண்டே செல்வார்கள். இவ்வாறு எல்லையில்லாத நாடகம் அமைக்கப் பட்டுள்ளது. பிரம்மத்தில் ஆத்மாக்களாகிய நாம் புள்ளிகளாக இருக்கிறோம். அங்கு வேறு என்ன நடக்கும்? ஆத்மாவாகிய பிந்து எங்கே? இவ்வளவு பெரிய சரீரம் எங்கே? ஆத்மா எவ்வளவு சிறிய இடத்தை எடுத்துக் கொள்ளும். பிரம்ம மகதத்துவம் எவ்வளவு பெரியதாகும். எப்படி வெட்டவெளிக்கு முடிவே இல்லை. அதே போல பிரம்ம மகதத்துவத்திற்கும் முடிவு கிடையாது. கரையைக் காண எவ்வளவு முயற்சி செய்கிறார்கள். ஆனால் முடிவை அடைய முடியாமல் இருக்கிறார்கள். எவ்வளவு தலையிலடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பிடிப்பதற்கோ, கடந்து செல்வதற்கோ எந்த பொருளும் கிடையாது. விஞ்ஞானத்தில் எவ்வளவு செருக்கு கொண்டிருக்கிறார்கள். எந்த நன்மையும் கிடையாது. ஆகாயமே ஆகாயம், பாதாளமே பாதாளம் என்று கேள்விப்பட்டிருக் கிறீர்கள். சந்திர மண்டலத்தில் உலகம் இருக்கக் கூடும் என்று நினைக்கிறார்கள். அதுவும் நாடகத்தில் அவர்களுடைய பாகமாக உள்ளது. பயன் எதுவும் இல்லை. தந்தை வந்து நம்மை உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறார் எவ்வளவு நன்மை இருக்கிறது. மற்றபடி சந்திரனுக்கு செல்லுங்கள். ஞான மந்திரம் மூலம் விபூதி ஆகியவை எடுத்து வாருங்கள் .. .. .. இதனால் என்ன நன்மை? இப்பொழுது நாம் எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தி எடுக் கிறோம். கல்ப கல்பமாக எடுத்தபடியே வந்துள்ளோம். உலக சரித்திரம் பூகோளம் மீண்டும் நடைபெறுகிறது. இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. உலகத்தில் முதலில் பாரதம் மட்டும் தான் இருந்தது. பாரதவாசிகள் தான் உலகத்தின் அதிபதியாக இருந்தார்கள். அங்கு தேவதைகளுக்கு எந்த கண்டங்கள் பற்றியும் தெரிந்திருக்காது. இது பின்னால் விருத்தி அடைகின்றது. புதிய புதிய தர்ம ஸ்தாபகர்கள் வந்து அவரவர்களது மதத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். மற்றபடி அவர்கள் ஒன்றும் சத்கதியை அளிப்பதில்லை. தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன மகிமை இருக்கும்? முக்தி தாமத்திலிருந்து பாகத்தை ஏற்று நடிக்க வருகிறார்கள். மனிதர்கள் மோட்சத்தில் உட்கார்ந்து கொண்டே இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த வருவது போவது என்ற சக்கரத்தில் ஏன் தான் வர வேண்டும். ஆனால் இதில் வந்தே ஆக வேண்டும். மறுபிறவி எடுத்தே ஆக வேண்டும். பிறகு திரும்பிச் செல்ல வேண்டும். இது அமைந்த அமைக்கப்பட்ட நாடகத்தின் சக்கரம் ஆகும். இலட்சம் வருடங்களினுடையதாக எந்த ஒரு நாடகமும் இருக்கவே இருக்காது. இது இயற்கையான அனாதி நாடகம் ஆகும். இதற்கு இறை சக்தி என்று கூறப்படுகிறது. படைப்பவர் மற்றும் படைப்பின் இயற்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. சிருஷ்டி சக்கரத்தை அறிந்து கொள்வதற் காக அமர்ந்து முயற்சி செய்யக் கூடிய எந்த ஒரு மனிதனும் கிடையாது. இந்த சிருஷ்டியின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதை சிந்தனை செய்ய அவர்களுக்கு வரவே வராது. எல்லாவற்றையும் விட பழையதிலும் பழைய சித்திரம் சிவலிங்கத்தினுடையது ஆகும். குதா (இறைவன்) வந்து விட்டுள்ளார். பிறகு அதற்கான நினைவார்த்தத்தை அமைக்கிறார்கள். முதலில் சிவனின் பூஜை ஆரம்பமாகும் பொழுது வைரத்தில் லிங்கம் அமைக்கிறார்கள். பிறகு பக்தி ரஜோ தமோ ஆக ஆகி விடும் பொழுது கல்லில் கூட அமைக்கிறார்கள். சிவபாபா வைரங்களால் ஆனவர் அல்ல. அவர் ஒரு புள்ளி ஆவார். பூஜை செய்வதற்காக பெரியதாக அமைக்கிறார்கள். நாம் வைரத்தில் சிவலிங்கம் அமைப்போம் என்று நினைக்கிறார்கள். சோமநாத்தின் இவ்வளவு பெரிய கோவிலில் ஒரு புள்ளி வைத்தார்கள் என்றால் புரிந்து கொள்ள முடியாது. பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் ஆகிறது என்பதை தந்தை புரிய வைக்கிறார். விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புக்கள் செய்துக் கொண்டே இருக்கிறார்கள். நல்ல நல்ல பொருட்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அழிவுக் காகவும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முன்பு மின்சாரம் இருந்ததா என்ன? மண் தீபங்களை ஏற்றி கொண்டு இருந்தார்கள்.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, கொஞ்சத்தில் திருப்தி அடையாதீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். நல்ல முறையில் தாரணை செய்து கடலை விழுங்கி விடுங்கள். யார் நல்ல சேவை செய்வார்களோ அவர்கள் பதவியும் நல்லதாக அடைவார்கள். நாள் முழுவதும் குஷியின் அளவு ஏறியபடியே இருக்க வேண்டும். இது சீ லி சீ உலகமாகும். இப்பொழுது இங்கிருந்து சென்று விடுவோம். பழைய உலகம் முடியத் தான் போகிறது. ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. மீதி ஒரு சில நாட்கள் தான் உள்ளன. இதில் எவ்வளவு சேவை செய்ய வேண்டும். முழு பாரதத்தில் மட்டுமென்ன, வெளிநாட்டில் கூட எல்லா பக்கமும் சுற்றி வர வேண்டும். பத்திரிகைகள் மூலமாக வெளிநாடுகளைப் பற்றி மூலை முடுக்குகள் வரையும் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஏணிப்படி ஆகியவற்றின் மூலமாக உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். தந்தை குழந்தைகளை மீண்டும் சொர்க்கவாசி ஆக்குவதற்காக வருகிறார். உண்மையில் இலட்சுமி நாராயணர் பாரதத்தில் தான் ஆட்சி புரிந்து சென்றுள்ளார்கள். பாரதம் பழைமையான தேசம் ஆகும் என்ற மகிமையை நிறைய செய்கிறார்கள். பாரதம் இப்படி இருந்தது. பாரதத்தில் இது போல தூய்மையான தேவிகள் இருந்தார்கள் என்று நிறைய மகிமை செய்கிறார்கள். நாம் தந்தையிட மிருந்து 21 பிறவிகளின் பிராப்தியைப் பெறுகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை முற்றிலும் எளிதாக படிப்பிக்கிறார். திரௌபதியின் பாதத்தை அமுக்கி, சோர்வு நீக்கினார் என்று காண்பிக்கிறார்கள். அப்படி எதுவும் கிடையாது. இதை பாபா கூறுகிறார், குழந்தைகள் பக்தி மார்க்கத்தில் அடி வாங்கி களைத்து விட்டுள்ளார்கள். இப்பொழுது நான் உங்களது களைப்பை நீக்குகிறேன். நீங்கள் அடி வாங்கி வாங்கி பதீதமாக ஆகி விட்டுள்ளீர்கள். நான் உங்களுடைய களைப்பை நீக்கிக் கொண்டிருக் கிறேன் என்று தந்தை கூறுகிறார். பிறகு ஒரு பொழுதும் துக்கத்தைப் பார்க்க மாட்டீர்கள். சிறிதளவு கூட துக்கத்தின் பெயர் இருக்காது. மற்றபடி முயற்சி செய்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும். நல்ல பதவி அடைந்தார் என்றால் இவர் முந்தைய பிறவியில் நல்ல கர்மம் செய்திருக்கிறார் என்று கூறுவார்கள் அல்லவா? பாடல் உள்ளது அல்லவா? ஆனால் இவர்கள் எப்பொழுது முயற்சி செய்து இந்த பதவியை அடைந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இப்பொழுது தந்தை உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கர்மத்தைக் கற்பிக்கிறார். நல்ல செயல்கள் செய்து உயர்ந்த பதவியை அடையுங்கள் என்று உங்களுக்குக் கூறுகிறார். இங்கு மனிதர்களுடைய செயல்கள் விகர்மங்களாக ஆகின்றன. அங்கு இருப்பதே சொர்க்கம். கர்மம் அகர்மமாக இருக்கும். அங்கு இந்த ஞானம் இருக்காது. கர்மங்களின் நிலையை நான் அறிந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். இச்சமயம் யார் நல்ல செயல்களைச் செய்வார்களோ அவர்கள் பலனும் நல்லதாக அடைவார்கள். இது கர்மக்ஷேத்திரமாகும். ஒரு சிலர் மிகவும் நல்ல கர்மங்கள் செய்கிறார்கள். ஒரு சிலர் சேவையினுடைய சிந்தனையிலேயே ஈடுபட்டு இருப்பார்கள். பாபா என்னிடம் ஏதாவது குறை உள்ளதா என்று கேட்பார்கள். இல்லை. சேவை எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்வீர்கள். சேவை விருத்தி அடைந்து கொண்டே இருக்கும். சேவை செய்பவர்கள் வெளிப்பட்டுக் கொண்டே செல்வார்கள். இன்னும் ஒரு சில நாட்கள் தான் உள்ளன என்று மனதில் ஆறுதல் இருக்கிறது. இப்பொழுது எப்பேர்ப்பட்ட முயற்சி செய்ய வேண்டும் என்றால் அங்கு உயர்ந்த பதவி அடைய வேண்டும். பாபா இந்த ஞானப் புல் என்ற உணவூட்டுகிறார். அசை போட்டு கொண்டே இருங்கள். அப்பொழுது தாரணை பக்குவமாக ஆகி விடும் என்று கூறுகிறார். குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். நிறைய சேவை செய்ய வேண்டும். அநேகருக்கு செய்தி அளிக்க வேண்டும். நீங்கள் தூதுவரின் குழந்தைகள் தூதர் ஆகிறீர் கள். ஒரு நாள் பெரிய பத்திரிகைகளில் உங்களுடைய சித்திரங்கள் வெளிப்படும். வெளிநாடுகள் வரை கூட பத்திரிகைகள் செல்கின்றன அல்லவா? படங்கள் மூலம் இந்த ஞானம் காட்ஃபாதரி னுடையது என்பதைப் புரிந்து கொண்டு விடுவார்கள். மற்றபடி மன்மனாபவ ஆவதில் உழைப்பு இருக்கிறது. பாரதவாசிகள் தான் இந்த முயற்சியை செய்கிறார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தை கூறும் நல்ல நல்ல விஷயங்கள் மீது ஞான மனனம் செய்து அநேகருக்கு நன்மை செய்பவர் ஆக வேண்டும். தப்பும் தவறுமான விஷயங்களை ஒரு காதால் கேட்டு மறு காதால் நீக்கி விட வேண்டும்.

2. எந்த ஒரு அசுர சுபாவம் இருந்தாலும் அதை விட்டு விட வேண்டும். தந்தை உணவாக ஊட்டும் ஞானப்புல்லை அசை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

வரதானம்:-

தூய அன்னப்பறவைகளாகிய உங்களுடைய சொரூபம் தூய்மை ஆகும் மற்றும் காரியம் தெய்வீக குணங்கள் என்ற முத்துக்களை கிரஹிப்பது ஆகும். அவகுணங்கள் என்ற கூழாங்கல்லை ஒருபொழுதும் புத்தி யில் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆனால், இந்தக் காரியத்தை செயல்படுத்து வதற்காக, எப்பொழுதும் தீயதை சிந்திக்கக் கூடாது, தீயதை கேட்கக் கூடாது, தீயதை பார்க்கக் கூடாது, தீயதை பேசக் கூடாது என்ற இந்த ஒரு கட்டளை நினைவு இருக்க வேண்டும். யார் இந்த கட்டளையை சதா நினைவில் வைக்கின்றார்களோ, அவர்கள் கடலின் கரையில் இருப்பார்கள். அன்னப்பறவைகளின் வசிப்பிடமே கடல் ஆகும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top